Saturday, August 13, 2005

அடிமைகள்.

காவி பக்தர் ஆரோக்கியம் என்பவர் //*அறிவியல் என்ற பதிவுகளுக்கு முஸ்லீம் முல்லாக்கள் தாவியதும் இந்த காரணத்தினால்தான்*// என்று தமது பதிவில் எழுதியிருக்கிறார். நாமும் சில மாதங்களுக்கு முன்பு ஒரிரு கேள்விகளை வைத்தபோது பதில் சொல்ல வக்கற்றவர்கள், வேறு விஷயங்களுக்கு திசை திருப்பி இறுதியில் மனோ தத்துவ டாக்டர்களின்(?) பின்னால் மறைந்து கொண்டார்களே இது எதற்காகவாம்? சொல்வாரா காவி பக்தர்.

பனூ முஸ்தலிக் போரில் கைது செய்யப்பட்டப் பெண்களை முஸ்லிம்கள் பலத்காரம் செய்தார்கள் என்றும், இஸ்லாம்தான் அடிமைகளை உருவாக்கியது போலவும் எப்படியும் இட்டுக்கட்டியாவது ஆவணப்படுத்திவிட வேண்டும் என்பதில் காவி பக்தர் ஆரோக்கியம் பெரும் முனைப்போடு எழுதி வருகிறார். இதற்காக நாம் எழுதாத கருத்தையும், எழுதியதாக அதாவது பனூ முஸ்தலிக் குலத்தைச் சேர்ந்த பெண்களை சிறைபிடித்து முஸ்லிம்கள் பலத்காரமாக - வன் - புணர்ந்தார்கள். அது சரிதான் என்று நாம் சரிகண்டு எழுதியதாக ஒரு கீழ்த்தரமான அவதூறையும் எழுதியிருக்கிறார்.

காவி பக்தர் தமது பின்னூட்டத்தில் என்னைக் குறிப்பிட்டு எழுதியது: //*அபு முஹை இப்போது போர் தளபதியாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் போரில் ஒரு ஊரில் உள்ள ஆண்களை கொன்று தள்ளிவிட்டார். தங்கள் கணவன்மார்கள், மகன்கள் தந்தையர்கள் இப்போதுதான் போரில் இறந்திருக்கிறார்கள். அதனைப் பார்த்து அந்த ஊர் பெண்களுக்கு என்ன உணர்ச்சி இருக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

அந்த பெண்களை அபு முஹையின் படை போர்க்கைதிகளாகப் பிடித்திருக்கிறது.

அபு முஹையின் போர்வீரர்கள் இந்த பெண்களை பலாத்காரம் செய்கிறார்கள். அதில் ஒரு சிலர் அபு முஹையிடம் வந்து" புணர்ச்சி இடைமறிப்பு செய்யலாமா?" என்று கேட்கிறார்கள். அதற்கு புணர்ச்சி இடைமறிப்பு செய்யாதே. ஏனெனில் யார் யாரெல்லாம் இந்த பூமியில் பிறக்கப்போகிறார்கள் என்று ஏற்கெனவே எழுதி வைத்திவிட்டான்" என்று அபு முஹை கூறுவாரா? கூறமாட்டார்.

அபு முஹை என்ன சொல்வார் என்பதைப் பற்றி எனக்கு ஒரு கருத்து இருக்கிறது.

"அடப்பாவிகளா? அந்தப் பெண்கள் இப்போதுதான் தங்கள் கணவன்களை தந்தையரை பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள். அவர்களை பலாத்காரம் செய்கிறீர்களே இது அடுக்குமா? சீச்சீ. நீங்களெல்லாம் மனுஷர்களா? இந்த லட்சணத்தில் வந்து என்னிடம் நீங்கள் புணர்ச்சி இடைமறிப்பு செய்யலாமா என்று கேட்கிறீர்களே? வெட்கமாக இல்லை. உன் மனைவி தவிர மற்ற பெண்களை நீங்கள் தாயைப்போல அல்லவா மதிக்க வேண்டும்?" என்றுதான் அறிவுரை சொல்லியிருப்பார்.*//

இவ்வாறு எழுதியிதற்குப்பதிலாகவே நானும் எனது பதிவின் பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன்:

//*உதாரணமாக: அபூ முஹை என்பவர் ராணுவத் தளபதி என்பது போல், எதிரணியில் ராணுவத் தளபதியாக ஆரோக்கியம் என்பவர் இருக்கிறார். என்று வைத்துக் கொள்வோம் இரு அணியினருக்கும் பொதுவான போர் நிபந்தனைகளில் - போரில் தோல்வியடைந்தவர்கள் கைது செய்யப்பட்டு, வெற்றியடைந்தவர்களுக்கு அடிமையாக வேண்டும், பெண்கள் போரில் உதவி செய்யும் வழக்கமிருந்ததால் - பெண் போர் கைதிகளும் அடிமையாக்கப்பட்டார்கள். பெண் அடிமைகளை அவர்களின் எஜமானர்கள் அனுபவித்துக் கொள்ளலாம் - அதாவது போரில் நிராகரிப்பாளர்கள் வெற்றி பெற்றால் முஸ்லிம் பெண் போர் கைதிகளை அடிமைகளாக்கி நிராகரிப்பாளர்கள் அனுபவித்தார்கள் - போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றால் நிராகரிப்பாளர்களின் பெண் போர் கைதிகளை அடிமைகளாக்கி அனுபவித்தார்கள்.

போரில் ஆரோக்கியம் என்பவரின் அணி ஜெயித்தால், தோல்வியடைந்த அபூ முஹை என்பவரின் அணியின் பெண் போர் கைதிகளை, அடிமைகளாக்கி ஆரோக்கியம் என்பவரின் அணியினர் அனுபவித்துக் கொள்வார்கள் - போரில் அபூ முஹை என்பரின் அணி ஜெயித்தால், தோல்வியடைந்த ஆரோக்கியம் என்பவரின் அணியின் பெண் போர் கைதிகளை அடிமைகளாக்கி அபூ முஹை என்பவரின் அணியினர் அனுபவித்தக் கொள்வார்கள். இரு போர் அணியினர்களுக்கும், ஒருவரையொருவர் வெற்றி கொண்டால் கைது செய்யப்பட்ட பெண்களை அடிமைகளாக்கி அனுபவிப்பதில் சம உரிமை இருந்தது.

ஆரோக்கியம் என்பவரின் அணியினர் அடிமைப் பெண்களை அனுபவித்துக் கொண்டே, அபூ முஹை என்பவரின் அணியினர் அடிமைப் பெண்களை அனுபவிப்பதை தீண்டத்தகாத மாதிரி விமர்சித்தால் ஆரோக்கியம் என்பவரின் சிந்தனையை என்னவென்பது?

போரில் கைது செய்யப்பட்டவர்கள் அடிமைகளாக இருக்கவும், எஜமானர்கள் அடிமைப் பெண்களை அனுபவிப்பதும் பண்டைய மக்கள் அவர்களாகவே ஒப்புக்கொண்ட சமாச்சாரம். இஸ்லாம் அடிமைகள் விடுதலை செய்யப்படுவதற்கான வழியைக் காட்டியதேயன்றி, இஸ்லாம் அடிமைகளை உருவாக்கவில்லை என்பதை வரலாற்றைப் படித்தவர்கள் தெரிந்து கொள்ளலாம்.*//

இதில் எங்காவது ''அடிமைப் பெண்களை பலவந்தமாக - வன் - புணர்ந்தார்கள்'' என்று சொல்லி அதை ஆதரித்து எழுதியிருக்கிறேனா..? (இது N.ராகவன் அவர்களின் மிக முக்கியக் கவனத்திற்கு)

//*டோ ண்டு & அபு முஹைக்கு ஒரு கேள்வி

பானு முஸ்டாலிக் ஜாதியினரை முகம்மதுவும் முகம்மதின் படையும் அவர்கள் அறியாவண்ணம் தாக்கி ஆண்கள் அனைவரையும் கொன்று, பெண்களை சிறைபிடித்து பெண்களை பலாத்காரம் செய்ததை எழுதியிருந்தேன்*//

பனூ முஸ்தலிக் குலத்தினரின் பெண்களை, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் படைகள் பலாத்காரம் செய்தார்கள் என்பதைக் காட்ட முடியுமா..? (இது காவி பக்தர் ஆரோக்கியம் அவர்களின் கவனத்திற்கு)

குறிப்பு: ஆண், பெண் அடிமைகளை இஸ்லாம் உருவாக்கவில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்படும் முன்பே மக்காவில் அடிமைகள் இருந்தார்கள் என்பதை அவகாசமாக - நேரம் கிடைக்கும்போது இதே பதிவின் பின்னூட்டத்தில் எழுதுவோம் இன்ஷா அல்லாஹ்.

No comments: