Wednesday, April 25, 2007

தமிழ்மணம் நிர்வாகத்திற்கு ஆதரவு.



நேர்மையென்றால் என்னவென்றே தெரியாத - வழக்கமாக அவதூறு சுமத்துவதையே வாடிக்கையாகக் கொண்டவர்கள், தொடர்ந்து தமிழ்மணம் நிர்வாத்தை அவதூறு சொல்லி எழுதுவதை நான் வன்மையாகக் கண்டித்து, தமிழ் மணம் நிர்வாகத்திற்கு என் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Saturday, April 14, 2007

அபூ முஹைக்கு பதிலாம்!?

சாப்பாடு, சாப்பாடு என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் வயிறு நிறைந்து விடுமா?

நிறைந்து விடும் என்று நேசமுடன் ஒருவர் சொல்கிறார்!

அபூ முஹைக்கு பதில் என்று தலைப்பு எழுதி விட்டால் அது அபூ முஹைக்கு பதில் சொன்னதாகிவிடுமா?

ஆம்! பதில் சொன்னதாகிவிடும் என்று இவர் நேசமுடன் நம்புகிறார்!

//அபூ முஹைக்கு பதில் - ஏகத்துவம் பற்றி

நபிகள் நாயகம், ஏகத்துவக் கொள்கையில் சமரசம் செய்துகொண்டார் என்று நான் முன்பு எழுதியிருந்ததற்கு ஆதாரம் கேட்டிருந்தார் அபூ முஹை. நான் சொன்ன அதே விஷயத்தை சற்றே மாறுப்பட்ட விதத்தில் விரிவாக எழுதியுள்ளார் ரசூல், இந்த திண்ணை இதழில்.//

நாம் ஆதாரத்தை கேட்டதாக உளறியிருக்கிறார்!

கேட்டது நாமல்ல, இரண்டு வருடங்களுக்கு முன்பு சகோதரர் அப்துல்லாஹ் கேட்ட கேள்வியை, மீண்டும் நினைவுபடுத்தி சகோதரர் இப்னு பஷீர் கேட்டிருந்தார்.

//நபிகளாரின் காலத்திலேயே, ஆன்மீக இஸ்லாம் பின் சென்று அரசியல் இஸ்லாம் முன்னிலைப் படுத்தப்பட்டு, சிலை வழிபாட்டையும் ஏனைய பாகன்களின் பழக்க வழக்கங்களையும் கூட வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் முஹம்மது அவர்களின் நபித்துவத்தை மட்டும் மறுத்தளிக்காதீர்கள் என்ற கோரிக்கையே பிரதானப் படுத்தப் பட்டது
(நபிகள் நாயகத்தின் வாழ்வு - அன்னை ஜைனப்பின் மணம் - இறுதி நபி சில விளக்கங்கள் - நேசகுமார் - திண்ணை 16/12/2004)// -

- இதற்கு ஆதாரங்களை சகோதரர் அப்துல்லாஹ் கேட்டிருந்தார்...

//இதன் மூலம் எனக்கு தோன்றக் கூடிய கேள்விகளுக்கு நேசகுமார் அவர்கள் பதிலளித்து, இஸ்லாத்தை எனக்கு நன்கு அறிமுகப்படுத்துமாறு வேண்டுகிறேன்.
ஒன்று, அவரது பிதற்றல்களுக்கான ஆதாரம். குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்.
இரண்டாவது, இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, இறைவனுக்கு இணை வைத்தல் கூடாது என்பதே. எனவே, எப்படி நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை உதறிவிட்டு, நீங்கள் சிலைகளை வேண்டுமானலும் வணங்கிக் கொள்ளுங்கள், ஆனால், என்னுடைய நபித்துவத்தை மட்டும் மறுத்துவிடாதீர்கள் என்று தனது கோரிக்கையை பிரதானப் படுத்தியிருக்க முடியும்?

நேசகுமாரின் வரிகள் ''நபிகளாரின் காலத்திலேயெ'' என்று அழுத்தமாகத் தொடங்கியிருப்பதால், பதில்கள் நபிகளாரின் காலத்திற்க்கு பிறகு வந்த கதை எல்லாம் இல்லாமல், நபிகளாரின் காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு, பதில் சொல்ல வேண்டுகிறேன்.
பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி!//

****************************
மேற்கண்ட அப்துல்லாஹ்வின் கேள்விக்கு நேரடி விடை தெரியாமல், இரண்டு வருடம் கழித்து திண்ணை ரசூல் என்பவரின் துணையை நாடியிருக்கிறார். இதாவது உருப்படியான விளக்கமாக இருக்கிறதா பாருங்கள்...

//" இஸ்லாத்தின் இறுதிக் கடமையை ஹஜ் என்னும் புனிதக் கடமையை நிறைவேற்றுதலாக உள்ளது. ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முஸ்லிமும் இஹ்ராம் என்னும் வெள்ளாடை தரித்தலும் மக்காவின் எல்லைப் புறமான மினாவில் தங்கி அங்கு ஷைத்தானை கல்லெறிவதும், கஃபாவைச் சுற்றி ஏழுமுறை வலம் வந்து இரண்டு ரக்அத்து தொழுவதும், அங்குள்ள உஹறஸ்ருல் அஸ்வத் பளிங்கு கல்லை முத்தமிடுவதும், சபா, மர்வா குன்றுகளுக்கிடையே தொங்கோட்டம் ஓடுவதும், இறுதி நிகழ்வாக பலியிடுதலான குர்பான் கொடுப்பதும், அரேபிய கலாச்சார சூழல் சார்ந்து, திருக்குர்ஆன் அங்கீகரித்த நபிகள் நாயகத்தின் நடைமுறைகளாகும். இந்துக்கள் கோவில்களில் நிற்க வைத்து கும்பிடுகிறார்கள், முஸ்லிம்களோ தர்காக்களில் படுக்கப்போட்டு கும்பிடுகிறார்கள் என்று குற்றம் சாட்டுவதைப்போல கஃபாவை சுற்றி வலம் வருவதை கே'யிலை சுற்றி வலம் வருவதாகவும், ஹஸ்ருல் அஸ்வத்தை முத்தமிடுவதை கறுப்பு நிற கல்லை வணங்குவதாகவும், முடி களைவதை கோயில் கடமை முடித்துவிட்டு மொட்டை போடுவதாகவும் அர்த்தப்படுத்திப் பார்க்க சாத்தியமுள்ளதாக மானுடவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே தான் தர்கா நிகழ்வுகளையோ, ஹஜ்ஜின் அமல்களையோ மேலோட்டமாகவோ எந்திரகதியாகவோ இல்லாமல் வரலாற்று சூழல், வடிவம், உள்ளடக்கம் சார்ந்தும் அணுக வேண்டியுள்ளது.

4. இஸ்லாத்திற்கு முற்பட்ட காலங்களில் அரேபிய நாடுகளில் ஆசியப் பிரதேசங்களில் மட்டுமல்ல உலகமெங்கும் பழங்குடி சமுதாய மக்களின் சமய வழக்கங்களில் ஒன்றாக கடவுளுக்காக பலியிடுதல் என்கிற வழக்கம் உள்ளது. வேதகாலப்பழக்கமும் நடைமுறையும் இது. சமண புத்த மதங்களின் உருவாக்கத்தின்போது கால்நடைகளை தெய்வத்திற்கு பலியிடுதல் தடுக்கப்பட்டது. இதற்கான சமூகக் காரணம் வேட்டைச் சமூகத்திலிருந்து விவசாய சமூகத்திற்கு மாறியதுதான். புராதான விவசாய சமூகத்தில் கால்நடைகள் பங்களிப்பு மிக தேவையாயிருந்தது. எனவே அது அம்மத நம்பிக்கைகளில் தடை செய்யப்பட்டிருந்தது. எந்திரமயமாக்கப்பட்ட தொழிலுற்பத்தி சமுதாயத்தில் விவசாய உற்பத்தி கூட கால்நடைகளின் தேவை குறைந்து விட்டது. இக்காலத்தில் வைதீக இந்து மதம் பசுவதைதடை என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட, தலித்திய மற்றும் சிறுபான்மையின மக்களின் உணவுப்பழக்கத்தில் கை வைக்கப்பார்க்கிறது சைவம் உயர்ந்தது. அசைவம் தாழ்ந்தது என்ற பிராம­ய கருத்தாடலை திரும்பவும் உயிர்ப்பிக்க முயல்கிறது.

இச்சூழலில் இஸ்லாம் கூறும் ஹஜ் கடமையை நிறைவேற்றுகையில் ஆட்டையோ ஒட்டகத்தையோ பலியிடுதல் (குர்பான் கொடுத்தல்) இபுராகீம் நபீ அவர்தம் மகனார் இஸ்மாயிலை இறையாணையின் படி பலிகொடுக்க முன் வந்ததையும் அவர்களது இறைபக்தியையும் இறை அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையிலான ஒரு பாரம்பரியமான நடைமுறையாகும். இதன் வரலாற்று அர்த்தம் என்பதே மனிதப்பலி தடுக்கப்பட்டு விலங்கினப்பலி மாற்றாக முன்வைக்கப்பட்ட சம்பவமாகும"// -
- http://www.thinnai.com/?module=displaystory&story_id=60704121&format=html

சின்னப் பிள்ளைகளுக்கு நிலாக் கதை சொல்ற மாதிரி இருக்கிறது.

ஹஜ் கிரியைகள் பற்றி குர்ஆன், சுன்னா சொல்லும் வழிமுறைகளில் முஸ்லிம்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஹஜ் கிரியைகளுக்கும், சிலை வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு இருப்பதாக சொல்ல வருகிறார்? அதை திண்ணை ரசூலின் செய்தியிலிருந்து இந்த மனநோயாளி விளக்கட்டும்!

நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே காபாவிலிருந்த சிலைகள் நபியின் உத்தரவோடு அப்புறப்படுத்தப்பட்டன என்பது வரலாறு. அதற்கு மாற்றமாக...

//நபிகளாரின் காலத்திலேயே, ஆன்மீக இஸ்லாம் பின் சென்று அரசியல் இஸ்லாம் முன்னிலைப் படுத்தப்பட்டு, சிலை வழிபாட்டையும் ஏனைய பாகன்களின் பழக்க வழக்கங்களையும் கூட வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் முஹம்மது அவர்களின் நபித்துவத்தை மட்டும் மறுத்தளிக்காதீர்கள் என்ற கோரிக்கையே பிரதானப் படுத்தப் பட்டது//

...இப்படி உளறியிருப்பது மனநோயின் உச்ச வரம்பு!

கருப்புக் கல் - ஹஜருல் அஸ்வத் - (அஸ்வமேத அல்ல) - பற்றி முஸ்லிம் பதிவர்கள் தேவையான அளவுக்கு விளக்கம் எழுதியிருக்கிறார்கள். இன்னும் கருப்புக் கல்லை சிலை என்பவரை எந்த லிஸ்டில் சேர்ப்பது?

நிற்க வைத்து கும்பிடுவதையும், படுக்கப் போட்டு கும்பிடுவதையும் இஸ்லாம் அங்கீகரிக்கிறது என்பதற்கு ஒரு ஆதாரம் வைக்கட்டுமே பார்க்கலாம்!

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

 
 

Monday, April 02, 2007

இஸ்லாத்தின் பார்வையில் அடிமைகள். பகுதி-1

இஸ்லாமும் - அடிமைகளும் என்ற முந்தைய பதிவில் ஏற்கெனவே எழுதியிருந்தாலும் மீண்டும்...

குடியேற்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கருப்பின அடிமைகளுடன் பின்னிப் பிணைந்திருந்தன. குடியேற்ற நாடுகளில் மக்கள் தொகைப் பெருக பெருக குடியேற்றங்கள் விரிவடைந்து, ஏராளமான விவசாயப் பண்ணைகள் உருவாக்கப்பட்டன. பண்ணைகளில் பணிபுரிய அதிகமான அடிமைகள் தேவைப்பட்டார்கள். தேவைக்கேற்ப கருப்பின அடிமைகள் இறக்குமதி செய்யப்பட்டார்கள்.

இதனால் கருப்பின அடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. அமெரிக்கா சுதந்திர போர்க்காலத்தில் சுமார் ஐந்து லட்சமாக இருந்த கருப்பின மக்கள், உள்நாட்டுப் போர்க்காலத்தில் சுமார் ஐம்பது லட்சமாக உயர்த்தப்பட்டனர். இவர்கள் புகையிலை, பருத்தி, கரும்புத்தோட்டங்களிலும் வயல் வெளிகளிலும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இங்குள்ள தோட்டங்களிலும் பண்ணைகளிலும் வேலை செய்ய அதிகம் அடிமைகள் தேவைப்பட்டதால் நாளடைவில் கருப்பின அடிமைகளுக்கு அதிகம் கிராக்கி ஏற்பட்டது. எனவே அவர்களின் விலையும் உயர்ந்தது. 1830ம் ஆண்டு 800 டாலர்களுக்கு சந்தையில் விற்கப்பட்ட அடிமைகள், 1860ல் 2400 டாலர்களுக்கு விற்கப்பட்டனர்.

கருப்பின அடிமைகளின் கடின உழைப்பால் தோட்டங்கள், பண்ணைகள் ஆகியவற்றின் உற்பத்தி பன்மடங்கு பெருகியது. இதனால் வெள்ளையர்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது. நிலத்தில் பணிபுரிந்த அடிமைகளைத் தவிர வெள்ளையர்களின் வீட்டுப்பணிக்காக ஒரு பிரிவினர் அமர்த்தப்பட்டனர். இவர்களுள் பெரும்பாலோர் பெண்கள். இவர்கள் வெள்ளையர்களின் மாளிகையில் பல்வேறு வேலைகளைச் செய்து வந்தனர். இவர்கள் சற்று மனிதாபிமானத்துடன் நடத்தப்பட்டனர்.

இப்பெண்மணிகளை வெள்ளையர்கள் தங்களது சுயநலத்திற்காகவும் பயன்படுத்தினர். இவர்கள் கருப்பின பெண் அடிமைகளை தங்களது காதல் பசியைத் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்தினர். அக்காலத்து வெள்ளையர்களின் காமவெறியைத் தணிப்பது கருப்பின அடிமைப் பெண்களின் தீராப் பொறுப்பாக இருந்தது. வெள்ளையர்களின் இரத்தம் ஓடாத கருப்பினப் பெண்களைப் பார்ப்பது அரிதாக இருந்தது. இவ்வாறு வெள்ளையர்கள் கருப்பின அடிமைகளை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், சுயதேவைகளுக்காகவும் பயன்படுத்தினர்.

வெள்ளையர்களில் பெரும்பாலோர் அடிமை முறையை ஆதரித்தாலும் ஒரு பிரிவினர் மனிதாபிமான நோக்கத்தில் இதற்கு எதிராக செயல்பட்டு வந்தனர். இதற்காக அடிமைமுறை ஒழிப்பு இயக்கம் என்னும் அமைப்பை ஏற்படுத்தி இக்கொடிய முறைக்கெதிராகச் செயல்பட்டதோடு அவர்களின் விடுதலைக்காகவும் குரல் கொடுத்துக் கடுமையாகப் போராடினார்கள். தம் நலத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் சுதந்திர மனிதர்களைப் பிடித்து அடிமைகளாக்கி விற்கவும், வாங்கவுமாக, வியாபாரப் பொருட்களாக்கிக் கொண்ட அடக்குமுறை சுயநலமுள்ள மனிதர்களின் கடந்த நூற்றாண்டின் வரலாறு இதுதான்.

சுதந்திர மனிதனை விற்கும் இதே வழக்கம் சுமார் கி.மு 19ம் நூற்றாண்டிலும் இருந்தது. இதைத் திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

'ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தண்ணீர் எடுத்து வருபவரை அனுப்பினார்கள். அவர் தனது வாளியை (கிணற்றில்) விட்டார். 'இந்த நற்செய்தியைக் கேளுங்கள்! இதோ ஒரு சிறுவன்' என்றார். அவரை வியாபாரப் பொருளாக எடுத்து மறைத்துக் கொண்டனர். (012:019)

நபி யூசுஃப் (அலை) அவர்கள் சிறுவராக இருக்கும்பொழுது, அவருடைய சகோதரர்கள் அவரைக் கொல்வதற்காக கிணற்றில் தள்ளிவிட்டு சென்று விடுகிறார்கள். அந்நேரத்தில் அவ்வழியாக வரும் பயணக் கூட்டம் தண்ணீர் இறைப்பதற்காக வாளியைக் கிணற்றில் விடும்போது, சிறுவராக இருந்த யூசுஃப் (அலை) அதைப் பிடித்துக் கொண்டு மேலே வருகிறார். அவர்கள் காப்பற்றிய சிறுவரை அப்படியே விட்டுச் செல்லவில்லை. மாறாக அவரை ஒரு வியாபாரப் பொருளாக மறைத்து வைத்துக் கொண்டு, எகிப்து நாட்டில் அவரை அற்ப கிரயத்திற்கு விற்று விடுகிறார்கள். (012:020)

கிணற்றிலிருந்து காப்பாற்றிய சிறுவரை என்ன ஏதென்று விசாரிக்கவில்லை. அக்கம் பக்கத்தில் சிறுவரின் வசிப்பிடம் இருக்கலாம் என்று அவரை அப்படியே விட்டுச் செல்லவில்லை. அவரை பத்திரமாக வியாபாரப் பொருளாக்கி நகரத்தில் கொண்டு போய் விற்று விடுகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் நம்ம ஊர்களிலும் பிள்ளை பிடிக்கிறவன் என்று சொல்வார்களே, பிள்ளைகளை பிடித்துக் கொண்டு போய் வெளிமாநிலங்களில் விற்று, அவர்களை ஊனமாக்கி பிச்சையெடுக்க வைக்கும் கூட்டத்தைப் போல். ஆனாலும் முந்திய காலத்தவர்கள் குழந்தைகளை ஊனமாக்கியதில்லை என்பதில் அவர்கள் இரக்கமுள்ளவர்களாகத் திகழ்கிறார்கள்.

முஹம்மது (ஸல்) அவர்கள் நபியாக தேர்ந்தெடுப்பதற்கு முன், கதீஜா (ரலி) அவர்கள் உக்காழ் சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட ஹாரிஸா என்பவரின் மகன் ஸைத் (ரலி) அவர்களை விலை கொடுத்து வாங்குகிறார். சிறுவரான ஸைத் கதீஜா (ரலி) அவர்களிடம் வளர்ந்து வந்தார். கதீஜா (ரலி) நபி (ஸல்) அவர்களை மணந்தவுடன், அந்த அடிமைச் சிறுவரை நபிவர்களுக்கு வழங்கி விடுகிறார்.

அதன் பின்னர் ஸைத், நபி (ஸல்) அவர்களுக்குப் பணியாளராக இருந்தார். இந்நிலையில் தன் மகன் மக்காவில் அடிமையாக இருப்பதை அறிந்த ஹாரிஸா, நபி (ஸல்) அவர்களிடம் வந்து தம் மகனை விடுதலை செய்யுமாறும் அதற்கான விலையைத் தந்து விடுவதாகவும் கூறுகிறார். இங்கு தந்தைக்குத் தெரியாமலேயே சிறுவரான ஸைத் அடிமையாக விற்கப்பட்டிருக்கிறார்.

நபி யூசுஃப் அவர்கள் சிறுவயதில் போரில் கலந்து, எதிரிகளிடம் போர்க்கைதியாக சிறைப்பிடிக்கப்பட்டு அடிமையாக்கி விற்கப்பட்டாரா? அல்லது ஒரு அடிமைக்கு மகனாக இருந்து அடிமையாக விற்கப்பட்டரா? இல்லை! இதே நிலையில்தான் சிறுவராக இருந்த ஸைதும் அடிமைச் சந்தையில் விற்கப்பட்டிருக்கிறார். இப்படித்தான் அக்காலத்தில் அடிமைமுறைக்கு எந்த அளவுகோலும் இல்லாமல் வலுத்தவன் இளைத்தவனை அடிமையாக்கி, அடிமைச் சந்தைகளில் விற்று வந்தார்கள்.

சுதந்திரமான மனிதனைப் பிடித்துக் கொண்டு வந்து, அவனை வியாபாரப் பொருளாக்கி விற்கும் இதுபோன்ற அடிமைமுறையை இஸ்லாம் ஆதரிக்கிறதா? என்றால் இல்லை! மாறாக, ஒரு மனிதனை அடிமையாக்கும் - எண்ணத்துடன் - அடிமையாக விற்றுவிடும் - நோக்கத்துடன் சிறைபிடிக்கும் ஆதிகால பழக்கத்தை இஸ்லாம் முழுமையாக தடைசெய்து விட்டது.

''மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன் -
ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு அதில் மோசடி செய்தவன்!
இன்னொருவன், சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்!
மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!'' - என்று இறைவன் கூறுகிறான். (புகாரி 2227)

நபி (ஸல்) அவர்களால் இஸ்லாம் பிரச்சாரம் துவக்கப்பட்ட காலத்திலிருந்த, சுதந்திர மனிதனை அடிமையாக்கும் முறைகளையும், அடிமைத் தொழிலுக்கும் கட்டாய வேலைக்கும் பிடித்து வந்து அடிமையாக விற்கப்பட்ட கடந்த நூற்றாண்டின் அடிமை முறைகளையும் இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னே ஒழித்து விட்டது. சுதந்திரமான மனிதனை விற்பவன் இறைவனுக்கு எதிராக செயல்படுகிறான் என்று பிரகடனம் செய்கிறது.

(மீண்டும் அடுத்த பகுதியில்)

அன்புடன்,
அபூ முஹை