Tuesday, February 21, 2006

பணம் பணமறிய அவா!

கவிதை வடித்தவரை அறிய அவ!

பிடிஎஃபில் எழுதி, நண்பர்களிடமிருந்து வந்த இக்கவிதையை எழுதியவர் யார்? என்று தெரியவில்லை. ஏற்கெனவே வலைப்பூவில் பதிந்திருக்கலாம் தெரிந்தவர்கள் இருந்தால் அறியத்தரவும் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை


அன்னை தேசத்து
அகதிகள் நாம்
எண்ணெய் தேசங்களில்
எரிந்து கொண்டிருக்கிறோம்!

அடி வயிற்றில் பதிந்த
வறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள்
அறித்தெறிந்து வீசிய
ஜீவனுள்ள
மாமிசத் துண்டுகள் நாம்!

கண் தெரியா தேசத்தில் விழுந்து
காயங்கள் தலை சாய்த்துக்
கண்ணீர் வடிக்கிறோம்!

மொத்தக் குடும்பத்தையும்
முதுகில் சுமந்து
இன்னும் தீர்மானிக்கப்படாத்
திசைகளில் தொடர்கிறது
நம் பயணம்!
ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா
என்றுதான் கடிதம் எழுதுகிறோம்!
பணம் பணமறிய அவா
என்றல்லவா பதில் வருகிறது!

நமக்கு மட்டும் ஏன்
பணம்
பந்த பாசங்களின்
சமாதியாகி விட்டது!

ஒரு டெலிபோன் கார்டிலும்
ஒரு பொட்டலம் பிரியாணியிலும்
முற்றுப்பெற்று விடுகிறது
நம் பெருநாட்கள் ஒவ்வொன்றும்...

உயிரை பிழிந்து பிழிந்து
பாசத்தால் ஒத்தடம் தந்த
உறவுகளைப் பிரிந்து
இன்னும் எத்தனை நாட்கள்
இந்த ஏகாந்த வாழ்க்கை?

கலவரத்தில்
கைக் குழந்தையைத் தொலைத்த
தாயின் பதற்றத்தைப்போல்தான்
ஒவ்வொரு முறையும் போன் பேசிய
பின்னால் அடையும் அவஸ்தைகள்...

நம்மில் பலருக்கு
தாம்பத்திய வாழ்க்கைகூட
தவணை முறையில்தான்
தட்டுப்படுகிறது...

தொலைபேசியிலும்
தபாலிலும்
கொஞ்சலும், சிணுங்கலுமாய்
இன்ஸ்டால்மெண்டில்
இல்லறம் நடக்கிறது...

மனைவியின்
மூச்சுக்காற்று தந்த சுகம் கூட
இந் ஏசி காற்று தருவதில்லை!

குடும்ப விளக்குகளை
கும்மிருட்டில் தவிக்கவிட்டு விட்டு
தீக்குச்சிகள் நாம்
தன்னந்தனியாய்
இந்தத் தீவுகளில்...

வீடுகூடும் நிஜம் தொலைத்து
ஒரு வீடு கட்டும் கனாவில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இந்த பாலைப் பிரதேசங்களில்?..

உயிரோடு இருக்கும்
பெற்ற குழந்தைக்கு
புகைப் படத்தில்தான்
கொடுக்க முடிகிறது
செல்ல முத்தங்கள்!

என்ன இருந்தாலும்
காகிதங்கள் உணருமா
பாசத்தின் ருசி

ஒவ்வொரு முறையும்
ஊர் சென்று திரும்பும்போது
மறக்காமல் எல்லாவற்றையும்
எடுத்து வர முடிகிறது
மனசைத் தவிர...

காலத்தின்
இந்த பசை தடவல்கள்
நம்மைக் கட்டிப் போடாமல்
வெறும் கடிதம் போடத்தானா?

பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கின்றோம்
தண்ணீருக்காக அல்ல
தபால்களுக்காக...

வாழ்க்கையின் பாதி
விரக்தியிலும் விரகத்தீயிலும்
எரிந்துபோகும் நம் வாலிப வாழ்க்கை
கடைசியில் நரம்புகள் அறுந்துபோய்
முகாரி பாடும் வீணைகளாய்...

என்ன சொல்லி
என்ன பயன்
தண்ணீரில் மீன் அழுதால்
கண்ணீரை யார் அறிவார்?

********************************************************

Tuesday, February 14, 2006

இஸ்லாமும் - அடிமைகளும்.

அமெரிக்காவும் மேற்கத்திய தீவுகளும் கைப்பற்றப்பட்ட பின்னர் முன்னூற்று ஐம்பது ஆண்டுகள் அடிமை வியாபாரப் போக்குவரத்துக்கள் நடந்து வந்தது. ஆப்பிரிக்காவின் கடற்கரை ஓரங்களுக்கு அதன் உட்பகுதியிலிருந்து கருப்பர்கள் பிடித்து வரப்பட்டு கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்டார்கள். எனவே அந்தக் கடற்கரைகள் ''அடிமைக் கடற்கரைகள்'' என்றே அழைக்கப்பட்டன.

ஒரே ஒரு நூற்றாண்டிற்குள் (1680லிருந்து 1786வரை) குடியேற்ற நாடுகளுக்காக பிரிட்டானியர் அடிமைப்படுத்திய மனிதர்களின் எண்ணிக்கை, ஆங்கிலேய நூலாசிரியர்களின் கணக்குப்படி இரண்டு கோடி ஆகும். ஓராண்டு காலத்தில் 1790ல் மட்டும் 75,000.

அந்த அடிமைகளை ஏற்றுமதி செய்ய பயன்படுத்தப்பட்ட கப்பல்கள் சிறியதாகவும், அசுத்தமானவையாகவும் இருந்தன. அந்த ஆப்பிரிக்க மக்கள் கப்பலில் சரக்கு வைக்கப்படும் பகுதியில் ஆடு மாடுகளைப் போல் அடைக்கப்பட்டார்கள். அவ்வறைகளின் கூரையைத் தொடுமளவிற்கு ஒருவர் மீது ஒருவராகத் திணிக்கப்பட்டார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் மரத்தாலான சிறு அறைகளில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார்கள். அதில் அவர்களால் அசையக்கூட முடியாது. ஏனென்றால் அச்சிற்றறைகளின் அகலம் 18 அங்குலம்தான். இவ்வாறு ஒருவரின் தலைக்கு மேல் இன்னொருவராக அடைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு முறையான உணவோ, நோய் அல்லது காயம் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சைகளோ வழங்கப்படவில்லை.

அடிமைத் தொழிலுக்கும் கட்டாய வேலைக்கும் பிடிக்கப்பட்ட மனிதர்களில் 20 சதவிகிதத்தினர் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்க கடற்கரைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே மரணமடைந்ததாக மேலை நாட்டு நூலாசிரியர்கள் சொல்லுகிறார்கள்.

அடிமை வியாபாரம் உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளால் பிடிக்கப்பட்ட மனிதர்களின் மொத்த எண்ணிக்கை பத்து கோடியாகும். என்று கணக்கிடப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அடிமை முறையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்று ஓயாது வாய்கிழிய அவதூறு பேசுவோரின் வரலாறுதான் இது.

''உலகில் அடிமை முறையை ஒழித்தவர்கள் நாங்கள் தாம்'' என்று மேலை நாட்டினர் பெருமைபட்டுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு இந்த எண்ணம் தோன்றியது சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான். அதற்கு முன்னால் மேற்கத்திய வல்லரசுகள் ஆப்பிரிக்காவில் பெருமளவில் நுழைந்து அங்கு வாழ்ந்த சுதந்நிர மனிதர்களைப் பிடித்து அடிமைப்படுத்தி தங்கள் புதிய குடியேற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள் என்பதை நினைவு கூர்ந்து இனி இஸ்லாத்தின் பார்வையில் அடிமைகளைப் பார்ப்போம்.

இஸ்லாத்தின் பார்வையில் அடிமைகள்.

//அடிமைகளை வைத்துக் கொள்,அடிமை முறை இருக்கட்டும் ஆனால் அழைக்கும் போது அடிமை என்று அழைக்காதே என்பது அடிமை முறையை அழிக்க உதவுமா. யாரும் யாருக்கும் அடிமை இல்லை, அனைவரும் சம உரிமை படைத்தவர்கள், அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுவதுதானே சரியானதாக இருக்கும்.இஸ்லாம் அடிமை முறைக்கு முற்றிலும் எதிரானது அல்ல என்றும் ஒரு வாதம் இருக்கிறது.//

இஸ்லாம்தான் உலகில் அடிமை முறையை உருவாக்கியது என்பது தவறானக் கருத்தாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யத் துவங்கிய காலத்தில் அந்த மக்களிடையே அடிமை வழக்கமிருந்தது. அதற்கும் முன்னும் இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் காலத்திலும் அடிமை முறைகள் இருந்திருக்கிறது என்றும் வரலாற்றில் பார்க்க முடிகிறது.

ஆகவே அடிமை முறையை இஸ்லாம் உருவாக்கவில்லை என்பது தெளிவு. ஏற்கெனவே இருந்த அடிமை வழக்கத்தை இஸ்லாம் அங்கீகரித்து - அடிமைகளை விடுதலை செய்வதை வலியுறுத்தி - அம்முறையைப் படிப்படியாக குறைக்கத் தூண்டியது. எந்த அளவுக்கு தூண்டியது என்றால் - அடிமைகளை விலை கொடுத்து வாங்க வசதிபெற்ற - நபித்தோழர்கள் விலை கொடுத்து வாங்கி பிறகு விடுதலை செய்து, அடிமைகளை சுதந்திர மனிதர்களாக ஆக்கினார்கள். எனவே அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் இஸ்லாத்தில் கருத்து வேறுபாடு இல்லை.

தவிர்க்க முடியாத காரணத்தினாலேயே போர் கைதிகளை மட்டும் அடிமைகளாக்கிக் கொள்வதை இஸ்லாம் அனுமதித்திருக்கிறது. போரில் சிறைப் பிடித்தக் கைதிகளை அடிமைகளாக்கிக் கொள்வது அன்றைய சமூகங்களின் வழக்கமாகவும் இருந்தது. போரில் பிடிபட்ட கைதிகள் விஷயத்தில் நான்கு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

1. பிடிபட்டக் கைதிக்குப் பகரமாக பணயத்தொகைப் பெற்றுக்கொண்டு அந்த கைதியை விடுதலை செய்தார்கள்.
2. போர் கைதிக்கு பகரமாக போர்கைதியை மாற்றிக்கொண்டார்.
3. போர் கைதிகளை அடிமைகளாக - அடிமைச் சந்தையில் விற்று விடுவார்கள்.
4. போர் கைதிகளிடம் வேலையை வாங்கிக்கொண்டு அதற்கு பகரமாக அவர்களை பராமறித்துக் கொண்டார்கள்.

இதுதான் அன்றையப் போர்களில் பிடிபட்ட கைதிகளின் நிலையாக இருந்தது. இதில் முஸ்லிம்கள் மட்டும் பிடிபட்ட போர் கைதிளை .//யாரும் யாருக்கும் அடிமை இல்லை, அனைவரும் சம உரிமை படைத்தவர்கள், அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும்// என்று சொல்லியிருக்க வேண்டும் என்பது கவ்வைக்குதவாத, வாதமட்டுமல்ல, முஸ்லிம்களை கருவறுக்கச் செய்யும் வழியுமாகும்.

எதிரிகள் மட்டும் போர் கைதிகளை அடிமையாக்கிக் கொள்ளலாம், ஆனால் முஸ்லிம்கள் பிடிபட்டப் போர் கைதிகளை ''நீயும் நானும் சமம்'' என்று விடுதலை செய்தால், விடுதலைப் பெற்றவன் மீண்டும் போருக்கு வரத்தான் செய்வான். இப்படி ஒரு படுபாதக நிலை இருப்பதோடு, ''நீயும் நானும் சமம்'' என்று போர் கைதிகளை உட்கார வைத்து விருந்தும் போட முடியாது. இப்படி நியாயமான காரணங்களால் போர் கைதிகளை அடிமையாக்கிக் கொள்வதை மட்டும் இஸ்லாம் அனுமதிக்கிறது.

சுதந்திரமான தனி மனிதனின் உரிமையில் தலையிட்டு, அவனின் உரிமையை நசுக்கி அடிமையாக்கி தொழில் செய்வதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை மாறாக, அதை வன்மையாகக் கண்டிக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
''மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்' என்று அல்லாஹ் கூறுகிறான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு அதில் மோசடி செய்தவன். இன்னொருவன்,
சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்..
மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்'' (நபிமொழி புகாரி 2227)

அடிமைகள் பற்றி திருக்குர்ஆன் இரு வசனங்கள்:.

4:36.மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.

24:32.இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான .உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

//இஸ்லாம் அடிமை முறைக்கு முற்றிலும் எதிரானது அல்ல என்றும் ஒரு வாதம் இருக்கிறது.//

அடிமைகள் பற்றிய வாதம் மட்டுமிருந்தால் இப்பதிவில் பின்னூட்டலாம் நன்றி!

Thursday, February 09, 2006

நம்பிக்கையில், நானும் - தங்கமணியும்.

எந்தவொரு நம்பிக்கையும் இல்லாமல் இந்த உலகம் இயங்குவதில்லை. விளை நிலத்தைப் பண்படுத்தி, விதைத்துவிட்டு - விளையுமென்ற நம்பிக்கையில் விவசாயி இருக்கிறான். விளைந்த தானியங்களை கொள்முதல் செய்ய வேண்டுமென்ற நம்பிக்கையில் வியாபாரி இருக்கிறான். வியாபாரிகளிடமிருந்து பொருட்களை வாங்க வேண்டுமென்ற நம்பிக்கையில் பொது மக்கள் இருக்கிறார்கள். தொழிலாளர்கள், தொழிலதிபர்கள் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் சம்பந்தப்பட்ட தொழில்கள், துறைகளை நம்பியே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அன்றாட வாழ்க்கையில் பிச்சைக்காரனும் தனக்குக் கிடைக்கும் பிச்சையை நம்பியே வாழ்கிறான். மோசடிக்காரன், திருடன், ஜேப்படி செய்பவனும் தன் தொழிலை!? நம்பியே வாழ்கிறார்கள். இப்படி அனைத்து மனிதர்களின் நம்பிக்கையிலேயே இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
நம்பிக்கை இதோடு முடிந்து விடுவதில்லை. மறைவான விஷயங்களை நம்புவதில் ஆன்மீகவாதிகளுக்கு கடவுள் நம்பிக்கை மிக முக்கியப் பங்களிப்பாக இருக்கிறது.

ஆன்மீகவாதியாகிய நான் என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் - உண்ணுதல், பருகுதல், இல்லறம் - குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில்கள் சமூகம் இவை அனைத்திலும் இறைவழி காட்டுதல்களையே முன்னுதாரணமாக நம்பிக்கை கொண்டு செயலாற்றி வருகிறேன்.

என் நம்பிக்கை பலமகலாம் ஆனால் எந்த நேரத்திலும் நிஜமாக முடியாது என்பது தங்கமணி என்பவரின் வாதம். இதை கீழ்காணும் அவரின் பின்னூட்டத்திலிருந்து விளங்கலாம்.

//ஆனால் ஒரு நம்பிக்கை பலமாகலாம்; எந்த நேரத்திலும் நிஜமாகமுடியாது என்பது எல்லா நம்பிக்கையாளரும் நினைவிற்கொள்ள வேண்யது. எனவே ஒரு நபிகளின் மேலான தாக்குதலை ஒரு வரலாற்று/ அரசியல் பாத்திரத்தின் மேல் செய்யப்படும் திரித்தல் என்ற அளவிலேயே பார்த்தலும் எதிர்வினையாற்றுதலும் சரியானது என்று நினைக்கிறேன். அப்படியான திரித்தல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடத்தப்படும் போதும் எதிர்வினை ஆற்றுவது மிகவும் அவசியமானது ஆகும்.//

என் நம்பிக்கையை பலமானது, ஆனால் நிஜமானது இல்லை என்ற கருத்தை நிறுவ முயலும் தங்கமணியின் நம்பிக்கையும் பலமானது, ஆனால் நிஜமானது இல்லை! - பின்னே இல்லையா? எல்லா நம்பிக்கையாளர்களும் நினைவிற்கொள்ள வேண்டியது போல் தங்கமணியின் நம்பிக்கையும் நிஜமானதல்ல என்பதை அவர் நினைவிற்கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தில் அரசியலும் ஆன்மீகம்தான் என்பதை இன்னும் சற்று ஆழமாக இஸ்லாத்தை வாசித்திருந்தால் தங்கமணி புரிந்து கொண்டிருப்பார்.

ஹுஸைன் வரைந்த சரஸ்வதி ஓவியம்.

சரஸ்வதியை ஆபாசமாக வரைந்த ஓவியர் ஹுஸைன் என்பவரை - அவர் முஸ்லிம் இல்லை என்று சொல்லுமளவுக்கு அன்று விமர்சிக்கப்பட்டார். உருவப்பட ஓவியம் வரைவதை இஸ்லாம் தடை செய்திருப்பதால். உருவப்படங்களை ஒரு முஸ்லிம் வரைவதிலிருந்து கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் மட்டுமே உருவப்படம் வரைவதைத்தடை செய்து இஸ்லாம் சட்டமியற்றியுள்ளது இந்த சட்டம் முஸ்லிமல்லாத எவருக்கும் நிச்சயமாக பொருந்தாது. மற்றவர்கள் தங்கள் வழிபடும் தெய்வங்கள், அல்லது வழிகாட்டும் தீர்க்கத்தரிசிகளை எப்படி வேண்டுமானாலும், ஒவியமாக வரைந்து கொள்ளலாம். நாமறிந்து அதை அவர்கள் மதங்கள் தடை செய்யவில்லை. இஸ்லாம் இயற்றிய சட்டத்தை மாற்று மதத்தவர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் எவரும் சொல்லவில்லை.

எவ்வளவோ உருவப்படங்கள் எப்படியெல்லாமோ வரையப்படுகிறது அதற்காகவெல்லாம் எந்த ஒரு முஸ்லிமும் ஆட்சேபணைத் தெரிவிப்பதில்லை. முஸ்லிம்களையும், முஸ்லிம் தலைவர்களையும் கார்ட்டூனாக வரைந்து சித்தரிக்கப்படுகிறார்கள் அதற்கும் எந்த முஸ்லிமும் கண்டனங்கள் தெரிவிப்பதில்லை. பிரச்சனை எங்கே முளைக்கிறதென்றால், இஸ்லாத்தின் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை, முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் ஒப்பற்றத் தலைவரை, எந்த உருவப்படங்களும் வரையக்கூடாது என்று சொல்லிச் சென்ற மாமனிதரையே ஓவியமாகவோ, கேலிச்சித்திரமாக கார்ட்டூன் வரைவதைத்தான் முஸ்லிம்கள் கண்டிக்கிறார்கள், அதற்கு தடையிருப்பதால்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களை உருவகமாக - கார்ட்டூனாக வரைந்ததை ஆதரிப்பவர்கள் எடுத்து வைக்கும் வாதம், பிறமத தெய்வங்களையும், தீர்க்கத்தரிசிகளையும் உருவகமாக வரையும்போது, முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் வரைந்தால் என்ன? என்று கேட்பவர்ளுக்கு பதில் இதுதான்..
உங்கள் மதத்திலுள்ள தெய்வங்களை, தீர்க்கத்தரிசிகளை உருவகமாக வரைய உங்களுக்கு அனுமதியிருக்கலாம். ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களை உருவகமாக வரைய இஸ்லாம் அனுமதிக்கவில்லை. உங்கள் மார்க்கத்தில் வரையலாம் என்று நம்பிக்கையுள்ளது போல் இஸ்லாம் மார்க்கத்தில் வரையக்கூடாது என்ற நம்பிக்கையுள்ளது - அந்த நம்பிக்கையை புண்படுத்தாதீர்கள் என்று கேட்டுக்கொண்டு..

சரஸ்வதி ஓவியத்தை ஹுஸைன்தான் முதலாவதாக ஆபாசமாக வரைந்தார் என்று சொல்வதற்கில்லை. அதற்கு முன்பே சரஸ்வதி நிர்வாணச் சிலையாக செதுக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டிருக்கிறார் என்பதற்கு கீழ் காணும் கட்டுரையில் விபரங்கள் இருக்கிறது. சரஸ்வதியின் நிர்வாணச் சிலை படத்தை உணர்வு பத்திரிகையில் பிரசுரித்திருக்கிறார்கள் அதை வலைப்பதிவில் ஏற்றும் வசதி என்னிடம் இல்லை.

ஓவியர் ஹுஸைனை விமர்சித்து அருண் செளரி என்பவர் தினமணியில் எழுதினார். அதற்கு விளக்கமாக ''தினமணிக்கு இது அழகல்ல'' என்று உணர்வு வார இதழில் ஹுஸைனைக் கண்டித்து வெளிவந்த கட்டுரை.

அன்புடன்,
அபூ முஹை
-----------

தினமணிக்கு இது அழகல்ல


முஸ்லிம்களுக் கெதிராக எழுத்துப்போர் புரிவதைத் தன் தொழிலாகக் கொண்டிருக்கும் அருண் செளரி, வலியோரை வாழ்த்தி, எளியோரைத் தாழ்த்தி" என்று தலைப்பிட்டு தினமணி நாளிதழில் (25.10.1996) விஷம் கக்கியுள்ளார்.

ஆபாச வியாபாரி ஹுஸைன், சரஸ்வதியின் உருவத்தை ஆபாசமாக வரைந்தது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையின் அடிப்படையில் அவர் கட்டுரை எழுதியுள்ளார். ஹுஸைனுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் மதச்சார்பின்மைவாதிகளுக்கு சூடு கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு அவர் கட்டுரை எழுதியிருப்பது போல் தோன்றலாம். ஆனால் இந்த சர்ச்சையைப் பயன்படுத்திக் கொண்டு தேவையில்லாமல் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் சாடியுள்ளார்.

ஹுஸைன் வரைந்த நிர்வாண ஓவியங்களை இன்று தான் இந்துத்துவா சக்திகள் எதிர்க்கின்றன. ஆனால் முஸ்லிம்கள் எப்போதுமே அவற்றை எதிர்த்து வந்துள்ளனர்.ஹுஸைனுக்கு எதிராக சங்கப் பரிவாரங்கள் நடத்தும் போராட்டத்தைப் பற்றி முஸ்லிம்கள் கவலை கொள்ளவே இல்லை. ஆபாசங்கள் ஒழிக்கப்பட வேண்டுமென்பதில் முஸ்லிம்களுக்கு இரு வேறு கருத்து கிடையாது. p>

செளரியும் ஆபாச வியாபாரியே.

ஹுஸைனை ஆதரிக்கிறேன், அவரது ஆதரவாளர்களையல்ல என்று அக்கட்டுரையில் செளரி குறிப்பிடுகிறார். இந்துக் கடவுள்களைத் தவிர மற்ற பெண்களை நிர்வாணமாக ரசிப்பதில் ஹுஸைனும் தானும் ஒரே ரகம் தான் என்பதை இதன் மூலம் ஒப்புக்கொள்கிறார். ஆபாசத்திற்கு ஆதரவு கொடுக்கும் ஆபாச வியாபாரியாகவே செளரியும் இருக்கிறார் என்பதற்கு இந்த வாக்கு மூலமே சான்று.

''ஹுஸைனை ஆதரிக்கிறேன், அவரது ஆதரவாளர்களை அல்ல'' என்று ஏதோ ததுவத்தைக் கூறுவதாக எண்ணிக் கொண்டு உளறியிருக்கிறார். ''ஹுஸைனை ஆதரிக்கிறேன்'' என்று கூறுவதன் மூலம் இவரும் ஹுஸைனின் ஆதரவாளராகிறார். அவரது ஆதரவாளர்களை ஆதரிக்கவில்லை என்று கூறுவதன் மூலம் தன்னையே ஆதரிக்கவில்லை என்றும் கூறுகிறார். ஹுஸைனை ஆதரித்துவிட்டு அவ்வாறு தான் ஆதரிப்பதைத் தானே எதிர்க்கும் உளறலைத்தான் தத்துவமாக உதிர்த்துள்ளார்.

''நம் நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான ஓவியர்களில் ஒருவர் கூட இறைத்தூதர் முஹம்மதின் உருவத்தை வரைய தனது கலையார்வத்தையும் படைப்பாற்றலையும் பயன்படுத்தாதது ஏன்? முஹம்மதின் உருவத்திற்கு மிக அழகிய வடிவம் கொடுக்கக் கூட ஓவியர்களின் தூரிகைகளும் சிற்பிகளின் உளிகளும் தயங்குவதேன்? அவ்வாறு செய்தால் அது முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் பாதிக்கும் எனச் சொல்வார்கள். ஏனெனில் அனைத்து விதமான உருவ வழிபாட்டிற்கும் இறைத்தூதரே தடை விதித்திருக்கிறார்.

இதை மீறி எந்தக் கலைஞராவது வடிவம் கொடுக்க முற்பட்டால் முஸ்லிம்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் கலவரம் செய்யுமாறு தூண்டுவார்கள். அதன் பின்னர் அந்தக் கலைஞர் நிம்மதியாக வாழ முடியாது. இதுதான் உண்மையான காரணமாகும். ஹுஸைனுக்கு ஆதரவாகக் கூக்குரலிடுவோரின் அகராதியில் மத உணர்வுகளைப் புண்படுத்தாமலிருப்பது ஹிந்துக்கள் விஷயத்தில் மட்டும் பொருந்தாது போலும். என்று 'அர்த்த புஷ்டியான ஒரு கேள்வியை செளரி எழுப்புகிறார். இந்துக்களின் மத உணர்வுகள் புண்படும் என்பதைப் பற்றிக் கவலை கொள்ளாதவர்கள் இஸ்லாமியர்களின் மத உணர்வுகள் புண்படக் கூடாது என்பதற்காக முஹம்மது நபியை ஓவியமாக வரைவதில்லை என்பது இவரது வாதம்.

இவர் எடுத்து வைக்கும் இந்த வாதத்திற்கு நாம் பதில் கூறத் தேவையில்லை செளரியே பதிலையும் கூறிவிடுகிறார்.

''தனது உருவம் உள்பட எந்த உருவத்தையும் வரையக் கூடாது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) தடை விதித்திருப்பதை ஒப்புக்கொள்கிறார். எல்லாவிதமான ஒவியங்களையும் இஸ்லாம் மார்க்கம் தடை செய்துள்ளதால் அதை மீறும்போது முஸ்லிம்களின் மத உணர்வுகள் பாதிக்கப்படுகின்றன என்று கூறலாம்.

இந்து மதத்திலும் இவ்வாறு ஓவியங்கள் அல்லது ஆபாசங்கள் தடை செய்யப்பட்டுள்ளதை அவர் எடுத்துக் காட்டியிருந்தால் அதை மீறும் போது இந்துக்களின் மத உணர்வுகள் பாதிக்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். இந்து மதத்தில் ஆபாச ஓவியங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதற்கு எந்த ஆதாரத்தையும் செளரி காட்டவில்லை, காட்டவும் முடியாது.

இந்து மதத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றைச் செய்யும்போது இந்துக்களின் மத உணர்வுகள் புண்படும் என்று சுய நினைவுடைய எவரும் கூறமாட்டார்.

ஒரு மதம் எதை எதிர்க்கிறதோ அதைச் செய்தால் தான் மத உணர்வு புண்படும். அந்த மதம் ஆதரிக்கின்ற ஒன்றைச் செய்யும்போது மத உணர்வு புண்படும் எனக் கூறுவது முட்டாள் தனமானது என்பது கூட செளரிக்குத் தெரியவில்லை.

சாதாரண மனிதன் கூட தனது புகைப்படத்தை வைத்துக் கொண்டு தானே ரசித்துப் பெருமைப்படும் உலகத்தில் மாபெரும் தலைவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) தமது உருவத்தைக் கூட வரையக்கூடாது, அதை வழிபடக்கூடாது என்று கூறியிருப்பதைப் பாராட்டும் பக்குவம் கூட செளரிக்கு இல்லை.

செளரி ஒரு பொய்யர்.

இந்திய மரபில் நிர்வாணச் சித்திரங்கள் புதிதல்ல. கோனார்க் ஜுராஹோவில் இவற்றைக் காண முடிகிறதே என்று சிலர் கூறுகின்றனர். அந்தச் சிற்பங்களும் ஓவியங்களும் சரஸ்வதி அல்லது சீதை அல்லது லட்சுமி போன்ற கடவுளர்களின் உருவங்களல்ல அவற்றை யாரும் வழிபடுவதில்லை... தலைமுறை தலைமுறையாக வெள்ளை ஆடை அணிந்திருக்கும் உருவமாகத் தான் சரஸ்வதியைக் கருதி வருகிறோம். சித்திர மரபுகளும் சரஸ்வதி துதிகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.'' என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார் செளரி.

''பில்லாராக் கோவிலில் சரஸ்வதி ஆடையின்றி வீணையுடன் மட்டும் காட்சி தரும் சிற்பம் இன்றும் இருக்கிறது'' என்பதை மூடி மறைக்கின்றார். இதன் மூலம் தான் ஒரு நாலாந்தர எழுத்தாளன் என்பதை நிரூபித்து விட்டார்.

இந்திய மரபில் நிர்வாண ஓவியங்கள் இருப்பதை ஒப்புக்கொள்ளும் செளரி ''சரஸ்வதி அல்லது சீதை அல்லது லட்சுமி போன்ற கடவுளர்களின் உருவங்களல்ல'' என்கிறார் கடவுளாக வழிபாடு செய்யப்படும் எவரும் நிர்வாணமாக வரையப்பட்டதில்லை, செதுக்கப்பட்டதில்லை. என்ற மற்றொரு அண்டப்புளுகை அவிழ்த்து விடுகிறார் செளரி.

அனைத்து இந்துக் கடவுளர்களுக்கும் மூலவர்களாகக் கருதப்பட்டு வணங்கப்படும் சிவன் மற்றும் பார்வதி ஆடையின்றி இன்ப மயக்கத்தில் கைலாய மலையில் அமர்ந்திருக்கும் காட்சி எல்லோரக் குகையில் இருக்கிறது. (முல்க்ராஜ் ஆனந்த், பார்க்க: பிரண்ட்லைன், நவம்பர் 1,1996)

இது போல் கஜுராஹோலில் உள்ள மக்கள் வழிபடச் செல்லும் காந்தாரிய மஹாதேவ கோயிலின் சுவர்களில் இளம் காதலர்களின் புனித புணர்ச்சியில் ஈடுபடும் காட்சிகள் இருப்பதாக பிரபல ஆங்கில எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த் குறிப்பிடுகிறார். (பார்க்க: பிரண்ட்லைன், நவம்பர் 1, 1996)

கஜுராஹோ ஓவியங்களுக்கு முன்பாகவே, சிவனின் மடியில் பார்வதி அமர்ந்திருக்க, பார்வதியின் மார்பகத்தில் சிவன் கைவைத்திருக்கும் காட்சியுடன் வெண்கல சிற்பங்கள் இருப்பதாக ஹுஸைனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். (பார்க்க: சண்டே 20-26 அக்டோபர் 96)

ஆக நிர்வாணமாகக் காணப்படும் சிலைகளை (அதாவது சிவனையும் பார்வதியையம்) யாரும் வழிபடுவதில்லை என்ற பச்சை பொய்யை அருண் செளரி சொல்லியுள்ளார். அதனை 'தமிழர்களின் மனசாட்சி' என்று சொல்லுகின்ற தினமணியும் வெளியிட்டு தன்னை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறது

ஹுஸைன் முஸ்லிம் இல்லை.
ஹுஸைனைப் பற்றிக் குறிப்பிடுகையில் ''அவர் ஒரு முஸ்லிம், தொடர்ந்து அவ்வாறே இருப்பார்'' என்றும் உருவ வழிபாட்டை இறைத்தூதர் தடுத்த போதும், ''தடையாக நிற்கும் பெருஞ்சுவரில் சிறிய இடைவெளியை ஏற்படுத்தத் தன் வாழ்நாள் முழுவதையும் அவர் (ஹுஸைன்) செலவிட்டுள்ளார். உண்மையில் இது விடுதலைக்கான புரட்சிதான்'' என்று செளரி எழுதியுள்ளார். எனவே இந்த புரட்சியாளனுக்கு எதிராக தன் சகாக்கள் கிளர்ந்தெழுந்திருக்கக் கூடாது என்று கூற வருகிறார் செளரி.

இங்கும் செளரியின் கருத்துக்கள் பொய்மையில் தன் வேர்களை பதித்துக் கொண்டுள்ளன. முதலில் ஹுஸைன் என்ற ஆபாச வியாபாரி பெயரளவில் தனக்கு ஒரு அரபு பதத்தை சூட்டிக் கொண்டுள்ளார்.

அவர் பிறந்த ஊரான பந்தார்பூரில் உள்ள 'வித்தோபா' விக்கிரகத்தை வணங்கி வருபவரே அவர். எனவே கடவுளுக்கு இணைகற்பிக்கும் ஹுஸைன் ஒரு முஸ்லிம் இல்லை. (அதாவது செளரி போன்று இணைவைக்கும் நிராகரிப்பாளர்)

அடுத்து, உருவ வழிபாட்டைத் தடை செய்த இஸ்லாம் எனும் பெருஞ்சுவரில் ஹுஸைன் போன்ற கிறுக்கர்களால் எந்த இடைவெளியும் ஏற்படவில்லை, ஒருக்காலும் ஏற்படாது. உருவ வழிபாட்டை விடுதலைக்கான புரட்சி என்று கூறும் செளரி முதலில் மனநிலை மருத்துவமனையில் தன்னை அனுமதித்துக்கொள்ள வேண்டும்.

செளரி பிறர் துன்பத்தில் இன்பம் காண்பதில் வன்மையானவர். எனவேதான் அவர் வழிபடும் கடவுளர் மட்டும் நிர்வாணமாக இருக்கும்போது கிறிஸ்த்தவ, சீக்கிய கடவுளர்களையும், இஸ்லாத்தின் இறைத்தூதரையும் அந்நிலையில் காண முடியவில்லையே என்று ஏக்கப் பெருமூச்சு விடுகிறார். மேலும் இஸ்லாம் தடை செய்துள்ள ஓவியத்தை ஒரு முஸ்லிம் வரையத் துணிந்துள்ளார். தடையாக நிற்கும் பெருஞ்சுவரில் சிறிய இடைவெளியை ஏற்படுத்தத் தனது வாழ்நாள் முழுவதையும் அவர் செலவிட்டுள்ளார். அதற்காக அவரை ஆதரிக்கிறேன்.

இஸ்லாத்தில் இல்லாத ஒரு கீழ்த்தரமான ஓவியனை முஸ்லிம் என எண்ணிக்கொண்டு தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறார் செளரி. இவரைப் போன்றவர்களால் இந்திய பத்திகையாளர்களுக்கு அவமானமே! அதனை தினமணி பிரசுரித்ததால் தமிழருக்கும் அவமானமே!

நன்றி: உணர்வு வார இதழ், நவம்பர் 1-7, 1996