Showing posts with label கலகம். Show all posts
Showing posts with label கலகம். Show all posts

Tuesday, April 22, 2008

Fithna - Fiத்னா என்றால் என்ன?

இஸ்லாம் மார்க்க வழிகாட்டி, திருக்குர்ஆனில் ஃபித்னா என்ற வாசகம் அல்ஃபித்னா, வல்ஃபித்னா ஃபித்னா இன்னும் பல உச்சரிப்பில் சுமார் 60 வசனங்களில் இடம்பெற்றுள்ளது. இன்னும் ஹதீஸ் நூற்களில் ஃபித்னா என்ற வாசகம் அதிகமாக இடம்பெற்றுள்ளன. ஃபித்னா என்றால் என்ன பொருள்? என்று தெரிந்து கொள்வதற்கு முன்,..

மேலைநாட்டு குறும்படத் தயாரிப்பளார் கீட் வைல்டெர்ஸ் என்பவர் தயாரித்து வெளியிட்ட பிட்னா எனும் குறும்படத்தை குறித்து ஒரு கீழை நாட்டவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்,

//சமீபத்திய நாட்களில் பரபரப்பான செய்திகளில் ஒன்று பிட்னாவுக்கு எதிரான முஸ்லீம்களின் உலகளாவிய போராட்டம் ஆகும். இந்த பிட்னா என்றால் என்ன? முஸ்லீம்கள் அல்லாதவர்கள் மேல் தொடரப்படும் தாக்குதல் போர்,யுத்தம் அல்லது பயங்கரவாதமே பிட்னா ஆகும்.For further details http://en.wikipedia.org/wiki/Fitna_(word)
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கீட் வைல்டெர்ஷ் என்பவர் த்யாரித்த குறும்படமே இன்று உலகில் பிட்னா என்ற வார்த்தையை உலகளவில் பிரபலமாக்கியுள்ளது. கிட்டதட்ட பதினைந்து நிமிடங்களே ஓடும் இந்தப் படத்தில் இஸ்லாம் வன்முறையைத் தூண்டும் குரான் வசனங்களும் உலகளாவிய இஸ்லாம் பயங்கரவாதம் குறித்த காட்சிகளையும் காண்பிக்கின்றனர். அந்த படத்தில் வரும் குரான் வசனங்களை தமிழில் கீழே கொடுத்துள்ளேன். இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கை அல்லா அல்ல வன்முறையே என்பதை இந்த படம் எனக்கு உணர்த்தியது. இந்த பிட்னா படத்தின் விடீயோ லின்க்கையும் கீழே கொடுத்துள்ளேன்://


இஸ்லாம் வன்முறை மார்க்கம் என்ற ஆதாரமற்றக் கட்டுக் கதைகள் புளித்துவிட்டது. ஆனால் ஃபித்னாவுக்கு கொடுத்த விளக்கம் அறியாமையால் விளைந்த புதுக்கதை. மேலை நாட்டாரானாலும், கீழை நாட்டாரானாலும் விமர்சனம் தெளிவாக, அறிவுப்பூர்வமாக இருந்தால் வரவேற்கத்தக்கது. இந்த இரு நாட்டாரும் ஃபித்னா என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்திருப்பதை கவனித்தால், திருக்குர்ஆனிலிருந்து அந்த வாசகத்தையே அறிந்திருக்கவில்லை என்பது தெளிவு.

ஃபித்னா என்றால் என்ன?

ஃபித்னா (குழப்பமும் - கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். (திருக்குர்ஆன், 002:191)

ஃபித்னா (குழப்பம் - கலகம்) செய்வது, கொலையைவிடக் கொடியது. (திருக்குர்ஆன், 002:217)

ஃபித்னா என்றால்: கலகம், குழப்பம், சோதனை, துன்புறுத்தல், திசை திருப்பல் என திருக்குர்ஆனில் பல பொருளில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

'உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும்..'' (திருக்குர்ஆன், 003:007)

''கலகம் செய்வதற்கு அவர்கள் அழைக்கப்படும்போதெல்லாம் அதில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். (திருக்குர்ஆன், 004:91)

(நபியே) உம்மைக் குழப்புவார்கள் (திருக்குர்ஆன், 005:049)

''எந்த சோதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணி விட்டனர்'' (திருக்குர்ஆன், 005:71)

''அவர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இவ்வாறு சோதித்தோம்'' (திருக்குர்ஆன், 006:053)

ஒரு சோதனையை அஞ்சிக்கொள்ளுங்கள் (திருக்குர்ஆன், 008:025)

என் சமுதாயமே இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்'' (திருக்குர்ஆன், 020:90)

சோதனைக்குள்ளாக்கப்பட்ட பின்.. (திருக்குர்ஆன், 016:110)

(நபியே) உம்மைத் திசை திருப்ப முயன்றனர் (திருக்குர்ஆன், 017:073)

நீங்கள் சோதிக்கப்படும் கூட்டமாக உள்ளீர்கள்'' (திருக்குர்ஆன், 027:047)

''உங்கள் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் சோதனையே'' (திருக்குர்ஆன், 064:015)

(இன்னும் பார்க்க திருக்குர்ஆன் வசனங்கள்: 002:102,193. 008:028,039,073. 010:085. 017:060. 021:035,111. 022:011,053. 024:063. 025:020. 029:010. 037:063. 039:049. 054:027. 060:005. 074:031)

ஹதீகளிலும் ஃபித்னா என்ற வாசகம் சோதனை, குழப்பம் என்ற கருத்தில் சொல்லப்பட்டுள்ளது. அன்றாடம் இறைவணக்கத்தில் ஈடுபடும் முஸ்லிம்கள், தொழுகையின் இருப்பில் கேட்கப்படும் பிராத்தனையில்...

''அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக்க மின் அதாபி ஜஹன்னம், வ அவூதுபிக்க மின் அதாபி கப்ர், வ அவூதுபிக்க மின் ஃபித்னத்தில் மஸீஹுத் தஜ்ஜால், வ அவூதுபிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்,'' என்ற துஆவாவை குர்ஆனில் உள்ள சூராவை கற்றுத் தருவது போன்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ)

பொருள்: இறைவா! நரக வேதனையை விட்டும் உன்னிடம் நாங்கள் பாதுகாப்புத் தேடுகிறேன். கப்ர் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனையை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

மேற்கூறப்பட்டவை ஃபித்னா என்பதற்கான விளக்கமாகும். ஃபித்னா என்றால் முஸ்லிம்களல்லாத பிற மக்கள் மீது தொடுக்கும் போர் என அகராதியிலேயே இல்லாத புது அர்த்தத்தை இவர்கள் கற்பிப்பதிலிருந்து காழ்ப்புணர்வு எந்த அளவுக்கு இவர்களின் உச்சந்தலைக்கு ஏறியுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இதற்கு wikipedia எனும் தளத்தை ஆதாரம் காட்டுவது இன்னும் வேடிக்கை. wikipedia என்பது எவர், எதை வேண்டுமானாலும் எழுதிவைக்கலாம் என்ற அளவுக்கு பொதுவான இடம். அதில் 2+2=4 என்றும் எழுதிவைக்கலாம், 2+2=3 என்றும் எழுதிவைக்கலாம். அதாவது தப்பும், தவறுமாக எதை வேண்டுமானாலும் அதில் பதிவு செய்து, அதையே மற்ற இடங்களில் ஆதாரமாக குறிப்பிட முடியும்.

உண்மைக்கும் உளறலுக்கும் வெகுதூரம். எவ்வளவு உளறல்களை எழுதினாலும், படம் எடுத்து காட்டினாலும் அவை ஒரு உண்மைக்கு ஈடாகாது. ஃபித்னா என்றால் பிற மதமக்கள் மீது தொடுக்கும் போர், பயங்கரவாதம் என ஒரு மேலை நாட்டவரின் உளறலை அப்படியே தமிழில் வாசிக்காமல் அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை சொந்தமாக பரிசீலனை செய்து சுயமாக விமர்சிக்க வேண்டும். இல்லையேல் சாய்கிற பக்கமே சாயும் செம்மறி ஆடுகளின் நிலையாகும்.

அவர்களைக் கொல்லுங்கள், நிராகரிப்பவர்களின் கழுத்தில் வெட்டுங்கள் என்ற வசனங்களுக்கான விளக்கம் இங்கு படிக்கவும். உணர்ந்து, குறும்படத் தயாரிப்பாளருக்கும் உணர்த்தவும். அறிவற்ற எதையும் அறிந்து கொள்ளாமல் வதந்திகளை பரவச்செய்து, ''பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்'' (002:011)

மற்ற வசனங்களுக்கு விளக்கம் வரும் பதிவுகளில்.

அன்புடன்,
அபூ முஹை