Tuesday, March 27, 2007

ஸஃபிய்யாவின் திருமணமும், மனநோயாளியின் விமர்சனமும்.

மதீனாவிலிருந்து ஷாம் நாட்டை நோக்கிச் செல்லும் பாதையில் சுமார் 170 கீ.மீ தொலைவிலுள்ள ஒரு நகரத்தின் பெயர் தான் கைபர். இங்கு யூதர்கள் வசித்து வந்தனர். இவர்கள், மதீனா நகர்ப்புற யூதர்களுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்களுக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தனர்.

மதீனா மீது போர் தொடுக்கவும், முஸ்லிம்களைத் தாக்கவும் மக்கா இணைவைப்பாளர்களுக்கு எல்லா வகையிலும் உதவிகளும் செய்து வந்தனர். மதீனா புறநகர்ப் பகுதியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 'பனூ நளீர்' குலத்து யூதர்களும் கைபர் வாசிகளுடன் சேர்ந்து கொண்டு குழப்பம் விளைவித்து வந்தனர். இதனால் நபி (ஸல்) அவர்கள் 1500-க்கும் அதிகமான முஸ்லிம்களுடன் புறப்பட்டுச் சென்று 10 நாட்களுக்கும் அதிகமாக முற்றுகையிட்டு, போர் செய்து கைபர் நகரைக் கைப்பற்றினார்கள். கைபரில் தோல்வி கண்ட பிறகே யூதர்களின் விஷமத்தனம் அடங்கியது. இது கைபர் போர் காரணியின் சுருக்கமான வரலாறு.

ஆனால், இஸ்லாத்தை விமர்சிக்கும் ஒரு மன நோயாளி, கைபர் போரின் காரணத்தையே தலை கீழாக புரட்டிப் போடுகிறார். நபி (ஸல்) அவர்கள், ஒர் யூதப் பெண்ணை அடைவதற்காகவே படை திரட்டிக் கொண்டு கைபர் நகரத்தை நோக்கிச் சென்றதாகவும், ஸஃபிய்யாவின் கணவரையும், தந்தையையும் கொடுரமாகக் கொன்று விட்டு ஸஃபிய்யாவை, நபி (ஸல்) அவர்கள் பலவந்தமாக அடைந்ததாக பிதற்றியிருக்கிறார்.

இது தொடர்பாக வைத்த இரு ஹதீஸ்...

Volume 5, Book 59, Number 524:

Narrated Anas:

The Prophet stayed for three rights between Khaibar and Medina and was married to Safiya. I invited the Muslim to h s marriage banquet and there wa neither meat nor bread in that banquet but the Prophet ordered Bilal to spread the leather mats on which dates, dried yogurt and butter were put. The Muslims said amongst themselves, "Will she (i.e. Safiya) be one of the mothers of the believers, (i.e. one of the wives of the Prophet ) or just (a lady captive) of what his right-hand possesses" Some of them said, "If the Prophet makes her observe the veil, then she will be one of the mothers of the believers (i.e. one of the Prophet's wives), and if he does not make her observe the veil, then she will be his lady slave." So when he departed, he made a place for her behind him (on his and made her observe the veil.

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/059.sbt.html#005.059.524
*****************

Volume 5, Book 59, Number 522:

Narrated Anas bin Malik:

We arrived at Khaibar, and when Allah helped His Apostle to open the fort, the beauty of Safiya bint Huyai bin Akhtaq whose husband had been killed while she was a bride, was mentioned to Allah's Apostle. The Prophet selected her for himself, and set out with her, and when we reached a place called Sidd-as-Sahba,' Safiya became clean from her menses then Allah's Apostle married her. Hais (i.e. an 'Arabian dish) was prepared on a small leather mat. Then the Prophet said to me, "I invite the people around you." So that was the marriage banquet of the Prophet and Safiya. Then we proceeded towards Medina, and I saw the Prophet, making for her a kind of cushion with his cloak behind him (on his camel). He then sat beside his camel and put his knee for Safiya to put her foot on, in order to ride (on the camel).

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/059.sbt.html#005.059.524

கைபர் போர் நிகழ்ச்சிகள் சம்பந்தமாக வரும் பல அறிவிப்புகளில், புகாரியில் இடம்பெறும் மேற்கண்ட இரு ஹதீஸ்களை தனது புரட்டல்களுக்கு சாதகமாகத் தேர்ந்தெடுத்து மூடத்தனமாக உளறியிருக்கிறார் மனநோயாளி. ஒரு செய்தியை விமர்சிக்குமுன், அது தொடர்பாக அறிவிக்கப்படும் எல்லா செய்திகளையும் ஓரளவுக்கு ஆய்வு செய்ய வேண்டும் என்பதையாவது அறிந்திருக்க வேண்டாமா? இந்த நியாயத்தை துவேஷிகளிடம் எதிர்பார்க்க முடியாது.

கைபர் போர் பற்றி அதிகமான விபரங்களுடன் முஸ்லிம் நூலில் இடம்பெற்ற செய்தி...

Book 008, Number 3325:

Anas (Allah be pleased with him) reported that Allah's Messenger (may peace be upon him) set out on an expedition to Khaibar and we observed our morning prayer in early hours of the dawn. The Apostle of Allah (may peace be upon him) then mounted and so did Abu Talha ride, and I was seating myself behind Abu Talha. Allah's Apostle (may peace be upon him) moved in the narrow street of Khaibar (and we rode so close to each other in the street) that my knee touched the leg of Allah's Apostle (may peace be upon him). (A part of the) lower garment of Allah's Apostle (may peace be upon him) slipped from his leg and I could see the whiteness of the leg of Allah's Apostle (may peace be upon him). As he entered the habitation he called: Allah-o-Akbar (Allah is the Greatest). Khaibar is ruined. And when we get down in the valley of a people evil is the morning of the warned ones. He repeated it thrice. In the meanwhile the people went out for their work, and said: By Allah, Muhammad (has come). Abd al-'Aziz or some of our com- panions said: Muhammad and the army (have come). He said: We took it (the territory of Khaibar) by force, and there were gathered the prisoners of war. There came Dihya and he said: Messenger of Allah, bestow upon me a girl ont of the prisones. He said: Go and get any girl. He made a choice for Safiyya daughter of Huyayy (b. Akhtab). There came a person to Allah's Apostle (may peace be upon him) and said: Apostle of Allah, you have bestowed Safiyya bint Huyayy, the chief of Quraiza and al-Nadir, upon Dihya and she is worthy of you only. He said: Call him along with her. So he came along with her. When Allah's Apostle (may peace be upon him) saw her he said: Take any other woman from among the prisoners. He (the narrator) said: He (the Holy Prophet) then granted her emancipation and married her. Thabit said to him: Abu Hamza, how much dower did he (the Holy Prophet) give to her? He said: He granted her freedom and then married her. On the way Umm Sulaim embellished her and then sent her to him (the Holy Prophet) at night. Allah's Apostle (may peace be upon him) appeared as a bridegroom in the morning. He (the Holy Prophet) said: He who has anything (to eat) should bring that. Then the cloth was spread. A person came with cheese, another came with dates, and still another came with refined butter, and they prepared hais and that was the wedding feast of Allah's Messenger (may peace be upon him)

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/008.smt.html#008.3325

கைபர் போரில் முஸ்லிம்கள் அணியில் 15 பேரும், யூதர்கள் அணியில் 93 பேரும் உயிரிழந்தனர். இந்தப் போரில் யூதப் பெண் ஸஃபிய்யாவின் (இரண்டாவது) கணவர் கினானா இப்னு அபில் ஹகீக் என்பவரும் கொல்லப்படுகிறார். நபி (ஸல்) அவர்களுக்கு, ஸஃபிய்யா என்ற யூதப் பெண் யாரென்றே தெரிந்திருக்கவில்லை. ஸஃபிய்யாவைப் பற்றிய எணணமும் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. போர் முடிந்து கைபர் நகரத்தைக் கைப்பற்றிய பின், திஹ்யா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் ஓர் அடிமைப் பெண்ணை எனக்குத் தாருங்கள்' என்று கேட்கிறார். ''நீங்கள் சென்று ஓர் அடிமைப் பெண்ணைப் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் திஹ்யா (ரலி) ஸஃபிய்யாவைப் பெற்றுக் கொள்கிறார்.

இந்நிலையில் ''அல்லாஹ்வின் தூதரே! பனூ குறைழா, பனூ நளீர் குலத்தாரின் தலைவரான ஹுயையின் மகள் ஸஃபிய்யாவை திஹ்யாவுக்கு வழங்கி விட்டீர்களே! என்று ஒருவர், யூதர்களின் அரச குடும்பத்துப் பெண்ணாக ஸஃபிய்யாவை அடையாளம் காட்டிய பிறகு, திஹ்யா (ரலி) அவர்களிடம் வேறு அடிமைப் பெண்ணை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி, நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை விடுதலை செய்து மணமுடித்துக் கொள்கிறார்கள். (இன்னொரு அறிவிப்பில் ஏழு அடிமைகளைக் கொடுத்தார்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது)
அடிமைப் பெண்ணாகிய ஸஃபிய்யா அழகு படைத்தவர் என்றிருந்தாலும் அவரை அடிமையாகவே வைத்திருந்திருக்க முடியும். குறைழா, நளீர் குலத்தாரின் தலைவரின் மகள் என்று அவருடைய பாரம்பரியத்துக்காக ஸஃபிய்யா அவர்களை விடுதலை செய்து பிறகு நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

மணப் பெண்ணின் சம்மதமில்லாத திருமணம் செல்லாது என்பதால் ஸஃபிய்யா (ரலி) அவர்களின் சம்மதமில்லாமல் நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை மணமுடிக்கவில்லை.

மாதவிடாய்க்கான காத்திருப்பு நிகழ்ந்திருக்கிறது. மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைந்த பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது மனைவி ஸஃபிய்யாவுடன் உடலுறவு கொண்டார்கள்.

ஆனால், நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை வல்லுறவு கொண்டதாக கதையளக்கும் இந்த மன நோயாளியின் இஸ்லாம் பற்றிய விமர்சனம் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணை வல்லுறவு கொண்டார் என்பது உண்மையாக இருந்திருப்பின் அன்றே இஸ்லாம் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். இன்று நேசமானவர்களுக்கு இஸ்லாத்தை விமர்சிக்கும் வாய்ப்பே இருந்திருக்காது.

//சஃபியாவின் கணவனைக் கொன்று விட்டு அன்றே அப்பெண்ணுடன் வல்லுறவு கொண்டது(ஒரு நாள் கூடத் தாமதிக்கவில்லை முகமது, அதுவும் சஃபியா அழகானவள் என்று கேள்விப்பட்டவுடன் கூப்பிட்டு பார்த்துவிட்டு ஆசை வந்தவுடன் அடைந்தார்),// - நேசகுமார் -

- மேற்கண்ட கருத்து வாசித்த நூல் எது சொல்ல முடியுமா?

அன்புடன்,
அபூ முஹை

Saturday, March 24, 2007

வரலாற்றில் கயமைத்தனம்.

ஆயிஷா (ரலி) அவர்களின் திருமண வரலாறு தெரியாத நேசமுள்ளவரின் வரலாற்றுக் கயமைத்தனத்தை அடையாளப்படுத்தியிருந்தோம். நாம் தமிழில் வைத்த ஹதீஸை விளங்காமல் அந்த ஹதீஸை அப்படியே ஆங்கிலத்தில் வைத்து இது இஸ்லாமியர்களால் மதிக்கப்படும் வலைத்தளமாகும் என வழக்கம் போல் சம்பந்தமில்லாமல் பிதற்றியிருக்கிறார்.

ஆயிஷா (ரலி) அவர்களின் தந்தையிடம் நபி (ஸல்) அவர்கள் பெண் கேட்கும் சம்பவத்தைச் சொல்லும் செய்தி...

நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) ''நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள். (புகாரி, 5081) இதுதான் செய்தி.

இந்த செய்தியில் சாதாரணமாக, நபி (ஸல்) அவர்கள் அபூ பக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷாவைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர் (ரலி) அவர்கள் ''நான் தங்களின் சகோதரனாயிற்றே'' என்று கூறுகிறார். அதாவது பெண் தரமுடியாது என்று மறுக்கவில்லை. இந்தத் திருமண உறவு கூடுமா? என்றே சந்தேகம் எழுப்புகிறார். இது பற்றி ஏற்கெனவே எழுதிய பதிவு.

கடவுள் வந்து கனவில் ஆயிஷாவை மணமுடித்து விட்டார் என்று சொல்லி, அபூ பக்ரிடம், நபி (ஸல்) அவர்கள் பெண் கேட்டதாக இந்த செய்தியில் இல்லை. ஆனால் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் வன்முறைத் தாக்குதலை வழக்கமாக்கிக் கொண்டவர் என்ன சொல்கிறார் பாருங்கள்...

//ஆயிஷா மீது ஆசைப்பட்டு, கடவுள் வந்து தனக்கு கனவில்(கனவில் வருவதும் வஹீதான்) ஆயிஷாவை மணமுடித்து விட்டார் என்று அபூபக்கரிடம் சொல்கிறார். அபூபக்கர் கனவுகளை நம்பக்கூடியவர், கனவுகளுக்கு அர்த்தம் சொல்லக்கூடியவர் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். அபூபக்கர் முதலில் மறுக்கிறார்(இது குறித்து ஏமாறாதவன் விரிவாக எழுதியிருப்பதால் நான் விளக்கமாக அவற்றை இங்கே சொல்லவில்லை, நிறைய இணைய தளங்களிலும் இவ்விஷயம் காணக்கிடைக்கின்றது)// - வரலாறு எப்படித் திரிக்கப்படுகிறது பார்த்தீர்களா!

ஆயிஷாவைப் பெண் கேட்பதும், மணமுடிப்பதும் மக்காவில் நடந்த சம்பவங்கள். ஆயிஷாவை மணமுடிப்பதற்கு முன் ஆயிஷாவைக் கனவில் கண்ட செய்தியை மதீனாவில் தமது மனைவி ஆயிஷாவிடம் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்...

(என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்'' என்று சொல்லிக்கொண்டேன். (புகாரி, 5078)

இந்த ஹதீஸைச் சுட்டிக் காட்டியே சென்ற பதிவில் இவ்வாறுக் கேட்டிருந்தோம்...

//அபூ பக்ர் (ரலி) அவர்கள் கனவுகளுக்கு விளக்கம் சொல்லக்கூடியவர் என்பது தனி விஷயம். ஆனால், கடவுள் கனவில் வந்து தனக்கு ஆயிஷாவை மணமுடித்து விட்டார் என்று அபூ பக்ரிடம் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இந்த மன நோயாளி சொல்வது வெறும் உளறல். எங்கே அப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதை ஆதாரத்துடன் எழுதட்டுமே பார்க்கலாம்.// - அபூ முஹை

நிறைய இணைய தளங்களில் காணக் கிடைக்கின்றன என்று சொன்னவரைப் பார்த்து ''எங்கே ஆதாரங்களுடன் எழுதட்டுமே பார்க்கலாம்'' என்றதற்கு இவரின் மற்றொரு திரித்தலைப் பாருங்கள்...

//ஏன், அபூ முஹையே சிந்தித்துப் பார்க்கலாமே? இதை ஆயிஷாவிடம் கூறிய முகமது, தமக்கு பெண் கொடுக்க மறுத்த அபூபக்கரிடம் எப்படிச் சொல்லாமல் இருந்திருப்பார்? அதுவும் ஆயிஷாவை தான் மணந்தே தீருவது என்று (கடவுள் சொன்னதாக நம்பி) தனக்குள்ளே முடிவு எடுத்துக் கொண்ட நிலையில்? இத்தனைக்கும் அபூ பக்கர் பாவம் கனவுகளை நம்பும், முகமதை இறைத்தூதர் என்று நம்பிய மனிதர்!//

இப்படியெல்லாம் வரலாறுகளைத் திரிப்பது இவருக்குக் கட்டாயமாகிறது. திறந்த புத்தமாக இருக்கும் இஸ்லாமிய வரலாற்றிலேயே இவ்வளவு புரட்டல்களை இவரால் சுமத்த முடிகிறது என்றால், பிறகு தனிப்பட்ட என் மீது சுமத்திய அவதூறெல்லாம் எம்மாத்திரம்?

குறிப்பு: எனக்குப் பதில் சொல்வதாகக் கருதி சம்பந்தல்லாமல் நீளமாக எழுதியுள்ளார். நீளமாக எழுதி விட்டால் நிறைய ஆதாரங்களை சொல்வதாக இவரது நம்பிக்கை.

அன்புடன்,
அபூ முஹை

Tuesday, March 20, 2007

20/03/2007 ஆயிஷாவின் திருமணமும், மன நோயாளியின் கனவும்

அன்றைய அரபுலகில் பால்ய விவாகம் நடைமுறையிலிருந்த வழக்கமாகும். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த பெண்கள் 21வயதில் பாட்டியாகி விடுவார்கள் (புகாரி) என்கிறது வரலாறு. 9வயதில் திருமணம் 10 அல்லது 11வயதில் மகப்பேறு, அந்த மகளுக்கு 9வயதில் திருமணம் 10 அல்லது 11வயதில் மகளுக்கு மகப்பேறு இப்படி அந்தக்காலத்துப் பெண்கள் மகள் வழி பாட்டி என்ற உறவு அந்தஸ்தை 21வயதிலேயே பெற்றுவிடுவார்கள்.

பெண்கள் 21 வயதில் பாட்டியாகி விடுவார்கள் என்பது சர்வ சாதாரணமான வழக்கமாக இருந்த காலத்தில் பருவமடைந்த ஒன்பது வயது மனைவியிடம் கணவன் உடலுறவு கொள்வதும் வழக்கமாக அன்றைய சமுதாயத்தில் நடத்திருக்கிறது. ஒன்பது வயதில் தாம்பத்திய உறவு கொண்ட பெண்களே 21 வயதில் பாட்டியாக முடியும்.

ஆயிஷா (ரலி) அவர்களின் திருமண சம்பந்தமாக அடிக்கடி கனவு கண்டுவரும் மனநோயாளி என்ன கூறுகிறார் என்று பாருங்கள்

//ஆயிஷா மீது ஆசைப்பட்டு, கடவுள் வந்து தனக்கு கனவில்(கனவில் வருவதும் வஹீதான்) ஆயிஷாவை மணமுடித்து விட்டார் என்று அபூபக்கரிடம் சொல்கிறார். அபூபக்கர் கனவுகளை நம்பக்கூடியவர், கனவுகளுக்கு அர்த்தம் சொல்லக்கூடியவர் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். அபூபக்கர் முதலில் மறுக்கிறார்(இது குறித்து ஏமாறாதவன் விரிவாக எழுதியிருப்பதால் நான் விளக்கமாக அவற்றை இங்கே சொல்லவில்லை, நிறைய இணைய தளங்களிலும் இவ்விஷயம் காணக்கிடைக்கின்றது)//

''நான் உன்னை இரண்டு தடவை கனவில் கண்டேன்'' என்ற கருத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறியது, ஆயிஷா (ரலி) அவர்களை திருமணம் முடித்த பிறகு தன் மனைவியிடம் கூறும் செய்தியாகும். நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவை திருமணம் செய்வதற்கு முன் கனவில் பார்த்ததை மனைவி ஆயிஷாவிடம் தெரிவிக்கிறார்கள்.

அபூ பக்ர் (ரலி) அவர்கள் கனவுகளுக்கு விளக்கம் சொல்லக்கூடியவர் என்பது தனி விஷயம். ஆனால், கடவுள் கனவில் வந்து தனக்கு ஆயிஷாவை மணமுடித்து விட்டார் என்று ஆபூ பக்ரிடம் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இந்த மன நோயாளி சொல்வது வெறும் உளறல். எங்கே அப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதை ஆதாரத்துடன் எழுதட்டுமே பார்க்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் அபூ பக்ரிடம் ஆயிஷாவைப் பெண் கேட்டது பற்றி பதிவெழுதிய மை கூட இன்னும் உலரவில்லை. அதைப் படித்த உணர முடியாத மன நோயாளியின் லட்சியக் கனவைப் பாருங்கள்.

அன்புடன்,
அபூ முஹை

Monday, March 19, 2007

நபி சொத்து சேர்க்கவில்லை

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது இந்தியாவை விட அதிக நிலப்பரப்பை ஆளுகையாகக் கொண்டிருந்தார்கள். பெரும் நிலப்பரப்பின் மன்னராக நபி அவர்கள் திகழ்ந்தாலும் வெறும் எளிய வாழ்க்கையே வாழ்ந்தார்கள். ஆன்மீகம், ஆட்சி எனும் இரு தலைமைக்கு அவர்கள் பொறுப்பேற்றிருந்தாலும் தலைமையைப் பயன்படுத்தி சொத்து சேர்க்கவில்லை, சுகமாக வாழவுமில்லை என்பது வரலாறு.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் 63ம் வயதில் மரணிக்கும்போது அவர்களின் சொத்துக்களின் மதிப்பு என்னவென்பதை முன்பு எழுதியது மீள் பதிவு.

மரணிக்கும ்போது நபியின் சொத்துக்கள்

ஏகத்துவப் பிரச்சாரத்தை துவக்கிய ஆரம்பக் காலங்களில் அப்பிரச்சாரத்தைக் கைவிடும்படி அன்றைய மக்கா நகர அறிஞர்கள் செல்வந்தர்கள் அனைவரும் கோரினார்கள். அதற்கு பகரமாக பொன் - பொருட்களை நபி (ஸல்) அவர்களின் காலடியில் வைக்கவும் தயாரானார்கள் - பெண் தேவையுள்ளவராக இருந்தால் உலக அழகிகளையும் உமக்குத் தருகிறோம் - ஆட்சிதான் வேண்டுமென்றால் உம்மை எங்களுக்குத் தலைவராக்கிக் கொள்கிறோம். என்றெல்லாம் வாக்குறுதி தந்து - ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரத்தை கைவிடும்படி வேண்டினார்கள்.

ஒரு கையில் சூரியனையும், மறு கையில் சந்திரனையும் தந்து கேட்டாலும் ஏகத்துவப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டேன் என்று அல்லாஹ்விடமிருந்து சத்தியத்தைப் பெற்று மக்களுக்குப் போதித்த இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மிக உறுதியாகச் சொன்னார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள், பொன் - பொருள் - பதவியின் மீது ஆசை கொண்டிருந்தால் இவையெல்லாம் தம் காலடியில் மண்டியிடத் தாயாராக இருந்த போது அதை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கலாம். மாறாக இறைத்தூதர் பதவிக்கு முன் இவையெல்லாம் சர்வ சாதாரணமாக - துச்சமாக மதித்து அனைத்தையும் தூக்கியெறிந்தார்கள். இறுதியாக மக்கா நகர நிராகரிப்பாளர்கள் முஹம்மது (ஸல்) அவர்களை கொலை செய்யத் திட்டங்களைத் தீட்டி நாளும் குறித்தார்கள்.

நிராகரிப்பாளர்களின் கொலை முயற்சி திட்டங்களை முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தியாக இறைவன் அறிவிக்க நாடு துறந்து மதீனா சென்றார்கள். நாடு துறந்து சென்ற நபி (ஸல்) அவர்களைத் தொடர்ந்து மக்கத்து நிராகரிப்பாளர்கள் மேலும் வன்செயல்களைப் புரிந்து நபியையும், நபியைப் பின்பற்றிய முஸ்லிம்களையும் துன்புறுத்தினார்கள். இதுமட்டுமல்லாமல் உள்நாட்டில் - மதீனாலிருந்த நிராகிப்பாளர்களும் நயவஞ்கச் செயல்களின் மூலம் நபியின் - நபியைப் பின்பற்றிவர்களின் முதுகில் குத்தினார்கள்.

இத்துன்பங்களையும் - சோதனைகளையும் இறைவழியில் சகித்துப் புறக்கணித்து சத்தியமே பெரிதென வாழ்ந்து மதீனாவில் ஆட்சியை நிறுவினார்கள். சிறிது காலத்தில் எவ்வித சண்டையும் இல்லாமல் மக்காவும் நபி(ஸல்) அவர்களின் ஆளுமைக்கு வந்து முடிசூடா மன்னராகத் திகழ்ந்தார்கள். பெயரளவிற்குத்தான் மன்னரே தவிர நபி(ஸல்) அவர்களும், நபியைப் பின்பற்றியவர்களும் பட்டினிப் பட்டாளங்களாகத்தான் இருந்தார்கள். (முஹம்மது (ஸல்) அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு முன்பிருந்த வசதிகளையும் - நபித்துவம் பெற்ற பின் இழந்தார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை)

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அவர்களின் சொத்து மதிப்பீடு.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் தலைவராக இருந்து - தலைமைப் பொறுப்பில் இருக்கும் போதே மரணித்தார்கள். மரணித்த மாமன்னரின் சொத்தின் மதிப்பைப் பாருங்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ, (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ) அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச் செல்லவில்லை. தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர. (அறிவிப்பவர், அன்னை ஜூவைரிய்யா பின்த்து ஹாரிஸ்(ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண்: 2739)

நிலைப் பேழையிலிருந்து சிறிது பார்லியைத் தவிர உயிருள்ளவர் உண்ணக் கூடிய பொருள் எதுவும் என் வீட்டில் இல்லாத நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு அதை நான் அளந்தேன். (அதனால் சிறிது காலத்திற்குப் பின்) அது தீர்ந்து போய்விட்டது. (அறிவிப்பவர், அன்னை ஆயிஷா (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண்: 3097)

நபி(ஸல்) அவர்கள் தம் ஆயுதத்தையும் தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும் தவிர வேறெதையும் (தாம் மரணித்தபோது)விட்டுச் செல்லவில்லை. மேலும் அவர்கள் ஒரேயொரு நிலத்தை (மட்டும்) தருமமாகவிட்டுச் சென்றார்கள். அறிவிப்பாளர், அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண் 3098)


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துக்கள் இதுதான். அதிலும் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை அய்லாவின் அரசர் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகத் தந்தது என்று ஆவணங்கள் கூறுகின்றன. உணவுக்காகக் கடன் வாங்கிய கோதுமைக்காக, நபி (ஸல்) அவர்களின் இரும்புக் கவசம், ஒரு யூதரிடம் அடமானம் வைக்கப்பட்டிருந்தது. (புகாரி)

நபி (ஸல்) அவர்கள் தர்மமாக விட்டுச் சென்ற தோட்டம் பெரிய மதிப்புடைய சொத்தாக இல்லை. அன்றைய காலத்தில் நிலத்திற்கென்று எந்த மதிப்பும் இருக்கவில்லை. அவரவர் நிலத்திலுள்ள மேடு, பள்ளத்தை சமண் படுத்தி தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்கள். நபித்தோழர் அபூ கதாதா (ரலி) அவர்கள் தமது கவசத்தை விற்று ஒரு தோட்டத்தை விலைக்கு வாங்கியதாக அறிவிக்கிறார்கள் (புகாரி) ஒரு இரும்புக் கவசத்தின் மதிப்புத்தான், ஒரு விவசாயத் தோட்டத்திற்கான மதிப்பும். இதிலிருந்த அன்று, நிலத்தில் விளையும் உணவுப் பொருட்களுக்குத்தான் மதிப்பீடாக இருந்தது, நிலத்திற்கு மிகக் குறைந்த மதிப்பீடே இருந்திருக்கிறது என்பதை விளங்கலாம்

அன்றைய மதீனாவில் பெரும் செல்வந்தர்கள் குடிமக்களாக இருந்தார்கள். பிரஜைகளை ஆட்சி செய்யும் - ஆட்சித் தலைவர் மிகச் சாதாரணச் செல்வந்தராகக்கூட இருக்கவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்கள் நபியின் வீட்டில் அடுப்பெரியும் அளவிற்கும் வசதியைப் பெற்றிராத ஏழையாகவே வாழ்ந்தார் - அதே நிலையில் மரணிக்கவும் செய்தார் என்று இஸ்லாத்தின் ஆவணங்கள் எடுத்துரைக்கின்றன. அது மட்டுமல்ல நபிமார்களின் சொத்துக்களுக்கு எவரும் வாரிசாக முடியாது - நபிமார்கள் விட்டுச் சென்று சொத்துக்கள் அனைத்தும் தர்மமேயாகும்.

நபிமார்களின் சொத்துக்கு வாரிசில்லை, என்பதை அடுத்துப் பார்ப்போம்.

முதலில் அவதூறை நிரூபிக்கட்டும்

சகோதரர் இப்னு பஷீரின் பதிவில் சொல்லப்பட்ட விஷயங்களை ஜீரணிக்க முடியாமல் அது போன்ற தருணங்களிலெல்லாம் ஒவ்வொரு தடவையும் வழக்கம் போல் என்ன செய்வாரோ அதே ஆட்டத்தை ஆடியிருக்கிறார் ஒரு இந்துத்வவாதி.

இவர் ஒரு நேரத்தில், அதாவது வலைப்பதிவுக்கு வருவதற்கு முன் இஸ்லாத்தை விமர்சிப்பதில் ஹீரோவாக இருந்தாராம். வலைப்பதிவில் இவர் காலடி வைத்த நேரம், இவருடைய விமர்சனம் வெறும் பிதற்றல் + புரட்டலாகி வெளிச்சத்திற்கு வந்து விட்டது. வரலாற்றைப் புரட்டினார், பொய்களைப் பரப்பினார் எல்லாமே, இவரது பாஷையில் சொன்னால் பம்மாத்து.

சமீபத்தில் இவரைச் சீண்டுவார் யாருமில்லை. வேறு பெயர்களில் இவர் எழுதுவதாக சொல்லப்பட்டாலும் அதற்கும் சரியான பதிலடி கொடுக்க பல முஸ்லிம்களும் வலைப்பதிவில் நுழைந்து விட்டார்கள் அதனால் இவருக்கு எரிச்சல்.

முஸ்லிம்களை சீண்ட வேண்டுமென்றால் முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தரக்குறைவாக எழுதினால் போதும் என்ற லாஜிக்கை தொடர்ந்து இவர் பயன்படுத்துவது அறிந்ததே. அந்த வழக்கமான எழுத்தைத்தான் இப்போதும் எழுதியிருக்கிறார். முஸ்லிம்கள் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டால் பொதும், எல்லம் வழக்கமான உளறல்தான் -வழக்கம் போல் புலம்பி பின் ஓய்ந்து விடுவார்.

நேர்மையென்றால் என்னவென்றே தெரியாத இந்த வேடதாரியின் அவதூறுகளில் ஒன்று, இவரை எதிர்த்து எழுதிய என்னை, இவரது பிறப்பு பற்றி நான் வசைபாடியதாக என் மீது குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு விளக்கம் கேட்டு எழுதி இரண்டு வருடங்கள் ஆகப் போகின்றன. இவர் நேர்மையாளராக இருந்தால் முதலில் என் மீது சுமத்திய அவதூறை நிரூபிக்கட்டும்.


அவசரப்பதிவு

//*இந்நிலையில் என்னை வசைபாடுவதை விடுத்து (குறிப்பாக அபூ முஹை அவரது ஒரு பதிவில் என்னையும் எனது பிறப்பையும் பற்றி வசைபாடியிருந்தார்),*//

மனித குலம் அனைத்தும் தொடக்கத்தில் ஒரே தாய், தந்தையிடமிருந்தே பல்கிப் பெருகியவர்கள் என்பதை ஆழமாக நம்புபவன் நான். நேசகுமாரின் கர்வத்தையே நான் சாடியிருக்கிறேன், அவரது பிறப்பைப் பற்றி எங்கும் வசைபாடியதில்லை. என் மீது சுமத்தும் இந்தக் குற்றச்சாட்டு தவறான புரிதல், அல்லது அவதூறாகவே இருக்க வேண்டும்.

எடுத்துக் காட்டினால் அது பற்றி விளக்கவும், பிறப்பைப் பற்றி வசை பாடியது உண்மையென்றால் அதை வாபஸ் பெறுவதில் நமக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நேசகுமார் தயவு செய்து என் மீது சுமத்தும் குற்றத்தை சுட்டிக் காட்டி நிரூபிக்கவும். (இது ஒரு அவசரப் பதிவு) அபூ முஹை

நன்றி!
அன்புடன்,
அபூ முஹை

Thursday, March 15, 2007

வாடகையும், வட்டியும் சமமாகுமா?

வாடகை, வட்டி இவை இரண்டுக்கும் வேறுபாடு இல்லை. வாடகைக்கு குடியிருப்பதும், வாடகைக்கு பொருள் எடுப்பதும் தவறில்லை என்றால் பணத்தைக் கடனாகக் கொடுத்து அதற்கு வட்டி வாங்குவதும் வாடகை போன்றது தான். அதாவது வீடு, பொருட்களை வாடகைக்கு விட்டு வாடகை வசூலிப்பது போல பணத்தை வாடகைக்கு விட்டு வாடகை வசூலிப்பது வட்டியில் சேராது என்று வாடகையும், வட்டியும் ஒரு தன்மையைக் கொண்டது என நண்பர் ரியோ கருத்து வைத்திருக்கிறார்.

வாடகையும் வட்டியும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் அடிப்படையில் இரண்டுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. வீடு வாடகைக்கு எடுத்தவர் அதில் குடியேறியவுடன், வாடகைக்காரரின் பொறுப்புக்கு அந்த வீடு வந்து விடுகிறது. ஆனால் வீடு இடிந்து விழுந்தாலும் எரிந்து போனாலும், கலவரங்கள் போன்ற செயல்களால் நாசப்படுத்தப்பட்டாலும் இதற்கு வாடகைக்குக் குடியிருப்பவர் பொறுப்பேற்க வேண்டியதில்லை. வீட்டின் உரிமையாளரே பொறுப்பாளியாவார்.

கடன் வாங்கும் போது, அந்தத் தொகையின் இழப்புக்கும், லாபத்துக்கும் கடன் வாங்கியவரே பொறுப்பாளியாவர். பணம் தொலைந்து போனாலும், எரிந்து போனாலும் கடன் கொடுத்தவர் பொறுப்பேற்க வேண்டியதில்லை.

வீட்டை வாடகைக்கு விடுபவர் லாபத்திலும், நஷ்டத்திலும் பங்கேற்பதால் இங்கு வட்டி ஏற்படுவதில்லை.

கடன் கொடுத்தவர், கடன் வாங்கியவரின் நஷ்டத்தில் பங்கெடுப்பதில்லை. கடன் கொடுத்த பணத்தை விட கூடுதலாக லாபம் மட்டுமே பெற்றுக் கொள்கிறார் என்பதால் இங்கு வட்டி ஏற்படுகிறது.

சைக்கிளை வாடகைக்கு எடுப்பவர் அதை உபயோகித்து, அதிலிருந்து பயன் பெற்று அதற்கான வாடகையைச் செலுத்துகிறார். சைக்கிளை வாடகைக்கு விடுபவர், சைக்கிளை உபயோகிப்பதால் சைக்கிளின் பாகங்களுக்கு ஏற்படும் தேய்மான இழப்பிற்கு வாடகை வாங்குகிறார். வாடகைக்கு விடும் பொருட்கள், வாடகைக்கு எடுப்போர் பயன்படுத்துவதால் அதனால் பொருள் நசிந்து போவதற்கானக் கூலியை வாடகையாகப் பெறுகிறார்.

ஆனால்...
தன்னிடமுள்ள மேலதிகமானப் பணத்தை கடன் கொடுத்துத் திரும்பப் பெறுவதில், பணத்துக்கு எந்தத் தேய்மானமும் ஏற்படுவதில்லை. வட்டியாக லாபம் மட்டுமே பெற்றுக் கொள்கிறார்.
அதனால் எவ்விதத்திலும் வாடகையும், வட்டியும் சமமாகாது!

மற்றவை நண்பர் ரியோவின் விளக்கத்திற்குப் பின்...

மேலும்,
மனிதாபிமானத்துடன் தாராளமாகக் கடன் கொடுத்து உதவும்படி இஸ்லாம் வலியுறுத்துகிறது. கடனை வாங்கி திரும்பத் தராமல் ஏமாற்றுகிறானே அவனை விட்டு விடுவோம், ஏமாற்றுபவன் என்று தெரிந்தால் அவனுக்குக் கடன் கொடுக்க வேண்டியதில்லை. நாணயமுள்ளவர்களாக இருப்பவருக்கு அவசியத் தேவையின் காரணமாக கடன் பெறும் நிலையிலிருந்தால் அவர்களுக்கு கடன் கொடுத்து உதவுங்கள் என்று சொல்லி, கடனைத் திரும்பத் தரும் எண்ணமிருந்தும், இயலாதவர்களுக்கு கடன் தொகையைக் குறைத்துத் தள்ளுபடி செய்யுங்கள் என்றும், நீங்கள் பொருளாதார வசதியில் மேன்மையாக இருந்தால், கொடுத்த கடன் முழுவதும் தள்ளுபடி செய்யுங்கள் என்றும் மனிதர்களிடம் இரக்கம் காட்டும்படி இஸ்லாம் கூறுகிறது.

வட்டி ஒரு பொருளாதாரச் சுரண்டல். வட்டியின் வாடையைக் கூட இஸ்லாம் அனுமதிப்பதில்லை. எந்த அளவுக்கென்றால், காசுக்குக் காசை விற்பதை இஸ்லாம் தடை செய்கிறது. ஒருவருக்கு பத்து ரூபாய் கொடுத்து, திரும்பத் தரும் போது பதினோரு ரூபாயாகத் தரவேண்டும் என்பது பத்து ரூபாயை பதினோரு ரூபாய்க்கு விற்பது காசுக்குக் காசை விற்பதாகும். கடன் வாங்கியவர், கடன் கொடுத்தவருக்கு அன்பளிப்பு, மற்றும் உதவிகள் செய்தாலும் அது வட்டியாகும். அவர்களுக்குள் கடன் வாங்குவதற்கு முன் ஏற்கெனவே இவ்வாறு பகிர்ந்து கொண்டிருந்தால், அன்பளிப்பும் உதவிகளும் தவறில்லை.

கடன் வாங்கியவரை ''நீ இந்த இடத்தில் வந்து பணத்தைக் கொடு'' என்று வேறு இடத்துக்கு அலைய விடுவது வட்டியாகும்.

கடன் கொடுத்தவரை இன்று, நாளை என்று பணம் தராமல் இழுத்தடித்தால் அது கடன் வாங்கியவர் பெறும் வட்டியாகும். இப்படி வட்டியைப் பற்றி இன்னும் பல எச்சரிக்கைகளை விடுக்கிறது இஸ்லாம்.

அப்படியானால் முஸ்லிம்களில் பலர் வட்டியைத் தொழிலாக்கித் தங்களை வளர்த்து வாழ்கிறார்களே? என்ற கேள்வியெழுமானால். முஸ்லிம்களின் செயல்களுக்கு இஸ்லாம் பொறுபேற்காது, நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Tuesday, March 13, 2007

அபூபக்ரும்,ஹம்ஸாவும் நபிக்கு என்ன உறவு?

இரத்த பந்தத்தால் ஏற்படும் உறவுகளில் திருமணம் செய்து கொள்ள எந்ததெந்த உறவு முறைகளெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளதோ, அதே திருமண உறவு முறைகள் பால்குடி உறவுகளிலும் இஸ்லாம் தடை செய்திருக்கிறது.

''உங்களுக்கு பாலூட்டிய செவிலித் தாய்மார்களையும்'' (நீங்கள் மணப்பது விலக்கப்பட்டுள்ளது. 004:023)

திருமணம் செய்வதற்குத் தடை செய்யப்படும் இரத்த சம்பந்தப்பட்ட உறவுகள், பால்குடி உறவுகள் பற்றியும் முஸ்லிம்கள் நன்கு அறிவார்கள். என்றாலும், இஸ்லாத்தை விமர்சிக்கும் மேதகு நண்பர்களுக்கு இது பற்றி அரிச்சுவடி கூட தெரியாமல் விமர்சித்திருக்கிறார்கள். மணமுடிக்கத் தடை செய்யப்பட்ட உறவுகள் பற்றி மேலும் வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்,

முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவார்கள் என்று திருக்குர்ஆன் (003:103, 049:010) வசனங்கள் கூறுகிறது. இனம், நிறம், மொழி, நாடு என்று பகுப்பில்லாமல் முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் மார்க்க சகோதரர்கள் என்று இஸ்லாம் பிரகடனம் செய்கிறது.

இந்த சகோதரத்துவம் இரத்தம் பந்தம், அல்லது பால்குடி சம்பந்தமான உறவு முறைகள் அல்ல. ஒரே மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் உலக முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். இஸ்லாம் யார் யாருக்கிடையில் திருமண உறவை தடை செய்திருக்கிறதோ அந்த உறவுகள் தவிர, மார்க்க சகோதரர்கள் என்பது திருமணத்திற்கு ஒரு தடை இல்லை. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு பெண் கொடுப்பதோ, பெண் எடுப்பதோ தடை செய்யப்பட்டதல்ல. என்பதை புரிந்து கொண்டிருந்தால், அறியாமல் தவறாக விளங்கிய இரு நபிமொழிகளிலும் ஏற்படுத்திய முரண்பாடு அடிபட்டுப் போகும். நண்பர்கள் இரண்டு நபிமொழிகளை புரிவதில் இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த நபிமொழிகளைப் பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) ''நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள். (புகாரி, 5081)

நண்பர்கள் வைத்த ஆங்கில மொழியாக்கமும், அதன் சுட்டியும்,

Narrated 'Ursa:The Prophet asked Abu Bakr for 'Aisha's hand in marriage. Abu Bakr said "But I am your brother." The Prophet said, "You are my brother in Allah's religion and His Book, but she (Aisha) is lawful for me to marry."

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html#007.062.018

நபி (ஸல்) அவர்கள், தமது தோழர் அபூ பக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களை பெண் கேட்கிறார்கள். மார்க்க ரீதியாக சகோதரர்களாகி விட்டதால் ''நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று அபூ பக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அதாவது, நபி (ஸல்) அவர்களும், அபூ பக்ர் (ரலி) அவர்களும் மார்க்க சகோதரர்களாகி விட்டதால் தமது மகள் ஆயிஷாவை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்வது தடை செய்யப்பட்டது என்று கருதியிருந்த அபூ பக்ர் (ரலி) அவர்கள் இங்கே தமது கருத்தைத் தெரிவிக்கிறார்.

நபி (ஸல்) அவர்கள் ''அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள்'' என்று கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள், அபூ பக்ர் (ரலி) அவர்கள் இருவருக்கும் இரத்த பந்த உறவு இல்லை. பால்குடி உறவும் இல்லை என்பதால் மார்க்க சகோதரர்கள் என்ற சகோதரத்துவம் திருமண உறவுக்குத் தடை இல்லை என்று அபூ பக்ர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் விளக்கம் தருகிறார்கள். இதிலிருந்து ஒரு மார்க்க சட்ட விளக்கம் முஸ்லிம்களுக்குக் கிடைக்கிறது என்பது தனி விஷயம்.

இதற்கு முரணாக நண்பர்கள் வைக்கும் நபிமொழி.

நபி(ஸல்) அவர்களிடம் 'தாங்கள் ஹம்ஸா(ரலி) அவர்களின் புதல்வியை மணந்துகொள்ளக் கூடாதா?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'அவள் பால்குடி உறவு முறையினால் எனக்குச் சகோதரர் மகள் ஆவாள்'' என்று கூறினார்கள. (புகாரி,5100)

நண்பர்கள் வைத்த ஆங்கில மொழியாக்கமும், அதன் சுட்டியும்,

Narrated Ibn 'Abbas:It was said to the Prophet, "Won't you marry the daughter of Hamza?" He said, "She is my foster niece (brother's daughter)

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html#007.062.037

நண்பர்கள் - புகாரி, 5081, 5100 ஆகிய - இரு நபிமொழிகளையும் முரணாக விளங்கி, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது அவதூறு மோசடியை சுமத்தியிருக்கிறார்கள். ஏமாற்றும் இரட்டை வேடக்காரர் என்றும் இறைத்தூதர் (ஸல்) மீது பொய்யான களங்கத்தை வீசியிருக்கிறார்கள். அவர்களின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை என்பதை வரலாற்றிலிருந்து விளங்கலாம். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இன்னொரு நபிமொழியிலிருந்து...

நபி (ஸல்) அவர்கள், ஹம்ஸா (ரலி) அவர்களுடைய மகளின் விஷயத்தில், ''அவள் எனக்கு ஹலாலாக (மணந்து கொள்ள அனுமதிக்கப்படவளாக) ஆக மாட்டாள். (ஏனெனில்) இரத்த பந்தத்தின் காரணத்தால் எவையெல்லாம் ஹராம் (தடை செய்யப்பட்டதாக) ஆகுமோ அவையெல்லாம் (செவிலித் தாயிடம்) பால்குடிப்பதாலும் ஹராம் ஆகும். அவள் என் பால்குடிச் சகோதரரின் மகள் ஆவாள்'' என்று கூறினார்கள். (புகாரி, 2645)

புகாரி, 2645, 5100 இரு நபிமொழிகளில் இடம்பெறும் ஹம்ஸா பின் முத்தலிப் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை என்ற வரலாறு தெரியாமல் பிதற்றியிருக்கிறார்கள். வரலாறு இதுதான்...

''ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை ஆவார். இது இரத்த உறவு இதன்படி ஹம்ஸா (ரலி) அவர்களின் மகளை நபி (ஸல்) அவர்கள் மணப்பதில் தடையில்லை. எனினும் ஹம்ஸா (ரலி) அவர்களும், நபி (ஸல்) அவர்களும் ஒரே செவிலித் தாயிடம் சிறு வயதில் பால் அருந்தியுள்ளனர். அபூலஹபின் முன்னாள் அடிமைப் பெண்ணான ஸுவைபா (ரலி) அவர்களே அந்த செவிலித் தாய். இதன்படி நபி (ஸல்) அவர்களும் ஹம்ஸா (ரலி) அவர்களும் சகோதரர்கள் ஆவர். எனவே ஹம்ஸாவின் மகளை தாம் மணந்து கொள்ள முடியாது நபி (ஸல்) அவர்கள் விளக்கினார்கள். (உம்தத்துல் காரீ) 
  
பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா, மக்களை மணமுடிப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது. இந்த உறவில் மணமுடிக்கும் இருவர் சிறு வயதில் ஒரு செவிலித் தாயிடம் பால்குடித்திருந்தால் இருவரும் சகோதரர், சகோதரியாகக் கருதப்படுவார்கள். அவர்களிடையே திருமணம் உறவு தடை செய்யப்பட்டது.

நபி (ஸல்) அவர்களுக்கு ஹம்ஸா (ரலி) அவர்கள் இரத்த பந்த உறவு முறையில் பெரிய தந்தை, அதனால் ஹம்ஸா (ரலி) அவர்களின் மகளை நபி (ஸல்) அவர்கள் மணமுடிப்பதில் தடையில்லை என்றாலும் ஹம்ஸா (ரலி) அவர்களும், நபி (ஸல்) அவர்களும் ஒரு செவித் தாயிடம் சிறு வயதில் பால்குடித்திருக்கிறார்கள் அதனால் இருவருக்கும் சகோதரர்கள். சகோதரரின் மகளை மணமுடிக்கக் கூடாது என்ற அடிப்படையில் பால்குடி சகோதரரின் மகளை மணமுடிப்பது ஆகுமானதல்ல.

அபூ பக்ர் (ரலி) மார்க்க ரீதியாக, நபி (ஸல்) அவர்களுக்குச் சகோதரர் ஆவார்.

ஹம்ஸா (ரலி) பால்குடி உறவு முறையில் நபி (ஸல்) அவர்களுக்குச் சகோதரர் ஆவார்.

என்று...
நபிமொழிகளில் உள்ளதை உள்ளபடி விளங்கினாலே போதும்,

அபூ பக்ர் (ரலி) மகளை நபியவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.

ஹம்ஸா (ரலி) மகளை நபியவர்கள் மணமுடிக்க விலக்கப்பட்டது.

5081, 5100 இரு நபிமொழிகளும் முஸ்லிம் சமுதாயத்துக்கு இரு சட்ட விளக்கங்களை முன் வைக்கிறது. மற்றபடி ஏமாற்றுவது, மோசடி செய்வது இறைத்தூதர்களுக்கு அழகல்ல.

நபி முஹம்மது அவர்களின் மீது இறைவன் சாந்தியை வழங்குவனாக!

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Wednesday, March 07, 2007

அன்பின் நண்பன்

அன்பின் அபூமுஹை,

வேலைப்பளு காரணமாக, வெறும் இணைப்புகளை மட்டும் கொடுத்து விட்டு, வேறு எதுவும் எழுத முடியாமல் போய்விட்டது.

குரான் மொழி பெயர்ப்பில், சிறந்தவை எனவும், ஆதாரப்பூர்வமானது என அங்கீகாரம் பெறப்பட்டதுமான மொழி பெயர்ப்புகளைத் தான் நான் கொடுத்துள்ளேன்.

அவர்களில் ஒருவரின் வரலாறு மிகவும் சுவையானது.

அவர் - பிக்தால். வில்லியம் மர்மட்யூக் பிக்தால்.

ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் குரானை இவர் தான் செய்தார். அர்த்தங்களைத் தான் தன்னால் மொழி பெயர்க்க முடிந்தது, அதை ஓதும் பொழுது எழும் கண்ணீர் வரவழைக்கும் இனிமையை தன்னால் மொழி பெயர்க்க முடியவில்லை என்று கூறும் இவர் - பிறப்பால் ஆங்கிலேயர். மொழி பெயர்ப்பை எகிப்தில் உள்ள ஆங்கிலம் அறிந்த இமாம் ஒருவர் மூலமாக வார்த்தைக்கு வார்த்தை சரி பார்க்கப்பட்டு, வாதம் செய்யப்பட்டு, பின்னர் தான் வெளியிடப்பட்டது.

இவரின் வரலாறு சுவையானது என்று நான் சொன்னது இதனால் அல்ல. அது - பிறப்பால் கிறித்துவரான இவருக்கு முதலில் பணி வழங்கியது கிறித்துவ தேவலாயங்கள் - என்ன அது தெரியுமா?

குரானை விமர்சனம் செய்ய வேண்டும். அது தான் அவருடைய பணி. விமர்சனம் செய்வதற்காக அவர் குரானை வாசிக்க நேர்ந்தது. விமர்சிப்பதற்காக வாசித்தவர், பின்னர் அதன் வழியாகச் சொல்லப்பட்ட உண்மைகளை உணர்ந்து, இப்படிப்பட்ட குரானையா நான் விமர்சனம் செய்கிறேன் என கேள்விகளை எழுப்பி, மனம் மாறி இஸ்லாத்தைத் தழுவியவர். பின்னர் தன் வாழ்நாள் முழுவதும் இஸ்லாத்தின் பணியில் செலவிட்டார். இன்றும், அவருடைய மொழி பெயர்ப்பே, ஆங்கிலத்தின் அதிகார பூர்வ வடிவமாக அனைத்து இஸ்லாமியர்களாலும் ஏற்கப்பட்டுள்ளது.

உண்மையான விமர்சகர்களாக இருந்தால், நியாயம் புரியும். ஆனால், இங்கு வலைத்தளத்தில் எழுதுபவர்களின் நேர்மையை கிலோ எத்தனை என்று விலை பேசி விடலாம். இவர்கள் தான் கிளம்பி விட்டார்கள் விமர்சிப்பதற்கு.

மத விசாரணையில் ஈடுபடுபவர்கள், முதலில் தங்கள் மதத்தைப் பற்றிய முழு அறிவையும் பெற்றிருக்க வேண்டும். ஆன்மீகத்தில் அடிப்படை பரிச்சியம் இருக்க வேண்டும். உண்மையான தேடுதலுடன் ஆராய்ச்சியில் இறங்க வேண்டும்.

ஆனால், நம் நண்பர்கள், அரசியல் காரணமாக, குரான் விமர்சனத்தில் இறங்குகிறார்கள். அதிலும், நேர்மை கிடையாது. எப்படியாவது, மக்களின் கண்களில் மண்ணைத் தூவி, உண்மைகளை மறைத்து அவப்பெயர் உண்டாக்கி விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்படுகிறார்கள். காரணம் - அடக்குமுறை மிகுந்த சமூக அமைப்பிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டுமானால், அது தங்களின் பிறப்பால் தங்களை அவமதிக்கும் மதத்தை விட்டு வெளியேறுவது தான்.

பலர் அம்பேத்கரின் வழியைப் பின்பற்றி, புத்தத்திற்கு செல்கிறார்கள். இஸ்லாத்திற்கு வருகிறார்கள். கிறித்துவத்திற்கும் செல்கிறார்கள். இப்பொழுது, புத்த மதத்தை இந்து மதத்தின் ஒரு அங்கம் என்றே சொல்லத் தலைப்பட்டுவிட்டனர். இது தான் காலத்தின் கட்டாயம் என்பது. எந்த மதத்தை, இந்த மண்ணை விட்டு, அழித்து ஒழித்தார்களோ, அதே மதத்தை இப்பொழுது தங்களின் சகோதர மதமாக அங்கீகாரம் தர தலைப்படுகின்றனர்.

ஆனால், இஸ்லாத்தையும், கிறித்துவத்தையும் - அதனுடைய துல்லியமான வேறுபாடுகளால், தங்களின் சகோதர மதமாக கூற முடியாது என்பதை உணர்ந்து தான், துர்ப்பிரச்சாரம் செய்து, மக்களை தடுத்து விட வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்த எதிர்மறை அணுகும் முறை நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்பதை அறியவில்லை அவர்கள். அது, கலவரங்களிலும், மத வெறுப்பிலும் தான் கொண்டு போய் நிறுத்துகிறது.

இந்த பிரச்சாரத்தின் உச்ச கட்டம் - மத தலைவர்களை இழிவு செய்வது. முகமது நபிகளை - ஒரு மனிதர் என்ற அளவிற்கேனும் மதிக்கத் தவறிய இந்த மனிதர்களை மனிதர்கள் என்று அழைப்பதும் கூட தவறு. சகமனிதனை மனிதன் என்று அழைக்க மறுக்கும் இவர்கள், எப்படி, விமர்சனத்தில் இறங்குகிறார்கள்? எந்த நியாயத்தின் அடிப்படையில் இறங்குகிறார்கள் என்று புரியவில்லை. எந்த ஒரு விமர்சகனுக்கும் அடிப்படையில் தேவை - கருத்து வேறுபாடுகளை மீறிய, மனித மதிப்பீடுகள். அவ்வாறு உள்ளவர்களாலேயே, உண்மையான விமர்சனத்தில் இறங்க முடியும். அந்த தகுதி, வலைப்பதிவர்களில் தங்களை விமர்சகர்களாகக் காட்டிக் கொள்ள முயலும் எவருக்கும் இல்லை என்பது தான் உண்மை. அதனால் தான், இன்று அவர்களின் எழுத்துகளை எவரும் வாசிப்பதில்லை. திண்ணையில் முயன்று பார்த்தார்கள். இப்பொழுது, வலைப்பதிவுகளில். தாங்களே எழுதி, தாங்களே வாசித்து, தாங்களே சிலாகித்து, முகவரியற்ற அநாமதேயங்களால், பின்னூட்டமிட்டு, போலியான பிரமிப்பை எழுப்ப முயற்சிக்கிறார்கள். இவர்களுக்கு வலைத்தளத்தில் வரவேற்பில்லை என்பதை பல வலைப்பதிவாளர்கள் ஆக்ரோஷமாக அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பதிலிருந்தே தெரிகிறது.

இப்பொழுது புதிதாக சங்கதிகளை ஆரம்பிக்கிறார்கள் - அம்பேத்கர் ஒரு இந்துத்வா வாதி என்று. ஒரு அப்பட்டமான பொய்யை, கொஞ்சம் கூட கை கூசாமல் எழுதும் இவர்கள் சமூகத்தால் சிறிது சிறிதாக ஒதுக்கப்படுவர். அம்பேத்கரின் பல புத்தகங்களை வாசித்தவன் என்ற முறையில் தான் இவர்களின் நேர்மையின்மையை அறிய முடிகிறது.

அடுத்த கட்ட பிரச்சாரமாக, இந்து மதத்தில் சாதி பிரச்சினைகளே கிடையாது என்று ஒரே போடாக போடுகிறார்கள். அநாமதேய பின்னூட்டங்கள் அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. இதிலேயே அவர்களுடைய நேர்மை பல்லிளித்து விட்டது.

ஒரு விமர்சகனுக்கு உள்ள நேர்மை, முதலில் உண்மைகளை ஒப்புக் கொள்ள வேண்டும். பிறகு, ஒரு மதத்தினர் ஆதாரப்பூர்வமான நூல் என்று கூறும் பிரதிகளை வைத்துக் கொண்டு வாசிக்க வேண்டும். தாங்களேவே உருவாக்கிக் கொண்ட நூல்களை வைத்துக் கொண்டு, வாதாட வரக்கூடாது. இன்று, இணையத்தளங்களில் எழுதப்படும் விஷயங்களை வைத்துக் கொண்டு, வாதாடுகிறார்கள். இணையத் தளங்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. எவர் வேண்டுமானாலும், எவர் பெயரிலும், எதன் பெயரிலும் எழுதத் தொடங்கலாம். தங்கள் கருத்துகளை இது தான் இந்த மதம் என்று போதிக்கலாம். இத்தகைய கருத்துகளை வைத்துக் கொண்டு வாதாடுவது, என்பது தூங்குவதாக நடிப்பவனிடம் விழிப்பை ஏற்படுத்தும் வெட்டி வேலையாகத் தான் முடியும்.

அவர்களுக்குத் தங்கள் விருப்பம் போல அவதூறுகளை அள்ளி இறைக்கலாம். அது அவர்களின் தனிமனித சுதந்திரம். ஆனால், அந்த சுதந்திரத்தை அமல் செய்வதிலும் விதிகள் இருக்கின்றன. பிற மனிதர்களை, மனிதர்களாக மதிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவற்றவர்கள் கூட, விமர்சனத்தில் இறங்கிவிடுகின்றனர். இவர்கள் தான் தங்கள் மதத்தில் தாழ்த்தப்பட்டு அடக்கி வைக்கப்படும் மனிதர்களை மனிதர்களாக நியாயமாக நடத்துவோம் என்று சூளுரைக்கின்றனர். என்ன ஒரு வெத்து வாதம்? இவர்களை பின் எப்படி மற்றவர்கள் நம்புவார்கள்? இந்தப் புரிதல் இல்லாமலே, சீர்திருத்த வந்தவர்கள் அறியவில்லை, சீர்திருத்தம் முதலில் உள்ளிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதை.

ஒருவர், மிக சவடாலாக, நபி பெருமானார் அவர்களை அவன் இவன் (இறைவன் மன்னிப்பானாக) என்று எழுதுவதில் என்ன தப்பு என்று கேள்வி எழுப்புகிறார்!!! இஸ்லாத்தின் முதல் வாக்கியமான இறைவன் ஒருவனே அன்றி வேறல்ல என்ற தத்துவத்தைக் கூட புரிந்து கொள்ளாமலே, இஸ்லாத்தை அறிந்து விட்டதாக இறங்கி விட்டார்கள். தமிழ் மொழியில், ஏகத்தைக் குறிக்கும் விதமாக அவன் என்று குறிப்பிடப்படுகிறது. அவர் என்று சொன்னால் கூட, அது மரியாதைப்பண்மை ஆகி விடும் என்பதால், காலப்போக்கில், இந்த 'அவர்' உள்ளே பலர் புகுந்து விடக்கூடும் என்பதால், எந்த வித கருத்து மயக்குதலுக்கும் இடமின்றி, தெளிவாக ஒருவனைக் குறிப்பிடுவதற்காக மொழி இலக்கணப்படி, அவன் என்ற சொல் ஒருமையைக் குறிப்பதற்காக, பயன்படுத்தப்படுகிறது.

மொழி அறிவும் கிடையாது, தத்துவ புரிதலும் கிடையாது, மத புரிதலும் கிடையாது ஆனாலும், நான் விமர்சிப்பேன் என்று அடம்பிடிப்பவர்களைப் பார்க்கும் பொழுது, இத்தகைய அநியாய மனிதர்களால், அவர்கள் சார்ந்த மதமே இறுதியில் இழிவு அடைகிறது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

குரானை நிறுவதற்கு, விஞ்ஞான ஆயத்தங்கள் கூட தேவையில்லை.
குரானின் வசனங்களில் ஒன்று, பிற மதத்தைத் தூற்றாதே - பின் அவர்கள் உங்களைத் தூற்றுவார்கள் என்பது. இது இன்று நிரூபணமாகி வருகிறது. பாருங்கள் அவர்கள் முன் நிறுத்திய வேதங்களைப் போட்டு, நார் நாராக கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் சொல்வது, இத்தகைய நேர்மையற்ற மனிதர்களின் தளங்களில், அநாவசியமாகப் பின்னூட்டமிட்டு, நேரத்தை வீணடிப்பதோ, அல்லது அவர்கள் தளங்களின் சுட்டி கொடுத்து, விளம்பரம் செய்வதோ தேவையற்றது. எல்லோரும் ஒதுக்கியவர்களை எதற்காக தேடிப்பிடித்து வாசிக்கிறீர்கள்? மறுப்பு வெளியிட வேண்டுமென்றால், கருத்துகளை மட்டும் குறிப்பிட்டு, நமது தளங்களிலே மறுப்பு சொல்லிக் கொண்டால் போதுமானது என்றே நினைக்கிறேன்.

சரிதானே?

(பின்னர், இதையே ஒரு தனிப்பதிவாகவும் போட்டு விடுகிறேன்.)

Posted by நண்பன் | Mon Mar 05, 09:27:00 PM
------------------------------

அன்பின் நண்பன்,

விரிவான விளக்கத்திற்கு நன்றி! அருமையானக் கருத்துக்கள் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
நீங்கள் எழுதிய அறிஞர் பிக்தால் அவர்கள் இஸ்லாத்தில் இணைந்த சம்பவம் பல நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறது. அதில் உடனடியாக நினைவுக்கு வருவது, நபித்தோழர் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தில் இணைந்த நிகழ்ச்சியாகும்.

நபி (ஸல்) அவர்களை ஒழித்தே தீருவேன் என்று வைராக்கியம் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள், இஸ்லாத்தில் இணைந்த தமது தமக்கையை உண்டா இல்லையா பார்த்து விடுகிறேன் என்று தங்கையைக் கண்டிக்கக் கிளம்பினார். ஆனால் நடந்தது வேறு, அங்கு திருக்குர்ஆன் ஓதுதல் உமரின் செவிகளில் பாய்ந்து அவரின் சிந்தனையைத் திசை திருப்புகிறது. ''ஆஹா இது மனிதனின் வார்த்தையே அல்ல'' என்று வியப்புடன் முழுமையாக இஸ்லாத்தில் சரணடைகிறார்.

இப்படி பாமரர்களும், அறிஞர்கள், விஞ்ஞானிகளும் இஸ்லாமெனும் படுகுழியில் விழுந்தவர்கள் ஏராளம்!

ஒரு நபிச்செய்தி நினைவுக்கு வருகிறது.

'தஜ்ஜாலிடம் தண்ணீரும், நெருப்பும் இருக்கும். அவனது நெருப்பு குளிர்ந்த நீராகும். அவனது தண்ணீர் சுட்டெரிக்கும் நெருப்பாகும். உங்களில் எவரும் இதைக் கண்டால் அவர் நெருப்பாக உள்ளதில் தலையை நுழைத்து அதிலிருந்து அருந்தட்டும். ஏனெனில் அது குளிர்ந்த நீராகும்' (நபிமொழியின் கருத்து)

இஸ்லாம் ஒரு படுகுழியென்றால் அந்தப் படுகுழியில் விழுந்தவர்கள் தப்பித்துக் கொண்டனர். விழாதவர்களையும் படுகுழியில் விழுந்திட இறைவன் அருள் புரியட்டும்.

நிற்க,

வலைப்பதிவில் இஸ்லாம் பற்றி விமர்சிப்பவர்களிடம் நேர்மை இல்லை என்ற உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன். இஸ்லாத்தை விமர்சிக்கும் வலைப்பதிவர்களிடம் உண்மைகளை ஒப்புக் கொள்ளும் நேர்மை இருந்ததில்லை! இது என் அனுபவத்தில் உணர்ந்தது. இஸ்லாத்தின் ஆதாரா நூல்களில் இருப்பதை, இல்லை என்று அவர்கள் மறுத்ததை, எடுத்துக்காட்டி, பொது இடத்தில் பொய்யர்களென விமர்சித்ததை மறுக்க முடியாமல் - அதற்கு எதிர்ப்பு வைக்க முடியாமல் போனாலும், அதை ஒப்புக் கொள்ளும் மனித நேர்மை கூட இவர்களிடம் இல்லை.

சில நேரங்களில் ஆச்சரியமும், அதிர்வும் அடைந்திருக்கிறேன். வரலாற்றை திரித்தும், நெளித்தும் இவர்களால் எப்படி எழுத முடிகிறது?

''எவனொருவன் என் மீது வேண்டுமென்றே பொய் சொல்கிறானோ அவன் தங்குமிடத்தை நரகத்திலாக்கிக் கொள்ளட்டும்'' என்ற நபிமொழியின் எச்சரிக்கை இவர்களுக்கு இல்லை. அதனால் இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருப்பதாகவும் எப்படி வேண்டுமானாலும் இஸ்லாத்தின் மீது அவதூறுகளை இவர்கள் எழுதலாம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களை அவன். இவன் என்று எழுதி, அப்படி எழுதி விட்டால் அவரை விட இவர்கள் உயர்ந்தவர்களென்ற - அதாவது முஹம்மதை இறைத்தூதராக நம்புவர்கள் அவரை மதிக்கட்டும் எனக்கு அவரை மதிக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்ற - ஆணவத்தை இது பிரதிபலிக்கிறது என்றாலும், உலகின் கணிசமான மக்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் தலைவாராக ஏற்றுப் பின்பற்றத்தக்க மனிதர் என்ற கருத்திலாவது சிறிது கண்ணியத்துடன் எழுதும் பண்பாடு தெரியாதவர்கள். நீங்கள் சொன்னது போல் இவர்கள் சவுடால் பேர்வழிகள்.

//நான் சொல்வது, இத்தகைய நேர்மையற்ற மனிதர்களின் தளங்களில், அநாவசியமாகப் பின்னூட்டமிட்டு, நேரத்தை வீணடிப்பதோ, அல்லது அவர்கள் தளங்களின் சுட்டி கொடுத்து, விளம்பரம் செய்வதோ தேவையற்றது. எல்லோரும் ஒதுக்கியவர்களை எதற்காக தேடிப்பிடித்து வாசிக்கிறீர்கள்? மறுப்பு வெளியிட வேண்டுமென்றால், கருத்துகளை மட்டும் குறிப்பிட்டு, நமது தளங்களிலே மறுப்பு சொல்லிக் கொண்டால் போதுமானது என்றே நினைக்கிறேன்.

சரிதானே?// - நண்பன்

சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள்.

பொதுவாக கருத்துக்குக் கருத்து என்று சொல்வதில் இயன்றவரை கவனம் செலுத்துவேன். கருத்து சொன்னவருக்கு மறுப்பு வெளியிட்டாலும், கருத்து சொன்னவரைக் குறிப்பிட்டு எழுத நேர்ந்தாலும் தனிமனித தாக்குதலை தவிர்த்தே எழுதியிருக்கிறேன்.

தேடிப் பிடித்து வாசிக்கும் அளவிற்கு இணைய நேரம் எனக்குக் கிடைப்பதில்லை. வந்த சுட்டியைப் படித்தால் இருப்பதை இல்லையென ஒரு நாலாந்தர நடையில் வழக்கமான அவதூறு. சிராஜுதீன் அவர்கள் மறுமொழியில் குறிப்பிட்ட திருக்குர்ஆன் எட்டு ஆங்கில மொழி பெயர்ப்புகளில் ஒரு ஆங்கில மொழி பெயர்ப்பை வாசித்த சிந்தனையாளர்கள் ஆங்கிலம், தமிழ் இரு மொழி பெயர்ப்புகளும் ஏன் வித்தியாசப்படுகிறது என்ற நேர்மையான விமர்சனத்தை வைத்திருக்க வேண்டும் அப்படிச் செய்யவில்லை.

திருக்குர்ஆன், தமிழ் பெயர்ப்பு அத்தனையிலும் 002:187 வசனத்தின் சம்பந்தப்பட்ட வார்த்தைக்கு ''ஆடை'' என்றே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேதகு நண்பர்கள் அந்த வசனத்தில் ''ஆடை'' என்கிற வார்த்தையே இல்லை என்று அடித்துச் சொல்வதோடு, ''ஆடை'' என்பது ஒரு புரட்டு என்றும் புரட்டுவது யாரென அறியாமலேயே தமது மேதா விலாசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். திருக்குர்ஆன் மூல மொழியிலிருந்து ''ஆடை'' என்று சரியாக தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்த இஸ்லாமிய அறிஞர்களையும் தரக்குறைவாகக் குறிப்பிட்டு தனது மன நிலையை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.

சுட்டி கொடுத்து இவர்களை அடையாளம் காட்டுவது அவசியமெனக் கருதினேன். பிற தளத்தலிருந்து வெறும் நகலெடுத்து ஒட்டிக்கொண்டு திரியும் இவர்கள் கூற்றில் உண்மையாளார்களாக இருந்தால் எங்கே? ''ஆடை'' என்று அந்த வசனத்தில் சொல்லப்படவில்லை என்பதை நிரூபிக்கட்டும் செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

அன்புடன்,
அபூ முஹை

Monday, March 05, 2007

kaaba புனித ஆலயம்.

மக்காவில் அமைந்துள்ள காபத்துல்லாஹ் எனும் இறையில்லம் முஸ்லிம்களின் முதன்மை வணக்கத்தலமாகத் திகழ்கிறது. இது மிகவும் தொன்மையான ஆலயம். ''பழமையான அந்த ஆலயத்தை அவர்கள் தவாஃப் செய்யட்டும்'' (022:029) ''மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம்'' (003:096) என்று திருக்குர்ஆன் சான்று பகர்கின்றது.

இங்கு காபத்துல்லாஹ்வின் வரலாறு பற்றி எழுதும் நோக்கமல்ல. சவூதி அரபியா நாட்டில் மக்கா எனும் நகரத்தில் அமைந்த இந்த இறையில்லம், உலக முஸ்லிம்களுக்கு தொழும் திசையாக இருக்கிறது. முஸ்லிம்கள் காபத்துல்லாஹ்வை முன்னோக்கித் தொழுவதை அரபு நாட்டுத் திசை நோக்கித் தொழுவதாக சிலர் கருதிக்கொண்டு, அரபு நாட்டுக்கு அடிமைபட்டவர்கள் என்று முஸ்லிம்களின் மீது பொருத்தமில்லாத வசவு மொழிகளை அடுக்குகிறார்கள். இவர்களை ''அறியாத சமுதாயம்'' என்று புறக்கணித்து விடுவோம்.

பழமையான காபத்துல்லாஹ் சிதலமடைந்து, இறைவனின் கட்டளையின்படி இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) புதுப்பித்தார்கள், மீண்டும் காபத்துல்லாஹ்வைக் கட்டியெழுப்பியபின், ''ஹஜ்'' செய்வதற்கான அழைப்பையும் அறிவிக்கச் சொல்கிறான் இறைவன்.(022:027)

ஒரே இறைவனுக்கு அடியார்களாக வாக்குக் கொடுத்து இறைவனுக்கு கீழ்படியும் மக்களனைவரும் - அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்காளாக இருப்பினும் - அவர்கள் இந்த ஹஜ்ஜின் அழைப்பையேற்று கூடும் மையமாக காபத்துல்லாஹ்வை இறைவன் நிர்ணயித்தான்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் ஹஜ்ஜிற்கான அழைப்பை அறிவித்தபோது, சவூதி அரபியா எனும் எல்லைக் கோடுகள் வரையப்பட்ட நாட்டிற்குள் காபத்துல்லாஹ் இருக்கவில்லை! மாறாக, காபத்துல்லாஹ் இருந்த இடத்தில் மக்கள் குடியேறினார்கள் அதன் பிறகு நாடு உருவாகி அந்நாடு சவூதி அரபியா எனும் பெயர் பெற்றது.

''எனக்கு எதையும் இணையாக்காதீர்! தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!'' (002:125. 022:026) என்று காபத்துல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தும் பணியை, நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், அவரது மைந்தர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் மேற்கொண்டார்கள்.

காலங்காலமாக இந்தப் பணிகள் பல சமூகத்தாரின் கைகளுக்கு மாறி, இன்று சவூதி அரபியாவை ஆட்சி செய்யும் மன்னரின் கண்காணிப்பில் காபத்துல்லாஹ்வின் பணிகள் நிர்வாகமாக இயங்குகிறது. இறைவன், நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ''எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!'' என்று கட்டளையிட்ட அதே பணிகள், இன்றும் தூய்மைப்படுத்துவதோடு, அதிகமான மக்கள் வருகையை கணக்கில் கொண்டு புனித ஆலயம் விரிவாக்கப் பணியும் சிறப்பாக செய்யப்பட்டு பராமரிப்புப் பணியின் நிர்வாகம் நீடிக்கிறது.

காபத்துல்லாஹ்வை யார் நிர்வகித்தாலும், காபத்துல்லாஹ்வின் மீது அவர்களுக்குள்ள உரிமை போன்று உலக முஸ்லிம்களுக்கும் உண்டு என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கிறது.

''மஸ்ஜிதுல் ஹராமை (அதன்) அருகில் வசிப்போருக்கும், தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம்'' (022:025)

ஜாதியின ஏற்றத் தாழ்வு அடிப்படையில் குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கே வழிபாட்டுத்தலங்களில் முக்கியத்துவம் - முன்னுரிமை வழங்கப்படும்.

இஸ்லாம் சமத்துவத்தின் பிறப்பிடமாக, காபத்துல்லாஹ்வுக்கு அருகில் வசிக்கும் ஒரு அரபியனுக்கு காபத்துல்லாஹ்வின் மீது என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமை உலகில் எந்த மூலையில் வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிமிற்கும் உண்டு! என்று ஏற்றத் தாழ்வு வேற்றுமையை வேரோடு அறுத்தெறிகிறது. புனித ஆலயம், ''எனது இல்லம்'' என்று இறைவன் கூறியிருக்கும்போது, அந்த ஆலயத்தில் இறையடியார்கள் அனைவரும் சமமானவர்களே! அங்கு எவருக்கும் முன்னுரிமை - முதலிடம் என்பதில்லை!

அன்புடன்,
அபூ முஹை

Friday, March 02, 2007

கணவன்-மனைவி-ஆடை!

கணவன் - மனைவி - ஆடை! என்ற தலைப்பில் இப்னு ஹம்துன் அவர்கள் தமது வலைப்பூவில் ஒரு பதிவெழுதியிருந்தார். இஸ்லாம் மார்க்கத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் ஆடையாகத் திகழ்கிறார்கள் என்பதை திருக்குர்ஆன், 002:187வது வசனத்தை மேற்கோள் காட்டி இல்லற வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் சமமே என இஸ்லாத்தின் இயல்பை மிக அழகாக பதிவின் வழியாக பகிர்ந்து கொண்டார்.

சகோதரத்துவம், சமத்துவம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு இது பொருக்குமா..? அவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியாமல், அபத்தமான உளறல்களைக் கொட்டியிருக்கிறார் பாருங்கள்!

திருக்குர்ஆன், 002:187வது வசனத்தில்...

''ஹுன்ன ''லிபாஸு''ல்லகும்'' - ''அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும்''
''வ அன்தும் ''லிபாஸு''ல்லஹுன்ன'' - ''நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும்'' இருக்கின்றீர்கள் என்று மிகத்தெளிவாக கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஆடை போன்ற உதராணமாக இறைவன் குறிப்பிடுகிறான்.

லிபாஸ் என்றால் - dress, robe, garment, gown, apparel, attire, clothing, cloths, suit, costume, wear

லிபாஸ் என்பதை எப்படிப் பொருள் கொண்டாலும் சேலை, சல்வார் கமீஸ், கவுன் போன்ற ஆடை, உடை மற்றும் நீதிபதிகள், பாதிரியார்கள், பட்டம் பெறுவோர் மற்றும் சாதாரண ஆண்கள், பெண்கள் அணிந்து கொள்ளும் அங்கி என்றே பொருள்படும். மேலும் ஆடைகள் பற்றிச் சொல்லும் திருக்குர்அன் வசனங்கள்...

''ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும் அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம் (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது'' (007:026, 27வது வசனத்ததையும் பார்க்கவும்)

மனிதன் மானத்தை மறைத்துக் கொள்ள உடம்பில், அணிந்து கொள்ளும் ஆடை அலங்காரத்தைப் பற்றிச் சொல்லும் இறைவன், உள்ளத்தில் அணிந்து கொள்ளும் ஆடையைப் பற்றியும் சிலாகித்து உதாரணமாக: தக்வா - இறையச்சம் எனும் ஆடையே சிறந்தது என்று உள்ளத்திற்கு அணிய வேண்டிய ஆடையைப்பற்றியும் இங்கே சிறப்பித்துக் கூறுகிறான்.

அங்கு அவர்களுக்கு ஆணிவிக்கப்படும் ஆடை பட்டாக இருக்கும். - ...and their garments there will be of silk (022:023. 035:033)

மறுமையில் சொர்க்கவாசிகளுக்கு அணிவிக்கப்படும் ஆடைகள் பற்றிச் சொல்லப்படுகிறது.

உதாரண ஆடை:
அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம். (078:010. 025:047)
மனிதன் ஓய்வெடுத்து உறங்குவதை நிம்மதியெனும் ஆடையாக இரவை ஆக்கினோம் என்று இறைவன் உதாரணமாகக் கூறுகிறான்.

''அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் அவர்களுக்கு அணிவித்தான்'' (016:112)

இங்கும் பசியையும், பயத்தையும் ஆடைகளென்று உதராணமாக இறைவன் குறிப்பிடுகின்றான்.

இங்கு குறிப்பிட்ட வசனங்களில் ''லிபாஸ்'' என்ற வாசகமே இடம்பெறுகிறது, தமிழறிஞர்கள் மற்றும் சில ஆங்கில அறிஞர்கள் லிபாஸ் என்பதை ஆடை என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள் ஆடை என்பதுதான் சரியான - பொருத்தமான மொழிபெயர்ப்பு!

இந்தப் பொருத்தத்தின்படி அழகிய முன்னுதாரணத்தில்: கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் மானம் - மரியாதை - கெளரவம் எனும் விலை மதிப்பற்ற ஆடையாகத் திகழ்கிறார்கள்.

மேதகு நண்பர் ஏமாறாதவனின் கூற்றுப்படி, ''They are the keepers of your secrets, and you are the keepers of their secrets.'' என்று மொழி பெயர்த்தால்...

ஆடை என்பதை secrets என்று மொழிபெயர்த்துப் பாருங்களேன், குழப்பந்தான் மிஞ்சும்.

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை