Showing posts with label வன்முறை. Show all posts
Showing posts with label வன்முறை. Show all posts

Friday, August 17, 2007

கொல்கத்தா இமாமின் வன்முறைப் பேச்சு.

இந்தியா, அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தமாக நாடாளுமன்றம் அல்லோலப்பட்டு வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் மீது முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்ட்ஸ் பாய்ச்சல் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.

"இந்த பொய்க்கு மன்மோகன் மீது தோட்டா பாய்ந்திருக்கும்!"

புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்டு 2007 ( 13:39 IST )

"அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கூறிய பொய்யை, சீனாவில் சொல்லியிருந்தால் மன்மோகன் மீது தோட்டா பாய்ந்திருக்கும் " என பிரதமரை கடுமையாக விமர்சித்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு எதிராக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்த விவகாரத்தில், இந்திய மக்களை பிரதமர் மன்மோகன் சிங் ஏமாற்றிவிட்டார் என்றும், இதுவே சீனாவாக இருந்தால், அவர் மீது தோட்டா பாய்ந்திருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரம் தொடங்கிய சில நிமிடங்களில், ஃபெர்னாண்டஸ்சின் பேட்டிக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

'ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோர வேண்டும்' என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும், அந்தப் பேட்டி இடம்பெற்றிருந்த செய்தித்தாள்களைக் காட்டிய அவர்கள், 'இது மாபெரும் அவமதிப்புச் செயல்'என்று குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து ஃபெர்னாண்டஸுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், அவையை பிற்பகல் 2.30 வரை சபாநாயகர் ஹமீத் அன்சாரி ஒத்திவைத்தார்.

செய்தியின் சுட்டி

நாடாளுமன்றத்தில் பிரதமரை நோக்கி எழுந்த இந்த வன்முறையானப் பேச்சு எவ்வாறு கண்டிக்கத்தக்கதோ அதுபோல் தஸ்லிமாவின் மீதான கொல்கத்தா இமாமின் வன்முறையைத் தூண்டும் பேச்சும் கண்டிக்கத்தக்கது.

பிறரை வன்முறைக்குத் தூண்டுவதைவிட கொல்கத்தா இமாம் ரோஷமுள்ளவராக இருந்தால் நேரில் சென்று தஸ்லிமாவை வதம் செய்யலாமே.

ஒரு ஜனநாயக நாட்டில் இருந்து கொண்டு, ஜார்ஜ் ஃபெர்னாண்ட்ஸும், கொல்கத்தா இமாமும் பேசியது கண்டிக்கத்தக்கது. எல்லாம் ஜனநாயகம் வழங்கும் சலுகை.

கொல்கத்தா இமாமின் பேச்சுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த ஒட்டுமில்லை!

கொல்கத்தா இமாம் பேசியது இங்கே