Monday, June 23, 2008

ஜிஸ்யா எனும் காப்பு வரி

இஸ்லாமிய அரசு என அறிவித்துக் கொண்ட நாடுகளில் பிற மதத்தவர்கள் குடி மக்களாக வாழ்ந்து வந்தால் அவர்கள் அந்த அரசுக்கு 'ஜிஸ்யா' எனும் வரி செலுத்த வேண்டும். இது அந்நாட்டின் குடி மக்களாகிய முஸ்லிம்களின் மீது விதிக்கப்படும் 'ஸகாத்' எனும் மார்க்க - மத வரி போன்றதல்ல! பிரஜைகள் என்ற உரிமையில், இஸ்லாமிய அரசு பிற மதத்தினருக்கும் வழங்கும் பாதுகாப்பு வரியாகும்.

முஸ்லிம் நாடுகளில் பிற மதத்தவர்கள் வாழ்ந்தால் அவர்கள் அந்நாட்டிற்கு ஜிஸ்யா எனும் காப்பு வரி செலுத்த வேண்டும். இதைப் பிரகடனப்படுத்தும் திருக்குர்ஆன் வசனம்,

''வேதம் கொடுக்கப்பட்டோரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாது, உண்மையான மார்க்கத்தைக் கடைப் பிடிக்காதோர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்'' (திருக்குர்ஆன், 009:029)

இச்சட்டம் இறுதித் தீரப்பு நாள் வரை மாற்றப்படவில்லை என்பதற்கு சான்றாகவுள்ள நபிமொழி,

''என் உயிர் எவன் கையில் உள்ளது அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் (ஈஸா-அலை) உங்களிடையே இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார், பன்றிகளைக் கொல்வார், ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார். அப்போது செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக்கொள்ள எவரும் இருக்கமாட்டார்'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி, முஸ்லிம், திர்மிதீ, இப்னுமாஜா)

நபி ஈஸா (அலை) அவர்கள் இறுதி நாளின் நெருக்கத்தில் இவ்வுலகிற்கு இறங்கி வருவார். அத்தருணத்திலும் முஸ்லிம் நாடுகளில் குடி மக்களாக வாழும் பிற மதத்தவர்கள் அவ்வரசுக்கு ஜிஸ்யா வரி செலுத்திக்கொண்டிருப்பார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கலாம்.

பிற மத நண்பர்கள் எடுத்து வைப்பது போல்,

Al-Shawkani in his book السيل الجرار (Alsaylu Jarar 4:518-519) says: "Islam is unanimous about fighting the unbelievers and forcing them to Islam or submitting and paying Jiziah (special tax paid only by Christians or Jews) or being killed. [The verses] about forgiving them are abrogated unanimously by the obligation of fighting in any case."

The scholars explained that these two verses, and other similar verses, have to do with those from whom the jizyah may be taken, such as Jews, Christians and Magians (Zoroastrians). They are not to be forced, rather they are to be given the choice between becoming Muslim or paying the jizyah.


முஸ்லிம் நாடுகளில் வாழும் முஸ்லிமல்லாதவர்களில் யூதர்களும், கிறிஸ்தவர்களும், மற்றும் மஜூஸிகள் - நெருப்பை வணங்குபவர்கள் (சௌராஷ்டிரர்கள்) மட்டுமின்றி, இஸ்லாம் முழுமையடைந்த காலத்தில் இருந்த எல்லா மதத்தினரும், அதன் பின் தோன்றிய, நாளை தோன்ற இருக்கின்ற புதிய மதத்தினரும் முஸ்லிம் நாடுகளில் வாழ நேர்ந்தால் அவர்கள் இஸ்லாமிய அரசுக்குக் கீழ்படிந்து ஜிஸ்யா வரி செலுத்த வேண்டும். அதாவது முஸ்லிம் நாடுகளில் வாழும் முஸ்லிம்களைத் தவிர பிற மதத்தினர் ஜிஸ்யா செலுத்த வேண்டும்.

''ஒரு பூமியில் இரண்டு கிப்லாக்கள் இருப்பதாகாது. மேலும் முஸ்லிம்கள் மீது ஜிஸ்யா கிடையாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, அபூதாவூத்)

முஸ்லிம்கள் மீது ஜிஸ்யா கிடையாது என்பதே, முஸ்லிமல்லாதவர்கள் அனைவரின் மீதும் ஜிஸ்யா உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே, யூதர்கள், கிறிஸ்தவர்கள், மஜூஸிகள் மட்டுமல்லாமல் அனைத்தும் மதத்தினரும் ஜிஸ்யா எனும் காப்பு செலுத்தி இஸ்லாமிய அரசின் கீழ் அவர்கள் பாதுகாப்போடு வாழலாம்.

முஸ்லிம்கள் ஸகாத் எனும் மார்க்க வரிச் செலுத்துவதால் அவர்கள் மீது ஜிஸ்யா கிடையாது. இதையே, நபி (ஸல்) அவர்கள் ''ஒரு பூமியில் இரண்டு கிப்லாக்கள் கிடையாது'' என அழகிய உதாரணத்துடன் எடுத்துக் கூறுகிறார்கள். முஸ்லிம்கள் மீது இரண்டு வரிகள் இல்லை! பிற மதத்தினர் மீதும் இரண்டு வரிகள் இல்லை!

முஸ்லிம்கள் ஸகாத் எனும் ஏழை வரி செலுத்த வேண்டும்.

முஸ்லிமல்லாதவர்கள் ஜிஸ்யா எனும் காப்பு வரி செலுத்த வேண்டும்.


குறிப்பு: (special tax paid only by Christians or Jews) என்ற கருத்து குறுகிய வட்டமாக இருந்ததால் ஜிஸ்யா குறித்த இவ்விளக்கம் எழுத வேண்டியிருந்தது.

"Islam is unanimous about fighting the unbelievers and forcing them to Islam'' - ''நிராகரிப்போருடன் போர் செய்யும் பொழுது, அவர்களை கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் இணைக்க வேண்டும்'' என்ற கருத்தும் இஸ்லாத்திற்கு எதிரானது.

பார்க்க: இம்மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை.

1. இஸ்லாமிய அரசுடன் போரிடுவது.

2. நாட்டைத் துறந்து செல்வது.

3. இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது, ஏற்று தொழுகையை நிலைநாட்டி ஸகாத் கொடுப்பது.

4. இஸ்லாமிய அரசுக்குக் கீழ்படிந்து, ஜிஸ்யா எனும் காப்பு வரிச் செலுத்துவது.

இஸ்லாமிய அரசு என அறிவித்த நாட்டில், முஸ்லிமல்லாதவருக்கு இதில் எதையும் தேர்ந்தெடுக்கும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

13 comments:

anbarasan said...

அவுரங்கசீப்.... ? !!! இந்து மத்தினர் மீது விதித்த ( ஜஸியா ) வரி.

http://vanjoor-vanjoor.blogspot.com/search/label/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D

http://vanjoor-vanjoor.blogspot.com/

அபூ முஹை said...

raj உங்கள் வருகைக்கு நன்றி!

Indian said...

இஸ்லாமியர் சிறுபாண்மையினராக உள்ள நாட்டில் வேறொரு மதம் இஸ்லாமியர் மீது பாதுபாப்பு வரி விதித்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

வஜ்ரா said...

ஜசியா காப்புவரி அல்ல அது இஸ்லாமிய சர்வாதிகாரம் (அரபு இம்பீரியலிசம்) மற்ற சமூகத்தின் மீது வைக்கும் "ஆப்பு" வரி.

"
இஸ்லாமியர் சிறுபாண்மையினராக உள்ள நாட்டில் வேறொரு மதம் இஸ்லாமியர் மீது பாதுபாப்பு வரி விதித்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
"

இந்தக் கேள்விக்குத் தாங்கள் பதில் என்ன?

இந்தியாவில் "காப்புவரி" கட்டத் தயாராக இருக்கிறீர்களா ?

அபூ முஹை said...

இந்தியன் மற்றும் வஜ்ரா உங்கள் வருகைக்கு நன்றி!

//இஸ்லாமியர் சிறுபாண்மையினராக உள்ள நாட்டில் வேறொரு மதம் இஸ்லாமியர் மீது பாதுபாப்பு வரி விதித்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

இந்தக் கேள்விக்குத் தாங்கள் பதில் என்ன?

இந்தியாவில் "காப்புவரி" கட்டத் தயாராக இருக்கிறீர்களா?//

இந்தியாவில் ஏற்கெனவே முஸ்லிம்கள் வரி செலுத்திக்கொண்டிருக்க ''இந்தியாவில் "காப்புவரி" கட்டத் தயாராக இருக்கிறீர்களா?'' என்று கேட்கும் அதிசய மனிதரை இப்போது தான் கேள்விப்படுகிறேன்.

முஸ்லிம்கள் தமது மார்க்க வரியாக ஸகாத் எனும் ஏழை வரியையும் கொடுதத்துக்கொண்டு, இந்திய அரசாங்கம் விதிக்கும் அனைத்து வரிகளையும் செலுத்துகின்றனர். மக்களின் வரிப்பணத்தில் அரசாங்கம் நடக்கிறது. அரசாங்கத்தின் கீழ் சட்ட ஒழுங்கைக் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் காவல்துறையும், நாட்டின் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவமும் இயங்குகிறது.

காவல்துறையும், இராணுவமும் மக்களின் வரிப்பணத்தில் இயங்குகிறது என்றால் இது காப்புவரி இல்லாமல் ஆப்புவரியா?

Indian said...

அரசாங்க வரியை ஜிஸ்யாவுடனோ, ஸகாத்துடனோ குழப்பிக்கொள்ளாதீர்கள்.

1. வேறொரு பெரும்பான்மை மதம், 'இஸ்லாம் விதிக்கும் எந்த வரியைப் பற்றியும் எங்களுக்குக் கவலை இல்லை. நீங்கள் செலுத்தும் வருமான வரி, விற்பனை வரி, சுங்க வரி பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. உங்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமென்றால் எங்களுக்கு வரி செலுத்த வேண்டும்' என்று சொன்னால் உங்கள் கருத்து என்ன?

2. இஸ்லாமிய நாடுகளில் அரசு குடி மக்களுக்கு வருமான வரி, விற்பனை வரி, சுங்க வரி மற்றும் இன்ன பிற வரிகளை விதிப்பதில்லையா? அப்படி விதிக்கப்பட்டால், பிறகேன் மற்ற மதத்தினர் பாதுகாப்பு வரி என்ற ஒன்றை செலுத்த வேண்டும்?

3. ஜிஸ்யா வரியும், ஸகாத் வரியும் ஒரே அளவில் விதிக்கப்படுகிறதா?

அபூ முஹை said...

Indian உங்கள் மீள் வருகைக்கு நன்றி!

உங்கள் கேள்விகளின் அடிப்படையே தவறானது.

தெரிந்து கொள்ளுங்கள், இஸ்லாமிய அரசு என அறிவித்த நாடு குடிமக்கள் மீது வரிகள் விதிக்கக்கூடாது. - முஸ்லிம்கள் மீது ஸகாத் வரியும், முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜிஸ்யா வரியும் தவிர. - நபியவர்களின் தலைமையில் அமைந்த இஸ்லாமிய ஆட்சியில் இதற்கான நடைமுறைச் சட்டம் இல்லை! (முஸ்லிமல்லாத நாடு வெற்றிக் கொள்ளப்பட்டால் அவர்களிடமிருந்து உஷ்ர் எனும் கப்பம் வசூலிக்கப்படும்)

வருமான வரி, செலவு வரி, விற்பனை வரி, சுங்க வரி மட்டுமில்லை, ஓர் அசையாச் சொத்து ஒவ்வொரு முறையும் விற்பனை செய்யும் போது அரசாங்க ஆவணப் பத்திரங்கள் என ஒவ்வொரு முறையும் பல ஆயிரம் ரூபாய்கள் அரசாங்கத்துக்கு வரியாகச் செலுத்தப்படுகின்றதே அந்த வரியும் இஸ்லாமிய ஆட்சியில் கிடையாது.

வியாபாரிகள் நஷ்டமடையக்கூடாது என விலை உயர்வை மட்டும் இஸ்லாம் அனுமதிக்கிறது. அதுவும் அநியாயம் செய்து விடாதீர்கள், பதுக்கல் செய்யாதீர்கள் என்ற எச்சரிக்கையுடன்.

''டூத் பேஸ்ட் விலை ஐந்து ரூபாய், லோக்கல் டாக்ஸ் எக்ஸ்ட்ரா'' இந்த முத்திரையெல்லாம் இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாட்டில் இருக்காது. இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் முஸ்லிமல்லாதவர்களுக்கு வேறு எந்த வரியும் கிடையாது ஜிஸ்யா எனும் பாதுகாப்பு வரியைத் தவிர. குடியுரிமைக்காக அவர்கள் அந்த வரியைச் செலுத்த வேண்டும். இது எல்லார் மீதும் கட்டாயமில்லை. சம்பாதிப்பவர்கள் செலுத்த வேண்டும். முஸ்லிம்கள் செலுத்தும் ஸகாத் வரியை விட ஜிஸ்யா வரி மிகக் குறைவு. (இது குறித்து முழு விபரம் வேண்டுமெனில் நேரம் கிடைக்கும் போது பிறகு எழுதுகிறேன்)

முஸ்லிம்கள் மீது ஸகாத் வரி கட்டாயக் கடமையாகும். செல்வந்தர்கள் தங்களிடமுள்ள செல்வங்களைக் கணக்கிட்டு அதில் இரண்டரை சதவீதத்தை அரசுக்குச் செலுத்த வேண்டும். தர மறுத்தால் அரசு எடுத்துக்கொள்ளும்.

முதல் கேள்விக்கான பதில்: நான் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். இஸ்லாமிய ஆட்சி இல்லாத இந்திய நாட்டில் எல்லா மக்களும் வரிகள் செலுத்துவது போல் முஸ்லிம்களும் வரிகள் செலுத்துகின்றனர். அதில் பாதுகாப்பு வரியும் அடக்கம். எல்லா மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு என இந்திய அரசு ஜிஸ்யா வரி விதித்தால் முஸ்லிம்கள் மட்டும் அந்த சட்டத்தை புறக்கணிக்கவாப் போகிறார்கள்!

Indian said...

//உங்கள் கேள்விகளின் அடிப்படையே தவறானது.

தெரிந்து கொள்ளுங்கள், இஸ்லாமிய அரசு என அறிவித்த நாடு குடிமக்கள் மீது வரிகள் விதிக்கக்கூடாது.//

அப்படியா? இதையும் கொஞ்சம் படிச்சுப் பாருங்களேன்.

இஸ்லாமிய நாடுகள் என்று தங்களை அறிவித்துக்கொண்ட பாகிஸ்தான், ஈரான் மற்றும் வங்காளதேசம் போன்றவை ஏன் தனி நபர் வருமானவரி விதிக்கின்றன?

http://www.fbr.gov.pk/newdt/wh/default.asp

All individuals, unregistered firms, associations of persons, etc., are liable to tax, at the rates randing from 10 to 35 per cent.

http://en.wikipedia.org/wiki/Income_tax_in_Iran#Personal_Income_Tax_of_Local_Employees

http://www.asiatradehub.com/bangladesh/tax.asp


//இஸ்லாமிய ஆட்சி இல்லாத இந்திய நாட்டில் எல்லா மக்களும் வரிகள் செலுத்துவது போல் முஸ்லிம்களும் வரிகள் செலுத்துகின்றனர்.//

நீங்கள் மதத்தையும், அரசையும் (முக்கியமாக இந்திய அரசையும்) போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

இந்தியாவில் எந்தத் தேசிய மதமும் அரசியல் சாசனத்தில் அறிவிக்கப்படவில்லை. அதனால், நாம் இந்தியாவை விட்டுவிடுவோம்.

//முதல் கேள்விக்கான பதில்: நான் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். இஸ்லாமிய ஆட்சி இல்லாத இந்திய நாட்டில் எல்லா மக்களும் வரிகள் செலுத்துவது போல் முஸ்லிம்களும் வரிகள் செலுத்துகின்றனர். அதில் பாதுகாப்பு வரியும் அடக்கம். எல்லா மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு என இந்திய அரசு ஜிஸ்யா வரி விதித்தால் முஸ்லிம்கள் மட்டும் அந்த சட்டத்தை புறக்கணிக்கவாப் போகிறார்கள்!
//

நான் கேட்பதெல்லாம் இதுதான். வேறொரு பெரும்பாண்மை மதம் இஸ்லாமைப் பின்பற்றுபவர்கள் எங்களுக்குப் பாதுகாப்பு வரி (ஜிஸ்யா) செலுத்தவேண்டும் என்று சொன்னால் நீங்கள் கட்டுவீர்களா மாட்டீர்களா?

சுட்டுவிரல் said...

//இஸ்லாமியர் சிறுபாண்மையினராக உள்ள நாட்டில் வேறொரு மதம் இஸ்லாமியர் மீது பாதுபாப்பு வரி விதித்தால் ஏற்றுக் கொள்வீர்களா?//

//நீங்கள் மதத்தையும், அரசையும் (முக்கியமாக இந்திய அரசையும்) போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.//

ஐயா Indian,
என்னதான் மதமாக இருந்தாலும்
ஆட்சி அதிகாரத்துக்கு வராமல் யாரும் யார்மீதும் வரிவிதிக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

உதாரணமாக,
நேபாளம் போன்ற ஒரு நாட்டில், இந்து மதம் அரசாங்க மதமாக அறிவிக்கப்பட்டால் அந்த அரசு சிறுபான்மையினர் பாதுகாப்புக்கென்று ஒரு ஜிஸ்யா போல ஒப்பீட்டளவில் ஒரு சிறுவரி போட்டால்.. முஸ்லிம்கள் தம் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வதற்காக கொடுக்கத்தான் செய்வார்கள்.

மேலும் இஸ்லாமிய அரசில் ஜகாத்துடன் ஒப்பிடும்போது ஜிஸ்யா என்பது மிகக் குறைந்த தொகை என்பதையும், அந்த வரி செலுத்துவோர் மற்ற மதத்தவரின் ஆட்சியில் உயிர்+உடமை பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறார்கள் என்பதுவும் முக்கியமாக கவனிக்க வேண்டியது.

ஸயீத் said...

இறைவனின் அத்தாட்சிகளை என்னவென்று சொல்வது!.

ஒரு சிறு கூட்டமாக வாழ வழியின்றி அபிசீனியாவிற்கும், மதீனாவிற்கும் ஓடிச்சென்ற ஒரு கூட்டத்தாற்க்கு ஆட்சியதிகாரத்தை வழங்கி அவர்களின் ஆளுகையின் கீழ் யாரெல்லாம் இவர்களை துரத்தியடித்தார்களோ அவர்களை கொண்டுவந்த இறைவன் மிகப்பெரியவன்.

இஸ்லாமியர்களுக்கு ஏழை வரி, இஸ்லாத்தை ஏற்க்காதோருக்கு காப்புரிமை வரி விளக்கம் மிக அருமை.

Indian said...

ஆக, வேறொரு பெரும்பாண்மை மதம் இஸ்லாமியர் மீது பாதுகாப்பு வரி விதித்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். நன்றி.

ஆனால், கிறித்துவம் (அதன் பல கூறுகளில்), பௌத்தம் ஆகிய மதங்களை தேசிய மதங்களாக ஏற்றுக் கொண்ட நாடுகள் எதுவும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு வரி எதுவும் விதிப்பதில்லை.

//இஸ்லாமிய நாடுகள் என்று தங்களை அறிவித்துக்கொண்ட பாகிஸ்தான், ஈரான் மற்றும் வங்காளதேசம் போன்றவை ஏன் தனி நபர் வருமானவரி விதிக்கின்றன?
//

அதுசரி, இந்தக் கேள்விக்கு தங்களின் பதிலை என்ன?

அபூ முஹை said...

சுட்டுவிரல் மற்றும் ஸயீத் உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!

அபூ முஹை said...

//இஸ்லாமிய நாடுகள் என்று தங்களை அறிவித்துக்கொண்ட பாகிஸ்தான், ஈரான் மற்றும் வங்காளதேசம் போன்றவை ஏன் தனி நபர் வருமானவரி விதிக்கின்றன?
அதுசரி, இந்தக் கேள்விக்கு தங்களின் பதிலை என்ன?// - Indian

நீங்கள் சொல்லித்தான் இவை இஸ்லாமிய நாடுகள் என அறிவித்திருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டேன்.

அறிவித்தால் மட்டும் இஸ்லாமிய நாடாக ஆகிவிடாது. நடைமுறை சட்டங்கள் இஸ்லாத்திலிருந்து பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் அறிவிப்பு வெறும் பெயரளவுக்குத்தான்.