Friday, April 18, 2008

அன்னிய நாடுகளில் அயல் நாட்டினரின் நிலை!

வாழ்வதற்காகவும், வாழ்வின் மேம்பாட்டுக்காவும் தாயகத்தை விட்டு அன்னிய நாட்டில் உழைத்துப் பிழைப்பதற்காக வரும் அயல் நாட்டினர் பலரின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக ஆகிவிடுகின்றது.

இது போன்ற துன்பங்களில் சிக்கித் தவிக்கும் மக்களின் நிலையறிந்து மற்ற நாட்டின் தூதரகங்கள் ஓரளவுத் தட்டிக்கேட்கும். ஆனால், உழைக்க வரும் இந்தியர்களை நீ என்ன கொடுமையும் படுத்திக்கொள், சம்பளம் கொடுக்காமல் கஷ்டப்படுத்து, அவர்களுக்கு தங்கும் விடுதிகள் வழங்காதே என்றெல்லாம் ஏற்கெனவே இந்திய அரசு ரகசிய ஒப்பந்தம் ஏதேனும் செய்துள்ளதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இந்தியத் தூதரகம் மக்கள் குறைகளைக் கண்டுக்கொள்வதில்லை!

இந்தியர்களுக்கு என்ன அநீதிகள் இழைக்கப்பட்டும் அது பற்றியச் சான்றுகளுடன் புகார் கொடுத்தாலும் இந்தியத் தூதரகம் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏனிந்த முதுகெலும்பற்ற நிலை?

தூதரகம் என்பது அந்நாட்டின் அரசுக்கு ஒப்பானது. உழைத்துப் பிழைக்க வரும் மக்கள் அநியாயமாக நசுக்கப்படுகிறார்கள் என்று நன்கு தெரிந்திருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டாத அயல் நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத் தூதரகம் தேவைதானா?

(துன்பப்படுத்தும் மின்னஞ்சல் செய்தி, பகிர்ந்து கொள்கிறேன்)

அன்புடன்,
அபூ முஹை


அனுப்புனர்:
சவூதி அரேபியாவில் பணிபுரியும் இந்திய பணியாளர்கள்.
ரியாத் சவூதி அரேபியா

பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை

மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களுக்கு!
உங்கள் மீது கடவுளின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!

நாங்கள் சவூதி அரேபியா ரியாத்தில் தனியார் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் குறிப்பாக பல நூறு இந்தியர்கள் அதில் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள். AL-Wagaiah co, Ltd., AL-Omerini co, and AL-Faiq என்ற மூன்று பெயர்களில் செயல்படும் இந்த நிறுவனம் ஒவ்வொரு நிறுவனத்தின் பெயரில் மோசடிகளை செய்து விட்டு வெவ்வேறு பெயர்களில் உருவாக்கிக்கொண்டதுதான் இந்த 3 நிறுவனங்களும்.

நாங்கள் பணியாற்றிய நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக வேலை செய்யும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. நிறுவனம் மூடப்படும் மற்றும் சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் எங்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கிகளை கொடுத்து எங்களது தாய் நாடடிற்கு அனுப்பி வையுங்கள் என்று பல முறை கேட்டு வந்தோம் நிர்வாகம் எங்களது எந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

பல மாதங்களாக உண்ண உணவின்றி இருக்க இடமின்றி சொல்லிலடங்கா துயரங்களை சந்தித்து வருகிறோம். இந் நிலையில் பாதிக்கப்பபட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த 28 பேர் கொண்ட குழுவாக கடந்த 24/01/2008 அன்று இந்திய தூதரகத்தில் எங்களது நிலைமையை விளக்கி மனுக் கொடுத்தோம் அதன் கோப்பு எண்: File No: riy/cw/235/6/2007(18)

அதற்கிடையில் நாங்கள் பல முறை நிறுவன நிர்வாகத்திடம் எங்களுக்கு சேரவேண்டிய எங்களது சம்பளத்தை கொடுத்து எங்களை தாயக்திற்கு அனுப்பி வைக்கும்படி கெஞ்சி மன்றாடி வந்தோம் கடந்த வாரம் 27ம் தேதி நிர்வாகத்தின் பதிலை கேட்கச் சென்றோம். எங்கள் குழுவில் நிறுவன நிர்வாகத்திடம் நீதி கேட்டு எங்களை வழி நடத்தி வந்த 5 பேரை சவுதி குடியுரிமை காவலாளிகளை வைத்து கைது செய்து சிறைக் கொட்டடியில் அடைத்து விட்டார்கள்.

மீதி உள்ள எங்களை மிரட்டி உங்களுக்கும் இதே கதி தான் என்று உங்களது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சவுதி குடியுரிமை அமைச்சகத்தில் ஒப்படைத்து விட்டோம் என்று மிரட்டி அனுப்பி விட்டார்கள் வேறு வழியின்றி மீண்டும் நேற்று 30 03 2008 அன்று இந்தியத் தூதரகம் சென்று எங்களுக்கு உதவிட கையேந்தினோம். தூதரகத்தில் எங்களுக்கு 6மாதம் செல்லத்தக்க அனுமதி பேப்பர் மட்டும் வழங்கி இதை வைத்து நீங்கள் நடமாடிக் கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டார்கள்.

எந்தக் குற்றமும் செய்யாத நீதி கேட்ட ஒரே காரணத்திற்காக சிறைவாசம் அனுபவித்து வரும் எங்கள் நண்பர்களை விடுவிக்கவும் உண்ண உணவின்றி வேறு வழி தெரியாமல் பரிதவிக்கும் எங்களுக்கு உதவிடவும் மாண்புமிகு முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலையிட்டு எங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைத்து தாயகம் திரும்பி வர இந்தியத் தூதரகக்தின் மூலம் துரித ஏற்பாடு செய்ய ஆவண செய்யும் படி உங்களை பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Company Name & Address
AL-WAGAIAH CO, LTD.,
Sponsor Name: Osman Abdul Aziz Al-Omairini
CR No: - 66210, Post Box 91681, Riyadh 11643
Phone : +966 1 2415202, Fax +966 1 2422201
Sponsor Cell no: Mr. Ali Abdul Aziz 00966 504429661, Mr. Ashraf al jindi 00966 505848277

சிறைச்சாலையில் உள்ள நண்பர்களின் விபரம்.

காதர் மைதீன் பாஸ்போர்ட் நம்பர்: A 7844359
முஹம்மது ரைஸ் பாஸ்போர்ட் நம்பர்: E 5084212
அப்துல் ரஹ்மான் பாஸ்போர்ட் நம்பர்: B 3105343
சதீஸ் மலையில் பாஸ்போர்ட் நம்பர்: B 6853774
இக்பால் அஹ்மத் பாஸ்போர்ட் நம்பர்: F 2044105

எங்களை தொடர்பு கொள்ள:
கந்தசாமி +966 556282148, முகைதீன் +966 508623067, முஹம்மது மீரா 00966 557048978

இப்படிக்கு
உங்கள் உதவியை நாடி நிற்கும் பாதிக்கப்பட்ட இந்தியர்கள்.

Copy to: TMMK Head Quarters and all political parties' offices.
Kalainger Tv, Sun tv, Makkal tv, Wintv, and All Printed and Internet medias.
*Enclosed some of Prof Documents

குறிப்பு: இந்த நகல் பெறும் செய்தி ஊடகங்கள் தயவு செய்து பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உதவிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.

11 comments:

முகவைத்தமிழன் said...

//இந்திய அரசு ரகசிய ஒப்பந்தம் ஏதேனும் செய்துள்ளதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இந்தியத் தூதரகம் மக்கள் குறைகளைக் கண்டுக்கொள்வதில்லை! //

இந்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் இல்லை, வரலகுடா நாடுகளின் இந்திய தூதரக அதிகாரிகள் இங்குள்ள காசுக்காக கேடுகெட்ட நிறுவனங்களோடு செய்து கொண்டள்ள ஒப்பந்தத்தின் விளைவே இந்தியர்களுக்கு என்ன ஆனாலும் கண்டும் காணாமல் இருப்பது!!

அபூ முஹை said...

முகவைத்தமிழன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

//இந்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் இல்லை, வரலகுடா நாடுகளின் இந்திய தூதரக அதிகாரிகள் இங்குள்ள காசுக்காக கேடுகெட்ட நிறுவனங்களோடு செய்து கொண்டள்ள ஒப்பந்தத்தின் விளைவே இந்தியர்களுக்கு என்ன ஆனாலும் கண்டும் காணாமல் இருப்பது!!//

நம்ப முடியவில்லை!

அன்னிய நாட்டிலாவது இந்தியாவின் கண்ணியத்தைக் காற்றில் பறக்க விடாமல் இருக்கலாம்.

பிறைநதிபுரத்தான் said...

தகவலுக்கு நன்றி அபு முஹை.

பெரும்பலான அரபு நாடுகளில் பனிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட தரப்படுவது கிடையாது. பிழைப்புக்காக காடு-கழனி விற்று - கந்து வட்டிக்கு கடன் வாங்கிச் சென்று மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்தும் - ஊதியமின்றி ஏமாற்றப்படுவது கொடுமையிலும் கொடுமை. உழைப்பாளியின் நெற்றி வியர்வை உலர்வதற்கு முன் ஊதியம் அளிக்க சொன்ன நபி வழியை மறந்த கேடுகெட்ட அரபு நிறுவனங்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க கலைஞர் மத்திய அரசு மூலம் நெருக்குதல் கொடுக்க வேண்டும். இந்த இழிநிலை
எதிர்காலத்தில் தொடரமல் இருக்கவும் ஆவண செய்யவேண்டும்.

பரூக் மரைக்காயர்- இந்தியாவிலிருந்து புனித பயணம் செய்பவர்களுக்கு தேவையானவைகளை மட்டும் செய்வதற்காக நியமிக்கப்பட்டவர் அல்ல என்று இத்தருணத்தில் உணர்த்தப்படவும்வேண்டும்.

Unknown said...

புலம்பெயர்ந்துவந்துள்ள தொழிலாளர்களின் அவலநிலையை நாம் மறுக்கவில்லை. அவர்களுக்கு உதவி செய்தேயாக வேண்டி இருப்பதையும் வலியுறுத்தவே செய்கிறோம். அதே நேரம், இந்தியத்தொழிலாளர்கள் மட்டுமே வேறு பேர்களில், வெளிமார்க்கெட்டில் கிடைக்கும் விசாவில் வந்து வேலைக்காக ஸ்பான்சர்சிப் மாறுவதால், முறையான ஒப்பந்தம் சாத்தியமில்லாமலே போவதும், வம்பு வழக்கு என்று வரும்போது சட்டச்சிக்கல்கள் முளைப்பதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.
அதாவது, வேலைபார்க்கும் ஸ்பான்சர் ஒருவர், விசா அளித்த ஸ்பன்சர் வேறொருவர் என்ற நிலை.

(ஃபிலிப்பைனிகள் மற்றும் மேற்குநாட்டவர்கள் முறையாக அரசாங்கத்தின் மூலமாகவே பதிவு செய்துவருவதால், அவர்களுக்கு ஏதும் சிறுபிரச்னை என்றாலும் சம்பந்தப்பட்ட தூதரகங்கள் தலையிட ஏதுவாகிறது.)

தூதரக அதிகாரிகளைப் பற்றிய மு.த-வின் குற்றச்சாட்டு கற்பனைவளத்துடன் அதீதமாகத் தெரிகிறது.

பணியாளர்களுக்கு உதவும் வழியை யோசித்துப் பார்ப்போமாக.

Unknown said...

இந்தியர் நலன்களைப் பாதுகாக்காத தூதரகம் இருப்பதால் என்ன பயன்?
தமிழகமாவது தமிழர் நலனைக் காக்க துரித நடவடிக்கை எடுக்குமா?

அபூ முஹை said...

பிறைநதிபுரத்தான் உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!

அபூ முஹை said...

புகழேந்தி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!

ஸ்பான்ஸர்சிப் மாற்றுவது சட்ட விரோதமல்ல. மூன்று முறை ஸ்பான்ஸர்சிப் மாற்றிக்கொள்ளலாம், ஒவ்வொரு முறை மாற்றும் போதும் இவ்வளவு பணம் என்று கட்ட வேண்டும் எனச் சட்ட விதி உள்ளது.

மேலும், ஊழியம் செய்தவருக்கு ஊதியம் வழங்கச் சொல்ல என்ன ஒப்பந்தம் வேண்டியிருக்கிறது. விசாவில் வந்நவர் இவர்தான், வேலை செய்தவர் இவர்தான் என்றும் உறுதிப்படுத்தினால் போதுமே. அதைக்கொண்டு தூதரகம் விசாரணையைத் துவங்கிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும், அவர்களுக்குச் சேரவேண்டிய நிதியையும் பெற்றுத்தரலாம்.

பிலிப்பின்ஸ் நாட்டுத் தொழிலாளர்களும் ஸ்பான்ஸர்சிப் மாற்றி வேலை செய்கிறார். ஒரு தொழிலாளிப் பாதிக்கப்பட்டாலும் பிலிப்பின்ஸ் தூதரகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கும். அதனால் பிலிப்பின்ஸ் என்றாலே சிம்ம சொப்பனம்.

இந்தியத் தூதரகமும் பாதிக்கப்பட்டத் தொழிலாளர்களை சமாதானம் சொல்லி அனுப்பி வைக்காமல் தொழிலாளர்களுக்காக களம் இறங்க வேண்டும். உண்மை, போலி எதுவாக இருந்தாலும் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஸ்போர்ட் வழங்கவும், புதுப்பிக்கவும் மட்டும் தூதரகம் இல்லை. அன்னிய நாட்டில் தொழில் செய்ய வந்து அந்நாட்டினரால் நசுக்கப்படும் தொழிலாளர்களுக்கு உதவுவது, அவர்களின் நலனில் அக்கறை கொள்வதும் தூதரகத்தின் பணிதான். அன்னிய நாட்டில் உழைக்கும் அந்தந்த நாட்டினருக்காக அந்த நாட்டினரே தட்டிக்கேட்க முடியாது. தூதரகமே தட்டிக் கேட்கவும், உதவி செய்யவும் இயலும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

தட்டிக்கேட்கும் தூதரகத்தைக் கைது செய்ய முடியாது!

அபூ முஹை said...

சுல்தான் உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!

Unknown said...

Abu muhai,

My point is not mentioning the Sponsorship changes are illegal.

Sponsorship changes are, certaily allowed.

I just came to deny one 'imaginery pinnuttam' (M.T) and it leads to a different meaning, I believe.
Let me cut it.

I agree with your article's voice on Labourers and their sufferings and request & Hope the Embassy Officials will do something for that.

(Sorry for writing in English)

ayappadiyan said...

we are facing problem Kuwait also

அபூ முஹை said...

ayappadiyan உங்கள் வருகைக்கு நன்றி!