Tuesday, July 22, 2008

ரோமர்களை எதிர்த்த இஸ்லாமிய அரசு

இஸ்லாம் அழைப்புப் பணி

ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கைக்குப் பின் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஹுதைபிய்யா ஒப்பந்தம் ஒரு புதிய சகாப்தமாக விளங்க காரணமாக அமைந்தது. இஸ்லாமிய அழைப்புப் பணியை பரப்புவதற்கும், மக்கள் முன் அதை வைப்பதற்கும் முஸ்லிம்களுக்கு பெருமளவு வாய்ப்பு ஏற்பட்டது. இக்கால கட்டத்தில் போருக்குக் காட்டிய முயற்சியை விட பல மடங்கு ஆர்வத்தை இஸ்லாமிய அழைப்புப் பணியில் முஸ்லிம்கள் காட்டினர். இந்த இடை விடா பெரும் முயற்சியின் பலன், அரபுலக மக்கள் இஸ்லாத்தை விளங்கி கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தைத் தழுவினர்.

ஹிஜ்ரி 8ம் ஆண்டு மக்காவை நோக்கி நபியவர்கள் புறப்பட்ட போது அவர்களுடன் 10,000 நபித் தோழர்கள் இருந்தனர். ஹிஜ்ரி 9ம் ஆண்டு தபூக்கை நோக்கி படை புறப்பட்ட போது அதில் 30,000 பேர்கள் இருந்தனர். ஹிஜ்ரி 10ம் ஆண்டு நபியவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது அரபுலகத்தின் பல பாகங்களிலிருந்தும் வந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் நபியவர்களுடன் ஹஜ் செய்தனர். இவை, இஸ்லாமிய அழைப்புப் பணியால் கவபரட்டு மக்கள் திரளாக இஸ்லாத்தை ஏற்றனர் என்பதன் எளிய எடுத்துக்காட்டு.

அழைப்புப் பணியில் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அரசர்களுக்கும், ஆளுனர்களுக்கும் இஸ்லாமிய அழைப்பு விடுத்து எழுதிய கடிதங்கள் சிலவற்றை முந்தைய பதிவுகளில் இடம்பெற்றுன. அதில் ஓமன் நாட்டு அரசனுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம் குறித்து பிற மத நண்பர்கள் வருமாறு விமர்சனம் செய்திருந்தனர்,

ஓமன் நாட்டு அரசனுக்கு முகமது அனுப்பிய கடிதம்

முகமது ஓமன் நாட்டு அரசன் "ஜாஃபர்" மற்றும் அவர் சகோதரன் "அப்து அல் ஜலாந்தி" என்பவருக்கும் ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தை முகமதுவின் தூதுவர் "Amr bin al-'As al-Sahmi and Abu Zaid al-Ansari" கொண்டுச் சென்றார்.

இன்று இஸ்லாமியர்கள் மேடைகளில், வெப்தளங்களில், மற்றும் தொலைக்காட்சி மற்றும் இதர சாதனங்கள் மூலமாக இஸ்லாமை பரப்பிக்கொண்டு வருகின்றனர். அவர்கள் இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும், இன்னும் இதர மக்களையும் இஸ்லாம் பக்கம் ஈர்க்க முன்வைக்கும் வாதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. இஸ்லாம என்றால் அமைதி என்று பொருள்:

2. இஸ்லாமில் கட்டாயமில்லை:

3. இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்பட்டது என்று சொல்லும் செய்தி பொய்யானது.

4. நபி (முகமது) அவர்கள் செய்த போர்கள் அனைத்தும், தற்காப்புக்காக செய்தவை. தாமாக அவர் என்றுமே சண்டையிட்டது இல்லை.

5. ஜிஹாத் என்றால், தற்காப்புக்காக நமக்கு ஆபத்து வரும் போது செய்யும் சண்டையே தவிர, நாமாக சண்டையிடுவது இல்லை.

6. முகமது அவர்கள் யாரிடமும் வீணாக சண்டையிட்டது இல்லை. அவரைப்போல நல்லவர் உலகில் வேறு யாருமில்லை.

இப்படி பல செய்திகளை இஸ்லாமியர்கள், முன்வைப்பார்கள். ஆனால், ஓமன் நாட்டு அரசருக்கு முகமது என்ன எழுதினார் என்று பாருங்கள்.

ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம்

"Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom."

ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம் - தமிழாக்கம்

நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்! இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன்(தீர்க்கதரிசி) ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை(POWER) உனக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உன் வலிமை(POWER) அழிக்கப்படும். என் குதிரைகள் உன் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உன் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்.

Photograph of the Arabic original and the English text as it is on display at Sohar Fort, Sultanate of Oman

சமத்துவம், சகோதரத்துவம் பேசும் இஸ்லாமிய நண்பர்களே,கீழ்கண்ட கேள்விகள் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்:

1. இக்கடிதம் யார், யாருக்கு எழுதியது?

2. இக்கடிதம் எழுதுவதற்கு முன்பாக முகமதுவிற்கு "இந்த நாட்டு அரசனால் ஆபத்து
ஏதாவது இருந்ததா?"

3. இக்கடிதத்தில் முகமது மிகவும் நிதானமாக பேசுவதைக்கண்டீர்களா?

4. அதே நிதானத்தோடு அந்த நாடு அழிக்கப்படும் என்று சொல்வதை கவனித்தீர்களா?

5. இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் என்ன பதில் சொல்வார்கள்?

6. தன் நாட்டில் இருந்துக்கொண்டு, முகமதுவிற்கு எந்த பயமுறுத்தலோ அச்சுருத்தலோ செய்யாமல் இருக்கின்ற அரசனுக்கு, இஸ்லாம், அல்லா, முகமது விடுக்கும் "அழைப்பு" எப்படி இருக்கிறது என்றுப் பார்த்தீர்களா?

7. முகமது இஸ்லாமின் நன்னடத்தையைக் காட்டி அந்த அரசனை இஸ்லாமிற்கு அழைக்கிறாரா? அல்லது அழித்துவிடுவேன் என்று பயமுறுத்தி அழைகிறாரா?

9. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிக படைபலம் உள்ள அரசனாக இருந்தால், முகமதுவோடு சண்டையிட்டுயிருப்பான், குறைந்த படைபலம் உள்ளவனாக இருந்தால், "இஸ்லாமை ஏற்றுக்கொண்டு" முகமதுவின் "ஜகாத்" கொடுத்துக்கொண்டு இருந்திருப்பான்.

10. கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்தி கொண்டுவரும் "பக்தி", "நமாஜ்" அல்லது "தொழுகை" உண்மையானதாக இருக்குமா? இதைத் தான் உண்மை தெய்வம் எதிர்பார்க்குமா?

11. இஸ்லாமில் கட்டாயமில்லை, இஸ்லாம் அமைதியான மதம், இஸ்லாம் கத்திமுனையில் பரப்பப்பட்டது இல்லை என்று சொல்லிக்கொள்கிறீர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் ?

12. இது தான் இஸ்லாம் காட்டும், முகமது காட்டும் வழியா?
நிதானப் பார்வையை இழந்து, எதையும் பகைமையுடன் அணுகினால் நியாயமும் அநியாயமாகவே தோன்றும் என்பதற்கு பிற மத நண்பர்களின் மேற்கண்ட விமர்சனம் அமைந்துள்ளது.


இஸ்லாம் என்றால் அமைதி, சாந்தி மார்க்கம் என்று பொருள்படும். அநீதியும், அக்கிரமும் தலை விரித்தாடும் போது அதைக் கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என்பது தான் அமைதியின் அகராதி என்றால் அந்த அமைதி என்ற அர்த்தத்தில் இஸ்லாம் இல்லை.

சுருக்கமாக:

கி.பி அறுநூறுகளின் ஆரம்பத்தில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் கருத்து வேறுபாடு கொண்டு, தங்களிடையிலான பகைமையும் குரோதமும் உச்சகட்டத்தை அடைந்து, ஒருவருக்கொருவரை அழித்துக்கொண்டிருந்தனர். கி.பி. ஆறாம் நூற்றாண்டும் ஏழாம் நூற்றாண்டும் வரலாற்றில் மிக மோசமான இருண்ட காலமாக இருந்தது. இந்தச் சூழலில் இஸ்லாம் மார்க்கத்தின் மறுப் பிரச்சாரம் துவக்கப்பட்டு மக்களுக்கும், மக்களின் தலைவர்களுக்கும் இஸ்லாமிய அழைப்பு விடுக்கப்பட்டது.

பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்கம் இவற்றில் தானும் சிறப்புடன் வாழ்ந்து மக்களையும் அதன் பக்கம் அழைக்க வேண்டும். இதுவே ஒரு நல்லவனின் அளவுகோலாகும். இறை மார்க்கத்தின் பால் மக்களை அழைக்கும் இறைத்தூதர்களின் அழைப்பு பல மடங்கு அதிகமானது. ஆண்டி முதல் அரசன் வரை இறை மார்க்கத்தை அவர்கள் எடுத்துச் சொல்லி அழைப்பு விடுக்க வேண்டும். அப்போதுதான் தீர்க்கத்தரிசிகளின் தூதுத்துவம் முழுமையடையும். மக்கா வெற்றிக்குப் பின் அரபுலகத்தில் இஸ்லாம் பரவலாக அறியப்பட்டு இஸ்லாத்தை ஏற்றவர்களில் ரோமானிய ஆட்சியின் கீழ் வாழ்ந்த மக்களும் அடங்குவர்.

அன்று வல்லரசாகத் திகழ்ந்த ரோமானியர்கள் இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்களைக் கொலை செய்தார்கள்.

ஃபர்வா இப்னு அம்ர் என்பவர் ரோம் நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த அரபியர்களுக்கு ஆளுனனராக இருந்தார். இவர் இஸ்லாத்தின் பால் கவரப்பட்டு முஸ்லிமானார். இவர் இஸ்லாத்தை ஏற்ற செய்தியைக் கேட்ட ரோமர்கள் அவரைச் சிறையிலடைத்து துன்புறுத்தி ‘’மார்க்கமா? அல்லது மரணமா? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள் என்றனர்’’ அவரோ மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தார். ஃபாலஸ்தீனில் ‘அஃபரா’ என்ற கிணற்றருகே ரோமர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து தலையைக் கொய்தனர்.

நபி (ஸல்) அவர்கள் புஸ்ரா மன்னருக்கு அனுப்பிய கடிதத்தை எடுத்துக் சென்றிருந்த ‘ஹாரிஸ் இப்னு உமைர்’ என்ற தூதரைப் புஸ்ராவின் கவர்னராக இருந்த ‘ஷுரஹ்பீல் இப்னு அம்ர் கஸ்ஸானி’ என்பவர் வழிமறித்துக் கொன்று விட்டான்.

இதையெல்லாம் கண்டும் காணாமல் ஒட்டிக் கொண்ட தூசியைத் தட்டி விட்டுச் செல்ல வேண்டும் என்ற பிற மத போதனையை அந்த மதத்தவர் ஏற்றுக் கொள்ளட்டும் ஆட்சேபனை இல்லை. ஆனால் அநீதியைத் தட்டிக் கேட்பதைக் குறை காணுபவர் காழ்ப்பு எனும் பித்தம் தலைக்கேறியவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

கிறிஸ்தவ ஆலயங்களின் ஆதிக்கத்தை யாராலும் எதிர்க்க முடியாது என்ற அகம்பாவமும், தற்பெருமையும் ரோமானியர்களை இறுமாப்புக் கொள்ள வைத்தது. இறுமாப்பில் ரோமானியப் பேரரசு, பேரரசின் கீழ் ஆட்சி செய்த குறுநில மன்னர்கள், ஆளுனர்களின் அடக்குமுறைகளையும், அத்து மீறல்களையும் எதிர்த்து இஸ்லாமியப் பேரரசு அன்று குரல் கொடுத்தது. ரோமானியர்களின் ஆதிக்கத்தை யாராலும் எதிர்க்க முடியாது என்ற நம்பிக்கையைத் தகர்ப்பதற்காகவும், இஸ்லாத்தை ஏற்றால் அது ஆபத்தையும், மரணத்தையும் சந்திக்க நேரும் என்று எவரும் எண்ணி விடக் கூடாது என்பதற்காகவும் ரோமானியர்களை எதிர்த்துப் போர் எச்சரிக்கையும், போர் பிரகடனமும் விடுக்கப்பட்டது. முஃதா போர், தபூக் போர் சம்பவங்கள் ஏற்படக் காரணிகள் இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்களைக் கொலை செய்ததற்காக ரோமானியர்கள் மீது போர் அவசியமாயிற்று என்பதை வரலாற்றைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.

‘’எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உங்களிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவீனமானவர்கள், பெணகள், மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? (திருக்குர்ஆன், 004:075)

அநீதி இழைக்கப்பட்டோருக்காக இஸ்லாமிய அரசு போர் செய்ய வேண்டும் என்ற இறை வாக்கு இஸ்லாமியப் பேரரசால் நிறைவேற்றப்பட்டது.

இஸ்லாத்தின் மீதான நீண்ட குற்றப் பட்டியலில் பிற மத நண்பர்கள் இதையும் - ‘’அநீதி, அக்கிரமம் செய்யப்பட்டோருக்காக இஸ்லாம் போரிடச் சொல்கிறது’’ என்று முஸ்லிம்கள், முஸ்லிம் அறிஞர்கள் மேடைகளில், வெப்தளங்களில், தொலைக்காட்சியிலும் பேசி வருகின்றனர் என்று - சேர்த்துக் கொள்ளட்டும்,

அன்புடன்,
அபூ முஹை

2 comments:

ஸயீத் said...

//9. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிக படைபலம் உள்ள அரசனாக இருந்தால், முகமதுவோடு சண்டையிட்டுயிருப்பான், குறைந்த படைபலம் உள்ளவனாக இருந்தால், "இஸ்லாமை ஏற்றுக்கொண்டு" முகமதுவின் "ஜகாத்" கொடுத்துக்கொண்டு இருந்திருப்பான்.//

நல்ல காமெடி என்று இதைச் சொல்லலாம்.

எந்த அரசனாகிலும் தனது பதவிக்காகவோ அல்லது உயிருக்காகவோ இந்த மதத்தை ஏற்றுக் கொள்கிறேன், என்று கூறுவானா?, சாதரண மனிதனே தன் மதமே பெரிய மதம் என்னும் இறுமாப்பில் இருக்கும்பொழுது ஒரு அரசன் எத்தனையோ போர்களை சந்தித்தவன், வாளை வாளால் சந்திக்கும் திறன் படைத்தவன் முகமது கூறிவுடன் மதம் மாறி ஜகாத் கொடுத்திருப்பான் என்று எழுதுவது கண்களை மூடிக் கொண்டு இருட்டு என்பதற்குச் சமம்.

ஒரு அரசன் தன் பதவிக்காகவும், உயிருக்காவும் தன் நாட்டையும் தன் நாட்டு மக்களையும் அடகு வைக்கிறான் என்றால் அது போன்ற கோழையான அரசன் வாழ்வதைவிட சாவதே மேல்.

அபூ முஹை said...

ஸயீத் உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!

//ஒரு அரசன் தன் பதவிக்காகவும், உயிருக்காவும் தன் நாட்டையும் தன் நாட்டு மக்களையும் அடகு வைக்கிறான் என்றால் அது போன்ற கோழையான அரசன் வாழ்வதைவிட சாவதே மேல்.//

சரியாகச் சொன்னீர்கள்!

பதவிக்காகவும், உயிருக்காகவும் இஸ்லாம் மீது நம்பிக்கை கொள்வதை இஸ்லாமும் ஏற்பதில்லை