Friday, October 10, 2008

எழுத்துப்பிழையும், கருத்துப்பிழையும்

இஸ்லாம் பெயரால் இஸ்லாத்தின் மீது பொய்யையும் புனை சுருட்டையும் அரங்கேற்றும் தளங்களில், ''ஆன்சரிங்க் இஸ்லாம்'' என்ற இணையதளமும் ஒன்றாகும். இத்தளத்திற்கு சில நாடுகளில் தடை விதித்துள்ளனர். - (''ஆன்சரிங்க் இஸ்லாம்'' தளத்தைக் கண்டு இஸ்லாமிய உலகமே பயந்து ஓடுகிறது என்று அடுத்த பதிவில் பிறமத நண்பர்கள் சேர்த்துக்கொள்ளட்டும்) - திருக்குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளது, முரண்பாடுகள் உள்ளது என்று விமர்சிக்கும் பிறமத நண்பர்கள், தங்கள் விவாதத்திற்கான சான்றுகளை ''ஆன்சரிங்க் இஸ்லாம் என்ற தளத்திலிருந்து எடுத்துக் காட்டுகின்றனர். குறிப்பாக மர்யம் என்ற 019வது அத்தியாயத்திலிருந்து ஓரிரு வசனங்களை எடுத்து வைத்திருந்தனர். (பார்க்க: வர்ஷ், ஹஃப்ஸ் காரீகளின் ஓதல் )

திருக்குர்ஆனில் முரண்பாட்டை நிறுவ முயலும் பிறமத நண்பர்கள் சுட்டிய 019:019வது வசனத்தை இங்கு பரிசீலிப்போம். 019:019வது வசனத்தின் அரபி மூலம், தமிழ் உச்சரிப்பில்,

''கால இன்னமா அன ரஸுலு ரப்பிகி லிஅஹப லகி குலாமன் ஸகிய்யா''

அரபியில் படிக்கும் (audio video) ஒலி மற்றும் எழுத்து,



இன்னும், முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள் அன்றாடம் அணுகும் சில திருக்குர்ஆன் (தமிழ், ஆங்கிலம் உருது மொழி பெயர்ப்புப்) பிரதிகளிலிருந்து படமாக, (படங்களின் மீது சொடுக்கினால் தெளிவாகப் படிக்கலாம்)



----------------


------------------


---------------


----------------


----------------


--------------


--------------


--------------


திருக்குர்ஆன் மர்யம் அத்தியாயம் 019வது வசனத்தில் இடம்பெறும் ''லிஅஹப'' வார்த்தையை (மட்டும்) சிகப்பு வண்ணத்தில் கோடிட்டுக் காட்டியுள்ள இந்த ஆவணங்களை பிறமத நண்பர்கள் தவறாக விளங்கி விமர்சித்திருக்கின்றனர் என்று அவர்களின் விவாதத்திலிருந்து விளங்க முடிகிறது. விமர்சனத்தைப் பார்ப்போம்,

* ஹஃப்ச் இவ்விதமாக படிக்கிறார்:

He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: the angel) you a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li'ahiba

* நஃபா, அபோம்ரோ, கலன், வர்ஷ்... படிக்கிறார்கள்:

He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: Lord) you a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihiba

* அல்பஹர் அல்மொஹித், "Alkishaf" a book for Alzimikhshiry:

He said, "I am the messenger of your Lord, HE ORDERED ME TO GRANT YOU a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani 'n 'hiba



திருக்குர்ஆன் 019:019வது வசனத்தில் இடம்பெறும் ஒரு வார்த்தையில் - li'ahiba, liyihiba, amarani 'n 'hiba என - மூன்று விதமான உச்சரிப்புகள் உள்ளதாக பிறமத நண்பர்கள் இங்கு சுட்டுகின்றனர். இவர்கள் சுட்டியுள்ளது போல் ''hiba'' என்று மூலத்தில் இடம்பெறவில்லை. அவ்வாறு இடம் பெறவும்கூடாது. எனவே லிஅஹிப, லியிஹிப, அமரனி N ஹிப என்று பிறமத நண்பர்கள் எழுதியிருப்பது கவனக்குறைவான எழுத்துப்பிழையாக இருக்க வேண்டும். எழுத்துப் பிழை என்பதை ஒப்புக்கொண்டால் அதைத் திருத்திக்கொள்ளவும். அல்லது ''ஹிப'' என்று எழுதியது சரிதான் என்றால் பிறமத நண்பர்கள் அதற்கான மூல ஆதாரத்தை வைக்க வேண்டும்.

வழங்குவாயாக, தருவாயாக, அளிப்பாயாக போன்ற அர்த்தமுள்ள வார்த்தைதான் ''ஹப்'' என்ற அரபுச் சொல்லாகும் எடுத்துக்காட்டாக:



மேற்கண்ட படத்தில், திருக்குர்ஆன் - 003:036, 025:074, 026:083, 037:100 - வசனங்களில் சிகப்பு வண்ணத்தில் உள்ள எழுத்துக்கள். வசனங்கள் தமிழில்,

அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் 'இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய். (003:038)

மேலும் அவர்கள்: 'எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள். (025:074)

'இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக! (026:083)

'என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக' (என்று பிரார்த்தித்தார்) (037:100)

இந்த நான்கு வசனங்களிலும் இடம் பெற்றுள்ள ''ஹப்'' என்ற சொல்லில் இருந்து பிறந்தது தான் ''ஹப, அஹப, லிஅஹப'' ''லியஹப'' என்ற வார்த்தைகளாகும். ''லிஅஹப'' என்றால் வழங்குவதற்கு, அளிப்பதற்கு, கொடுப்பதற்கு என்று பொருளாகும்.

'நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன். பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்') என்று கூறினார். (019:019)

லிஅஹப என்ற அரபிச்சொல்: அன்பளிக்க, வழங்க, அளிக்க, கொடுக்க என்று பல தமிழ் விளக்கங்களில் மொழி பெயர்த்தாலும் பொருள் ஒன்றுதான். ஆனால், பிறமத நண்பர்கள் விமர்சித்திருப்பதுபோல் ''ஹிப'' என்று எந்தக் குர்ஆனிலும் இடம் பெறவில்லை! மாறாக, ''லி அஹப'' என்பதை ''லி யஹப'' என்று ஓதியிருக்கிறார்கள்.

வர்ஷின் ஓதும் முறை ''லி அஹப''

ஹஃப்ஸின் ஓதும் முறை ''லி யஹப''

இந்த வித்தியாசமான உச்சரிப்பில் ஓதும் நடைமுறையை முஸ்லிம்கள் - மறுக்கவில்லை - ஒப்புக்கொண்டு, இணையதளங்களிலும் வெளியிட்டுள்ள விஷயமாகும்.

தஃப்ஸீர் இப்னு கதீர்,



தஃப்ஸீர் தபரி,



தஃப்ஸீர் குர்துபி,



திருக்குர்ஆன் விளக்கவுரைகளில், இங்கு விவாதித்துக்கொண்டிருக்கும் மர்யம் அத்தியாயம் 019வது வசனத்தின் ''லிஅஹப'' என்ற வாசகத்தின் விளக்கவுரையும் மேற்கண்ட படங்களில் இடம்பெற்றுள்ளன. (சிகப்பு வண்ணத்திர் கட்டம் வரைந்ததில்) அபூ அம்ரு பின் அஃலா என்பவர் ''லிஅஹப'' என்பதை ''லியஹப'' என்று ஓதியிருக்கிறார் என்ற தகவலைத் தவறாமல் குறிப்பிட்டு, அப்படி ஓதியதால் திருக்குர்ஆன் வசனத்தின் கருத்து சிதைந்து விடுவதில்லை, மாறிவிடுவதில்லை. இரண்டும் ஒரு பொருளையே பறைசாற்றுகிறது என்றும் விளக்கவுரையில் கூறுகிறார்கள்.

''பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க - அன்பளிக்க வந்துள்ளேன்'' என்று வானவர் ஜிப்ரீல் கூறுகிறார்.

லி அஹப = நான் (ஜிப்ரீல்) அன்பளிக்க

லி யஹப = அவன் (அல்லாஹ்) அன்பளிக்க

இரண்டு வாசகமும் ஒன்றோடொன்று முரண்படாமல் மிகச் சரியான பொருளைப் பேசுகின்றன. இவ்விடத்தில் பிறமத நண்பர்கள் எதிர்பார்ப்பது போல் திருக்குர்ஆனில் முரண்பாட்டை இது ஏற்படுத்திவிடவில்லை என்பது தெளிவு. இங்கு பிறமத நண்பர்களின் எதிர்பார்ப்பு என்னவென்பதை நாம் தெரிந்துகொள்வது அவசியம்,

தாய் குர்‍ஆன் ஒன்று உண்டு" என்று சொன்னால், ஏன் இப்படி பல வித்தியாசங்கள் அவைகளில் உள்ளன‌? அதிகாரபூர்வமான இயேசுவின் நற்செய்தி நூல்கள் நான்கு இருப்பதினால், முஸ்லீம்கள் அவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு நற்செய்தி நூல் வேண்டும் என்றுச் சொல்கிறார்கள்.

முஸ்லீம்கள் "மத்தேயு/மாற்கு/லூக்கா என்பவரின் படி..." என்று எழுதப்பட்டுள்ளதை அங்கீகரிக்கமாட்டார்கள், ஆனால், தங்களிடம் அப்படி உள்ளதை அங்கீகரிக்கிறார்கள். இன்று நம்மிடம் உள்ள குர்‍ஆன் அனைத்தும் ஒபி இபின் கனப் என்பவரின் படி உள்ள குர்‍ஆன் தான் (They not accept the word "according to ..." but they have it. Today's Quran which all we use is according to Obi IBM Kanab.)


பைபிளை எழுதிய நால்வரும் ஒவ்வொரு விதமாக முரண்பட்டு எழுதியுள்ளனர் என்ற விமர்சனத்துக்கு சரியான விளக்கம் கொடுக்க இயலாமல் - பைபிளில் முரண்பாடுகள் இல்லை என்று நிறுவவும் முடியாமல், பதிலுக்குப் பதில் என்ற தோரணையில் குர்ஆனில் எழுத்துப்பிழை உள்ளது, முரண்பாடு உள்ளது என்று பிறமத நண்பர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர்.

இங்கு நாம் கூறிக்கொள்வது, எழுத்துப் பிழையும் கருத்துப் பிழையும் ஒன்றாகுமா? என்றால் ஒருபோதும் சமமாகாது. எழுத்துப்பிழைகளைத் திருத்திக்கொள்ள முடியும். ஆனால் கருத்துப் பிழையை எக்காலத்திலும் திருத்திட முடியாது. கருத்துப்பிழை கொண்ட பைபிள் வசனங்களை நீக்குவதைத்தவிர வேறு வழியில்லை. பைபிளில் கருத்து முரண்பட்ட வசனங்கள் உள்ளது போல் திருக்குர்ஆனிலும் கருத்து முரண்பட்ட வசனங்கள் உள்ளன என்பதை நிரூபிக்க அவர்கள் வைத்துள்ளவை இதுதான், li'ahiba, liyihiba, amarani 'n 'hiba. இதைத் தமிழில் எழுதியிருந்தால் சாயம் வெளுத்துவிடும் என்பதினால் ஆங்கிலத்தில் எழுதி என்னவோ உலக மகா வித்தியாசத்தைக் கண்டுபிடித்து விட்டது போல் குறிப்பிட்டுள்ளனர். அதுவும் திருக்குர்ஆனில் இல்லாத ''ஹிப'' என்ற வார்த்தையைச் சேர்த்துத் திருக்குர்ஆன் வசனத்தைத் திரித்துள்ளனர்.

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Thursday, September 25, 2008

வர்ஷ், ஹஃப்ஸ் காரீகளின் ஓதல்.

குர்ஆனை மனனம் செய்து அழுத்தமான உச்சரிப்புடன் நீட்டி, நிறுத்தி ஓதுபவரை ''காரீ'' என்று சொல்வார்கள். இன்றைய காரீகளுக்கு முன்னோடியாக இருப்பவர்கள் 'வர்ஷ். ஹஃப்ஸ்' என்ற இரு பிரபல்யமான காரீகளாவர். இன்று உலகிலுள்ள அனைத்துக் காரீகளும் இவ்விருவரின் மாணவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்று ஓதப்படும் கிராஅத்துகளில் சுமார் 30 சதவிகிதம் காரீகள் ''வர்ஷ்'' என்பவரின் கிராஅத் ஸ்டைலை பின்பற்றுகின்றனர். 70 சதவிகிதத்தினர் ''ஹஃப்ஷ்'' என்பரிவரின் கிராஅத் ஸ்டைலைப் பின்பற்றுகின்றனர்.

குர்ஆனைத் திறந்து வைத்துக் கொண்டு, அன்றிலிருந்து இன்றுவரை மாற்றப் படாத ஒரே வசனத்தை பொருள் மாறாமல் பலவாறு (7வகை என்பது குறைவு) ஓதுவதை ஹஃப்லா என்பர்.

பிரபல காரீகள் முஹம்மது ஸித்தீக் அல்மின்ஷாவீ, அப்துல் பாஸித் முஹம்மது அப்துஸ் ஸமத், மஹ்மூதுத் தப்லாவீ ஆகியோரின் ஹஃப்லாக்கள் கேட்டுப் பார்த்தால் ஒரே வசனத்தைத் திரும்பத் திரும்பப் பலமுறை பலவாறு ஓதிக் கொண்டிருப்பார்கள். இதற்கு அர்த்தமே அசல் ஒன்று; ஸ்டைல்கள் பல என்பதுதான்.

காரீகள் வசனங்களின் பின்னணிக்கேற்றவாறு குரலில் உணர்ச்சியைக் கொண்டு வந்துவிடுவார்கள். முக்கியமாக வரலாற்று வசனங்களை ஓதினால் சம்பவங்களை காட்சியாக குரலில் பிரதிபலித்துவிடுவார்கள். நாம் இங்கு விவாதிக்கவிருக்கும் மர்யம் - 019வது அத்தியாயம் முழுக்க உயர் கவி நடையில் அமைந்த அத்தியாயமாகும். ஓர் அற்புதத்தை நிறைவேற்ற மர்யம் என்றப் பெண்ணை இறைவன் தேர்ந்தெடுக்கிறான். இதனால் மர்யம் படும் துன்பம், ஊரிலுள்ளவர்களின் சந்தேகப்பார்வை, இடித்துரைப்பு, அவதூறு போன்ற இன்னல்களுக்கு அப்பெண் ஆளாகிறார். இந்தச் சுழ்நிலையை உணர்ச்சிப்பூர்வமாக காரீகள் ஓதுவார்கள்.

மர்யம் கையில் குழந்தையுடன் ஊருக்குள் நுழைகின்றார் அப்போது: ''யா உக்த ஹாரூன...'' ஹாரூனின் சகோதரியே! உன் தந்தை கெட்டவரில்லை. உன் தாயும் நடத்தை கெட்டவர் இல்லை. (நீ ஏன் இப்படியாகிவிட்டாய்) என்பது போல் சந்தேகக் கணைகளைத் தொடுக்கின்றனர் ஊர்மக்கள். இந்த வசனத்தை காரீகள் ஓதக்கேட்டால் சூழ்நிலை மிளிரும். இவ்வசனத்திலும் ''வர்ஷ், ஹஃப்ஸ்'' இரு காரீகளின் உச்சரிப்பு உள்ளதால் இது போன்ற வித்தியாசமான உச்சரிப்புகள் கொண்ட வசனங்களை மட்டும் ஒலியாக - ஆடியோவாக பதியும் முயற்ச்சி முடிந்தபின் ஒலியைக் கேட்கலாம். அதற்கு முன்,

''வர்ஷ், ஹஃப்ஸ்'' காரீகளின் வித்தியாசமான உச்சரிப்புகளை எழுத்தில் பார்க்கலாம்.

இங்கு படமாக இணைத்துள்ள பிடிஎஃப் ஃபைலின் சுட்டி

(படங்களின் மீது சொடுக்கினால் தெளிவாக வாசிக்கலாம்)

படம் 1 வர்ஷ் & ஹஃப்ஸ் இரு கிராஅத்தும் சேர்ந்தது.



படம் 2



படம் 3 வர்ஸ் கிராஅத் மட்டும்



படம் 4




பிடிஎஃப் படம் 1, 2ல் திருக்குர்ஆன் மர்யம் அத்தியாயம் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கருப்பு எழுத்துக்கள் வர்ஷ் கிராஅத்தாகும், ரோஸ் வண்ண எழுத்துக்கள் குர்ஆனிலிருந்து வித்தியாசமான காரீ ஹஃப்ஸின் உச்சரிப்புகள். பார்க்க படம் 2 கீழே: ரோஸ் வண்ண வட்டத்தில் அடிக்குறிப்பு.

படம் 1ல் முதல் வசனம் கருப்பு எழுத்துக்களில் உள்ள வர்ஷ் கிராஅத் முறைப்படி ''ஸகரிய்யா'' என்று முடிகிறது, முடிந்த இடத்திலேயே (ரோஸ் எழுத்தில் ஹஃப்ஸ் கிராஅத்) அ என்ற உச்சரிப்பைத் தரும் அம்சு என்ற எழுத்து ரோஸ் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது (படம் 1, 3ல் நாம் பச்சை வண்ணத்தில் சிறிய கோடிட்ட இடத்தைப் பார்க்கவும்)

அதாவது, முதல் வசனம் (வர்ஷ் கிராஅத் கருப்பு எழுத்து) ஸகரிய்யாயாயாயா... என்ற நீட்டலுடன் முடிந்து, ''இஃத்னாதா ரப்பஹு...'' என அடுத்த வசனம் ஓதப்படும். இது காரீ வர்ஷின் கிராஅத் ஸ்டைல்.

ரோஸ் எழுத்து, ஸகரிய்யாயாயாயா... என்ற நீட்டலுடன் முடிந்து, ''அ இஃத்னாதா ரப்பஹு...'' என்று அடுத்த வசனம் ஓதப்படும். இங்கு இரு கிராஅத்துக்கும் உள்ள உச்சிரிப்பு வித்தியாசம் ''அ'' என்ற எழுத்து மட்டுமே ஹஃப்ஸ் கிராஆத்தில் சேர்த்து ஓதப்படுகிறது இது ஹஃப்ஸ் கிராஅத் ஸ்டைல்.

ஏன் இவ்வாறு ஓதுகிறார்கள்? என்றால் வித்தியாசமாக ஓதும் காரீகளே அதற்கு விளக்கம் சொல்கிறார்கள்: ''வித்தியசமான உச்சரிப்பில் ஓதினாலும் குர்ஆன் வசனங்களின் பொருள் மாறாது'' என்று காரீகளே சவால் விடுக்கிறார்கள்! இந்த உச்சரிப்புகளின் வித்தியாத்தை வைத்து,

//ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?!

Quran or Qurans?!//

என்று அறியாமையில் வாதம் செய்யும் பிறமத நண்பர்களுக்கு - ''நாங்கள் எப்படி ஓதினாலும் குர்ஆன் வசனங்களின் பொருள் மாறாது'' என்ற காரீகளின் சவாலையே - இங்கு சொல்லிக்கொள்வோம்.

இன்னும், மர்யம் அத்தியாயத்தின் 4வது வசனம் (ஹஃப்ஸின் படி 3வது வசனம்) வர்ஷ் கிராஅத் முறைப்படி, ''வலம் அகும்பி'' என்று ஓதப்படும். (பார்க்க படம் 4ல் கருப்பு வட்டம்)

இதுவே, ஹஃப்ஸ் கிராஅத் முறைப்படி, ''வலம கும்பி'' என்று ஓதப்படும் (பார்க்க படம் 1ல் கருப்பு வட்டம்)

ஓதுதலில் உள்ள உச்சரிப்பு வித்தியாசங்கள் மர்யம் அத்தியாயத்தில் மட்டுமில்லை, திருக்குர்ஆனின் பல அத்தியாயங்களில் இது போன்ற வித்தியசமான கிராஅத்துகள் உள்ளன. இதனால் வசனங்களின் பொருள் சிதைந்து விடுவதில்லை, பொருள் மாறிவிடுவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதனடிப்படையிலேயே ''பல குர்ஆன்களா!?'' என்று பிறமத நண்பர்கள் விமர்சனம் எழுதியுள்ளனர்.


நான் என்ன சொல்லவருகிறேன்?

சூரா மர்யம் என்ற குர்‍ஆன் சூராவிலிருந்து மூன்று எடுத்துக் காட்டுக்களைக் காணலாம் வாருங்கள்.

1. எடுத்துக்காட்டு ஒன்று: சூரா மர்யம் 19:19
[English translation based on the one done by Rashad Khalifa]

* ஹஃப்ச் இவ்விதமாக படிக்கிறார்:

He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: the angel) you a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li'ahiba

* நஃபா, அபோம்ரோ, கலன், வர்ஷ்... படிக்கிறார்கள்:

He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: Lord) you a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihiba

* அல்பஹர் அல்மொஹித், "Alkishaf" a book for Alzimikhshiry:

He said, "I am the messenger of your Lord, HE ORDERED ME TO GRANT YOU a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani 'n 'hiba


இங்கு பிறமத நண்பர்கள் ஆங்கில உச்சரிப்பில் சுட்டியுள்ள வார்த்தைக்கு மூலமொழி அரபியை வைப்பார்கள் என்று நம்புவோம்.

அவர்கள் எழுப்பியுள்ள மேற்கண்ட விமர்சனத்தில் திருக்குர்ஆன், 019:019வது வசனத்தில் இடம் பெறும் ''லி அஹப'' என்ற வார்த்தையை காரீகள் வித்தியாசமான உச்சரிப்பில் ஓதியிருக்கிறார்கள் என்பது உண்மையே, இதனால் வசனத்தில் பொருள் மாறிவிடுவதில்லை என்பதே ஏதார்த்தம். கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்ணியப் பொருளை இவர்கள் பூதக்கண்ணாடியை வைத்து பெரிதாக்கிக் காட்டுவதுதான் இவர்களின் உண்மை சொரூபத்தை அடையாளம் காட்டிவிடுகின்றது.

அடுத்த பதிவில் ''லி அஹப'' என்பது குறித்து இங்கு பதிவு செய்வோம் இறைவன் நாடட்டும்.

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

ஏழு வட்டார மொழியில் குர்ஆன்!

குர்ஆன் பிரதிகளில் பிழைகளும், திருத்தமும்!

Friday, September 19, 2008

வளர்ப்பு மகன் பெற்ற மகனாக முடியுமா?

shankaran E R has left a new comment on your post "மாற்றாரால் காமுகராகச் சித்தரித்த நபி - ஸைனப் திரும...":

தங்களின் பதிவு கண்டேன். விரிவாக விளக்கியுள்ளீர்கள். ஆயினும் என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஏன் நபி தனக்கு மருமகள், அதிலும் தனது வளர்ப்பு மகனின் மனைவியை, விவாகரத்தே ஆனாலும்,மருமகள் முறையிலுள்ள பெண்ணை மீண்டும் திருமணம் செய்ய வேண்டும்? இது அந்நாளைய பொதுவான வழக்கமா? இக்கேள்விக்கு சரியான பதில் தாங்கள் அளித்த சுட்டியிலும் இல்லை.

இக்கேள்விக்கு தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

*****

நண்பர் சங்கரன்,

ஒரு பக்கமாக வாசித்து விளங்கியுள்ளீர்கள். மறு பக்கத்தை உள்வாங்கவில்லை என்பதே உங்களால் முழுமையாக புரிந்து கொள்ளாமல் போனதற்குக் காரணம் எனலாம். நபியவர்களின் வளர்ப்பு மகனைத் திருமணம் செய்த ஸைனப் (ரலி) அவர்கள், நபியவர்களின் தந்தையுடன் பிறந்த சகோதரியின் மகளாவார். அதாவது நபியவர்களின் மாமி மகள் என்பதைக் கவனிக்கத் தவறி விட்டீர்கள்!

தந்தையுடன் பிறந்த சகோதரியின் மகள் - மாமி மகள், ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ள அதிகம் உரிமையுள்ளவர்கள். உதாரணமாக: ராஜா என்பவரின் தந்தையுடன் பிறந்த சகோதரியின் மகள், ராஜாவுக்கு முறைப் பெண்ணாவார். அந்தப் பெண்ணுக்கு ராஜா முறைப் பையனாவார். மாமியின் மகளான முறைப்பெண் வெறொருவருக்கு மனைவியாக இருந்தால் தவிர இவ்விருவருக்குமிடையே திருமண உறவு தடுக்கப்பட்டதல்ல.

நபியவர்களுக்கு ஸைனப் முறைப் பெண்ணாவார், ஸைனப்புக்கு நபியவர்கள் முறை மாப்பிள்ளையாவார். இவ்வுறவை யாரும் விரும்பித் தேர்ந்தெடுக்க முடியாது. இது இரத்த சம்பந்தப்பட்ட உறவினால் ஏற்படுவது. இதை மாற்றிடவோ மறுத்திடவோ இயலாது. மறுத்தாலும் அது வெறும் வார்த்தையாக இருக்குமேயன்றி மறுப்பு உண்மையாகிவிடாது.

வளர்ப்பு மகன், வளர்ப்புத் தந்தை என்று சொல்லிக்கொள்வது இரத்த உறவால் ஏற்படுவதில்லை. அதனால்தான் மகன், தந்தை என்று சொல்லாமல் வளர்ப்பு மகன், வளர்ப்புத் தந்தை என்று அடைமொழியோடு அழைக்கப்படுகிறது. வளர்ப்பு மகன் என்று சட்டபூர்வமாக ஆவணங்களில் பதிவு செய்து கொண்டாலும் இரத்த உறவு ஏற்பட்டுவிடாது. ஏனெனில் தந்தை, மகன் உறவு வெறும் வார்த்தைகளால் ஏற்படுவதில்லை.

பெற்ற மகன், வளர்ப்பு மகன் இவ்விரண்டுக்கும் என்றும் ஒற்றுமையில்லாத பெருத்த வேறுபாடு உள்ளது, வளர்ப்பு மகன் ஒருபோதும் பெற்ற மகனாகிவிட முடியாது.

ஸைதை வளர்ப்பு மகன் என்று நபியவர்கள் அறிவிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்போது ஸைத் மணமுடித்து விவாகரத்து செய்த பெண்ணை நபியவர்கள் திருமணம் செய்ய எந்தத் தடையும் இல்லை என்று ஒப்புக்கொள்பவர்கள், வளர்ப்பு மகன் என்று வாயால் சொல்லி விட்டதால் ஸைது மணமுடித்தப் பெண் நபியவர்களுக்கு எவ்வாறு மருமகளாகிவிடுவார்? என்பதையும் சிந்திக்க வேண்டும்.

''உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது'' (திருக்குர்ஆன், 004:023)

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம், பெற்ற மகனின் மனைவியே மருமகள் என்ற தகுதியைப் பெறமுடியும் என்ற கருத்தில் மகனின் மனைவியை திருமணம் செய்வதைத் தடைவிதிக்கிறது. வளர்ப்பு மகனுக்கு இந்தச்சட்டம் பொருந்தாது.

வளர்ப்பு மகனை சொந்த மகனாகக்கருதி இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளைப் புறக்கணிக்கும் முறை அன்றைய காலத்தில் இருந்தது. இன்னாருக்கு இன்னார் மகன் என்பதைத் தீர்மானிப்பது இறைவனின் அதிகாரத்தில் உள்ளது. இன்னொருவரின் மகனைத் தன் வளர்ப்பு மகன் என்று சொல்லி வளர்க்கலாமே தவிர, பெற்ற மகனாகக் கருதுவது போலியான உறவு. அந்த வெற்று உறவைத் தகர்க்கவே வளர்ப்பு மகனின் மனைவி விவாகரத்து செய்யப்பட்டால் அந்தப் பெண்ணை வளர்ப்புத் தந்தை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற சட்டத்தை இறைவன் தன் நபியின் வழியாக நிறைவேற்றினான்.

இவையெல்லாம் ஆக்கத்தில் சொல்லப்பட்டிருந்தும் நீங்கள் கவனிக்கவில்லையோ என்று தோன்றுகிறது. இனியும் உங்களுக்குச் சந்தேகம் உள்ளது எனில், இரத்த சம்பந்தமான உறவில் ஸைனப் (ரலி) அவர்கள் நபியவர்களுக்கு எவ்விதத்தில் மருமகளாகிறார்? என்பதை நீங்கள் விளக்க வேண்டும் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Sunday, September 14, 2008

குர்ஆன் பிரதிகளில் பிழைகளும், திருத்தமும்!

குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளது. இது உலக முஸ்லிம்கள் ஒப்புக்கொண்ட ஒரு விஷயம். குர்ஆனில் எழுத்துப் பிழை இல்லை என்று ஒரு முஸ்லிம் வாதிப்பாரேயானால் அவருக்கு குர்ஆனோடு சிறுதும் பரிச்சயமில்லை என்று சொல்லி விடலாம்.

கருத்து வேறுபாடு இல்லாத அளவுக்கு, குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளது என்று ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் அதைக் குறிப்பிட்டு எழுதியும் இருக்கிறார்கள்.

(படத்தின் மீது சொடுக்கினால் தெளிவாகப் படிக்க முடியும்)



*****



*****



''குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்'' என்று விமர்சிக்கும் பிறமத நண்பர்கள், குர்ஆன் பிரதிகளில் உள்ள எழுத்துப் பிழைகளை குர்ஆனில் உள்ள பிழையாக்க முயலுகின்றனர். அதற்கான குறுக்கு வழிதான், ''குரான் பாதுகாக்கப்பட்டதா?'' என்று ஒரு தடத்தில் எழுதிக்கொண்டு, இன்னொரு சாட்கெட்டில் ''குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்'' என்று எழுதிவிட்டால் ''குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை'' என்று அப்பாவிகளை நம்பவைத்து விடலாம் பாருங்கள்!

ஆனால், குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. வானவர் ஜிப்ரீல் குர்ஆனை எழுதிக்கொடுத்துச் சென்றிருந்தால் குர்ஆன் பிரதிகளில் உள்ள எழுத்துப் பிழைகளை இறைச் செய்தியில் (நவூதுபில்லாஹ்) உள்ள பிழையாகக் கொள்ளலாம். ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறைச் செய்தியைக் கொண்டு வந்து, நபி (ஸல்) அவர்களுக்கு ஓதிக் கற்றுக் கொடுத்தாரே தவிர எழுதிக் கற்றுக் கொடுக்கவில்லை. குர்ஆன் பிரதிகளில் உள்ள எழுத்துப் பிழைகள், குர்ஆனை எழுதிக்கொண்ட மனிதர்களால் எற்பட்ட எழுத்துப் பிழைகளாகும்.

வஹி ஓசையாக அருளப்பட்டதால் குர்ஆன் என்பது அதை ஓதும் ஓலியாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்..

எந்த மனிதருக்கும் எழுத்துப் பிழைகள் ஏற்படவே செய்யும். குர்ஆனை எழுதும் போதும் எழுத்துப் பிழைகள் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் சமுதாயம் அந்த எழுத்துப் பிழைகளையும் திருத்தாதாமல் தொடர்ந்து எழுத்துப் பிழைகளுடனேயே மறு பிரதிகளை அச்சடித்து வருகிறது.

குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பில்,

அச்சேற்றும் போது ஏற்படும் பிழைகளும் உள்ளன. மூன் பப்ளிகேஷன் வெளியீடு தமிழ்மொழி குர்ஆனில் மூலமொழியில் ஒரு வசனத்தை மேலும், கீழுமாக மாற்றி அச்சடித்து விட்டார்கள். இது சதாரணமாக மனிதருக்கு ஏற்படும் கவனக்குறைவு அவ்வளவுதான். இதற்காக பொருட்செலவு, உடல் உழைப்பு ஆகியவற்றை வீணாக்கி ஆயிரக்கணக்கான குர்ஆன் பிரதிகளை வெளியிடாமல் இருக்க வேண்டிய அவசியமில்லை.



வசனத்தைத் தனி ஸ்டிக்கரில் அச்சடித்து தவறராகப் பதியப்பட்ட வசனத்தின் மேல் ஒட்டிக்கொள்ளும்படி தனி ஏற்பாடு செய்தார்கள்.

ஏற்கெனவே வெளியிட்ட குர்ஆனில் அச்சுப் பிழைகள் ஏற்பட்டு, படிப்பவர்கள் அதைச் சுட்டிக்காட்டினால் அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்வார்கள். ஆனால் பிழையாக அச்சடிக்கப்பட்ட குர்ஆன் அப்படியேதான் இருக்கும். அதனால் குர்ஆனை மாற்றி எழுதி விட்டார்கள். அல்லது திருத்திவிட்டார்கள் என்று அர்த்தமல்ல.

குர்ஆன் பலவகையில் உள்ளது என்று பிறமத நண்பர்கள் எடுத்து வைக்கும் வாதங்களில் ஒன்று 019:019வது வசனமாகும். இந்த வசனத்தை குர்ஆன் பிரதிகளில் மாற்றி எழுதியுள்ளனர் என்பது அவர்களின் குற்றச்சாட்டு. இது குறித்து பிறமத நண்பர்களின் விமர்சனத்தை தனியாக எழுதுவோம். இங்கு நாம் சொல்ல வருவது,



0019:019வது வசனத்தில் ''லிஅஹப'' என்று இருக்க வேண்டும். மூன் பப்ளிகேஷன் வெளியிட்ட குர்ஆனில் ''லஅஹப'' என்று அச்சடித்துள்ளனர்.

இது குர்ஆனில் உள்ள பிழை இல்லை. அச்சேற்றும் போது கவனக்குறைவினால் ஏற்பட்ட தவறாகும். இதை அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்ள முடியும். இது போன்ற ஓரெழுத்து பிழைகளை மையமாக வைத்தே பிறமத நண்பர்களின் விமர்சனங்கள் அமைந்துள்ளது.

இப்படி உலகில் பல குர்ஆன் பிரதிகளில் அச்சுப் பிழைகள் ஏற்பட்டு அது திருத்தம் செய்யாமல் இருந்தால் அது மனிதர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட பிழைகளே தவிர, குர்ஆனில் உள்ள பிழைகள் இல்லை!

இறைவன் ஓசையாகவே குர்ஆனை அருளினான். என்பதால் குர்ஆன் பிரதிகளை, குர்ஆன் ஒலியோடு ஒப்பிட்டுப் பார்ப்பது மிக அவசியம்!

Friday, September 12, 2008

7 வட்டார மொழியில் குர்ஆன் அருளப்பட்டது!

இஸ்லாத்தை விமர்சிக்கும் பிறமத நண்பர்கள் ஒரு குர்ஆனா பல குர்ஆன்களா!? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?!

Quran or Qurans?!

இக்கட்டுரையை அரபியில் படிக்க: النسخة العربية

இந்த கட்டுரைக்கான விவரங்கள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது:

The reading ways of Quran dictionary: (moa'agim alqera'at alqura'nia):

இது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம்(Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்:

டாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal'al Salem Makrem)
டாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)

இவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.
புத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel – Kuwait)

முன்னுரை:

உத்மான் இபின் அஃபான் காலம் வரைக்கும் பல குர்‍ஆன்கள் [massahif] எழுதப்பட்டது. இவர் இதர குர்‍ஆன்களை எரித்துவிட்டார் மற்றும் ஒரு குர்‍ஆனை ஆதிகாரபூர்வமான பிரதி என்று வைத்துக்கொண்டார்.

உதாரணத்திற்கு, கீழ்கண்ட குர்‍ஆன் வகைகள்:

1. அலி பின் அபி தலிப் என்பவரின் படி குர்‍ஆன் (Quran according to Ali bin abi talib)
2. இபின் மஸூத் என்பவரின் படி குர்‍ஆன் (According to Ibn Mass'oud)
3. அபி பின் கப் என்பவரின் படி குர்‍ஆன் (According to Aobi bin ka'ab)

இதன் பொருள் இவர்கள் குர்‍ஆனை எழுதினார்கள் என்று பொருளில்லை; இதன் பொருள் அவர்கள் குர்‍ஆனை எப்படி படிக்கவேண்டும் என்ற விவரங்களை கொண்டு இருந்தனர்.

குர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.

ஏழு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:

1. நஃபா: கலன் + வர்ஷ் (Nafaa': Qalon + Warsh)
2. இபின் கதிர்: அல்பிஜி + கோன்பில் (Ibn Kathir: Albizi + Qonbil)
3. அபி அம்ரொ: அல்தோரி + அல்சோசி (Abi amro: Aldori + Alsosi)
4. இபின் அமிர்: இபின் அபன் + இபின் த்வான் (Ibn Amer: Ibn Aban + Ibn Thkwan)
5. அச்செம்: அபோ பைகர் + ஹஃபஸ் (Assemm: Abo Biker + Hafas)
6. அல் கெஸ்ஸய்: அலித் + அல்தோரி (Alkessa'i: Allith + Aldori)
7. ஹம்ஜா: அல்பிஜாஜ் + அபோ ஈஸா அல்சிர்பி (Hamza: Albizaz + Abo Isa Alsirfi)


இங்கு பதிவு செய்துள்ள குழப்பமான கருத்துகளில் பிறமத நண்பர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று முழுதும் புரியவில்லை என்றாலும் ''குர்ஆன் ஒன்றல்ல, ஏழு வகையான குர்ஆன் உள்ளது'' என்று சொல்கின்றனர் என்று விளங்குகிறது. எடுத்து வைக்கும் சான்றுகளில் இவர்களுக்கே நம்பிம்கையில்லை என்பதை இவர்களின் தடுமாற்றம் தெளிவுபடுத்துகிறது. இவர்கள் பதியும் கருத்துக்கள் இவர்களுக்கேப் புரியாமல் போய் விடுகிறது என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்,

//நான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்பது மிகவும் தெளிவாக உள்ளது; அதாவது ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.//


தெளிவில்லாத விமர்சனத்தைப் பதிவு செய்கிறோம் என்பது அவர்களுக்கே உறுத்தலாக இருப்பதால் ''மிகவும் தெளிவாக உள்ளது'' என்று சான்றிதழ் வழங்கிக் கொள்கிறார்கள்.

நண்பர்களே! உலகில் ஒரே ஒரு குர்ஆன் உள்ளதாக யாரும் சொல்ல மாட்டார்கள்! உலகம் முழுதும் உள்ள குர்ஆன் பிரதிகளை கணக்கிட்டால் பல கோடி குர்ஆன் பிரதிகளை கண்டெடுக்கலாம். விஷயத்துக்கு வருவோம்,

வட்டார மொழி

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாநில மக்களும் பேசுவது தமிழ் என்றாலும் ஒவ்வொரு இடத்திலும் பேசும் தமிழில் வித்தியாசமிருக்கும். இதை வட்டார மொழி என்று சொல்வார்கள். பேசு பொருள் ஒன்றாக இருந்தாலும் பேசும் ஒலியில் ஏற்ற இறக்கமிருக்கும். ஒருவர் தமிழ் பேசுவதை வைத்தே அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறிவிடலாம். இதில் இலங்கைத் தமிழ் வித்தியாசமான தனித் தமிழ் பேச்சாக இருக்கும். பயிற்சி எடுத்தாலே தவிர ஒரு வட்டாரப் பேச்சை இன்னொரு வட்டாரத்தைச் சேர்ந்தவர் பேசுவது கடினம். அந்த அளவுக்கு வட்டார மொழி ஒருவரின் பேச்சில் ஊறிப்போனதாகும்.

''ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப்படி ஜிப்ரீல்(அலை) அவர்கள் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார்கள். அதை இன்னும் பல(வட்டார) மொழிவழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க) எனக்கு அவர்கள் அதிகப்படுத்திக்கொண்டே வந்து இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறால்கள். (புகாரி, 3219, 4991)

திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டது. அரபு மொழியில் ஏழு வட்டார மொழியில் ஓதுவதையே பிரபலமான ''ஏழு கிராஅத்துகள்'' - ஏழு வகையான ஓதும் முறைகள் - என்று சொல்வார்கள்.

ஏழு வகையான ஓதும் முறைகளையே மாறுபட்ட ஏழு வகையான குர்ஆன்கள் இருக்கின்றன என்று புரிந்து கொண்டு, //''ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.''// என்ற தவறான விமர்சனத்தை வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வைத்துள்ள ஆதாரங்கள் மறு ஆய்வுக்குரியவை என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன்.

ஏழு வகையான ஓதுதல்

''இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) 'அல்ஃபுர்கான்' எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே நான் அவரைத் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுத்துக் கொண்டேன்.

(அவர் தொழுது முடித்த) பிறகு அவரின் மேல் துண்டைக் கழுத்தில் போட்டுப் பிடித்து, 'நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காண்பித்தது யார்?' என்று கேட்டேன். அவர், 'இதை எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் ஒதிக் காண்பித்தார்கள்' என்று பதிலளித்தார். உடனே நான், 'நீர் பொய் சொல்லிவிட்டீர்! ஏனெனில், நீர் ஓதியதற்கு மாற்றமாகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எனக்கு ஓதிக்கொடுத்தார்கள்' என்று கூறியபடி அவரை இழுத்துக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், '(இறைத்தூதர் அவர்களே!) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் 'அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன்' என்று சொன்னேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரை விடுங்கள்!' என்று கூறிவிட்டு (ஹிஷாம் அவர்களை நோக்கி), 'ஹிஷாமே, நீங்கள் ஓதுங்கள்!' என்றார்கள். அவர் என்னிடம் ஓதியது போன்றே நபி(ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக் காட்டினார். (இதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது' என்று கூறினார்கள்.

பிறகு (என்னைப் பார்த்து), 'உமரே, ஓதுங்கள்!' என்று கூறினார்கள். எனக்கு அவர்கள் ஓதிக்கொடுத்திருந்த முறைப்படி நான் ஓதினேன். (அதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது. இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.'' என்று உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, 4992, 5041, 6936, 7550)

நபி (ஸல்) அவர்களின் காலத்தில், இரு நபித்தோழர்கள் குர்ஆனை இரு வகையாக ஓதியிருக்கிறார்கள். இரு ஓதலையும் நபி (ஸல்) அவர்கள் சரி என அங்கீகரித்துள்ளார்கள் என்றால் இருவரும் குர்ஆன் வசனங்களை மாற்றி ஓதினார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா? என்றால் இல்லை. உதாரணமாக:

நபித்தோழர் ஹிஷாம் (ரலி) அவர்கள் திருக்குர்ஆனில் அல்ஃபுர்கான் எனும் 25வது - அத்தியாயத்தை ஓதியதாக அறிவிப்பில் உள்ளது. ஃபுர்கான் அத்தியாயத்தின் தொடக்க வசனம்:

''(சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியவான்'' என்று கூறுகிறது. தொழுகையில் முன்னின்று ஓதும் இமாம் இதை பிழையாக ஓதினாலோ, அல்லது மறதியாக ஒரு வார்த்தையை விட்டுவிட்டாலோ, அவருக்குப் பின்னின்று தொழுபவர்கள் தவறைத் திருத்தியும், மறந்த வசனத்தை நினைவு படுத்தியும் எடுத்துச் சொல்வார்கள்.

இந்த அடிப்படையில், ஹிஷாம் (ரலி) அவர்கள் அல்ஃபுர்கான் அத்தியாய வசனங்களை மாற்றியோ, தவறாகவோ ஓதியிருந்தால் தொழுகையிலேயே அவர் திருத்தப்பட்டிருப்பார். ஹிஷாம் (ரலி) அவர்களின் குர்ஆன் ஓதலை, பின்னின்று தொழுத மற்ற நபித்தோழர்கள் ஆட்சேபிக்கவில்லை. உமர் (ரலி) அவர்களும் அவர் ஓதி முடிக்கும் வரை ஆட்சேபிக்கவில்லை என்பதிலிருந்து ஹிஷாம் (ரலி) அவர்கள் குர்ஆன் வசனங்களை சரியாகவே ஓதியுள்ளார்கள் என்பது தெளிவு!

ஹிஷாம் (ரலி) அவர்கள் சரியாக ஓதியிருந்தால் அதை உமர் (ரலி) அவர்கள் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு, ஓதிய வகையில் மாற்றமிருந்தது. அதாவது ஓதிய வட்டார மொழி வித்தியசமாக இருந்ததால் உமர் (ரலி) அவர்களுக்கு அது குர்ஆன் ஓதும் முறையாக இல்லையே என்று தோன்றியிருக்கிறது, குர்ஆனை மாற்றி வேறு முறையில் ஓதிவிட்டதாகக் கருதி, அதைக் கண்டிப்பதற்காக ஹிஷாம் (ரலி) அவர்களின் கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்து, நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுகிறார்.

நபி (ஸல்) அவர்கள், இருவரும் ஓதியது சரிதான் என்று கூறிய பின் உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொண்டதிலிருந்து, ஹிஷாம் (ரலி) அவர்கள் குர்ஆனை ஓதிய முறையும் நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப்பட முறைதான் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது. தெரிந்த பின் ஏற்றுக்கொண்டார்கள் என்று விளங்கலாம்.

குர்ஆன் ஓதும் முறை

''குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!'' (திருக்குர்ஆன், 073:004)

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ''குர்ஆனை எனக்கு ஓதிக்காட்டுங்கள்'' என்று சொன்னார்கள். நான் ''தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க , தங்களுக்கு நான் ஓதிக்காட்டுவதா?'' என்று கேட்டேன். அவர்கள் ''பிறரிடமிருந்து அதை நான் செவியேற்க விரும்புகிறேன்'' என்று சொன்னார்கள். என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, 5049)

நபி (ஸல்) அவர்களின் ஓதுதல் முறை எப்படி இருந்தது என்று கேட்டேன். அதற்கவர்கள், ''நீட்டி ஓதுதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எப்பதில் ''பிஸ்மில்லா...ஹ் என நீட்டுவார்கள், அர்ரஹ்மா...ன் என்றும் நீட்டுவார்கள், அர்ரஹீ...ம் என்றும் நீட்டுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். (புகாரி, 5046)

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் (தமது ஒட்டகத்தின் மீதர்ந்தபடி) 'அல்ஃபதஹ் (48வது) அத்தியாத்தைத் 'தர்ஜீவு' செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக்கொண்டிருந்தார்கள். (புகாரி, 4281, 4835)

''தர்ஜீவு'' என்பதற்கு மீட்டுதல் என்று பொருளாகும். ஒரு எழுத்தைத் திரும்பத் திரும்ப தொண்டைக்குக்கொண்டு வந்து ஓசை எழுப்பி ஓதுவதாகும். ஆ எழுத்தை ஆ ஆ ஆ என்று இழுத்து ஓதும்போது ஒரே எழுத்தின் ஒலி நீண்டு ஓசை நயத்துடன் ஓதும் முறைக்கு தர்ஜீவு எனப்படும்..

பாங்கொலியில் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்... தொழுகையின் அழைப்பை குரல் வளமிக்கவர் நன்றாக நீட்டிச் சொல்லும் போது கேட்க இனிமையாக இருக்கும். எடுத்துக்காட்டாக: நாகூர் ஹனீஃபா என்ற முஸ்லிம் பாடகர் ஒரு பாடலில் பாங்கு சொல்லியிருப்பார் அவரின் கனத்த குரலுக்கு நீட்டி நிறுத்தி சொல்லியிருக்கும் பாங்கை தர்ஜீவு என்று சொல்லலாம்.

குர்ஆனை மனனம் செய்தவர்கள் வெவ்வேறு முறைகளில் நீட்டி இழுத்து ஓதியிருக்கிறார்கள். ''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' என்ற தொடக்க வசனத்தை ஓதி நிறுத்திவிட்டு பின்னர் அல்ஹம்துலில்லாஹி... என்று தொடங்குவது ஒருவகை ஓதல்.

''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீமில்ஹம்துலில்லாஹி...'' என்று ஒன்றாகச் சேர்த்து நீட்டி இழுத்து ஓதுவதும் ஒருவகை ஓதல்.

ஒரு வசனத்தையே திரும்பத் திரும்ப ஓதுவதும் ஒருவகை. குரல் வளமிக்கவர்கள் குரலை உயர்த்தி, தாழ்த்தி நீட்டி நிறுத்தி வெவ்வேறு வகையிலும் ஓதிக்கொள்ளலாம் என்பதே பல வகையான ஓதுதல் எனப்படும். ஏழுவகையான ஓதுதல் என்பது ஓர் அளவுதானே தவிர குர்ஆனை இனிமையாக ஓத முடியுமென்றால் ஏழு முறைக்கும் அதிகமான வட்டார மொழியில் ஓதலாம். அதற்கு தடையேதும் இல்லை. குர்ஆன் இனிமையாக ஓதப்பட்டால் செவி தாழ்த்திக் கேட்பவர்களை அது ஊக்கப்படுத்தும்.

இதற்கு உதாரணமாக: 12 வயது எகிப்து சிறுமி சுமையா, இன்று தன் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதில் சிறப்புப் பெற்று வருகிறார். இவருடைய ஓதல், அப்படியே குர்ஆன் ஓதுவதில் பிரபல்யமான அப்துல் பாசித் அவர்களின் ஓதலை நினைவூட்டுகிறது. சுமையாவின் குர்ஆன் ஓதலைக் கேட்பதற்காக மக்கள் திரளாக வந்து கண்ணியத்துடன் காத்திருக்கிறார்கள் என்றால் ராகத்துடன் ஓதும் சுமையாவின் இனிமையான குரல் மக்களை ஈர்க்கிறது.

ஏழு வட்டார மொழி

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட ஏழு வட்டார மொழி இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. ஒலியைப் பதிவு செய்ய முடியாத காலத்தில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தது என்பதால் அன்று குர்ஆனை ராகமிட்டு ஓதிய முறை இது என்று தீர்க்கமாக சொல்ல இயலாது. குர்ஆனை ஓதும் முறை பற்றி வசனத்திலும் சில அறிவிப்புகளிலும் ஆதாரங்கள் இருப்பதால் குர்ஆனை இனிமையாக ராகமிட்டு ஓதலாம் என்கிறோம்.

ஏழு வட்டார மொழியை பிரபல்யமான ஏழு வகையான கிராஅத் - ஓதல் என்று சொன்னாலும் அறிஞர்களிடையே ஏழு வட்டார மொழி குறித்து கருத்து வேறுபாடுகள் உண்டு. இவற்றை அறிஞர்களின் கருத்தாகவே கொள்ளலாமே தவிர அறிஞர்களின் கருத்துக்களை வலுசேர்க்க நபிவழி அறிவிப்புகளில் சான்று எதுவும் இல்லை.

குர்ஆனை இனிமையாக பல ராகத்துடன் ஓதிக்கொள்ளலாம் என்பதையே ஏழு வட்டார மொழி வழக்கு என்ற அறிவிப்பு அனுமதிக்கிறது. குர்ஆன் வசனங்களை ஏழு விதமாக மாற்றி ஓதினார்கள் என்பதைக் குறிப்பிடவில்லை. இதற்கு மேற்கண்ட உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் தக்க சான்றுகள் உள்ளன.

மேலும்,

''நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள்'' (திருக்குர்ஆன், 073:020)

''இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்'' (மேற்கண்ட உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பு, புகாரி, 4992, 5041, 6936, 7550)

குர்ஆனில் சுலபமானதை ஓதுங்கள் என்று - (கூட்டுத் தொழுகையில் முன்னின்று தொழ வைப்பவர் அல்லாத) - ஒருவர் குர்ஆனை நீட்டியும் ஓதலாம், சுருக்கியும் ஓதலாம் என்பதை அனுமதிக்கிறது. ''உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்'' என்பதும் ஒரே ஒரு குர்ஆனையேக் குறிப்பிடுகிறது. ஏழு வகையான குர்ஆனைக் குறிப்பிடவில்லை.

எம்மிடம் உள்ளது இதுவே!

இனி...

குர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.


ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தின்... என்று விளக்கியிருக்கும் பிறமத நண்பர்களே!

ஏழு வித்தியசாமான குர்ஆன்கள் உண்டு என்ற உங்களின் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, வித்தியாசப்பட்ட குர்ஆன் வசனங்களை சான்றுகளுடன் களத்தில் வையுங்கள்!

அதாவது, ''ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தின் படி'' இந்த ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தையும், +3 +4 இதர மற்றும் கூடுதலான, இதில் இயல்புக்கு மாறான முறை என்ன? என்பதையெல்லாம் சற்று விளக்கிச் சொல்வீர்களாயின் முஸ்லிம்களும் புரிந்து கொள்வார்கள், விளக்குவீர்களா...?

சம்பந்தப்பட்ட பதிவில், நீங்கள் சரித்திரங்களைத் திரித்துள்ளீர்கள். ஆதாரங்களுடன் அடுத்து சந்திப்போம்.

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Wednesday, September 10, 2008

இது துவக்க அடிதான்!



அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும் என்பார்கள். தினச் செய்தியை மக்களின் கவனத்திற்கு வைக்கும் ஒரு நாளேடு உண்மைச் செய்திகளை மட்டும் அச்சிலேற்ற வேண்டும். செய்திகள் என்ற பெயரில் விஷமத்தை விளம்பரப்படுத்திய தினமலரின் பாஸிசக் கொள்கைக்கு விழுந்த முதல் அடி இது.

- அபூ முஹை

*****

தினமலருக்கு முதல் அடி!

புதன், 10 செப்டம்பர் 2008

கடந்த 01.09.2008 அன்று தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில், உலக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும், அவர்களின் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் வெளியிட்டிருந்த கேலிச் சித்திரத்தை வெளியிட்டிருந்தது.

கொதித்தெழுந்த முஸ்லிம்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டத் தொடங்கினர்.

இது குறித்து விபரமாக இரு தினங்களுக்கு முன்னர் (08.09.2009) தலையங்கம் எழுதி இருந்தோம்.

அத்தலையங்கம், "உப்புப் போட்டுச் சோறு தின்னும் ஒவ்வொரு முஸ்லிமும் இனி, தினமலரை ஒழித்துக் கட்டுவதற்குத் தன்னால் எதுவெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் செய்வான்" என்று முடிந்திருந்தது.

உப்புப் போட்டுத்தான் முஸ்லிம் சோறு தின்னுகிறான் என்பதை உறுதிப் படுத்தும் விதமாக இன்று தினமலருக்கு முதல் அடி விழுந்திருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகங்களில் தினமலரின் இணைய தளம் இன்று முதல் தடை செய்யப் பட்டுள்ளது. தினமலர் விதைத்த வினைகளின் அறுவடையைத் தான் தடை செய்யப் பட்டப் படத்தில் பார்க்கின்றீர்கள்.

இது தொடக்கம்தான் ...

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Monday, September 08, 2008

மத பயங்கரவாத நாளேடு!

திருந்தாத தினமலர் இருந்தென்ன..?

திங்கள், 08 செப்டம்பர் 2008

"ஏழை மக்களுக்கு சுகாதாரக் காப்பீடு" என்ற தலைப்பில் கடந்த ஆண்டு 06.10.2007இல் தினமலர் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அச்செய்திக்கு எவ்விதத் தொடர்புமின்றி அச்செய்தியோடு ஒரு படம் இணைக்கப் பட்டிருந்தது. அது, சர்ச்சைக்குரிய டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் இதழில் வெளியான கேலிச்சித்திரங்களில் ஒன்றாகும். டென்மார்க் கேலிச்சித்திரங்கள் அப்போது அதிகம் அறியப் படாததால் அது கவனம் பெறாமல் போயிற்று. தினமலரின் இந்தத் திட்டமிட்ட எழுத்து வேசித்தனம் நடந்தது கடந்த ஆண்டின் ரமளானில் என்பது இங்கு நினைவு கூரத் தக்கது.

முஸ்லிம்கள் இவ்வாண்டின் புனித மாதமான ரமளானை மகிழ்வுடன் தொடங்க முயன்றபோது அவர்களது மகிழ்ச்சியைக் குலைத்து அவர்களுக்கு வருத்தத்தையும் சீற்றத்தையும் ரமளான் பரிசாக அளித்திருக்கிறது தினமலர் நாளிதழ்.

முஸ்லிம்கள் ரமளான் நோன்பைத் தொடங்கிய 01.09.2008 நாளிட்ட தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில், முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் அவர்களின் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் வெளியிட்டிருந்த இன்னொரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டது.

கொதித்தெழுந்த முஸ்லிம்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டத் தொடங்கினர்.

கேலிச் சித்திரம் வெளியான அன்று மாலை வேலூரை அடுத்த மேல்விஷாரத்தில் முஸ்லிம்கள் மறியல் செய்தனர். தொடர்ந்து, வேலூரில் உள்ள தினமலர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்ததால் வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வேலூர் தினமலர் அலுவலகம் முன்பு 02.09.2008 காலையில் குவிந்து போராட்டத்தைத் துவக்கினர்.

காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலூர்-பெங்களூர் சாலைப் போக்குவரத்து முற்றிலும் சீர்குலைந்தது.

"கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் நபிகள் நாயகம் பற்றிக் கேலிச் சித்திரம் வெளியிட்டவர்களைக் கைது செய்ய வேண்டும்" என்றும் "இந்து-முஸ்லிம் இடையே பகையைத் தூண்டிவிடும் தினமலர் ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும்" என்றும் ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம்கள் கோஷமிட்டனர்.



வேலூர் மாவட்ட ஆட்சியர் தர்மேந்திர பிரதாப் யாதவ், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி, மேலாளர் அறிவுச்செல்வம், வட்டாட்சியர் சுகந்தி, மாவட்டக் காவல்துறை துணை மேலாளர் ராமதாஸ் ஆகியோர் அங்கு வந்து, போராட்டம் நடத்தியவர்களைக் கலைந்து போகச் சொன்னார்கள். ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம்கள் மறுத்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தடியடியில் பலர் காயமடைந்தனர்.

"முஸ்லிம்களை இழிவுபடுத்தும் நோக்கில் திட்டமிட்டுக் கேலிச் சித்திரம் வெளியிட்ட"தைக் கண்டித்து, சேலத்தில் தமுமுகவினர் 02.09.2008 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். "தினமலர் பத்திரிகையைத் தடை செய்ய வேண்டும்" என்று அவர்கள் கோஷமிட்டனர். தமுமுக தலைமையேற்று சேலத்தில் நடத்திய தினமலர் எதிர்ப்புப் போராட்டத்தில், 28 பெண்கள் 294 கைது செய்யப் பட்டனர்.

மதுரையில் மனிதநீதிப் பாசறையும் தமுமுகவும் இணைந்து போராட்டத்தில் குதித்தனர். தங்களின் எதிர்ப்பைக் காட்டும் முகமாக தினமலர் நாளிதழை முஸ்லிம்கள் தீயிலிட்டுப் பொசுக்கினர். ததஜவினர் 04.09.2008 இல் மதுரையிலும் சென்னையிலும் 06.09.2008 இல் கோவையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சியில் தமுமுக தினமலரை எதிர்த்து முற்றுகைப் போராட்டத்தை நடத்தியது. தமுமுக, மனிதநீதிப் பாசறை, ஜாக், சிறுபான்மை உதவி அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து 04.09.2008 இல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இவ்வளவும் நடந்து முடிந்த பின்னர் முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டத்துக்கும் போராட்டத்துக்கும் அறவே தொடர்பில்லாத சில சங்கங்களின் தலைவர்களை தினமலர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து, அமர வைத்து வெறும் ஒரு 'வருத்தத்தை' மட்டும் தெரிவித்து, பிரச்சினை முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் தினமலர் ஆசிரியர்.

ஒன்று இரண்டு என்றில்லாமல் பல திக்குகளிலிருந்தும் தினமலருக்கு ஆப்புகள் சீவப் படும் வேலை மும்முரமாகத் தொடங்கி விட்டது.

அரிப்பெடுக்கும்போது தலையைக் கொள்ளிக்கட்டையால் சொரிந்து கொள்ளும் முட்டாள் குரங்கைப் பற்றி உவமை கேள்விப் பட்டிருக்கிறோம். இதே கேலிச் சித்திரம், டென்மார்க் என்ற ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே அசைத்துப் போட்டிருக்கும்போது, ஓர் அற்ப நாளிதழான நாம் எம்மாத்திரம்? என்பதைக் கொள்ளிக்கட்டையைக் கையிலெடுக்கும் முன்னர் தினமலர் யோசித்திருக்க வேண்டும்.

முஸ்லிம் விரோதப் போக்கை முழுதுமாக விட்டொழித்து முற்றாகத் திருந்தாதவரை உப்புப் போட்டுச் சோறு தின்னும் ஒவ்வொரு முஸ்லிமும் இனி, தினமலரை ஒழித்துக் கட்டுவதற்குத் தன்னால் எதுவெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் செய்வான். முடிவு தெரியும்போது அதை வேறு நாளிதழ்களில்தான் தேடவேண்டியிருக்கும்.

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Sunday, September 07, 2008

தினமலரைப் புறக்கணிப்போம்!



சமூக நல ஆர்வலர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

இந்தியா சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்திய இறையாண்மைக்கும் பன்முக சகிப்புத்தன்மைக்கும் கேடு விளைவித்து, மக்கள் ஒற்றுமைக்கு உலை வைக்கும் விதமாக மதசார்பற்ற நாட்டில் வர்ண ஆட்சியை அமைக்கும் சூழ்ச்சியோடு சங்கபரிவாரம் தேச விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு அரசு, அதிகாரம், காவல், இராணுவம், ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் காங்கிரஸ் முதலான அனைத்து கட்சிகளிலும் ஊடுருவியுள்ள சங்கபரிவாரத்தினர் பலவகைகளிலும் உறுதுணை புரிந்து வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் மதவெறியைத் தூண்டிவிட்டு கலவரங்களை ஏற்படுத்தி மக்களிடம் நிலவும் மனிதநேயத்தைச் சீர்குலைத்து வருகின்றனர்.

1995 -க்கு முன்பு வரை இந்தியாவின் வட மாநிலங்களில் மட்டும் மையம் கொண்டிருந்த இந்தப் பார்ப்பன மதவெறி செயல்பாடுகள் தற்பொழுது தென்னகத்திலும் குறிப்பாக தமிழகத்திலும் படுவேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளன. இதற்கான அடையாளமாக கோயம்புத்தூர் படுகொலைகள், தென்காசி குண்டுவெடிப்புகளைக் கூறலாம். இதற்காகச் சங்கபரிவாரத்தின் அறிவிக்கப்படாத தமிழக ஏஜண்டாக ஊடகத்துறையில் தினமலர் எனும் பார்ப்பன தினசரி ஈடுபட்டு வருகிறது.

எங்காவது ஒரு மூலையில் காவல்துறையால் அநியாயமாகப் பழி சுமத்தப்பட்டு ஒரு முஸ்லிம் கைது செய்யப்பட்டு விட்டால், ஊசி, நூல், வயர் துண்டு, சுத்தியல், ஆணி போன்ற அதி பயங்கர ஆயுதங்களின் பட்டியலை முகப்புப் பக்கத்தில் பிரசுரித்து "இஸ்லாமிய தீவிரவாதி" என்ற பதத்தைத் தமிழக மக்களின் மனதில் ஆழப்பதிய வைத்தப் பெருமை தினமலருக்கு உண்டு. பிள்ளையார் ஊர்வலம் நடக்கும் வேளைகளில் சமூக விரோதிகளால் திட்டமிட்டுச் செய்யப்படும் கலவரங்களைக் கூட, காவல்துறையும் பதிவு செய்யாத "அருகிலுள்ள பள்ளிவாசலில் இருந்து கல் வீசப் பட்டதால் பதட்டம் ஏற்பட்டது" என திரித்து முஸ்லிம் சமுதாயத்தை மக்கள் மத்தியில் மோசமான சமுதாயமாகச் சித்தரிப்பதற்குத் தினமலரால் மட்டுமே இயலும்.

இவ்வாறு பல ஆண்டுகாலமாக தினமலர் நாளிதழ் செயல்பட்டு வந்தமையைச் சகித்துக் கொண்ட முஸ்லிம் சமுதாயத்தின் நெஞ்சில் சுடுகனலை வைப்பது போன்று, தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் இறைத்தூதரைக் கேலி செய்யும் விதமாக டென்மார்க் பத்திரிக்கை வெளியிட்டு உலகில் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்த கேலிச்சித்திரத்தைச் சம்பந்தமே இல்லாமல் தனது கணினிமலரில் வெளியிட்டுள்ளது. இது ஏதேச்சையாக நடந்த சம்பவம் என்று ஒதுக்கிவிட இயலாது. உலக முஸ்லிம்களின் புனித மாதமாகிய ரமதான் மாதத் துவக்கத்தில் இந்த மதவெறி தாக்கதலை திட்டமிட்டே தினமலர் அரங்கேற்றியுள்ளது.

எதையும் தாங்கும் முஸ்லிம்கள் தங்களின் இறைத்தூதர் இகழப்படுவதை மட்டும் ஒருபோதும் சகிக்க மாட்டார்கள். இதனை நன்றாக உணர்ந்தே இந்நாழிதழ் இத்தகைய கீழ்தரமான செயலில் ஈடுபட்டது. எதிர்ப்பு வந்தபொழுது தவறுதலாக நடந்தது எனக் கூறி தன் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள மட்டுமே முயல்கின்றது. அதற்காகப் பகிரங்க மன்னிப்புக் கேட்கவோ இனி இதுபோன்ற செயல் தன்பக்கமிருந்து நடைபெறாது என்பதற்கு உத்தரவாதமோ அது கொடுக்கவில்லை. தவறு கூட ஒரு பிரசுரத்தில் நிகழ்ந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரே நேரத்தில் நான்கு பிரசுரங்களில் அது பிரசுரிக்கப்பட்டது தவறுதலாக நடந்தச் சம்பவமாகப்படவில்லை.

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், சுமூகமாக வாழும் சமூகத்தில் கலகம் விளைவித்து அதன் மூலம் இலாபம் பெற வேண்டும் என்ற சங்கபரிவாத்தின் செயல்திட்டத்தை வலுவான ஊடகம் மூலம் பரப்ப முனையும் தினமலர் பத்திரிக்கையை மேலும் தமிழகத்தில் வளரவிடுவது, தமிழகத்தின் எதிர்காலத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.

செய்த தவறுக்கு நிர்வாகம் காரணமல்ல என்று கூறி வருத்தம் தெரிவித்து நழுவுவது தினமலரின் நிர்வாகச் சீர்கேட்டை பறைசாற்றுகிறது. தினமலரின் மதவெறி செயல்பாட்டை ஒழிக்க, மனித நேயத்தை வளர்க்க சமூக ஆர்வலர்களே முஸ்லிம் சமூகத்தின் இந்த எதிர்ப்புக் குரலுக்கு ஆதரவை அளியுங்கள்.

ஒன்றிணைந்து எதிர்ப்போம், மதவெறியை ஒழிப்போம், மனித நேயம் வளர்ப்போம்!

Friday, September 05, 2008

குர்ஆனில் பிழைகண்ட அசத்தியவான்களுக்கு!

இஸ்லாம் மார்க்கத்தின் இறைவேதம் திருக் ''குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்'' என்று சில பிற மத நண்பர்கள் திருக்குர்ஆனில் பிழையை (!?)க்கண்டு பிடித்துள்ளனர். திருக்குர்ஆனில் சில எழுத்துப் பிழைகள் உண்டு! அந்த எழுத்துப் பிழைகளை திருத்தம் செய்யாமலேயே கால காலமாக குர்ஆனில் நீடிப்பது அதிலும் திருத்தலும் செய்யக்கூடாது என்ற எண்ணத்திலேயே திருக்குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் தொடர்ந்து நீடித்து வருகிறது.

திருக்குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் பற்றி வரும் பதிவுகளில் தெரிந்து கொள்வோம்.

தற்போது, பிற மத நண்பர்கள் ''குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்'' என்று திருக்குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகளுக்கு சம்பந்தமில்லாதவற்றை குறிப்பிட்டுள்ளனர் அவற்றை இங்கு பார்ப்போம்,


குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்

Scribal errors in the Qur'an

கீழ் கண்டவற்றில் (1) என்று உள்ள பத்தியில்(Column) இருக்கும் வார்த்தைகள் இப்போது உள்ள குர்‍ஆனில் உள்ளவைகள் ஆகும். அதே போல (2) என்று உள்ள பத்தியில் இருக்கும் வார்த்தைகள் உண்மையில் அவ்வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்றும் மற்றும் அரபியில் அதனை எப்படி சரிபடுத்தினார்கள் எனபதையும் குறிக்கும்.
(2) (1) (2) (1)


மேலே குறிப்பிடப்பட்ட சில எழுத்து பிழைகள் பற்றி கீழ் கண்ட கட்டுரைகளில் விவாதிக்கப்படுகிறது.

மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 11ல் உள்ள குர்‍ஆன் வசனம் 21:88 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 141, section 3 (a).

மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 15ல் உள்ள குர்‍ஆன் வசனம் 27:21 பற்றிய
விவரங்கள் அறிய படிக்கவும்: page 96f, second last paragraph.

மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 17ல் உள்ள குர்‍ஆன் வசனம் 5:29 ஐ பற்றிய
விவரங்கள் அறிய படிக்கவும்: page 18f and page 133, section (d).

மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 19ல் உள்ள குர்‍ஆன் வசனம் 51:47 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: the middle of page 19 and the last half of page 125.

மேலே உள்ள வார்த்தைகளில் எழுத்துபிழைகள்(Scribal Errors) உள்ளது என்று இபின் கல்தன்(Ibm Khaldun – Classical Scholar) என்பவர் அங்கீகரித்துள்ளார் மற்றும் இவைகள் பிரச்சனைகள்(Problems) என்று ஹமிதுல்லா(Hamidullah – Modern Scholar) என்ற அறிஞரும் அங்கீகரித்துள்ளார்.


பிற மத நண்பர்களே!

விமர்சனம் எதைப் பற்றி என்றாலும் அது அறிவுப்பூர்வமாக நன்கு நீங்கள் அறிந்ததை எடுத்து வைத்து விமர்சனம் செய்யுங்கள், அது வரவேற்கத்தக்கதாக அமையும். நீங்கள் அறியாதவற்றை இது இப்படித்தான் இருக்கும் என்று கோணலாக சிந்தித்து விமர்சிக்காதீர்கள், அது உங்களை கோமாளி பட்டியலில் சேர்த்துவிடும்.

மொழி எழுத்துக்களின் உருமாற்றம்

மொழி எழுத்துக்கள் எல்லாக் காலங்களிலும் ஓர் உருவ அமைப்பில் இருந்ததில்லை.

ஆங்கில எழுத்தின் உருமாற்றங்கள் மற்றும் எழுத்துக்களின் பிற்சேர்க்கையும் அறிய, இங்கு சொடுக்கவும்.

தமிழ் எழுத்துக்களின் உருமாற்றங்கள் படத்தில்:



பண்டைய தமிழ் எழுத்துக்கள் பண்டைய கால மக்களுக்க பழக்கமாகியிருந்தது. இன்று நமக்கு அது குழந்தையின் கிறுக்கலாகத் தோன்றுகிறது. நம் காலத்தில், ''இப்படிக்கு'' என்று எழுதும் போது ''க்கு'' என்பதை முன்பு சேர்த்து எழுதுவோம். ''யானை'' என்று எழுத இந்த ''னை'' யை எழுத மாட்டோம் யானை தும்பிக்கையைத் தூக்கிப் பிளிரும் ஸ்டைலில் யானையின் தும்பிக்கை வடிவோடு ''ன'' வை சேர்த்து எழுதுவோம். இந்த முறை தமிழ் உருமாற்ற எழுத்துக்கள் மறைந்து, எழுத்தில் புதிய உருமாற்றங்கள் தோன்றுகின்றன.

இது எல்லா மொழி எழுத்துக்களுக்கும் உள்ள பொதுவான விதி. எழுத்துரு மாறும் போது சமூகம் அதை எதிர்ப்பதில்லை. பழையன கழிதல் புதியன புகுதல் என எழுத்துருவில் மட்டும் மாற்றங்கள் ஏற்படுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். இன்று நாம் எழுதும் தமிழ் எழுத்துக்கள் நாளை மாறலாம். எனவே எழுத்துக்களில் மாற்றம் ஏற்படுவது தவறைத் திருத்துவதல்ல, எழுத்துருவில் தோற்றுவிக்கும் முன்னேற்றம் என்று சொல்லலாம்.

பிற மத நண்பர்கள் சுட்டியுள்ள படத்தைப் பார்க்கலாம்,



மேலே படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 11ல் உள்ள குர்‍ஆன் வசனம் 21:88 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 141, section 3 (a).


பிற மத நண்பர்கள் குறிப்பிட்டுள்ள, படத்தில் இடதுபுறம் 11 வது வரிசையில் நாம் கட்டம் வரைந்துள்ள வாசகத்தின் உச்சரிப்பு ''நுன்ஜி'' இரண்டு கட்டத்திலும் உள்ள வார்த்தை ''நுன்ஜி'' என்பது சிறிது அரபி அறிந்திருந்தாலும் புரிந்து கொள்ளலாம். இதற்கு பெரிய அரபுப்புலமை பெற்றிருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

ن+ن+ج+ي=ننجي

ந, ன, ண ஆகிய உச்சரிப்புக்கு அரபியில் ن நூன் என்ற உச்சரிப்பில் இந்த ஓர் எழுத்து மட்டுமே உள்ளது. ந, நா, நி, நீ, ன, னா, ணா, னி, னீ, ணி, ணீ தமிழ் எழுத்துக்களில் நெடில் குறில்கள் இடும்போது எவ்வாறு உச்சரிப்புகள் மாறுகிறதோ அதுபோல், நூன் என்ற மேற்கண்ட அரபி எழுத்தில் தேவையான நெடில் குறில்களை இட்டால் ந, ந் நா, நி, நீ, நு. நூ என்ற உச்சிப்பைப் பெறலாம்.

அரபு எழுத்துகளில் இரண்டு நூன், ஒரு ஜீம், ஒரு ய இந்த நான்கு எழுத்துக்களை நெடில் குறிகளுடன் எழுதினால் نُنْجِي - ''நுன்ஜி'' என்ற வாசிக்கலாம். நுன்ஜி என்ற பதங்கள் இடம்பெற்ற திருக்குர்ஆன் வசனங்கள் படத்தில்:

திருக்குர்ஆன், 010:103வது வசனம்



திருக்குர்ஆன் 019:072வது வசனம்



திருக்குர்ஆன் 021:088வது வசனம்



*****

திருக்குர்ஆன் 010:103



திருக்குர்ஆன் 019:72



திருக்குர்ஆன் 021:088



பிறமத நண்பர்கள் எடுத்துக் காட்டியுள்ள படத்தில் 11வது வரிசையில் நாம் வட்டமிட்ட இரண்டிலும் நுன்ஜி என்று சரியான அரபி எழுத்துக்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றுக்கொன்று எழுத்துருவின் மாடல் - ஸ்டைல் பழசே தவிர, புதிய மாடலில் - புதிய ஸ்டைலில் நுன்ஜி என்று குர்ஆன் வசனப் படங்களில் சிவப்பு, கருப்பு வண்ணத்தில் நாம் வட்டமிட்டுள்ள எழுத்துகளுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

இதை அறிவுக் குருடுத்தனமாக - //உண்மையில் அவ்வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்றும் மற்றும் அரபியில் அதனை எப்படி சரிபடுத்தினார்கள்// - என்று விமர்சிக்கும் சத்தியவான் என்ற பெயரில் கயமைத்தனம் செய்யும் அசத்தியவான்கள் உணர வேண்டும். இறை வேதத்தில் கைவரிசையைக் காட்டும் கயமைத்தனத்தை தங்கள் வேதத்தோடு நிறுத்திக் கொள்ளட்டும்.

எங்கே பார்க்கலாம்,

மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 11ல் உள்ள குர்‍ஆன் வசனம் 21:88 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 141, section 3 (a).


உங்கள் படத்தில் 11ம் வரிசையில் உள்ள 021:088வது குர்ஆன் வசனத்தை அரபியில் ஏற்கெனவே இருந்ததை பிற்காலத்தில் என்ன சரிபடுத்தினார்கள்? என்பதை மக்களுக்கு விளக்கி, உங்களை யோக்கியர்கள் என்பதை நிறுவுங்கள் பார்க்கலாம். இல்லையேல் உங்களை இஸ்லாத்திற்கு எதிரான ''வைரஸ்'' பட்டியலில் எழுதிவிடுவார்கள்.

மீண்டும்,

உங்கள் அயோக்கிய அசத்தியவான்கள் குறித்து அடுத்த பகுதியில்...

அன்புடன்,
அபூ முஹை

Monday, September 01, 2008

தினமலரெனும் சாக்கடை

உலக முஸ்லிம்களின் புனித மாதங்களில் ரமதான் மாதமும் ஒன்று. வைகறைப் பொழுதிலிருந்து பகல் முழுவதும் மாலை சூரியன் மறையும் வரை சுமார் 14 மணி நேரம் உண்ணாமல், பருகாமல் தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் இன்னும் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து உண்ணா நோன்பிருந்து முஸ்லிம்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்.

இவ்வாண்டு ரமதான் மாத துவக்கத்தில், இஸ்லாத்திற்கு எதிரான விரோதப் போக்கில் முழு வீச்சாக ஈடுபடும் பார்ப்பனீய சண்டாள தினமலர் எனும் கழிசடை நாளேடு முஸ்லிம்களை பயங்கரவாதியாக சித்திரம் வரைந்து தமது பாஸிச கொள்கையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தக் கழிசடை நாளேட்டின் செயல்பாடுகள் நமக்கு பன்றிகளை நினைவுபடுத்துகிறது. எவ்வளவு நல்ல நீர் இருந்தாலும் துர் நாற்றம் நிறைந்த சாக்கடையில் புரண்டு சுகம் அனுபவிப்பதே பன்றியின் குணமாகும். இன்று திருந்திவிடும், நாளை திருந்தும் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் சாக்கடையில் புரளும் பன்றியின் இயல்பு மாற்றத்திற்குரியதல்ல என்பது போல் தினமலரெனும் கழிசடை நாளேட்டின் இயல்பும் மாற்றத்திற்குரியதல்ல.

எவரும் தீவிரவாதிகளாகப் பிறப்பதில்லை, தினமலர் போன்ற கழிசடை பார்ப்பனீயர்களால் தீவிரவாதிகள் உருவாக்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் குறித்த செய்திகளை தவறாது திரித்து எழுதும் இந்தக் கழிசடை நாளேடுக் கும்பலுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

- அபூ முஹை


மீள் பதிவு,

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் புனிதமிகு ரமலான் மாதம் தொடங்கியிருக்கும் இன்று, மத வேறுபாடு பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களும் முஸ்லீம்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டிருக்கும் இந்த நல்ல வேலையில், பார்ப்பன வெறி பிடித்த தினமலர் நாளிதழ் மட்டும் தனது முஸ்லீம் விரோத போக்கை சற்றும் சளைக்காமல் மேற்கொண்டுள்ளது. பல இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் கூட பெயரளவுக்காவது இந்த ரமளான் மாதம் தொடங்கியதன் நிமித்தம் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்திருக்கும் சமயத்தில் தினமலர் மட்டும் தனது விஷமத்தனத்தை சில உள்நோக்கங்களுடன் மேற்கொண்டுள்ளது என்பது தான் மிகவும் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.

குறிப்பாக பொது மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை ஊட்ட வேண்டும் என்ற ஒரு பாசிச எண்ணத்துடன் இந்த நேரத்தில் இந்த விஷமக் கார்ட்டூனை வெளியிட்டு தனது அரிப்பைத் தீர்த்துக்கொண்டுள்ளது.

இன்று வேலூரிலிருந்து வெளிவந்த தினமலர் நாளிதழின் இலவச பதிப்பான கம்ப்யூட்டர் மலரின் 12ம் பக்கத்தில், வேண்டும் என்றே கட்டுரைக்கும் தலைப்பிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல், உள்நோக்கத்துடன் 'சினிமா பார்க்க ஒரு வெப்சைட்' என்று தலைப்பிட்டு பல சர்ச்சைகளை ஏற்படுத்திய ஒரு கார்ட்டூனையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஒரு முஸ்லீமின் தலைப்பாகையின் மேல் வெடிகுண்டின் திரி பற்ற ஆரம்பிப்து போல் உள்ள அந்த சர்ச்சைக்குரிய கார்ட்டூனை போட்டு தனது முஸ்லீம் விரோத சிந்தனையை இணம் காட்டியுள்ளது.

இப்பொழுது ஒரிசாவில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வ வெறியர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் கொலை வெறித்தாக்குதல்களை மறைத்து, அதை விட்டும் பொது மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் நோக்கத்துடன் இந்த கார்ட்டூன் வெளியிடப்பட்டிருப்பதாக பல சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஊடகங்கள் தங்கள் கைவசம் இருக்கின்றது என்ற காரணத்திற்காக எதை வேண்டுமானாலும் எழுதி வெளியிடலாம் என்ற துரோக எண்ணத்துடன் களம் இறங்கி இருக்கும் தினமலர் நாழிதளுக்கு எதிராக நாம் ஒவ்வொருவரும் எழுதுகோல் ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றோம் என்பதை உணர வேண்டும். இனிமேலும் உண்டோம் உறங்கினோம் என்றில்லாமல் நம்மால் இயன்ற அளவு இந்த மீடியாக்களின் பக்கம் கவனம் செலுத்தவேண்டும். நாம் ஒவ்வொருவரும் நமது முழுபலத்தையும் பிரயோகித்து இந்த மீடியாக்களின் பக்கம் கவனம் செலுத்தினால் வெற்றி வெகுதூரத்தில் இல்லை... என்பதை புரிந்து செயல்படுவோம்.

நன்றி: அதிரை எக்ஸ்பிரஸ்

Tuesday, August 19, 2008

தகாதவர்கள் கையில் ஊடகங்கள்!

ஊடகங்களில் தொடரும் தனிமனிதத் தாக்குதல்கள்

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008

ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றத் தக்கவை ஊடகங்கள் என்றால் மிகையில்லை. ஆனால், அவையே தகாதவர்களின் கரங்களில் சிக்கும்போது விளைவு படுமோசமடைவதையும் மறுப்பதற்கில்லை.

ஒரு சமுதாயம் முன்னேற்றம் பெறுவதற்கும் தலைநிமிர்ந்து நடப்பதற்கும் அச்சமுதாயத்தின் இளவல்கள்தாம் பெரும் பங்காற்றக் கூடியவர்கள். அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்தினால் சாதித்துக் காட்டுவார்கள். அவர்களை நெறிப் படுத்தத் தவறினால் தங்களுக்கும் தம் தலைவர்களுக்கும் தம் சமுதாயத்திற்கும் அவர்களால் விளையும் தீங்குகள், அவமானங்கள் எல்லை மீறிவிடும்.

காட்டுப்பாடற்ற இணைய வசதியான மின்னஞ்சல் என்ற ஊடகம் இயக்க வெறிபிடித்த இளைஞர்களிடம் சிக்கியபோது தம்மை மறந்தனர்; தரம் தாழ்ந்தனர். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் சில முஸ்லிம் இயக்கங்களின் இளவல்களின் கரங்களில் மின்னஞ்சல் வசதி சிக்கிப் படாத பாடுபட்டது. மாற்றி மாற்றித் தூற்றிக் கொள்வற்கும் அவற்றைப் பெறுபவரது அனுமதியின்றிப் பலருக்கும் அனுப்பி வைப்பதுமாக ஃபித்னாக்களைப் பரப்புவதில் இயக்க இளவல்கள் படு உற்சாகத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது நமக்குக் "குரங்கு கையில் பூமாலை" பழமொழிதான் நினைவுக்கு வந்தது.

நிலைமை மாறுதலடைந்தது; அதாவது மிக மோசமடைந்தது! இலவச வலைப்பூக்கள் இணையத்தில் கிடைக்கத் தொடங்கியதிலிருந்து இளவல்கள் ஆளுக்கொன்றாய் எடுத்துக் கொண்டு, ஷைத்தானின் குணங்களை ஆவணப் படுத்தத் தொடங்கினர்.

இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கும் கொள்கை விளக்கங்களுக்கும் அருமையாகப் பயன் படத்தக்க வகையில் அல்லாஹ் வழங்கியுள்ள அற்புதமான ஊடகங்களான மின்னஞ்சலையும் வலைப்பூக்களையும் "முகத்திரையைக் கிழிப்போம்", "தோலுரித்துக் காட்டுவோம்", "வேஷத்தைக் கலைப்போம்" போன்ற கொள்கை(?) முழக்கங்களோடு கட்டற்ற இணைய வசதியை எதிர்க் கருத்துக் கொண்டவர்களை நோக்கி இளவல்கள் திருப்பினர். தாக்குதல்-எதிர்த் தாக்குதல் ஆகிய பாவங்களில் சிந்தனையைச் செலவு செய்து, தங்களது பொன்னான நேரத்தை வீணடிப்பதில் வீறு கொண்டு எழுந்தனர்.

"இளவல்களின் ஆர்வக் கோளாறுக்குத் தலைவர்கள் என்ன செய்வார்கள்?" என்று நாம் நல்லெண்ணம் கொண்டிருந்ததைக் கடந்த 17ஆம் தேதி (17.08.2008) இரவு விண் தொலைக்காட்சி நிகழ்ச்சி உடைத்துப் போட்டது.

ரமளான் பிறை, ஈதுப் பெருநாள் ஆகியவற்றுள் மாற்றுக் கருத்துகள் கொண்டிருக்கும் ஓர் அமைப்பின் நிர்வாகிகளை, "இறையச்சம் அற்றவர்கள்", "கருத்தில் தெளிவில்லாதவர்கள்", "தனித்துக் காட்டுவதற்காகத் தவறுகளைச் செய்யச் கூடியவர்கள்" என்றெல்லாம் அவைப் பண்பாடுகளை மறந்து நிகழ்ச்சி நடத்தியவர்கள் திட்டித் தீர்த்தது மட்டுமின்றி, எதிர்க் கருத்துக் கொண்டவர்களின் உள்ளங்களுக்குள் ஊடுருவிப் பார்த்ததுபோல் "உள்நேக்கம் தெரிகிறது" என்றார்கள்.

உதிரத்தை வியர்வையாக்கிக் காசு சம்பாதித்து அனுப்புபவனிடம் ஓயாமல் நிதி வேண்டிக் கோரிக்கை வைப்பவர்கள், அந்தக் காசு எதற்காகச் செலவிடப் படவேண்டும் என்பதைச் சற்றே சிந்தித்துப் பார்த்து, தங்களது கருத்துகளைச் சான்றுகளின் அடிப்படையில் வலியுறுத்துவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்துகளில் வலுவில்லை என்றால், அதையும் - அதாவது கருத்தை மட்டும் - விமர்சனம் செய்ய வேண்டும்.

அதை விடுத்துத் தனிநபர் தாக்குதலைத் தொலக்காட்சியில் நடத்தித் தங்கள் இளவல்களுக்குப் போலி உற்சாகம் அளிக்க வேண்டாம் என்பது சம்பந்தப் பட்ட இயக்கத் தலைவர்களுக்கு நாம் முன்வைக்கும் வேண்டுகோளாகும்.

அமைப்புகளுக்கு நிதியுதவி செய்பவர்கள் தஃவாவுக்கென்று தருகிறார்கள்; ஒருவரை ஒருவர் தரம் தாழ்ந்து தாக்கிக் கொள்வதற்கல்ல என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும் என்பதை இங்கு அழுத்தமாகப் பதிவு செய்கிறோம். தலைவர்கள் பண்பாட்டைச் சிறிது கைவிட்டால், இளவல்கள் முழுவதுமாகக் கைவிடுவர் என்பதையும் நினைவுறுத்துகிறோம்.

நல்லதை எடுத்துச் சொல்வது மட்டுமே நமது கடமை; எடுப்பதும் விடுப்பதும் அவரவர் உரிமை.

அனைத்து நிகழ்வுகளையும் தீர்ப்புக்காகக் கணக்கெடுத்து வைப்பது அல்லாஹ்வின் தனியுரிமை. இதை உணர்ந்து செயல் பட்டால் அனைவர்க்கும் பெருமை!

"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதியை நிலைநாட்டுவதற்கு நீங்கள் சாட்சியாளர்களாக இருங்கள். ஒரு கூட்டத்தார் மீது உங்களுக்கிருக்கும் வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்டக் கூடாது. நீதி செய்வீர்; அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள்! நீங்கள் செய்பவை அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிந்தவனாவான்" (அல்-குர் ஆன் 005:008).

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Monday, August 11, 2008

இஸ்லாத்தை மறைத்தல்

இஸ்லாம் மறைக்கப்படாத, மறைக்கக்கூடாத, மறைக்க முடியாத மார்க்கம். இறுதி வேதம் திருக்குர்ஆன் மற்றும் குர்ஆனுக்கு விளக்கவுரையாக இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மறைக்கப்படாத வாழ்க்கை குறித்த அறிவிப்புகளும் எவரும் எளிதில் நெருங்கும் அளவுக்குத் திறந்த நூல்களாகவுள்ளது. இணைய வசதி உள்ளவர் விரல் நுனியின் சொடுக்கில் தேவைப்படும் திருக்குர்ஆன் வசனங்களையும், நபிவழி அறிவிப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இறை மார்க்கம் இஸ்லாத்தை முஸ்லிம்கள் மறைத்தார்கள் என்று கூறுவது ஒன்றும் அறியா அப்பாவித்தனமாகும். இவ்வளவு வெளிப்படையான மார்க்கத்தை மறைத்திடவும் முடியாது. ஒன்றை மறைத்தல் என்று சொன்னால் அது யாருக்கும் கிடைக்கவேக்கூடாது. மறைத்து விட்டார்கள் என்று சொல்பவர்கள் மறைத்தது கிடைக்கப் பெற்றதால் தான் மறைத்து விட்டார்கள் என்று சொல்ல முடியும். எனவே மக்களின் பகிரங்கப் பார்வையில் உள்ளதை யாரும் மறைக்க முயலமாட்டார்கள்.

எவரும் எளிதில் அணுகும் வகையில் வெளிப்படையாக இருக்கும் இஸ்லாத்தை, முஸ்லிம்கள் மறைத்து விட்டனர் என்ற பிற மத நண்பர்களின் குற்றச்சாட்டு தவறானது!


(அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)

முன்னுரை: இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று முஸ்லீம்கள் ஏகமாக சொல்கிறார்கள். ஆனால், முகமது மற்ற நாட்டு மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களே போதும், நமக்கு இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதை அறிந்துக்கொள்வதற்கு. மற்ற நாட்டு மன்னர்களுக்கு முகமது கடிதங்கள் மூலம் அழைப்பு விடுத்தார், அபுமுஹை அவர்கள் அக்கடிதங்களின் தமிழ் மொழியாக்கத்தை பதித்துள்ளார். இக்கடிதங்களை ரஹீக் என்ற புத்தகத்திலிருந்து பதித்ததாக, அபுமுஹை அவர்கள் குறிப்பு எழுதியுள்ளார்கள்.

இக்கட்டுரையில் நாம் கீழ் கண்ட இரண்டு விவரங்களைக் காணப்போகிறோம்.

1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்.

2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?


(இஸ்லாம் வளால் பரவிய மார்க்கமா? என்பதுப் பற்றி அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.)

மார்க்கத்தை மறைத்தல்

இஸ்லாத்தை மறைப்பது குறித்து இஸ்லாம் வன்மையாகக் கண்டித்துள்ளது. முஸ்லிம்கள் சத்தியத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை.

''அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.'' (திருக்குர்ஆன், 002:042)

''நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் உண்மையுடன் உம்மை நாம் அனுப்பியுள்ளோம். நரகவாசிகளைப் பற்றி உம்மிடம் கேட்கப்படாது'' (திருக்குர்ஆன், 002:119)

இறைவன் உண்மையுடன் அனுப்பிய இஸ்லாமியத் தூதுத்துவத்தை முஸ்லிம்கள் மற்றவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை. எவன் என் மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும். (புகாரி)

உண்மையை மறைக்கக்கூடாது!

உண்மையுடன் பொய்களையும் சேர்க்கக்கூடாது!

உண்மையை எடுத்துக்கூறி மக்களை எச்சரிக்க வேண்டும்!

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களைக் குறித்து அறிந்த ஒரேயொரு செய்தியையும் மற்றவருக்கு எடுத்துச் சொல்லிட வேண்டும்!

முக்கிய கவனத்திற்கு: நபியவர்கள் கூறாததை கூறியதாகவும், கூறியதை கூறவில்லை என்றும் நபி (ஸல்) அவர்களின் மீது வேண்டுமென்றே பொய்யுரைப்பவன் நரகத்தில் தன் இருப்பிடத்தைச் சித்தப்படுத்திக்கொள்கிறான்! என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை முன் வைத்துள்ளது இஸ்லாம்.

எதை வேண்டுமென்றே மறைக்கக்கூடாது என்று இஸ்லாம் எச்சரிக்கின்றதோ, அதைக் குறித்து ''இஸ்லாமிய அறிஞர்கள் வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்தார்கள்'' என்ற பிற மத நண்பர்களின் விமர்சனம் மிகவும் பரிதாபத்திற்குரியதாகவுள்ளது.

ஓமன் நாட்டு அரசனுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-8

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, அல் ஜுலந்தாவின் மகன்களான ஜைஃபர் மற்றும் அப்துக்கு எழுதுவது. நேர்வழியை பின்பற்றுபவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! நான் உங்களிருவருக்கும் இஸ்லாமிய அழைப்பு விடுக்கின்றேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள். நான் மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். உயிருடன் இருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்கும், அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு நிச்சயம் வேதனை உண்டு என்பதை அறிவிப்பதற்கும் அல்லாஹ் என்னைத் தூதராக அனுப்பியிருக்கின்றான். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.''

ஓமன் நாட்டு மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதத்தின் மேற்கண்ட தமிழ் மொழிபெயர்ப்பு மூலமொழியிலிருந்து நேரடியாக தமிழுக்கு மொழிபெயர்த்தது. தமிழில் மொழிபெயர்க்கும் போது இஸ்லாமிய அறிஞர்கள் வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்தார்கள் என்று பிற மத நண்பர்கள் விமர்சிக்கும் நபியவர்களின் கடிதம் இதுதான்.

இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்தார்கள் என்று பிற மத நண்பர்கள் குற்றப்படுத்துவது மூலமொழி அரபியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து, பின்னர் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குத் தழுவியதாகும். ஆங்கிலமும், தமிழும் வருமாறு

//ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம்

"Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom."

ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம் - தமிழாக்கம்

நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்! இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன்(தீர்க்கதரிசி) ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை(POWER) உனக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உன் வலிமை(POWER) அழிக்கப்படும். என் குதிரைகள் உன் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உன் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்.//

பிற மத நண்பர்கள் ஆங்கிலத்தை தமிழில் மொழிபெயர்த்தது சரியா? என்பது வாதமல்ல. ஏனெனில் நபியவர்கள் ஆங்கிலத்தில் கடிதம் எழுதி அனுப்பவில்லை! ஆங்கிலம் ஒரு மொழிபெயர்ப்புதானே தவிர, ஆங்கிலம் மூலமொழி அல்ல. அரபியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திருந்து தமிழ், இவ்வாறு மொழிபெயர்ப்பிலிருந்து மொழிபெயர்க்கும்போது மூலமொழியில் சொல்லப்பட்ட கருத்தில் சிதைவு ஏற்படும்.

அதற்காக மொழிபெயர்ப்பு கூடாது என்று நாம் சொல்லவில்லை. விவாதம் என்று வந்தால் மொழிபெயர்ப்பில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளில் ''எது சரி?'' என்பதை மூலமொழியோடு ஒப்பிடுவதே முறையாகும். அண்டை நாட்டு அரசர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதிய அரபிமொழி கடிதத்தை இஸ்லாமிய அறிஞர்கள் தமிழுக்குத் தழுவிய கடிதமும், இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்கள் மூன்றாம் மொழி தமிழுக்குத் தழுவிய கடிதமும் மேலே இடம் பெற்றுள்ளன.

இங்கு,

''இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்க்கும் போது வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து விட்டார்கள்'' என்று கூறும் பிற மத நண்பர்கள், தங்கள் விமர்சனத்தை உண்மைப்படுத்த, இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்த வார்த்தைகள் எது? என்பதை மூலமொழியிருந்து எடுத்துக்காட்ட கடமைப்பட்டுள்ளனர்.

பிற மத நண்பர்களின் இன்னொரு கேள்வி?

முடிவுரை: இஸ்லாமிய நண்பர் அபூமுஹை அவர்களுக்கு, நீங்கள் எழுதிய கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்து எழுதினீர்கள் என்று சொல்லியுள்ளீர்கள். நான் கேட்க விரும்பும் கேள்வி: அப்புத்தகத்திலே இப்படி உண்மையை மறைத்து இஸ்லாம் ஒரு அமைதி மதம் போல காட்டித் தான் எழுதியிருந்ததா? அல்லது நீங்கள் அதனை மறைத்து எழுதினீர்களா?


பிற மத நண்பர்களே!

கேள்வி எழுப்பியதோடு ''மறைத்த உண்மை எது?'' என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருக்கலாமே!

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Thursday, July 31, 2008

யஹ்யாவும், யோவானும் ஒரே பெயரா?

இஸ்லாம் மார்க்கத்தின் இறைவேதம் திருக்குர்ஆனில் முரண்பாடுகளை ஆய்வுக்குட்படுத்தும் சில பிற மத நண்பர்கள். திருக்குஆனில் சரித்திரத் தவறைக் கண்டு பிடித்து விட்டதாகக் கூறி சில ஆவணங்களைப் பதிவு செய்துள்ளனர். திருக்குர்ஆனை அருளிய அகிலத்தின் இறைவனை பொய்பித்து விட வேண்டும் என்ற தணியாத தாகத்தில் ஆய்வறிவையும் இழக்கத் தயாராகி விட்டனரோ என்று எண்ணுமளவுக்கு திருக்குர்ஆனில் பிழை தேடும் இவர்களின் ஆய்வு மிகப் பலவீனமாக உள்ளது.

திருக்குர்ஆனில் பிற மத நண்பர்கள் கண்டுபிடித்த சரித்திர தவறு !?

குர்‍ஆனின் சரித்திர தவறு: யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)

முன்னுரை: இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட குர்‍ஆனின் வசனங்கள் பற்றி நாம் சிந்தித்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறோம். குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 1ஐ தொடர்ந்து, இப்போது இரண்டாம் பாகமாக, அல்லா செய்த ஒரு சரித்திர தவறை காணப்போகிறோம்.

குர்‍ஆன் 19:7ல் அல்லா சொல்கிறார்:

குர்‍ஆன் 19:7

'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்).

யஹ்யா ( யோவான் or John ) என்ற பெயர் கொண்ட நபர்களை அல்லா, யோவான் ஸ்நானனுக்கு முன்பு ஒருவரையும் உருவாக்கவில்லையாம். அதாவது, யோவான் என்ற பெயர் கொண்ட ஒருவரும் யோவானுக்கு முன்பு வாழவில்லையாம். இப்படி அல்லா சொல்வதினால், அவருக்கு சரித்திரம் பற்றிய‌ விவரம் தெரியவில்லை என்று
புலனாகிறது. சரித்திரத்தை நாம் புரட்டிப்பார்த்தாலும், மற்றும் பைபிளின் பழையை ஏற்பாட்டை புரட்டிப்பார்த்தாலும், யோவான் (John) என்ற பெயர் கொண்டவர்கள் அனேகர் இருப்பதாக நாம் கண்டுக்கொள்ளமுடியும். குர்‍ஆனில் உள்ள பல பிழைகளில் இதுவும் ஒன்று.


(இங்கு பிற மத நண்பர்கள் விமர்சிக்கும் கரு இதுதான். இத்துடன் பிற மத நண்பர்கள் இணைத்துள்ள கி.மு சான்றுகள் சில கீழே இடம்பெறும்)

முக்கியமான ஓர் அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இயேசு தான் ஈஸா என்று முஸ்லிம்களும், முஸ்லிம் அறிஞர்களும் கூறி வந்தாலும், இயேசு என்ற பெயர் தான் ஈஸா என்பதை திருக்குர்ஆன் ஒப்புக் கொள்ளவில்லை.

''மர்யமின் மகன் ஈஸா'' என்றே திருக்குர்ஆனும் நபிமொழிகளும் குறிப்பிடுகின்றன. மர்யம், ஈஸா இது இடுகுறிப் பெயர்கள். இன்னார் மகன் இன்னார் என ஒருவரை அடையாளப்படுத்துவதற்காக அவர் குழந்தையாக இருக்கும் பொழுது சூட்டப்படும் பெயராகும். இந்த இடுகுறிப் பெயரை எந்த மொழியில் எழுதினாலும் மர்யம், ஈஸா என்றே
எழுத வேண்டும். இல்லையேல் ஆவணங்கள் குழப்பமாகிவிடும்.

''நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்'' (திருக்குர்ஆன், 003:036)

குழந்தை பிறந்ததும் குழந்தையின் தாயாரால் மர்யம் என்று பெயரிடப்படுகிறது.

''அவரது பெயர் மர்யமின் மகன் ஈஸா என்பதாகும்'' (திருக்குர்ஆன், 003: 045)

தாயின் கருவறையில் ஜனிக்கும் முன்னரே இறைவனால் ஈஸா எனப் பெயரிடப்பட்டவர்.

(சற்று வித்தியாசத்துடன், 'அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக' என்று பைபிள் கூறுகிறது)

எல்லாக் குழந்தைகளுக்கும் பெயரிடப்படுவது போல் குழந்தையை அடையாளப்படுத்துவதற்காக மர்யம், ஈஸா என பேரிடப்பட்டார்கள். பெயரின் உச்சரிப்பு மர்யம், ஈஸா என்பதில் திருக்குர்ஆன் பார்வையில் எந்த சந்தேகமும் இல்லை. முந்தைய வேதங்களும் இறைவன் அருளியது என்ற அடிப்படையில் முந்தைய வேதத்தில் மரியம், மரியமின் மகன் ஈஸா என்று பெயரிட்டபடியே திருக்குர்ஆனும் மர்யம், மரியமின் மகன் ஈஸா என்று அழைக்கிறது.

இறைவன் இட்ட ஈஸா என்ற பெயர் பின்னர் இயேசு Jesus என மருவியது. இது ஈஸா என்ற பெயருக்கு மட்டும் ஏற்பட்டதில்லை. (இப்ராஹீம் ஆப்ராஹாம். சுலைமான் சாலமோன் என) பல தீர்க்கத்தரிசிகளின் பெயர்களும் வேறு பெயராக மருவியுள்ளது. (இல்லை என்று மறுப்பவர்கள் தங்கள் வேதத்தின் மூலமொழியிருந்து நிரூபிக்கட்டும்)

ஓர் அசல் பெயர் வேறு பெயராக மருவுவதற்கான உதாரணத்தை பிற மத நண்பர்களின் எழுத்திலிருந்தே எடுத்துச் சொல்ல முடியும்: அல்லாஹ் என்பதை இவர்கள் அல்லா என்றும் முஹம்மது என்பதை முகமது என்றும் குறிப்பிட்டு எழுதுகின்றனர். 'ஹ' வடமொழி எழுத்து என்பதால் அதைத் தவிர்க்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. வடமொழி எழுத்தாக இருந்தும் கிறிஸ்து, ஸ்தானம் என்று குறிப்பிட 'ஸ' எழுத்தை இவர்கள் எழுதுகின்றனர். அல்லாஹ், முஹம்மது இந்தப் பெயர்களை எப்படிச் சிதைத்தாலும் ஒப்பிட்டுப் பார்க்க மூலமொழி இருப்பதால் எதிர்காலத்தில் இவர்கள் எழுதுவது போல் அப்படியே மருவி விடாது. ''யஹ்யா'' என்ற பெயரும் இப்படித்தான்
மருவியுள்ளது வேறு வகையில்.

'ஸகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்). (திருக்குர்ஆன், 019:007)

கருவறையில் ஜனிப்பதற்கு முன்னரே மர்யமின் மகன் ஈஸாவுக்கு பெயரிடப்பட்டது போல் ஸக்கரிய்யாவின் மகனும் கருவறையில் ஜனிப்பதற்கு முன்னரே இறைவனால் ''யஹ்யா'' என்று பெயரிடப்படுகிறார். இதற்கு முன்னர் யஹ்யா என்ற பெயரிட்டவரை நாம் ஏற்படுத்தவில்லை என்றும் மேலதிகத் தகவலை இறைவன் இங்கு குறிப்பிடுகிறான்.
யஹ்யா என்ற பெயருடையவரை இதற்கு முன் நாம் ஏற்படுத்தவில்லை என இறைவன் கூறுவது, முழு மனித குலத்திலும் இதற்கு முன்னர் யஹ்யா என்ற பெயருடையவர் இருந்ததில்லை என்பதைக் குறிக்கின்றதா? அல்லது இதற்கு முன்னர் யஹ்யா என்ற பெயரில் தீர்க்கத்தரிசி யாரையும் நாம் ஏற்படுத்தவில்லை என்று குறிப்பிடுகின்றதா? இதற்கு ஆலு இம்ரான் - 003வது அத்தியாயத்தில் விளக்கம் கிடைக்கிறது.

அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து ''நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகன்) பற்றி நற்செய்தி கூறுகிறான். அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்'' எனக் கூறினர். (திருக்குர்ஆன், 003:039)

ஸகரிய்யாவின் மைந்தர் கருவறையின் ஜனனத்திற்கு முன்பே யஹ்யா என்று பெயரிடப்பட்டு, நபியாகவும் நியமிக்கப்படுகிறார். என இறைவாக்கு நற்செய்தி கூறுவதிலிருந்து, இதற்கு முந்தைய நபிமார்களில் யஹ்யா என்ற பெயரில் தீர்க்கத்தரியை நாம் ஏற்படுத்தவில்லை என்பதே இறைமொழியின் கருத்தாகும். எனவே ''இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" என்ற திருக்குர்ஆன் வசனம் தவறு என்று எதிர் கொள்பவர்கள், ஸகரிய்யாவுக்கு முந்தைய சரித்திரத்தில் யஹ்யா என்ற பெயரில் நபி இருந்ததை நிரூபித்தாக வேண்டும்.

முற்காலத்தில் ''யஹ்யா'' என்ற பெயரில் உள்ளவர்கள் என்று சரித்திரச் சான்றுகள் சிலவற்றை பிற மத நண்பர்கள் வைத்துள்ளனர்.


சரித்திரத்தில் யோவான்(JOHN) பெயர்களைக் கொண்ட நபர்கள்

1) ஜான் ஹிர்கானஸ் John Hyrcanus (Yohanan Girhan):

இவர் கி.மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த "ஹாஸ்மொனியன்" நாட்டு அரச‌னாவார். ஆட்சிகாலம் கி.மு. 134 - 104, மரித்த ஆண்டு : கி.மு. 104. மேலும் விவரங்களுக்கு : பார்க்க John Hyrcanus - Wikipedia John Hyrcanus- Brittanica John Hyrcanus - Jewish Encyclopedia

2) "ஜான்" எஸ்ஸன் - John Essenes:

ஒரு கலகம் செய்த குழுவிற்கு தலைவராக இருந்த "ஜான்" எஸ்ஸன் என்வரைப்பற்றி ஜொஸெபாஸ் சொல்கிறார். "ஜான்" எஸ்ஸன் கி.மு. வில் வாழ்ந்தவர். பார்க்க: "ஜான்" எஸ்ஸன் - John Essenes

3) 1 மக்காபீஸ் 2:1

மக்காபீஸ் என்ற நூல் ( கி.மு 100) சொல்கிறது. மத்ததியாஸ் "ஜானின்" மகன், ஜான் சிமியோனின் மகன். மற்றும் அதிகாரம் 2 வசனம் 2 சொல்கிறது, மத்ததியாஸுக்கு "ஜான்" என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான் என்று. பார்க்க: 1 மக்காபீஸ் 2:1 :மற்றும் 1 மக்காபீஸ் 16:19 ல் கூட ஒரு முறை "ஜான்" என்ற ஒருவரைப்பற்றி சொல்கிறது. பார்க்க : 1மக்காபீஸ் 16:19

மேல் சொல்லப்பட்ட எல்லா "ஜான்" களும், பைபிளின் யோவான் ஸ்நானகனுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யோவானுக்கு முன்பு யோவான் என்ற பெயர் கொண்ட பழைய ஏற்பாட்டு நபர்கள்:
இந்தப்பெயர் "யோகனான்"(எபிரேய மொழியில்-"யோகனான்") என்று பல முறை (27 க்கு அதிகமாக) பழைய ஏற்பாட்டில் வருகிறது. ( பார்க்க 2 இராஜா 25:23, 1 நாளா 3:15,24, 6:9,10, 12:4, 12:12, 26:3, 2 நாளா 17:15, 23:1, 28:12, எஸ்றா 8:12, 10:6, 10:28, நெகே 6:18, 12:13, 12:22,23,42, எரே 40:8 இன்னும் பல இடங்களில்.)


பிற மத நண்பர்களின் இந்த விமர்சனம், திருக்குர்ஆனில் ''யஹ்யா'' குறித்து இடம் பெற்றுள்ள சிறு வசனத்தையும் இவர்கள் முறையாக விளங்கிக் கொள்ளவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. வசனத்தை விளங்காமலேயே தீர்க்கத்தரிசி அல்லாத மற்றவர்கள் பெயரையும் இங்கு குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத
நண்பர்களின் இந்த அநேக சான்றுகளில் எங்கும் ''யாஹ்யா'' என்ற உச்சரிப்பில் உள்ள இடுகுறிப் பெயர் உள்ளதா? என்பது வாசகர்களின் கவனத்திற்கு.

யஹ்யா, யோவான்

பைபிள் புதிய ஏற்பாடு: தூதன் அவரை நோக்கி சக்கரியாவே பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது. உன் மனைவியாகிய எலிசபெத்து உமக்கு ஒரு குமாரரைப் பெறுவாள். அவருக்கு யோவான் என்று பேரிடுவாயாக. (லூக்கா, 1:13)

யாஹ்யாவை யோவான் என்று பைபிள் குறிப்பிடுவதால் யோவானுக்கு முந்தைய காலத்தில் யோவான் என்ற பெயரில் பலர் இருந்துள்ளனர் என்பதைப் பட்டியலிடுவது திருக்குர்ஆனை எதிர் கொண்டதாகுமா? சிந்தியுங்கள்.

தமிழில் இயேசு, ஆங்கிலத்தில் ஜீஸஸ் என்று சொல்லிக்கொண்டால் அது திருக்குர்ஆன் கூறும் ஈஸா என்ற பெயராகிவிடும் என்று வாதிப்பது எப்படித் தவறான வாதமோ அது போன்றே யோவான், ஜான் என்ற பெயர்களை திருக்குர்ஆன் கூறும் யஹ்யா என்ற பெயரோடு ஒப்பிடுவதும் தவறான வாதமாகும்.

நபி (ஸல்) அவர்களின் விண்ணகப் பயணம்,

...நான் அங்கு சென்று சேர்ந்தபொழுது அங்கு யஹ்யா (அலை) மற்றும் ஈஸா (அலை) ஆகியோர் இருந்தனர். அவர்கள் இருவரும் ஒன்று விட்ட சகோதரர்கள். (ஒருவருக்கொருவர் சின்னம்மா பெரியம்மா மகன்கள்) ஜிப்ரீல்(அலை) அவர்கள், 'இது யஹ்யாவும் ஈஸாவும் ஆவர். இருவருக்கும் ஸலாம் சொல்லுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நான் சலாம் சொன்னேன். அவர்கள் இருவரும் ஸலாமுக்கு பதிலுரைத்தார்கள். பிறகு 'நல்ல சகோதரரே!
நல்ல நபியே! வருக!" என்று கூறி (வாழ்த்தி) னார்கள்.
(புகாரி, 3207, 3430, 3887)

யஹ்யா என்ற பெயர் எக்காலத்திலும் யோவான், ஜான் என்று மருவிடவில்லை - மறுமை நாள்வரை யஹ்யா என்ற பெயரே நிலைத்திருக்கும் என்பதை மேற்கண்ட அறிவிப்புகள் உறுதிப்படுத்துகின்றது. யஹ்யா என்ற பெயருக்கு பதிலாக வேறு பெயர்களை ஆவணமாக வைக்கும் உங்கள் விமர்சனத்தில் நேர்மையுள்ளதா?

பிற மத நண்பர்களே! இதை நன்கு சிந்தனையில் பதிவு செய்து, இஸ்லாத்தை விளங்கி விமர்சனம் செய்யுங்கள்!

மொழி பெயர்ப்பு,

பிற மத நண்பர்கள் தமது கருத்துக்கு வலு சேர்க்க திருக்குர்ஆன் 019:007 வசனத்தின் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புகளை வைத்துள்ளனர். மூலமொழி உயிருடன் வழக்கில் இருக்க விமர்சனத்தை மூலமொழியுடன் உரசிப் பார்க்காமல் மொழி பெயர்ப்புகளுடன் ஒப்பிடுவது புத்திசாலித்தனம் இல்லை. யஹ்யா என்ற பெயரை எந்த மொழியில் சொன்னாலும், எழுதினாலும் யஹ்யா என்று தான் சொல்ல வேண்டும், எழுத வேண்டும். யஹ்யாவை ஆங்கிலத்தில் ஜான் என்று மொழி பெயர்ப்பாளர்கள் குறிப்பிட்டால் அதற்கு திருக்குர்ஆன் பொறுப்பேற்க வேண்டும் என்ற அவசியமில்லை.

முக்கியக் கவனத்திற்கு,

திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று தவறானப் பிராச்சாரம் செய்பவர்கள், பைபிளிலிருந்து திருக்குர்ஆன் எவ்வாறு தனித்தன்மையில் வேறுபடுகிறது என்பதை விளங்கிக்கொள்வீர்களா? யஹ்யா என்ற தீர்க்கத்தரிசியின் பெயர் மாறி மருவிப் போனதால் அவருடைய உண்மைப் பெயரைத் திருக்குர்ஆன் தூசித் தட்டி வெளிப்படுத்துகிறது. திருக்குர்ஆன் பைபிளின் நகலாக இருந்திருந்தால் ஸகரிய்யாவின் குமாரரை யோவான் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்!

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Wednesday, July 23, 2008

முஹம்மது நபி பொய்யரா?

இஸ்லாம் எனும் இறை மார்க்கத்தை மக்களுக்குப் போதிக்க வந்த நபிமார்கள் அனைவரும் ''பொய்யர்'' என்றே முத்திரைக் குத்தப்பட்டார்கள். இதற்கு இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விதிவிலக்கல்ல.

பொய்யர்
குறிகாரர்
சூனியக்காரர்
பைத்தியக்காரர்
இட்டு கட்டுபவர்

இவையெல்லாம் வழக்கம் போல் நபி (ஸல்) அவர்களுக்கும் சமகால மக்கள் வழங்கிய பட்டங்கள். முஹம்மது நபி இட்டுக்கட்டுபவராக இருந்திருந்தால் தம்மைப் பற்றிய அறியாமை மக்களின் இந்த அடைமொழிகளை மறைத்திருக்கலாம் என்பது சிற்றறிவுடையோருக்கும் விளங்கும். ஆனால் இறை வேதத்தில் இவை கால காலத்திற்கும் இடம்பெற்றிருப்பது திருக்குர்ஆன் மாற்ற முடியாத, மாற்றத்திற்குள்ளாகாத இறைவேதம் என்பதற்கு சான்றாக
அமைந்துள்ளது.

இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்களின் முனை மழுங்கிய சிந்தனையைப் பார்ப்போம்.

இஸ்லாமிய நபியாகிய முகமது பற்றி, அவர் காலத்து மக்களின்(முஸ்லீமல்லாதவர்களின்) கருத்து என்ன? என்று குர்‍ஆன் சொல்லும் சாட்சியைப் பற்றிய ஓர் அலசல்.

இக்கட்டுரை "Muhammad as Al-Amin (the Trustworthy) How His Enemies Really Viewed Him" என்ற கட்டுரைக்கு மேலதிக விவரங்களுக்காக இணைக்கப்படுகிறது.

முகமது அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, தன் ஊர் மக்களிடம் ஒரு நேர்மையான மனிதராகவும், குற்றமில்லாத மனிதராகவும் பெயர் பெற்று இருந்தார் என்று இஸ்லாமிய தாவா செய்யும் அறிஞர்கள் கூறுவது வழக்கம். இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், முகமது ஒரு நேர்மையானவர் என்றும், குற்றம் குறை இல்லாதவர் என்றும் தன் சமகாலத்து மக்கள் அறிந்து இருந்தார்கள் என்று கூறுவதை நாம் கண்டுயிருப்போம். இன்னும் சொல்லப்போனால், முகமது காலத்தவர்கள் முகமதுவிற்கு "அல்-அமீன் (Al-Amin)" அல்லது "நேர்மையானவர்-(Trustworthy)" என்றும் பெயர் சூட்டி இருந்தனர் என்றும் கூறுவார்கள், இப்படி பலவிதமாக கூறுவார்கள்.

முஸ்லீம்கள் இப்படியெல்லாம் சொல்வதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவர்களின் இந்த கூற்று, கண்களால் கண்டு சாட்சி சொன்னவர்களின் கூற்றின் மீது ஆதாரப்பட்டு இருக்கவில்லை, அதற்கு மாறாக முகமதுவின் மரணத்திற்கு பின்பு ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டவைகளாகும். இன்னும் சொல்லப்போனால், இவைகள் அனைத்தும் முஸ்லீம்களின் கை மற்றவர்களின் மீது ஓங்கி இருக்கும் போது(இஸ்லாமிய அரசர்கள்/கலிபாக்கள் ஆட்சி செய்தபோது) எழுதப்பட்டவைகளாகும், மற்றும் அவர்கள் சரித்திரத்தை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திரும்ப எழுதினார்கள். அந்த கால்த்தில் முஸ்லீம்கள் தாங்கள் எந்த கண்ணோட்டத்தில் முகமதுவின் வாழ்க்கையை படிக்கவிரும்பினார்களோ அந்த நம்பிக்கையின் படி எழுத ஆரம்பித்தார்கள்(The Muslims were pretty much free to read back into the life of Muhammad their specific theological
views and beliefs concerning their prophet.)

முக்கியமாகச் சொல்லவேண்டுமானால், முஸ்லீம்கள் முகமதுவிற்கு கொடுக்கும் இந்த புகழாரங்களுக்கு எதிராக‌ அவர்களின் வேதமே எதிர் சாட்சியாக அமைந்துள்ளது. நாம் குர்‍ஆனை ஆராய்ந்துப் பார்த்தால், முகமது ஒரு உண்மையின் களங்கரை விளக்காகவோ அல்லது ஒரு முழுமையான‌ நேர்மையான மனிதராகவோ இருந்தார் என்று அவரைச் சுற்றியிருந்த மக்கள் கருதவில்லை அல்லது நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை நாம் அறியலாம். அம்மக்களின் சாட்சி முகஸ்துதி செய்வதாக கூட இருக்கவில்லை, குறைந்தபட்சம் சொல்லவேண்டுமானால், முகமதுவிற்கு பிறகு சேகரிக்கப்பட்ட விவரங்களாகிய‌ , முகமதுவை அவரது எதிரிகள் புகழ்வதாக உள்ள விவரங்கள் அனைத்தும் வெறும் கட்டுக்கதைகளாகவும், மாயையாகவும் இருக்கிறது.


நபித்துவ வாழ்வுக்கு முன், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பண்புகள் பற்றி,

மனிதாபிமானம் உடையவர்
அமானிதம் பேணுபவர்
வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவர்
எளியோருக்கும், சிரமத்தில் தவிப்போருக்கும் உதவுபவர்
விருந்தினரை உபசரிப்பவர்
உயர் பண்பு, சிறந்த ஒழுக்கமுடைய நற்பண்பாளர்
''நம்பிக்கையாளர்''

இப்படி உயர் பண்புகளைக் கொண்டவராக நபியவர்கள் திகழ்ந்தார்கள். இது நபியவர்களை அறிந்த மக்காவில் வாழ்ந்த மக்களின் கருத்தாகும். சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் நம்பி ஒப்படைத்தப் பொருட்களைத் திரும்பப் பெற முடியாத அக்காலத்தில் நபியவர்களிடம் கொடுத்துப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படி மக்கள் தமது பொருட்களை நம்பி ஒப்படைத்துத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

ஒரு சம்பவம்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மலைக்குன்றின் மீதேறி, மக்காவின் மக்களையும், மற்றும் மக்கள் தலைவர்களையும் மலையடிவாரத்துக்கு அழைத்தார்கள். அழைத்து, அவர்களிடம் ''இந்த மலைக்கப்பால் உங்களைத் தாக்குவதற்கு ஒரு படை வருகிறது என்று நான் கூறினால் அதை நீங்கள் நம்புவீர்களா?'' என்று கேட்டார்கள். ''ஆம் நம்புவோம்'' என்று அந்த மக்களும் தலைவர்களும் பதிலளித்தனர். (கருத்து) இச்சம்பவத்திலிருந்து மக்களும் தலைவர்களும் - நபித்துவ வாழ்வுக்கு முன் - நபியவர்களை ''உண்மையாளர்'' என்று ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பது தெளிவு.

பொதுவாக, எந்த மனிதரையும் அவரின் இயல்பான நடைமுறை வாழ்க்கையைக் கவனித்து வந்தால் அதைக் கொண்டு அவரின் பண்புகளைக் கணித்து விடலாம். ஒருவரை உண்மையாளர் அல்லது பொய்யர் என்று சொல்வதற்கு அவரின் செயல்பாடுகள் கண் முன்னே நிகழ்கிறது என்பதால் கணிப்பது எளிது.

நபி (ஸல்) அவர்களை ''உண்மையாளர்'' என்று கூறிய அதே மக்கள் பின்னர் ''பொய்யர்'' என்று உரைத்தது நபியவர்களின் ஆன்மீகக் கொள்கையை நோக்கியே தவிர, நடை முறை வாழ்க்கையில் நபியவர்கள் யாரையும் ஏமாற்றிப் பொய்யுரைத்தாகக் கொள்வது தவறு. நபியவர்களை பொய்யர், குறிகாரர், சூனியக்காரர், பைத்தியக்காரர், இட்டுக்கட்டுபவர் என்றெல்லாம் விமர்சனம் எழுந்தது அந்த மக்களின் அறியாமை என்று அடித்து கூறி
விடலாம். ஏனெனில்,

ஓரிறைக் கொள்கை, மறுமை, சுவனம், நரகம், இறந்த பின் உயிர்ப்பித்து எழுவது இது போன்ற தங்களுக்கு அறிவில்லாதவற்றையே அம்மக்கள் பொய் என்று கூறினர். நபியவர்களை பொய்யரென்று கூறிய அதே வேளையில் பொய்யர் என்பதை நிரூபிக்க எவ்வித சான்றுகளையும் சமர்ப்பிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு கொள்கையை நம்பாதது வேறு, அந்தக் கொள்கையை பொய்யென்று உரைப்பது வேறு.
முந்தையதில் அது பற்றிய அறிவு இல்லாததால் அதை நம்பவில்லை. பிந்தையதில் அது பற்றிய எந்த அறிவுமின்றி அதைப் பொய்யென்று பொய்யுரைப்பது. இந்த அறியாமை அன்றைய விமர்சகர்களிலிருந்து இன்று வரை நீடிக்கிறது நாளையும் இது தொடரும்.

(ஓரிறைக் கொள்கை, மறுமை, சுவனம், நரகம், இறந்த பின் உயிர்ப்பித்து எழுவது இவற்றை முஸ்லிம்கள் நன்கு அறிந்து கொண்டு தான் இஸ்லாத்தை நம்பிக்கை கொள்கிறார்களா? என்று இங்கு கேள்வி எழலாம். இவற்றைக் கண் கூடாகக் காண்பதற்கான அவகாசம் இருக்கிறது என்பது தான் இஸ்லாத்தின் பதில்)

தகவல்

நபியவர்கள் கொண்டு வந்த கொள்கையை அறியாமையினால் பொய் என்றும், குறிகாரச் சொல் என்றும், சூனியம் என்றும், பைத்திக்காரத்தனம் என்றும், கட்டுக்கதை என்றும் விமர்சித்த அதே மக்கள் பின்னாளில் நபியவர்களின் முன்னிலையிலேயே அதேக் கொள்கையை உளமாற ஏற்றுக் கொண்டனர் என்பது யாரும் அறியாமல் மறைக்கப்பட்ட வரலாறல்ல.

நபிமார்களைப் பொய்யர் என்று உரைத்தது முஹம்மது நபிக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல. எல்லாக் காலத்திலும், எல்லா மக்களும், எல்லா நபிமார்களையும் நோக்கி ''இவர் பொய்யர்'' என்று கூறினர் என பிறமத நண்பர்கள் வைத்துள்ள திருக்குர்ஆன் வசனமே கூறுகிறது.

இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும். (குர்‍ஆன் 35:4)

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முந்தைய நபியாகிய ஈஸா நபி (அலை) அவர்களையும், அவர்கள் காலத்து மக்கள் ''பொய்யர் சூனியக்காரர்'' என்றே கூறினார்கள்.

அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், 'இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை' என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும். (திருக்குர்ஆன், 005:110)

மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: 'இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும் எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்' என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் 'இது தெளிவான சூனியமாகும்' என்று கூறினார்கள். (திருக்குர்ஆன், 061:006)

இறை வேதமும், இறை வேதத்தை மக்களிடம் அறிமுகப்படுத்தும் இறைத்தூதர்களையும் சுலபத்தில் மக்கள் ஏற்றுக்கொண்டதில்லை. பெண் சுகத்தில் திளைத்தவனிடம் விபச்சாரம் செய்யாதே என்று இறைவனின் கட்டளையைக் கூறினால் அதை அவன் எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டான். தனது இன்பங்கள் பறிக்கப்படுகின்றன என்பதால். மக்கள் மனம் விரும்பாத செய்திகளை இறைத்தூதர்கள் கொண்டு வந்ததால் இறைத்தூதர்கள் இம்சிக்கப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள். முந்தைய நபிகள் கொல்லப்பட்டார்கள் என்ற தகவலோடு ஒப்படும் போது பொய்யர்.. இத்யாதி விமர்சனம் மிகச் சாதாரணம்.

ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்: 'இது இட்டுக் கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை' என்று கூறினார்கள். (திருக்குர்ஆன்,028:036)

இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள் மக்களால் எவ்வாறு விமர்சிக்கப்பட்டார்களோ அதைப் போன்றே இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்)அவர்களும் மக்களால் விமர்சிக்கப்பட்டார்கள். இதில் முஹம்மது நபியை மக்கள் விமர்சித்ததை மட்டும் பிற மத நண்பர்கள் தூக்கிப் பிடிப்பது மழுங்கிய சிந்தனைக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது.

விபரீத சிந்தனை

குர்‍ஆன் என்பது முகமதுவின் வாழ்நாட்களில் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்றும், அதில் சம காலத்து நிகழ்வுகளைப் பற்றிய விவரங்கள் உண்டென்றும் முஸ்லீம்கள் நம்புகின்றனர். மக்காவில் வாழ்ந்த மக்கள் முகமதுவை ஒரு நல்ல நேர்மையான, நம்பத்தகுந்த நபர் என்றுச் சொன்னார்கள் என்று இஸ்லாமிய ஹதீஸ்கள் சொல்லும் விவரங்களுக்கு எதிராக இந்த குர்‍ஆனின் சாட்சி உள்ளது. முஸ்லீம்களின் வேதமாகிய குர்‍ஆன், முஸ்லீம்கள் சொல்வதற்கு எதிராகச் சொல்கிறது, அதாவது முகமதுவின் சமகாலத்து மக்கள் முகமதுவை.

ஒரு பொய்யராகக் கண்டனர்,

அவர் ஒரு ஏமாற்றுக்காரராகக் கண்டனர்,

கட்டுக்கதைகளை இட்டுக்கட்டுபவராகக் கண்டனர்.


இங்கு குறிப்பிட்டிருப்பது பிற மத நண்பர்களின் விபரீத சிந்தனைக்கு மற்றும் ஓர் எடுத்துக்காட்டு. திருக்குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டது நபித்துவம் பெற்ற பின்னர். அதாவது நபியவர்களின் 40ம் வயதில் திருக்குர்ஆன் அருளத் துவங்கியது. முஹம்மது நேர்மையாளர், உண்மையாளர், நம்பிக்கையாளர் என மக்கள் சிலாகித்துக் கூறியது நபித்துவம் பெறுவதற்கு முன்னர். அதாவது நபியவர்களின் 40ம் வயது வரை. இதன் பிறகும் நபியவர்களின் நேர்மையில் எந்தக் குறைவும் ஏற்படவில்லை.

நபித்துவம் பெற்று திருக்குர்ஆன் அருளத் துவங்கிய பின்னரே மக்கள் நபியவர்களைப் பொய்யர் என்று கூறினர் என்றால் இது நபியவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட பின்னர், அவர்கள் கொண்டு வந்த ஓரிறைக் கொள்கையை, நபியவர்களின் நபித்துவத்தைப் பொய் என்றுப் புறக்கணித்தனர் என்று பொருள் கொள்வதில் எதுவும் சிரமம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்,

திருக்குர்ஆன் சொல்வதும் உண்மை.

ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் சொல்வதும் உண்மை.

அன்புடன்,
அபூ முஹை