Thursday, September 29, 2005

வஹி: இறைச்செய்தியும்- அறிவியலும்-13

ஈர்க்கும் பூமி 13


ஏ.கே.அப்துர் ரஹ்மான்

பரந்து விரிந்து கிடக்கும் நமது பூமி மானிட உள்ளங்களில் தட்டை வடிவம் கொண்டிருந்தபோது அது எதன் மீது நிலை பெற்றிருக்கிறது என்ற வினாவும் எழத்தான் செய்தது. இதற்கு விடை காண முயன்ற சில கற்பனை காவியங்களும், சில போதைக் கனவுகளும் நமது பூமியை பன்றியின் மூக்கின் மீது நிற்பதாகக் கண்டன. மேலும் நில கற்பனைகள் நமது பூமியை ஒரு மீனின் வாலின் மீது நிற்பதாகவும் கண்டன. ஆனால் அந்த பன்றியும், மீனும் எதன் மீது நிற்கின்றன எனத் தொடர்ந்து வரும் கேள்விகள் அவர்களில் பெரும்போலோருக்கு அப்போது தேவைப்படவில்லை.

வேதனை என்னவென்றால் இந்த இருபதாம் நூற்றாண்டில் கூட இத்தத்துவங்கள்(?) மானிடர்களாகிய நம்மில் பலரால் வேதங்கள் என்றே போற்றி வழிபடப்பட்டு வருகின்றன என்பதேயாகும்.

எதையும் அறிவியல் நோக்கோடு ஆய்வு செய்யக் கூடியவர்கள் பண்டைக்காலம் தொட்டுக் கிரேக்கத்தில் தோன்றினர். அவர்களில் ஒருவராகிய 'தேலஸ்(Thales கி. மு. 624 - 545) எனும் அறிவியலாளரின் ஆய்வில் நமது பூகோளம் வட்டமான ஒரு வில்லையைப் போன்றது (Just Like a Disk) எனக் கண்டார். அப்போதும் அந்த வில்லை எதன் மீது நிற்கிறது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு அவர் கூறிய பதில் அந்த வில்லை நீரில் மிதக்கிறது என்பதேயாகும். ஆனால் அவருக்குப் பின்னால் வந்த அறிவியலாளர் ஹெக்காடியஸ் - பூமி வில்லை வடிவம் என்பதை ஆதரித்து, ஆனால் அந்த வில்லை வடிவ பூமி தண்ணீரில் மிதக்கவில்லை என்றார். அதே நேரத்தில் நமது பூமி ஆகாயத்தில் எவ்வாறு நிலை பெற்றிருக்கிறது என்பதற்கு அவருக்கு விடையும் தெரியவில்லை. ஆகவே அவரிடம் பூமி எதன்மீது நிற்கிறது எனக் கேட்கப்பட்ட போது அது நான்கு தூண்களின் மீது நிற்கிறது என 'ஜோக்' அடிக்க வேண்டிய நிலைதான் அவருக்கு ஏற்பட்டது.

ஆனால் அகிலங்களுக்கெல்லாம், பேரொளியாய் வந்த சத்தியத் திருமறையாம் தூய குர்ஆனுக்கு இப்படிப்பட்ட 'ஜோக்' அடிக்க வேண்டிய நிலை எதுவும் அவசியமேயில்லை.

ஆகாயங்களும், பூமியும் படைக்கப்பட்டிருப்பதில் இப்படிப்பட்ட தூண்கள் ஏதும் உண்டா? என்ற கேள்விக்குத் திருமறை குர்ஆன் அளிக்கும் பதிலைப் பாருங்கள்! திருமறை கூறுகிறது:

'அவன் (அல்லாஹ் - ஜல்) உங்கள் பார்வையில் படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி வானங்களைப் படைத்துள்ளான்.'(அல்-குர்ஆனின் 31வது அத்தியாயம் ஸூரத்துல் லுக்மானின் 10வது வசனம்).

'உங்கள் பார்வையில் படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி அல்லாஹ்தான் வானங்களை உயர்த்தினான்.' (அல்-குர்ஆனின் 13வது அத்தியாயம் ஸூரத்துல் ரஃதுவின் 2வது வசனம்).

இவ்விரண்டு வசனங்களும் ஆகாயங்கள் எதிலும் கண்களுக்குப் புலனாகும் தூண்கள் எதுவும் இல்லை எனக் கூறுகின்றன. இதிலிருந்து பூமிக்குரிய வானத்திலும் தூண்கள் இல்லை எனத் தெளிவாகிறது. எனவே பூமிக்குரிய வானத்திலும் தூண்கள் இல்லை என்பதால் பூமி தூண்களின் மேல் நிற்கிறது என்ற கூற்று தவறு என்பதே திருமறையின் அறிவிப்பாகும்.

இத்திரு வசனங்களில் காணப்படும் மேலும் ஒரு சிறப்பம்சத்தை கவனியுங்கள். ஆகாயங்கள் படைக்கப்பட்டிருப்பதில் எவ்வித தூண்களும் இல்லை எனவும், எனவே அவை எவ்வித பிடிமானமும் இன்றித் தாமாகவே நிலை நின்று வருகின்றன எனவும் திருமறை கூறவில்லை. மாறாக கண்களுக்குப் புலனாகும் தூண்கள் எதுவும் இல்லை என்றே கூறுகிறது. எனவே இந்த வசனங்கள் ஆகாயங்கள் படைக்கப்பட்டதிலும் அவை உயர்ந்து நிற்பதிலும் கண்களுக்கு புலனகாத ஏதோ பிணைப்பு இருந்து வருகிறது என்பதையே சுட்டிக் காட்டுகின்றன. இதையேதான் நவீன விஞ்ஞான உலகமும் அறிவியல் ஆதாரங்களால் நிரூபித்து நிற்கிறது. (அண்டங்கள் யாவும் அவற்றிலுள்ள பொருட்களும் பேரண்டத்தின் ஈர்ப்பாற்றலால் - Universal Gravitation - தான் நிலை பெற்று வருவதாகத் தொடர் 4 மற்றும் 5ல் கண்டோம்.)

திருமறை குர்ஆனால் மட்டும் இந்த அறிவியலை எவ்வாறு இவ்வளவு துல்லியமாகக் கூற முடிந்தது?. பதினாறாம் நூற்றாண்டு வரை பூகோளம் ஆகாயத்தில் அசைவற்றிருக்கும் ஒரு பொருள் என்றும், எனவே அதைத் தாங்கி நிற்கக் கூடிய பருப்பொருள் - அது நீரோ - தூணோ - பன்றியோ - மீனோ - எதுவாயினும் சரி ஒன்று இருக்க வேண்டும் என்றும் உலகம் பரவலாக நம்பி வந்தபோது, ஏழாம் நூற்றாண்டிலேயே இவைகளை மறுத்து - ஆகாயங்கள் யாவும் நிலை நின்று வருவதன் சரியான அறிவியலை திருமறை குர்ஆனால் மட்டும் எவ்வாறு கூற முடிந்தது?. எனவே இவ்வேதம் மெய்யான இறைவனின் வார்த்தைகளேயன்றி மானிடக் கற்பனையில்லை என்பதை இது ஆதாரப்படுத்தவில்லையா?.

இன்னுமா இவ்வேதம் மானிடச் சிந்தனைத் திறனால் உருவாக்கப்பட்டது எனக் கூற முடியும்?. சிந்திக்க வேண்டாமா?.

சிந்தனைத் திறன் பெற்றவர்களே! அறிவியல் அபிமானிகளே! உங்கள் சிந்தனைத் திறனுக்கு மேலும் மேலும் விருந்தோம்பிக் கொண்டிருக்கும் இத்தூய மறையின் மற்றொரு வசனத்தைக் கவனியுங்கள் திருமறை கூறுகிறது:

'அவன்தான் (அல்லாஹ் - ஜல்) உங்களுக்காக இந்த பூமியைத் தொட்டிலாக ஆக்கினான்.' (அல்-குர்ஆனின் 43வது அத்தியாயம் ஸூரத்துஜ் ஜூக்ருஃப் - ன் 10வது வசனம்).

சத்தியத் திருமறை தனக்கே உரிய உவமான உத்தியுடன் பூகோளத்தின் இயக்கத்தை எவ்வளவு தெள்ளத் தெளிவாக கூறி நிற்கிறது பார்த்தீர்களா?.
பூகோளத்தின் இயக்கத்தை இம்மியும் பிழையின்றிப் புரிந்து கொண்ட இருபதாம் நூற்றாண்டு மனிதர்களாகிய நாம் நமது பூகோளத்தை ஒரு 'ரங்க ராட்டிணத்துடன்' ஒப்பிட்டு கூறினால் அதில் வியப்பேதும் இல்லை. (பூகோளம் சற்றே ஒரு நீள் வட்டமான பாதையில் இயங்குகிறது. ஆனால் ரங்கராட்டிணம் துல்லியமாக வட்ட வடிவத்தில் இயங்குகிறது. எனவே பூகோளத்தை ரங்கராட்டிணத்துடன் ஒப்பிடுவதில் ஒரு சிறு பிழை ஏற்பட்டாலும், உவமானம் என்ற வகையில் அப்பிழை புறக்கணிக்கத் தக்கதே). அதே நேரத்தில் பூகோளம் அசைவற்று நிற்கும் ஒரு பொருள் என்று கருதப்பட்ட காலத்தில், ரங்கராட்டிணம் போன்ற விளையாட்டுப் பொருட்களை மக்கள் அறிந்திராத நிலையில் பூகோளத்தை ஒரு தொட்டிலுக்கு உவமையாகக் குறிப்பிட்டிருப்பது வியப்பிற்கு மேல் வியப்பைத் தருகிறது.

ஒருவர் தொட்டிலை ஆட்டும்பொழுது, தொட்டில் முன்னும் பின்னும் அசைகிறது. அசையும் தொட்டிலின் முன் பக்க எல்லையிலும், பின் பக்க எலவ்லையிலும் வளைவுகள் ஏற்படும். எனவே ஆட்டப்படும் தொட்டில் முன்னும், பின்னும் வளைவுப் பாதையில் இயங்குவதால் தொட்டிலின் இயக்கம் ஒரு நீள் வட்டப் பாதையைத் தோற்றுவிக்கும்.

பூகோளம் தன்னுடைய நீள் வட்டப் பாதையில் இயங்குவதைக் குறிப்பிட இதைக் காட்டிலும் சிறந்த ஜனரஞ்சகமான ஓர் உவமானம் 7-ஆம் நூற்றாண்டில் இருந்திருக்க முடியுமா? என எண்ணிப் பார்த்தால் மேனி சிலிர்க்கவில்லையா?.

பூகோளத்தின் இயக்கத்தை ஏழாம் நூற்றாண்டிலேயே ஒரு தொட்டிலுக்கு ஒப்பிட்டுக் காட்டிய ஒரு நூலை மானிடப் படைப்பு எனக் கூறத் துணிபவர் யாராக இருந்தாலும், அவரை ஓர் அறிவியல் அபிமானியாக அறிவியல் உலகம் எற்காது.

மேலும் கவனியுங்கள்! தொட்டிலொன்றைத் தொங்கவிட வேன்டுமென்றால் கயிறு தேவை. எனவே தொட்டிலோடு ஒப்பிடப்பட பூமிக்கும் ஓர் கயிறு தேவையே! அப்படிப்பட்ட கயிறு ஏதேனும் உண்டா? என அறிவியலாளர்களைக் கேட்டால் அவர்கள் 'ஆம்! உண்டு!' என்றே கூறுகிறார்கள். சூரியனுடைய ஈர்ப்பாற்றல் எனும் கண்ணுக்கு புலனாகாத கயிறுதான் சூரியனிடமிருந்து பூகோளம் விலகிப் போகமால் தொங்க விடப்பட்டதை போன்று தங்க வைத்துள்ளது என்று கூறுகிறார்கள்.

ஆகாயங்கள் யாவற்றிலும் காணப்படும் பருப்பொருட்கள் அனைத்திலும் இதைப்போன்ற ஈர்ப்பாற்றல் செயல் பட்டு வருகின்றது என்றும் இதன் காரணமாகவே அவை யாவும் விலகிப் போகாமல் இயங்கி வருகின்றன என்றும் கூறும்போது சிலருக்கு ஓர் ஐயம் எழக்கூடும். விண்ணகப் பருப் பொருட்கள் அனைத்திலும் ஈர்ப்பாற்றல் செயல்படுகிறது எனில் நமது பூமியிலும் அப்படிப்பட்ட ஈர்ப்பாற்றல் செயல்படுகிறது என்பதே அதன் பொருள். ஆனால் பூமியைத் தவிர ஏனைய, பொருட்களில் ஈர்ப்பாற்றல் உண்டா? இல்லையா? என்பதை நாம் நேரடியாக உணர முடியாத போதிலும் நமது பூமியில் அப்படிப்பட்ட சக்தி ஒன்று இருக்குமானால் அதை நம்மால் உணர முடிந்திருக்க வேண்டும். ஏனெனில் நாம் வாழ்வதே இந்த பூமியில்தான். நாம் இப்போது உயிரோடு இருக்கிறோம். இறந்து போன சடலம் ஒன்று பூமியில் கிடந்தால் அது கிடந்த இடத்திலேயே கிடக்கும். இறந்த உடல் அசைவதில்லை. எனவே இறந்துபோன உடல்களை பூமி ஈர்ப்பதால்தான் அவை பூமியின் மீது தங்கி நிற்கின்றன என யாரேனும் கூறினால் அது மெய்யாகவோ அல்லது பொய்யாகவோ இருக்கலாம். ஆனால் உயிருள்ள மனிதர்களின் நிலை நிலை என்ன?. சடலங்களை ஈர்க்கும் பூமி உயிருள்ளவைகளை ஈர்க்காதா?. உயிருள்ளவர்களையும் பூமி ஈர்க்கிறது எனில், நம்மால் நடக்கவும் ஒடவும், தாண்டவும், குதிக்கவும் முடிகிறதே! இவை யாவும் எப்படிச் சாத்தியமாகும்?.

உயிருள்ளவைகளையும் பூமி ஈர்க்கிறது எனில் நாம் நடக்க, ஓட, குதிக்க, கால்கைள பூமியிலிருந்து தூக்கும்போது நமது கால்களை எந்த ஈர்ப்பாற்றலும் இழுத்துப் பிடிப்பதாக உணரவில்லையே! இது ஏன்?. எனவே பூமிக்கு ஈர்ப்பாற்றல் உண்டு என்பது மெய்தானா?.

அறிவார்ந்த நண்பர்களே! இந்த வினாவைக் கருத்தில் கொண்டு, இதற்கு விடை தேடி இந்த அற்புதத் திருமறையின் பக்கங்களைப் புரட்டுவோம். அது வழங்கிக் கொண்டிருக்கும் தீர்வும் விளக்கமும் விருப்பு, வெறுப்பின்றி உண்மையை ஏற்கத் துணியும் எந்த ஒரு அறிவியல் பற்றாளரையும் தன்பால் ஈர்த்து விடும்: இதுவே மெய்யான இறைவேதம் எனச் சொல்ல வைக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த ஜீவ வசனங்களை பார்க்கும் முன் இங்கு எழுப்பிய வினாவிற்குரிய அறிவியல் விளக்கத்தை முதலாவதாகக் காண்போம்.

உயிரற்றவைகளை பூமி ஈர்க்கிறதா? இல்லையா?. என்பதைப் புரிற்து கொள்ள முடியாத போதிலும் உயிருள்ள நம்மை பூமி நம்மை ஈர்க்கவில்லை எனக் கருதுவது தவறு. உயிருள்ளவைகளையும் பூமி ஈர்க்கவே செய்கிறது. இருப்பினும் உயிருள்ள நம்மால் இதைப் புரிந்து கொள்ள இயலாததற்கு காரணத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் பூமிக்குரியவர்களாகப் படைக்கப்பட்டிருக்கிறோம். ஆகவே நமது இயற்பியல் அமைப்பு (Physical Condition) பூமிக்கேற்ற வகையில் அமைந்துள்ளது. இதன் காரணமாக பூமியின் இந்த ஈர்ப்பாற்றல் ஒரு இழுவிசை போன்று நமது சாதாரண வாழ்வியல் அசைவுகளில் உணரப்படாமல் நம்மைப் பொறுத்தவரை பூமியின் ஒரு அரவணைப்பாகவே உணரப்படுகிறது. நாம் அணிந்திருக்கும் நமது ஆடை ஓர் இதமான அணைப்பாக உணரப்படுகிறது. இதே ஆடையை ஒரு சிட்டுக்குருவியின் மேல் வைத்தால் அது அந்த சிட்டுக்குருவிக்கு ஒரு அணைப்பாக இருக்காது. அந்த சிட்டுக்குருவி பூமியோடு அழுத்தப்படும். இதே நிலைதான் நம்மில் ஒருவர் வியாழனுக்குச் (Jupiter) சென்றாலும் ஏற்படும். ஏனெனில் அங்கு பூமியைக் காட்டிலும் 2.5 மடங்கு அதிகமான ஈர்ப்பாற்றல் செயல் படுகிறது. இந்த ஆடையின் பளுவை ஒரு சிற்றெறும்பின் மீது ஏற்றினால் நிலைமை மேலும் விபரீதமாகும். அந்த எறும்பு பூமியின் மீது நசுக்கப்படும். இந்த நிலைதான் நம்மில் ஒருவர் சூரியனுக்குச் சென்றாலும் ஏற்படும். ஏனெனில் அங்கு நமது பூமியைப் போன்று 28 மடங்கு அதிகமான ஈர்ப்பாற்றல் செயல்படுகிறது.

நாம் நமது ஆடையை ஒரு யானையின் மீது போர்த்தினால் அந்த யானையைப் பொறுத்தவரை இது ஒரு அணைப்பாக உணரப்படாது. அது ஒரு தொடு உணர்வாகத்தான் யானைக்கு இருக்கும். இதே நிலைதான் நம்மில் ஒருவர் நிலவுக்குச் சென்றாலும் ஏற்படும். ஏனெனில் அங்குள்ள ஈர்ப்பாற்றல் நமது பூமியில் இருப்பதைக் காட்டிலும் 6.25 மடங்கு குறைவு.

எனவே பூமிக்குரியவர்களாக, பூமியை ஒரு வீட்டைப் போன்று பயன்படுத்தக் கூடியவர்களாக (பார்க்க அல்-குர்ஆனின் 40வது அத்தியாயம் ஸூரத்துல் முஃமின் 64வது வசனம், 07வது அத்தியாயம் ஸூரத்துல் அஃராஃப் - ன் 10வது வசனம்) படைக்கப்பட்டிருக்கும் நமக்கு பூமியின் இந்த ஈர்ப்பாற்றல் பூமியின் ஓர் அரவணைப்பாகவே உணரப்படுகிறது.

பூமியின் இந்த அரவணைப்பை நாம் உதாரணங்கள் வாயிலாக விளங்கலாம். தந்தை ஒருவர் தம் மைந்தனின் கரத்தைப் பற்றியவாறு கடைத் தெருவில் நடந்து செல்கிறார். கடைத் தெருவை வேடிக்கை பார்த்தவாறு தந்தையோடு மைந்தன் சென்று கொண்டிருக்கும் வரை அவனுக்குப் பிரச்னை எதுவுமில்லை. அதே நேரத்தில் வேடிக்கைப் பார்த்தவாறு அவன் தந்தையிடமிருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் விலகிச் செல்ல முயன்றால் தந்தையின் கரம் உடனே அவனை இழுத்துத் தன்பால் சேர்த்துக் கொள்ளும். அப்போதுதான் தந்தையின் அரவணைப்பில் சென்று கொண்டிருக்கும் மகன் தன் தந்தையின் இந்த அரவணைப்பை இழுவிசையாக உணர்கிறான்.

ஒரு தாயின் மார்போடு அணைக்கப்பட்டிருக்கும் சேயும் இதற்கோர் உதாரணமாகும். தாயின் மார்பில் கிடந்தவாறு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அக்குழந்தையால் மகிழ்ச்சியோடு பொங்க முடியும். அதே நேரத்தில் மகிழ்ச்சி மிகைத்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் அக்குழந்தை தன் தாயின் மார்பிலிருந்து பொங்கியெழ நினைத்தால் உடனே தாயின் கரம் அக்குழந்தையை மேலும் வலுவாக அணைக்கும். அப்போதுதான் அக்குழந்தை தன் தாயின் அணைப்பை ஒரு அழுத்தும் சக்தியாக உணரும்.

இவ்விரு உதாரணங்களைப் போன்றே பூமியின் மீது நடமாடும் உயிருள்ளவர்களின் நிலையும் அமைந்துள்ளது. பூமியின் மீது நடக்க, ஓட, தாண்ட, குதிக்க முயலும் எந்த நபரையும் ஒரு குறிப்பிட்ட தூரம்வரை பூமி அனுமதிக்கும். அப்போது அந்த நபருக்கு பூமி தன்னை இழுப்பதாகவோ அல்லது அந்த இழுவிசை தன்னை பூமியின் மீது அழுத்துவதாகவோ தெரியாது. ஆனால் அதே மனிதன் ஒரு பத்து மீட்டர் உயரத்துக்குக் குதிக்க வேண்டுமென்றோ அல்லது தாண்ட வேண்டுமென்றோ முயன்றால் அந்த பூமி அம்மனிதனை தன்பால் இழுத்து அணைத்துக் கொள்ளும். இதிலிருந்து பூமியின் அணைப்பு எந்த நேரமும் நம்மீது செயல்பட்டுக் கொண்டிருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

தந்தையின் கரத்திலுள்ள மைந்தன் தந்தையுடன் சென்று கொண்டிருப்பதை போல, தாயின் மார்போடு அணைக்கப்பட்ட சேய் தாயோடு சென்று கொண்டிருப்பதைப் போல பூமியோடு அணைக்கப்பட்ட நாம் பூமியோடு சென்று கொண்டிருக்கிறோம்.

இப்போது விவரிக்கப்பட்ட விஷயங்களிலிருந்து பூமியின் ஈர்ப்பாற்றல் இறந்தோர், உயிருள்ளோர் என்ற பாகுபாடின்றி எந்த நேரமும் பூமியின் அரவணைப்பாக நம்மீது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக விளங்கிக் கொண்டோம். இத்தெளிவான அடிப்படையில் பரிசுத்தத் திருமறை புவி ஈர்ப்புச் சக்தியின் (Earth's Gravitation) பயன்பாட்டை எவ்வளவு இரத்தினச் சுருக்கமாக பாரறியப் பரை சாற்றிக் கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்! திருமறை கூறுகிறது:

'உயிருள்ளவர்களையும் இறந்தவர்களையும் அணைத்துக் கொள்ளும் விதத்தில் பூமியை நாம் ஆக்கவில்லையா?. அன்றியும் அதில் உயர்ந்த மலைகளையும், நாம் நாட்டினோம்: இனிமையான நீரையும் புகட்டினோம். (இவ்வாறான ஆதாரங்கள் உங்கள் முன் இருந்தும், இவ்வசனங்கள் நம்முடைய வார்த்தைகள் இல்லை எனக் கூறி இதிலுள்ளவைகளை) பொய்ப்பிப்பவர்களுக்கு அந்த நாளில் (தீர்ப்பு நாளில்) கேடுதான்!' (அல்-குர்ஆன் அத்தியாயம் 77 ஸூரத்துல் முர்ஸலாத் 25 முதல் 28ஆம் வசனம் வரை).

அற்புதமல்லவா நிகழ்த்தி நிற்கிறது இந்த ஒப்பற்ற வான்மறை! புவி ஈர்ப்புச் சக்தியின் பயன்பாட்டை இதைக் காட்டிலும் தெளிவாகவும், எளிமையாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் விளங்க வைக்கக்; கூடிய வார்த்தைகளை நம்முன் எடுத்தக் காட்டக் கூடியவன் யார்?.

எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் நண்பர்களே!. நம்மில் சிலர் இதை மானிடக் கற்பனையென, அறிவியலை மதிக்கக் கூடிய ஒருவரால் கூற முடியுமா?. பூகோளத்தின் ஈர்ப்பாற்றலைக் கூறும் வசனத்தைச் தொடர்ந்து மலைகளையும், குடிநீரையும் குறிப்பிடுகிறதே இந்த அற்புதத் திருமறை! அதன் மர்மம்தான் என்ன?. விரிவை அஞ்சி அதை உங்களது அறிவியல் சிந்தனைக்கே விட்டுவிட்டு விஷயத்தைத் தொடர்கிறேன்.

பூமியின் மீது பறக்கும் பறவைகள் பூமியுடன் தடுத்து வைக்கப்படுகின்றன எனக் கூறிய திருமறை வசனத்தை முன் கட்டுரையில் ஆய்வு செய்தோம். வானியல் அறிவியலின் அற்புதமான பேருண்மைகளை ஓங்கிய குரலில் முழங்கிக் கொண்டிருக்கும் இந்த வசனத்தையும் மேற்கோள் காட்டி 'என்னய்யா! உளரல்? எல்லாம் சிறுபிள்ளைத் தனம்!' எனக் கூறியவர்களை நாம் கண்டுள்ளோம். அதைப்போன்று அப்பறவைகளை பூமியுடன் தடுத்து வைத்துக் கொண்டிருக்கும் சக்தியாகிய புவி ஈர்ப்புச் சக்தியை பற்றிக்கூறும் இந்த வசனத்தையும் மேற்கோள்காட்டி 'பூமி நம்மை அரவணைக்கிறதா? இதென்ன உளரல்? எனக் கேட்டு மறைந்து கிடக்கும் அவர்களது அறிவியல் அபிமானத்தையும், மேதாவிலாசத்தையும் மேலும் மேலும் வெளிப்படுத்தக் கூடியவர்கள் யாரேனும் உண்டா?.

ஏற்று போற்ற வேண்டியவைகளை எள்ளி நகைத்தவர்களின் நிலை எப்படி முடிவுற்றது என்பதை கூறும் வரலாற்று நிகழ்ச்சிகள் நம்முன் ஏராளமாக இருக்கின்றன. எனவே நேற்றைய வரலாறுகளிலிருந்து இன்று பாடம் பயிலாதவர்கள் நாளைய வரலாற்றின் கழிவுகளாக மாறுவார்கள் என்பது திண்ணம்.

உண்மை எதுவோ அது எங்கிருந்து வந்தபோதிலும் அதை ஏற்றேயாக வேண்டும் எனும் அளவிற்கு உண்மையின்பால் பற்றுள்ளவர்களே! நம்மால் நுனிப்புல் மேய முடியாது. சிந்திப்பதற்கு நம்முன் விஷயங்கள் இருக்கின்றன. எனவே நாம் சிந்தித்தாக வேண்டும்.

சிந்திப்போம் நண்பர்களே! முன் கட்டுரையிலும் இக்கட்டுரையில் கண்ட விஷயங்களை ஒருவர் கூற வேண்டுமானால் குறைந்த பட்சம் அவருக்கு நவீன வான் அறிவியலில் என்னென்ன விஷயங்கள் உள்ளன என்பது தெரிந்திருக்க வேண்டும்?.

முதலாவதாக அவருக்கு பூகோளம் ஆகாயத்தில் அசைவற்றிருக்கும் ஒரு பொருளன்று. மாறாக கணமும் ஓயாமல் ஒரு நீள் வட்டப்பாதையில் சுழன்றோடிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் எனத் தெரிந்திருக்க வேண்டும்.

இரண்டாவதாக, பூகோளத்தின் இந்தச் சுழலோட்டம் காரணமாக அதன் மீது பறக்கும் பறவைகள் வினோதமான இடப் பெயர்ச்சிகளையும், பூமியிலிருந்து தொலைந்து போவதையும், பூமியின் மீது ஏற்படும் மோதலையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் அவர் தெரிந்திருக்க வேண்டும்.

மூன்றாவதாக புவிவாழ் உயிரினங்களுக்கு இவ்வகையான இடையூறுகள் ஏற்படா வண்ணம் தடுத்துக் கொண்டிருக்கும் அறபுதமான சக்தி ஒன்று அதில் செயல்படுகிறது என்றும் அச்சக்தி பூமியோடு நம்மை அரவணைத்துச் செல்லக் கூடிய 'புவி ஈர்ப்புச் சக்தியே' என்பதும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

நான்கவதாக, அகிலம் முழுவதும் ஈர்ப்புச் சக்தி செயல்படுகிறது என்றும், அதே நேரத்தில் அது கண்ணுக்குப் புலனாகாத ஒரு சக்தியே என்றும் அவர் தெரிந்திருக்க வேண்டும்.

எண்ணிப் பாருங்கள்! இத்தூயத் திருமறை இறைவனுடைய வார்த்தைகள் இல்லையென்றால் - இது மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் சுய கற்பனையேயென்றால் - நவீன வானியலின் இந்த அறிவியல் பேருண்மைகள் அவருக்கு எப்படித் தெரிந்தன?.

அந்த மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு மாபெரும் விஞ்ஞானி. அவர் கண்டுபிடித்த உண்மைகனைத்தும், பிறகு வந்தவர்கள் காப்பி அடித்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா?.

எப்பாடுபட்டாவது இக்குர்ஆனை பொய்ப்பித்தாக வேண்டும் என்ற வெறியில் இப்படிக்கூட யாரேனும் கூறினாலும் வியப்பதற்கில்லை.

குர்ஆன் இறைவேதமில்லை! அது முஹம்மத் (ஸல்) அவர்களின் படைப்பு எனக் கூறுபவர்களில் யார் அறிவியல் சிந்தனை பெற்றவர்களோ அவர்கள் தங்களது கூற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலம் எப்போதோ வந்து விட்டது. அக்காரியத்தை நீங்கள் செய்யாமல் தொடர்ந்து அதே குரலையே ஒலித்துக் கொண்டிருந்தால், உங்கள் கூற்றில் நீங்கள் நேர்மையானவர்கள் என்று கூறவும் செய்தால், அனைத்திற்கும் முன்னதாக நீங்கள் ஒரு காரியம் செய்யக் கடமை பட்டிடுள்ளீர்கள்.

மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் படைப்பாக நீங்கள் எதைக் கூறுகிறீர்களோ அதில் காணப்படும், வானியல், புவியியல், உயிரியல், பேரண்டவியல் போன்ற என்னென்ன துறைகளை பற்றிய அறிவியல் உண்மைகள் காணப்படுகின்றனவோ, அந்த அறிவியல் உண்மைகளில் எவையெவை அவருக்குப் பின்னால் வந்த விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டனவோ அவை யாவும் மாமனிதர் முஹம்மத்(ஸல்) அவர்களால் கண்டு பிடிக்கப்பட்டவைகளே அன்றி, இன்று உலகம் முழுவதும் நம்பிக் கொண்டிருப்பதைப் போன்று சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படவில்லை எனப் பகிரங்கமாகப் பாரறியப் பிரகடனம் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறீர்கள்.

---------------------------
வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.

பேரண்டப் படைப்பின் துவக்கம் -1

வாழத் தகுந்த கோள்-2

ஓசோன் -3

விண்ணகத்தின் பரப்பெல்லை -4

பேரண்டத்தின் ஈர்ப்பு விசை -5

விண்ணடுக்குகள் -6

உருண்ட பூமி -7

சுழலும் பூமி(1) -8

சுழலும் பூமி(2) -9

சுழலும் பூமி(3) -10

சுழலும் பூமி(4) -11

சுழற்றும் பூமி -12

Sunday, September 18, 2005

வஹி: இறைச்செய்தியும்- அறிவியலும்-12

சுழற்றும் பூமி -12


ஏ.கே.அப்துர் ரஹ்மான்

சென்ற கட்டுரையில் நாம் கேட்டிருந்த கேள்வியைக் கேட்டதும் அவை ஒரே நேரத்தில்தான் தரையிறங்கும் என்று கூறியிருப்பார்கள். அதே நேரத்தில் அந்த பதிலைத் தொடர்ந்து, எப்படி? என்ற மற்றொரு வினாவும் எழுப்பப்பட்டிருப்பதை பார்த்திருப்பார்கள். இந்த வினாவைப் பார்த்ததும் இந்த வினாவை எழுப்பியவரைச் சற்று விபரீதமாகக் கூடச் சிலர் எண்ணியிருப்பார்கள். ஏனென்றால் ஹாங்காங்கிலிருந்து டில்லிக்கு எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம்தான் டில்லியிலிருந்து ஹாங்காங்கிற்கு இருக்க முடியும். எனவே எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்குப் பறந்தாலும் - தூரம் ஒன்றாக இருப்பதால் அவை ஒரே நேரத்தில்தானே தரையிறங்கியாக வேண்டும்!? அப்படியென்ன புதிர் வந்துவிட்டது என்பதே இந்த விபரீதப் பார்வைக்குரிய காரணமாக இருக்கும்.

ஆனால் விபரீதத்திற்குப் பதில் விவேகமாகப் பார்க்க வேண்டிய ஒரு வினாவைத்தான் நாம் எழுப்பியிருந்தோம். சில விபரம் கெட்டவைகள் தங்களுக்கு விவேகிகளாகத் தங்களுக்குப் பட்டம் சூட்டிக் கொண்ட போதிலும்.

நாம் வசித்துக் கொண்டிருக்கும் அந்த பூமி ஆகாயத்தில் அறையப்பட்டதை போல் அசைவற்றிருக்கும் ஒரு பொருளன்று: அது கணமும் ஓய்வின்றிச் சுழன்றோடிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் என்ற அறிவியலைச் சத்தியத் திருமறை, திரும்பத் திரும்ப நிறுவிக் கொண்டிருக்கும் தூய வசனங்களின் ஆழத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே அந்த வினாவை நாம் எழுப்பியிருந்தோம்.

மீண்டும் அந்த வினாவிற்கே திரும்புவோம். இரண்டு விமானங்களும் பறக்கும் நேரம், வேகம் மற்றும் தூரம் ஆகியவை சமமாக இருப்பதால் அவை ஒரே நேரத்தில்தான் தரையிறங்கும் என்பதை பதிலாகக் கண்டோம். நாம் மேற்கொள்ளும் பயணம் தரை வழிப் பயணமாக இருந்தால் இது சரியான பதிலாகும். ஆனால் நாம் மேற்கொள்ளும் பயணமோ ஆகாயப் பயணம். இதில்தான் சிக்கல் இருக்கிறது. எனவே இந்தப் பதிலைப் பரிசீலித்தாக வேண்டும்.

முந்தைய மூன்று கட்டுரைகளில் (சுழலும் பூமி பாகம் 1, 2, 3) பூகோளம் சுழன்று கொண்டிருக்கிறது என்றும், மேலும் அதனுடைய பாதையில் அது ஓடிக் கொண்டிருக்கிறது என்றும் திருக்குர்ஆன் கூறிக் கொண்டிருப்பதை கண்டோம். எனவே திருமறையின் கூற்றிற்கிசையப் பார்த்தால் பூகோளத்தின் சுழற்சியும் அதன் நகர்வும் தரையிறங்க வேண்டிய விமானங்களின் இலக்குகளை நகரச் செய்து அதனால் பெரிய விபரீதங்களைத் தோற்றுவிக்க வேண்டும்.

சான்றாகப் பூகோளத்தின் சுழற்சியை முதலில் எடுத்துக் கொள்வோம். பூகோளம் இடமிருந்து வலமாக (Anti Clock Wise கடிகார சுற்றுக்கு எதிர்ச் சுற்றாக) கிழக்கு நோக்கிச் செல்கிறது. இதன் காரணமாக பூகோளத்திலுள்ள டில்லியும் அதனோடு சேர்ந்து கிழக்கு நோக்கிச் சுழல்கிறது. இந்த நிலையில் டில்லி விமானம் தரையில் இருக்கும்வரை அதுவும் தரையோடு சேர்ந்து சுழல்கிறது. ஆனால் இந்த விமானம் பறப்பதற்காக ஆகாயத்தில் எழுந்ததும் அதன் பிறகு அதற்கும், டெல்லிக்கும் உள்ள நேரடித் தரைத் தொடர்பு அறுபட்டுப் போகிறது. எனவே விமானம் பறக்கும் வேகத்தில் விமானம் நகர்கிறது. பூகோளத்தின் சுழற்சி வேகத்தில் டெல்லி நகர்கிறது.

டெல்லியும் சரி, விமானமும் சரி இரண்டும் ஒரே திசையில் நகர்கின்றன. எனவே டெல்லி என்ன வேகத்தில் நகர்கிறதோ, அதே வேகத்தில் அதன் மீது பறக்கும் விமானமும் நகர்ந்தால் (விமானத்தின் வேகம் பூகோளத்தின் சுழற்சி வேகத்தைக் காட்டிலும் சற்று அதிகம் பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் அந்த அதிக வேகம் இங்கு புறக்கணிக்கத் தக்கதே) விமானம் எப்போதுமே டெல்லியின் மீதே பறந்து கொண்டிருக்கும். டெல்லியை விட்டு இந்த விமானம் நகர வேண்டுமானால் டெல்லி நகரும் வேகத்தைக் காட்டிலும் அதிக வேகத்தில் விமானம் நகர வேண்டும். ஆனால் நமது விமானமோ டெல்லி நகரும் வேகத்தைக் காட்டிலும் குறைந்த வேகத்தில்தான் நகர்கிறது.

டெல்லியின் வேகம் (பூகோளத்தின் சுழற்சி வேகம்) மணிக்கு ஏறத்தாள 1675 கி.மீ. ஆனால் நமது விமானமோ மணிக்கு ஏறத்தாள 650 கி.மீ வேகத்தில்(சூப்பர்சானிக் போன்ற அதிவேக விமானங்களைத் தவிர்த்து, சாதாரண விமானங்கள்) பறக்கிறது. இந்நிலையில் நமது டெல்லி விமானம் ஒரு மணி நேரம் பறந்தால் அது ஹாங்காங்கை நோக்கி எவ்வளவு தூரம் முன்னேறியிருக்க முடியும்?.

இந்த வினாவிற்கு விபரீதமான பதிலைத்தான் நாம் பெறுகிறோம். அதாவது டெல்லி விமானம் ஒரு மணி நேரம் ஹாங்காங்கை நோக்கிப் பறந்தும் கூட அதனால் ஹாங்காங்கை நோக்கி ஒரு அங்குலம் கூட முன்னேறியிருக்க முடியாது என்பதுடன் அது புறப்பட்ட டெல்லியிலிருந்தே ஏறத்தாள 1025 கி. மீ. (1675 - 650) பின்வாங்கப் பட்டிருக்கும். எவ்வளவு விபரீதமான நிலை பார்த்தீர்களா?.

டெல்லி விமானத்தின் நிலை இதுவென்றால், ஹாங்காங் விமானத்தின் நிலை இதற்கு நேர் மாறானதாக இருக்கும். ஏனெனில் டெல்லி ஹாங்காங்கிற்கு மேற்கில் இருப்பதால் இந்த விமானம் பூகோளத்தின் சுழல் திசைக்கு எதிர்த்திசையில் பறக்கிறது. எனவே இந்த விமானம் டெல்லியை நோக்கி மணிக்கு 650 கி.மீ. வேகத்தில் முன்னேறிச் செல்லும் போது பூகோளத்தின் சுழற்சியின் காரணமாக டெல்லி ஹாங்காங் விமானத்தை மணிக்கு 1675 கி.மீ. வேகத்தில் முன்னோக்கி வருகிறது. எனவே இந்த விமானம் டெல்லி விமானம் பறக்கும் வேகத்திலேயே பறந்த போதிலும் கூட தன்னுடைய இலக்கை (டெல்லியை) நோக்கி ஒரு மணி நேரத்தில் ஏறத்தாள 2325 கி.மீ. (167510750) தூரம் முன் தள்ளப் பட்டிருக்கும். எவ்வளவு பெரிய வினோதம் இது!.

இப்படிப்பட்ட விபரீதங்களும் வினோதங்களும் இந்த பூமியின் மீது நடைபெறுமேயானால் ஹாங்காங்கிலிருந்து புறப்படும் விமானம் வெறும் நூறே நிமிடங்களில் டெல்லியைப் பிடித்து விட வேண்டும். ஆனால் அதே நேரத்தில் அதே வேகத்தில் பறந்த டெல்லி விமானம் அதே நூறு நிமிடத்தில் தரையிறங்கினால் அங்கு ஹாங்காங் இருக்காது. அது தரையிறங்கிய இடத்திலிருந்து ஏறத்தாள 5500 கி.மீ. (2250102250) கி.மீக்கு அப்பால் ஹாங்காங் நகர்ந்து கொண்டிருக்கும். எனவே இந்த நிலையில் டெல்லி விமானம் ஹாங்காங்கை பிடிக்க வேண்டுமென்றால் பூகோளம் தன்னுடைய முழுமையான ஒரு சுழற்சியை முடித்து இரண்டாவது சுழற்சியைத் துவக்கிய பின்தான் - அதாவது ஏறத்தாள 39 மணி நேரம் கழித்த பின்புதான் ஹாங்காங்கைப் பிடிக்க முடியும்!.

ஆனால் இப்படிப்பட்ட விபரீதங்களும், வினோதங்களும் இந்த பூமியின் மீது நடைபெறுகின்றனவா?. இல்லையே! ஏன்?. எனவே பூகோளத்தின் சுழற்சியின் காரணமாக அதன் மீது நடைபெற வேண்டிய விபரீத, வினோதங்களிலிருந்து அதன்மீது பறக்கும் விமானங்களைத் தடுத்துக் கொண்டிருக்கும் அற்புதமான ஏதோ ஒரு சக்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இவை யாவும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன அல்லவா?. பூகோளத்தின் சுழற்சியால் விளையும் பாதிப்புக்கள் இவையென்றால், பூகோளம் அதன் பாதையில் சென்று கொண்டிருப்பதால் ஏற்படும் விளைவுகள் படுபயங்கரமானவையாகவும் இருக்கும்.

பொதுவாக விமானங்கள் பூகோளத்தின் பல பாகங்களிலும் பறந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு பறக்கும் விமானங்களுக்குப் பிரச்னைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் அதன் பொருட்டு, பூகோளம் ஒரே இடத்தில் அசைவற்று இருக்க வேண்டும். ஆனால் நமது பூமியோ மணிக்கு ஏறத்தாள 108,000 கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பூகோளம் எத்திசையில் ஓடுகிறதோ, அத்திசையில் பறக்கும் விமானங்களின் கதி எப்படிப் பட்டதாக இருக்கும்?.

வினாடிக்கு 30 கி.மீ. என்ற படுபயங்கர வேகத்தில் பறந்து வரும் இந்த பூ பெருங்கோளம் நமது விமானங்களின் மீது மோதி அவைகளை சுக்கு நூறாகத் தகர்த்தெறிந்து விடாதா?. இதற்கு மறுபக்கங்களில் பறக்கும் விமானங்களின் கதியும் பரிதாபத்திற்குரியதல்லவா?. ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் அந்த விமானங்களை அந்தரத்தில் தவிக்க விட்டு நமது பூகோளம் ஒரு மணி நேரத்திற்குள் இலட்சம் கி.மீ. அப்பால் சென்று விடும். அதன் பிறகு அந்த விமானங்கள் பூமியை அடையவே இயலாது போய்விடும்.

பூகோளத்தின் இந்த விண்ணோட்டம் நமது ஆகாய பயணங்களுக்கு எவ்வளவு பெரிய அபாயத்தை விளைவிக்க வேண்டும் என்பதைப் பார்த்தீர்களா?. ஆனால் இப்படிப் பட்ட அபாயங்கள் ஏதும் இங்கு நடைபெறுகின்றனவா?. இல்லையே!. இதிலிருந்து பூகோளத்தின் விண்ணோட்டதால் ஏற்பட வேண்டிய பேரபாயங்களிலிருந்து நமது விமானங்களைத் தடுத்துக் கொண்டிருக்கும் ஒரு அற்புதமான ஆற்றல் இங்கு செயல்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா?.

இல்லை!. இல்லை!. பூமியாவது நகர்வதாவது?. அதெல்லாம் வெறும் கதை! ஏனவே பூமியின் மீது பறப்பவைகளுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. ஆகவே இங்கு எந்தவித ஆற்றலும் செயல்பட வேண்டியதில்லை. செயல்படவும் இல்லை என மறுக்கக் கூடிய எந்த ஒரு அறிவியல் பற்றாளராவது இந்த இருபதாம் நூற்றாண்டில் இருக்காலாமா?.

ஆனால் அப்படியும் சிலர் இருபதாம் நூற்றாண்டில் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது அவர்களுக்காக வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

அருமை நண்பர்களே! அறிவியலை ஏற்பதில் துணிவுடன் நிலை பெற்றவர்களே! பூகோளத்தின் நகர்வும் அதன் சுழற்சியும் பதினேழாம் நூற்றாண்டிலிருந்தே உலகில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாகப் பூகோளத்தின் மீது பறப்பவைகளுக்கு ஏற்படக் கூடிய இடையூறுகளிலிருந்து அவைகளைத் தடுக்கும் பொருட்டு அற்புதமான ஆற்றல் ஒன்று இதில் செயல்படுகிறது என்பதையும் அறிவியல் கண்கள் கண்டுணர்கின்றன. அப்படியிருந்தும் இந்த நூற்றாண்டில் கூட அந்த ஆற்றலைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் திருமறை வசனத்தை ஏளனம் செய்யக் கூடியவர்கள் இருக்கிறார்கள் என்றால் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முந்தைய காலகட்டம் எப்படி இருந்திருக்கும் எனச் சற்றே கற்பனை செய்து பாருங்கள். பூகோளத்தின் சுழற்சியையோ, அதன் நகர்வையோ கற்பனைகூடச் செய்திராத காலத்திலேயே சத்தியத் திருமறை தூய குர்ஆன் வையகம் வியக்க விளித்தோதும் அதன் ஜீவ வசனத்தைப் பாருங்கள். அறைகிறது குர்ஆன்.!

'சிறகுகளை விரித்தும், சுருக்கியும் தங்களுக்கு மேல் பறக்கும் பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா?. ரஹ்மானை (கருணை மிக்க இறைவனைத்) தவிர அவைகளை (இடையூறுகளிலிருந்து) தடுத்துக் கொண்டிருக்கவில்லை. (ஆம்!) திண்ணமாக அவன் யாவற்றின் மீதும் பார்வையுடையவன்!' (அல்-குர்ஆனின் 67வது அத்தியாயம் ஸூரத்துல் முல்கின் 19வது வசனம்).

ஆகாயப் பறவைகள் தடுக்கப்பட வேண்டுமா?. தடுக்கப்படவிலலையென்றால் அவை பூமியை விட்டுத் தொலைந்து போகுமா?. ஆல்லது பூமியில் விழுந்து விடுமா? எனக்கூறி இந்த வசனத்தை ஏளனம் செய்தவர்கள் எங்கே?. அவர்கள் இதற்கு மேலும் தங்கள் நிலையைத் திருத்திக் கொள்ளாமல் இருக்கலாமா?. திருத்திக் கொள்ளாதவர்கள் யாரோ அவர்களை அறிவியல் அபிமானிகளாக நம்மால் ஏற்கத்தான் முடியுமா?.

பூகோளம் தன்பாதையில் நகர்ந்து கொண்டிருப்பினும் பூமிக்கு வெளியே குறிப்பிட்ட தொலைவில் உள்ள பொருட்களை அது செல்லும் இடங்களுக்கெல்லாம் இழுத்துச் செல்வதையும், பூகோளம் சுழன்று கொண்டிருந்தாலும், குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டவைகளை அது தன்னுடன் சுழற்றிக் கொண்டிருப்பதையும் ஒப்புக் கொள்ளக்கூடியவர்கள் யாரோ அவர்களால் இந்த தூய வசனத்தை ஒருக்காலும் ஏளனம் செய்ய முடியாது. ஏனெனில் இந்தக் காரியங்களை எல்லாம் பூகோளம் நிகழ்த்த வேண்டுமாயின் அதன் பொருட்டு அதனிடம் அற்புதமான ஆற்றல் ஒன்று செயல்பட்டாக வேண்டும் என்றும், அந்த ஆற்றல்தான் 'ஈர்ப்பாற்றல்' என்று அவர்கள் அறிவார்கள்.

எனவே நமக்கு மேல் சிறகடித்துப் பறக்கும் பறவைகள் அவைகள் இருக்கும் இடங்களில் தடுத்து வைக்கப்படுகின்றன எனக்கூறி திருமறை வசனம் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நவீன வானியல் விஞ்ஞானம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

நவீன வானியலை இவ்வளவு அற்புதமாகக் கூறும் இத்தூய திருமறை, அந்த வசனத்தில் உள்ளடங்கியிருக்கும் பூகோளத்தின் ஈர்ப்பாற்றல் எனும் அதன் இயற்பியலின் மீது ஆதாரப்பட்டு நிற்கிறது. பூகோளத்தின் படைப்பில் இந்த ஈர்ப்பாற்றலை வடிவமைத்த இறைவன் பூகோளத்திற்கு வெளியில் பரவும் ஈர்ப்பாற்றலை நிறுவ, பறவைகளை ஆதாரம் காட்டினான். எனவே தன் படைப்பினங்களின் வாழ்க்கை வசதியையும் ஒழுங்கையும் நிலை நிறுத்துவதில் தன்னால் வடிவமைக்கப்பட்ட ஈர்ப்பாற்றலைச் செயல்பட வைத்துள்ளதாகக் கூறினான்.

மெய்யாயகவே திருமறை கூறியவாறு பூமிக்கு ஈர்ப்பாற்றல் உண்டெனில் அன்றாட வாழ்க்கையில் நாம் அதை உணரவில்லையே ஏன்?. இதற்குரிய விளக்கத்தையும் இந்த அற்புதத் திருமறையிலேயேத் தேடுவோமா?.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

---------------------------
வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.

பேரண்டப் படைப்பின் துவக்கம் -1

வாழத் தகுந்த கோள்-2

ஓசோன் -3

விண்ணகத்தின் பரப்பெல்லை -4

பேரண்டத்தின் ஈர்ப்பு விசை -5

விண்ணடுக்குகள் -6

உருண்ட பூமி -7

சுழலும் பூமி(1) -8

சுழலும் பூமி(2) -9

சுழலும் பூமி(3) -10

சுழலும் பூமி(4) -11

Friday, September 16, 2005

பொறுத்திருந்து பார்ப்போம்!

தமிழோவியம் வலைத்தளத்தில் வெளிவந்த "அமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்" என்ற கட்டுரைத் தொடர் சம்பந்தமாக மிகச் சாதாரண முன்னுரையைக் கண்ட, வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்) என்ற கட்டுரையாளர் கடுகடுக்கிறார், எரிச்சலடைகிறார், வெகுண்டெழுகிறார். நாகரீகமற்ற நாலாந்தர எழுத்து நடை விமர்சனங்களையும் - தனது வாதத்துக்கு வலு சேர்த்து - பின்னூட்டமிடும் அளவுக்கு தரம் தாழவும் அவர் தயங்கவில்லை.

''மிக சொற்ப விளக்கமே'' என நல்லடியார் தனது முன்னுரையை பலவீனமாகவே வைத்திருக்கிறார். இன்னும் விஷயத்தை அவர் தொட்டிருக்கவில்லை. நேசகுமாரால் தனது கட்டுரைக்கான எதிர்வினை விளக்கம் வரும்வரை காத்திருக்க முடியவில்லை. பின்னூட்டங்களும், தனிப் பதிவுகளுமாக அமளி துமளிப்படுகிறது ஏனிந்த ஆர்ப்பட்டம்? அமானுடம் கலைந்து தகிடு தத்தம் வெளியாகிவிடும் என்ற ஆத்திரமா? எப்படியும் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற மன நிலையைத்தான் இது வெளிப்படுத்துகிறது.

பெயரைக் குறிப்பிட்டு எழுத வேண்டாம் என்று நல்லடியாருக்கு அறிவுரை! ஆனால் ரூமியின் பெயரைக் குறிப்பிட்டே சாடுவது. என்ன ஊருக்கு உபதேசமா?

தனது மறுப்பில் நல்லடியார் என்ன சொல்ல வருகிறார் என்பதை பொறுத்திருந்து புரிந்து கொள்ளாமல் ''வா, வா இந்த வழியாகத்தானே வருவாய்'' என்பது போன்ற அன்பான!? மிரட்டலும், எள்ளலும், ஐனோமினோ என்ற பெயரின் பின்னூட்டத்தில் தெரிகிறது. எதிர்ப்பதற்கு ஆளில்லை என இறுமாப்புடன் இருந்த எண்ணத்தில், நல்லடியாரின் மறுப்புரை மண்ணள்ளிப் போட்டு விட்டதோ? எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

நேசகுமார் தனக்கு மிரட்டல் வருவதாகச் சொல்லியிருப்பது வாடிக்கையான ஒன்றுதான். தனது திசை திருப்பும் முயற்சிக்கு வலு சேர்க்க இதுபோல் முன்பும் சொல்லி வந்திருக்கிறார்.

Saturday, September 10, 2005

வஹி: இறைச்செய்தியும்- அறிவியலும்-11

சுழலும் பூமி(4) -11


ஏ.கே.அப்துர் ரஹ்மான்


சூரியன் சுழல்வதால்தான் இராப்பகல்கள் ஏற்படுகின்றனவே அன்றி, சூரியன் பூமியைச் சுற்றி வரவில்லை எனக் கூறும் திருமறையின் பற்பல வசனங்களை முந்திய கட்டுரைகளில் கண்டோம். சூரியக் குடும்பத்தின் இயக்கதைப் பற்றிய இந்த நவீன அறிவியல் கண்டுபிடிப்பை மேலும், மேலும் வலியுறுத்திக் கொண்டிருக்கும் சத்தியத் திருமறையின் மேலும் ஓர் அற்புதத்தைப் பாருங்கள். திருக்குர்ஆன் கூறுகிறது:

'பின் வாங்கிச் செல்லும் இரவின் மீதும், புலரும் வைகறையின் மீதும் நான் சத்தியம் செய்கிறேன். உண்மையில் இது கண்ணியமிக்க தூதர் ஒருவரின் வாக்காகும்...(எனவே) நீங்கள் (இவ்வேதத்தைப் புறக்கணித்து) எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்?. இதுவோ அனைத்துலக மக்களுக்கும் உரிய ஓர் அறிவுரையாகும்.' (அல்-குர்ஆனின் 81வது அத்தியாயம் ஸுரத்துத் தக்வீரின் 17முதல் 27 வரையிலான வசனங்கள்).

இந்த வசனங்களின் வாயிலாக, இத்தூயத் திருமறை இறைச் செய்தியை அறிவிக்கும் ஒரு வானுலகத் தூதரால் (ஜிப்ரீல்) ஓதிக் காட்டப்பட்ட வசனங்களேயன்றி இது மானிடக் கற்பனையன்று!. ஆகவே உலக மக்கள் அனைவரும் இதனை ஏற்று ஒழுக வேண்டும் என ஆணையிட்டுக் கூறுகிறான் அல்லாஹ்!.

இந்த வசனங்களின் ஆணைப் பொருட்களாக இரவையும், வைகறையையும் இறைவன் பயன்படுத்தியுள்ளான். இரவு என்பது பின்வாங்கிச் செல்லும் நிலையையும், வைகறை (விடியற்காலை) என்பது புலரும் நிலையையும் பெற்றிருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையாகத் திருக்குர்ஆன் கண்ணியமிக்க தூதர் ஒருவாரால் ஓதிக் காட்டப் படுவதே என்பதும் எனக் கூறுகின்றன இந்த வசனங்கள்.

சூரியன் பூமியைச் சுற்றுவதால் இராப்பகல் ஏற்படுகின்றனவா அல்லது பூகோளம் தன்னைத்தான் சுற்றுவதால் இராப்பகல்கள் ஏற்படுகின்றனவா என்ற கேள்விக்குத் தெள்ளத் தெளிவாக இந்த வசனங்கள் பதிலளித்துக் கொண்டிருப்பதைக் கவனித்துள்ளீர்களா?.

இராப்பகலை ஏற்படுத்தும் நிகழ்ச்சி எப்படி இருந்தால் இரவு பின்வாங்கிச் செல்லும் நிலை ஏற்படுமோ அதுவே இராப்பகல் மாற்றத்திற்குரிய காரணமாகும் என இந்த வசனம் கூறுகிறது. ஆகவே இரவைப் பின் வாங்கிச் செல்ல வைக்கும் இயக்கம் எது என்று கண்டுபிடித்து விட்டோம் என்றால், இராப்பகல் மாற்றத்திற்குரிய காரணமாக அல்லது சூரியக் குடும்பத்தின் இயக்கமாகத் திருமறை எதைக் கூறிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்! இரவைப் பின்வாங்கச் செய்யும் அந்த இயக்கம் யாது?.

விவாதத்திற்குரிய இந்த இயக்கத்தைப் புரிந்து கொள்ளும் பொருட்டு 'பின்வாங்கிச் செல்ல' என்றால் என்ன என்பதை முதலாவதாக நாம் விளங்கிச் கொள்வோம்.

நிகழ்ச்சி ஒன்று நடைபெற வேண்டுமாயின் இயக்கம் ஒன்று இருந்தாக வேண்டுமென்பதை நாம் அறிவோம். அதே நேரத்தில் நடைபெறும் நிகழ்ச்சி பின்வாங்கிச் செல்லும் நிகழ்ச்சியாக இருக்க வேண்டுமாயின் அதை நிகழ்த்தும் இயக்கம் இரண்டு இன்றியமையாத நிபந்தனைகளைப் பெற்றிருக்க வேண்டும்.

முதலாவதாக பின்வாங்கிச் செல்லும் நிகழ்ச்சியை நிகழ்த்தும் இயக்கம் எதுவோ அது பின்வாங்கும் நிகழ்ச்சியை நிகழ்த்துவதற்கு முன் அது முன்னோக்கி செல்லும் இயக்கமாக இருக்க வேண்டும்.

அடுத்தபடியாக எந்த இயக்கம் பின்வாங்கிச் செல்லும் இயக்கமாக இருக்க வேண்டுமோ அந்த இயக்கம் எத்திசையில் முன்னேறுகிறதோ அந்த முன்னேற்றம் ஒரு குறிப்பிட்ட இலக்கில் அல்லது எல்லையில் அதற்கு நேர் எதிர்த்திசையில் இயங்க வேண்டும். அப்போதுதான் அது பின் வாங்கிச் செல்லும் இயக்கமாக அமைய முடியும்.

சான்றாக சுழலும் காற்றாடியின் (FAN) பட்டைகள் (Leaves) ஒன்றன் பின் ஒன்றாக, ஒரே திசையில் சுழல்கின்றனவேயன்றி, எந்த ஒரு எல்லையிலும் அவை சுழலும் திசைக்கு எதிர்திசையில் சுழலலில்லை. எனவே காற்றாடியின் பட்டைகள் முன்னோக்கிச் சுழல்கின்றனவேயன்றி, பின் வாங்கிச் செல்வதில்லை. ஆனால் சுவரில் எரியப்பட்ட பந்து சுவரில் பட்டவுடன் அதற்கு எதிர்த்திசையில் இயங்குகிறது. இதைப்போன்று இரவும் ஒரு குறிப்பிட்ட எல்லையை அல்லது இலக்கை அடைந்தவுடன் அது செல்லும் திசைக்கு எதிர்த் திசையில் இயங்க வேண்டும். அப்படிப்பட்ட இயக்கம் யாது?.

எரியப்பட்ட பந்திற்கு அது பட்டுத் திரும்பும் சுவர் எல்லையாக அமைவதைப் போன்று, பூமியின் நகரும் இரவும், ஒரு குறிப்பிட்ட எல்லையில் பட்டு அதற்கு எதிர்த்திசையில் திரும்ப வேண்டும். ஆகவே நகரும் இரவைத் திசைத் திருப்பும் எல்லைக் கோடு எது?

இந்த வினாவிற்குக் கூட சத்தியத் திருமறை பதில் கூறும் அற்புதத்தைப் பாருங்கள்! திருமறை கூறுகிறது:

'திரும்பிச் செல்லும் இரவின் மீது சத்தியமாக! பிரகாசமடையும் விடியற்காலையின் மீதும் சத்தியமாக! இந்த நரகம் மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 74 ஸுரத்துல் முத்தஸ்ஸிரின் 33 முதல் 35 வரையிலான வசனங்கள்).

இந்த வசனங்கள் சத்தியத் திருமறை இறைவேதமன்று: இது மானிடக் கற்பனையே எனக் கூறக் கூடியவர்கள் அடைய இருக்கும் தண்டனையாகிய கொடிய நரகத்தைப் பற்றி ஆணையிட்டு எச்சரிக்கை செய்கின்றன. இந்த வசனங்களில் இரவு பிரகாசமடையும் நிகழ்ச்சியே விடியற்காலை என்றும், அவ்வாறு நிகழும் விடியற்காலையானது இரவு திரும்பிச் செல்லும் பொழுதே நடைபெறுகிறது என்றும் கூறுகின்றன. எனவே முன்னேறிச் செல்லும் இரவின் இயக்கம் விடியற்காலை எனும் எல்லையில் அதாவது உதய எல்லையில்தான் திருப்பப்பட்டுத் திரும்பிச் செல்கிறது அல்லது பின் வாங்கிச் செல்கிறது என இந்த வசனங்கள் தெள்ளத் தெளிவாக விளக்கம் தருகின்றன.

சத்தியத் திருமறை கூறும் இந்த விளக்கத்திற்கிசைய இரவின் இயக்கம் அமைய வேண்டுமாயின் அதற்காக நடைபெற வேண்டிய நிகழ்ச்சி யாது?. சூரியன் பூமியைச் சுற்றினால் அந்த இயக்கம் நடைபெறுமா? அல்லது பூகோளம் தன்னைத்தான் சுற்றினால் நடைபெறுமா?.

சூரியன் பூமியைச் சற்றுவதாக இருந்தால் இந்த இயக்கம் நிச்சயமாக நடைபெறாது. சான்றாக, சூரியன் இப்போது இந்தியாவின் உச்சியில் நகர்வதாக வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் பூமியன் மீதுள்ள இரவுப் பகுதி அட்லாண்டிக் சமுத்திரத்தில் ஆரம்பித்து, அமெரிக்கக் கண்டத்தைச் சுற்றி, பசிபிக் சமுத்திரம் வரை பரவியிருக்கும். சூரியன் நகர, நகர இரவும் சூரிய வெளிச்சத்திற்கு முன்னால் நகர்ந்து கொண்டிருக்கும். சூரியன் பூமியைச் சுற்றி எவ்வளவு முறை வலம் வந்தாலும் நகரும் சூரிய வெளிச்சத்திற்கு முன்னால் இரவு ஒரே திசையில் நகர்ந்து கொண்டிருக்குமேயன்றி, எந்த ஒரு இடத்திலும் இரவானது, தான் நகர்ந்து கொண்டிருக்கும் திசைக்கு எதிர்த்திசையில் திரும்பிச் செல்லாது. ஆகவே சூரியன் பூமியைச் சற்றுகிறது எனக்கூறும் புவிமையக் கோட்பாட்டை இந்த வசனமும் வன்மையாக மறுத்துக் கொண்டிருக்கிறது.

சத்தியத் திருமறை மறுக்கும் தத்தவம் இது என்பதைத் தெரிந்து கொண்டோம். எனவே இம்மாமறை வற்புறுத்தும் இயக்கம் எது?. அதுதான் சூரியக் குடும்பத்தின் இயக்கத்தைப் பற்றிய நவீன அறிவியல் கண்டுபிடிப்பாகும்.

இந்த இயக்கத்தை விளக்கும் பொருட்டு இங்கு பூகோளத்தின் எட்டு வரை படங்கள் வரையப் பட்டுள்ளன. இப்படங்கள் இரவின் நகர்வைப் புரிந்து கொள்ளும் பொருட்டு ஒரு வசதிக்காக பூகோளத்தின் நிலப் பரப்பு 24 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்போது பூகோளத்தின் சுழற்சியின் காரணமாக சூரியன் அட்லாண்டிக் சமுத்திரத்தை நோக்கி மத்தியத் தரைக்கடலின் உச்சியிலிருந்து நகர்வதாக வைத்துக் கொண்டால் ஆசிய நாடுகளின் அஸ்தமனமும், வட அமெரிக்க நாடுகளில் உதயமும் நிகழ்ந்து கொண்டிருக்கும். எனவே இந்தியாவும் அஸ்தமன எல்லையில் இரவைப் பெற்றுத் தொடர்ந்து 12 மணி நேரங்கள் முன்னேறிச் சென்று உதய எல்லையைத் தொடுகிறது.

பூகோளப் படத்தில் எண் 18 எனக் குறிக்கப்பட்ட நிலப் பரப்பில் இந்திய உள்ளது. இப்போது எண் 18ல் உள்ள இந்தியா உதய எல்லையைத் தொட்டுக் கொண்டிருப்பதைப் படம் அ-வில் காண்கிறீர்கள்.

இப்போது பூகோளம் மேலும் சுழல்கிறது. எனவே உதய எல்லையை அடைந்த இந்தியா அதைத் தாண்டி பகல் பகுதிக்குள் புகுந்து விடுகிறது. ஆனால் அஸ்தமன எல்லையில் இருந்து இந்தியாவுடன் 12 மணிநேரம் முன்னோக்கி வந்த இரவு இப்போது என்ன செய்யும்?. தொடர்ந்து இந்தியாவுடன் பகல் பகுதியிலும் பயணம் செய்ய முடியுமா?. செய்ய முடியாது!.

ஆகவே அஸ்தமன எல்லையிலிருந்து இந்திய நிலப் பரப்பாகிய எண் 18-ல் குடியேறி அதனுடன் மேற்கிலிருந்து கிழக்காக வந்த இரவு உதய எல்லையை அடைந்தவுடன் அதற்கு மேலும் பயணம் செய்ய இயலாமல் தடுக்கப்படுகிறது. இவ்வாறு உதய எல்லையால் எண் 18லிருந்து தடுக்கப்பட்ட பிறகும் எண் 18-ல் இருந்த நிலப்பரப்பு (இந்தியா) பூகோளத்தின் சுழற்சியின் காரணமாக முன்னேறிச் செல்வதால் எண் 18-ல் இருந்த இரவு வேறு வழியின்றி எண் 17-ல் உள்ள நிலப் பரப்புக்குப் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. (படம் - ஆ)

ஆதாவது அஸ்தமன எல்லையிலிருந்து கிழக்கு நோக்கி வந்த இரவு உதய எல்லையைத் தொட்டதும் அதற்கு நேர் எதிர்ச் திசையாகிய மேற்கை நோக்கித் திரும்பிச் செல்கிறது!.

அற்புதமன்றோ நிகழ்த்தி நிற்கிறது ஒப்பற்ற வான்மறை?.

எண் 17-ல் இருப்பது பாகிஸ்தான் எனக் கொள்வோம். இந்த நிலப் பரப்பும்கூட அஸ்தமன எல்லையில் இருந்து இரவைப்பெற்றே முன்னேறி வந்துள்ளது. இந்தியா உதய எல்லையைத் தாண்டிய பிறகு பாகிஸ்தான் உதய எல்லையைத் தாண்டுகிறது. அப்போது பாகிஸ்தானிலிருக்கும் (எண் 17) இரவும் அதற்கு மேல் பாகிஸ்தானுடன் பயணம் செய்ய இயலாமல் பாகிஸ்தானை விட்டுவிட்டு 16-ல் இருக்கும் வளைகுடாவிற்குப் பின் வாங்குகிறது. (படம் இ)

எண் 16க்குப் பிறகு பின்வாங்கிய இரவு அதற்கு பிறகு என்ன செய்யும்?. தொடர்ந்து எண் 16-உடன் பயணம் செய்ய இயலுமா?. இயலாது. ஏனெனில் பூகோளத்தின் சுழற்சி எண் 16-ஐயும் உதய எல்லையைத் தாண்டச் செய்தால் அதிலுள்ள இரவு எண் 15-க்குப் பின்வாங்குகிறது. (படம் ஈ). அதன் பிறகு எண் 15-லிருந்து எண் 14-க்கும், (படம் -உ) பிறகு எண் 13-க்கும் (படம் ஊ) பிறகு எண் 12-க்கும் (படம் எ) பிறகு எண் 11-க்கும் (படம் - ஏ) பின் வாங்குகிறது.

கணமும் நிற்காமல் சுழன்று கொண்டிருக்கும் பூகோளம் தொடர்ந்து சுழல்கிறது. எனவே கணமும் ஓயாமல் இரவும், அஸ்தமன எல்லையிலிருந்து உதய எல்லைவரை மேற்கிலிருந்து கிழக்காகச் சென்று உதய எல்லையைத் தொட்டதும் அதற்கு நேர் எதிர்த் திசையில் கிழக்கிலிருந்து மேற்காகப் பின் வாங்குகிறது.

எண் 11-ல் இருக்கும் இரவு படிப்படியாக 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 24, 23, 22, 21, 20, 19 எனப் பின்வாங்கி முடிவில் எண் 18-ஐ மீண்டும் அடைகிறது. பூகோளத்தின் அடுத்த சுழற்சியில் திரும்பவும் பழைய கதை ஆரம்பிக்கிறது.

அற்புதம் என்றால் இதுவன்றோ அற்புதம்!. சூரியன் பூமியைச் சுற்றினால் இந்த நிலை ஏற்படுமா?. பூகோளத்தின் சுழற்சியின் காரணமாக அதன் மீது கட்டுண்டு நிற்கும் இரவு மற்றும் பகல் பகுதிகளுக்குள் பூகோளம் ஓயாமல் சுழன்று கொண்டிருந்தால் அல்லவா இந்த நிலை ஏற்படும்!. இந்த நவீன அறிவியல் பேருண்மையை மேலும், மேலும் நிறுவிக் கொண்டிருக்கும் அற்புதமான மற்றுமோர் சொல்லோவியத்தையும் நீங்கள் பார்க்க வேண்டாமா?. அற்புதத் திருமறை கூறுவதைப் பாருங்கள்:

'இரவையும், பகலையும் அல்லாஹ்தான் புரட்டிக் கொண்டிருக்கின்றான். திண்ணமாக இதில் பார்வை உடையவர்களுக்கு ஒரு படிப்பினை இருக்கின்றது' (அல்-குர்ஆன் 24வது அத்தியாயம் ஸுரத்துந் நூரின் 44வது வசனம்).

பார்வையுடைய நண்பர்களே! நீங்கள் கூறுங்கள். இதில் படிப்பினை உண்டா?. இல்லையா?. சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் இரவோ, பகலோ எந்த இடத்திலாவது புரண்டு வருமா?. சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் இரவும் பகலும் பூமியின் மீது சுழன்று வருமேயன்றிப் புரண்டு வராது என்பதை விளக்கத் தேவையில்லை. அதே நேரத்தில் சூரியனுக்கு முன்னால் பூகோளம் சுழல்வதாக இருந்தால் நிலை என்ன?.

பூகோளத்தின் சுழற்சியின் காரணமாக உதய எல்லையில் மோதும் இரவு அதற்கப்பால் செல்ல இயலாமல் உதய எல்லையில் புரள்கிறது. அதைப் போன்று அஸ்தமன எல்லையில் மோதும் பகல் அஸ்தமன எல்லையில் புரள்கிறது. இந்த நிலைதானே ஏற்படும்!. எவ்வளவு அழுத்தம் - திருத்தமாக இச்சத்தியத் திருமறை பூகோளத்தின் சுழற்சியை எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்தீர்களா?. ஆனால் திருமறை கூறியதைப் போல் இந்த விஷயத்தில் பார்வையுடையவர்கள் யாரும் அப்போது இல்லாது போன காரணத்தால் மனித குலத்தால் இந்த வசனங்களில் காணப்படும் அரிய அறிவியலைப் புரிந்து கொள்ள இயலாமல் போயிற்று.

ஆனால்..! மாசு மருவற்ற இந்த சத்தியத் திருமறையின் ஜீவ வசனங்கள் சான்றளித்ததைப் போல் இந்த விஷயங்களில் பார்வையுடையவர்களாகிய கோபர் நிக்கஸ், கெப்ளர், கலீலியோ போன்ற அறிவியல் மேதைகள் வந்தவுடன் இத்தூய வசனங்களின் நிரூபண உண்மைகளைக் கண்டு நாம் வியந்து நிற்கிறோம்.

அன்பார்ந்த நண்பர்களே! சூரியக் குடும்பத்தின் இயக்கத்தைப் பற்றிய நவீன அறிவியலைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் பற்பல திருமறை வசனங்களை இத்தொடர்களில் கண்டு வந்தீர்கள். உண்மை எதுவோ அதை, அது எங்கிருந்து வந்த போதிலும் ஏற்றே ஆக வேண்டும் எனும் அளவிற்கு உண்மையின்பால் பற்றும் மரியாதையும் கொண்ட எவருக்குமே இதற்கு மேலும் இந்த வசனங்களில் ஐயமிருக்க முடியாது. இப்போது அவர்களிடம் எஞ்சி நிற்கக் கூடியது ஒரே ஒரு வினா மட்டுமே!

இராப்பகல் மாற்றத்திற்காகச் சூரியன் நகரத் தேவையில்லை எனில் சூரியனும் நகர்வதாகக் திருக்குர்ஆன் (21:33) கூறியதைக் கண்டோமே! குர்ஆன் கூறியதைப்போல் மெய்யாகவே சூரியன் நகர்கிறதா? நகர்கிறது எனில் அந்த நகர்வு எந்த வகையில் அமைந்துள்ளது?. இதைப்பற்றி திருக்குர்ஆன் ஏதேனும் விளக்கமளிக்கிறதா?. என்பதே அந்த வினாவாகும்.

மேற்படி வினாவுக்கும் திருமறை குர்ஆன் விடையளிக்கிறது:

'மேலும் சூரியன் (அவர்களுக்கோர் சான்றாகும்) அது தனக்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது பேரறிவு படைத்தவனும் வல்லமை மிக்கவனும் நிர்ணயித்தாகும்' (அல்-குர்ஆன் அத்தியாயம் 36 - ஸுரத்துல் யாஸீன் 38வது வசனம்).

இந்த தூய வசனம் இத்தலைப்போடு தொடர்பு கொண்ட மூன்று விஷயங்களைத் தெரிவிக்கிறது.

முதலாவதாக சூரியன் நகர்கிறது என்பது உண்மையே என்றும், இரண்டாவதாக அந்த நகர்வு பூகோளத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக்கூடிய நகர்வு இல்லையென்றும், மூன்றாவதாக சூரியனுக்கென்று ஒரு இடம் இருப்பதாகவும், அந்த இடத்திற்குத்தான் அது நகர்கிறது என்றும் கூறுகிறது.

இதில் காணப்படும் முதலிரண்டு விஷயங்களை அறிவியல் நிரூபித்துவிட்டதை விளக்கத் தேவையில்லை. ஆனால் மூன்றாவதாக சூரியனுக்கோர் இடம் இருப்பதாகவும், அதை நோக்கியே அது சென்று கொண்டிருப்பதாகவும் இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வசனத்தை மேலும் சற்று ஆழமாகப் பார்த்தால்தான் திருமறை கூறுகின்ற சூரியனுக்குரிய இடத்தை நம்மால் உய்த்துணர முடியும். அதன் பிறகுதான் அதை அறிவியலோடு ஒப்பிட்டு பார்க்கவும் இயலும். ஆகவே நாம் இந்த விஷயத்தை நாம் வேறு தலைப்பில் ஆய்வு செய்வோம். இன்ஷா அல்லாஹ்.

அதே நேரத்தில் இத்தலைப்புக்குத் தேவையான தகவல் ஒன்றை மிகத்தெளிவாக அவ்வசனம் கூறிக் கொண்டிருப்பதை நாம் மறந்து விடக் கூடாது. அதாவது சூரியனுடைய நகர்வால் இராப்பகல் மாற்றம் ஏற்படுகிறதா? என்ற வினா எழுமானால் இல்லவே இல்லை என்பதே திருமறையின் பதில்! ஏனெனில் சூரியன் நகர்வதாகக் கூறும் சத்தியத் திருமறை அந்த நகர்வின் இலக்கு எது என்பதையும் கூறிவிட்டது!.

திருமறையின் கூற்றில் இதற்கு மேலும் ஐயம் கொள்வோர் யாரேனும் இருந்தால் அவர்களைப் பார்த்து ஒரு வினா எழுப்புவோம். ஹாங்காங்கிலிருந்து, டெல்லியை நோக்கியும், டெல்லியிலிருந்து ஹாங்காங் நோக்கியும் முறையே இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில் ஒரே வேகத்தில் பறந்து வந்தால், அவையிரண்டும் ஒரே நேரத்தில் தரையிறங்குமா?. அல்லது வெவ்வேறு நேரங்களில் தரையிறங்குமா?. எப்படி?.


பின் வாங்கிச் செல்லும் இரவு









(வளரும் இன்ஷா அல்லாஹ்)
---------------------------
வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.பேரண்டப் படைப்பின் துவக்கம் -1

வாழத் தகுந்த கோள்-2

ஓசோன் -3

விண்ணகத்தின் பரப்பெல்லை -4

பேரண்டத்தின் ஈர்ப்பு விசை -5

விண்ணடுக்குகள் -6

உருண்ட பூமி -7

சுழலும் பூமி(1) -8

சுழலும் பூமி(2) -9

சழலும் பூமி(3) -10

Tuesday, September 06, 2005

வானத்தின் மீது பறந்தாலும்..!

மானுடப் பார்வையில் வானம் என்பது வரம்புக்கு உட்பட்டதாக இல்லை. மேல் நோக்கிப் பார்க்கும் கண்ணோட்டம் எதுவும் வானத்தைப் பார்ப்பதாகவே சொல்லப்பட்டு, மேலே பறக்கும் எதுவும் வானத்தில் பறப்பதாகவே பேச்சு வழக்கில் கூறப்படுகிறது.

சுமாரான உயரத்தில் பறக்கும் பறவைகளை வானத்தில் பறப்பதாகச் சொல்கிறோம், பல மடங்கு உயரத்தில் பறக்கும் விமானங்களையும் வானத்தில் பறப்பதாகவேச் சொல்கிறோம். அப்படியானால் வானம் என்பது உயரத்தில் இருக்கிறது என்றால் வானத்தின் துவக்கம் எது..?
மேகத்திலிருந்து மழை பொழிகிறது என்று நன்கு தெரிந்திருந்தாலும் வானத்திலிருந்து மழை பெய்கிறது என்றுதான் சொல்கிறோம். நட்சத்திரங்கள் அனைத்தும் வானத்தில் அறையப்பட்டிருக்கவில்லை ஆனால் வானத்தில்தான் நட்சத்திரங்கள் இருப்பதாகச் சொல்கிறோம் ஏன்..?

வானுக்கும் நிலவுக்கும் சம்பந்தமே இல்லை. வானத்தை விட்டால் நிலவுக்கு வேறு வழியில்லை என்று இலக்கியத்துடன் கவிஞர்களும் ஏராளமாக கவிதை இயற்றியுள்ளார்கள். இப்படி மானுடப்பார்வையில் வானம் அல்லது ஆகாயம் என்பது எது..? இதற்கு காவி பக்தர் ஆரோக்கியம் விளக்கமளித்தால் 'ரீல் எது 'ரியல்' எது என்பது நிதர்சனமாக விளங்கிவிடும்.

ஏழு வானங்கள்

விண்ணடுக்குகள் என்ற கட்டுரையில், இவைகள்தாம் ஏழு வானங்கள் என்று கட்டுரையாளர் எங்குமே கூறவில்லை. ஆனாலும் காவி பக்தர் ஆரோக்கியம் வரிந்து கட்டிக்கொண்டு ஏழடுக்கு மாளிகையில் விளக்கேற்றுகிறார் பொடு போக்காக!

கட்டுரையில் இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

//*நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் வசனம் மானிடக் கணகளுக்குப் புலப்படாத இரண்டு விஷயங்களைத் தெரிவிக்கின்றது. முதலாவது விஷயம் ஆகாயங்களின் எண்ணிக்கை மொத்தம் ஏழு. இதை மானிடக் கண்களும் பார்த்ததில்லை. அறிவியல் கண்களும் இதுவரை இதைப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே இது குர்ஆனுக்கு சாட்சி கூறுவதற்காகக் காத்திருக்கும் எதிர்கால விஞ்ஞானத்தைச் சார்ந்தது.*//

வேறொரு இடத்தில்..

//*நவீன அறிவியல் கண்டு பிடிப்புக்கள் இந்தக் கோணத்தில் முன்னேறிச் சென்றால் இதற்கு மேலும் உயர் பிரிவுகளைக் கண்டறிந்து முடிவாக இந்தப் பேரண்டத்திற்குள்ளாகவே எண்ணிறைந்த நட்சத்திர மண்டலங்கள் பரிசுத்த குர்ஆன் கூறியவாறு ஏழு முதன்மைத் தொகுதிகளாக - ஆம்! ஏழு ஆகாயங்களாக - அமைந்திருப்பதைக் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை என எண்ணத் தோன்றுகிறது.*//

இவ்வாறு, மிகத் தெளிவாக எழுதியிருந்தும் எழுத்துப்பிழையைக் கண்டுபிடித்த காவி பக்தர், கருத்துக்களில் கவனம் செலுத்தாமல் அவசரப்பட்டிருக்கிறார் அதாவது - ஹாரூன் யாஹ்யாவையும், அலி சின்னாவையும் சேர்த்துக்கொண்டு - அவலை நினைத்து உரலை..

//*ஆமாம் நட்சத்திரங்கள் எங்கே இருக்கின்றன?

ஜயானா அஸ்ஸமாஆ அத்துன்யா பிஜீனத்(ன்) அல் கவாகிபி 37:6,

என்ன பொருள்?

அஸ் ஸமாத் அத் துன்யா என்பதை மிகவும் அருகாமையில் இருக்கும் லேயர் என்றால், அது டிரோபோஸ்பியர். கவாகிப் என்றால் நட்சத்திரம் என்று பொருள் சொல்லலாம். சற்று ரீல் சுற்றினால் கிரகங்களைக் கூட அதில் சேர்க்கலாம். டிரோபோஸ்பியரில் எப்படி அய்யா நட்சத்திரங்களும் கிரகங்களும் இருக்கும்?

ரீல் சுற்றினாலும் குறைந்தது குரானுக்கு பொருந்தும்படி சுற்றக்கூடாதா?*//

ஆரோக்கியம்! உங்களின் அரபு வாசிக்கும் முயற்சியை வரவேற்கிறேன். ஆனால் அஸ்ஸமாத் என்று இல்லை.(அஸ்ஸமாத் என்றால் வேறு பொருள்) 'அஸ்ஸமாவு' என்றால் ''வானம்'' ஒருமை. 'அஸ்ஸமாவாத்' என்றால் ''வானங்கள்'' பன்மை. 37:6வது வசனத்திற்கு ஆரோக்கியம் தாமாகவே, இப்படித்தான் இருக்குமென்று விளங்கிக்கொண்டு //*டிரோபோஸ்பியரில் எப்படி அய்யா நட்சத்திரங்களும் கிரகங்களும் இருக்கும்?*// என்று உளறியிருக்கிறார்.

37:6. நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.

15:16. வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.

67:5. அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்.

இந்த மூன்று வசனங்களிலும் ''வானம்'' என்றே இறைவன் குறிப்பிட்டுச் சொல்கிறான். அலங்கரிக்கப்பட்ட வானம் - மானுடப்பார்வைக்கு அழகாக்கப்பட்ட வானம் - பூமிக்குச் சமீபமாக உள்ள வானம் - அதுதான் முதல் வானம். இங்கு வானம் என்றுதான் சுட்டப்படுகிறது வானத்தின் உட்பிரிவு அடுக்குகளைச் சொல்லவில்லை.

//*கவாகிப் என்றால் நட்சத்திரம் என்று பொருள் சொல்லலாம். சற்று ரீல் சுற்றினால் கிரகங்களைக் கூட அதில் சேர்க்கலாம்.*//

'அந்நஜ்ம்' 'கவாகிப்' 'புரூஜ்' மூன்று சொற்களுக்கும் தமிழில் என்ன விளக்கம் என்பதை காவி பக்தர் சொன்னால் திருக்குர்ஆனை திரிக்க முயல்வது யார் என்பது விளங்கிவிடும்.

//*ஏ கே அப்துர் ரஹ்மான் என்பவரது புத்தகத்தை வேலை மெனகெட்டு தட்டச்சி போட்டுக்கொண்டிருக்கிறார்.*//

அறிவியல் கட்டுரையை தட்டச்சிப் பதிப்பது வேலைமெனக்கெட்டது என்றால், எல்ஸ்ட் டையெல்லாம் தட்டச்சிப் போடுவதை எந்த லிஸ்டில் சேர்ப்பது..?

வஹி: இறைச்செய்தியும்- அறிவியலும்-10

சுழலும் பூமி(3) -10



ஏ.கே.அப்துர் ரஹ்மான்

ஓன்றுமில்லாத சூன்யப் பெருவெளியில் இந்தப் பிரம்மாண்டமான பேரண்டத்தையும், அதற்குள் நமது சூரியக் குடும்பத்தையும் படைக்க ஆற்றல் பெற்றவன் மாபெரும் பாக்கியவான். அந்த அதிகம்பீர ஆற்றலின் ஏகாதிபதி தன்னுடைய படைப்பில் உதிப்பதற்கும், அஸ்தமிப்பதற்கும் எல்லைகளை வடிவமைத்திருக்கும் தகவலைத் தந்து, அதன் வாயிலாகப் பூகோளம் சுழல்கிறது என்ற அறிவியல் பேருண்மையைத் தன் திருமறையில் ஓதி நிற்கிறான்.

சூரியன் பூமியைச் சுற்றவில்லை: பூகோளமே சுழன்று வந்து இராப்பகலைத் தோற்றுவிக்கிறது என்ற அறிவியலை இதோ தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் மேலும் மேலும் நிறுவிக் கொண்டிருக்கிறான் அந்த சர்வ சம்பூர்ண கேந்திரன்!. அவன் கூறுகிறான்:

'அவன் இரவைக் கொண்டு பகலை மறைக்கிறான். சிந்திக்கும் மக்களுக்கு இதில் சான்றுகள் இருக்கின்றன.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 13 ஸுரத்துர் ரஃதுவின் 03வது வசனம்).

இந்த வசனத்தில் இராப்பகல் மாற்றம் எவ்வாறு இயங்குகிறது எனத் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. அதாவது பகலாக இருந்த இடத்தை இரவு மறைப்பதால்தான் பகலாக இருந்த இடம் இரவாக மாறுகிறது என இவ்வசனம் கூறுகின்றது. எனவே பகலை இரவாக மாற்றும் பொருட்டு அப்பகலை இரவு மறைக்க வேண்டும் என்பது இவ்வசனத்தின் பொருள். இது எப்படிச் சாத்தியமாகும்?.

பகலை மறைக்கும் ஆற்றல் இரவுக்கு இருக்க முடியுமா?. ஆனால் இராப்பகல் மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிப் போக்கு இந்த அடிப்படையில்தான் செயல்படுகிறது என்பது திருமறையின் கூற்று!. இராப்பகல் மாற்றத்தின் இயக்கத்தை விளக்கும் இத்திருமறையின் கூற்றைப் புரிந்து கொள்ளும் பொருட்டு நாம் ஒரு சோதனையைப் புரிந்து கொள்வோம். அச்சோதனையில் இராப்பகல் மாற்றத்தின் நவீன அறிவியலைக் கொஞ்ச நேரம் மறந்து விட்டு, நமது பழங்கால நம்பிக்கையில் சோதனையைத் துவங்குவோம்.

இதோ கால்பந்து (FOOT BALL) அளவில் ஒரு உலகப் பந்தை தம் இரு கைகளாலும் ஒருவர் பிடித்திருக்கிறார். அப் பந்துக்கு கீழிலிருந்து அதன் மீது நீங்கள் ஒரு பென் டார்ச் (Pen Torch) அடிக்கிறீர்கள். இப்போது அப்பந்தின் டார்ச்சை நோக்கியிருக்கும் அரைவட்டம் வெளிச்சமாகவும், அதற்கு மறு பக்கம் இருக்கும் அரை வட்டம் இருட்டாகவும் இருக்கிறது.

இப்போது வெளிச்சப் பகுதி பகல் என்றும், இருட்டுப் பகுதி இரவென்றும் வைத்துக் கொள்வோம். திருமறை கூறுவதைப்போல் இரவால் பகலை மறைத்துப் பகலை நாம் இரவாக மற்ற வேண்டும். இதற்காக இப்போது என்ன செய்யலாம்?

இரவை நகர்த்திப் பகல் இருந்த இடத்திற்குக் கொண்டு வர வேண்டும்!. அதை எப்படிச் செய்வது? டார்ச்சை மெதுவாக நகர்த்திப் பார்ப்போமா?. இதோ நீங்கள் டார்ச்சை நகர்த்துகிறீர்கள். உடனே வெளிச்சப் பகுதி அது இருந்த அரை வட்டப் பகுதியிலிருந்து டார்ச் நகரும் திசையில் நகர்ந்து விடுகிறது.







(மேல் காணும் படம் உதாரணம்).

வெளிச்சம் நகர்ந்து விட்ட பிறகு அந்த வெளிச்சத்தை எப்படி இருட்டால் மறைப்பது?. சூரியனே பூமியைச் சுற்றி நகர்ந்தால் பூமியின் மீதுள்ள பகலும் நகர்ந்து விடுகிறது. எனவே பகலே விலகி ஒடுவதால் அந்த இடத்தில் இல்லாத பகலை எப்படி மறைக்க முடியும்?.

பெரிய சிக்கலைச் சந்தித்து விட்டோமே!. திருமறையோ சிந்திக்கும் மனிதர்களுக்கு இதில் சான்றுகள் இருப்பதாகக் கூறுகிறது. நாம் சிந்திக்கத் துவங்கிய உடன் நமது சோதனை திருமறைக்கு முரண்பட்டு நிற்பதை உணர்கிறோம். இதை எப்படித்தான் தீர்ப்பது?. என்ன நண்பரே! ஏதேனும் புலப்படுகிறதா?.

புலப்படுகிறது! அதாவது இறைவசனத்திற்கும், முந்தைய கட்டுரையில் கண்ட ('சூரிய ஒளியை) மறைக்கும்போது (வரும்) இரவின்மீது சத்தியமாக' (அல்-குர்ஆன் 91:4) என்ற வசனத்திற்கும் பொருள் கொண்டவாறு பொருள் கொண்டால் சிக்கலே இல்லை.

எப்படி? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்!.

அதாவது சூரிய ஒளிக்கு முன்னாலுள்ள பூகோளத்தின் பகல் பகுதி அதற்கு எதிர்புறம் உள்ள பகுதியை சூரிய ஒளி படாமல் மறைப்பதால் அங்கு இரவு ஏற்படுகிறது என அந்த வசனத்திற்குப் பொருள் கொண்டோமே! அவ்வாறு இதற்கும் பொருள் கொண்டால் சூரியனுக்கு முன்னால் பகல் ஏற்படுவதற்காக அதற்கு எதிர்புறம் உள்ள இரவு மறைத்திருக்கிறது என இந்த வசனத்திற்கும் பொருள் கொள்ள வேண்டியது தானே?. ஆகவே இந்தச் சோதனையில் தவறு ஏதும் இல்லை என எடுத்துக் கொள்ளலாமே?.

?! என்ன கூறுகிறீர்கள் நண்பரே! பகலாக இருக்கும் பகுதிக்குப் பின்னால் இரவு இருப்பதே இரவால் பகலை மறைக்கிறான் எனும் வசனத்திற்குரிய விளக்கமாகுமா?. அப்படிப் பார்த்தால் பகலுக்கும் பின் பக்கம் உள்ள இரவு மறைப்பதால்தான் பகல் ஏற்படுகிறதா?. ஏன் இப்படிக் குழப்பிப் போகிறீர்கள்?

'சூரிய ஒளியைப் பிரதி பலிக்கும்போது பகல்: சூரிய ஒளியை மறைக்கும்போது இரவு' எனப் பொருள் கொண்ட வசனங்கள் 'இரவு' மற்றும் 'பகல்' என்பதன் அமைப்பை விளக்குவது விலக்கணம் (Definition). ஆனால் 'இரவால் பகலை மறைக்கிறான்' எனும் வசனம் அந்த இராப்பகல் அமைப்பை ஏற்படுத்துவதற்காக நடைபெறும் இயக்கத்தைக் கூறும் வசனம். எனவே அமைப்பும், இயக்கமும் வெவ்வேறு விஷயங்கள் என்பதால் அவ்விரண்டும் கூறும் விஷயங்களும் வெவ்றானவை. எனவே நமது சோதனையில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க உருப்படியான யோசனை ஏதேனும் கூறுங்கள். சிந்தித்தால் சான்றுகள் கிடைக்கும் எனத் திருமறையே உத்திரவாதம் தருகிறது.

அப்படிப் பார்த்தால், அதாவது உங்களுடைய திருமறையின் கூற்றுப்படி பகலை இரவுதான் மறைக்க வேண்டுமாயின், அதற்காக இரவு நகர்ந்தே ஆக வேண்டும். இரவை நகர்த்த வேண்டுமென்றால் நாம் பென்டார்ச்சை நகர்த்தியாக வேண்டும். ஆனால் பென்டார்ச்சை நகர்த்தினால் உடனே டார்ச்சோடு சேர்ந்து வெளிச்சமும் (பகல்) ஓடிவிடுவதால் இல்லாத வெளிச்சத்தை (பகலை) எப்படி மறைப்பது என்று கேட்கிறீர்கள். எனவே இப்போது டார்ச்சை நகர்த்தாமல் நிறுத்தி விடலாம் என்று கருதினால் உடனே நகர வேண்டிய இரவு நகராமல் நின்று விடுகிறது.

நாம் கண்ட சோதனையில் இரவு நகர வேண்டுமானால், பகல் நகர்ந்தாக வேண்டும். எனவே ஒன்றின் நகர்வு இரண்டையும் நகர்த்துகிறது. திருமறை கூறியவாறு பகலை, இரவு மறைக்க வேண்டுமானால், பகல் நகராமல் இருக்க, இரவு நகர்ந்து அதனை மறைக்க வேண்டும்!. ஆனால் இரவைத் தனியாக நகர்த்த முடியாது.

ஆம்! திருமறையின் வசனம் மெய்ப்பிக்கப் பட வேண்டுமென்றால் மெய்யாகவே அற்புதம்தான் நிகழ்ந்தாக வேண்டியுள்ளது. பூகோளத்தில் இரவும், பகலும் நகராதிருக்கும் நிலையிலேயே அவை நகர(?) வேண்டியுள்ளது.

சிந்திக்கும்படி கட்டளையிட்ட இத்திருமறையின் ஆசிரியனே! நீயின்றிச் சிந்தனையை ஒளிரச் செய்பவன் யார்?.

சூரியன் பூகோளத்தைச் சுற்றி வருவதாகக் கொண்டு நடத்தப்பட்ட சோதனையைக் கொஞ்ச நேரம் மறந்து விட்டுத் திருமறையின் வசனத்தைச் சிந்திப்போம். ஏனென்றால் அச்சோதனை திருமறை கூறும் இராப்பகல் மாற்ற இயக்கத்தோடு முரண்படுகிறது. இச்சோதனையை மறந்துவிட்டுச் சிந்தித்தால் ஒன்றையொன்று மறைப்பதற்காக நடைபெறும் இயக்கமே இராப்பகல் மாற்றம் எனத் தெரிகிறது. இதில் மறையும் பொருள் பகல் என்றும், மறைக்கும் பொருள் இரவு என்றும் தெரிகிறது.

பகலை இரவு மறைக்க வேண்டுமென்றால் அதற்காக இயங்க வேண்டியது எது?. பகலைத் தேடி வந்து இரவு மறைக்கலாம். அல்லது இரவைத் தேடிப்போய் அதற்குள் பகல் மறையலாம்.

எப்படிப் பார்த்தாலும் ஒன்று நகர்ந்தால் மற்றொன்று நகரக் கூடாது என்ற பதிலே இப்போதும் கிடைக்கிறது. அதோடு ஒன்றை நகராமல் நிறுத்தினால் இரண்டுமே நகராமல் நின்றுவிடும் என்பதை நாம் புறக்கணிக்க முடியவில்லை!.

எனவே இரவும் பகலும் நகராமல் இருக்கும் நிலையிலேயே அவைகளை நகர்த்துவதற்கு(?) ஏதேனும் வழியுண்டா?. டார்ச்சைப் பிடித்துக் கொண்டு வெறுமனே நின்றிருந்தால் எப்படி?. சிந்தியுங்கள் நண்பரே!.

சிந்திக்கலாமா?. சிந்தனைதான் சிறந்த செல்வமாயிற்றே!. ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டு விஷயங்கள் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டுமானால் அதற்காக இரண்டு பொருட்கள் வேண்டும். ஆனால் இராப்பகல் இயக்கத்தில் பங்கேற்க சூரியனைத் தவிர வேறு எதைத் தேடுவது?.

இரண்டு பொருட்கள்..?..! ஆம்!. இரண்டு பொருட்கள்தாம் இருக்கின்றனவே! ஒன்று சூரியன் என்றால், மற்றொன்று பூமி!.

பூமியா?. பூமியை எப்படி இராப்பகல் இயக்கத்தில் இணைக்க முடியும்?. அதுபாட்டுக்கு அசையாமல் நின்று கொண்டிருக்கும் ஒரு பொருள்தானே!?.

அப்படியெல்லாம் அதைச் சும்மா அசையாமல் நிற்கவைத்து வேடிக்கைப் பார்த்தால் திருமறை வசனத்திற்கு அறிவியல் நிரூபணம் கிடைக்காமல் போய்விடும். எனவே நான் இதோ பந்தை பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் டார்ச்சிலிருந்து வரும் ஒளியை அதன்மீது பாய்ச்சுங்கள்.

இப்போது நீங்கள் டார்சசிலிருந்து வரும் ஒளியை அதன்மீது பாய்ச்சுகிறீர்கள். பந்தின் ஒரு பகுதியில் ஒளி வட்டமும் மறு பகுதியில் இருள் வட்டமும் கிடைக்கிறது. நீங்கள் டார்ச்சிலிருந்து வரும் ஒளியை நகர்த்தாதவரை இப்பந்தின் மீது படரும் வெளிச்சமும், இருட்டும் நகரப் போவதில்லை. எனவே டார்ச்சை நகராமல் பிடித்துக் கொள்ளுங்கள். இதோ இப்போது நான் மெதுவாகப் பந்தைச் சுழற்றுகிறேன். என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தீர்களா?.

ஆம்! அற்புதமான காட்சி! பந்தைச் சூழ்ந்திருக்கும் வெளியிடங்களில் இருட்டும் வெளிச்சமும் நகரவில்லை. ஆனால் பந்தின் மீது மட்டும் அவை நகர்கின்றன. அற்புதம்தான்!.

எதை அற்புதம் என்று கூறுகிறீர்கள் நண்பரே?. உங்கள் முன்னால் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதில் ஒரு பகுதியைத்தான் நீங்கள் கவனித்திருக்கிறீர்கள். ஆனால் மறு பகுதியையும் கவனித்தால் அதை வர்ணிக்க நீங்கள் வார்த்தைகள் தேட வேண்டியிருக்கும்!.

புரியவில்லையா?. பந்தின் மீது மட்டும் இருட்டும், வெளிச்சமும் நகர்வதாக கூறினீர்களே! எங்கே நகர்கிறது காட்டுங்கள்!.

இதோ!..ஆமாம்!. பந்தின் மீது கூட அவை நகரவேயில்லை. பந்து மட்டுமே நகர்கிறது! ஆ..! இதென்ன விந்தை?. இருட்டும் சரி: வெளிச்சமும் சரி: அவை இருக்கும் இடத்தைவிட்டுப் பந்தின் மீதும் அதற்கு வெளியிலும் நகராமல் கட்டுண்டு நிற்கின்றன. அதே சமயம் பந்தின் மீது நகரவும் செய்கின்றன.

ஒரே சமயத்தில் ஒரே பந்தின் மீது இருட்டும் வெளிச்சமும் நகராமல் இருக்கும்போதே அவை நகர்கின்றன!. இப்படிக் கூடவா இருக்க முடியும்?. ஆனால் இருக்கிறதே..!..!

என்ன நண்பரே! திகைத்து நிற்கிறீர்கள்?. இரவும் பகலும் இந்த பூகோளத்தின் மீது நகராமலேயே நகர்ந்து கொண்டிருப்பதன் இரகசியம் என்னவென்று புரிகிறதா?. இந்த அற்புதக் காட்சியைத்தானே நாம் ஆய்வு செய்த திருவசனம் உள்ளடக்கி நிற்கிறது?. ஆனால் உங்கள் கண்களுக்கு அது முரண்பாடாகத் தெரிந்தது. திருமறை என்ன கூறியதோ அதுவே இப்போது செய்முறைச் சோதனையாக உங்கள் கண்முன் வந்து நின்றதும் பேச்சிழந்து நிற்கிறீர்கள்!
தன்னுடைய வாய்மையை நிரூபிக்கும் பொருட்டு இப்படிப்பட்ட அறிவியல் பேருண்மைகளைத் தனது சாட்சிகளாக நிறுத்தியிருக்கும் ஒரு அற்புத வேதத்தையா மானிடர்களில் பலர் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றனர்?. அறியாமையல்லவா இது?.

சூரியனை நகராமல் நிறுத்தினால்தான் பூகோளத்தின் ஒரு பக்கம் பகலும், மறுபக்கம் இரவும் நிலை பெற்றிருக்கும். இப்படி நிலை பெற்றுவிட்ட இராப்பகலுக்குள் பூகோளம் சுழல்வதால்தான் பகல் மறைந்து இரவாக மாறுகிறது. அதைப்போல் இரவாக இருந்த பூமி சுழன்று போய்ப் பகலுக்குள் புகுந்து, பகல் மறைந்து இரவாக மாறுகிறது.

இராப்பகலின் இந்த இயக்கத்தை இப்படிக் கூடக் கூறலாம். அதாவது இராப்பகல் இயக்கம் என்பதே பகலுக்குள் இரவு புகுவதாலும், இரவுக்குள் பகல் புகுவதாலும் ஏற்படும் நிகழ்ச்சியே என்று.

..!அப்படிக் கூறினால் நீங்கள் கூறும் நிகழ்ச்சி, சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் ஏற்படாதா?.

எப்படி ஏற்பட முடியும்?. சூரியன் பூகோளத்தைச் சுற்றி வந்தால் பகல் நகர்ந்த இடத்தில் இரவு இடம் பிடிக்கும்: இரவு நகர்ந்த இடத்தில் பகல் இடம் பிடிக்கும். ஆனால் பகலுக்குள் இரவு புக வேண்டுமானால் பகல் நகராதிருக்க வேண்டும். அப்போதுதான் அதற்குள் இரவால் புகமுடியும். அதைப்போல் இரவு நகராதிருந்தால்தான் பகலால் இரவுக்குள் புக முடியும். எனவே இந்தக் கோணத்திலும் ஒரே நேரத்தில் பகலும், இரவும் நகரவும் வேண்டும். நகராதிருக்கவும் வேண்டும்(?).அப்போதுதான்..

இரவுக்குள் பகல் புகுத்தப்படும். அதைப்போல் பகலுக்குள் இரவும் புகுத்தப்படும். ஆனால் நிச்சயமாக இந்த நிலை சூரியன் பூகோளத்தைச் சுற்றி வந்தால் ஏற்படவே ஏற்படாது! அதில் எப்படி ஐயம் ஏற்பட முடியும்?.

நமது மற்றொரு ஆய்வைத் தாங்கள் மிக எளிதாக்கி விட்டீர்கள். இராப்பகல் மாற்றத்திற்காக நடைபெறும் நிகழ்ச்சியை எடுத்துரைக்க இத்திருமறை கூறிக் கொண்டிருக்கும் மற்றொரு அறிவியல் சான்றே அதுதான். திருமறை கூறுகிறது:

'நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான். பகலை இரவில் புகுத்துகிறான். சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான் என்பதை நீர் பார்க்கவில்லையா?..' (அருள்மறை குர்ஆனின் 31வது அத்தியாயம் ஸுரத்துல் லுக்மானின் 29வது வசனம், 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 61வது வசனம், 35வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபா(த்)திரின் 13வது வசனம், 57வது அத்தியாயம் ஸுரத்துல் ஹதீத் - ன் 6வது வசனம்)

பார்த்தீர்களா?. நமது சோதனையில் கண்ட அந்தக் கண் கொள்ளாக் காட்சியை, இன்று நீங்கள் அணுகிய அதே கோணத்தில் 1400 வருடங்களுக்கு முன்பே இந்த சத்தியத் திருமறை அணுகி சூரியன் பூமியைச் சுற்றவில்லை: மாறாகப் பூகோளமே சுழன்று வந்து இராப்பகல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று தெள்ளத் தெளிவாகக் கூறி நிற்கும் அற்புதத்தை! இதற்கு மேலுமா இந்தத் தூய வேதம் இறைவனுடைய வசனங்கள்தாமா என ஐயங்கொள்ள முடியும்?.

இதற்கு மேலும் தயங்கி நிற்பவர்களைத் தெளிவடையச் செய்து கொண்டிருக்கும் மற்றும் ஓர் அறிவியல் சான்றைத் திருமறைக் குர்ஆன் கூறிக் கொண்டிருக்கும் பாங்கினைப் பாருங்கள்.

'அவன் பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான்: இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான்..'(அருள்மறை குர்ஆனின் 39வது அத்தியாயம் ஸுரத்துஜ் ஜுமரின் 5வது வசனம்).

இவ்வசனம் இரவையும், பகலையும் இருவிதத் திரைகளாக பார்க்கிறது. இவ்விரு திரைகளும் சுருள்வதால்தான் இராப்பகல் மாற்றங்கள் நடைபெறுகின்றன என்பது இந்த வசனங்களின் கருத்து. இவ்வசனம் கூறுவதைப் போன்று இராப்பகல் திரைகள் சுருள வேண்டுமாயின் அதற்காக நடைபெறவேண்டிய நிகழ்ச்சி என்ன சூரியன் பூகோளத்தைச் சுற்றி வர வேண்டுமா? அல்லது பூகோளம் தன்னைத்தான் சுற்றிக் கொள்ள வேண்டுமா?.

முதலாவதாக இவ்வசனம் கூறிக் கொண்டிருக்கும் 'சுருளுதல்' என்ற சொல்லையே ஓர் ஆய்விற்கு உட்படுத்துவோம்.

எந்த ஒரு பொருளும், அது சுருள வேண்டுமாயின் அதைச் சுருட்டும் பொருளாக மற்றொன்று இருக்க வேண்டும். இதில் சுருளும் பொருளாக (இரவையும் பகலையும்) பூகோளம் அளிக்கிறது எனில் சுருட்டும் பொருளை சூரியனே அளித்தாக வேண்டும் என்பது தெளிவு. ஏனெனில் இராப்பகல் மாற்றத்தில் இவ்விரண்டுக்கும் மட்டுமே பங்குண்டு. சூரியனுடைய பங்களிப்பு இதில் ஒளியின் மூலமாகச் செயல்படுவதேயன்றி வேறில்லை. எனவே சுருளும் இராப்பகல்களை சுருட்டிக் கொண்டிருப்பது சூரிய ஒளியே.

அடுத்தபடியாக, சுருளும் செயலுக்குரிய சாத்தியக் கூறுகளைப் பார்ப்போம்.

'சுருளுதல்' எனும் செயல் நடைபெற வேண்டுமாயின் அதற்கென குறைந்த பட்சம் இரண்டு பொருட்கள் இருக்க வேண்டும் எனக் கண்டோம். அத்துடன் அவ்விரண்டும் இன்றியமையாத இரண்டு விதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

முதலாவதாக அவ்விரண்டு பொருட்களுமோ, அல்லது அவற்றுள் ஏதேனும் ஒன்றோ நகர்ந்தாக வேண்டும். அடுத்தபடியாக அவற்றின் நகர்வு எதிரும் புதிருமாக ஒன்றையொன்று சந்திக்கும் விதத்தில் நகர வேண்டும். அல்லது அவற்றுள் ஒன்று மட்டும் நகர்கிறது என்றால் நகராத பொருள் நிலைத்திருக்க அதைச் சந்திக்கும் விதத்தில் நகரும் பொருள் அதற்கு எதிராக நகர வேண்டும்.

இதைப் போன்று 'சுருளுதல்' எனும் செயல் நடைபெறாத நிலைகளும் உண்டு. எந்த இரு பொருட்களும் நகராது நின்று விட்டால் அவை ஒன்றையொன்று சுருட்டாது. அதைப்போல் ஒன்றைப் பின்பற்றி மற்றொன்று சம வேகத்தில் செல்லும் எந்த இரு பொருட்களும் ஒன்றையொன்று சுருட்டாது.

இப்போது சூரியன் பூகோளத்தைச் சுற்றி வருவதாக வைத்துக் கொள்ளுங்கள். அதாவது சூரியன் சுற்றிவந்தால் இராப்பகல்கள் சுருட்டப்படும் நிகழ்ச்சிகள் நடைபெற முடியுமா?.

சூரியன் நகர்வதால் பூகோளத்தின் மீது படும் அதனுடைய ஒளி பூகோளத்தின் மீதும் (அதற்கு வெளியிலும்) நகர்கிறது. ஒளி நகர்வதால் அந்த ஒளியைப் பின்பற்றி இருட்டும் நகர்கிறது. ஒளி என்ன வேகத்தில் நகர்கிறதோ அதே வேகத்தில் ஒளியைப் பின்பற்றி இருட்டும் நகர்கிறது. எனவே சூரியன் பூகோளத்தைச் சுற்றி வந்தால் ஒளியும், இருட்டும் ஒன்றைப் பின்பற்றி மற்றொன்று சம வேகத்தில் நகர்வதால் அவ்விரண்டும் ஒன்றையொன்று சுருட்டாது.

எனவே சூரியன் பூகோளத்தைச் சுற்றி வருவதாக் கொண்டால் அது திருமறைக்கு முரண்படுகிறது. அதாவது திருமறையின் ஆசிரியனாம் அகிலங்களின் இரட்சகனாகிய மிக்க மேலான அல்லாஹ்வுக்கு சூரியக் குடும்பம் பணியவில்லை எனக் கொள்வதற்கு ஒப்பாகும். ஆனால் அண்ட சராசரங்களும் அவனுக்கே பணிந்து கிடக்கும் பேருண்மைக்கு அறிவும், அறிவியலும் வலிய வலிய சான்றளித்துக் கொண்டிருப்பதால் சூரியக் குடும்பத்தின் இயக்கம் அவனுடைய கூற்றை மெய்ப்பிக்கும் விதத்தில்தான் அமைந்தாக வேண்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

எனவே பூகோளம் சுழல்கிறது என்று எடுத்துக் கொண்டால் நிலை என்ன?.

முன் கட்டுரையில் கண்டவாறு பூகோளத்தின் ஒரு பக்கம் பகலும், மறுபக்கம் இரவும் நிலைத்து விடுவதால் அவ்விரண்டையும் பிரித்துக்காட்டும் உதய மற்றும் அஸ்தமன எல்லைகள் கிடைக்கும். அந்த எல்லைக்குள் பூகோளம் எல்லையின்றிச் சுழன்று கொண்டிருப்பதால் ஒவ்வொரு கணமும் பூகோளத்தின் மீதுள்ள இரவுப் பகுதி சுழன்று வந்து நிலைபெற்று நிற்கும் பகல் பகுதியின் துவக்கக் கோட்டின்(உதய எல்லை) மீது மோதுகின்றன. மோதிய பிறகும் பூகோளம் தொடர்ந்து நகர்ந்து (சுழன்று) கொண்டிருப்பதால் அந்தப் பகலின் மீது இரவு சுருட்டப்படுகின்றது.

லேத்துப் பட்டறைகளில் கடையப்படும் உலோகங்களிலிருந்து சுருண்டு வரும் பிசிறைப் போல், உருளும் பூகோளத்தின் இருட்டுத் திரை பகலின் மீது சுருள்கிறது.

அதைப் போன்று பூகோளத்தின் சுழற்சியின் காரணமாக அதன் மீதுள்ள பகல் பகுதி சுழன்று வந்து நகராமல் நிலைபெற்று நிற்கும் இரவுப் பகுதியின் துவக்கக் கோட்டின் (அஸ்தமன எல்லை) மீது மோதி அதனுடைய வெளிச்சத்திரை இரவின் மீது சுருள்கிறது.

அற்புதமன்றோ இது!. சூரியன் பூகோளத்தைச் சுற்றி வந்தால் இந்த அரிய வர்ணணைக்கு ஆதாரம் கிடைத்திருக்குமா?.

சூரியக் குடும்பத்தின் இயக்கத்தையே!..அல்லது இயற்கை என்று கூறுகிறார்களே அதுவே ஆயினும் சரி!.. இலக்கிய நயத்துடன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் வாயிலாக நேர்முக வர்ணணை செய்து கொண்டிருக்கும் இப்படிப்பட்ட ஓர் ஒப்பற்ற கலைக் களஞ்சியத்தையா பகுத்தறிவுடையோர் புறக்கணிக்க முடியும்?.

மெய்யாகவே இவை இறைவனுடைய வார்த்தைகள் அல்ல என்று மறுப்பவர்கள், நேர்மையாளர்களாக இருந்தால் இதைப்போன்ற வேறு ஒரு அற்புதத்தை அவர்கள் காட்ட வேண்டும்!.

யார் காட்டுவார்கள்?.

சூரியன் பூமியைச் சுற்றவில்லை. மாறாகப் பூகோளமே தன்னைத்தான் சுற்றி இராப்பகல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது எனும் அறிவியல் பேருண்மை அறிவியல் உலகில் தியாக வரலாற்றைப் படைத்திருக்கிறது. 17ஆம் நூற்றாண்டில் அன்று வாழ்ந்த சிலர் பொய்யர்களாக செயல்பட்டு இந்த அரிய அறிவியலை அழித்தொழிக்கத் துடித்தனர். எதிர்காலத்தையும் அறிந்த இறைவன் இராப்பகல் இயக்கத்திற்குரிய ஆதாரங்களை மேலும் மேலும் கொட்டி வைத்திருக்கிறான் இத்தூய மறையில். அவைகளை இன்ஷா அல்லாஹ் அடுத்தக் கட்டுரையில் காண்போம்.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)
---------------------------
வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.
பேரண்டப் படைப்பின் துவக்கம் -1

வாழத் தகுந்த கோள்-2

ஓசோன் -3

விண்ணகத்தின் பரப்பெல்லை -4

பேரண்டத்தின் ஈர்ப்பு விசை -5

விண்ணடுக்குகள் -6

உருண்ட பூமி -7

சுழலும் பூமி(1) -8

சுழலும் பூமி(2) -9

Thursday, September 01, 2005

வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும்-9

சுழலும் பூமி(2) -9


ஏ.கே.அப்துர் ரஹ்மான்

இராப்பகலை நிகழ்த்துவதற்காக, சூரியன் பூகோளத்தைச் சுற்றி வரவில்லை என்பதை நாம் அறிவோம். ஆகவே சூரியன் ஒரே இடத்தில் நிற்கிறது. அதற்கு முன்னால் பூமி சுழல்கிறது. இப்போது இந்த அறிவியலை, சூரியனுடைய பெயரையோ, பூமியின் பெயரையோ நேரடியாகச் சம்பந்தப் படுத்தாமல் நாம் கூற வேண்டும். அதே நேரத்தில் அதில் அறிவியல் பிழையும் ஏற்படக் கூடாது. எப்படிக் கூறலாம்?.

சூரியனுக்கு முன்னால் முகம் காட்டி நிற்கும் பக்கத்தின் மீது பகலாகவே இருக்கும் என்பதை நாம் அறிவோம். அந்த இடத்தில் பகல் அகன்று, இரவு தோன்ற வேண்டுமாயின் என்ன காரியம் நிகழ வேண்டும்?. பூமி சுழல வேண்டும் என்ற வார்த்தையைத் தவிர்த்து, வேறு வார்த்தைகளால் அறிவியல் பிழை ஏற்படாமல் பதில் கூற வேண்டும்.

பகலாக இருக்கும் பூமி முகப்பிலிருந்து ஒளி விலகிவிடுவதால் இரவு ஏற்படுகிறது என்று கூறுவோமா?. கூடாது!. அப்போது அறிவியல் பிழை ஏற்பட்டு விடும். ஏனெனில் ஒளி விலகுகிறது என்று கூறினால் ஒளியுடைய மூலம் (அதாவது சூரியன்) விலகுவதாகவே பொருள்படும். ஆனால் ஒளியுடைய மூலம் விலகவில்லை. அது இருக்கும் இடத்திலேயே இருக்கிறது. எனவே ஒளி விலகாமல் ஒரே இடத்தில் அமைந்திருக்க, அந்த ஒளி பூமியின் மேல் படாதவாறு அதை மூடி மறைக்கும் நிகழ்ச்சியொன்று நடைபெறுவதால்தான் இரவு ஏற்படுகிறது எனக் கூறலாம். ஏனெனில் பூகோளத்தின் சுழற்சியின் காரணமாக பூமியின் ஒரு பகுதியை, மற்றொரு பகுதி (ஒளிபடாமல்) மறைப்பதால் தான் இரவு ஏற்படுகிறது. எனவே நாம் இப்போது இத்திருமறையை பார்த்து ஒரு வினாவை எழுப்புவோம்.

சத்தியத் திருமறையே! பூகோளத்தின் மீது பகலாக இருந்த இடம் இரவாக மாறுவதற்காக ஒளி நகர்கிறதா?. அல்லது ஒளி மறைக்கப்படுகிறதா?.

பதிலளிக்கிறது அம்மாமறை!. ஆணையிட்டு உறுதிப் படுத்துகிறது அந்த சத்தியப் பேரொளி!.

'சூரியனின் மீதும் அதன் ஒளியின் மீதும் சத்தியமாக! அதனை(சூரிய ஒளியை)ப் பின் தொடர்ந்து வரும் நிலவின் மீதும் சத்தியமாக! அதனை (சூரிய ஒளியை) வெளிப்படுத்தும் போது பகலின் மீதும் சத்தியமாக! அதனை (சூரிய ஒளியை)மறைக்கும்போது (வரும்) இரவின் மீதும் சத்தியமாக.. ஆத்மாவைப் பரிசுத்தமாக்கியவன் வெற்றியடைந்தான். எவன் அதைப் பாவத்தில் புகுத்தினானோ அவன் தோல்வி அடைந்தான்..' (அல் -குர்ஆன் 91வது அத்தியாயம் ஸுரத்துஷ் ஷம்ஸ் 1 முதல் 10 வரையிலுள்ள வசனங்கள்).

எவ்வளவு அற்புதமாக நாம் அணுகிய அதே கோணத்தில் நமக்கு இராப்பகல் நிகழ்ச்சியின் அறிவியலைப் பூகோளத்தின் சுழற்சியையோ, சூரியனின் நகராமையையோ நேரடியாகக் கூறாமல், பிழையின்றிக் கூறுகின்றன இவ்வசனங்கள்!.

சூரிய ஒளியை வெளிப்படுத்தும்போது - அதாவது அந்த வார்த்தைகளையே அறிவியல் மொழியில் கூறினால் பிரதிபலிக்கும் போது - பகல் ஏற்படும் என்பது சத்தியமே. இந்த ஒளி மறைக்கப்பட்டால் இரவு ஏற்படும் என்பதும் சத்தியமே!.

(அதைப் போல ஆத்மாக்களைப் பரிசுத்த மாக்கியவன் வெற்றியும், பாவத்தில் புகுத்தியவன் தோல்வியும் அடைவான் என்பதும் சத்தியம் என்பது இந்த வசனங்களின் மையக் கருத்து)

இராப் பகலின் அறிவியல் அமைப்பை இதே கோணத்தில் அணுகிய மற்றொரு வசனத்தையும் கவனியுங்கள்!.

'(சூரிய ஒளியை) மறைக்கும்போது (வரும்) இரவின் மீது சத்தியமாக! வெளிப்படும்போது (வரும்) பகலின் மீது சத்தியமாக! (அல் -குர்ஆன் 92வது அத்தியாயம் ஸுரத்துல் லைல் 1 முதல் 2 வரையிலுள்ள வசனங்கள்).

இந்த வசனங்களிலும் இரவை ஏற்படுத்தும் செயல் எதுவோ அது ஒளியை மறைக்கின்ற செயலே என்றும், பகலை ஏற்படுத்தும் செயல் எதுவோ அது மறைக்கப்பட்டதிலிருந்து ஒளியை வெளிப்படுத்தும் செயலே என்றும் கூறப்படுகிறது. இதன் வாயிலாக ஒளி விலகிச் சென்று மறைவதையும், திரும்பவும் தேடி வந்து தோன்றுவதையும் அடிப்படையாகக் கொண்ட புவி மையக் கோட்பாட்டை இவ்வசனங்கள் அர்த்தமற்ற தாக்கி, பூகோளத்தின் சுழற்சியையே ஆதாரப்படுத்துகின்றன.

இராப் பகலின் அமைப்பை விளக்கும் இவ்வசனங்கள் என்ன கூறுகின்றன என்பதை விளங்கிக் கொண்டோமல்லவா?. (இன்ஷா அல்லாஹ் இதில் அடங்கியுள்ள ஏனைய அறிவியல்களை வேறு தலைப்புகளில் காண்போம்). இராப்பகல் மாற்றத்தின் நவீன அறிவியலை இவ்வசனங்கள் வலியுறுத்துகின்றன என்பது உண்மையே!. எனினும் சூரியன் பூமியைச் சுற்றவில்லை என்பதை இவ்வசனங்கள் ஆணிதத்தரமாகக் கூறவிவ்வையே என இவ்வசனங்களைப் பற்பல கோணங்களில் சிந்திக்கும் யாருக்கேனும் ஐயம் எழுமா?.

இராப்பகல் மாற்றத்தின் நவீன அறிவியலை இவ்வசனங்கள் வலியுறுத்துகின்றன என்ற கூற்றே சூரியன் பூமியைச் சுற்றவில்லை என்பதைத்தானே ஆணித்தரமாக வலியுறுத்தும். பிறகு மேற்கண்ட ஐயம் எழுவது ஏன்?.

சூரியன் பூமியைச் சுற்றவில்லை என்றோ அல்லது பூகோளம் சுழன்று கொண்டிருக்கிறது என்றோ நேரடியாக ஏழாம் நூற்றாண்டில் (அதற்கு முன்போ அல்லது 17-ஆம் நூற்றாண்டு வரையிலுமோ) கூறியிருந்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை நாம் முன்னர் கண்டோம்.

ஆகவே சூரியன் பூமியைச் சுற்றவில்லை: மாறாக பூகோளம் சுழல்கிறது என்ற நேரடி வார்த்தைகளைத் தவிர்த்த நிலையில் இராப்பகல் நிகழ்ச்சியின் அறிவியல் அமைப்பையே விளக்க வேண்டுமாயின் இவற்றைப் போன்ற வார்த்தைப் பிரயோகங்களையும், அணுகுமுறைகளையும் தவிர வேறு வழி இல்லை என்பது, இதுவரை கூறப்பட்ட விஷயங்களிலிருந்து தெளிவாக விளங்கும்.

இதுவரை நாம் இராப்பகல் நிகழ்ச்சியின் அறிவியல் அமைப்பைப் பற்றிக் கூறும் வசனங்களில் சிலவற்றைக் கண்டோம். இவற்றிலிருந்து சூரியன் பூகோளத்தைச் சுற்றவில்லை: பூகோளம் சுழன்றுதான் இராப்பகலைத் தோற்றுவிக்கிறது என்ற அறிவியலை ஐயத்துக்கிடமின்றி விளங்கிக் கொள்ள இயலாதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களும் தெளிவடையும் பொருட்டு, அதற்கேற்ற ஆதாரங்களைப் பார்ப்போம்.

இராப்பகலைத் தோற்றுவிக்கும் நிகழ்ச்சி எதுவோ அதை மிகத் துல்லியமாக அறிவிக்கும் ஆதாரம் நாம் சென்ற இதழில் கண்ட துல்கர்னைன் அவர்களின் வரலாற்றை கூறும் வசனங்களிலேயே அடங்கியுள்ளது. அந்த வசனங்களில் அவருக்குத் தரை பயணத்தின் கடற்கரை 'எல்லை' யாகவும், கடல் வழிப் பயணத்தில் மனிதர்கள் வாழும் (நிலப் பகுதி) ''எல்லை' யாகவும் அமைந்தன. அத்துடன் அவருக்கு 'எல்லை' யாக அமைந்த ஆகாயப் பகுதியையும் திருமறை அடையாளம் காட்டுகிறது. (அக்கட்டுரையை மீண்டும் ஒரு முறை பார்க்க) அதாவது-

'அவர் புறப்பட்டார். சூரியன் அஸ்தமிக்கும் 'எல்லை' யை அவர் அடைந்தபோது.. என ஓரிடத்திலும்,

'மீண்டும் அவர் புறப்பட்டார். சூரியன் உதயமாகும் 'எல்லை'யை அவர் அடைந்துவிட்டார்' என மற்றோர் இடத்திலும் கூறப்பட்டுள்ளன. சூரியன் உதிப்பதும், மறைவதும் ஆகாயத்தில் என்பதால் ஆகாயத்தைப் பொருத்தவரை உதிக்க மற்றும் அஸ்தமிக்க எல்லை உண்டு என அவ்வசனங்களின் வாயிலாகத் திருமறை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

நல்லடியார் துல்கர்னைன் அவர்கள் நில, நீர்ப் பயணங்களைத்தான் மேற்கொண்டிருந்தார். அப்படியிருக்க அவர் இந்த உதயாஸ்தமன எல்லையை அடைய வேண்டுமாயின் அந்த எல்லைகள் ஆகாயத்தில் இருப்பினும் கூட, பூமியைத் தொடும் நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதும் இவ்வசனங்களிலிருந்து விளங்குகிறது.

இவ்வாறு திருமறை கூறும் விதத்தில் பூமியைத் தொடும் வகையில் உதயாஸ்தமனத்திற்கென எல்லைகள் இருந்தால் அவை எங்கிருக்கின்றன?. (இதைக் கண்டுபிடித்து விட்டால் அந்த உதயாஸ்தமனத்தின் சுற்று வட்டாரங்களில் தேடி யஃஜுஜ், மஃஜுஜைக் கண்டு பிடித்து விடலாமே என்று சகோதரர்கள் யாருக்கேனும் ஆசை பிறக்கலாம். நடக்கக் கூடிய காரியமா இது?. இறுதி நாள் சமீபிக்கும் வரை மறைந்திருக்க வேண்டிய விஷயத்தை நாம் இப்போதே கண்டு பிடித்து விடும் அளவிற்கா திருமறை நம்மிடம் பேசப் போகிறது?).

நிற்க!. புவிமையக் கோட்பாட்டிற்கிணங்க இந்த பூகோளம் அறைந்து வைத்தாற்போல் ஒரே இடத்தில் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த நிலையிலும் உதயாஸ்தமனங்களுக்கான எல்லை இருந்தால் அவை உலகின் எந்த நிலப் பகுதியைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன?.

பூகோளம் சுழலவில்லை என்பதே இத்திருமறையின் கூற்றானால், உதயஸ்தமனங்களின் எல்லைகள் எந்த நிலப்பகுதியைத் தொடுகின்றன என்பதை நிச்சயம் காட்ட முடியுமே!. இருந்தும் ஏன் காட்ட முடியவில்லை?. ஆகவே பூகோளம் சுழன்று கொண்டிருக்கிறது என இந்த வசனங்கள் தெளிவு படுத்தவதை ஒப்புக் கொள்கிறீர்களா? இல்லையா?.

என்ன கூறுகிறீர்கள் நண்பர்களே!.

எல்லையென்று எதைக் கூறுகிறீர்கள் என எதிர்க் கேள்வியை எழுப்புகிறீர்களா?.

'எல்லை' என்பதன் பொருள் வேறொன்றுமன்று. ஏதேனும் ஒரு பொருளோ, ஒரு இயக்கமோ ஒரு குறிப்பிட்ட பரப்பளவாலோ, அல்லது விதி முறையாலோ தடைபட்டிருப்பதற்குப் பயன்படும் தடுப்பே 'எல்லை'யாகும். இதன் பொருள் யாதெனில் அத்தடுப்பை மீறியோ, அல்லது அதற்கு வெளியிலோ அவை (தடுக்கப்பட்டவை) இல்லையென்பதாகும். எனவே எல்லை என்பதன் பொருளை நாம் புரிந்து கொண்டோம். இதற்கிணங்க திருமறை கூறும் எல்லைகளை யாராவது காட்ட முடியுமா?.

முடியுமா என்பதற்காக நாம் ஒரு சோதனையைச் செய்து பார்ப்போம். பூகோளம் சுழலவில்லை. சூரியன்தான் பூகோளத்தைச் சுற்றி இராப்பகலை ஏற்படுத்துவதாகக் கருத்தில் கொண்டு பூகோளத்தைச் சுற்றிச் சூரியனை ஒரு முறை வலம் வரச் செய்து பார்ப்போம். (கற்பனையில்தான்).

சோதனையின் துவக்கமாக விவாதப் பொருளாகியச் சூரியனைப் பசிபிக் சமுத்திரத்தின் உச்சியில் நிறுத்துவோம். இப்போது பசிபிக்கின் மையப் பகுதியில் நண்பகலும், அதன் இரு ஓரங்களிலுமுள்ள அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் முறையே அஸ்தமனமும் உதயமும் நிகழ்ந்து கொண்டிருக்கும். இந்த நிலை வெறும் பூமியில் மட்டும் நிகழவில்லை. பூமிக்கு மேலுள்ள ஆகாய முகடுகளிலும் அவை நிகழ்ந்து கொண்டிருக்கும்.

இப்போது நாம் சூரியனை சீனாவை நோக்கி மெல்ல நகர்த்துகிறோம். சீனாவிலிருந்து உதயம் இப்போது காஸ்பியன் கடலை நோக்கியும், அமெரிக்காவிலிருந்த அஸ்தமனம் பசிபிக் நோக்கியும் நகர்கின்றன. ஆனால் உதயமும், அஸ்தமனமும் பூமியில் மட்டும் நகரவில்லை: பூமியைச் சூழ்ந்திருக்கும் ஆகாய முகட்டிலும் நகர்கின்றன.

சூரியனை மேலும் நகர்த்துகிறோம். கூடவே உதயமும், அஸ்தமனமும் பூமியில் மட்டுமல்லாது, ஆகாயத்திலும் நகர்ந்து வருகின்றன. இப்போது நாம் சூரியனை மேலும், மேலும் நகர்த்திச் சீனாவைத் தாண்டி, ஐரோப்பாவைக் கடந்து அட்லாண்டிக் சமுத்திரம், அமெரிக்கா என யாவையும் தாண்டிப் பழையபடி பசிபிக் சமுத்திரம் மீதே நிறுத்துகிறோம்.

கூடவே உதயமும், அஸ்தமனமும் சீனாவைத் தாண்டி, ஐரோப்பா, அட்லாண்டிக் சமுத்திரம், அமெரிக்கா என யாவையும் தாண்டிப் பழையபடி சீனாவில் உதயமும் அமெரிக்காவில் அஸ்தமனமும் காட்சியளிக்கிறது. ஆனால் அவை பூமியில் மட்டும் நகர்ந்து வரவில்லை. உதயமும், அஸ்தமனமும் ஆகாய முகட்டிலும் நகர்ந்து வந்தன.

நாம் பூகோளத்தைச் சுற்றிச் சூரியனை முழுமையாக ஒரு முறை வலம் வரச் செய்து பார்ப்போம். இதில் உதயமோ, அஸ்தமனமோ பூமியிலோ, ஆகாகத்திலோ எந்த ஒரு பரப்பளவாலாவது தடுத்து வைக்கப்பட்டதா?. சூரியனின் நகர்விற்கேற்ப பூமியிலும், ஆகாயத்திலும் அவை ஒன்றிணைந்து நகர்ந்து வந்தன. இதன் காரணமாகப் பூமி பரப்பின் மீது ஒவ்வொரு புள்ளியிலும் அதனோடு தொடர்பு கொண்ட ஆகாயத்திலும், சூரியன் புள்ளி, புள்ளியாக உதித்தது: புள்ளி, புள்ளியாக அஸ்தமித்தது.

படம் 1. சூரியன் பூமியைச் சுற்றுவதைக் காட்டும் படம்:



(எல்லையற்ற உதயமும் அஸ்தமனமும்)

எனவே பூகோளத்தைச் சுற்றிச் சூரியன் வலம் வந்தால் எல்லையில்லாமல் உதித்துக் கொண்டும், எல்லையில்லாமல் அஸ்தமித்துக் கொண்டும் இருக்கக் கூடிய ஒரு காட்சியைத்தான் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் சத்தியத் திருமறையோ 'உதிக்கும் எல்லை' மற்றும் 'அஸ்தமிக்கும் எல்லை' என்ற சொற்களால் உதயத்தையும், அஸ்தமனத்தையும் தோற்றுவிக்கும் ஆகாயப் பகுதி எல்லைக்கு உட்பட்டதே எனக் கூறுகிறது.

சத்தியத் திருமறையின் இக்கூற்று மெய்ப்பிக்கப் பட வேண்டுமாயின் சூரியக் குடும்பத்தின் இயக்கம் எந்த நிலையில் அமைக்கப் பட்டிருக்க வேண்டும்?. அல்லது இயற்கை(?)-ஆம்! அது என்னவோ இயற்கை இயற்கை என்று கூறி அந்த அர்த்தமற்றச் சொல்லை அர்த்தங்களின் பிறப்பிடமான இறைவனின் அரியாசனத்தில் அமர்த்தப் பார்க்கிறார்களே! - அந்த இயற்கை எதுவாக இருந்தாலும் அது - அது கூட இந்தச் சத்தியத் திருமறையை மெய்ப்பிக்கும் பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறது என்பதை இயற்கை அபிமானிகள் கண்டறியும் பொருட்டு இந்த இயற்கையின் இயக்கம் எப்படி இருந்தால் சத்தியத் திருமறை மெய்ப்பிக்கப்படும் என்பதைப் பார்ப்போம்.

சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் உதயாஸ்தமனங்களுக்கு எல்லைகள் கிடைப்பதில்லை என்பதால் சத்தியத் திருமறை அதனை மறுக்கிறது எனக் கண்டோம். புவி மையக் கோட்பாட்டை சத்தியத் திருமறை மறுக்கிறது என்பதற்கு ஆணித்தரமான ஆதாரம் தேடுவோருக்கு இது தெளிவான ஆதாரம். அடுத்தபடியாக சத்தியத் திருமறையை மெய்ப்பிக்கும் ஆதாரத்திற்காக அடுத்த கட்டச் சோதனையில் சூரியக் குடும்பத்தின் இயக்கத்தை கொஞ்சம் மாற்றியமைத்துப் பார்ப்போம். அதாவது சூரியனுக்கு முன்னால் கொஞ்சம் பூகோளத்தைச் சுழலவிட்டுப் பார்ப்போம்.

சோதனையின் துவக்கமாக இப்போதும் சூரியன் பசிபிக் சமுத்திரத்தின் மீதே காயட்டும். இப்போதும் பழையபடி சீனாவில் உதயமும், அமெரிக்காவில் அஸ்தமனமும் நிகழ்ந்து கொண்டிருக்கும். நாம் பூகோளத்தை மெல்லச் சுழற்றுகிறோம். (இதற்கு முந்தைய உதாரணத்தில் சூரியனைச் சுழற்றினோம்).

பூகோளத்தைச் சுழற்றத் துவங்கியதும் சீனா பொருந்தி நின்ற ஆகாயப் பகுதியிலிருந்து விலகத் துவங்குகிறது. விலகி வந்த சீனா பசிபிக் சமுத்திரம் பொருந்தி நின்ற ஆகாயப் பகுதிக்குள் நுழைந்து முற்பகலாகி மீண்டும் நகர்ந்து நண்பகலாக மாறுகிறது. பூ பரப்பின் மீது சீனா அடைந்த மாற்றத்தைக் கண்ணுற்ற நாம் இப்போது ஆகாயத்தைப் பார்க்கிறோம். வியந்து நிற்கிறோம்.

ஆம்!. பூகோளத்தின் சுழற்சியால் பூ பரப்பின் மீது உதயம் நகர்ந்த போதும் ஆகாயத்தைப் பொருத்தவரை அது நகரவே இல்லை. நின்ற இடத்திலேயே மீற முடியாத விதிக்குக் கட்டுப்பட்டு இயங்கிக் கொண்டிருந்தது. இதன் காரணமாக நகராமல் நிலை பெற்ற உதயப் புள்ளிக்குள் நுழைந்து செல்லும் நிலப்பரப்பு எதுவாயினும் அவற்றின் மீது அந்த உதயப் புள்ளி உதயத்தை நிகழச் செய்கிறது.

அவ்வாறே அஸ்தமனமும். அமெரிக்கா பொருந்தி நின்ற ஆகாயப் பகுதியில் அஸ்தமனம் நிகழ்ந்து கொண்டிருக்கையில் அமெரிக்கா அங்கு இருந்த போது அமெரிக்காவில் அஸ்தமனம் நிகழ்ந்தது. அமெரிக்கா அப்புள்ளியை விட்டு நகர்ந்ததும் அமெரிக்கா அஸ்தமனத்தை இழந்து, முன்னிரவாகி, நள்ளிரவை நோக்கிச் செல்கிறது. ஆனால் ஆகாயத்தில் எந்த மாறுதலும் இல்லை!. அஸ்தமனத்தை நிகழ்த்திக் கொண்டிருந்த ஆகாயப் பகுதி இந்த அஸ்தமனத்தையே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.


படம் - 2 பூகோளத்தின் சுழற்சியைக் காட்டும் படம்




(எல்லையற்ற உதயமும், அஸ்தமனமும்)

சுழன்று வரும் பூகோளத்தின் நிலப் பரப்புகளில் எவையெல்லாம் உதயப் புள்ளிக்கும், அஸ்தமனப் புள்ளிக்கும் வெளியே உள்ளனவோ, அவைகள் எதிலுமே உதயஸ்தமனங்கள் இல்லை. ஆனால் எதெல்லாம் அதற்குள் இருந்தனவோ அவைகள் எதிலும் உதயாஸ்தமனங்கள் இல்லாமலில்லை.

ஆம்! உதயப் புள்ளியில் நிலை பெற்று நிற்கும் உதயம் அப்புள்ளிக்கு வெளியே இல்லை! அஸ்தமனப் புள்ளியில் நிலைபெற்று நிற்கும் அஸ்தமனம் அப்புள்ளிக்கு வெளியே இல்லை.

பூகோளத்தை மேலும் சுழற்றி, சீனாவைப் பசிபிக் சமுத்திரம் பொருந்தி நின்ற ஆகாயப் பகுதியைத் தாண்டி, அமெரிக்கா பொருந்தி நின்ற ஆகாயப் பகுதிக்கு கொண்டு வந்ததும் சீனா இப்போது அஸ்தமனத்தைக் காட்டியது. (இதற்காக அஸ்தமன எல்லையென்பது அமெரிக்கா என்று யாரும் எண்ணிவிடாதீர்கள். பூகோளத்தின் மீதுள்ள எந்த ஒரு புள்ளியும் உதய எல்லையோ, அஸ்தமன எல்லையோ ஆக முடியும். இதிலிருந்து துல்கர்னைன் அவர்கள் தம்முடைய தரை வழிப் பயணத்தின் கடற்கரையை அடைந்த போது, பூகோளத்தின் சுழற்சியின் காரணமாக உதய எல்லையை அந்த கடற்கரை எட்டிவிட்டது என்பதே இதன் பொருள்.

பூகோளம் சுழல்கிறது என்ற அறிவியலை அதியற்புதப் படைப்பாளனாம் அல்லாஹ் (ஜல்) இவ்வசனத்திற்குள் பொருத்த வில்லையானால், உதய எல்லை, அஸ்தமன எல்லை போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருக்க மாட்டான். இந்த அறிவியலை இந்த வசனங்களிலிருந்து நீக்கி விட்டுப் பார்த்தால் அவ்வசனங்களின் பொருள் இதுவே. அதாவது:-

'சூரியன் மறையும் வேளையில் அவர் ஓர் நீர் நிலையை அடைந்தார்.'

'சூரியன் உதிக்கும் வேளையை அவர் எட்டிவிட்டார்.'

எனவே அறிவியல் நீக்கப்பட்ட வசனம் வெறும் நேரத்தை மட்டும் குறிக்கும். அப்படியிருந்தும் அற்புதமான சொற்களைப் பயன்படுத்தி பூகோளம் சுழல்கிறது என்பதையும், அதைக் கருவாய்க் கொண்ட வசனங்களிலேயே பூமி கோள வடிவம் கொண்டது என்ற அறிவியலையும், இந்த அற்புதத் திருமறை பறைசாற்றி நிற்கிறதே! இப்படிப்பட்ட அற்புதத்திற்கு நிகராக வேறு எதையாவது நம்மால் கூற முடியுமா?.

பூகோளத்தை மேலும் சுழற்றினால் சீனா மேலும் நகர்ந்து வந்து ஐரோப்பா பொருந்தி நின்ற ஆகாயப் பகுதிக்குள் புகுந்து நள்ளிரவில் அடங்கி விடுகிறது. நாம் புதிய சுழற்சியைத் துவக்கினால் மீண்டும் சீனா உதயத்துப் புள்ளிக்குள் நகர்ந்து வந்து புதிய உதயத்தை அடைகிறது. ஆனால் ஆகாயத்தில் எந்த மாறுதலும் இல்லை. அவ்வாறே அமெரிக்காவும். அஸ்தமனப் புள்ளிக்குள் இருந்து அது முன்னிரவு, நள்ளிரவு எனத் தாண்டித் துவக்கத்தில் சீனா பொருந்தி நின்ற ஆகாயப் பகுதிக்குள் நுழைந்த போது அது உதயத்தை எட்டிப் பிடித்தது. மேலும் சுழன்று பசிபிக் இருந்த இடத்தைக் கடந்து அமெரிக்கா இருந்த இடத்திற்குத் திரும்பியதும் மீண்டும் அஸ்தமனத்தைக் காட்டுகிறது.

ஆனால் ஆகாயத்தில் எந்த மாற்றமும் இல்லை. உதயப் புள்ளியில் உதயமும், அஸ்தமனப் புள்ளியில் அஸ்தமனமும் கட்டுண்டு நின்றன.

இதோ இப்போது சுழன்று கொண்டிருக்கும் பூகோளம் சூரியனைச் சுற்றி வலம் வரத் துவங்குகிறது. கூடவே உதயப் புள்ளியும், அஸ்தமனப் புள்ளியும் பூகோளத்தோடு நகர்கின்றன. நகர்ந்து, நகர்ந்து எங்கு செல்கின்றன இவை?.

பரிசுத்த குர்ஆனின் ஆசிரியனாகிய இறைவன் மிகத் தூயவன். அவனுடைய சத்தியத் திருமொழியாம் 'இரவும் பகலும் அவைகளுக்குரிய மண்டலங்களில் செல்கின்றன- எனப் பொருள் கொண்ட (21:33) வசனத்தையும் மெய்ப்பிக்கும் பொருட்டு இலக்கு வைத்துப் பாயும் இப்புள்ளிகள் இதோ அழகிய எல்லைக் கோடுகளாக விரிவடைகின்றன. அந்த எல்லைக் கோட்டுக்கு ஒரு புறம் பகல்! மறுபுறம் இரவு! அவ்விரண்டுக்கும் மத்தியில் கட்டுண்டு செல்லும் ஒன்றிணைந்த உதயாஸ்தமன எல்லைக்கோடுகள். இவை யாவும் அவைகளுக்கே உரிய பாதையில் சூரியனைச் சுற்றி வட்டமடிக்கின்றன.

படம்: 3 சுழலும் பூமியின் நீள் வட்டச் சுற்றுப் பாதை.




(எல்லைக் கோட்டில் செல்லும் உதயாஸ்தமனங்கள்)

இக்கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்தீர்களா நண்பர்களே?. இதற்கு மேலும் இப்பரிசுத்தத் திருமறையை இறைவனுடைய வார்த்தைகளில்லை என்று மறுக்க அறிவோ, அறிவியலோ அல்லது மனசாட்சியோ இடம் தருமா?.

உதிப்பதற்கும், மறைவதற்கும் எல்லையுண்டு எனப் பரிசுத்த குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பறைசாற்றி, சூரியன் பூமியைச் சுற்றவில்லை: மாறாகப் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது என்ற அறிவியலைக கூறி நிற்கிறதே! அந்த கூற்றை நிரூபிப்பதற்கென்றே சூரியக் குடும்பம் - அல்லது அந்த இயற்கையாயினும் சரி-அடிபணிந்து, கட்டுண்டு இயங்கி வருகிறதே! நிலைமை இவ்வாறிருக்க இந்தத் தூய வேதத்தைப் புறக்கணிக்கும் அளவிற்கு நோய்வாய்ப்படுவது மிகத் துர்பாக்கியமல்லவா?.

இத்தூய வேதத்தில் கூறப்பட்ட விஷயங்களை மீற முடியாமல் விண்ணும், விண்ணிலள்ளவைகளும், மண்ணும், மண்ணிலுள்ளவைகளும் பணிந்து செல்லும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்?. ஆகவே இப்பேரண்டப் பொதுக்குழுவிலிருந்து ஒதுங்கி நிற்பது பேராபத்து!. ஏனெனில் நாம் இதற்குள் பிறந்து, இதிலேயே வாழ்ந்து, இதிலேயே மடிகிறோம். எனவே நம்மை ஐக்கியப் படுத்திக் கொள்வதற்காக நாம் அத்தூய வேதத்திற்குப் பணியத் தயாராகி விடுவோம்.

சூரியன் பூமியைச் சுற்றவில்லை: பூகோளமே சுழன்று வருகிறது என்பதற்கு மேலும் அசைக்க முடியாத ஆதாரங்களையும் மானிட சமுதாயத்தை விளித்தோதுகிறது இச்சத்தியத் திருமறை. அவற்றை இன்ஷா அல்லாஹ் வரும் கட்டுரைகளில் காண்போம்.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

---------------------------
வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.
பேரண்டப் படைப்பின் துவக்கம் -1

வாழத் தகுந்த கோள்-2

ஓசோன் -3

விண்ணகத்தின் பரப்பெல்லை -4

பேரண்டத்தின் ஈர்ப்பு விசை -5

விண்ணடுக்குகள் -6

உருண்ட பூமி -7

சுழலும் பூமி(1) -8