tag:blogger.com,1999:blog-94571002024-03-13T13:33:44.720-07:00விமர்சனம் - விளக்கம்இஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டுகளும் பதில்களும் - தமிழில்அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comBlogger205125tag:blogger.com,1999:blog-9457100.post-33554609783028798432014-01-07T21:53:00.000-08:002014-03-04T08:14:49.760-08:00உருவ பொம்மைகள் வீட்டில் வைத்திருக்கலாமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<br />
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
(<a href="http://satyamargam.com/islam/for-muslims/2240-2240.html" style="color: #0b22a1;">உருவப்படம்
வரைதல் - ஓர் ஆய்வு
பகுதி-1ஐப் படிக்க
இங்கே க்ளிக்கவும்</a>)</span></div>
<span style="font-family: TheneeUniTx;">
<br />
</span><br />
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><span style="font-weight: 700;">
உருவ பொம்மைகள்
வீட்டில்
வைத்திருக்கலாமா?</span></span></div>
</div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><span style="font-weight: 700;"><br /></span></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
உயிரினங்களின் உருவச்
சிலைகளுக்கும் உருவ
பொம்மைகளுக்கும்
வித்தியாசமில்லை.
வணங்கி வழிபாடு
நடத்தினால் அது சிலை;
வைத்து விளையாடினால்
அது பொம்மை. இங்கு
எண்ணம் - நோக்கம்
வேறுபடுகின்றது.
மரியாதை தரும் வகையில்
இருந்தால் அது
வணக்கத்தின்
துவக்கமாக
அமைந்துவிடும்.
விளையாட்டுப்
பொருளாகவோ மிதிபடும்
மதிப்பற்ற வகையில்
இருந்தாலோ அவை
வீட்டில் இருக்கத்
தடையேதும் இல்லை. நபி
(ஸல்) அவர்கள்
காலத்தில், அன்னையர்
குழந்தைகளுக்கு
விளையாட்டுப்
பொருட்களைச் செய்து
கொடுத்தனர்.
<br />
<br />
<strong>
<span style="color: teal;">
நபி(ஸல்) அவர்கள்,
ஆஷுரா தினத்தில்
காலையில் அன்ஸாரிகளின்
கிராமங்களுக்கு
ஆளனுப்பி, "யார்
நோன்பு
நோற்காதவராகக் காலைப்
பொழுதை
அடைந்துவிட்டாரோ அவர்
இன்றைய தினத்தின்
எஞ்சிய நேரத்தை
</span></strong>
<span style="color: teal;">
(நோன்பாக)</span><strong><span style="color: teal;">
நிறைவு செய்யட்டும்!
யார் நோன்பாளியாகக்
காலைப் பொழுதை
அடைந்தாரோ அவர்
நோன்பைத் தொடரட்டும்!"
என்று அறிவிக்கச்
செய்தார்கள். நாங்கள்
அதன் பின்னர்
அந்நாளில் நோன்பு
நோற்கலானோம்; எங்கள்
சிறுவர்களையும்
நோன்பு நோற்க
வைப்போம்.
கம்பளியாலான
விளையாட்டுப்
பொருட்களை
அவர்களுக்காக நாங்கள்
செய்வோம்; அவர்கள்
</span></strong>
<span style="color: teal;">
(பசியால்)</span><strong><span style="color: teal;">
உணவு கேட்டும்
அழும்போது நோன்பு
முடியும் நேரம் வரும்
வரை </span></strong>
<span style="color: teal;">
(அவர்கள் பசியை
மறந்திருப்பதற்காக)</span><strong><span style="color: teal;">
அவர்களிடம் அந்த
விளையாட்டுப்
பொருட்களைக்
கொடுப்போம்.</span>
</strong>(அறிவிப்பாளர்:
ருபய்யிவு பின்த்
முஅவ்வித் (ரலி)
நூல்கள்:
<a href="http://www.chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=1960" style="color: #0b22a1;">
புகாரி 1960</a>,
முஸ்லிம் 2091).<br />
<br />
சிறுவர் சிறுமியருக்கு
நோன்பு கடமையில்லை
என்றாலும்
நோன்புக்கான பயிற்சி
அளிக்க நபித்தோழியர்
சிறுவர், சிறுமியரை
நோன்பு நோற்க
ஆர்வமூட்டுவார்கள்.
குழந்தைகள் பசியில்
அழுதால், விளையாட்டுப்
பொருட்களைச் செய்து
கொடுத்து அவர்களின்
கவனத்தைத்
திருப்புவார்கள் என
மேற்கண்ட
ஹதீஸிலிருந்து
விளங்குகிறோம்.
விளையாட்டுப்
பொருட்களில்
பொம்மைகளும் இருந்தன
என்பதற்குச் சான்றாக,
முதல் பகுதியில்
இரண்டாம் வகை ஹதீகளில்
5,6,7 ஆகிய
அறிவிப்புகளை மீண்டும்
பார்வையிடுவோம்.<br />
<br />
(5) <strong>
<span style="color: teal;">
நான் </span>
</strong>
<span style="color: teal;">
(சிறுமியாக
இருந்தபோது)</span><strong><span style="color: teal;">
பொம்மைகளை வைத்து
விளையாடுவேன்.
எனக்குச் சில தோழியர்
இருந்தனர். அவர்கள்
என்னுடன் விளையாடிக்
கொண்டிருப்பார்கள்.
இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் வீட்டுக்குள்
நுழைந்தால் அவர்களைக்
கண்டதும் தோழியர்
</span></strong>
<span style="color: teal;">
(பயந்து கொண்டு)</span><strong><span style="color: teal;">
திரைக்குள் ஒளிந்து
கொள்வார்கள்.
அப்போது இறைத்தூதர்
(ஸல்) அவர்கள் என்
தோழியரை என்னிடம்
அனுப்பி வைப்பார்கள்.
தோழிகள் என்னுடன்
</span></strong>
<span style="color: teal;">
(சேர்ந்து)</span><strong><span style="color: teal;">
விளையாடுவார்கள்.</span></strong>
(அறிவிப்பாளர்: ஆயிஷா
(ரலி) நூல்கள்: புகாரி
<a href="http://www.chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=6130" style="color: #0b22a1;" target="_blank">
6130</a>, முஸ்லிம்
4827, அபூதாவூத்
4931, இப்னுமாஜா
1982, அஹ்மத். (முஸ்லிம்
நூல் (4827)
அறிவிப்பில், ''நான்
நபி (ஸல்) அவர்கள்
இல்லத்தில் பொம்மைகள்
வைத்து விளையாடுவேன்''
என்று கூடுதலாக
இடம்பெற்றுள்ளது).<br />
<br />
(6)
<span style="color: teal;">
<strong>நான் ஏழு
வயதுடையவளாக
இருந்தபோது, நபி (ஸல்)
அவர்கள் என்னை மணந்து
கொண்டார்கள். நான்
</strong>(பருவமடைந்து)<strong>
ஒன்பது வயதுடையவளாக
இருந்தபோது,
அவர்களிடம்
அனுப்பிவைக்கப்பட்டேன்.
அப்போது விளையாட்டுப்
பொம்மைகள் என்னுடன்
இருந்தன. நான்
பதினெட்டு
வயதுடையவளாக
இருந்தபோது, நபி (ஸல்)
அவர்கள் என்னை விட்டு
இறந்தார்கள்.</strong></span>
(அறிவிப்பாளர்: ஆயிஷா
(ரலி) நூல்கள்:
முஸ்லிம் 2780, நஸயீ
3378).<br />
<br />
விளையாட்டுப்
பொம்மைகளில்
உயிரினங்களின்
உருவங்களும் இருந்தன,<br />
<br />
7)
<span style="color: teal;">
<strong>நபி (ஸல்)
அவர்கள் தபூக் அல்லது
கைபர் இரண்டில் ஏதோ
ஒரு
போர்க்களத்திலிருந்து
திரும்பி வந்தார்கள்.
அப்போது காற்று வீசி
எனது விளையாட்டுப்
பொம்மைகளுக்குப்
போடப்பட்டிருந்த திரை
விலகியது. அதைக் கண்ட
நபி (ஸல்) அவர்கள்
"யா ஆயிஷா! இவை என்ன?''
என்றார்கள். "என்
பொம்மைகள்'' என்று
கூறினேன்.
அவற்றுக்கிடையே இரண்டு
இறக்கைகளைக் கொண்ட
குதிரை பொம்மை ஒன்றைக்
கண்டு, "அதோ நடுவில்
உள்ள அந்தப் பொம்மை
என்ன?" என்று நபி (ஸல்)
அவர்கள் கேட்டார்கள்.
"குதிரை'' என்று
கூறினேன். "குதிரையின்
மேல் என்ன?" என்று
கேட்டார்கள். "இறக்கைகள்''
என்று கூறினேன். "குதிரைக்கும்
இரண்டு இறக்கைகளா?"
என்று நபி (ஸல்)
அவர்கள் கேட்க, "ஏன்
சுலைமான் நபியிடம்
இறக்கைகள் உள்ள குதிரை
இருந்ததாக நீங்கள்
கேள்விப்பட்டதில்லையோ?''
என்று கேட்டேன், இதைக்
கேட்டதும், அவர்களின்
கடவாய்ப்பற்களை நான்
காணும் அளவுக்கு
சிரித்தார்கள்.</strong>
</span>(அறிவிப்பாளர்:
ஆயிஷா (ரலி) நூல்:
அபூதாவூத் 4932).<br />
<br />
7ஆவது அறிவிப்பில்,
கைபர் அல்லது தபூக்
என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
கைபர் போர் ஹிஜ்ரி
ஏழாம் ஆண்டு
நடைபெற்றது. தபூக்
போர் ஹிஜ்ரி ஒன்பதாம்
ஆண்டு நடைபெற்றது. நபி
(ஸல்) அவர்கள் கைபர்
போர்க்களத்திலிருந்து
திரும்பி வந்தபோது
என்று வைத்துக்
கொண்டாலும், கைபர்
யுத்தம் முடிந்த
ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு,
ஆயிஷா (ரலி)
அவர்களுக்கு பதினைந்து
வயது
நிறைவடைந்திருக்க
வேண்டும்.<br />
<br />
6ஆவது அறிவிப்பில்,
''ஒன்பதாம் வயதில்
விளையாட்டுப்
பொம்மைகள் என்னுடன்
இருந்தன'' என்பதையும்
7ஆவது அறிவிப்பின்படி
கைபர் போர் நடைபெற்ற
காலத்தையும்
கணக்கிட்டால்
உயிரினங்களின் உருவ
பொம்மைகள் சுமார் ஆறு
ஆண்டுகள் நபி (ஸல்)
அவர்களின் வீட்டில்
இருந்திருக்கின்றன
என்பது தெளிவு.<br />
<br />
<strong>
<span style="color: teal;">
ஒரு நாள் காலையில்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் </span>
</strong>
<span style="color: teal;">
(வழக்கத்திற்கு
மாறாகக்)</span><strong><span style="color: teal;">
கவலையோடு அமைதியாக
இருந்தார்கள். நான்,
"அல்லாஹ்வின் தூதரே!
இன்றைய தினம் தங்களது
தோற்றத்தில் ஏதோ
மாற்றத்தை நான்
காண்கிறேனே </span>
</strong>
<span style="color: teal;">
(ஏன்)</span><strong><span style="color: teal;">?"
என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள், "</span></strong><span style="color: teal;">(வானவர்)</span><strong><span style="color: teal;">
ஜிப்ரீல் இன்றிரவில்
என்னை வந்து
சந்திப்பதாக
வாக்களித்திருந்தார்.
ஆனால், அவர் வரவில்லை.
அல்லாஹ்வின்
மீதாணையாக! அவர்
என்னிடம் வாக்கு மாறி
நடந்ததில்லை" என்று
சொன்னார்கள். அந்நாள்
முழுவதும் அதே
நிலையிலேயே அவர்கள்
காணப்பட்டார்கள்.
பிறகு அவர்களது மனதில்,
எங்கள் வீட்டிலிருந்த
கூடாரமொன்றுக்குக்
கீழே நாய்க்குட்டி
இருக்கும் நினைவு
வந்தது. உடனே அதை
அப்புறப்படுத்துமாறு
உத்தரவிட்டார்கள்.
அவ்வாறே அது
அப்புறப்படுத்தப்பட்டவுடன்
தமது கையில் தண்ணீர்
அள்ளி அந்த இடத்தில்
தெளித்து விட்டார்கள்.
அன்று மாலை நேரத்தில்
ஜிப்ரீல் (அலை)
அவர்கள் வந்து
நபியவர்களைச்
சந்தித்தார்கள்.
அப்போது "நீங்கள்
நேற்றிரவு என்னிடம்
வருவதாக
வாக்களித்திருந்தீர்களே?"
என்று நபியவர்கள்
கேட்டார்கள். அதற்கு
ஜிப்ரீல் (அலை)
அவர்கள் "ஆம். ஆயினும்,
</span></strong>
<span style="color: teal;">
(வானவர்களாகிய)</span><strong><span style="color: teal;">
நாங்கள் நாயும்
உருவப்படமும் உள்ள
வீட்டில்
நுழையமாட்டோம்" என்று
கூறினார்கள். அன்றைய
பொழுது புலர்ந்ததும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள், நாய்களைக்
கொல்லுமாறு
கட்டளையிட்டார்கள்.
சிறிய தோட்டங்களில்
உள்ள நாய்களைக்
கொல்லுமாறும்
கட்டளையிட்டார்கள்.
பெரிய தோட்டங்களில்
உள்ள நாய்களை
விட்டுவிட்டார்கள்
</span></strong>
<span style="color: teal;">
(அவற்றைக் கொல்லுமாறு
உத்தரவிடவில்லை).</span>
(அறிவிப்பாளர்கள்:
மைமூனா (ரலி) நூல்கள்:
முஸ்லிம் 4273, நஸயீ
4283, அபூதாவூத்
4157, அஹ்மத். இதே
கருத்தில் ஆயிஷா (ரலி)
அவர்களின் அறிவிப்பு:
முஸ்லிம் 4272).<br />
<br />
நபி (ஸல்) அவர்கள்
ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு
உம்ரத்துல் களாவை
முடித்துத்
திரும்பும்போது,
மைமூனா பின்த் ஹாரிஸ்
(ரலி) அவர்களை
மணமுடித்தார்கள் என
வரலாற்றுக்
குறிப்புகளில்
பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஹதீஸை
அறிவிக்கும்
நபியவர்களின்
துணைவியரில் ஒருவரான
மைமூனா பின்த் ஹாரிஸ்
(ரலி) அவர்களின்
அறிவிப்பிலிருந்து நபி
(ஸல்) அவர்களின்
வீட்டில் நாய்
நுழைந்திருந்து பிறகு
அப்புறப்படுத்தப்பட்ட
சம்பவம் ஹிஜ்ரி ஏழாம்
ஆண்டு அல்லது எட்டாம்
ஆண்டு நடந்திருக்க
வேண்டும் என்று
விளங்க முடிகிறது.
<br />
<br />
இறைச் செய்தியைக்
கொண்டு வரும் வானவர்
தூதர் ஜிப்ரீல் (அலை)
அவர்கள், இறைத்தூதர்
(ஸல்) அவர்களிடம்
எந்த நேரத்திலும் -
எந்தப் பொழுதிலும்
செய்திகளைச் சொல்ல
வரக்கூடியவர். நபி (ஸல்)
அவர்களின் வீட்டுக்கு
ஜிப்ரீல் (அலை)
வழக்கம்போல் வரும்
தருணத்தில்
வீட்டிலிருந்த நாயும்,
உயிரினங்களின்
உருவங்கள் வரைந்த
திரைச் சீலையும்
தடையாக இருந்து,
ஜிப்ரீல் (அலை)
வீட்டிற்குள் செல்ல
இயலாமல் ஆனது. ஆனால்,
ஆறு ஆண்டு காலம் ஆயிஷா
(ரலி) அவர்களின்
உயிரின உருவ
பொம்மைகள் நபி (ஸல்)
அவர்களின் வீட்டில்
இருந்தும் ஜிப்ரீல் (அலை)
அவர்கள் வீட்டிற்குள்
நுழைய அவை தடையாக
இருக்கவில்லை! நபி (ஸல்)
அவர்களும் உருவ
பொம்மைகளை
அப்புறப்படுத்தச்
சொல்லவும் இல்லை!
இதிலிருந்து உருவ
பொம்மைகளை வணங்கி
வழிபாடு நடத்தாமல்,
மதிப்பற்ற வகையில்
விளையாட்டுப் பொருளாக
வீட்டில்
வைத்திருக்கலாம் என
விளங்குகிறோம்!
<br />
<br />
ஆயிஷா (ரலி) அவர்கள்
உயிருள்ளவற்றின் உருவ
பொம்மைகளை வைத்து
விளையாடியிருப்பதால்,
பொம்மைகள்
வீட்டிலிருக்கத் தடை
இல்லை என்பது தெளிவு.
இவை கார்ட்டூன்,
அனிமேஷன்
போன்றவற்றுக்கு
அனுமதியாகவுள்ளது.
மேலும், கார்ட்டூனும்
விளையாட்டுப்
பொம்மைகளே. அவை
தந்திர அமைப்பைக்
கொண்டு
தயாரிக்கப்பட்டு,
கருவியின் மூலம்
இயக்கப்படுகின்றன.
கார்ட்டூன் மூலம்
குழந்தைகளுக்கு
நல்லவற்றைக்
கற்றுத்தரலாம்!<br />
<br />
<span style="text-decoration: underline;">
குறிப்பு: நாய்கள்
பற்றிய மேலதிகத் தகவல்</span>.<br />
<br />
இறைமறை 005:004 வசனக்
கருத்தின்படி
பயிற்சியளிக்கப்பட்ட
வேட்டை நாய்கள்,
வேட்டைப் பறவைகளை
வளர்க்க -
வைத்திருக்க
அனுமதியுண்டு.<br />
<br />
<strong>
<span style="color: teal;">
"எந்த வீட்டார்
</span></strong>
<span style="color: teal;">
(தமது இல்லத்தில்)</span><strong><span style="color: teal;">
நாய் வளர்க்கின்றனரோ
அவர்களுடைய
நற்செயல்களி</span></strong><span style="color: teal;">(ன்
நன்மையி)</span><strong><span style="color: teal;">லிருந்து
ஒவ்வொரு நாளும் இரண்டு
'கீராத்'கள் </span>
</strong>
<span style="color: teal;">
(கணிசமான)</span><strong><span style="color: teal;">
அளவுக்குக்
குறைந்துவிடும்;
கால்நடைகளைக் காவல்
காக்கும் நாயையும்
வேட்டை நாயையும் தவிர"</span></strong>.
என்று அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பாளர்கள்:
அபூஹுரைரா (ரலி) இப்னு
உமர் (ரலி) வழியாக
புகாரி, முஸ்லிம்,
திர்மிதீ, நஸயீ.
அஹ்மத், முவத்தா
மாலிக், தாரிமீ ஆகிய
நூல்களில்
பதிவுசெய்யப்பட்டுள்ளன).<br />
<br />
வேட்டை நாய்களையும்,
காவல் நாய்களையும்
வளர்க்கலாம். நாய்
வாய்வைத்தப்
பாத்திரத்தை ஏழு தடவை
மண்ணிட்டுக்
கழுவவேண்டும் என்று
நபி (ஸல்) அவர்கள்
கூறியிருப்பதால்
நாய்களை வீட்டிற்குள்
நுழையவிடாமல் வெளியில்
வைத்து வேட்டை நாய்களை
/ காவல் நாய்களை
வளர்க்க வேண்டும்.
நாய்களைச் செல்லப்
பிராணிகள் என்று சிலர்
வீட்டில்
படுக்கையறையில் வைத்து
வளர்க்கின்றனர்.
என்னதான் உயர்சாதியாக
இருந்தாலும் நாய்,
நாய்தான். நபி (ஸல்)
அவர்கள் ஆரம்பத்தில்
நாய்களைக்
கொல்லும்படி
உத்தரவிட்டிருந்தார்கள்.
பின்னர்
தளர்த்தப்பட்டு,
வெறிநாய்களையும்,
ஷைத்தானைப் போன்று
திடுக்கிடச் செய்து
இடரளிக்கும்
கன்னங்கரிய
நாய்களையும்
கொல்லும்படி கூறிய
சட்டம் நீடிக்கின்றது.<br />
<br />
அடுத்து,<br />
<br />
முதல் வகை ஹதீஸ்களில்
3வது ஹதீஸில், "என்
படைப்பைப் போன்று
படைக்க எண்ணுபவனைவிட
அக்கிரமக்காரன் யார்?"
என்று அல்லாஹ்
கேட்கிறான் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது
அதைப் பார்ப்போம்.<br />
<br />
3) <strong><span style="color: teal;">நான்
அபூ ஹுரைரா(ரலி)
அவர்களுடன் மதீனாவில்
ஒருவரது வீட்டினுள்
நுழைந்தேன். அதன் மேல்
தளத்தில் உருவப்
படங்களை வரைபவர்
உருவங்களை வரைந்து
கொண்டிருந்தார்.
அப்போது அபூ
ஹுரைரா(ரலி), 'என்
படைப்பைப் போன்று
படைக்க எண்ணுபவனைவிட
அக்கிரமக்காரன் வேறு
யார் இருக்கமுடியும்?
அவர்கள் ஒரு தானிய
விதையையாவது படைத்துக்
காட்டட்டும். ஓர்
அணுவையாவது படைத்துக்
காட்டட்டும் என்று
</span></strong>
<span style="color: teal;">
(அல்லாஹ் கூறுவதாக)</span><strong><span style="color: teal;">
இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் சொல்ல
கேட்டேன்' என்றார்கள்...</span>
</strong>(நபிமொழிச்
சுருக்கம்,
அறிவிப்பாளர்: அபூ
ஸுர்ஆ பின் அம்ர் பின்
ஜரீர் (ரஹ்) நூல்கள்:
புகாரி
<a href="http://www.chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=5953" style="color: #0b22a1;" target="_blank">
5953</a>,
<a href="http://www.chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=7559" style="color: #0b22a1;" target="_blank">
7559</a>; முஸ்லிம்
4292, அஹ்மத்).<br />
<br />
படைத்தல் என்பது
இறைவனின் தனித்
தகுதிக்கு மட்டுமே
உரிய ஓர் ஆற்றல்.
இதில் யாருக்கும்
எவ்விதப் பங்கும்
இல்லை! இந்தக்
கருத்தில் இறைமறையில்
பல வசனங்கள் உள்ளன.
இறைவனுக்கு
இணைகற்பித்தோர்
தன்னிச்சையாகப் பல
தெய்வங்களை உருவாக்கி,
அந்தச் சிலைகளிடம்
தமது தேவையைக்
கேட்டுப் பிரார்த்தனை
செய்தனர். அப்போது
அருளப்பட்ட வசனம் இது,<br />
<br />
<strong>
<span style="color: blue;">
மனிதர்களே! ஓர்
உதாரணம்
சொல்லப்படுகிறது.
அதற்கு நீங்கள்
செவிசாயுங்கள்.
நிச்சயமாக
அல்லாஹ்வையன்றி
நீங்கள் அழைத்துக்
கொண்டிருப்போர்
அனைவரும் ஒன்று
சேர்ந்தாலும்
அவர்களால் ஓர்
ஈயைக்கூடப் படைக்க
இயலாது. ஈ,
அவர்களிடமிருந்து
எதையேனும் பறித்துக்
கொண்டால்
ஈயிடமிருந்து அதை
மீட்டெடுக்கவும்
அவர்களால் இயலாது.
</span></strong>
<span style="color: blue;">
(உதவி)</span><strong><span style="color: blue;">
தேடுபவனும்,
தேடப்படுபவனும்
பலவீனர்களே!</span></strong>
(அல்குர்ஆன்
022:073).<br />
<br />
இறைத் தன்மையின் முதல்
தகுதி, அவன்
படைப்பாளனாக
இருக்கவேண்டும்.
நீங்கள் அழைத்துக்
கொண்டிருக்கும்
தெய்வங்கள் அனைத்தும்
ஒன்று சேர்ந்தாலும்
ஓர் ஈயைக்கூட அல்லது
ஒரு கொசுவைக்கூட
படைக்க இயலாது என்று
கூறி, ''மனிதர்களே!
ஓரிறைவனைத் தவிர
நீங்கள் வணங்கிக்
கொண்டிருப்பவையெல்லாம்
பொய்க் கடவுள்களே''
என உரைத்து, தமக்குத்
தாமே எவ்வித உதவியும்
செய்ய இயலாத பொய்த்
தெய்வங்களின் முன்
நின்று உங்கள் தேவைகளை
வேண்டுவது
மூடநம்பிக்கை என்று
மேற்கண்ட வசனம்
இடித்துரைக்கின்றது.<br />
<br />
இங்கு, தாம்
வடிவமைத்தவற்றின் முன்
தாம் அடிமையாக நின்று
வணங்கி வேண்டுவது
கண்டிக்கப்பட்டு,
சிலைகளுக்கு இல்லாத
ஆற்றலை இருப்பதாக
உணரும் மூடநம்பிக்கை
தகர்க்கப்படுகின்றது.<br />
<br />
மற்றபடி, படம்
பார்த்துப் பெயர்
சொல் எனக் கொசுவத்தி
விளம்பரத்திற்காக
கொசுவை வரைந்தவர்
கொசுவைப்
படைத்துவிட்டார் என்று
அர்த்தம் அல்ல.
மேற்கண்ட ஹதீஸில்
உள்ளது போல்,
கோதுமையை வரைபவர்
கோதுமையைப்
படைக்கிறேன் என்ற
எண்ணத்தில் ஓவியம்
தீட்டுவதில்லை / அதைப்
புகைப்படம்
எடுப்பதில்லை. மாறாக,
தாம் வடிக்கும்
சிலைக்கு அல்லது
வரையும் உருவத்திற்கு
ஆற்றல் இருப்பதாக எவர்
நம்புகிறாரோ
அவருக்குத்தான் ''ஒரு
கொசுவைக்கூட படைக்க
இயலாது'' என சவால்
விடப்படுகின்றது!<br />
<br />
ஓர் உயிரின உருவத்தை
நகலெடுக்க, இறைவனின்
அசல் படைப்பு
முன்மாதிரியாக
விளங்குகிறது.
தொலைக்காட்சிப்
பெட்டியில் ஒளிப்படம்
ஓடிக்கொண்டிருக்க,
அதில் பேசுபவர்
எதிரில் அமர்ந்து
தொலைக்காட்சிப்
பெட்டியில் தான்
பேசுவதைப் பார்த்துக்
கொண்டிருப்பார்.
இதனால் ஒளிப்படத்தில்
வருபவர்
படைக்கப்பட்டார் என்று
பொருள் கொள்வது
பிற்போக்கு சிந்தனை!
ஒளிப்படத்தில்
பேசியவர் மரணித்து
விட்டார் என்று
அறிந்தபின்,
ஒளிப்படத்தில் உள்ளவர்
இன்னும் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்
என்றும் நம்பமாட்டோம்.
ஆகவே, படைப்புக்கும்,
படைப்பின் நகலுக்கும்
பெரும்
வித்தியாசமுள்ளது.<br />
<br />
இறுதியாக,<br />
<br />
குர்ஆன், சுன்னா
ஆதாரங்களின்
அடிப்படையில் இதுவரை
எடுத்துரைத்தக்
கருத்துக்களிலிருந்து,
உருவப்படங்கள்
கட்டாயத் தேவை என்கிற
காலச் சூழ்நிலையில்
இருக்கிறோம்.
இஸ்லாமிய ஆட்சி
இல்லாத நாடுகளில்தான்
உருவப்படத்தின்
தேவையுள்ளது எனச்
சிலர் சொல்கின்றனர்.
ஆனாலும், இஸ்லாமிய
ஆட்சியின் கீழ் வாழும்
குடிமக்களும் அன்னிய
நாடு செல்ல
வேண்டுமாயின்
பாஸ்போர்ட் வேண்டும்,
பாஸ்போர்ட்டுக்கு
உருவப்படம் கட்டாயத்
தேவை என்பதையும்
நாட்டின்
குடியுரிமைக்கான
உருவப்படம்
பதிக்கப்பட்ட அடையாள
அட்டையும் கட்டாயத்
தேவை என்பதையும்
மறந்து இவர்கள்
கருத்துரைக்கின்றனர்.<br />
<br />
இஸ்லாமிய நாடு என
அறிவிக்கப்பட்ட
நாடுகளிலும்
உருவப்படங்கள் சர்வ
சாதாரணமாகப்
புழக்கத்தில் உள்ளன.
அந்நாட்டு ரூபாய்
நோட்டுக்களிலும்
உருவப்படங்கள்
பொறிக்கப்பட்டுள்ளன.
வேலை செய்வதற்காக
அங்குத் தங்கும்
அன்னிய நாட்டினருக்கு
புகைப்படம்
பதியப்பட்ட அடையாள
அட்டை, ஓட்டுனர்
உரிமம் அட்டையும்
வழங்கப்படுகின்றன. இதை
ஆதாரமாக இங்குச்
சொல்லவில்லை. இவற்றை
எதிர்ப்பதற்கு
இஸ்லாத்தில் சான்றுகள்
இல்லை என்பதுதான்
நிதர்சனம்!
<br />
<br />
மக்கள் தொகை
அதிகரிக்க நிர்வாக
வசதிக்காக பூமியில்
நாடுகளின் எல்கைகள்
போடப்பட்டன. ஒரு நாடு
பல மாநிலங்களாகப்
பிரிக்கப்பட்டது. ஒரு
மாநிலம் பல
மாவட்டங்களாகப்
பிரிக்கப்பட்டு,
நகரங்கள் கிராமங்கள்
என அடையாளப்
படுத்தப்படுப்பட்டன.
ஒருவர் எந்த ஊரைச்
சேர்ந்தவர்? அவரின்
ஊர் எந்த மாநிலத்தில்,
எந்த மாவட்டத்தில்
எந்த தாலுகாவில்
உள்ளது என்கிற
முகவரியுடன் அவரின்
புகைப்படம்
பதிக்கப்பட்ட அடையாள
அட்டை கட்டாயமாக
அவரிடம் இருந்தாக
வேண்டும். இது
காலத்தின் தேவை!
இதற்கு இடையூறாக
இஸ்லாம் சட்டம்
எதையும் விதிக்கவில்லை
என்பதுதான்
இஸ்லாத்தின்
நிலைப்பாடு.<br />
<br />
காலத்துடன்
கைகோர்த்து
பயணிக்கும் விஷயமிது.
உருவப்படம் கூடாது
என்று இஸ்லாம்
வலியுறுத்தாத ஒன்றை
முஸ்லிம்களின் மீது
திணித்தால், மக்களுடன்
சேர்ந்து வாழ இயலாமல்
முஸ்லிம்கள்
நெருக்கடிக்கு
உள்ளாகித் தனித்து
விடப்படுவார்கள். 'அவை
எதுவும் எங்களுக்குத்
தேவை இல்லை' என்று
குடும்பத்துடன் வனம்
சென்று வசித்தாலும்
அங்கும்
ஆட்சியாளர்களின் கை
நீண்டு ID CARD -
அடையாள அட்டையைக்
காட்டு என அதிகாரம்
செலுத்தும். எனவே,
உருவப்படங்கள்
விஷயத்தில் இஸ்லாம்
மீதான பிற்போக்குச்
சிந்தையைக் களைந்து,
இஸ்லாம் இம்மண்ணுக்
கேற்ற மார்க்கம்
என்கிற முற்போக்குச்
சிந்தனையை வளர்ப்போம்!</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
முற்றாய் அறிந்தவன்
அல்லாஹ் ஒருவனே!</span></div>
<span class="mu">
</span><br />
<span class="mu">
<span style="font-family: TheneeUniTx;">
<b>ந</b><b>ன்றி:</b>
<a href="http://satyamargam.com/islam/for-muslims/2254-2254.html">
<span style="color: blue;">
சத்தியமார்க்கம்.காம்</span></a></span></span></div>
அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9457100.post-108220112598826132013-12-04T22:30:00.001-08:002013-12-04T22:33:49.238-08:00அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">அல்லாஹ்வின்
பண்புகளுக்கு நிகராக ஒப்பிட்டு
எவரையும் சொல்ல இயலாது. மனிதனின்
பண்புகளோடு இறைவனின் பண்புகளையும்
சமமாகக் கருதிடக்கூடாது. அன்பு, கருணை,
இரக்கம், பரிவு, மன்னிக்கும் தன்மை இவை
மனிதர்களுக்கும் உண்டு என்றாலும்
இறைப் பண்புகளின் உயர் நிலைக்கு நிகராக இல்லை
என்பதைச் சுட்டிக்காட்ட, அல்லாஹ்
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்
என்று தமிழில் கூறுகிறோம்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">அன்பு, பாசம், கருணை,
இரக்கம், பரிவு என
இவ்வாசகங்களுக்கெல்லாம் நூலிழை
வித்தியாமேயன்றி இவை நெருக்கமான ஓர் அர்த்தத்தைத்
தரும் பல சொற்களாகும்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"> </span>
</div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<span style="color: blue;">(நபியே)<b> நிச்சயமாக பூமியில் உள்ளவற்றையும்,
அவனது கட்டளைப்படியே கடலில் செல்லும்
கப்பலையும் அல்லாஹ் உங்களுக்கு
வசப்படுத்தித் தந்தான் என்பதை நீர்
பார்க்கவில்லையா? தனது கட்டளையின்றி
பூமியின் மீது வானம் விழுந்து
விடாதவாறு அதனை அவனே தடுத்துக்
கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ்
மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணையாளன்,
நிகரற்ற அன்புடையவன்.</b></span> (அல்குர்அன்
022:065)</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">தனது
அனுமதியின்றி பூமியின் மீது வானம்
விழுந்து விடக்கூடாது என்று
வானத்துக்குக் கட்டளையிட்டு இறைவன்
தடுத்து வைத்திருக்கிறான். இவ்வாறு
தடுத்து வைத்திருப்பது மனிதர்களின்
மீதான அளவற்ற கருணையினாலும், நிகரற்ற
அன்பினாலுமே என்று விவரித்து இறைமறை
வசனங்கள் கூறகின்றன.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">இவ்வசனத்தில்
அன்பும், கருணையும் சேர்ந்தாற்போல்
சொல்லப்பட்டாலும், கருணையைவிட
அன்புக்கு ஒருபடி உயர்வுண்டு என்பதை
வரும் நபிமொழிகளிலிருந்து விளங்குகிறோம்,</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<b>
<span style="color: teal;">அல்லாஹ்
அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில்
தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம்
வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்)
ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு
பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம்
பாசம் காட்டுகின்றன. எந்த
அளவிற்கென்றால், மிதித்துவிடுவோமோ
என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய
குட்டியைவிட்டுக் கால்குளம்பைத்
தூக்கிக் கொள்கிறது. என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.</span></b> (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா
(ரலி) நூல்கள்: (புகாரி 6000, முஸ்லிம்
5310, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்,
தாரமீ)</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
தாயின்
கால்களுக்கிடையில் விளையாடும் குட்டியை
மிதித்து விடுவோமோ என்கிற
உள்ளுணர்வில், உயிரினப்
பிராணிகளும் கால்களை உயர்த்திக்கொள்வதும், தன்
குஞ்சுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ
என அன்னியப் பறவைகள் குஞ்சுகளின்
அருகில் வந்தால் தாய்ப் பறவை சீறிப்
பாய்ந்து போரிடுவதும் அன்பு எனும்
பாசத்தினால் ஏற்படும் உள்ளுணர்வாகும்.
இது உயிரினங்களின் உறவினால் ஏற்படும்
இயல்பு. அல்லாஹ் இரட்சகனாக இருப்பதால்
மனிதர்களிடம் அன்பு செலுத்துவது
இறைவனின் நியதி எனலாம்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">தாய்மையின்
அன்புக்கு நிகராக எவரையும், எவற்றையும் ஒப்பிட்டுச் சொல்லிட
இயலாது. தாயின் அன்பைவிட
அடியார்கள் மீது அல்லாஹ் மிகுந்த அன்பு
வைத்துள்ளான்: </span>
</div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<span style="color: teal;">(ஹவாஸின்
குலத்தைச் சேர்ந்த)<b> கைதிகள் சிலர்
நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.
அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின்
மார்பில் பால் சுரந்தது. அவள்
பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத்
தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை.
எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக்
கண்டாலும், அதை </b>(வாரி)<b> எடுத்து(</b>ப்
பாலூட்டினாள். தன் குழந்தை
கிடைத்தவுடன் அதை எடுத்து)<b>த் தன்
வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள்.
அப்போது 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள்,
'இந்தப் பெண் தன் குழந்தையை தீயில்
எறிவாளா? சொல்லுங்கள்!' என்றார்கள்.
நாங்கள், 'இல்லை, எந்நிலையிலும் அவளால்
எறிய முடியாது' என்று சொன்னோம்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இந்தக்
குழந்தையின் மீது இவளுக்குள்ள
அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின்
மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்'
என்று கூறினார்கள்.</b></span>
(அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப்
(ரலி) நூல்கள்: புகாரி 5999 முஸ்லிம்
5315)</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">இறைவன் பூமியில் இறக்கிய நூறில் ஒரு பங்கு
அன்பிற்கே உயிரினங்கள் உறவுகளிடம்
இவ்வளவு அன்பு செலுத்துகின்றது
என்றால் மீதம் தொண்ணூற்றொன்பது பங்கை
தன்னிடம் வைத்திருக்கும் அல்லாஹ்வை
நிகரற்ற அன்புடையவன் என்று சொல்லுவதே
பொருத்தமாகும்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<u>
<span style="font-family: TheneeUniTx;">கருணை</span></u></div>
<div style="text-align: left;">
<u><span style="font-family: TheneeUniTx;"><br /></span></u></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<span style="color: blue;">(நபியே)<b> உம்மை
அவர்கள் பொய்ப்பித்தால், ''உங்களுடைய
இறைவன் விசாலமான கருணையுடையவன் என்றும்,
குற்றவாளிகளான கூட்டாத்தாரை விட்டும்
அவனது தண்டனை தடுக்கப்பட மாட்டாது''
என்றும் நீர் கூறுவீராக!</b></span> (அல்குர்ஆன்
006:147) </span>
</div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">''இறைவன்
விசாலமான கருணையுடையவன்'' என்பதை ''இறைவன்
விசாலமான அருளுக்குரியவன்'' என்றும்
சொல்லலாம். அல்லாஹ் அளவற்ற அருளாளன்,
நிகரற்ற அன்புடையோன், மிகப் பெரும்
கருணையாளன் என்பதால், குற்றவாளிகளுக்கு
அவன் அளிக்கவிருக்கும் தண்டனையில்
எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது
என்பதையும் மேற்கண்ட வசனத்தின்
வாயிலாக அறிவிக்கப்படுகின்றது. ஆகவே,
குற்வாளியின் மீது நீதிபதிக்கு அன்பு
ஏற்பட்டால் சட்டத்தை வளைப்பான் என்பது
பூமியிலுள்ள நீதிபதிகளுக்குப்
பொருந்துமேயன்றி, வானத்திலுள்ள
தன்னிகரற்ற தனி நீதிபதி இறைவனுக்குப்
பொருந்தாது. </span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<b>
<span style="color: blue;">...நிச்சயமாக
உமது இறைவன் தண்டிப்பதில் தீவிரமானவன்.
மேலும், நிச்சயமாக அவன் மிக்க
மன்னிப்பவனும் நிகரற்ற
அன்புடையோனுமாவான்.</span></b> (அல்குர்ஆன்
6:165)</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<b>
<span style="color: blue;">பாவத்தை
மன்னிப்பவனும், மன்னிப்புக் கோரலை
ஏற்றுக் கொள்பவனும், தண்டிப்பதில்
கடுமையானவனும், அருளுக்குரியவனுமாவான்.
அவனையன்றி வணங்கப்படத் தகுதியானவன்
வேறு யாரும் இல்லை! அவனிடமே மீளுதல்
உள்ளது.</span></b> (அல்குர்ஆன் 040:003)</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">''அல்லாஹ்
தண்டிப்பதில் கடுமையானவன்'' என்கிற
இக்கருத்திலமைந்த ஏராளமான வசனங்களை
இறைமறையில் காணலாம். இறைவன்
தீர்ப்பளிப்பதில் மேலான நீதிபதி:</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
</span>
</div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<span style="color: blue;"><b>..தீர்ப்பளிப்போரில்
நீ மிகச் சிறந்த
தீர்ப்பளிப்பளிப்பவனாவாய்...</b> </span>(அல்குர்ஆன்
011:045) </span>
</div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<b>
<span style="color: blue;">அல்லாஹ்
தீர்ப்பளிப்போர்களிலெல்லாம் மிகச்
சிறந்த தீர்ப்பளிப்பாளன் இல்லையா?</span></b> (அல்குர்ஆன்
095:008)</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">இறைவனின்
பண்புகள் அனைத்தும் அளவற்றவையே ஆனாலும்
அவனது பண்புகள் அவனுடைய தீர்ப்புக்கு
எவ்வித இடையூறாக அமையாது. </span>
</div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
மனிதர்களிடையே எவ்வாறு அன்பு
ஏற்படுகின்றதோ அதுபோல் மனிதர்கள்
மீது கருணை காட்டவேண்டும் என்றும்
நபிமொழி வலியுறுத்துகிறது. </span>
</div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<span style="color: teal;">''மக்கள் மீது
கருணை காட்டாதவருக்கு அல்லாஹ் கருணை
காட்டமாட்டான்'' என்று அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span>
(அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ்
(ரலி) நூல்கள்: புகாரி 7376, முஸ்லிம்
4638, திர்மிதீ, அஹ்மத்)</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><u>''என் மீது
அன்பு செலுத்து''</u> </span>
</div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">''அல்லாஹ்வின்
மீது அன்பு செலுத்துங்கள்'' என்று
இஸ்லாம் எங்கும் கூறவில்லை என்பது
சரியான புரிதல். ஏனெனில்
<span style="color: blue;">''அல்லாஹ் (எவ்வித)
தேவையுமற்றவன்" </span>(112:002) அன்பு,
கருணை எதுவுமே அவனுக்குத் தேவையற்றதாக
இருக்க அல்லாஹ்வின் மீது அன்பு
செலுத்துங்கள் எனச் சொல்வதும்
பொருத்தமாக இல்லை! - தேவையற்றவனுக்கு அன்பு தேவை இல்லை!. ஆனால் அல்லாஹ்வை
நேசிக்க வேண்டும் என்று இறைமறை
கூறுகின்றது:</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<b>
<span style="color: blue;">அல்லாஹ்
அல்லாதவர்களை </span></b><span style="color: blue;">(அவனுக்கு)<b> இணையாளர்களாக
எடுத்து அல்லாஹ்வை நேசிப்பது போன்று
அவர்களை நேசிப்போரும் மனிதர்களில்
உள்ளனர். ஆனால், நம்பிக்கை
கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில்
மிக உறுதியானவர்கள்...</b></span> (அல்குர்ஆன்
002:165)</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<b>
<span style="color: blue;">நீங்கள்
அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால்
என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ்
உங்களை நேசிப்பான்...</span></b> (அல்குர்ஆன்
003:031)</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">அல்லாஹ்வை
நேசித்தல் என்றால் அல்லாஹ்வின் மீது
நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் தூதரைப்
பின்பற்றி இஸ்லாம் வழங்கியுள்ள வணக்க
வழிபாடுகளை நிறைவேற்றி, இஸ்லாமின்
வழிகாட்டல்படி வாழ்க்கை நெறியினை
அமைத்துக் கொள்வதுமாகும். இவ்வாறு
அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்களை
அல்லாஹ்வும் நேசிப்பான்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">விரிவஞ்சி
இத்துடன் முடிக்கின்றோம்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<span style="color: blue;">முழுமை பெற்ற
ஆதாரம் அல்லாஹ்விடமே உள்ளது.</span>
(006:149)</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">(இறைவன்
மிக்க அறிந்தவன்)</span></div>
<div style="text-align: left;">
<a href="http://abumuhai.blogspot.com/2013/12/blog-post_5335.html" style="font-family: TheneeUniTx;"><span style="color: blue;">முந்தைய பகுதி</span></a></div>
</div>
அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9457100.post-19086527348884287452013-12-04T21:50:00.000-08:002013-12-04T22:42:49.445-08:00குர்ஆனில் இருக்கிறதா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><b>ஐயம்:</b><br />
"பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்"
எனும் வசனத்தை தமிழில் "அளவற்ற
அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்" என்று மொழி
பெயர்க்கின்றனர். அல்லாஹ் நிகரற்ற
அன்புடையவன் எனும் அர்த்தம் இந்த
வசனத்திலோ அல்லது திருக்குரானிலோ
இருக்கிறதா? - சாணக்கியன்.<br />
<br />
<b>தெளிவு:</b><br />
<br />
பி, இஸ்மு, அல்லாஹ், அல்-ரஹ்மான்,
அல்-ரஹீம் ஆகிய ஐந்து அரபுச் சொற்கள்
இணைந்து, அரபு மொழியின் சந்தி
இலக்கணத்துக்கு இயைந்து, 'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'
என்று வழங்கப்படுகிறது. அந்த ஐந்து
அரபுச் சொற்களுக்கும் தனித் தனியான
தமிழ்சொற்கள் முறையே:<br />
<br />
பி=ஆல்<br />
இஸ்மு = பெயர்<br />
அல்லாஹ் = வணக்க-வழிபாடுகளுக்குரிய
கடவுள்<br />
அர்ரஹ்மான் = அளவற்ற அருளாளன்<br />
அர்ரஹீம் = நிகரற்ற அன்புடையவன்<br />
<br />
அன்பு, அருள், பரிவு, கருணை, இரக்கம்
போன்ற பல பொருள்களைத் தன்னகத்தே கொண்ட
'அர்ரஹீம்' எனும் செறிவுச் சொல்லானது
'ரஹிம' எனும் வேரடி வினையிலிருந்து
பிறந்த பண்புப் பெயராகும். 'ரஹீம்'
எனும் சொல்லோடு இணைந்த 'அல்' எனும்
பெயர்ச் சொல், குறிப்பாக
உணர்த்துவதற்குப் பயன்
படுத்தப்பட்டதாகும். அதாவது குறிப்பாகு
பெயர். 'அல்-ரஹீம்' எனும் சொல், அரபு
மொழியின் புணர்ச்சி இலக்கணப்படி 'அர்ரஹீம்'
என மொழியப்படும்.<br />
<br />
எனவே, 'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'
என்னும் அரபுச் சொற்றொடருக்கு, "அளவற்ற
அருளாளன், நிகரற்ற அன்பாளன்,
அல்லாஹ்வின் பெயரால்" எனும் தமிழ் மொழி
பெயர்ப்பு, சரியானதே!<br />
<br />
இந்தச் சொல், இறைமறையின் 113
அத்தியாயங்களின் தொடக்கத்தில்
இடம்பெற்றுள்ளது. மேலும், இறை வசனங்கள்
சிலவற்றின் உள்ளும் இடம்பெற்றுள்ளது.
அவையாவன:<br />
<br />
<b><span style="color: blue;">"மேலும்,
உங்கள் கடவுள் ஒரேயொருவன்தான்; அவனைத்
தவிர வேறு கடவுள் இல்லை. அவன் அளவற்ற
அருளாளன், நிகரற்ற அன்புடையோன்"</span></b>
002:163.<br />
<br />
<b><span style="color: blue;">"வணக்க
வழிபாட்டுக்குரியவன் அல்லாஹ்.
அவனையன்றி வேறு கடவுள் இல்லை.
வெளிப்படையானவற்றையும் மறைவானவற்றையும்
அறிபவன். அவன் அளவற்ற அருளாளன்,
நிகரற்ற அன்பாளன்"</span></b>
059:022.<br />
<br />
<span style="color: blue;">"(இவ்வேதம்) <b>
அளவற்ற அருளாளன், நிகரற்ற
அன்புடையோனிமிருந்து
இறக்கியருளப்பட்டது"</b></span>
041:002.<br />
<br />
<b><span style="color: blue;">"திண்ணமாக
நான் மிக்க மன்னிப்பவன்; நிகரற்ற
அன்புடையவன் என்பதை </span></b><span style="color: blue;">(நபியே!)<b>
என் அடியார்களிடம் அறிவித்துவிடுவீராக!"</b></span>
015:049.</span></div>
<span style="font-family: TheneeUniTx;">
</span><br />
<div style="text-align: center;">
<span style="font-family: TheneeUniTx;">oOo</span></div>
<br />
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<br />
<b>ஐயம்:</b><br />
<br />
திருக்குரானிலே இறைவன் தன்னைப்பற்றி "அனுவளவும்
நீதி தவறாத நீதிமான்" என்று சொல்கிறான்.
"தீமை செய்தால் நரகம், நன்மை செய்தால்
சுவர்க்கம்" என்று செயலும் அதன்
விளைவையும் பற்றி தெளிவாக சொல்கிறான்.
எந்த இடத்திலும் "என் மீது அன்பு
செலுத்து" என்று சொல்லவில்லை.
நீதிபதிக்கு பயந்தால்தான் சட்டத்தை
மனிதன் மதிப்பான். நீதிபதிக்கு அவன்
மீது அன்பு வந்துவிட்டால் சட்டத்தை
வளைப்பான். "அன்பே சிவம், God is
love" போன்ற சிந்தனையெல்லாம்
இஸ்லாத்தில் கிடையாது. "கண்ணன் மீது
காதல் வரலாம். அல்லாஹ் மீது பயம்
வரவேண்டும்" என்பதுதான் இஸ்லாம்.<br />
<br />
அல்லாஹ் நிகரற்ற கருணையாளன் என்பதுதான்
சரி. இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன? -
சாணக்கியன்.<br />
<br />
<b>தெளிவு:</b><br />
<br />
"என் மீது அன்பு செலுத்து" என்று
அல்லாஹ் தன் அடியார்களுக்கு எந்தக்
கட்டளையும் இடவில்லைதான். மாறாக, "என்னை
அஞ்சி வாழுங்கள்" என்பதாகவே இறைமறை
நெடுகிலும் கட்டளையிடுகின்றான்.
அதேவேளை, "பசியுடன் உணவு கேட்டு
உங்களிடம் வருபவருக்கு அன்புடனும்
பரிவுடனும் உணவளிப்பது என்னிடம்
நீங்கள் காட்டும் அன்புக்கு ஒப்பாகும்"
என்று அல்லாஹ் கூறுவதாக அவனுடைய தூதர்
(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் (முஸ்லிம்
ஹதீஸ் 4661 கருவின் சுருக்கம்).<br />
<br />
"அல்லாஹ் நிகரற்ற கருணையாளன்
என்பதுதான் சரி" என்பதை 'அர்ரஹீம்'
எனும் சொல்லுக்குத் தமிழாக்கம் என்று
நீங்களாக நினைத்துக் கொண்டால், முதல்
ஐயத்துக்கான தெளிவைப் படித்துக்
கொள்ளுங்கள். "அல்லாஹ், நிகரற்ற
கருணையாளன் என்பது மட்டுமே சரி" என்று
ஒற்றைப்படுத்தினால் அது பிழையாகும். "அல்லாஹ்,
நிகரற்ற கருணையாளன்" என்பதும் சரி.
போலவே, அன்பாளன், மன்னிப்பவன்,
கொடையாளன், நீதிபதி ஆகிய அவனுடைய
எல்லாப் பண்புப் பெயர்களுக்கும்
நிலைமொழியாக 'நிகரற்ற' வரும். ஏனெனில்
அவனே நிகரற்றவன்தான்.<br />
<br />
முழுமை பெற்ற ஆதாரம் அல்லாஹ்விடமே
உள்ளது... (006:149).<br />
<br />
(இறைவன் மிக்க அறிந்தவன்).</span></div>
<span class="mu">
</span><br />
<span class="mu">
<span style="font-family: TheneeUniTx;"><b>நன்றி:</b>
<span style="color: blue;"><a href="http://satyamargam.com/islam/for-muslims/2244-2244.html">
சத்தியமார்க்கம்.காம்</a></span></span></span><br />
<span class="mu"><span style="font-family: TheneeUniTx;"><br /></span></span>
<span class="mu"><span class="mu">
<span style="font-family: TheneeUniTx;">மேலதிகமாக ஹதீஸ்களின் விளக்கம்:
<a href="http://abumuhai.blogspot.com/2013/12/blog-post_4576.html">
<span style="color: blue;">''அளவற்ற
அருளாளனன், நிகரற்ற அன்புடையோன்''</span></a></span></span></span></div>
அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9457100.post-63764546209160601192013-12-02T03:09:00.000-08:002013-12-04T22:45:23.865-08:00தியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><b>
ஐயம்:</b><br />
<br />தியாகப் பெருநாளின் முக்கியத்துவம்
பற்றி பேசும்பொழுது "ஒரு பக்தனின்
பக்தியை சோதிக்க அவனுடைய
பிஞ்சுக்குழந்தையை பலியிடுமாறு அளவற்ற
அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமான
உங்கள் அல்லாஹ் கட்டளையிடுகிறானே....
இவ்வளவு ஈவு இரக்கமற்ற கடவுள் தேவையா?<br />
<br />
அல்லாஹ்வின் பெயரால் ஆட்டை அறுத்து
சாப்பிட்டுவிட்டால் பெரிய தியாகமாகி
விடுமா?" என்று எனது பிராமின் நண்பர்
கேட்கிறார். தயவு செய்து விளக்கம்
தரவும். நன்றி. - சாணக்கியன்.<br />
<br />
<b><span style="font-size: x-small;">தெளிவு:</span></b><br />
<br />
இணை தெய்வங்களுக்கு நரபலி கொடுப்பது
எல்லாக் காலத்திலும்
நிகழ்ந்திருக்கின்றன. இன்றும் நரபலி
பற்றிய நிகழ்வுகள் அங்கொன்றும்,
இங்கொன்றுமாக நடந்தேறி வருவதாக ஊடகத்
செய்திகளில் வாசிக்கிறோம். இறுதி
வேதம் குர்ஆன் அருளப்பட்டுக்
கொண்டிருந்த காலகட்டத்திலும் நரபலிகள்
கொடுக்கப்பட்டன. நரபலியைக் கண்டித்து
அருளப்பட்ட வசனம்:<br />
<br />
<b><span style="color: blue;">"இவ்வாறே
இணைவைப்போரில் அதிகமானோருக்கு, தமது
குழந்தைகளைக் கொலை செய்வதை </span></b><span style="color: blue;">
(நன்மை
போல்)<b> அவர்களது இணை தெய்வங்கள்
அலங்கரித்துக் காட்டின. இது அவர்களை
அழிவுக்குட்படுத்துவதற்கும்
அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்குக்
குழப்புவதற்குமேயாகும்..."</b></span>
(அல்குர்ஆன் 006:137).<br />
<br />
<b><span style="color: blue;">"அறிவில்லாமல்
மடத்தனமாகத் தமது குழந்தைகளைக் கொலை
செய்தவர்களும்..."</span></b> (அல்குர்ஆன்
006:140)<br />
<br />
அரபியர்கள் ஏக இறைவனின் மீது நம்பிக்கை
கொண்டிருந்தாலும், எவர் தயவும்
தேவையற்ற இறைவன் தன்னைப் பற்றிக்
குர்ஆனில் எவ்வாறு குறிப்பிடுகின்றானோ,
அந்தப் பொருளில் இறைவனை அவர்கள்
புரிந்து கொண்டிருக்கவில்லை! எவ்வாறு
அவனை வணங்கிட வேண்டுமோ அவ்வாறு
வணங்காதவர்களாகவும், இறைவனை எவ்வாறு
கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு
கண்ணியப்படுத்தாதவர்களாகவும்
இருந்ததோடு, இறைவனுக்கு
இணைகற்பிக்கும் பல தெய்வ
வழிபாடுகளையும் அவர்கள்
விட்டுவைக்கவில்லை. ஏக இறைவனை
நம்புகிறோம் என்று சொல்லிக்கொண்டு,
அவர்களின் சமயச் சடங்குகள், மத
ஆச்சாரங்கள், சித்தாந்தங்கள்
அனைத்திலும் ஷைத்தானின் அடிச்
சுவடுகளைப் பின்பற்றி வந்தனர்.<br />
<br />
அரபியர்களின் பல தெய்வக் கொள்கையைப்
பற்றிக் குர்ஆனில் பல வசனங்கள்
அறிவிக்கின்றன. இணை தெய்வங்கள் மீது
அவர்கள் கொண்டிருந்த பக்தியானது,
அவர்களின் ஆண் குழந்தைகளை அவற்றிற்காக
நரபலி கொடுத்திடவும் அவர்களைத்
தூண்டியது. அவர்களின் இந்தச்
சீர்கேடுகளையும், குழப்பங்களையும்
பற்றித்தான் குர்ஆன் ஆறாவது
அத்தியாயத்தின் 136-140 வசனங்களில்
சுட்டிக்காட்டப்படுகின்றன. இஸ்லாம்
நரபலியை ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை.
மாறாக, நரபலியைக் கொலை என்றே
உறுதிப்படுத்துகின்றது. <br />
<br />
<u>தியாகப் பெருநாளில் எங்கே தியாகம்
உள்ளது?</u><br />
<br />
இது நல்ல கேள்வி, தியாகத் திருநாள்
என்று சொல்லி, அனுமதிக்கப்பட்டப்
பலிப் பிராணிகளை இறைவனின் பெயரால்
அறுத்து, அதன் இறைச்சியை சமைத்துச்
சாப்பிட்டுவிட்டால் அது தியாகம்
ஆகிவிடுமா? இதில் எங்கே தியாகம்
இருக்கிறது? என்கிற கேள்வி நியாயமாக
இருந்தாலும், ஹஜ்ஜுப் பெருநாளுக்கு,
''தியாகத் திருநாள்'' எனும் பெயர் ஏன்
நிலைப்பெற்றது? என்பதை அறிய இறைத்தூதர்
இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கை
வரலாற்றில் இது தொடர்பாக நடைபெற்ற ஒரு
சம்பவத்தைப் படித்தால் தெளிவு பெறலாம்!<br />
<br />
<span style="color: blue;"><b>
"என் இறைவா!
நல்லெழுக்கமான குழந்தையை எனக்குத்
தந்தருள்வாயாக! </b>(என்று பிரார்த்தனை
செய்தார்).<b> எனவே, சகிப்புத் தன்மை
மிக்க ஒரு மகன் குறித்து அவருக்கு நாம்
நற்செய்தி கூறினோம்"</b>
</span>(அல்குர்ஆன் 037:100-101)<br />
<br />
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தொடர்
பிரார்த்தனையின் விளைவாக அவரின்
சந்ததியாக ஒரு மகன் பிறந்தார். அவரது
பெயர் இஸ்மாயீல்.<br />
<br />
<b><span style="color: blue;">
இஸ்மாயீல் வளர்ந்து தந்தையுடன் இணைந்து
செயற்படும் பருவத்தை அடைந்தபோது, "என்னருமை
மகனே! உன்னை நான் அறுப்பதாக
நிச்சயமாகக் கனவில் கண்டேன். உனது
அபிப்பிராயம் என்ன?'' எனக் கேட்டார்.
அ</span></b><span style="color: blue;">(தற்க)<b>வர், "'என்னருமைத்
தந்தையே! உங்களுக்குக்
கட்டளையிடப்பட்டதை நீங்கள் செய்யுங்கள்.
இன்ஷா அல்லாஹ், சகித்துக் கொள்ப</b>(வர்களுள்
ஒரு)<b>வனாக என்னைக் காண்பீர்கள்"
என்று கூறினார்.</b></span><br />
<br />
<b><span style="color: blue;">
அவ்விருவரும் </span> </b>
<span style="color: blue;">
(அல்லாஹ்வுக்குக்)<b>
கட்டுப்பட்டனர். இன்னும் அவர்
</b>(தம்
மகனாகிய)<b>
இவரை முகம் குப்புற நிலத்தில்
கிடத்தியபோது,<br />
<br />
"யா இப்ராஹீம்! நிச்சயமாக நீர் கனவை
உண்மைப்படுத்தி விட்டீர்'' என நாம்
அவரை அழைத்தோம். நிச்சயமாக நாம்
இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி
வழங்குவோம். நிச்சயமாக இது ஒரு
தெளிவான சோதனையேயாகும். அவருக்குப்
பகரமாக, மகத்தான பலிப் பிராணியை
ஆக்கினோம். பின்வருவோரில் அவர்மீது
</b>(புகழ்)<b> நிலைக்கச் செய்தோம்.
இப்ராஹீமின் மீது சாந்தி உண்டாகட்டும்.
இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி
வழங்குவோம் </b></span>(அல்குர்ஆன்
037:102-110).<br />
<br />
நபிமார்களின் கனவு இறைச் செய்திகளின்
முன்னறிவிப்பாகும். அக்கனவு நிறைவேறும்
அல்லது நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற
ரீதியில், மகனை அறுப்பதாக நபி
இப்ராஹீம் (அலை) அவர்கள் கண்ட கனவு
இறைவனின் கட்டளை என அதைச்
செயல்படுத்திட தந்தையும், மகனாரும்
முன்வருகின்றனர். நபி இப்ராஹீம் (அலை)
அவர்களுக்கு நீண்ட காலம்
குழந்தையில்லாமல் இருந்து, பின்னர்
குழந்தை பிறந்தது. (மகன் இஸ்மாயீலை
அறுக்க முயன்ற நிகழ்வுக்குப் பின்னரே
நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு
மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த
மகனாரின் பெயர் இஸ்ஹாக் 037:112).<br />
<br />
ஒற்றைக்கு ஒற்றையான இஸ்மாயீல் என்ற
அந்த ஒரு மகனைத் தம் கையாலேயே அறுக்க
தந்தை ஆயத்தமாகிறார். அருமை மகனை
இழக்க நேரிடுமே என்கிற தயக்கம்
ஏதுமின்றி இறைக்கட்டளையே முக்கியம்
எனச் செயல்பட முன்வந்த ஒரு தந்தையின்
இந்தத் தியாகத்துக்கு ஈடாக எந்தச்
செயலையும் குறிப்பிட்டுச் சொல்லிட
இயலாது. <br />
<br />
இது ஒருபுறமிருக்க:<br />
<br />
''இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை
நிறைவேற்றுங்கள்'' என்று தந்தையிடம்
மகன் கூறி, 'இறைக் கட்டளைக்கு
மிஞ்சியது எதுவுமில்லை' என உயிர்
துறக்க முன்வரும் மகனார் இஸ்மாயீலின்
உயிர்த்தியாகமோ ஈடு இணையற்றது என்று
சொல்லுமளவுக்கு உயர்ந்த தியாகமல்லவோ!<br />
<br />
இறை அன்பர் என இறைவனால் போற்றப்பட்ட,
வாய்மை தவறாத நபி இப்ராஹீம் (அலை)
என்கிற நல்லடியாருக்கும், தியாக உள்ளம்
படைத்தவரும் சகிப்புத் தன்மை
மிக்கவருமான மகனார் இஸ்மாயீலுக்கும்
வைக்கப்பட்ட சோதனையாகும் என்றே இறைமறை
வசனம் குறிப்பிடுகின்றது. இறைக்
கட்டளைக்கு முன்னால் ஈடு செய்ய இயலாத
உயிரிழப்பும் துச்சமென மதித்து செயலில்
இறங்கிய இரு நல்லடியார்களின் தியாகச்
செயல்கள் இடையில் தடுக்கப்பட்டு, அந்த
இடத்தில் ''பெரும் பலியாக'' பலிப்
பிராணியை தியாக மகன் இஸ்மாயீலுக்குப்
பகரமாக்கினான் இறைவன்.<br />
<br />
நபி இஸ்மாயீல் (அலை) அவர்களைச்
சிறப்பிக்கும் வண்ணம் இரு வசனங்களை
இறைவன் தன் வேதத்தில் அருளிப்
பதித்தான்:<br />
<br />
<b><span style="color: blue;">"</span></b><span style="color: blue;">(நபியே)
<b>இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும்
நீர் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர்
வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்.
மேலும், அவர் தூதராகவும், நபியாகவும்
இருந்தார்.<br />
<br />
மேலும், அவர் தமது குடும்பத்தாருக்குத்
தொழுகையையும் ஸகாத்தையும்
ஏவக்கூடியவராக இருந்தார். இன்னும் அவர்
தன் இறைவனிடம் பொருந்திக்
கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்"</b></span>
(அல்குர்ஆன் 005:054-055).<br />
<br />
இம்மாபெரும் சம்பவத்தின் தியாக வரலாறு
மறுமை நாள்வரை நம்பிக்கையாளர்களின்
உள்ளத்தில் பசுமையாக நிலைத்திருக்க
வேண்டும் என இத்தியாக தினத்தை
இஸ்லாமிய மரபாக ஆக்கினான் இறைவன்.
உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கையாளர்
அனைவரும் அந்நாளில் அனுமதிக்கப்பட்ட
பிராணிகளை அறுத்து பலியிட்டு அதன்
இறைச்சியை தாமும் புசித்து
மற்றவருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்.<br />
<br />
அவ்வாறு செய்வதால் ஒவ்வொரு முஸ்லிமும்
தியாகம் செய்வதாகவும் பொருளில்லை!
மாறாக, படைத்தவனுக்கு அவனின்
படைப்புகள் எப்படி கட்டுப்பட
வேண்டுமென்பதை நினைவுறுத்தும் விதமாக
செயற்கரிய மகத்தான தியாகத்தைச் செய்த
இரு நல்லடியார்களின் தியாகங்கள்
பிராணிகளின் பலியின் மூலம் எடுத்து
சொல்லப்படுகிறது! தியாகத் திருநாள்
என்பதன் மூலம் வேண்டுவதும் அதுவே!<br />
<br />
மற்றபடி இத்தியாக நாளில் எந்த
முஸ்லிமும் தியாகம் செய்திட வேண்டும்
என்கிற பொருள் ''தியாகப் பெருநாளில்''
இல்லை! தியாகம் செய்வதற்கென ஒரு
தினத்தை இறைவன் நிர்ணயிக்கவில்லை.
எந்த நாளும் எந்த நேரமும் இறைவழியில்
தியாகம் செய்திட வேண்டும் என்பதே
மேற்காணும் நிகழ்விலிருந்து
முஸ்லிம்கள் பெறும் படிப்பினையாகும்!<br />
<br />
(இறைவன் மிக்க அறிந்தவன்)</span></div>
<span class="mu">
</span><br />
<span class="mu">
<span style="font-family: TheneeUniTx;"><b>நன்றி:</b>
<a href="http://satyamargam.com/islam/others/2241-2241.html">
<span style="color: blue;">
சத்தியமார்க்கம்.காம்</span></a><span style="color: blue;"><br /> </span></span></span></div>
அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9457100.post-35990992033164422492013-11-30T20:22:00.001-08:002014-01-07T22:07:28.967-08:00உருவப்படம் வரைதல் - ஓர்ஆய்வு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">அறிவியல், நவீன கண்டுபிடிப்புகள்,
நவீன கருவிகள் இவற்றுக்கு இஸ்லாம்
எதிரானதல்ல. ஒவ்வொரு நவீன கருவியும் அறிமுகமான தொடக்கத்தில்
மார்க்கத்தின் மீதான அளவிலா பற்றின்
காரணம் அவற்றை இஸ்லாமிய அறிஞர்கள்
எதிர்த்துத் தடை செய்து வந்தனர்.
பின்னர் படிப்படியாக அனுமதித்து
நடைமுறைப்படுத்தலாம் என தீர்ப்பு
வழங்கினார்கள்.</span><br />
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">''குர்ஆன் மொழி பெயர்ப்பை தமிழில் தருவது ஹராம்'' என்று தீர்ப்பு வழங்கினார்கள். இன்று
குர்ஆனுக்குத் தமிழ் மொழி பெயர்ப்புகள்
பல வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை மார்க்க அறிஞர்கள்
ஏற்றுக் கொண்டனர்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">ஒலி பெருக்கி
அறிமுகமான காலத்தில் அது "ஷைத்தானின்
கருவி. ஷைத்தானின் கருவியைப்
பயன்படுத்துவது ஹராம்" என்று அறிஞர்கள் தீர்ப்பு
வழங்கினார்கள். அதனால் தொழுகைப்
பள்ளிகளில் ஒலி பெருக்கி <br />
அமைப்பதற்குத் தடையாக இருந்தது.
பின்னர் துணிச்சலுடன் சில அறிஞர்களும்
பள்ளி நிர்வாகிகளும் முன்வந்து பள்ளிகளில் ஒலி பெருக்கி அமைத்தார்கள்.
இன்று ஒலிபெருக்கி வழியாக அறிஞர்கள்
மார்க்கப் பிரச்சாரம் செய்கின்றனர்.<br />
<br />
தொலைக்காட்சிப் பெட்டி - டிவி
அறிமுகமான அந்தக் காலத்தில் "டிவியில்
உருவங்கள் வருகின்றன. எனவே, ஷைத்தான் பொட்டியான டிவி ஹராமானது"
என்று தீர்ப்பு வழங்கினார்கள். இந்தக்
காலத்தில் அறிஞர்கள் டிவியில் தோன்றி மார்க்கப் பிரச்சாரம்
செய்கின்றனர். இவ்வாறு நவீன
கருவிகளுக்கெல்லாம் துவக்கத்தில்
எதிர்ப்பும் அவை நடைமுறைக்கு வந்த பின்னர் அவற்றிலுள்ள
நன்மைகளைக் கண்டு, படு உற்சாகத்துடன்
அறிஞர்கள் அதில் பங்காற்றுவதைப் பார்க்கிறோம்.<br />
<br />
அந்த வகையில், "உருவப்படம் வரைவது
ஹராம்" என்று முன்னர் தீர்ப்பு
வழங்கப்பட்டது. இன்று விளம்பர சுவரொட்டிகளில் தம் உருவப்படம்
வரவில்லை என்றால் ஹராம் என்று
சொல்லுமளவுக்கு பத்திரிக்கை,
நோட்டீஸ், சுவரொட்டி, கம்ப்யூட்டர், டிவிடிக்கள்,
இணைய தளங்கள் என அறிஞர்களின் உருவங்கள்
பதிவு செய்யப் படுகின்றன. கல்விப் பாடங்கள், அறிவியல்
கல்வி, சமூக அவலங்கள் என பொதுமக்கள்
நலனில் அக்கறை கொண்ட பயனுள்ளவைகளை தொலைக்காட்சியில் கண்டு
மக்கள் அறிவை வளர்த்துக் கொள்கின்றனர்.
ஒரு டி.வி.டி யில் லட்சக் கணக்கான உருவப்படங்கள் பதிவு
செய்யப் படுகின்றன என்பது இங்குக்
குறிப்பிடத்தக்கது.<br />
<br />
உருவப்படம் ஹராம் என்று
சொல்பவர்களாலும் உருவப்படங்களைப்
பயன்படுத்துவதைத் தவிர்க்க இயலாது
என்று சொல்லுமளவுக்கு இன்று உருவப்படங்கள்
கட்டாயத் தேவை என்ற காலகட்டத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, 'இஸ்லாம் உருவப்படம் வரைதலைத்
தடைசெய்துள்ளது' என்பதை எவ்வாறு
விளங்க வேண்டும் என்பதில் <br />
அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள்
உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.<br />
<br />
ஓரிறைவனை வணங்குவது இஸ்லாமின்
அடிப்படைக் கொள்கை. எல்லா
இறைத்தூதர்களும் ஓரிறைக் கொள்கையின்
அடிப்படையில் வாழ்க்கை நெறியினைப்
போதித்தனர். ஒரு சமூகத்துக்கு
அனுப்பப்பட்ட நபியின் மறைவுக்குப்பின்,
அச்சமுதாயத்தினர் மன ஆசைக்கு உட்பட்டு,
தான்தோன்றித்தனமாக வாழ்க்கையை அமைத்து,
"இதைத்தான் <br />
அல்லாஹ் எங்களுக்கு ஏவினான்" என்றும்
வாய் கூசாமல் இறைவனின் மீது
இட்டுக்கட்டிப் பொய்யுரைத்தனர். </span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">அவர்கள் ஏதேனும்
ஒரு மானக்கேடான காரியத்தைச்
செய்துவிட்டால்,</span><span style="color: blue; font-family: TheneeUniTx;">
<b>''எங்கள் மூதாதையர்களை
இதன் </b></span><b style="color: blue; font-family: TheneeUniTx;">மீதிருக்கவேக் கண்டோம். அல்லாஹ்வும்
இதையே எங்களுக்கு ஏவினான்'' என்றும்
கூறுகின்றனர். அல்லாஹ் </b><span style="color: blue; font-family: TheneeUniTx;"><b>மானக்கேடானவற்றை ஏவமாட்டான். நீங்கள்
அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது </b>(இட்டுக்
கட்டிக்)<b> கூறுகின்றீர்களா?
என்று </b>(நபியே)<b> நீர் கேட்பீராக!</b></span><b style="font-family: TheneeUniTx;">
</b><span style="font-family: TheneeUniTx;">(அல்குர்ஆன் 007:028)</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">மனக்கேடான
காரியங்களைச் செய்வதற்கு மட்டுமல்லாமல்,
இறைவனுக்கு இணை தெய்வங்களை ஏற்படுத்தி
அவற்றை வணங்குவதற்கும் முன்னோர்களை
ஆதாரம் காட்டி நியாயப்படுத்தினர். <br />
<br />
<b>
<span style="color: blue;">...எங்கள்
மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்த
தெய்வங்களை விட்டுவிட்டு அல்லாஹ்
ஒருவனை மட்டும் வணங்க வேண்டும்
என்பதற்காகவா நீர் எம்மிடம்
வந்துள்ளீர்?...என்று கூறினர்.</span></b>
(அல்குர்ஆன் 007:070)
<span style="color: blue;">...எமது
<b>மூதாதையர்கள் வணங்கியதை நாம் வணங்குவதை
விட்டும் எம்மைத் தடுக்கின்றீரா?...என்று
கூறினர்</b>.</span> (அல்குர்ஆன் 011:062)
</span>
</div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">இஸ்லாத்தின்
மீளெழுச்சியின்போது ஓரிறைக் கொள்கையை
எதிர்த்தவர்கள், 'எம் மூதாதையர்களை எந்த வழியில் கண்டோமோ
அந்த வழியை நாங்களும் பின்பற்றுவோம்' என்று கொள்கையளவில் பல தெய்வக்
கொள்கையை நம்பிக் கொண்டிருந்தனர்.
உருவச் சிலைகளை வணங்கி வழிபாடு நடத்தி,
எங்கள் முன்னோர்களை இப்படித்தான்
கண்டோம், நாங்களும் அவர்களையேப்
பின்பற்றுவோம் என்றும் கூறிவந்தனர்.
இக்கருத்தைக் குர்ஆன் நெடுகிலும் பல
வசனங்களில் காணலாம்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">உருவச்
சிலைகள், உருவப் படங்கள் இவை இறைவனுக்கு இணைகற்பித்தல் எனும்
மாபெரும் பாவத்தைச் செய்திடத்
தூண்டுதலாக அமைந்துள்ளன. தந்தை
தெய்வமாக வணங்கிய உருவத்தை மகன்
வணங்கி வழிபடுவது இயல்பு. இவ்வாறு தலைமுறை
தலைமுறையாக உருவச்சிலைகள், உருவப்படங்கள் தொடர்ந்து வணங்கி
வழிபாடு நடத்தப்பட்டு வந்தன. இறைவனுக்கு இணைவைக்கும் கொடிய
பாவத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க
உருவச் சிலைகள் செய்வதும், விற்பதும்,
உருவப்படங்கள் வரைதலும், விற்பதும்
குற்றமெனத் தடைவிதித்து கடுமையாக
எச்சரித்துள்ளது இஸ்லாம்!</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><b>கப்ரு -
மண்ணறையை வணங்குதல். </b> </span>
<br />
<span style="font-family: TheneeUniTx;"><b><br /></b></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<span style="color: teal;"><b>நபி(ஸல்)
அவர்கள் மரண வேளை நெருங்கியபோது
தங்களின் போர்வையைத் தங்களின்
முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத்
திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு
அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த
நிலையில் அவர்கள் இருக்கும்போது 'தங்கள்
நபிமார்களின் அடக்கஸ்தலங்களை
வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத,
கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின்
சாபம் ஏற்படட்டும்" எனக் கூறி
அவர்களின் செய்கை பற்றி
எச்சரித்தார்கள். </b> </span>(அறிவிப்பாளர்கள்: ஆயிஷா (ரலி) இப்னு
அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி
0435-0437, முஸ்லிம் 0921, நஸயீ
2047, அபூதாவூத் 3227, அஹ்மத்)</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">ஓர் இறைவனை
வணங்கும்படி ஓரிறைக் கொள்கையின்
பக்கம் அழைத்த நபிமார்களையும் யூத,
கிறிஸ்தவர்கள் விட்டு வைக்கவில்லை. இறைவனிடமிருந்து
செய்திகளைப் பெற்று மக்களுக்கு
அறவுரைகளைப் போதிக்க நியமிக்கப்பட்ட நபிமார்கள் மரணித்து
விட்டால், அவர்களின் அடக்கத்தலத்தில்
ஆலயம் எழுப்பி வணக்கத்தலமாக்கி நபிமார்களின் மண்ணறைகளை வணங்கி வழிபாடு
செய்தனர்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><b><span style="color: teal;"><br /></span></b></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<b>
<span style="color: teal;">உம்மு
ஹபீபா(ரலி)வும் உம்மு ஸலமா(ரலி)வும்
தாங்கள் அபிசீனியாவில் கண்ட உருவங்கள்
இடம் பெற்ற <br />
</span></b><span style="color: teal;">(கிறிஸ்தவ)<b> கோவிலைப் பற்றி நபி(ஸல்)
அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது
நபி (ஸல்) அவர்கள், ''அவர்களில் நல்ல மனிதர்
ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால்
அவரின் அடக்கஸ்தலத்தின் மேல்
வணக்கஸ்தலத்தை அவர்கள் எழுப்பி
விடுவார்கள். அந்த நல்லவர்களின்
உருவங்களையும் அதில் பதித்து
விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின்
சன்னிதியில் அவர்கள் தாம்
படைப்பினங்களில் மிகவும்
கெட்டவர்களாவர்" என்று கூறினார்கள்.</b></span>
(அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்:
புகாரி 0427, 0434, 1341, 3873, முஸ்லிம்
0918, நஸயீ 0704, அஹ்மத் 23731)</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">சமகாலத்தில்
மக்களுடன் சேர்ந்து வாழ்ந்த நல்ல
மனிதர் மரணமடைந்தால் அவரை அடக்கம்
செய்து அவருடைய சமாதி மீது வணக்கத் தலத்தை நிறுவி,
அதில் அவருடைய உருவப்படங்களைப்
பொறித்துவிடுவார்கள். சமாதி, உருவ வழிபாடுகள் இப்படித் துவங்கி,
பின்னாளில் சமாதிகளும் உருவங்களும்
தெய்வங்களாக வழிபட்டுக் கொண்டாடப் படுகின்றன.<br />
<br />
எடுத்துக் காட்டாக: கிறிஸ்தவ
ஆலயங்களில் இறைத்தூதர் இயேசு அவர்களின்
உருவச் சிலைகளும் உருவப்படங்களும் பதிக்கப்பட்டிருக்கும்.
அத்துடன் இயேசுவின் அன்னை மரியாவின்
உருவச் சிலைகளும் <br />
உருவப்படங்களும் பதிக்கப்பட்டு,
அன்னையும், மகனாரும் வணங்கப்படுவதைப்
பார்க்கிறோம் - இயேசு, மரியா உருவ ஓவியங்கள் கிருஸ்தவர்களின்
வீட்டில் வைத்து கடவுளாக வணங்கி ஆராதிக்கப்படுகின்றன - இச்செயலுக்கு
முஸ்லிம்கள் சற்றும் சளைத்தவர்கள்
இல்லை என்பது போல "தமிழகத்து
தர்ஹாக்களைப் பார்த்து வருவோம்" என
நல்லவர்கள் அடக்கம் செய்யப்பட்ட
சமாதிகளின் மீது தர்ஹாக்களை எழுப்பி
சமாதி வழிபாடு நடத்தி வருகின்றனர்.</span><br />
<span style="font-family: TheneeUniTx;"> <br />தர்ஹாக்களின் ஓவியங்கள் வீட்டில்
வைத்து தீப ஆராதனையாக ஊதுவத்தி
கொளுத்தி வைத்து வணங்கி ஆராதிக்கப்படுகின்றன - உருவ வழிபாடு
கூடாது என இஸ்லாம் தடை
விதித்திருப்பதால் தர்ஹாக்களில்
உருவங்கள் பொறிக்கப்படவில்லை. மாறாக, சமாதியில்
அடக்கம் செய்யப்பட்டவர்
வணங்கப்படுகிறார். (தர்ஹாவின் சமாதி <br />
வழிபாடும், இறைவனுக்கு இணைகற்பிக்கும்
செயலாகும் என்பது தனி விஷயம்)<br />
<br />
உருவ வழிபாடுகளை ஒருபோதும் இஸ்லாம்
அனுமதிக்கவில்லை! சமாதி வழிபாடு, உருவ
வழிபாடு இவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும்
அழித்திடவேண்டும் என்பதுதான்
இஸ்லாத்தின் நிலைப்பாடு.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><b>'<span style="color: teal;">'மண்ணறைகள்
(கப்ருகள்) மீது அமராதீர்கள், அவற்றை
நோக்கித் தொழாதீர்கள்'' என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.</span></b> (அறிவிப்பாளர்:
அபூமர்ஸத் கன்னாஸ் (ரலி) நூல்கள்:
முஸ்லிம் 1768, திர்மிதீ 0971, நஸயீ
0760, அபூதாவூத் 3229, அஹ்மத்)</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><b><span style="color: teal;"><br /></span></b></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<b>
<span style="color: teal;">நாங்கள் ஃபளாலா
பின் உபைத் (ரலி) அவர்களுடன் ரோம்
நாட்டிலுள்ள ரோடிஸ் தீவில் இருந்தோம்.
அங்கு எங்கள் நண்பர் ஒருவர்
இறந்துவிட்டார். அப்போது ஃபளாலா பின்
உபைத் (ரலி) அவர்கள், அவரது கப்ரைத்
தரை மட்டமாக அமைக்கும்படி
உத்தரவிட்டார்கள். ''அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கப்ரைத் தரை
மட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான்
கேட்டுள்ளேன்'' என்று சொன்னார்கள்.</span></b>
(அறிவிப்பாளர்: ஸுமாமா பின் ஷுஃபை (ரஹ்)
நூல்கள்: முஸ்லிம் 1763, நஸயீ 2030,
அபூதாவூத் 3219, அஹ்மத்) </span>
</div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><b><span style="color: teal;"><br /></span></b></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<b>
<span style="color: teal;">அலீ பின்
அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக
என்னை அனுப்பினார்களோ அந்த
அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன்.
</span></b><span style="color: teal;">(அந்த அலுவல் என்னவென்றால்)<b>
எந்த உருவச் சிலைகளையும் நீர்
அழிக்காமல் விட்டுவிடாதீர், </b>(தரையைவிட)<b> உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை
மட்டமாக்காமல் விடாதீர்!" என்று
கூறினார்கள்.</b></span> (அறிவிப்பாளர்:
அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) நூல்கள்:
முஸ்லிம்
1764, திர்மிதீ 0970, நஸயீ 2031,
அபூதாவூத் 3218, அஹ்மத்)</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><b><span style="color: blue;"><br /></span></b></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><b>
<span style="color: blue;">இறைவனுக்கு இணைவைக்கும்
செயற்பாடுகளை இறைவன் மன்னிக்கவே
மாட்டான</span>்</b> (அல்குர்ஆன் 004:116) என
அறுதியிட்டுக் கூறியிருப்பதால், உருவ
வழிபாடு இணைவைக்கும் செயல், அதனால்
இஸ்லாம் உருவங்கள் வரைவதை,
செதுக்குவதைத் தடைசெய்திருக்கின்றது.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">உருவப்
படங்கள் வரைவதைத் தடைசெய்வதுத்
தொடர்பான நம் அறிவுக்கெட்டிய சில
அறிவிப்புகளைப் பார்த்து விடலாம். </span></div>
<div style="text-align: left;">
<span style="background-color: yellow; font-weight: 700;"><u><span style="font-family: TheneeUniTx;"><br /></span></u></span></div>
<div style="text-align: left;">
<span style="background-color: yellow; font-weight: 700;">
<u><span style="font-family: TheneeUniTx;">முதல் வகை
ஹதீஸ்கள்.</span></u></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">1)<span style="color: teal;">
<b>நான் இப்னு
அப்பாஸ் (ரலி) உடன் இருந்தபோது ஒருவர்
வந்து, 'அப்பாஸின் தந்தையே! நான்
கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும்
ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்'
எனக் கூறினார். அதற்கு இப்னு
அப்பாஸ் (ரலி), 'நபி(ஸல்) அவர்களிடம்
நான் செவியுற்றதையே உமக்கு
அறிவிக்கிறேன். 'யாரேனும் ஓர் உருவத்தை
வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர்
கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை
செய்வான், அவர் ஒருக்காலும் அதற்கு
உயிர் கொடுக்க முடியாது" என்று
நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்'
என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன்
பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் </b>(பயத்தால்)<b> மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு
அப்பாஸ் (ரலி), 'உமக்குக் கேடு
உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்துதான்
தீர வேண்டும் என்றால் மரம் மற்றும்
உயிரற்றவற்றை வரைவீராக!' என்றார்.</b></span>
(அறிவிப்பாளர்: ஸயீது இப்னு அபில் ஹஸன்
(ரஹ்) நூல்கள்: புகாரி 2225, 5963,
முஸ்லிம் 4290, 4291, திர்மிதீ 1751,
நஸயீ 5359, அபூதாவூத் 5024, அஹ்மத்)</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
2)
<b>
<span style="color: teal;">நான்
சிறியமெத்தை ஒன்றை விலைக்கு வாங்கினேன்.
அதில் உருவப் படங்கள்
வரையப்பட்டிருந்தன. </span></b><span style="color: teal;">(வீட்டுக்கு வந்த)<b> இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதைக்
கண்டதும் வாசற்படியிலேயே
நின்றுவிட்டார்கள், உள்ளே வரவில்லை.
அவர்களின் முகத்தில் அதிருப்தியி</b>(ன்
அறிகுறி<b>)யினை நான் அறிந்து கொண்டு, 'இறைத்தூதர்
அவர்களே! நான் அல்லாஹ்விடமும் அவனுடைய
தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன்.
நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்?'
என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்)
அவர்கள், 'இது என்ன மெத்தை?' என்று
கேட்டார்கள். அதற்கு நான், 'தாங்கள்
இதில் அமர்ந்துகொள்வதற்காகவும், தலை
சாய்த்துக் கொள்வதற்காகவும் இதைத்
தங்களுக்காகவே நான் விலைக்கு
வாங்கினேன்'' என்றேன். அப்போது
இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இந்த
உருவப் படங்களை வரைந்தவர்கள்
மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்கள்.
மேலும் அவர்களின் 'நீங்கள்
படைத்தவற்றுக்கு </b>(நீங்களே)<b> உயிர்
கொடுங்கள்' என </b>(இறைவன் தரப்பிலிருந்து
இடித்து)<b>க் கூறப்படும்'' என்று
சொல்லிவிட்டு, 'உருவப்படங்கள் உள்ள
வீட்டில் நிச்சயமாக </b>(இறைவனின்
கருணையைக் கொண்டுவரும்)<b> வானவர்கள்
நுழைவதில்லை'' என்று கூறினார்கள்.</b></span>
(அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்:
புகாரி 5181, 5937, முஸ்லிம் 4287,
அஹ்மத், முவத்தா மாலிக்)</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
3)<span style="color: teal;">
<b>நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன்
மதீனாவில் ஒரு வீட்டினுள் நுழைந்தேன்.
அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை
வரைபவர் உருவங்களை வரைந்து
கொண்டிருந்தார். அப்போது அபூ
ஹுரைரா(ரலி), 'என் படைப்பைப் போன்று
படைக்க எண்ணுபவனை விட அக்கிரமக்காரன்
வேறு யார் இருக்கமுடியும்? அவர்கள் ஒரு
தானிய விதையையாவது படைத்துக்
காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக்
காட்டட்டும் என்று </b>(அல்லாஹ் கூறுவதாக)<b> இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல
கேட்டேன்' என்றார்கள்...</b> </span>
(நபிமொழிச் சுருக்கம், அறிவிப்பாளர்: அபூ ஸுர்ஆ பின் அம்ர்
பின் ஜரீர் (ரஹ்) நூல்கள்: புகாரி
5953, 7559 முஸ்லிம் 4292, அஹ்மத்)</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">முஸ்லிம்
4292 இல், ''மதீனாவில்
கட்டப்பட்டுக் கொண்டிருந்த மர்வான்
அல்லது ஸயீத் பின் அல்ஆஸுக்கு உரிய
புதுமனை ஒன்றுக்கு நானும் அபூஹுரைரா (ரலி)
அவர்களும் சென்றோம். அந்த மனையில்
ஓவியர் ஒருவர் உருவப் படங்களை வரைந்து
கொண்டிருந்தார்'' என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><span style="background-color: white;"><br /></span></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><span style="background-color: white;">
4)<span style="color: teal;"> <b>...வட்டி
</b>(வாங்கி)<b> உண்பவனையும், வட்டி உண்ணக்
கொடுப்பவனையும், பச்சை
குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்
கொள்பவளையும், உருவப்படங்களை
வரைகின்றவனையும் நபி (ஸல்) அவர்கள்
சபித்தார்கள்.</b></span></span> (அறிவிப்பாளர்:
அபூஜுஹைஃபா (ரலி) நூல்கள்: புகாரி
5962, அஹ்மத் 18281)</span><br />
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">5)<span style="color: teal;">
<b>நாயும் </b>(உயிரினங்களின் சிலைகள் அல்லது)<b> உருவப் படங்களும் உள்ள வீட்டினுள்
</b>(இறைவனின்
கருணையைக் கொண்டு வரும்)<b> வானவர்கள்
நுழைய மாட்டார்கள். என்று அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</b></span>
(அறிவிப்பாளர்: அபூ தல்ஹா (ரலி)
நூல்கள்: புகாரி 3225, முஸ்லிம் 4278,
திர்மிதீ 2804, நஸயீ 4282, அபூதாவூத்
4153, இப்னுமாஜா 3649, அஹ்மத்) </span>
</div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">6)<span style="color: teal;">
<b>உருவச் சிலைகளோ
உருவப் படங்களோ உள்ள வீட்டில் </b>(அருள்)<b> வானவர்கள் நுழைய மாட்டார்கள். என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.</b></span> (அறிவிப்பாளர்:
அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்
4293)</span><br />
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">மேற்காணும்
ஆறு அறிவிப்புகளும் உயிரினங்களின்
உருவ ஓவியம் தீட்டுவதை வன்மையாகக்
கண்டித்து எச்சரிக்கின்றன. உருவச் சிலையும்,
உருவப்படமும், நாயும் உள்ள வீட்டில்
நன்மையைக் கொண்டுவரும் வானவர்கள் நுழையமாட்டார்கள் எனக் கூறி வீடுகளில்
இவற்றைத் தவிர்க்கும்படியும்
அறிவிக்கின்றன. இந்த அறிவிப்புகளின்
<br />
கருத்துகளில் ஏறத்தாழ சற்று
வார்த்தைகள் வித்தியாசத்தில் இன்னும்
அனேக அறிவிப்புகள் உள்ளன. இந்த ஆதாரங்களின் அடிப்படைப் படிப்பினையாக,</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">உருவப்படம்
வரைந்தவர் அந்த உருவத்துக்கு உயிர்
கொடுக்கும்படி மறுமையில் வேதனை
செய்யப்படுவார். அவரால் உயிர் கொடுக்க இயலாது. அதனால்
வேதனையும் நீங்காது.<br />
<br />
அடக்கத் தலத்தில் ஆலயம் எழுப்பி அங்கு
அடக்கம் செய்யப்பட்டவரின் உருவப்படத்தை
வரைந்து வைப்பவர்கள், படைப்பினங்களில் மகா மட்டமானவர்கள்.<br />
<br />
"என் படைப்பைப் போன்று படைக்க
எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் யார்?"
என்று அல்லாஹ் கேட்கிறான். <br />
<br />
உருவப் படங்கள் வரைபவர்களை நபி (ஸல்)
அவர்கள் சபித்துள்ளார்கள்.<br />
<br />
உருவப்படங்களும் நாயும் உள்ள வீட்டில்
அருளைக் கொண்டுவரும் வானவர்கள் நுழைய
மாட்டார்கள்.<br /><br />
</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">ஆகியவற்றை எடுத்துச் சொல்லி "உருவப்படம்
வரையக் கூடாது"' புகைப்படக் கருவியைக்
கொண்டு உயிரினங்களின் உருவங்களைப் "புகைப்படம் எடுக்கக்
கூடாது" ஒளிப்பதிவு செய்யும் கருவியைக்
கொண்டு உயிரினங்களின் உருவங்களை "ஒளிப்பதிவு செய்யக் கூடாது"
"வீடுகளில் உருவப்படங்களை
வைத்திருக்கக் கூடாது" எனத் தீர்ப்பு
<br />
வழங்குகின்றனர் சில அறிஞர்கள்.<br />
<br />
முதல் வகையான மேற்கண்ட
இவ்வறிவிப்புகளின் எச்சரிக்கை மட்டும்
இருந்திருந்தால் மறுபேச்சுக்கே
இடமில்லாமல், உயிரினங்களின் உருவப் படங்கள்
வரைவதற்கும், உருவப் படங்களை
பயன்படுத்துவதற்கும் தடையுள்ளது என்று சொல்லி முடித்து ஒதுங்கி விடலாம்.
ஆனாலும், விதிவிலக்காக வேறு சில
அறிவிப்புகளும் உள்ளன அவற்றையும் <br />
இங்கு ஒப்பு நோக்க வேண்டும்.</span><br />
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="background-color: yellow;">
<b><u><span style="font-family: TheneeUniTx;">இரண்டாம்
வகை ஹதீஸ்கள்.</span></u></b></span><br />
<span style="background-color: yellow;"><b><u><span style="font-family: TheneeUniTx;"><br /></span></u></b></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
(1)<span style="color: teal;"> <b>எங்களிடம்
திரைச் சீலையொன்று இருந்தது. அதில்
பறவையின் உருவம் இருந்தது. ஒருவர்
வீட்டுக்குள் நுழையும்போது அந்தத்
திரையே அவரை வரவேற்கும். என்னிடம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை
அப்புறப்படுத்து. நான் வீட்டுக்குள்
நுழையும் போதெல்லாம் இவ்வுலக</b>(த்தின்
ஆடம்பர)<b>ம்தான் என் நினைவுக்கு வருகிறது"
என்று கூறினார்கள். மேலும், எங்களிடம்
குஞ்சம் வைத்த துணியொன்றும் இருந்தது.
அதன் கரைவேலைப்பாடுகள் பட்டினால் ஆனவை
என்றே நாங்கள் கூறிவந்தோம். அதை
நாங்கள் அணிந்துவந்தோம்.</b></span> (அறிவிப்பாளர்:
ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 4279,
திர்மிதீ 2468, நஸயீ 5353, அஹ்மத்)</span><br />
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
(2)<span style="color: teal;"> <b>அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் ஒரு
பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது,
எனது வீட்டுவாசலில் நான் குஞ்சம் உள்ள
திரைச் சீலையொன்றைத்
தொங்கவிட்டிருந்தேன். அதில் இறக்கைகள்
கொண்ட குதிரைகளின் உருவங்கள் இருந்தன.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
அதை (அகற்றுமாறு) உத்தரவிட, அவ்வாறே
அதை நான் அகற்றிவிட்டேன்.</b> </span>(அறிவிப்பாளர்:
ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 4281)</span><br />
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
(3)<span style="color: teal;"> <b>ஆயிஷா (ரலி)
அவர்களிடம் உருவச் சித்திரங்கள்
பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது.
அதனால் வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த
அலமாரி)யை அவர்கள் மறைத்திருந்தார்கள்.
(அதை நோக்கித் தொழுத) நபி(ஸல்)
அவர்கள், 'இதை அகற்றிவிடு. ஏனெனில்,
இதிலுள்ள உருவப்படங்கள் என்
தொழுகையில் என்னிடம் குறுக்கிட்டுக்
கொண்டேயிருக்கின்றன' என்று
கூறினார்கள்.</b></span> (அறிவிப்பாளர்:
அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி 5959,
முஸ்லிம் 4284, அஹ்மத் 12122. முஸ்லிம்
நூல் அறிவிப்பில், ஆகவே
<span style="color: teal;">''அதை நான்
அப்புறப்படுத்தி அதைத்
தலையணை(இருக்கை)களாக ஆக்கி விட்டேன்''</span>
என்று இடம்பெற்றுள்ளது)</span><br />
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
(4)<span style="color: teal;"> <b>நான் என்னுடைய அலமாரி
</b>(நிலைப் பேழை<b>)
ஒன்றின் மீது </b>(மிருகங்களின்)<b> உருவங்கள்
(வரையப்பட்டு) இருந்த ஒரு
திரைச் சிலையைத் தொங்க விட்டிருந்தேன்.
அதை நபி(ஸல்) அவர்கள்
கிழித்துவிட்டார்கள். எனவே,
அதிலிருந்து
நான் இரண்டு மெத்தை இருக்கைகளைச்
செய்து கொண்டேன். அவை வீட்டில்
இருந்தன அவற்றின் மீது நபி (ஸல்)
அவர்கள் அமர்வார்கள்.</b></span> (அறிவிப்பாளர்:
ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2479)</span><br />
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<u>
<span style="font-family: TheneeUniTx;">நபி (ஸல்)
அவர்களின் வீட்டில் உருவ
பொம்மைகள் இருந்தன.</span></u><br />
<u><span style="font-family: TheneeUniTx;"><br /></span></u></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">(5)
<b>
<span style="color: teal;">நான் </span></b><span style="color: teal;">(சிறுமியாக
இருந்தபோது)<b> பொம்மைகளை வைத்து
விளையாடுவேன். எனக்குச் சில தோழியர்
இருந்தனர். அவர்கள் என்னுடன்
விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள்
நுழைந்தால் அவர்களைக் கண்டதும்
தோழியர் </b>(பயந்து கொண்டு)<b> திரைக்குள்
ஒளிந்து கொள்வார்கள். அப்போது
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை
என்னிடம் அனுப்பி வைப்பார்கள்.
தோழிகள் என்னுடன் </b>(சேர்ந்து)<b> விளையாடுவார்கள்.</b></span> (அறிவிப்பாளர்:
ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 6130,
முஸ்லிம் 4827, அபூதாவூத் 4931,
இப்னுமாஜா 1982, அஹ்மத். முஸ்லிம் நூல்
(4827) </span><br />
<span style="font-family: TheneeUniTx;">அறிவிப்பில்,<b><span style="color: teal;"> ''நான் நபி (ஸல்)
அவர்கள் இல்லத்தில் பொம்மைகள் வைத்து
விளையாடுவேன்''</span></b> என்று கூடுதலாக
இடம்பெற்றுள்ளது).</span><u><span style="font-family: TheneeUniTx;"> </span>
</u><br />
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
(6)<span style="color: teal;"> <b>நான் ஏழு வயதுடையவளாக இருந்த போது, நபி
(ஸல்) அவர்கள் என்னை மணந்து
கொண்டார்கள். நான் </b>(பருவமடைந்து)<b> ஒன்பது வயதுடையவளாக
இருந்தபோது, அவர்களிடம்
அனுப்பிவைக்கப்பட்டேன். அப்போது
விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன்
இருந்தன. நான் பதினெட்டு வயதுடையவளாக
இருந்தபோது, நபி (ஸல்)
அவர்கள் என்னை விட்டு இறந்தார்கள்.</b></span> (அறிவிப்பாளர்:
ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 2780,
நஸயீ 3378)</span><br />
<span style="font-family: TheneeUniTx;"> </span>
</div>
<div style="text-align: left;">
<u>
<span style="font-family: TheneeUniTx;">விளையாட்டுப்
பொம்மைகளில் உயிரினங்களின் உருவங்களும் இருந்தன, </span>
</u><br />
<u><span style="font-family: TheneeUniTx;"><br /></span></u></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">(7)<span style="color: teal;">
<b>நபி (ஸல்) அவர்கள் தபூக் அல்லது
கைபர் இரண்டில் ஏதோ ஒரு
போர்க்களத்திலிருந்து திரும்பி
வந்தார்கள். அப்போது காற்று வீசி ஆயிஷா (ரலி)
அவர்களின் விளையாட்டுப் பொம்மைகளுக்குப்
போடப்பட்டிருந்த திரை
விலகியது. அதைக் கண்ட நபி
(ஸல்) அவர்கள் "யா ஆயிஷா என்ன இது?''
என்றார்கள். "என்
பொம்மைகள்'' என்று
கூறினேன். அவற்றுக்கிடையே இரண்டு
இறக்கைகளைக் கொண்ட குதிரை
பொம்மை ஒன்றைக் கண்டு, அதோ நடுவில்
உள்ள அந்தப் பொம்மை என்ன? என்று நபி (ஸல்)
அவர்கள் கேட்டார்கள். "குதிரை'' என்று
கூறினேன். குதிரையின் மேல் என்ன? என்று
கேட்டார்கள். "இறக்கைகள்'' என்று கூறினேன். குதிரைக்கும்
இரண்டு இறக்கைகளா? என்று நபி (ஸல்)
அவர்கள் கேட்க, "ஏன்
சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள
குதிரை இருந்ததாக நீங்கள்
கேள்விப்பட்டதில்லையோ?'' என்று
கேட்டேன், இதைக் கேட்டதும்,
அவர்களின் கடவாய்ப்பற்களை
நான் காணும் அளவுக்கு சிரித்தார்கள்.</b></span>
(அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்:
அபூதாவூத் 4932)</span><br />
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">(7வது
அறிவிப்பில், "கைபர் அல்லது தபூக்"
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கைபர்
போர் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு நடைபெற்றது. தபூக் போர் ஹிஜ்ரி
ஒன்பதாம் ஆண்டு நடைபெற்றது).<br />
<br />
உருவப் படங்கள் தொடர்பாக மேற்கண்ட
இரண்டாம் வகை ஹதீஸ்களின்
கருத்துக்களையொட்டி, சற்று முன்-பின்
வாசகங்கள் வித்தியாசத்தில் இன்னும்
அனேக அறிவிப்புகள் உள்ளன. இரண்டாம் வகை
ஹதீஸ்களிலிருந்து, எவ்வித மதிப்பும் அந்தஸ்தும் வழங்காமல் சில
காரண காரியங்களுக்காக வீடுகளில்
உருவப்படங்களை வைத்திருக்கலாம், உருவப்படங்களைப் பயன்படுத்தலாம் என்று
விளங்க முடிகிறது.<br />
</span></div>
<blockquote class="tr_bq">
<span style="color: red; font-family: TheneeUniTx;">
உருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள்
நுழைய மாட்டார்கள் என்கிற
அறிவிப்பிற்கு எதிராக இன்று உருவப்
படங்கள் இல்லாத வீடு இல்லை எனும்
அளவுக்கு, புகைப்படங்கள், குடும்ப
அட்டை, காப்பீடு அட்டை, வாக்காளர் அட்டை, செய்தித் தாள்கள், புத்தகங்கள்,
கல்விப் புத்தகங்கள், ரூபாய்
நோட்டுக்கள், சில்லரைக் காசுகள் என
இப்படி எவ்வளவோ உருவப் படங்கள்
பதிக்கப்பட்டவை வீடுகளில் உள்ளன. இவை
தவிர்க்க முடியாதவை. தவிர்ப்பது நடைமுறை சாத்தியமற்றது.</span></blockquote>
<span style="font-family: TheneeUniTx;">
<br />
எடுத்துக் காட்டாக: பாலர் கல்வியை
எடுத்துக் கொள்வோம். துவக்கத்தில்
குழந்தைகளுக்கு உயிர் எழுத்துகள்
கற்றுத் தரப்படுகின்றன. அ, அம்மா அல்லது அணில்.
ஆ, ஆடு. இ, இலை. ஈ, ஈயின் உருவம். உ,
உரல். ஊ, ஊஞ்சல். எ, எலி. ஏ, ஏணி. ஐ. ஐவர். ஒ, ஒட்டகம்,
ஓ, ஓடம். ஒள, ஒளவையார். என குழந்தைகள்
மனத்தில் உயிர் எழுத்துகளைப் பதிய வைக்க பாடப்
புத்தகத்தில் உயிரினங்களின்
உருவப்படங்களும் வரைந்து காட்டி கல்வி
போதிக்கப்படும். குழந்தைகள் வீட்டில்
இருக்கும் போதும் பாடப் புத்தகத்தைப்
படித்துக் கொண்டிருப்பார்கள். பாடப் <br />
புத்தகங்கள் வீட்டில்தான் இருக்கும்.
பாடப் புத்தகத்தில் உயிரினங்களின்
உருவப்படங்கள் இருப்பதால் வானவர்கள் வீட்டில் நுழையமாட்டார்கள் என்று
சொல்ல மாட்டோம்.<br />
<br />
உருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள்
நுழைய மாட்டார்கள் என்கிற
அறிவிப்பிற்கு எதிராக இன்று உருவப்
படங்கள் இல்லாத வீடு இல்லை எனும்
அளவுக்கு, புகைப்படங்கள், குடும்ப
அட்டை, காப்பீடு அட்டை, வாக்காளர் அட்டை, செய்தித் தாள்கள், புத்தகங்கள்,
கல்விப் புத்தகங்கள், ரூபாய்
நோட்டுக்கள், சில்லரைக் காசுகள் என
இப்படி எவ்வளவோ உருவப் படங்கள்
பதிக்கப்பட்டவை வீடுகளில் உள்ளன. இவை
தவிர்க்க முடியாதவை. தவிர்ப்பது நடைமுறை சாத்தியமற்றது. உருவப்படம்
கூடாது என்று சொல்பவரின் சட்டைப்
பையில் உருவப்படம் வரையப்பட்ட <br />
பணம் இருக்கும். உருவப்படம் உள்ள
அடையாள அட்டையும் இருக்கும்.<br />
<br />
இன்று தொலைதூரம் என்பதெல்லாம் ஒரு
பொருட்டே அல்ல. பொருளாதார வசதி
இருந்தால் நினைத்த நேரத்தில் விரும்பிய நாட்டிற்குச் சென்று வரலாம்.
இதற்குப் பாஸ்போர்ட் கட்டாயம்
வேண்டும். பாஸ்போர்ட்டின் <br />
உரிமையாளரை அடையாளப்படுத்த புகைப்படம்
தேவை. அயல் நாட்டினர் உம்ரா, ஹஜ்ஜை
நிறைவேற்ற வேண்டுமாயின் பாஸ்போர்ட் இல்லாமல் இறை
ஆலயமான கஅபா இருக்கும் சவூதி அரேபியா
நாட்டிற்குள் <br />
சட்டப்படி நுழைய இயலாது. <br />
<br />
தொலைந்து போனவர்களைத் தேடும்
முயற்சியில் "காணவில்லை" என்று
அறிவிப்புச் செய்வதற்கும் காணாமல் போனவரின் புகைப்படம் தேவை. காவல்
துறையினர் திருடர்கள் பற்றிய
எச்சரிக்கை செய்வதற்கும், அயல் <br />
நாட்டிற்குத் தப்பியோடிய குற்றவாளியை
இன்டர் நெட் மூலம்
அடையாளப்படுத்துவதற்கும் உளவுத்
துறைக்குப் புகைப்படங்கள் பெரும் உதவியாக இருந்து
வருகின்றன.<br />
<br />
காவல் துறை, நீதித்துறை, அரசுத்துறை
என பல துறைகளிலும் புகைப்படங்களும்,
ஒளிப்பதிவுகளும் ஆவணங்களாகப் பத்திரப்படுத்தப்
படுகின்றன! இன்னும் சொல்வதென்றால்,
புகைப்படம், ஒளிப்படம் இவை முக்கிய
சாட்சிகளாகவும் ஏற்றுக்
கொள்ளப்படுகின்றன. மோசடியைத்
தவிர்க்க, வீடு நிலம் என அசையாச்
சொத்துக்கள் வாங்கும்போது விற்பவர், வாங்குபவரின்
புகைப்படங்கள் முத்திரைப் பத்திரத்
தாள்களில் ஒட்டிப் பதிவு <br />
செய்யப்படுகின்றன. உருவப் படங்களால்
இவ்வளவு பயன் இருந்தாலும், இஸ்லாம்
முற்றாகத் தடைவிதித்திருந்தால் முஸ்லிம்கள் மறு பேச்சின்றிக்
கட்டுப்பட வேண்டும்; அதில் மாற்றுக்
கருத்து இல்லை!<br />
<br />
<u>திரைச் சீலையில் உயிரினங்களின்
உருவப் படங்கள் தேவையா?</u></span><br />
<span style="font-family: TheneeUniTx;"><u><br /></u></span>
<br />
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">மறைவுக்காக
வீட்டின் நுழைவாயிலில் திரைச் சீலையைத்
தொங்க விடுகின்றனர். வெளியில்
நடமாடும் ஆட்களின் பார்வை வீட்டிற்குள் எட்டாமலிருக்க
திரைச் சீலை ஒரு மறைவு அவ்வளவுதான்.
அதற்கு துணி மட்டும் போதும். அதில் உருவப்படங்களை வரைந்து
அலங்கரிப்பது வீட்டின் நுழைவாயிலை
மதிப்பு மிக்கதாகக் கருதுவதாகும். இது
தேவையற்ற அலங்காரம் என்பதுடன் திரைத்
துணியில் வரையப்படும் உயிரினங்களின்
உருவங்கள் மதிக்கப்படுகின்றன.<br />
<br />
உருவப்படங்களின் மீதான இந்த
மதிப்பைத்தான் இஸ்லாம் இல்லாமல்
ஆக்குகின்றது. அதேத் திரைத் துணியைக்
கிழித்து தரையில் விரித்து அதன் மீது
அமர்ந்து கொள்ளலாம். மிதியடியாகப்
பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது திரைத் துணியைச் சுருட்டி வீட்டில் ஒரு
மூலையில் வைத்து விட்டாலும் வானவர்கள்
நுழையத் தடையில்லை!</span><br />
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">(8) <b>
<span style="color: teal;">ஜிப்ரீல் </span></b><span style="color: teal;">(அலை
- ஒருமுறை)<b> அல்லாஹ்வின் தூதரது </b>
(இல்ல வாயிலில் நின்று உள்ளே வர)<b>
அனுமதி கோரினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
"உள்ளே வரலாம்" என அனுமதி
வழங்கினார்கள். </b>(ஆனால்)<b> "உங்கள்
வீட்டுத் திரைச் சீலையில் </b>(உருவப்)<b>
படங்கள் உள்ள நிலையில் நான் எப்படி
உள்ளே வருவேன்? அதன் தலைகளை வெட்டி
விடுங்கள்; அல்லது உருவங்களைச்
சிதைத்துவிடுங்கள். வானவர் கூட்டமாகிய
நாங்கள் உருவங்கள் வரையப்பட்ட
இல்லங்களில் நுழைய மாட்டோம்" என
ஜிப்ரீல் பதிலுரைத்தார்</b></span>. (அறிவிப்பாளர்:
அபூஹுரைரா (ரலி) நூல்கள்: நஸயீ 5395,
திர்மிதீ 2806, அபூதாவூத் 4158, அஹ்மத்
8018).<br />
<br />
நஸயீ நூல் தவிர திர்மிதீ, அபூதாவூத்,
அஹ்மத் ஆகிய நூல்களில் கூடுதலாக வரும்
கீழ்க்காணும் செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது.<br />
<br />
<b><span style="color: teal;">என்னிடம்
ஜிப்ரீல் (அலை) வந்தார்கள், "நான்
நேற்றிரவு உங்களிடம் வந்திருந்தேன்.
உங்கள் வீட்டு வாசலில் உருவப்படங்கள் இருந்ததன் காரணமாக
வீட்டுக்குள் நுழையவில்லை" என்று
ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். வீட்டுத்
திரைச் சீலையில் உருவப்படங்கள்
இருந்தன. வீட்டில் ஒரு நாயும் இருந்தது,
உருவப்படத்தின் தலையை நீக்கி அதை
மரத்தின் வடிவம் போல் ஆக்குமாறு நபி
(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அந்தத் திரைச் சீலையைத் துண்டாக்கி
மிதிபடும் வகையில் இரண்டு தலையணைகள்
தயாரிக்குமாறும், நாயை
வெளியேற்றுமாறும் கட்டளையிட்டார்கள்.
ஹஸன் அல்லது ஹுஸைனுக்கு சொந்தமான
நாய்க் குட்டி, நபி (ஸல்) அவர்களின்
கட்டிலுக்கடியில் இருந்தது. பின், அது
வெளியேற்றப்பட்டது.</span></b><br />
<br />
மிதிபடும் வகையில் மதிப்பற்ற
உருவப்படங்கள் வீட்டில் இருக்கலாம்.
அதனால் வானவர்கள் நுழைய தடை இல்லை என்பதை மேற்கண்ட அறிவிப்பிலிருந்து
விளங்குகிறோம். </span><span style="font-family: TheneeUniTx;">உலகப் பயன்
பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும்
உருவப் படங்கள் வீட்டில் வைத்திருக்க
மார்க்க ரீதியாக எவ்விதத் </span><span style="font-family: TheneeUniTx;">தடையும் இல்லை! அப்படியானால் முதல் வகை
ஹதீஸ்களின் நிலை என்ன? என்கிற வினா
எழுகின்றது. இதற்கு </span><span style="font-family: TheneeUniTx;">வணங்கப்படும் உருவச் சிலைகளை
வடிவமைக்கக் கூடாது, வணங்கப்படும்
உருவப் படங்களை வரையக் கூடாது, </span><span style="font-family: TheneeUniTx;">வணங்கி வழிபாடு நடத்தும் சிலைகளும்,
உருவப் படங்களும் உள்ள வீட்டில்
வானவர்கள் நுழையமாட்டார்கள் </span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
எனப் பொருள் கொள்வதே பொருத்தமாகும்.<br />
<br />
"நாய்கள், உருவப்படங்கள் இருக்கும்
வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள்
என்ற ஹதீஸில், 'வணங்கப்படும் உருவப்படங்கள்' என்று நாமாக விளக்கம்
இணைத்துக் கொள்ள நமக்கு அதிகாரம் உண்டா?"<br />
<br />
<span style="color: red;">இல்லை!,
மார்க்கத்தில் ஒன்றைக் கூட்டவோ
குறைக்கவோ ஹலால், ஹராம் என்று
விதிக்கவோ எவருக்கும் அதிகாரமில்லை. அதிகாரம் யாவும்
அல்லாஹ்வுக்குரியது!</span>
ஹதீஸ்களிலிருந்து புரிந்து கொண்டதையே
விளக்கமாக <br />
வைத்துள்ளோம். நாய்களைப் பற்றித் தடை
விதிக்கும் ஹதீஸ்களைப் போலவே,
விதிவிலக்காக வேட்டை நாய்களை வளர்த்துக் கொள்ளலாம் என்று
அல்லாஹ்வின் தூதர்
அனுமதியளித்திருக்கின்றார்கள் (புகாரி
2322). இந்த அனுமதி, கட்டாயத் தேவையைக் கருத்தில் கொண்டு
வழங்கப்பட்டதாகும்.<br />
<br />
உருவச் சிலைகள் உருவப் படங்கள் மட்டும்
வணங்கப்படுவதில்லை. சில மதச்
சின்னங்களும் வணங்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சிலுவை,
திரிசூலம், வேல் ஆகியவற்றைக்
கடவுள்களின் சின்னங்கள் எனப் பிற மதத்தவர் வணங்கி வழிபட்டு வருகின்றனர்.
சிலுவைச் சின்னம் இல்லாத கிறிஸ்தவ
தேவாலங்களைக் காண இயலாது. சிலுவை ஒரு தெய்வச் சின்னம்
எனக் கருதி கிறிஸ்தவ மக்கள்
வணங்குவதால், தோற்றத்தில் சிலுவைக்
<br />
குறி போன்றவற்றையும் நபி (ஸல்)
அவர்கள் சிதைத்துள்ளார்கள். <br />
<br />
<b><span style="color: teal;">நபி (ஸல்)
அவர்கள் தங்களின் வீட்டில் சிலுவை
போன்ற உருவங்கள் உள்ள எந்தப்
பொருளையும் சிதைக்காமல்
விட்டுவைத்ததில்லை.</span></b> (அறிவிப்பாளர்:
ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 5952,
அபூதாவூத் 4151, அஹ்மத் 23740).<br />
<br />
மதச் சின்னங்கள் வணங்கப்படுவதால்
சிலுவை சின்னத்தைப் போல்
தோற்றமளித்தவைகளை நபி (ஸல்) அவர்கள்
சிதைத்துள்ளார்கள். வணங்கப்படும்
உருவப் படங்களும் சிதைத்து அழிக்கப்பட
வேண்டும் என்பது இதிலிருந்து விளங்க முடிகிறது. </span><span style="font-family: TheneeUniTx;">மரணமடைந்த
முன்னோர்களின் உருவப்படங்கள் மரச்
சட்டமடித்து கண்ணாடியிட்டு சுவற்றில்
மாட்டி, அதற்கு </span><span style="font-family: TheneeUniTx;">நெற்றியில் குங்குமம் சந்தனம்
பொட்டுவைத்து மாலையிட்டு அவை
பூஜிக்கப்படுன்றன. பிறமதத்தினர்
வீட்டின் </span><span style="font-family: TheneeUniTx;">பூஜையறையில் முன்னோர்களின் உருவப்
படங்கள் தெய்வமாக வணங்கப்படுகின்றன.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<br />
அம்மி, குழவி, ஆட்டுக்கல், உரல், கல்
தூண் என இவற்றை வடிவமைக்கும்
சிற்பியிடம் வியாபார சிந்தனை மட்டுமே இருக்கும். வேறு உணர்வு
அதிலிருக்காது. ஆனால் ஆண் தெய்வங்கள்,
பெண் தெய்வங்கள் என உருவச் சிலைகளை வடிவமைக்கும் சிற்பி, அதை
உருவாக்கும் போதே அதற்கு தெய்வீக
ஆற்றல் உள்ளதாகக் கருதி ஆச்சாரத்துடன் விரதமிருந்து சிலையை
வடிக்கிறார். தெய்வப் படங்களை ஓவியம்
தீட்டும் ஓவியரும் அதற்கு தெய்வீக ஆற்றல் இருப்பதாகக் கருதி
பக்தியுடன் உருவங்களைத் தீட்டுகிறார்.<br />
<br />
செல்வங்களை அள்ளித் தரும் பெண் தெய்வம்
கையிலிருந்து பொற்காசுகள் கொட்டுவது
போலவும், கல்விக்கான பெண் தெய்வம் கையில் வீணை
வைத்திருப்பது போன்றும் ஓவியரின்
கற்பனைக் கேற்ப, இணைகற்பிக்கும் இணை
தெய்வங்களின் உருவங்களை வரைந்தவரிடம்,
அவர் வரைந்த உருவப் படத்திற்கு உயிர்
கொடுக்கும்படி மறுமையில் வேதனை செய்யப்படுவார் என்று
விளங்கினால் முரண்பாடு இல்லை. </span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">முற்றும்
அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!</span><br />
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<b><span style="font-family: TheneeUniTx;">உருவப்
பொம்மைகள் வீட்டில் வைத்திருக்கலாமா?</span></b></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">(இன்ஷா
அல்லாஹ் அடுத்த பகுதியில்)</span><br />
<span class="mu">
<span style="font-family: TheneeUniTx;">
<a href="http://abumuhai.blogspot.com/2014/01/blog-post.html">
<span style="color: blue;">உருவ பொம்மைகள் வீட்டில் வைத்திருக்கலாமா?</span></a></span></span></div>
<span class="mu">
</span><br />
<span class="mu">
<span style="font-family: TheneeUniTx;"><b>நன்றி:</b>
<a href="http://satyamargam.com/islam/for-muslims/2240-2240.html">
<span style="color: blue;">
சத்தியமார்க்கம்.காம்</span></a></span></span></div>
அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9457100.post-58700349757313166412013-11-28T22:53:00.003-08:002013-11-28T23:40:17.820-08:00கணவருக்கு மனைவி சஜ்தா செய்யச் சொல்வது சரியா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><b>ஐயம்:</b><br />
"அல்லாஹ் அனுமதித்திருந்தால், மணைவி
கணவனுக்கு சஜ்தா செய்யலாமென நான்
கட்டளையிட்டிருப்பேன்" என்று
பெருமானார்(ஸல்) சொன்னதாக ஒரு ஹதீஸ்
சொல்லப்படுகிறது.<br />
<br />
அல்லாஹ் அனுமதித்திருந்தால் அதை
இதையென்று எதையும் செய்யலாமே?. "அல்லாஹ்வைத்தவிர
யாருக்கும் தலை வணங்க மாட்டேன், தலையே
போனாலும் சரி" எனும் சத்தியத்தை
மனிதகுலத்துக்கு எடுத்துரைத்த
பெருமானார்(ஸல்), இப்படி "கணவனே
கண்கண்ட தெய்வம்" எனும் பொருள்படும்
ஹதீஸை சொல்வாரா?.<br />
<br />
எனக்கு தெரிந்த மார்க்க அறிஞர்களிடம்
கேட்டால், மழுப்பலும் மௌனமும்தான்
பதிலாக வருகிறது. தயவு செய்து
நீங்களாவது தெளிவு செய்யுங்கள். நன்றி.
- சாணக்கியன்</span></div>
<div style="text-align: left;">
<b><span style="font-family: TheneeUniTx;"><br /></span></b>
<b>
<span style="font-family: TheneeUniTx;">தெளிவு:</span></b></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span>
<span style="font-family: TheneeUniTx;">
<span style="color: blue;"><a href="http://satyamargam.com/islam/others/2198-wearing-poonal.html">பூணூல்
அணியும்</a></span> சாணக்கியரே! மார்க்க
அறிஞர்களிடம் கேட்டேன் தெளிவான பதில்
இல்லை என்பதெல்லாம் நம்பும்படியாக
இல்லை.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span>
<span style="font-family: TheneeUniTx;">''அல்லாஹ்வைத்
தவிர யாருக்கும் தலை வணங்க மாட்டேன்
தலையே போனாலும் சரி!'' என்கிற ஓரிறைக்
கொள்கையைப் பிரகடனப்பத்துவது தான்
இஸ்லாம். சத்திய இஸ்லாத்தை ஏற்று,
ஓரிறைக் கொள்கையில் உறுதியுடன்
இருப்பவர் எந்தச் சூழ்நிலையிலும், தனக்கு மரணம் உறுதி என்று அறிந்தாலும்,
அல்லாஹ்வைத் தவிர பிறருக்கு சிரவணக்கம் செய்யமாட்டார்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span>
<span style="font-family: TheneeUniTx;">கேள்வியில்
குறிப்பிட்டுள்ள, ''அல்லாஹ்
அனுமதித்திருந்தால் அதை இதையென்று
எதையும் செய்யலாமே?'' என்று கணவருக்கு
மனைவி சிரவணக்கம் செய்வதை அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் விரும்பியதைப்
போலவும், அதற்கு அல்லாஹ் அனுமதி
வழங்கவில்லை என்பது போலவும் தவறானக்
கருத்தை இங்கே சித்தரித்துக்
காட்டப்படுகிறது. தொடர்புடைய நபிவழிச் செய்தியை
முழுமையாக அறிந்து கொள்வோம்:</span></div>
<div style="text-align: left;">
<span style="color: teal; font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="color: teal; font-family: TheneeUniTx;">ஷாம் (சிரியா) நாட்டிலிருந்து முஆத் (ரலி)
அவர்கள் மதீனா வந்தபோது நபி (ஸல்)
அவர்களுக்கு சிரவணக்கம் செய்தார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள், ''முஆத் என்ன
இது?'' என்று (வியப்போடு) கேட்டார்கள்.
அதற்கு முஆத் (ரலி) அவர்கள், 'நான்
ஷாம் நாட்டுக்குச் சென்றிருந்தேன்.
அங்குள்ள (கிறிஸ்தவ) மக்கள் தங்களின்
பேராயர்களுக்கும் கத்தோலிக்கத்
தலைவர்களுக்கும் சிரவணக்கம் செய்வதைத்
தற்செயலாகக் கண்டேன். அப்போதே
மனதுக்குள் தங்களுக்கு இவ்வாறு செய்ய
வேண்டும் என விரும்பினேன்'' என்றார்கள்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><span style="color: teal;"><br /></span></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<span style="color: teal;">அதற்கு, ''இவ்வாறு
செய்யாதீர்கள். அல்லாஹ் அல்லாத
ஒருவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு
நான் கட்டளையிடுவதாக இருந்தால்,
கணவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு
மனைவிக்குக் கட்டளையிட்டிருப்பேன்.
முஹம்மதின் உயிர் யார் கையில் உள்ளதோ
அ(ந்த இறை)வன் மீதாணையாக! ஒரு பெண் தன்
கணவருக்குச் செய்ய வேண்டிய கடமையை
நிறைவேற்றாத வரை தன் இறைவனின் கடமையை
நிறைவேற்றியவளாகமாட்டாள். ஒட்டகத்தின்
சேணத்தில் அவள் அமர்ந்திருக்கும்போது
அவளை அவர் கேட்டாலும் அவள்
மறுக்கலாகாது'' என்று அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
</span>(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்
அபீ அவ்ஃப் (ரலி) நூல்கள்: இப்னுமாஜா,
அஹ்மத், சுருக்கமாக இதன் கருத்து
தீர்மிதீ 1079)</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">போராயர்களும்
- பாதிரிமார்களும், மடாதிபதிகளும்,
சங்கராச்சாரியர்களும், அரசியல்
தலைவர்களும், பெரியோர்களும் மக்கள்
தங்களுக்கு சிரவணக்கம் செய்ய
வேண்டுமென
விரும்புகின்றனர். மனிதன் மனிதனுக்குச் சிரவணக்கம் செய்வது
சுயமரியாதைக்கு இழுக்கு என்பதை
மக்களும் உணருவதில்லை. சிரவணக்கம்
செய்யப்படுபவர்களும் உணர்ந்து இவ்வாறு
செய்யாதீர்கள் எனப் போதிப்பதில்லை. </span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">ஆன்மீகம்,
அரசியல் என இரு துறைகளிலும் ஒப்பற்றத்
தலைவராக நபி (ஸல்) திகழ்ந்தார்கள்.
அன்றைய பிறமதங்களின்
மதகுருமார்களுக்கும், தலைவர்களுக்கும்
மக்கள் சிரவணக்கம் செலுத்தி வந்தனர்.
இவற்றைக் கண்ணுற்ற முஹம்மது (ஸல்)
அவர்களை அல்லாஹ்வின் தூதராக
ஏற்றுக்கொண்ட நபித்தோழர்கள், நாம்
சிரவணக்கம் செலுத்துவதற்கு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களை விடத் தகுதியானவர்
யாரிருக்க முடியும் என நபி (ஸல்)
அவர்களுக்குச் சிரவணக்கம் செய்யத்
தயாராக இருந்தனர். ''அவ்வாறு
செய்யாதீர்கள்'' என்று கூறி அல்லாஹ்வைத் தவிர,
எவருக்கும் சிரவணக்கம் செய்யலாகாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">''நாங்கள்
சிரவணக்கம் செய்திட தகுதியானவர்
நீங்கள்'' என நபித்தோழர்கள் வாதிடவும்
செய்தனர். இருந்தும் மனிதன்
மனிதனுக்குச் சிரவணக்கம் செய்யலாகாது
என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு! வரவேற்புக்காகவேயன்றி ஒருவருக்காக எழுந்து நிற்பதையும்
இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தமக்காக யாரும்
எழுந்து நிற்கவும் வேண்டாம் எனவும்
நபி (ஸல்) அவர்கள் கட்டளைப் பிறப்பித்தார்கள்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம்,
அடக்குமுறை இஸ்லாமில் மேலோங்கியுள்ளது என்கிற
குதர்க்க
குற்றச்சாட்டுக்கு மேற்கண்ட நபிவழிச்
செய்தியில் எவ்வித சான்றும் இல்லை
என்றிருந்தும் இஸ்லாமை
மாசுப்படுத்திட, கணவனுக்கு மனைவி
சிரவணக்கம் செய்யவேண்டும் என இஸ்லாம்
கூறுவதாக தவறாகப் புனைந்து
பிறமதத்தினர் இஸ்லாமை
விமர்சிக்கின்றனர். ''கணவனே கண்கண்ட
தெய்வம், கல்லானாலும் கணவன்,
புல்லானாலும் புருஷன் போன்ற பிறமதக்
கொள்கையைப் போன்று இஸ்லாமிலும்
உள்ளதுபோல் விமர்சிக்கின்றனர்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><span style="color: teal;"><br /></span></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<span style="color: teal;">''தாயின்
காலடியில் சொர்க்கமுள்ளது''</span> என்று நபி
(ஸல்) அவர்கள் கூறியதை தாயின்
காலடியில் சிரவணக்கம் செய்து தாயை
வணங்க வேண்டும் என்று புரிந்து
கொள்வதில்லை. தாய்க்குச் செய்யும்
பணிகளை முகம் சுழிக்காமல்
இன்முகத்துடன் செய்திட வேண்டும்.என்பதே
இதன் பொருளாகும்.</span></div>
<div style="text-align: left;">
<span style="color: teal; font-family: TheneeUniTx;"><br /></span>
<span style="color: teal; font-family: TheneeUniTx;">
''அல்லாஹ் அல்லாத
ஒருவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு
நான் கட்டளையிடுவதாக இருந்தால்,
கணவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு
மனைவிக்குக் கட்டளையிட்டிருப்பேன்.''
</span><span style="font-family: TheneeUniTx;">
என்பதில் அல்லாஹ்வையன்றி எவருக்கும்,
எதற்கும் சிரவணக்கம் செய்தல் கூடாது
என்பதுதான் வலியுறுத்தப்படுகின்றது.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><span style="color: teal;"><br /></span></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<span style="color: teal;">''உலகை
விடச் சிறந்தது நற்குணமுள்ள
மனைவியாவாள், தன் மனைவியிடம் அழகிய
முறையில் நடந்து கொள்பவரே உங்களில்
சிறந்தவராவார்''</span> என இஸ்லாமியப் பார்வையில்
நற்குணமுள்ள மனைவி அமைவதும்,
நற்குணமுள்ள கணவன் அமைவதும்
அருட்கொடையாகும். இவ்வாறு
தொலைநோக்குப் பார்வைகொண்ட
இஸ்லாமியத் திருமணம் பெண்மையின் மாண்பைப்
போற்றியும், ஆணின் சிறப்புதனை
வெளிப்படுத்தியும் உயர்த்திக்
காட்டுகின்றது.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">திருமணம்
ஆண் பெண்ணிடையே அன்பு,
நேசம், கருணையை நிலைத்தோங்கச்
செய்யவேண்டும். இல்லையேல் மணவாழ்வு
நெருக்கடியாகி மன உளைச்சல்
மேலோங்கிவிடும். மனித
வாழ்வில் திருமண உறவு முக்கியப்
பங்காற்றுவதால் கணவன் மனைவி
இருவருக்குமிடையே அமைதி, நேசம் வளர பல
போதனைகள் இறைமறை வசனங்களிலும்,
நபிமொழிகளிலும் அறவுரைகளாக நிறைந்து
காணப்படுகின்றன.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">அவற்றுள்
இல்லற வாழ்வில் இணைந்த தம்பதியர்
ஒருவருக்கொருவர் நன்றி மறத்தல்,
நிராகரித்தல் கூடாது என்பதை
வலியுறுத்தும் ஹதீஸைக் காண்போம்:</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><span style="color: teal;"><br /></span></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">
<span style="color: teal;">'எனக்கு
நரகம் காட்டப்பட்டது. அதில்
பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர்.
ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக
இருந்தனர்' என்று இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறியபோது, 'இறைவனையா அவர்கள்
நிராகரிக்கிறார்கள்?' எனக்
கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்)
அவர்கள், 'கணவனை நிராகரிக்கிறார்கள்.
(கணவர் செய்த) உதவிகளை
நிராகரிக்கிறார்கள். அவர்களில்
ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ
நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து,
பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை
உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து
ஒருபோதும் நான் ஒரு நன்மையையும்
கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்' என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.</span> (அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி 29,
முழு ஹதீஸையும் காண்க, புகாரி 1052
முஸ்லிம் 1659)</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">மேற்கண்ட
ஹதீஸில் கூறப்பட்டுள்ள விளக்கம்,
மணவாழ்வில் இணைந்து வருடங்களைக் கடந்த
ஒவ்வொரு கணவருக்கும் புரியும். கணவன்
காலமெல்லாம் நல்லவற்றை மனைவிக்குச்
செய்து வந்தாலும், மனைவிக்குப்
பிடிக்காத ஒரு செயலைக் கணவன் செய்து
விட்டால் ''உனக்கு வாழ்க்கைப்பட்டு
நான் என்ன சுகத்தைக் கண்டேன்?'' என்று
கூறி அற்ப விஷயத்துக்காக கணவனை மறுத்து,
கணவனுக்கு நன்றி மறக்கும் மனைவியைப்
பற்றி இங்கு கூறப்படுகின்றது.<br />
<br />
இவ்வகை மிகைப்படுத்திப் பேசும்
பெண்களின் போக்கைக் கண்டித்தும் ''அல்லாஹ்
அல்லாத ஒருவருக்குச் சிரவணக்கம்
செய்யுமாறு நான் கட்டளையிடுவதாக
இருந்தால், கணவருக்குச் சிரவணக்கம்
செய்யுமாறு மனைவிக்குக்
கட்டளையிட்டிருப்பேன்'' என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறியிருப்பது பொருத்தமாகவுள்ளது.
ஏனெனில், இறைவனுக்கு சிரவணக்கம்
செய்வதில் நன்றியினைத்
தெரிவிப்பதற்காகவும் சிரவணக்கம்
செய்வதுண்டு.<br />
<br />
மனைவிக்கு எவ்வளவு சிறந்த கணவனாக
இருந்தாலும் அவனுக்குக்
கட்டுப்படுதலும் கடப்பாடு கொள்தலும்
சிரவணக்கத்துக்கு நெருக்கமான
தாழ்மையுடன் இருக்கலாம்; ஆனாலும்
இறைவனுக்கு மட்டும் உரிய வணக்கமான
ஸஜ்தா எனும் சிரவணக்கத்தை ஒரு மனைவி,
தன் கணவனுக்குச் செய்ய அனுமதி இல்லை -
அவன் தன் மனைவியின் மதிப்பில் எத்துணை
உயர்ந்திருந்த போதிலும்.<br />
<br />
இதனை குதர்க்க நோக்கன்றி இயல்பறிவு
கொண்டு விளங்கினால் முரண்பாடு ஏற்படாது.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: TheneeUniTx;">(இறைவன்
மிக்க அறிந்தவன்)</span></div>
<span class="mu">
</span><br />
<span class="mu">
<span style="font-family: TheneeUniTx;">நன்றி:
<a href="http://satyamargam.com/islam/for-muslims/2214-wives-to-prostrate-husbands.html">
<span style="color: blue;">
http://satyamargam.com/islam/for-muslims/2214-wives-to-prostrate-husbands.html</span></a></span></span></div>
அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9457100.post-13810025167572476742011-12-23T05:47:00.000-08:002011-12-23T06:11:02.661-08:00கடன் பட்டிருப்பவர்கள் ஹஜ் செய்தல் கூடுமா?<div align="left"><strong><span style="color:#336666;">கடன் இருக்கும் நிலையில் கடனை அடைக்க எவ்வித ஏற்பாடும் செய்யாமல் ஒருவர் மரணித்தால், கடன் அடைக்கப்படும்வரை அவரது ஆன்மா அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்</span></strong> (திர்மிதீ); <strong><span style="color:#336666;">உயிர்த் தியாகிகளுக்குங்கூட கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்; ஆனால் கடன் மன்னிக்கப்படுவதில்லை</span></strong> (முஸ்லிம்) போன்ற அறிவிப்புகளின்படி, கடன் அடைக்கப்பட வேண்டும் என்பது சரியே! இது ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்வோருக்கு மட்டும் உள்ள நிபந்தனையல்ல. எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவான விதியாகும். <br /></div><br /><div align="left">கடன் உள்ளவருக்கு ஹஜ் கடமை இல்லை என்பதையும் தாண்டி, கடனே இல்லாவிட்டாலும், ஹஜ்ஜுக்குச் சென்று வரும் பொருளாதார வசதியில்லாதவருக்கும் ஹஜ் கடமை இல்லை. அதாவது, கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றவில்லை என்பதற்கான கேள்விக்கு பொருளாதார வசதியற்றவர் உள்ளாக மாட்டார். ஹஜ் செய்வதற்கான பொருளாதாரம் அவரிடம் இல்லை; எனவே ஹஜ் செய்யவில்லை என்றாகிவிடும்.<br /><br />ஒருவரின் ஹஜ் பயணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கடனும் உள்ளது. இப்போது உடனடியாகக் கடனை அடைத்து, ஹஜ் பயணத்தைத் தவிர்ப்பது சிறந்ததாகும். மரணம் எப்பவும் சம்பவிக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு கடன் அடைக்கப்பட வேண்டும்.<br /><br />ஆனால், கடன் உள்ளவர் இஸ்லாம் அனுமதித்துள்ள வேறு வழியில் மக்கா செல்வதற்கான வசதியைப் பெற்றிருந்தால் அவருக்குக் கடன் உள்ளது என்று வைத்துக்கொண்டாலும் அவர் இப்போது ஹஜ் செய்வது கூடுமா கூடாதா என்றால், கடன் உள்ளவர் ஹஜ் செய்யலாம் என்பதே இஸ்லாத்தின் நிலைபாடாக உள்ளது. கஅபா அமைந்திருக்கும் நாட்டில் இருந்தாலும், அங்குப் பணியாற்றும் நிறுவனத்தில் ஹஜ்ஜுக்கு விடுப்புக் கிடைத்தாலும், சென்றுவர பொருளாதாரம் இருந்தாலும் கடனாளி ஹஜ் செய்தல் கூடாது என்பதற்கான தெளிவானத் தடையேதும் குர்ஆன், சுன்னாவிலிருந்து நம்மால் அறிய முடியவில்லை!<br /><br />பயணத்தில் உண்பதும் உடுத்துவதும் ஹலாலாக இருக்கவேண்டும் என்று பொதுவாக இஸ்லாம் கூறுவதால், இதன் அடிப்படையில் ஹஜ் பயணத்திற்கான செலவுகள் ஹலாலாக இருக்கவேண்டும். கடன் வாங்குவது ஹராம் அல்ல! அதனால் கடன் உள்ளவர் மக்கா சென்றால் அவர் ஹஜ் செய்வதற்குக் கடன் இடையூறாக இருக்கும் என்பதற்குப் போதிய தெளிவுகள் இல்லை!<br /><br />ஹஜ்ஜுடைய காலத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து பேரூந்து வாகனம் மூலமாக ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் பயணிகளுடன் வரும் பேரூந்து வாகன ஓட்டிக்குக் கடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதை அவர் பொருட்படுத்த வேண்டியதில்லை. அவரும் குறிப்பிட்ட எல்லையை அடைந்ததும் ஹஜ் பயணிகளுடன் தாமும் இஹ்ராம் அணிந்து "லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்" என்று தல்பியா முழங்கியபடி வாகனத்தைச் செலுத்தி மக்காவிற்குள் நுழைந்து தங்க வேண்டிய இடங்களில் தங்கி, செய்ய வேண்டிய ஹஜ் கிரியைகளை நிறைவேற்றினால் இவர் உழைப்பிற்கான ஊதியத்துடன் ஹஜ்ஜை நிறைவேற்றுகிறார். 2:198வது வசனத்தின் கருத்துப்படி ஹஜ்ஜின்போது நேர்மையான முறையில் அல்லாஹ்வின் அருளைத் தேடுவதில் அல்லாஹ் தடைவிதிக்கவில்லை!<br /><br />அதுபோல், மற்ற நாடுகளிலிருந்து விமானம் மூலமாக வரும் ஹஜ் பயணிகளைக் கொண்டுவந்து ஜித்தாவில் சேர்க்கும் விமான ஓட்டி, அவரும் ஹஜ்ஜை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தேதியில் வந்து விமானம் புறப்படும் நாளில் வேலையை ஏற்றுக் கொள்கிறேன் என ஹஜ் கிரியைகளை நிறைவேற்றினால் அவருக்கு ஆகுமானதே!<br /><br />ஹஜ் கடமை என்பது கிரியைகளைக் கொண்டு நிறைவேற்றப்படுவதாகும். "பூமியில் பரந்து சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்" என்கிற (62:10) வசனத்தினடிப்டையில் வேலைக்கென சவூதிக்கு வந்தவர் ஹஜ்ஜின் நாட்களில் மக்கா சென்று குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட கிரியைகளை நிறைவேற்றினால் அவருடைய ஹஜ் கடமையும் நிறைவேறிவிடும்.<br /><br />கடன் உள்ள நிலையில் மரணித்தவருக்குக் கடன் மன்னிக்கப்படுவதில்லை. இது எல்லாருக்கும் உள்ள பொதுவானதாகும். ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றியவருக்கும் இது பொருந்தும்!<br /></div><br /><div align="left">கடனாளியாக இருந்து, அந்தக் கடனை அடைக்காமலும் வாய்ப்புக் கிடைத்தும் ஹஜ்ஜை நிறைவேற்றாமலும் மரணித்த ஒருவரையும் கடனிருந்தும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றிவிட்டு மரணித்த ஒருவரையும் ஒப்பு நோக்கினால் இந்த உண்மை புரியும்.<br /></div><br /><div align="center">oOo </div><br /><div align="left"><br />ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ் வாய்ப்பை வழங்கும்போது, ஆதாரமில்லாத பொருந்தாக் காரணங்களை நாமாகக் கற்பித்துக் கொள்ளாமல், மக்காவுக்குச் சென்று ஹஜ்ஜை நிறைவேறுவதற்கு முனைப்புக் கொள்ளவேண்டும். ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு ஆர்வமூட்டும் சான்றுகளைக் காண்போம்:<br /><br /><span style="color:#3366ff;"><strong>அருள்வளமிக்கதாகவும் அகிலத்தாருக்கு வழிகாட்டியாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பெற்ற முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதுதான். அது, பெரும் பேறு பெற்றதாகவும் உலகத்தாருக்கான நேர்வழி மையமாகவும் திகழ்கிறது.<br /><br />அதில் தெளிவான சான்றுகளும் மக்காமு இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் பாதுகாப்புப் பெற்றவர் ஆவார். மக்களில் அங்குச் சென்றுவரச் சக்தி பெற்றோர் அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவர் மறுதலித்தாலும் (அதனால் அல்லாஹ்வுக்கு இழப்பில்லை. ஏனெனில்) அல்லாஹ் அகிலத்தாரிடம் தேவையற்றவன் ஆவான்</strong></span> (அல்குர்ஆன் 3:96,97).<br /><br /><strong><span style="color:#336666;">"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"</span></strong> அறிவிப்பவர் இப்னு உமர்(ரலி) (நூல்கள்: புகாரி 8, முஸ்லிம் 20, திர்மிதீ, நஸயீ, அஹ்மத்)<br /><br /><span style="color:#336666;"><strong>அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே ஹஜ் செய்யுங்கள்" என்றார்கள். அப்போது ஒரு மனிதர், "ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்), அல்லாஹ்வின் தூதேர?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் "ஆம்' என்று சொல்லிவிட்டால் அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடைமயாகிவிடும். பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகிவிடும்" என்று கூறிவிட்டு, "நான் (எதுவும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு எதை விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்தெதல்லாம், அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் அதிகமாக(த் தேவையற்ற) கேள்விகள் கேட்டதாலும் அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும்தான். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டைளயிட்டால், அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(முற்றாக) விட்டுவிடுங்கள்!" என்றார்கள். </strong></span>அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி 7288, முஸ்லிம் 2599, நஸயீ).<br /><br />தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற கடமையான அமல்களை அறிவித்திடும் குர்ஆன் வசனங்களைப் போன்று, மேற்காணும் இறைவசனங்களும் நபிவழி அறிவிப்புகளும் ஹஜ் செய்வது முஸ்லிம்கள் மீது கடமையாகும் என வலியுறுத்துகின்றன.<br /><br />கடமையான மற்ற அமல்களை நாம் வாழுமிடங்களில் இருந்தே நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால், ஹஜ்ஜுக் கடமையை, மனிதர்களுக்கென முதல் முதலாக அமைக்கப்பட்ட இறை ஆலயம் என அல்லாஹ் அறிவித்திருக்கும் மக்காவில் அமையப்பெற்ற கஅபத்துல்லாஹ்வைச் சென்றடைந்து அதைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட சில இடங்களில் தங்கியிருந்து ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிட வேண்டும்.<br /><br /><span style="color:#3366ff;"><strong>ஹஜ்ஜைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள்</strong></span> (எனக் கூறினோம்) (அல்குர்ஆன் 22:27).<br /><br />இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் மூலமாகவே அல்லாஹ் ஹஜ்ஜின் அறிவிப்பை ஏற்பாடு செய்துள்ளான் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்குகிறோம். ஹஜ்ஜுக்கான அறிவிப்பைக் கேட்டு ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக அருகிலிருப்போர் நடந்தும், தூரத்திலிருப்போர் வாகனங்களில் பயணித்தும் கஅபத்துல்லாஹ்வை வந்தடைவார்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.<br /><br /><span style="color:#3366ff;"><strong>மக்களில் அங்குச் சென்றுவரச் சக்தி பெற்றோர் அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ஹஜ்ஜுச் செய்வது கடமையாகும்</strong></span> (அல்குர்ஆன் 3:97).<br /><br />ஒரு முஸ்லிம் இன்று உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர் மக்காவுக்குச் சென்று வர சக்தி பெற்றிருந்தால் அங்குச் சென்று ஹஜ் செய்வது அவருக்குக் கடமையாகும். இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள 'சக்தி' என்பது ஹஜ் கிரியைகளுக்காகத் தொலை தூரம் செல்வதால் சென்று திரும்பும் நாட்களுக்கான பொருளாதாரமும் உடல் ஆரோக்கியமும் முக்கியத் தேவைகளாகும்.<br /><br />அடுத்து, தொலை தூரம் சென்று வர வாகனம் அவசியம். 'சக்தி' என்பதில் வாகன அவசியமும் உள்ளடங்கும். ஆகவே, ஹஜ்ஜுக்குச் சென்று வர சக்தி பெற்றோர் என்பதில் பொருளாதாரம், உடல் ஆரோக்கியம், மற்றும் வாகன வசதியும் வேண்டும்.<br /><br /><span style="color:#336666;"><strong>அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அன்சாரிப் பெண்ணிடம், "நீ எங்களுடன் ஹஜ்ஜுச் செய்வதைத் தடுத்தது எது?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "எங்களிடம் நீர் இறைப்பதற்கான இரண்டு ஒட்டகங்கள் மட்டுமே உள்ளன. ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும் ஏறி ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டனர். மற்றோர் ஒட்டகத்தை எங்களுக்காக விட்டுச் சென்றனர். அதன் மூலம் நாங்கள் நீர் இறைத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.<br /><br />அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ரமளான் மாதம் வந்துவிட்டால் அப்போது நீ உம்ராச் செய்துகொள். ஏனெனில், ரமளானில் உம்ராச் செய்வது ஹஜ்ஜுக்கு நிகரான(பலனுடைய)தாகும்" என்று கூறினார்கள்.</strong></span> அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்கள்: புகாரி 1863, மேற்கண்ட அறிவிப்பு முஸ்லிம் 2408, 2409)<br /><br />இதன் அறிவிப்பாளர் அதாவு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்: "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள். ஆனால், அதை நான் மறந்துவிட்டேன்". (அப்பெண்ணின் பெயர் 'உம்மு ஸினான்' என்பதாகும்).<br /><br />ஹஜ்ஜுக்குச் சென்று வர வாகனத் தேவையுள்ளது. இது அந்தந்தக் காலத்திற்கேற்ப வாகனங்கள் மாறிக்கொள்ளும். சென்று வரும் சக்தியை முன்னேற்பாடு செய்துகொள்ள வேண்டும். என்றும் அல்லாஹ் கூறுகிறான்.<br /><br /><span style="color:#3366ff;"><strong>ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜைத் தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் உடலுறவு, கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் நன்மை மிக்கது, தக்வா(என்னும் இறையச்சமே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள்</strong></span> (அல்குர்ஆன் 2:197).<br /><br />ஹஜ்ஜுக்குத் தேவையான பொருள்களைச் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்பதில் உணவும், வாகன வசதியும் அடங்கிவிடும்.<br /><br /><span style="color:#336666;"><strong>யமன் வாசிகள் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருள்களைச் சேகரிக்காமல் ஹஜ்ஜுக்கு வருவார்கள். மேலும், 'நாங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்' என்றும் கூறுவார்கள். மக்கா வந்தடைந்தால் மக்களிடம் யாசகம் கேட்பார்கள். இது குறித்தே அல்லாஹ்,</strong></span> <span style="color:#3366ff;">"(ஹஜ்ஜுக்குத் தேவையான) <strong>பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது தக்வா</strong> (என்னும் இறையச்சமே) <strong>ஆகும்"</strong> </span><span style="color:#336666;"><strong>என்ற வசனத்தை இறக்கினான்.</strong></span> அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்: புகாரி 1523).<br /><br />2:197வது வசனம் அருளப்பட்ட பின்னணி, தொலைவிலிருந்து ஹஜ்ஜுக்குச் செல்வோர் தேவையான பொருட்களை சேகரித்துக் கொண்டு செல்லாமல் மக்கா சென்று தமது தேவையை யாசித்துப் பெற்றுள்ளனர். இவ்வாறு செய்யாமல் உங்களுக்கான பொருட்களை முன்னேற்பாடாக சேகரித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லப்படுகிறது. இதனால் யாசிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லலாமே தவிர, வயிற்றுப் பசிக்குக்கூட யாசிப்பது கூடவே கூடாது என்று தடைவிதிப்பதாக ஆகாது. <span style="color:#3366ff;"><strong>"குர்பானி இறைச்சியை ஏழைகளுக்கும், யாசிக்காதோருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்"</strong></span> என்று 22:28, 36 ஆகிய வசனங்கள் கூறுகின்றன!.<br /><br />சக்தி பெறுதலைத் தாமாக முயற்சி செய்து சக்தி பெறுதல் என்றும் எதிர்பாராமல் வேறு வகையில் மக்கா சென்று விடுவது என்றும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். நாம் கவனிக்கத் தக்கது அவை ஹலாலான வழியில் உள்ளதா என்பதை மட்டுமே.<br /></div><br /><div align="left">எனவே, ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு ஹலாலான வழியில் சக்தி வழங்கப்பட்டவர்கள், கடன் என்ற காரணத்துக்காக அதைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை.<br /><br />(இறைவன் மிக்க அறிந்தவன்). </div><br /><div align="left"></div><br /><div align="left">நன்றி: <a href="http://www.satyamargam.com/1849"><span style="color:#3366ff;">சத்திமார்க்கம்.காம்</span></a></div>அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9457100.post-51061579702132843282009-08-07T09:32:00.000-07:002009-08-07T10:03:18.535-07:00இஸ்லாம் போர்க்களத்தில் சிறுவர்களைக் கொல்லச் சொல்கின்றதா...?''போர்க்களத்தில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லாதீர்கள்'' என்ற நபிமொழிக்கு முரணாக ''போர்க்களத்தில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல நேர்ந்தால் அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களே'' என மற்றுமொரு நபிமொழி அறிவிக்கின்றது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்மறையான கருத்துடன் உள்ளதே என்று தோன்றினாலும், சரியாகப் புரியப்படாத சில விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். நபித்துவத்தைக் களங்கப்படுத்துவதற்கென்றே களமிறங்கியவர்கள் இவ்விரு வகை நபிமொழிகளையும் முன்னிருத்தி, இஸ்லாமை மாசுப்படுத்திட பொய்யானக் குற்றச்சாட்டைக் கூறி வருகின்றனர்.<br /><br /><strong>அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்கள் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.</strong> (நூல்கள்: புகாரி, 3014. முஸ்லிம், 3587)<br /><br />மற்றோர் நபிவழிச் செய்தி<br /><br /><strong>''பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை விதித்தார்கள்''</strong> (புகாரி, 3015. முஸ்லிம், 3588. திர்மிதீ, அபுதாவூத், அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன)<br /><br />போர்க் காலங்களில் எதிரிகளுடன் யுத்தம் தொடங்கிய நிலையில் போர்க்களத்தில் பெண்களையும், சிறுவர்களையும் தாக்கக்கூடாது. என முஸ்லிம் அணியினருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விதித்தப் போர் விதியாகும். போர்க்களத்தில் எதிரிகளின் பெண்களையும், சிறுவர்களையும் தாக்கிக் கொல்லக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கின்றார்கள்.<br /><br />முஸ்லிம் அணியின் சார்பாக பெண்கள் அறப் போரில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. முஸ்லிம் அணியில் நின்று யுத்தக்களமிறங்கி எதிரிகளுடன் சண்டையிடுவது பெண்களுக்குக் கடமையல்ல.<br /><br /><strong>"இறைத்தூதர் அவர்களே! இறைவழியில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்; எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(அவ்வாறு) இல்லை. எனினும் (பெண்களுக்குச்) சிறந்த ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்" என்றார்கள்.</strong> (நூல்: புகாரி 1520, 1861, 2875, 2876)<br /><br />பெண்கள் போர்க்களத்தில் ஆயதமேந்தி அறப்போர் செய்வது தடுக்கப்பட்டிருந்தாலும், எதிரிகளுடன் யுத்தம் நடத்தும் போர் வீரர்களாகிய தமது அணியினரின் தாகத்துக்குத் தண்ணீர் கொடுப்பது, காயமுற்றால் சிகிச்சையளித்து, காயமுற்றவர்களை அப்புறப்படுத்துவது போன்ற சேவைகளில் பெண்கள் பங்கெடுத்துக் கொள்வதை இஸ்லாம் தடுக்கவில்லை!<br /><br /><strong>அபூ பக்ர்(ரலி) அவர்களின் மகள் ஆயிஷா(ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு (காயமுற்றவர்களுக்குப் பணிவிடைகள் செய்து) இருப்பதை கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் துருத்திகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து அவர்களின் வாய்களில் மீண்டும் ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கால் கொலுசுகளை கண்டேன். அபூ தல்ஹா(ரலி) அவர்களின் சுரத்திலிருந்து இரண்டு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.</strong> (நபிமொழிச் சுருக்கம் புகாரி 3811, 4064)<br /><br /><strong>"(பெண்களாகிய) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (புனிதப் போரில்) இருந்தோம். (புனிதப் போரில்) காயமுற்றவர்களுக்கு நீர் புகட்டியும், மருந்திட்டும் வந்தோம். கொல்லப்பட்டவர்களையும், (காயமுற்றவர்களையும்) மதீனாவுக்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந்தோம்."</strong> (புகாரி, 2882, 5679)<br /><br /><strong>''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போருக்குப் புறப்பட்டுச் செல்லும்போது அவர்களுடன் (என் தாயார்) உம்மு ஸுலைம் (ரலி) அவர்களும் இன்னும் சில அன்சாரிப் பெண்மணிகளும் கலந்துகொள்வர். அப்பெண்கள் (அறப்போர் வீரர்களுக்கு) தண்ணீர் கொடுப்பார்கள். காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை அளிப்பார்கள்''</strong> (முஸ்லிம், 3698)<br /><br />ஆயுதம் தாங்கி நேரடியாக போர்க்களத்தில் எதிரிகளுடன் போரிடுவது பெண்களுக்கு கடமை இல்லை என்றாலும் தற்காப்புக்காக பிச்சுவாக் கத்தி போன்ற சிறு ஆயுதத்தை வைத்துக்கொள்வதை நபியவர்கள் தடுக்கவில்லை. (முஸ்லிம் 3697)<br /><br />முஸ்லிம் அணியின் சார்பாக போர் வீரர்களுக்கு உதவும் அடிப்படையில் போர்க்களத்தில் பெண்கள் கலந்துகொண்டு சேவை செய்யலாம். முஸ்லிம் அணியில் இருக்கும் பெண்கள் போராளிகளாக இல்லை என்பது போல் எதிரணியில் இருக்கும் பெண்களும் போராளிகளாக இல்லாமல் இருக்க வேண்டும். இரு அணிகளிலும் சேவைக்காகவே பெண்கள் உள்ளனர் போராளிகளாக இல்லை. என்று வைத்துக்கொண்டாலும் ஒவ்வொரு அணியினருக்கும் பிற அணியிலுள்ள பெண்கள் எதிரிகளைச் சார்ந்தவர்கள். பெண்கள் போராளிகளாக இல்லை எனினும் போரில் வெற்றிப்பெற்ற அணியினர் தோல்வியுற்ற எதிரணியினரின் பெண்களையும் போர்க் கைதிகளாக சிறைப்பிடிப்பர்.<br /><br />போரில் பெண்களைக் கொல்லக்கூடாது என்பது போர்க்களத்தில் போராளிகளாக இல்லாத பெண்களையேச் சுட்டுகின்றது. யுத்தத்தில் நேருக்கு நேர் எதிரணியைச் சந்திக்கும்போது பெண் போராளித் தாக்க வந்தால் அவரை எதிர்த்துத் தாக்கவேண்டும் என்பதே போர் விதி! பெண்களைத் தாக்கக்கூடாது என்ற சட்டத்தை இங்கு கடைபிடித்தால் எதிரியான பெண் போராளியால் ஆண் போராளிக் கொல்லப்படுவார். போரில் பெண்களைக் கொல்லக்கூடாது என்கிற விதி தாக்கவரும் பெண் போராளிகளுக்குப் பொருந்தாது!<br /><br />உஹதுப் போரில் வீரமரணமடைந்த ஹம்ஸா (ரலி) அவர்களின் உடலைக் கிழித்து ஈரக்குலையைக் கடித்துத் துப்பிய பெண்மணியாகிய ஹிந்த் (ரலி) அவர்கள் அப்போது முஸ்லிம்களுக்கு எதிரணியில் இருந்தார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. நேருக்கு நேர் எதிரிகளைச் சந்திக்கும் போரில் மூர்க்கத்தனமாக தாக்கவரும் எதிரி ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எதிர்த்துத் தாக்க வேண்டும்.<br /><br />போர்களத்தில் பெண்கள் சிறுவர்கள் கொல்லப்பட்டால்<br /><br /><strong>''இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் சிறுவர்களும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ''அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சார்ந்தவர்களே'' என்று பதிலளித்தார்கள்.</strong> (நூல்கள் - புகாரி, 3012. முஸ்லிம், 3589, 3590)<br /><br />முஸ்லிம் நூலில் இடம்பெற்றுள்ள மற்றோர் நபிவழிச் செய்தியில்,<br /><br /><strong>''குதிரைப் படையினர் இரவு நேரத்தில் திடீர் தாக்குதல் நடத்தும்போது (எதிரிகளான) இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுவிடுவார்களே?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ''அக்குழந்தைகளும் அவர்களின் தந்தையரைச் சார்ந்தவர்களே'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.</strong> (முஸ்லிம், 3591)<br /><br />போரில் பெண்களையும் சிறுவர்களையும் கொல்லக்கூடாது என்ற (நூல்கள்: புகாரி, 3014. முஸ்லிம், 3587) நபிமொழிக்கு முரணாக, போரில் பெண்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டால் அவர்களும் எதிரிகளைச் சார்ந்தவர்களே என்று (நூல்கள்: புகாரி, 3012. முஸ்லிம், 3589, 3590) மேற்கண்ட நபிமொழிகள் உரைக்கின்றது. இது எதிர்மறை முரணாகத் தோன்றினாலும், <strong>போர்க்களத்தில் பெண்களையும் சிறுவர்களையும் கொல்லக்கடாது என்பது விதி! போர்க்களத்தில் பெண்களையும் சிறுவர்களையும் கொல்ல நேர்ந்தால்... என்பது விதிவிலக்கு!</strong><br /><br />இருஅணியினர் யுத்தம் செய்யும்போது முஸ்லிம் அணியினருக்கு இணைவைப்பாளரின் அணியினர் எதிரிகள். இணைவைப்பாளரின் அணியினருக்கு முஸ்லிம் அணியினர் எதிரிகள். இரு அணியினரின் குடும்பத்தினரும் பிற அணியினருக்கு எதிரிகளைச் சார்ந்தவர்கள் என்பதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை! முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் யுத்தம் செய்யாத வரை இவர்கள் நேரடி எதிரிகள் அல்ல. அதே நேரத்தில் எதிரிகளின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இது இருஅணியினருக்கும் பொருந்தும்.<br /><br />போர்க்களத்தில் பெண்களையும் சிறுவர்களையும் தாக்கக்கூடாது எனத் தடை உள்ளதால் திடீர் தாக்குதல் நடத்தும்போது போரில் நேரடியாக ஈடுபடாத பெண்களையும் சிறுவர்களையும் திட்டுமிட்டுத் தாக்கும் எண்ணமில்லை என்றாலும் தெரியாமல் அவர்கள் தாக்கப்பட்டால் என்ன செய்வது? என்பதே இரண்டாவது வகையான ஹதீஸ்கள் விளக்குகின்றன. இதை இன்னும் சற்றுத் தெளிவாக இடம்பெறும் செய்தியில் விளக்கம் கிடைக்கின்றன.<br /><br /><strong>''எங்களின் குதிரைகள் இணைவைப்பாளர்களின் பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் மிதித்து விட்டன'' என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். ''அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சார்ந்தவர்களே'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</strong> (நூல்: திர்மிதீ, 1495. அஹ்மத், இப்னுமாஜா)<br /><br />போர்க்களத்தில் எவ்வித திட்டமுமின்றி எதிர்பாரா விதமாக பெண்களும் சிறுவர்களும் தாக்கப்பட்டால் அது குற்றமாகாது என்பதை எடுத்துரைப்பதே நோக்கமாகும். போர்க்களத்தில் இவைத் தவிர்க்க இயலாது. எடுத்துக் காட்டாக:<br /><br />எதிரிகளின் இராணுவ முகாமைத் தாக்கும்போது அவர்களின் குடும்பத்தினரும் அங்கு இருந்து திடீர் தாக்குதலில் பெண்களும், சிறுவர்களும் சிக்கிப் பாதிக்கப்படுவார்கள். இது தாக்கியவர்களின் குற்றமல்ல! தாக்கப்பட்ட எதிரிகள் இராணுவ முகாமில் குடும்பத்தினரை வைத்திருந்தது குற்றமாகும். போர் சூழலில் குடும்பத்தினர் இராவணுத்துடன் சேர்ந்திருக்காமல் அவர்களை பாதுகாப்பான தனி இடத்தில் வைக்க வேண்டும். இராணுவத்துடன் சேராமல் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்ட எதிரிகளின் முதியவர்கள், பெண்கள், சிறுவர்களைத் தேடிச் சென்று அவர்களைத் தாக்கக்கூடாது. <strong>இது போர் என்ற பெயரில் செய்யும் வன்முறையாகும்.</strong> இதை முதல் வகையான ஹதீஸ்கள் தடைவிதிக்கின்றன.<br /><br />இராணுவத்தினருடன் சேர்ந்து - கலந்து முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் இருந்து எதிர்பாராமல் இராணுவ வீரர்களுடன் இக்குடும்பத்தினரும் தக்குதலுக்குள்ளாக நேரிட்டால் அது குற்றமில்லை என இரண்டாவது வகையான ஹதீஸ்கள் கூறுகின்றன.<br /><br />இன்று நவீனகாலப் போர் முறைகளின் தாக்தலுக்கு பெரும்பான்மை அல்லது சிறிய அளவில் பொதுமக்களும் பலியாகின்றனர். இதற்கான காரணி: ''எங்கள் உளவுத்துறை மிகச் சரியான தகவல்கள் தந்து, நாங்கள் இராணு முகாமைத் தாக்கினோம். அங்கு இராணுவத்திருடன் பொதுமக்கள் இருந்தால் அல்லது பொதுமக்களுடன் இராணுவத்தினர் இருந்தால் எங்கள் குற்றமில்லை'' என்று தாக்கியவர்கள் எளிதாக சமாதானம் சொல்லி - எதிரிகளுடன் இருப்பவர் எதிரிகளைச் சார்ந்தவர்கள் என - மிகச் சுலபமாக பொருத்திவிடுகின்றனர்.<br /><br />போர் சூழலில் முதியவர்கள், பெண்கள், சிறுவர்களும் அறியாமல் தாக்கப்பட்டால் போரில் இவைத் தவிர்க்க இயலாது. என்பதையே இரண்டாவது வகையான ஹதீஸ்களின் கருத்தாகும். இஸ்லாமை விமர்சிப்பவர்கள் முதல் வகையான ஹதீஸ்களை இருட்டடிப்புச் செய்து, இரண்டாவது வகையான ஹதீஸ்களை முன்னிலைப்படுத்தி உண்மைக்கெதிராக, பொய்யான பிரச்சாரம் செய்கின்றனர்.<br /><br />அன்புடன்,<br />அபூ முஹைஅபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-9457100.post-67397893308300712132008-10-10T02:00:00.000-07:002008-10-10T22:14:03.720-07:00எழுத்துப்பிழையும், கருத்துப்பிழையும்இஸ்லாம் பெயரால் இஸ்லாத்தின் மீது பொய்யையும் புனை சுருட்டையும் அரங்கேற்றும் தளங்களில், ''ஆன்சரிங்க் இஸ்லாம்'' என்ற இணையதளமும் ஒன்றாகும். இத்தளத்திற்கு சில நாடுகளில் தடை விதித்துள்ளனர். - (''ஆன்சரிங்க் இஸ்லாம்'' தளத்தைக் கண்டு இஸ்லாமிய உலகமே பயந்து ஓடுகிறது என்று அடுத்த பதிவில் பிறமத நண்பர்கள் சேர்த்துக்கொள்ளட்டும்) - திருக்குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளது, முரண்பாடுகள் உள்ளது என்று விமர்சிக்கும் பிறமத நண்பர்கள், தங்கள் விவாதத்திற்கான சான்றுகளை ''ஆன்சரிங்க் இஸ்லாம் என்ற தளத்திலிருந்து எடுத்துக் காட்டுகின்றனர். குறிப்பாக மர்யம் என்ற 019வது அத்தியாயத்திலிருந்து ஓரிரு வசனங்களை எடுத்து வைத்திருந்தனர். (பார்க்க: <a href="http://abumuhai.blogspot.com/2008/09/blog-post_25.html">வர்ஷ், ஹஃப்ஸ் காரீகளின் ஓதல்</a> )<br /><br />திருக்குர்ஆனில் முரண்பாட்டை நிறுவ முயலும் பிறமத நண்பர்கள் சுட்டிய 019:019வது வசனத்தை இங்கு பரிசீலிப்போம். 019:019வது வசனத்தின் அரபி மூலம், தமிழ் உச்சரிப்பில்,<br /><br /><span style="color:#3366ff;">''கால இன்னமா அன ரஸுலு ரப்பிகி <span style="color:#ff0000;"><strong>லிஅஹப</strong></span> லகி குலாமன் ஸகிய்யா''</span><br /><br />அரபியில் படிக்கும் (audio video) ஒலி மற்றும் எழுத்து,<br /><br /><object height="344" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/faUNdDYRnFc&hl=en&rel=0"><param name="allowFullScreen" value="true"><embed src="http://www.youtube.com/v/faUNdDYRnFc&hl=en&rel=0" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br />இன்னும், முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள் அன்றாடம் அணுகும் சில திருக்குர்ஆன் (தமிழ், ஆங்கிலம் உருது மொழி பெயர்ப்புப்) பிரதிகளிலிருந்து படமாக, (படங்களின் மீது சொடுக்கினால் தெளிவாகப் படிக்கலாம்)<br /><br /><a href="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8cvzXovoI/AAAAAAAAAH4/1265vmqXJxI/s1600-h/tamil-saudia.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5255450897733435010" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8cvzXovoI/AAAAAAAAAH4/1265vmqXJxI/s320/tamil-saudia.jpg" border="0" /></a><br /><br />----------------<br /><a href="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8cSHUbwbI/AAAAAAAAAHw/sVKHF5A8FUY/s1600-h/3-mmm.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5255450387692634546" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8cSHUbwbI/AAAAAAAAAHw/sVKHF5A8FUY/s320/3-mmm.jpg" border="0" /></a><br /><br />------------------<br /><a href="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8cGDm_AKI/AAAAAAAAAHo/JdcrdlHmmPs/s1600-h/bagavi.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5255450180538269858" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8cGDm_AKI/AAAAAAAAAHo/JdcrdlHmmPs/s320/bagavi.jpg" border="0" /></a><br /><br />---------------<br /><a href="http://2.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8b8GnsfOI/AAAAAAAAAHg/J0Ks4HS55RI/s1600-h/daru-salam.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5255450009547865314" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8b8GnsfOI/AAAAAAAAAHg/J0Ks4HS55RI/s320/daru-salam.jpg" border="0" /></a><br /><br />----------------<br /><a href="http://3.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8bv5gKZrI/AAAAAAAAAHY/JuCTrVC4F28/s1600-h/ift.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5255449799868180146" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8bv5gKZrI/AAAAAAAAAHY/JuCTrVC4F28/s320/ift.jpg" border="0" /></a><br /><br />----------------<br /><a href="http://2.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8bmloK59I/AAAAAAAAAHQ/x7RtmfFGYIQ/s1600-h/irc.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5255449639914235858" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8bmloK59I/AAAAAAAAAHQ/x7RtmfFGYIQ/s320/irc.jpg" border="0" /></a><br /><br />--------------<br /><a href="http://3.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8bZtSLpaI/AAAAAAAAAHI/vDwRQcZyR0I/s1600-h/J-t.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5255449418631194018" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8bZtSLpaI/AAAAAAAAAHI/vDwRQcZyR0I/s320/J-t.jpg" border="0" /></a><br /><br />--------------<br /><a href="http://4.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8bMevtTdI/AAAAAAAAAHA/yhe8TmsXlXE/s1600-h/saudia.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5255449191390203346" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8bMevtTdI/AAAAAAAAAHA/yhe8TmsXlXE/s320/saudia.jpg" border="0" /></a><br /><br />--------------<br /><a href="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8a8viZifI/AAAAAAAAAG4/nnuYjI8S7Os/s1600-h/le+ahaba.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5255448921019877874" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8a8viZifI/AAAAAAAAAG4/nnuYjI8S7Os/s320/le+ahaba.jpg" border="0" /></a><br /><br />திருக்குர்ஆன் மர்யம் அத்தியாயம் 019வது வசனத்தில் இடம்பெறும் ''லிஅஹப'' வார்த்தையை (மட்டும்) சிகப்பு வண்ணத்தில் கோடிட்டுக் காட்டியுள்ள இந்த ஆவணங்களை பிறமத நண்பர்கள் தவறாக விளங்கி விமர்சித்திருக்கின்றனர் என்று அவர்களின் விவாதத்திலிருந்து விளங்க முடிகிறது. விமர்சனத்தைப் பார்ப்போம்,<br /><br /><blockquote>* ஹஃப்ச் இவ்விதமாக படிக்கிறார்:<br /><br />He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: the angel) you a pure son."<br /><br />இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li'ahiba<br /><br />* நஃபா, அபோம்ரோ, கலன், வர்ஷ்... படிக்கிறார்கள்:<br /><br />He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: Lord) you a pure son."<br /><br />இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihiba<br /><br />* அல்பஹர் அல்மொஹித், "Alkishaf" a book for Alzimikhshiry:<br /><br />He said, "I am the messenger of your Lord, HE ORDERED ME TO GRANT YOU a pure son."<br /><br />இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani 'n 'hiba</blockquote><br /><br /><br />திருக்குர்ஆன் 019:019வது வசனத்தில் இடம்பெறும் ஒரு வார்த்தையில் - li'ahiba, liyihiba, amarani 'n 'hiba என - மூன்று விதமான உச்சரிப்புகள் உள்ளதாக பிறமத நண்பர்கள் இங்கு சுட்டுகின்றனர். இவர்கள் சுட்டியுள்ளது போல் ''hiba'' என்று மூலத்தில் இடம்பெறவில்லை. அவ்வாறு இடம் பெறவும்கூடாது. எனவே லிஅஹிப, லியிஹிப, அமரனி N ஹிப என்று பிறமத நண்பர்கள் எழுதியிருப்பது கவனக்குறைவான எழுத்துப்பிழையாக இருக்க வேண்டும். எழுத்துப் பிழை என்பதை ஒப்புக்கொண்டால் அதைத் திருத்திக்கொள்ளவும். அல்லது ''ஹிப'' என்று எழுதியது சரிதான் என்றால் பிறமத நண்பர்கள் அதற்கான மூல ஆதாரத்தை வைக்க வேண்டும்.<br /><br />வழங்குவாயாக, தருவாயாக, அளிப்பாயாக போன்ற அர்த்தமுள்ள வார்த்தைதான் ''ஹப்'' என்ற அரபுச் சொல்லாகும் எடுத்துக்காட்டாக:<br /><br /><a href="http://2.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8ekAJkKeI/AAAAAAAAAIA/qCw0pmvDrRQ/s1600-h/hab0.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5255452894028900834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8ekAJkKeI/AAAAAAAAAIA/qCw0pmvDrRQ/s320/hab0.bmp" border="0" /></a><br /><br />மேற்கண்ட படத்தில், திருக்குர்ஆன் - 003:036, 025:074, 026:083, 037:100 - வசனங்களில் சிகப்பு வண்ணத்தில் உள்ள எழுத்துக்கள். வசனங்கள் தமிழில்,<br /><br /><span style="color:#3366ff;">அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் 'இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் <strong><span style="color:#ff0000;">கொடுத்தருள்வாயாக!</span></strong> நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.</span> (003:038)<br /><br /><span style="color:#3366ff;">மேலும் அவர்கள்: 'எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை</span> <strong><span style="color:#ff0000;">அளிப்பாயாக!</span></strong> <span style="color:#3366ff;">இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.</span> (025:074)<br /><br /><span style="color:#3366ff;">'இறைவனே! நீ எனக்கு ஞானத்தை</span> <strong><span style="color:#ff0000;">அளிப்பாயாக.</span></strong> <span style="color:#3366ff;">மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!</span> (026:083)<br /><br /><span style="color:#3366ff;">'என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத்</span> <strong><span style="color:#ff0000;">தந்தருள்வாயாக' </span></strong>(என்று பிரார்த்தித்தார்) (037:100)<br /><br />இந்த நான்கு வசனங்களிலும் இடம் பெற்றுள்ள ''ஹப்'' என்ற சொல்லில் இருந்து பிறந்தது தான் ''ஹப, அஹப, லிஅஹப'' ''லியஹப'' என்ற வார்த்தைகளாகும். ''லிஅஹப'' என்றால் வழங்குவதற்கு, அளிப்பதற்கு, கொடுப்பதற்கு என்று பொருளாகும்.<br /><br /><span style="color:#3366ff;">'நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன். பரிசுத்தமான புதல்வரை உமக்கு <strong><span style="color:#ff0000;">அளிக்க</span></strong> (வந்துள்ளேன்') என்று கூறினார்.</span> (019:019)<br /><br />லிஅஹப என்ற அரபிச்சொல்: அன்பளிக்க, வழங்க, அளிக்க, கொடுக்க என்று பல தமிழ் விளக்கங்களில் மொழி பெயர்த்தாலும் பொருள் ஒன்றுதான். ஆனால், பிறமத நண்பர்கள் விமர்சித்திருப்பதுபோல் ''ஹிப'' என்று எந்தக் குர்ஆனிலும் இடம் பெறவில்லை! மாறாக, ''லி அஹப'' என்பதை ''லி யஹப'' என்று ஓதியிருக்கிறார்கள்.<br /><br />வர்ஷின் ஓதும் முறை ''லி அஹப''<br /><br />ஹஃப்ஸின் ஓதும் முறை ''லி யஹப''<br /><br />இந்த வித்தியாசமான உச்சரிப்பில் ஓதும் நடைமுறையை முஸ்லிம்கள் - மறுக்கவில்லை - ஒப்புக்கொண்டு, இணையதளங்களிலும் வெளியிட்டுள்ள விஷயமாகும்.<br /><br /><a href="http://quran.al-islam.com/Tafseer/DispTafsser.asp?nType=1&bm=&nSeg=0&l=arb&nSora=19&nAya=19&taf=KATHEER&tashkeel=0">தஃப்ஸீர் இப்னு கதீர்,</a><br /><br /><a href="http://4.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8fKNqWPqI/AAAAAAAAAII/eAGIfk-Dw18/s1600-h/ibn+kathir.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5255453550491090594" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8fKNqWPqI/AAAAAAAAAII/eAGIfk-Dw18/s320/ibn+kathir.JPG" border="0" /></a><br /><br /><a href="http://quran.al-islam.com/Tafseer/DispTafsser.asp?l=arb&taf=TABARY&nType=1&nSora=19&nAya=19">தஃப்ஸீர் தபரி,</a><br /><br /><a href="http://2.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8fduSmgEI/AAAAAAAAAIQ/TlH492mrhfM/s1600-h/tabary.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5255453885667377218" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8fduSmgEI/AAAAAAAAAIQ/TlH492mrhfM/s320/tabary.JPG" border="0" /></a><br /><br /><a href="http://quran.al-islam.com/Tafseer/DispTafsser.asp?l=arb&taf=KORTOBY&nType=1&nSora=19&nAya=19">தஃப்ஸீர் குர்துபி,</a><br /><br /><a href="http://3.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8fvYuI91I/AAAAAAAAAIY/hIWwvXChYmw/s1600-h/kurtubi.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5255454189114947410" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SO8fvYuI91I/AAAAAAAAAIY/hIWwvXChYmw/s320/kurtubi.JPG" border="0" /></a><br /><br />திருக்குர்ஆன் விளக்கவுரைகளில், இங்கு விவாதித்துக்கொண்டிருக்கும் மர்யம் அத்தியாயம் 019வது வசனத்தின் ''லிஅஹப'' என்ற வாசகத்தின் விளக்கவுரையும் மேற்கண்ட படங்களில் இடம்பெற்றுள்ளன. (சிகப்பு வண்ணத்திர் கட்டம் வரைந்ததில்) அபூ அம்ரு பின் அஃலா என்பவர் ''லிஅஹப'' என்பதை ''லியஹப'' என்று ஓதியிருக்கிறார் என்ற தகவலைத் தவறாமல் குறிப்பிட்டு, அப்படி ஓதியதால் திருக்குர்ஆன் வசனத்தின் கருத்து சிதைந்து விடுவதில்லை, மாறிவிடுவதில்லை. இரண்டும் ஒரு பொருளையே பறைசாற்றுகிறது என்றும் விளக்கவுரையில் கூறுகிறார்கள்.<br /><br />''பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க - அன்பளிக்க வந்துள்ளேன்'' என்று வானவர் ஜிப்ரீல் கூறுகிறார்.<br /><br /><strong>லி அஹப </strong>= நான் (ஜிப்ரீல்) அன்பளிக்க<br /><br /><strong>லி யஹப </strong>= அவன் (அல்லாஹ்) அன்பளிக்க<br /><br />இரண்டு வாசகமும் ஒன்றோடொன்று முரண்படாமல் மிகச் சரியான பொருளைப் பேசுகின்றன. இவ்விடத்தில் பிறமத நண்பர்கள் எதிர்பார்ப்பது போல் திருக்குர்ஆனில் முரண்பாட்டை இது ஏற்படுத்திவிடவில்லை என்பது தெளிவு. இங்கு பிறமத நண்பர்களின் எதிர்பார்ப்பு என்னவென்பதை நாம் தெரிந்துகொள்வது அவசியம்,<br /><br /><blockquote></blockquote><blockquote>தாய் குர்ஆன் ஒன்று உண்டு" என்று சொன்னால், ஏன் இப்படி பல வித்தியாசங்கள் அவைகளில் உள்ளன? அதிகாரபூர்வமான இயேசுவின் நற்செய்தி நூல்கள் நான்கு இருப்பதினால், முஸ்லீம்கள் அவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு நற்செய்தி நூல் வேண்டும் என்றுச் சொல்கிறார்கள்.<br /><br />முஸ்லீம்கள் "மத்தேயு/மாற்கு/லூக்கா என்பவரின் படி..." என்று எழுதப்பட்டுள்ளதை அங்கீகரிக்கமாட்டார்கள், ஆனால், தங்களிடம் அப்படி உள்ளதை அங்கீகரிக்கிறார்கள். இன்று நம்மிடம் உள்ள குர்ஆன் அனைத்தும் ஒபி இபின் கனப் என்பவரின் படி உள்ள குர்ஆன் தான் (They not accept the word "according to ..." but they have it. Today's Quran which all we use is according to Obi IBM Kanab.)</blockquote><br /><br />பைபிளை எழுதிய நால்வரும் ஒவ்வொரு விதமாக முரண்பட்டு எழுதியுள்ளனர் என்ற விமர்சனத்துக்கு சரியான விளக்கம் கொடுக்க இயலாமல் - பைபிளில் முரண்பாடுகள் இல்லை என்று நிறுவவும் முடியாமல், பதிலுக்குப் பதில் என்ற தோரணையில் குர்ஆனில் எழுத்துப்பிழை உள்ளது, முரண்பாடு உள்ளது என்று பிறமத நண்பர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர்.<br /><br />இங்கு நாம் கூறிக்கொள்வது, எழுத்துப் பிழையும் கருத்துப் பிழையும் ஒன்றாகுமா? என்றால் ஒருபோதும் சமமாகாது. எழுத்துப்பிழைகளைத் திருத்திக்கொள்ள முடியும். ஆனால் கருத்துப் பிழையை எக்காலத்திலும் திருத்திட முடியாது. கருத்துப்பிழை கொண்ட பைபிள் வசனங்களை நீக்குவதைத்தவிர வேறு வழியில்லை. பைபிளில் கருத்து முரண்பட்ட வசனங்கள் உள்ளது போல் திருக்குர்ஆனிலும் கருத்து முரண்பட்ட வசனங்கள் உள்ளன என்பதை நிரூபிக்க அவர்கள் வைத்துள்ளவை இதுதான், li'ahiba, liyihiba, amarani 'n 'hiba. இதைத் தமிழில் எழுதியிருந்தால் சாயம் வெளுத்துவிடும் என்பதினால் ஆங்கிலத்தில் எழுதி என்னவோ உலக மகா வித்தியாசத்தைக் கண்டுபிடித்து விட்டது போல் குறிப்பிட்டுள்ளனர். அதுவும் திருக்குர்ஆனில் இல்லாத ''ஹிப'' என்ற வார்த்தையைச் சேர்த்துத் திருக்குர்ஆன் வசனத்தைத் திரித்துள்ளனர்.<br /><br />நன்றி!<br /><br />அன்புடன்,<br />அபூ முஹைஅபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-9457100.post-9733506801153837842008-09-25T01:48:00.000-07:002008-09-25T02:50:29.003-07:00வர்ஷ், ஹஃப்ஸ் காரீகளின் ஓதல்.குர்ஆனை மனனம் செய்து அழுத்தமான உச்சரிப்புடன் நீட்டி, நிறுத்தி ஓதுபவரை ''காரீ'' என்று சொல்வார்கள். இன்றைய காரீகளுக்கு முன்னோடியாக இருப்பவர்கள் 'வர்ஷ். ஹஃப்ஸ்' என்ற இரு பிரபல்யமான காரீகளாவர். இன்று உலகிலுள்ள அனைத்துக் காரீகளும் இவ்விருவரின் மாணவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்று ஓதப்படும் கிராஅத்துகளில் சுமார் 30 சதவிகிதம் காரீகள் ''வர்ஷ்'' என்பவரின் கிராஅத் ஸ்டைலை பின்பற்றுகின்றனர். 70 சதவிகிதத்தினர் ''ஹஃப்ஷ்'' என்பரிவரின் கிராஅத் ஸ்டைலைப் பின்பற்றுகின்றனர்.<br /><br />குர்ஆனைத் திறந்து வைத்துக் கொண்டு, அன்றிலிருந்து இன்றுவரை மாற்றப் படாத ஒரே வசனத்தை பொருள் மாறாமல் பலவாறு (7வகை என்பது குறைவு) ஓதுவதை ஹஃப்லா என்பர். <br /><br />பிரபல காரீகள் முஹம்மது ஸித்தீக் அல்மின்ஷாவீ, அப்துல் பாஸித் முஹம்மது அப்துஸ் ஸமத், மஹ்மூதுத் தப்லாவீ ஆகியோரின் ஹஃப்லாக்கள் கேட்டுப் பார்த்தால் ஒரே வசனத்தைத் திரும்பத் திரும்பப் பலமுறை பலவாறு ஓதிக் கொண்டிருப்பார்கள். இதற்கு அர்த்தமே அசல் ஒன்று; ஸ்டைல்கள் பல என்பதுதான்.<br /><br />காரீகள் வசனங்களின் பின்னணிக்கேற்றவாறு குரலில் உணர்ச்சியைக் கொண்டு வந்துவிடுவார்கள். முக்கியமாக வரலாற்று வசனங்களை ஓதினால் சம்பவங்களை காட்சியாக குரலில் பிரதிபலித்துவிடுவார்கள். நாம் இங்கு விவாதிக்கவிருக்கும் மர்யம் - 019வது அத்தியாயம் முழுக்க உயர் கவி நடையில் அமைந்த அத்தியாயமாகும். ஓர் அற்புதத்தை நிறைவேற்ற மர்யம் என்றப் பெண்ணை இறைவன் தேர்ந்தெடுக்கிறான். இதனால் மர்யம் படும் துன்பம், ஊரிலுள்ளவர்களின் சந்தேகப்பார்வை, இடித்துரைப்பு, அவதூறு போன்ற இன்னல்களுக்கு அப்பெண் ஆளாகிறார். இந்தச் சுழ்நிலையை உணர்ச்சிப்பூர்வமாக காரீகள் ஓதுவார்கள்.<br /><br />மர்யம் கையில் குழந்தையுடன் ஊருக்குள் நுழைகின்றார் அப்போது: ''யா உக்த ஹாரூன...'' ஹாரூனின் சகோதரியே! உன் தந்தை கெட்டவரில்லை. உன் தாயும் நடத்தை கெட்டவர் இல்லை. (நீ ஏன் இப்படியாகிவிட்டாய்) என்பது போல் சந்தேகக் கணைகளைத் தொடுக்கின்றனர் ஊர்மக்கள். இந்த வசனத்தை காரீகள் ஓதக்கேட்டால் சூழ்நிலை மிளிரும். இவ்வசனத்திலும் ''வர்ஷ், ஹஃப்ஸ்'' இரு காரீகளின் உச்சரிப்பு உள்ளதால் இது போன்ற வித்தியாசமான உச்சரிப்புகள் கொண்ட வசனங்களை மட்டும் ஒலியாக - ஆடியோவாக பதியும் முயற்ச்சி முடிந்தபின் ஒலியைக் கேட்கலாம். அதற்கு முன்,<br /><br />''வர்ஷ், ஹஃப்ஸ்'' காரீகளின் வித்தியாசமான உச்சரிப்புகளை எழுத்தில் பார்க்கலாம். <br /><br />இங்கு படமாக இணைத்துள்ள பிடிஎஃப் ஃபைலின் <a href="http://live.islamweb.net/quran_list/warsh/s19.pdf">சுட்டி</a><br /><br />(படங்களின் மீது சொடுக்கினால் தெளிவாக வாசிக்கலாம்) <br /><br /><strong>படம் 1 வர்ஷ் & ஹஃப்ஸ் இரு கிராஅத்தும் சேர்ந்தது. </strong><br /><br /><a href="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SNtQxduGwNI/AAAAAAAAAGY/Hj0GPruhRcQ/s1600-h/hafs_valama.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SNtQxduGwNI/AAAAAAAAAGY/Hj0GPruhRcQ/s320/hafs_valama.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5249878601352265938" /></a><br /><br /><strong>படம் 2</strong><br /><br /><a href="http://3.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SNtRIQycF5I/AAAAAAAAAGg/DUbM-GJwP7c/s1600-h/hafs_pdf02.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SNtRIQycF5I/AAAAAAAAAGg/DUbM-GJwP7c/s320/hafs_pdf02.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5249878993017771922" /></a><br /><br /><strong>படம் 3 வர்ஸ் கிராஅத் மட்டும் </strong><br /><br /><a href="http://4.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SNtRheohmsI/AAAAAAAAAGo/D-CF4oq6jQY/s1600-h/vars.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SNtRheohmsI/AAAAAAAAAGo/D-CF4oq6jQY/s320/vars.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5249879426231016130" /></a><br /><br /><strong>படம் 4</strong><br /><br /><a href="http://4.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SNtZLSsdmWI/AAAAAAAAAGw/X3_uwzfIxBg/s1600-h/valam.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SNtZLSsdmWI/AAAAAAAAAGw/X3_uwzfIxBg/s320/valam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5249887841162205538" /></a><br /> <br /><br />பிடிஎஃப் படம் 1, 2ல் திருக்குர்ஆன் மர்யம் அத்தியாயம் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கருப்பு எழுத்துக்கள் வர்ஷ் கிராஅத்தாகும், ரோஸ் வண்ண எழுத்துக்கள் குர்ஆனிலிருந்து வித்தியாசமான காரீ ஹஃப்ஸின் உச்சரிப்புகள். பார்க்க படம் 2 கீழே: ரோஸ் வண்ண வட்டத்தில் அடிக்குறிப்பு.<br /><br />படம் 1ல் முதல் வசனம் கருப்பு எழுத்துக்களில் உள்ள வர்ஷ் கிராஅத் முறைப்படி ''ஸகரிய்யா'' என்று முடிகிறது, முடிந்த இடத்திலேயே (ரோஸ் எழுத்தில் ஹஃப்ஸ் கிராஅத்) அ என்ற உச்சரிப்பைத் தரும் அம்சு என்ற எழுத்து ரோஸ் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது (படம் 1, 3ல் நாம் பச்சை வண்ணத்தில் சிறிய கோடிட்ட இடத்தைப் பார்க்கவும்) <br /><br />அதாவது, முதல் வசனம் (வர்ஷ் கிராஅத் கருப்பு எழுத்து) ஸகரிய்யாயாயாயா... என்ற நீட்டலுடன் முடிந்து, ''இஃத்னாதா ரப்பஹு...'' என அடுத்த வசனம் ஓதப்படும். இது காரீ வர்ஷின் கிராஅத் ஸ்டைல்.<br /><br />ரோஸ் எழுத்து, ஸகரிய்யாயாயாயா... என்ற நீட்டலுடன் முடிந்து, ''அ இஃத்னாதா ரப்பஹு...'' என்று அடுத்த வசனம் ஓதப்படும். இங்கு இரு கிராஅத்துக்கும் உள்ள உச்சிரிப்பு வித்தியாசம் ''அ'' என்ற எழுத்து மட்டுமே ஹஃப்ஸ் கிராஆத்தில் சேர்த்து ஓதப்படுகிறது இது ஹஃப்ஸ் கிராஅத் ஸ்டைல்.<br /><br />ஏன் இவ்வாறு ஓதுகிறார்கள்? என்றால் வித்தியாசமாக ஓதும் காரீகளே அதற்கு விளக்கம் சொல்கிறார்கள்: ''வித்தியசமான உச்சரிப்பில் ஓதினாலும் குர்ஆன் வசனங்களின் பொருள் மாறாது'' என்று காரீகளே சவால் விடுக்கிறார்கள்! இந்த உச்சரிப்புகளின் வித்தியாத்தை வைத்து, <br /><br />//ஒரு குர்ஆனா அல்லது பல குர்ஆன்களா?!<br /><br />Quran or Qurans?!//<br /><br />என்று அறியாமையில் வாதம் செய்யும் பிறமத நண்பர்களுக்கு - ''நாங்கள் எப்படி ஓதினாலும் குர்ஆன் வசனங்களின் பொருள் மாறாது'' என்ற காரீகளின் சவாலையே - இங்கு சொல்லிக்கொள்வோம்.<br /><br />இன்னும், மர்யம் அத்தியாயத்தின் 4வது வசனம் (ஹஃப்ஸின் படி 3வது வசனம்) வர்ஷ் கிராஅத் முறைப்படி, ''வலம் அகும்பி'' என்று ஓதப்படும். (பார்க்க படம் 4ல் கருப்பு வட்டம்)<br /><br />இதுவே, ஹஃப்ஸ் கிராஅத் முறைப்படி, ''வலம கும்பி'' என்று ஓதப்படும் (பார்க்க படம் 1ல் கருப்பு வட்டம்) <br /><br />ஓதுதலில் உள்ள உச்சரிப்பு வித்தியாசங்கள் மர்யம் அத்தியாயத்தில் மட்டுமில்லை, திருக்குர்ஆனின் பல அத்தியாயங்களில் இது போன்ற வித்தியசமான கிராஅத்துகள் உள்ளன. இதனால் வசனங்களின் பொருள் சிதைந்து விடுவதில்லை, பொருள் மாறிவிடுவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். <br /><br />இதனடிப்படையிலேயே ''பல குர்ஆன்களா!?'' என்று பிறமத நண்பர்கள் விமர்சனம் எழுதியுள்ளனர். <br /><br /><blockquote><br />நான் என்ன சொல்லவருகிறேன்? <br /><br />சூரா மர்யம் என்ற குர்ஆன் சூராவிலிருந்து மூன்று எடுத்துக் காட்டுக்களைக் காணலாம் வாருங்கள். <br /><br />1. எடுத்துக்காட்டு ஒன்று: சூரா மர்யம் 19:19 <br />[English translation based on the one done by Rashad Khalifa] <br /><br />* ஹஃப்ச் இவ்விதமாக படிக்கிறார்: <br /><br />He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: the angel) you a pure son." <br /><br />இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li'ahiba <br /><br />* நஃபா, அபோம்ரோ, கலன், வர்ஷ்... படிக்கிறார்கள்: <br /><br />He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: Lord) you a pure son." <br /><br />இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihiba <br /><br />* அல்பஹர் அல்மொஹித், "Alkishaf" a book for Alzimikhshiry: <br /><br />He said, "I am the messenger of your Lord, HE ORDERED ME TO GRANT YOU a pure son." <br /><br />இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani 'n 'hiba </blockquote><br /><br />இங்கு பிறமத நண்பர்கள் ஆங்கில உச்சரிப்பில் சுட்டியுள்ள வார்த்தைக்கு மூலமொழி அரபியை வைப்பார்கள் என்று நம்புவோம்.<br /><br />அவர்கள் எழுப்பியுள்ள மேற்கண்ட விமர்சனத்தில் திருக்குர்ஆன், 019:019வது வசனத்தில் இடம் பெறும் ''லி அஹப'' என்ற வார்த்தையை காரீகள் வித்தியாசமான உச்சரிப்பில் ஓதியிருக்கிறார்கள் என்பது உண்மையே, இதனால் வசனத்தில் பொருள் மாறிவிடுவதில்லை என்பதே ஏதார்த்தம். கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்ணியப் பொருளை இவர்கள் பூதக்கண்ணாடியை வைத்து பெரிதாக்கிக் காட்டுவதுதான் இவர்களின் உண்மை சொரூபத்தை அடையாளம் காட்டிவிடுகின்றது.<br /><br />அடுத்த பதிவில் ''லி அஹப'' என்பது குறித்து இங்கு பதிவு செய்வோம் இறைவன் நாடட்டும்.<br /><br />நன்றி!<br /><br />அன்புடன்,<br />அபூ முஹை<br /><br /><strong>தொடர்புடைய முந்தைய பதிவுகள்:</strong><br /><br /><a href="http://live.islamweb.net/quran_list/warsh/s19.pdf">ஏழு வட்டார மொழியில் குர்ஆன்!</a><br /><br /><a href="http://abumuhai.blogspot.com/2008/09/blog-post_14.html">குர்ஆன் பிரதிகளில் பிழைகளும், திருத்தமும்!</a>அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9457100.post-4665168938507261332008-09-19T11:16:00.000-07:002008-09-19T11:34:25.132-07:00வளர்ப்பு மகன் பெற்ற மகனாக முடியுமா?shankaran E R has left a new comment on your post <a href="http://abumuhai.blogspot.com/2004/12/blog-post_08.html">"மாற்றாரால் காமுகராகச் சித்தரித்த நபி - ஸைனப் திரும...": </a><br /><br />தங்களின் பதிவு கண்டேன். விரிவாக விளக்கியுள்ளீர்கள். ஆயினும் என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஏன் நபி தனக்கு மருமகள், அதிலும் தனது வளர்ப்பு மகனின் மனைவியை, விவாகரத்தே ஆனாலும்,மருமகள் முறையிலுள்ள பெண்ணை மீண்டும் திருமணம் செய்ய வேண்டும்? இது அந்நாளைய பொதுவான வழக்கமா? இக்கேள்விக்கு சரியான பதில் தாங்கள் அளித்த சுட்டியிலும் இல்லை. <br /><br />இக்கேள்விக்கு தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.<br /><br />*****<br /><br />நண்பர் சங்கரன்,<br /><br />ஒரு பக்கமாக வாசித்து விளங்கியுள்ளீர்கள். மறு பக்கத்தை உள்வாங்கவில்லை என்பதே உங்களால் முழுமையாக புரிந்து கொள்ளாமல் போனதற்குக் காரணம் எனலாம். நபியவர்களின் வளர்ப்பு மகனைத் திருமணம் செய்த ஸைனப் (ரலி) அவர்கள், நபியவர்களின் தந்தையுடன் பிறந்த சகோதரியின் மகளாவார். அதாவது நபியவர்களின் மாமி மகள் என்பதைக் கவனிக்கத் தவறி விட்டீர்கள்! <br /><br />தந்தையுடன் பிறந்த சகோதரியின் மகள் - மாமி மகள், ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ள அதிகம் உரிமையுள்ளவர்கள். உதாரணமாக: ராஜா என்பவரின் தந்தையுடன் பிறந்த சகோதரியின் மகள், ராஜாவுக்கு முறைப் பெண்ணாவார். அந்தப் பெண்ணுக்கு ராஜா முறைப் பையனாவார். மாமியின் மகளான முறைப்பெண் வெறொருவருக்கு மனைவியாக இருந்தால் தவிர இவ்விருவருக்குமிடையே திருமண உறவு தடுக்கப்பட்டதல்ல.<br /><br />நபியவர்களுக்கு ஸைனப் முறைப் பெண்ணாவார், ஸைனப்புக்கு நபியவர்கள் முறை மாப்பிள்ளையாவார். இவ்வுறவை யாரும் விரும்பித் தேர்ந்தெடுக்க முடியாது. இது இரத்த சம்பந்தப்பட்ட உறவினால் ஏற்படுவது. இதை மாற்றிடவோ மறுத்திடவோ இயலாது. மறுத்தாலும் அது வெறும் வார்த்தையாக இருக்குமேயன்றி மறுப்பு உண்மையாகிவிடாது.<br /><br />வளர்ப்பு மகன், வளர்ப்புத் தந்தை என்று சொல்லிக்கொள்வது இரத்த உறவால் ஏற்படுவதில்லை. அதனால்தான் மகன், தந்தை என்று சொல்லாமல் வளர்ப்பு மகன், வளர்ப்புத் தந்தை என்று அடைமொழியோடு அழைக்கப்படுகிறது. வளர்ப்பு மகன் என்று சட்டபூர்வமாக ஆவணங்களில் பதிவு செய்து கொண்டாலும் இரத்த உறவு ஏற்பட்டுவிடாது. ஏனெனில் தந்தை, மகன் உறவு வெறும் வார்த்தைகளால் ஏற்படுவதில்லை. <br /><br />பெற்ற மகன், வளர்ப்பு மகன் இவ்விரண்டுக்கும் என்றும் ஒற்றுமையில்லாத பெருத்த வேறுபாடு உள்ளது, வளர்ப்பு மகன் ஒருபோதும் பெற்ற மகனாகிவிட முடியாது. <br /><br />ஸைதை வளர்ப்பு மகன் என்று நபியவர்கள் அறிவிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்போது ஸைத் மணமுடித்து விவாகரத்து செய்த பெண்ணை நபியவர்கள் திருமணம் செய்ய எந்தத் தடையும் இல்லை என்று ஒப்புக்கொள்பவர்கள், வளர்ப்பு மகன் என்று வாயால் சொல்லி விட்டதால் ஸைது மணமுடித்தப் பெண் நபியவர்களுக்கு எவ்வாறு மருமகளாகிவிடுவார்? என்பதையும் சிந்திக்க வேண்டும். <br /><br />''உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது'' (திருக்குர்ஆன், 004:023)<br /><br />மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம், பெற்ற மகனின் மனைவியே மருமகள் என்ற தகுதியைப் பெறமுடியும் என்ற கருத்தில் மகனின் மனைவியை திருமணம் செய்வதைத் தடைவிதிக்கிறது. வளர்ப்பு மகனுக்கு இந்தச்சட்டம் பொருந்தாது.<br /><br />வளர்ப்பு மகனை சொந்த மகனாகக்கருதி இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளைப் புறக்கணிக்கும் முறை அன்றைய காலத்தில் இருந்தது. இன்னாருக்கு இன்னார் மகன் என்பதைத் தீர்மானிப்பது இறைவனின் அதிகாரத்தில் உள்ளது. இன்னொருவரின் மகனைத் தன் வளர்ப்பு மகன் என்று சொல்லி வளர்க்கலாமே தவிர, பெற்ற மகனாகக் கருதுவது போலியான உறவு. அந்த வெற்று உறவைத் தகர்க்கவே வளர்ப்பு மகனின் மனைவி விவாகரத்து செய்யப்பட்டால் அந்தப் பெண்ணை வளர்ப்புத் தந்தை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற சட்டத்தை இறைவன் தன் நபியின் வழியாக நிறைவேற்றினான். <br /><br />இவையெல்லாம் ஆக்கத்தில் சொல்லப்பட்டிருந்தும் நீங்கள் கவனிக்கவில்லையோ என்று தோன்றுகிறது. இனியும் உங்களுக்குச் சந்தேகம் உள்ளது எனில், இரத்த சம்பந்தமான உறவில் ஸைனப் (ரலி) அவர்கள் நபியவர்களுக்கு எவ்விதத்தில் மருமகளாகிறார்? என்பதை நீங்கள் விளக்க வேண்டும் நன்றி!<br /><br />அன்புடன்,<br />அபூ முஹைஅபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9457100.post-70064349005419447882008-09-14T10:51:00.000-07:002008-09-14T11:35:29.482-07:00குர்ஆன் பிரதிகளில் பிழைகளும், திருத்தமும்!குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளது. இது உலக முஸ்லிம்கள் ஒப்புக்கொண்ட ஒரு விஷயம். குர்ஆனில் எழுத்துப் பிழை இல்லை என்று ஒரு முஸ்லிம் வாதிப்பாரேயானால் அவருக்கு குர்ஆனோடு சிறுதும் பரிச்சயமில்லை என்று சொல்லி விடலாம். <br /><br />கருத்து வேறுபாடு இல்லாத அளவுக்கு, குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளது என்று ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் அதைக் குறிப்பிட்டு எழுதியும் இருக்கிறார்கள்.<br /><br />(படத்தின் மீது சொடுக்கினால் தெளிவாகப் படிக்க முடியும்)<br /><br /><a href="http://3.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SM1Re02o3vI/AAAAAAAAAFw/af1ar9Rdo9s/s1600-h/quran1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SM1Re02o3vI/AAAAAAAAAFw/af1ar9Rdo9s/s320/quran1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5245938730982235890" /></a><br /><br />*****<br /><br /><a href="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SM1R1z6KCOI/AAAAAAAAAF4/Nemc_U1eyNE/s1600-h/quran2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SM1R1z6KCOI/AAAAAAAAAF4/Nemc_U1eyNE/s320/quran2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5245939125865548002" /></a><br /><br />*****<br /><br /><a href="http://3.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SM1SPyegMdI/AAAAAAAAAGA/SxvJ7-Kyg7I/s1600-h/quran3.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SM1SPyegMdI/AAAAAAAAAGA/SxvJ7-Kyg7I/s320/quran3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5245939572157723090" /></a><br /><br /> ''குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்'' என்று விமர்சிக்கும் பிறமத நண்பர்கள், குர்ஆன் பிரதிகளில் உள்ள எழுத்துப் பிழைகளை குர்ஆனில் உள்ள பிழையாக்க முயலுகின்றனர். அதற்கான குறுக்கு வழிதான், ''குரான் பாதுகாக்கப்பட்டதா?'' என்று ஒரு தடத்தில் எழுதிக்கொண்டு, இன்னொரு சாட்கெட்டில் ''குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்'' என்று எழுதிவிட்டால் ''குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை'' என்று அப்பாவிகளை நம்பவைத்து விடலாம் பாருங்கள்! <br /><br />ஆனால், குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. வானவர் ஜிப்ரீல் குர்ஆனை எழுதிக்கொடுத்துச் சென்றிருந்தால் குர்ஆன் பிரதிகளில் உள்ள எழுத்துப் பிழைகளை இறைச் செய்தியில் (நவூதுபில்லாஹ்) உள்ள பிழையாகக் கொள்ளலாம். ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறைச் செய்தியைக் கொண்டு வந்து, நபி (ஸல்) அவர்களுக்கு ஓதிக் கற்றுக் கொடுத்தாரே தவிர எழுதிக் கற்றுக் கொடுக்கவில்லை. குர்ஆன் பிரதிகளில் உள்ள எழுத்துப் பிழைகள், குர்ஆனை எழுதிக்கொண்ட மனிதர்களால் எற்பட்ட எழுத்துப் பிழைகளாகும்.<br /><br />வஹி ஓசையாக அருளப்பட்டதால் குர்ஆன் என்பது அதை ஓதும் ஓலியாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.. <br /><br />எந்த மனிதருக்கும் எழுத்துப் பிழைகள் ஏற்படவே செய்யும். குர்ஆனை எழுதும் போதும் எழுத்துப் பிழைகள் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் சமுதாயம் அந்த எழுத்துப் பிழைகளையும் திருத்தாதாமல் தொடர்ந்து எழுத்துப் பிழைகளுடனேயே மறு பிரதிகளை அச்சடித்து வருகிறது. <br /><br /><strong>குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பில்,</strong><br /><br />அச்சேற்றும் போது ஏற்படும் பிழைகளும் உள்ளன. மூன் பப்ளிகேஷன் வெளியீடு தமிழ்மொழி குர்ஆனில் மூலமொழியில் ஒரு வசனத்தை மேலும், கீழுமாக மாற்றி அச்சடித்து விட்டார்கள். இது சதாரணமாக மனிதருக்கு ஏற்படும் கவனக்குறைவு அவ்வளவுதான். இதற்காக பொருட்செலவு, உடல் உழைப்பு ஆகியவற்றை வீணாக்கி ஆயிரக்கணக்கான குர்ஆன் பிரதிகளை வெளியிடாமல் இருக்க வேண்டிய அவசியமில்லை.<br /><br /><a href="http://2.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SM1UNk-E0pI/AAAAAAAAAGI/3BZCk6PmIns/s1600-h/mistake1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SM1UNk-E0pI/AAAAAAAAAGI/3BZCk6PmIns/s320/mistake1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5245941733195567762" /></a> <br /><br />வசனத்தைத் தனி ஸ்டிக்கரில் அச்சடித்து தவறராகப் பதியப்பட்ட வசனத்தின் மேல் ஒட்டிக்கொள்ளும்படி தனி ஏற்பாடு செய்தார்கள். <br /><br />ஏற்கெனவே வெளியிட்ட குர்ஆனில் அச்சுப் பிழைகள் ஏற்பட்டு, படிப்பவர்கள் அதைச் சுட்டிக்காட்டினால் அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்வார்கள். ஆனால் பிழையாக அச்சடிக்கப்பட்ட குர்ஆன் அப்படியேதான் இருக்கும். அதனால் குர்ஆனை மாற்றி எழுதி விட்டார்கள். அல்லது திருத்திவிட்டார்கள் என்று அர்த்தமல்ல.<br /><br />குர்ஆன் பலவகையில் உள்ளது என்று பிறமத நண்பர்கள் எடுத்து வைக்கும் வாதங்களில் ஒன்று 019:019வது வசனமாகும். இந்த வசனத்தை குர்ஆன் பிரதிகளில் மாற்றி எழுதியுள்ளனர் என்பது அவர்களின் குற்றச்சாட்டு. இது குறித்து பிறமத நண்பர்களின் விமர்சனத்தை தனியாக எழுதுவோம். இங்கு நாம் சொல்ல வருவது,<br /><br /><a href="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SM1VAelYtCI/AAAAAAAAAGQ/0VR-_sVTcyU/s1600-h/mistake2.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SM1VAelYtCI/AAAAAAAAAGQ/0VR-_sVTcyU/s320/mistake2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5245942607654728738" /></a><br /><br />0019:019வது வசனத்தில் ''லிஅஹப'' என்று இருக்க வேண்டும். மூன் பப்ளிகேஷன் வெளியிட்ட குர்ஆனில் ''லஅஹப'' என்று அச்சடித்துள்ளனர். <br /><br />இது குர்ஆனில் உள்ள பிழை இல்லை. அச்சேற்றும் போது கவனக்குறைவினால் ஏற்பட்ட தவறாகும். இதை அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்ள முடியும். இது போன்ற ஓரெழுத்து பிழைகளை மையமாக வைத்தே பிறமத நண்பர்களின் விமர்சனங்கள் அமைந்துள்ளது. <br /><br />இப்படி உலகில் பல குர்ஆன் பிரதிகளில் அச்சுப் பிழைகள் ஏற்பட்டு அது திருத்தம் செய்யாமல் இருந்தால் அது மனிதர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட பிழைகளே தவிர, குர்ஆனில் உள்ள பிழைகள் இல்லை!<br /><br />இறைவன் ஓசையாகவே குர்ஆனை அருளினான். என்பதால் குர்ஆன் பிரதிகளை, குர்ஆன் ஒலியோடு ஒப்பிட்டுப் பார்ப்பது மிக அவசியம்!அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9457100.post-28744016910746581282008-09-12T01:24:00.000-07:002008-09-12T09:03:53.239-07:007 வட்டார மொழியில் குர்ஆன் அருளப்பட்டது!இஸ்லாத்தை விமர்சிக்கும் பிறமத நண்பர்கள் ஒரு குர்ஆனா பல குர்ஆன்களா!? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.<br /><br /><blockquote>ஒரு குர்ஆனா அல்லது பல குர்ஆன்களா?!<br /><br />Quran or Qurans?!<br /><br />இக்கட்டுரையை அரபியில் படிக்க: النسخة العربية<br /><br />இந்த கட்டுரைக்கான விவரங்கள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது:<br /><br />The reading ways of Quran dictionary: (moa'agim alqera'at alqura'nia):<br /><br />இது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம்(Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்:<br /><br />டாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal'al Salem Makrem)<br />டாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)<br /><br />இவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.<br />புத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel – Kuwait)<br /><br />முன்னுரை:<br /><br />உத்மான் இபின் அஃபான் காலம் வரைக்கும் பல குர்ஆன்கள் [massahif] எழுதப்பட்டது. இவர் இதர குர்ஆன்களை எரித்துவிட்டார் மற்றும் ஒரு குர்ஆனை ஆதிகாரபூர்வமான பிரதி என்று வைத்துக்கொண்டார்.<br /><br />உதாரணத்திற்கு, கீழ்கண்ட குர்ஆன் வகைகள்:<br /><br />1. அலி பின் அபி தலிப் என்பவரின் படி குர்ஆன் (Quran according to Ali bin abi talib)<br />2. இபின் மஸூத் என்பவரின் படி குர்ஆன் (According to Ibn Mass'oud)<br />3. அபி பின் கப் என்பவரின் படி குர்ஆன் (According to Aobi bin ka'ab)<br /><br />இதன் பொருள் இவர்கள் குர்ஆனை எழுதினார்கள் என்று பொருளில்லை; இதன் பொருள் அவர்கள் குர்ஆனை எப்படி படிக்கவேண்டும் என்ற விவரங்களை கொண்டு இருந்தனர்.<br /><br />குர்ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.<br /><br />ஏழு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:<br /><br />1. நஃபா: கலன் + வர்ஷ் (Nafaa': Qalon + Warsh)<br />2. இபின் கதிர்: அல்பிஜி + கோன்பில் (Ibn Kathir: Albizi + Qonbil)<br />3. அபி அம்ரொ: அல்தோரி + அல்சோசி (Abi amro: Aldori + Alsosi)<br />4. இபின் அமிர்: இபின் அபன் + இபின் த்வான் (Ibn Amer: Ibn Aban + Ibn Thkwan)<br />5. அச்செம்: அபோ பைகர் + ஹஃபஸ் (Assemm: Abo Biker + Hafas)<br />6. அல் கெஸ்ஸய்: அலித் + அல்தோரி (Alkessa'i: Allith + Aldori)<br />7. ஹம்ஜா: அல்பிஜாஜ் + அபோ ஈஸா அல்சிர்பி (Hamza: Albizaz + Abo Isa Alsirfi)</blockquote><br /><br />இங்கு பதிவு செய்துள்ள குழப்பமான கருத்துகளில் பிறமத நண்பர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று முழுதும் புரியவில்லை என்றாலும் ''குர்ஆன் ஒன்றல்ல, ஏழு வகையான குர்ஆன் உள்ளது'' என்று சொல்கின்றனர் என்று விளங்குகிறது. எடுத்து வைக்கும் சான்றுகளில் இவர்களுக்கே நம்பிம்கையில்லை என்பதை இவர்களின் தடுமாற்றம் தெளிவுபடுத்துகிறது. இவர்கள் பதியும் கருத்துக்கள் இவர்களுக்கேப் புரியாமல் போய் விடுகிறது என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்,<br /><br /><blockquote>//நான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்பது மிகவும் தெளிவாக உள்ளது; அதாவது ஒரே ஒரு குர்ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.//</blockquote><br /><br />தெளிவில்லாத விமர்சனத்தைப் பதிவு செய்கிறோம் என்பது அவர்களுக்கே உறுத்தலாக இருப்பதால் ''மிகவும் தெளிவாக உள்ளது'' என்று சான்றிதழ் வழங்கிக் கொள்கிறார்கள்.<br /><br />நண்பர்களே! உலகில் ஒரே ஒரு குர்ஆன் உள்ளதாக யாரும் சொல்ல மாட்டார்கள்! உலகம் முழுதும் உள்ள குர்ஆன் பிரதிகளை கணக்கிட்டால் பல கோடி குர்ஆன் பிரதிகளை கண்டெடுக்கலாம். விஷயத்துக்கு வருவோம்,<br /><br /><strong>வட்டார மொழி </strong><br /><br />தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாநில மக்களும் பேசுவது தமிழ் என்றாலும் ஒவ்வொரு இடத்திலும் பேசும் தமிழில் வித்தியாசமிருக்கும். இதை வட்டார மொழி என்று சொல்வார்கள். பேசு பொருள் ஒன்றாக இருந்தாலும் பேசும் ஒலியில் ஏற்ற இறக்கமிருக்கும். ஒருவர் தமிழ் பேசுவதை வைத்தே அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறிவிடலாம். இதில் இலங்கைத் தமிழ் வித்தியாசமான தனித் தமிழ் பேச்சாக இருக்கும். பயிற்சி எடுத்தாலே தவிர ஒரு வட்டாரப் பேச்சை இன்னொரு வட்டாரத்தைச் சேர்ந்தவர் பேசுவது கடினம். அந்த அளவுக்கு வட்டார மொழி ஒருவரின் பேச்சில் ஊறிப்போனதாகும்.<br /><br />''ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப்படி ஜிப்ரீல்(அலை) அவர்கள் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார்கள். அதை இன்னும் பல(வட்டார) மொழிவழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க) எனக்கு அவர்கள் அதிகப்படுத்திக்கொண்டே வந்து இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறால்கள். (புகாரி, 3219, 4991)<br /><br />திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டது. அரபு மொழியில் ஏழு வட்டார மொழியில் ஓதுவதையே பிரபலமான ''ஏழு கிராஅத்துகள்'' - ஏழு வகையான ஓதும் முறைகள் - என்று சொல்வார்கள்.<br /><br />ஏழு வகையான ஓதும் முறைகளையே மாறுபட்ட ஏழு வகையான குர்ஆன்கள் இருக்கின்றன என்று புரிந்து கொண்டு, //''ஒரே ஒரு குர்ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.''// என்ற தவறான விமர்சனத்தை வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வைத்துள்ள ஆதாரங்கள் மறு ஆய்வுக்குரியவை என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன்.<br /><br /><strong>ஏழு வகையான ஓதுதல்</strong><br /><br />''இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) 'அல்ஃபுர்கான்' எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே நான் அவரைத் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுத்துக் கொண்டேன்.<br /><br />(அவர் தொழுது முடித்த) பிறகு அவரின் மேல் துண்டைக் கழுத்தில் போட்டுப் பிடித்து, 'நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காண்பித்தது யார்?' என்று கேட்டேன். அவர், 'இதை எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் ஒதிக் காண்பித்தார்கள்' என்று பதிலளித்தார். உடனே நான், 'நீர் பொய் சொல்லிவிட்டீர்! ஏனெனில், நீர் ஓதியதற்கு மாற்றமாகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எனக்கு ஓதிக்கொடுத்தார்கள்' என்று கூறியபடி அவரை இழுத்துக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், '(இறைத்தூதர் அவர்களே!) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் 'அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன்' என்று சொன்னேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரை விடுங்கள்!' என்று கூறிவிட்டு (ஹிஷாம் அவர்களை நோக்கி), 'ஹிஷாமே, நீங்கள் ஓதுங்கள்!' என்றார்கள். அவர் என்னிடம் ஓதியது போன்றே நபி(ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக் காட்டினார். (இதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது' என்று கூறினார்கள்.<br /><br />பிறகு (என்னைப் பார்த்து), 'உமரே, ஓதுங்கள்!' என்று கூறினார்கள். எனக்கு அவர்கள் ஓதிக்கொடுத்திருந்த முறைப்படி நான் ஓதினேன். (அதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது. இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.'' என்று உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, 4992, 5041, 6936, 7550)<br /><br />நபி (ஸல்) அவர்களின் காலத்தில், இரு நபித்தோழர்கள் குர்ஆனை இரு வகையாக ஓதியிருக்கிறார்கள். இரு ஓதலையும் நபி (ஸல்) அவர்கள் சரி என அங்கீகரித்துள்ளார்கள் என்றால் இருவரும் குர்ஆன் வசனங்களை மாற்றி ஓதினார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா? என்றால் இல்லை. உதாரணமாக:<br /><br />நபித்தோழர் ஹிஷாம் (ரலி) அவர்கள் திருக்குர்ஆனில் அல்ஃபுர்கான் எனும் 25வது - அத்தியாயத்தை ஓதியதாக அறிவிப்பில் உள்ளது. ஃபுர்கான் அத்தியாயத்தின் தொடக்க வசனம்:<br /><br />''(சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியவான்'' என்று கூறுகிறது. தொழுகையில் முன்னின்று ஓதும் இமாம் இதை பிழையாக ஓதினாலோ, அல்லது மறதியாக ஒரு வார்த்தையை விட்டுவிட்டாலோ, அவருக்குப் பின்னின்று தொழுபவர்கள் தவறைத் திருத்தியும், மறந்த வசனத்தை நினைவு படுத்தியும் எடுத்துச் சொல்வார்கள்.<br /><br />இந்த அடிப்படையில், ஹிஷாம் (ரலி) அவர்கள் அல்ஃபுர்கான் அத்தியாய வசனங்களை மாற்றியோ, தவறாகவோ ஓதியிருந்தால் தொழுகையிலேயே அவர் திருத்தப்பட்டிருப்பார். ஹிஷாம் (ரலி) அவர்களின் குர்ஆன் ஓதலை, பின்னின்று தொழுத மற்ற நபித்தோழர்கள் ஆட்சேபிக்கவில்லை. உமர் (ரலி) அவர்களும் அவர் ஓதி முடிக்கும் வரை ஆட்சேபிக்கவில்லை என்பதிலிருந்து ஹிஷாம் (ரலி) அவர்கள் குர்ஆன் வசனங்களை சரியாகவே ஓதியுள்ளார்கள் என்பது தெளிவு!<br /><br />ஹிஷாம் (ரலி) அவர்கள் சரியாக ஓதியிருந்தால் அதை உமர் (ரலி) அவர்கள் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு, ஓதிய வகையில் மாற்றமிருந்தது. அதாவது ஓதிய வட்டார மொழி வித்தியசமாக இருந்ததால் உமர் (ரலி) அவர்களுக்கு அது குர்ஆன் ஓதும் முறையாக இல்லையே என்று தோன்றியிருக்கிறது, குர்ஆனை மாற்றி வேறு முறையில் ஓதிவிட்டதாகக் கருதி, அதைக் கண்டிப்பதற்காக ஹிஷாம் (ரலி) அவர்களின் கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்து, நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுகிறார்.<br /><br />நபி (ஸல்) அவர்கள், இருவரும் ஓதியது சரிதான் என்று கூறிய பின் உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொண்டதிலிருந்து, ஹிஷாம் (ரலி) அவர்கள் குர்ஆனை ஓதிய முறையும் நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப்பட முறைதான் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது. தெரிந்த பின் ஏற்றுக்கொண்டார்கள் என்று விளங்கலாம்.<br /><br /><strong>குர்ஆன் ஓதும் முறை</strong><br /><br /><span style="color:#3366ff;">''குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!''</span> (திருக்குர்ஆன், 073:004)<br /><br />நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ''குர்ஆனை எனக்கு ஓதிக்காட்டுங்கள்'' என்று சொன்னார்கள். நான் ''தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க , தங்களுக்கு நான் ஓதிக்காட்டுவதா?'' என்று கேட்டேன். அவர்கள் ''பிறரிடமிருந்து அதை நான் செவியேற்க விரும்புகிறேன்'' என்று சொன்னார்கள். என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, 5049)<br /><br />நபி (ஸல்) அவர்களின் ஓதுதல் முறை எப்படி இருந்தது என்று கேட்டேன். அதற்கவர்கள், ''நீட்டி ஓதுதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எப்பதில் ''பிஸ்மில்லா...ஹ் என நீட்டுவார்கள், அர்ரஹ்மா...ன் என்றும் நீட்டுவார்கள், அர்ரஹீ...ம் என்றும் நீட்டுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். (புகாரி, 5046)<br /><br />நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் (தமது ஒட்டகத்தின் மீதர்ந்தபடி) 'அல்ஃபதஹ் (48வது) அத்தியாத்தைத் 'தர்ஜீவு' செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக்கொண்டிருந்தார்கள். (புகாரி, 4281, 4835)<br /><br />''தர்ஜீவு'' என்பதற்கு மீட்டுதல் என்று பொருளாகும். ஒரு எழுத்தைத் திரும்பத் திரும்ப தொண்டைக்குக்கொண்டு வந்து ஓசை எழுப்பி ஓதுவதாகும். ஆ எழுத்தை ஆ ஆ ஆ என்று இழுத்து ஓதும்போது ஒரே எழுத்தின் ஒலி நீண்டு ஓசை நயத்துடன் ஓதும் முறைக்கு தர்ஜீவு எனப்படும்..<br /><br />பாங்கொலியில் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்... தொழுகையின் அழைப்பை குரல் வளமிக்கவர் நன்றாக நீட்டிச் சொல்லும் போது கேட்க இனிமையாக இருக்கும். எடுத்துக்காட்டாக: நாகூர் ஹனீஃபா என்ற முஸ்லிம் பாடகர் ஒரு பாடலில் பாங்கு சொல்லியிருப்பார் அவரின் கனத்த குரலுக்கு நீட்டி நிறுத்தி சொல்லியிருக்கும் பாங்கை தர்ஜீவு என்று சொல்லலாம்.<br /><br />குர்ஆனை மனனம் செய்தவர்கள் வெவ்வேறு முறைகளில் நீட்டி இழுத்து ஓதியிருக்கிறார்கள். ''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' என்ற தொடக்க வசனத்தை ஓதி நிறுத்திவிட்டு பின்னர் அல்ஹம்துலில்லாஹி... என்று தொடங்குவது ஒருவகை ஓதல்.<br /><br />''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீமில்ஹம்துலில்லாஹி...'' என்று ஒன்றாகச் சேர்த்து நீட்டி இழுத்து ஓதுவதும் ஒருவகை ஓதல்.<br /><br />ஒரு வசனத்தையே திரும்பத் திரும்ப ஓதுவதும் ஒருவகை. குரல் வளமிக்கவர்கள் குரலை உயர்த்தி, தாழ்த்தி நீட்டி நிறுத்தி வெவ்வேறு வகையிலும் ஓதிக்கொள்ளலாம் என்பதே பல வகையான ஓதுதல் எனப்படும். ஏழுவகையான ஓதுதல் என்பது ஓர் அளவுதானே தவிர குர்ஆனை இனிமையாக ஓத முடியுமென்றால் ஏழு முறைக்கும் அதிகமான வட்டார மொழியில் ஓதலாம். அதற்கு தடையேதும் இல்லை. குர்ஆன் இனிமையாக ஓதப்பட்டால் செவி தாழ்த்திக் கேட்பவர்களை அது ஊக்கப்படுத்தும்.<br /><br />இதற்கு உதாரணமாக: 12 வயது எகிப்து சிறுமி சுமையா, இன்று தன் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதில் சிறப்புப் பெற்று வருகிறார். இவருடைய ஓதல், அப்படியே குர்ஆன் ஓதுவதில் பிரபல்யமான அப்துல் பாசித் அவர்களின் ஓதலை நினைவூட்டுகிறது. சுமையாவின் குர்ஆன் ஓதலைக் கேட்பதற்காக மக்கள் திரளாக வந்து கண்ணியத்துடன் காத்திருக்கிறார்கள் என்றால் ராகத்துடன் ஓதும் சுமையாவின் <a href="http://www.youtube.com/watch?v=QQX2YjcSpRY">இனிமையான குரல் </a>மக்களை ஈர்க்கிறது.<br /><br /><strong>ஏழு வட்டார மொழி</strong><br /><br />நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட ஏழு வட்டார மொழி இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. ஒலியைப் பதிவு செய்ய முடியாத காலத்தில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தது என்பதால் அன்று குர்ஆனை ராகமிட்டு ஓதிய முறை இது என்று தீர்க்கமாக சொல்ல இயலாது. குர்ஆனை ஓதும் முறை பற்றி வசனத்திலும் சில அறிவிப்புகளிலும் ஆதாரங்கள் இருப்பதால் குர்ஆனை இனிமையாக ராகமிட்டு ஓதலாம் என்கிறோம்.<br /><br />ஏழு வட்டார மொழியை பிரபல்யமான ஏழு வகையான கிராஅத் - ஓதல் என்று சொன்னாலும் அறிஞர்களிடையே ஏழு வட்டார மொழி குறித்து கருத்து வேறுபாடுகள் உண்டு. இவற்றை அறிஞர்களின் கருத்தாகவே கொள்ளலாமே தவிர அறிஞர்களின் கருத்துக்களை வலுசேர்க்க நபிவழி அறிவிப்புகளில் சான்று எதுவும் இல்லை.<br /><br />குர்ஆனை இனிமையாக பல ராகத்துடன் ஓதிக்கொள்ளலாம் என்பதையே ஏழு வட்டார மொழி வழக்கு என்ற அறிவிப்பு அனுமதிக்கிறது. குர்ஆன் வசனங்களை ஏழு விதமாக மாற்றி ஓதினார்கள் என்பதைக் குறிப்பிடவில்லை. இதற்கு மேற்கண்ட உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் தக்க சான்றுகள் உள்ளன.<br /><br />மேலும்,<br /><br /><span style="color:#000099;">''நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள்''</span> (திருக்குர்ஆன், 073:020)<br /><br />''இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்'' (மேற்கண்ட உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பு, புகாரி, 4992, 5041, 6936, 7550)<br /><br />குர்ஆனில் சுலபமானதை ஓதுங்கள் என்று - (கூட்டுத் தொழுகையில் முன்னின்று தொழ வைப்பவர் அல்லாத) - ஒருவர் குர்ஆனை நீட்டியும் ஓதலாம், சுருக்கியும் ஓதலாம் என்பதை அனுமதிக்கிறது. ''உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்'' என்பதும் ஒரே ஒரு குர்ஆனையேக் குறிப்பிடுகிறது. ஏழு வகையான குர்ஆனைக் குறிப்பிடவில்லை.<br /><br />எம்மிடம் உள்ளது இதுவே!<br /><br />இனி...<br /><br /><blockquote>குர்ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.</blockquote><br /><br />ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தின்... என்று விளக்கியிருக்கும் பிறமத நண்பர்களே!<br /><br />ஏழு வித்தியசாமான குர்ஆன்கள் உண்டு என்ற உங்களின் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, வித்தியாசப்பட்ட குர்ஆன் வசனங்களை சான்றுகளுடன் களத்தில் வையுங்கள்!<br /><br />அதாவது, ''ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தின் படி'' இந்த ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்ஆன் வசனத்தையும், +3 +4 இதர மற்றும் கூடுதலான, இதில் இயல்புக்கு மாறான முறை என்ன? என்பதையெல்லாம் சற்று விளக்கிச் சொல்வீர்களாயின் முஸ்லிம்களும் புரிந்து கொள்வார்கள், விளக்குவீர்களா...?<br /><br />சம்பந்தப்பட்ட பதிவில், நீங்கள் சரித்திரங்களைத் திரித்துள்ளீர்கள். ஆதாரங்களுடன் அடுத்து சந்திப்போம்.<br /><br />நன்றி!<br /><br />அன்புடன்,<br />அபூ முஹைஅபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9457100.post-57019168257938267322008-09-10T02:22:00.000-07:002008-09-10T02:38:05.329-07:00இது துவக்க அடிதான்!<a href="http://2.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMeSbf_HMEI/AAAAAAAAAFo/h_HQyxfy1-w/s1600-h/Dinamalar_blocked.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMeSbf_HMEI/AAAAAAAAAFo/h_HQyxfy1-w/s320/Dinamalar_blocked.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5244321292236566594" /></a><br /><br />அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும் என்பார்கள். தினச் செய்தியை மக்களின் கவனத்திற்கு வைக்கும் ஒரு நாளேடு உண்மைச் செய்திகளை மட்டும் அச்சிலேற்ற வேண்டும். செய்திகள் என்ற பெயரில் விஷமத்தை விளம்பரப்படுத்திய தினமலரின் பாஸிசக் கொள்கைக்கு விழுந்த முதல் அடி இது. <br /><br />- அபூ முஹை<br /><br />*****<br /><br /><strong>தினமலருக்கு முதல் அடி!</strong> <br /> <br />புதன், 10 செப்டம்பர் 2008 <br /> <br />கடந்த 01.09.2008 அன்று தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில், உலக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும், அவர்களின் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் வெளியிட்டிருந்த கேலிச் சித்திரத்தை வெளியிட்டிருந்தது. <br /><br />கொதித்தெழுந்த முஸ்லிம்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டத் தொடங்கினர். <br /><br />இது குறித்து விபரமாக இரு தினங்களுக்கு முன்னர் (08.09.2009) <a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1022&Itemid=167">தலையங்கம் எழுதி இருந்தோம். </a><br /><br />அத்தலையங்கம், "உப்புப் போட்டுச் சோறு தின்னும் ஒவ்வொரு முஸ்லிமும் இனி, தினமலரை ஒழித்துக் கட்டுவதற்குத் தன்னால் எதுவெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் செய்வான்" என்று முடிந்திருந்தது. <br /><br />உப்புப் போட்டுத்தான் முஸ்லிம் சோறு தின்னுகிறான் என்பதை உறுதிப் படுத்தும் விதமாக இன்று தினமலருக்கு முதல் அடி விழுந்திருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகங்களில் தினமலரின் இணைய தளம் இன்று முதல் தடை செய்யப் பட்டுள்ளது. தினமலர் விதைத்த வினைகளின் அறுவடையைத் தான் தடை செய்யப் பட்டப் படத்தில் பார்க்கின்றீர்கள். <br /><br />இது தொடக்கம்தான் ...<br /><br />நன்றி: <a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1025&Itemid=51">சத்தியமார்க்கம்.காம்</a>அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-9457100.post-9587376848372573812008-09-08T10:13:00.000-07:002008-09-11T03:05:47.393-07:00மத பயங்கரவாத நாளேடு!<strong>திருந்தாத தினமலர் இருந்தென்ன..?</strong> <br /><br />திங்கள், 08 செப்டம்பர் 2008 <br /> <br />"ஏழை மக்களுக்கு சுகாதாரக் காப்பீடு" என்ற தலைப்பில் கடந்த ஆண்டு 06.10.2007இல் தினமலர் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அச்செய்திக்கு எவ்விதத் தொடர்புமின்றி அச்செய்தியோடு ஒரு படம் இணைக்கப் பட்டிருந்தது. அது, சர்ச்சைக்குரிய டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் இதழில் வெளியான கேலிச்சித்திரங்களில் ஒன்றாகும். டென்மார்க் கேலிச்சித்திரங்கள் அப்போது அதிகம் அறியப் படாததால் அது கவனம் பெறாமல் போயிற்று. தினமலரின் இந்தத் திட்டமிட்ட எழுத்து வேசித்தனம் நடந்தது கடந்த ஆண்டின் ரமளானில் என்பது இங்கு நினைவு கூரத் தக்கது. <br /><br />முஸ்லிம்கள் இவ்வாண்டின் புனித மாதமான ரமளானை மகிழ்வுடன் தொடங்க முயன்றபோது அவர்களது மகிழ்ச்சியைக் குலைத்து அவர்களுக்கு வருத்தத்தையும் சீற்றத்தையும் ரமளான் பரிசாக அளித்திருக்கிறது தினமலர் நாளிதழ். <br /><br />முஸ்லிம்கள் ரமளான் நோன்பைத் தொடங்கிய 01.09.2008 நாளிட்ட தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில், முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் அவர்களின் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் வெளியிட்டிருந்த இன்னொரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டது. <br /><br />கொதித்தெழுந்த முஸ்லிம்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டத் தொடங்கினர். <br /><br />கேலிச் சித்திரம் வெளியான அன்று மாலை வேலூரை அடுத்த மேல்விஷாரத்தில் முஸ்லிம்கள் மறியல் செய்தனர். தொடர்ந்து, வேலூரில் உள்ள தினமலர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்ததால் வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வேலூர் தினமலர் அலுவலகம் முன்பு 02.09.2008 காலையில் குவிந்து போராட்டத்தைத் துவக்கினர். <br /><br />காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலூர்-பெங்களூர் சாலைப் போக்குவரத்து முற்றிலும் சீர்குலைந்தது. <br /><br />"கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் நபிகள் நாயகம் பற்றிக் கேலிச் சித்திரம் வெளியிட்டவர்களைக் கைது செய்ய வேண்டும்" என்றும் "இந்து-முஸ்லிம் இடையே பகையைத் தூண்டிவிடும் தினமலர் ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும்" என்றும் ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம்கள் கோஷமிட்டனர்.<br /><br /><a href="http://4.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMVhSrk-lQI/AAAAAAAAAFg/u0ZvWb4Ibr0/s1600-h/vellor2.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMVhSrk-lQI/AAAAAAAAAFg/u0ZvWb4Ibr0/s320/vellor2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5243704314706171138" /></a><br /><br />வேலூர் மாவட்ட ஆட்சியர் தர்மேந்திர பிரதாப் யாதவ், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி, மேலாளர் அறிவுச்செல்வம், வட்டாட்சியர் சுகந்தி, மாவட்டக் காவல்துறை துணை மேலாளர் ராமதாஸ் ஆகியோர் அங்கு வந்து, போராட்டம் நடத்தியவர்களைக் கலைந்து போகச் சொன்னார்கள். ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம்கள் மறுத்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தடியடியில் பலர் காயமடைந்தனர். <br /><br />"முஸ்லிம்களை இழிவுபடுத்தும் நோக்கில் திட்டமிட்டுக் கேலிச் சித்திரம் வெளியிட்ட"தைக் கண்டித்து, சேலத்தில் தமுமுகவினர் 02.09.2008 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். "தினமலர் பத்திரிகையைத் தடை செய்ய வேண்டும்" என்று அவர்கள் கோஷமிட்டனர். தமுமுக தலைமையேற்று சேலத்தில் நடத்திய தினமலர் எதிர்ப்புப் போராட்டத்தில், 28 பெண்கள் 294 கைது செய்யப் பட்டனர். <br /><br />மதுரையில் மனிதநீதிப் பாசறையும் தமுமுகவும் இணைந்து <a href="http://www.youtube.com/watch?v=ZsWtfutMllE">போராட்டத்தில்</a> குதித்தனர். தங்களின் எதிர்ப்பைக் காட்டும் முகமாக தினமலர் நாளிதழை முஸ்லிம்கள் தீயிலிட்டுப் பொசுக்கினர். ததஜவினர் 04.09.2008 இல் மதுரையிலும் <a href="http://www.tntj.net/Event/Chennai/NabiSel_Keli_Sithiram_Dinamalar_Arpattam_4-9-2008.asp">சென்னையிலும் </a>06.09.2008 இல் <a href="http://tntj.net/Event/Kovai/Dinamalar_Arpattam_6-9-2008.asp">கோவையிலும்</a> ஆர்ப்பாட்டம் நடத்தினர். <a href="http://tmmk.in/news/999689.htm">திருச்சியில்</a> தமுமுக தினமலரை எதிர்த்து முற்றுகைப் போராட்டத்தை நடத்தியது. தமுமுக, மனிதநீதிப் பாசறை, ஜாக், சிறுபான்மை உதவி அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து 04.09.2008 இல் மாபெரும் <a href="http://kovaimediavoice.blogspot.com/">கண்டன ஆர்ப்பாட்டத்தை </a>நடத்தினர். <br /><br />இவ்வளவும் நடந்து முடிந்த பின்னர் முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டத்துக்கும் போராட்டத்துக்கும் அறவே தொடர்பில்லாத சில சங்கங்களின் தலைவர்களை தினமலர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து, அமர வைத்து வெறும் ஒரு <a href="http://www.dinamalar.com/note.asp">'வருத்தத்தை'</a> மட்டும் தெரிவித்து, பிரச்சினை முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் தினமலர் ஆசிரியர்.<br /><br />ஒன்று இரண்டு என்றில்லாமல் பல திக்குகளிலிருந்தும் தினமலருக்கு ஆப்புகள் சீவப் படும் வேலை மும்முரமாகத் தொடங்கி விட்டது. <br /><br />அரிப்பெடுக்கும்போது தலையைக் கொள்ளிக்கட்டையால் சொரிந்து கொள்ளும் முட்டாள் குரங்கைப் பற்றி உவமை கேள்விப் பட்டிருக்கிறோம். இதே கேலிச் சித்திரம், டென்மார்க் என்ற ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே அசைத்துப் போட்டிருக்கும்போது, ஓர் அற்ப நாளிதழான நாம் எம்மாத்திரம்? என்பதைக் கொள்ளிக்கட்டையைக் கையிலெடுக்கும் முன்னர் தினமலர் யோசித்திருக்க வேண்டும்.<br /><br />முஸ்லிம் விரோதப் போக்கை முழுதுமாக விட்டொழித்து முற்றாகத் திருந்தாதவரை உப்புப் போட்டுச் சோறு தின்னும் ஒவ்வொரு முஸ்லிமும் இனி, தினமலரை ஒழித்துக் கட்டுவதற்குத் தன்னால் எதுவெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் செய்வான். முடிவு தெரியும்போது அதை வேறு நாளிதழ்களில்தான் தேடவேண்டியிருக்கும். <br /><br />நன்றி: <a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1022&Itemid=167">சத்தியமார்க்கம்.காம் </a>அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9457100.post-6613258887240785632008-09-07T06:26:00.000-07:002008-09-07T06:32:40.352-07:00தினமலரைப் புறக்கணிப்போம்!<a href="http://2.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMPJsI2MxSI/AAAAAAAAAFY/33L4lZOPuXc/s1600-h/no_dinamalar.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMPJsI2MxSI/AAAAAAAAAFY/33L4lZOPuXc/s320/no_dinamalar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5243256151315629346" /></a><br /><br /><strong>சமூக நல ஆர்வலர்களுக்கு அன்பான வேண்டுகோள்!</strong><br /><br />இந்தியா சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்திய இறையாண்மைக்கும் பன்முக சகிப்புத்தன்மைக்கும் கேடு விளைவித்து, மக்கள் ஒற்றுமைக்கு உலை வைக்கும் விதமாக மதசார்பற்ற நாட்டில் வர்ண ஆட்சியை அமைக்கும் சூழ்ச்சியோடு சங்கபரிவாரம் தேச விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு அரசு, அதிகாரம், காவல், இராணுவம், ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் காங்கிரஸ் முதலான அனைத்து கட்சிகளிலும் ஊடுருவியுள்ள சங்கபரிவாரத்தினர் பலவகைகளிலும் உறுதுணை புரிந்து வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் மதவெறியைத் தூண்டிவிட்டு கலவரங்களை ஏற்படுத்தி மக்களிடம் நிலவும் மனிதநேயத்தைச் சீர்குலைத்து வருகின்றனர்.<br /><br />1995 -க்கு முன்பு வரை இந்தியாவின் வட மாநிலங்களில் மட்டும் மையம் கொண்டிருந்த இந்தப் பார்ப்பன மதவெறி செயல்பாடுகள் தற்பொழுது தென்னகத்திலும் குறிப்பாக தமிழகத்திலும் படுவேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளன. இதற்கான அடையாளமாக கோயம்புத்தூர் படுகொலைகள், தென்காசி குண்டுவெடிப்புகளைக் கூறலாம். இதற்காகச் சங்கபரிவாரத்தின் அறிவிக்கப்படாத தமிழக ஏஜண்டாக ஊடகத்துறையில் தினமலர் எனும் பார்ப்பன தினசரி ஈடுபட்டு வருகிறது.<br /><br />எங்காவது ஒரு மூலையில் காவல்துறையால் அநியாயமாகப் பழி சுமத்தப்பட்டு ஒரு முஸ்லிம் கைது செய்யப்பட்டு விட்டால், ஊசி, நூல், வயர் துண்டு, சுத்தியல், ஆணி போன்ற அதி பயங்கர ஆயுதங்களின் பட்டியலை முகப்புப் பக்கத்தில் பிரசுரித்து "இஸ்லாமிய தீவிரவாதி" என்ற பதத்தைத் தமிழக மக்களின் மனதில் ஆழப்பதிய வைத்தப் பெருமை தினமலருக்கு உண்டு. பிள்ளையார் ஊர்வலம் நடக்கும் வேளைகளில் சமூக விரோதிகளால் திட்டமிட்டுச் செய்யப்படும் கலவரங்களைக் கூட, காவல்துறையும் பதிவு செய்யாத "அருகிலுள்ள பள்ளிவாசலில் இருந்து கல் வீசப் பட்டதால் பதட்டம் ஏற்பட்டது" என திரித்து முஸ்லிம் சமுதாயத்தை மக்கள் மத்தியில் மோசமான சமுதாயமாகச் சித்தரிப்பதற்குத் தினமலரால் மட்டுமே இயலும்.<br /><br />இவ்வாறு பல ஆண்டுகாலமாக தினமலர் நாளிதழ் செயல்பட்டு வந்தமையைச் சகித்துக் கொண்ட முஸ்லிம் சமுதாயத்தின் நெஞ்சில் சுடுகனலை வைப்பது போன்று, தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் இறைத்தூதரைக் கேலி செய்யும் விதமாக டென்மார்க் பத்திரிக்கை வெளியிட்டு உலகில் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்த கேலிச்சித்திரத்தைச் சம்பந்தமே இல்லாமல் தனது கணினிமலரில் வெளியிட்டுள்ளது. இது ஏதேச்சையாக நடந்த சம்பவம் என்று ஒதுக்கிவிட இயலாது. உலக முஸ்லிம்களின் புனித மாதமாகிய ரமதான் மாதத் துவக்கத்தில் இந்த மதவெறி தாக்கதலை திட்டமிட்டே தினமலர் அரங்கேற்றியுள்ளது.<br /><br />எதையும் தாங்கும் முஸ்லிம்கள் தங்களின் இறைத்தூதர் இகழப்படுவதை மட்டும் ஒருபோதும் சகிக்க மாட்டார்கள். இதனை நன்றாக உணர்ந்தே இந்நாழிதழ் இத்தகைய கீழ்தரமான செயலில் ஈடுபட்டது. எதிர்ப்பு வந்தபொழுது தவறுதலாக நடந்தது எனக் கூறி தன் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள மட்டுமே முயல்கின்றது. அதற்காகப் பகிரங்க மன்னிப்புக் கேட்கவோ இனி இதுபோன்ற செயல் தன்பக்கமிருந்து நடைபெறாது என்பதற்கு உத்தரவாதமோ அது கொடுக்கவில்லை. தவறு கூட ஒரு பிரசுரத்தில் நிகழ்ந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரே நேரத்தில் நான்கு பிரசுரங்களில் அது பிரசுரிக்கப்பட்டது தவறுதலாக நடந்தச் சம்பவமாகப்படவில்லை.<br /><br />நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், சுமூகமாக வாழும் சமூகத்தில் கலகம் விளைவித்து அதன் மூலம் இலாபம் பெற வேண்டும் என்ற சங்கபரிவாத்தின் செயல்திட்டத்தை வலுவான ஊடகம் மூலம் பரப்ப முனையும் தினமலர் பத்திரிக்கையை மேலும் தமிழகத்தில் வளரவிடுவது, தமிழகத்தின் எதிர்காலத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.<br /><br />செய்த தவறுக்கு நிர்வாகம் காரணமல்ல என்று கூறி வருத்தம் தெரிவித்து நழுவுவது தினமலரின் நிர்வாகச் சீர்கேட்டை பறைசாற்றுகிறது. தினமலரின் மதவெறி செயல்பாட்டை ஒழிக்க, மனித நேயத்தை வளர்க்க சமூக ஆர்வலர்களே முஸ்லிம் சமூகத்தின் இந்த எதிர்ப்புக் குரலுக்கு ஆதரவை அளியுங்கள்.<br /><br />ஒன்றிணைந்து எதிர்ப்போம், மதவெறியை ஒழிப்போம், மனித நேயம் வளர்ப்போம்!அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9457100.post-36406981867873789692008-09-05T10:19:00.000-07:002008-09-05T22:25:44.225-07:00குர்ஆனில் பிழைகண்ட அசத்தியவான்களுக்கு!இஸ்லாம் மார்க்கத்தின் இறைவேதம் திருக் ''குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்'' என்று சில பிற மத நண்பர்கள் திருக்குர்ஆனில் பிழையை (!?)க்கண்டு பிடித்துள்ளனர். திருக்குர்ஆனில் சில எழுத்துப் பிழைகள் உண்டு! அந்த எழுத்துப் பிழைகளை திருத்தம் செய்யாமலேயே கால காலமாக குர்ஆனில் நீடிப்பது அதிலும் திருத்தலும் செய்யக்கூடாது என்ற எண்ணத்திலேயே திருக்குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் தொடர்ந்து நீடித்து வருகிறது.<br /><br />திருக்குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் பற்றி வரும் பதிவுகளில் தெரிந்து கொள்வோம்.<br /><br />தற்போது, பிற மத நண்பர்கள் ''குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்'' என்று திருக்குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகளுக்கு சம்பந்தமில்லாதவற்றை குறிப்பிட்டுள்ளனர் அவற்றை இங்கு பார்ப்போம்,<br /><br /><br /><blockquote>குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்<br /><br />Scribal errors in the Qur'an<br /><br />கீழ் கண்டவற்றில் (1) என்று உள்ள பத்தியில்(Column) இருக்கும் வார்த்தைகள் இப்போது உள்ள குர்ஆனில் உள்ளவைகள் ஆகும். அதே போல (2) என்று உள்ள பத்தியில் இருக்கும் வார்த்தைகள் உண்மையில் அவ்வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்றும் மற்றும் அரபியில் அதனை எப்படி சரிபடுத்தினார்கள் எனபதையும் குறிக்கும்.<br />(2) (1) (2) (1)<br /><a href="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMFsE2rSNtI/AAAAAAAAAEQ/lAHXMA-DGLo/s1600-h/scribal.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5242590271888307922" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMFsE2rSNtI/AAAAAAAAAEQ/lAHXMA-DGLo/s320/scribal.gif" border="0" /></a><br /><br />மேலே குறிப்பிடப்பட்ட சில எழுத்து பிழைகள் பற்றி கீழ் கண்ட கட்டுரைகளில் விவாதிக்கப்படுகிறது.<br /><br />மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 11ல் உள்ள குர்ஆன் வசனம் 21:88 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 141, section 3 (a).<br /><br />மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 15ல் உள்ள குர்ஆன் வசனம் 27:21 பற்றிய<br />விவரங்கள் அறிய படிக்கவும்: page 96f, second last paragraph.<br /><br />மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 17ல் உள்ள குர்ஆன் வசனம் 5:29 ஐ பற்றிய<br />விவரங்கள் அறிய படிக்கவும்: page 18f and page 133, section (d).<br /><br />மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 19ல் உள்ள குர்ஆன் வசனம் 51:47 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: the middle of page 19 and the last half of page 125.<br /><br />மேலே உள்ள வார்த்தைகளில் எழுத்துபிழைகள்(Scribal Errors) உள்ளது என்று இபின் கல்தன்(Ibm Khaldun – Classical Scholar) என்பவர் அங்கீகரித்துள்ளார் மற்றும் இவைகள் பிரச்சனைகள்(Problems) என்று ஹமிதுல்லா(Hamidullah – Modern Scholar) என்ற அறிஞரும் அங்கீகரித்துள்ளார்.</blockquote><br /><br /><strong>பிற மத நண்பர்களே!</strong><br /><br />விமர்சனம் எதைப் பற்றி என்றாலும் அது அறிவுப்பூர்வமாக நன்கு நீங்கள் அறிந்ததை எடுத்து வைத்து விமர்சனம் செய்யுங்கள், அது வரவேற்கத்தக்கதாக அமையும். நீங்கள் அறியாதவற்றை இது இப்படித்தான் இருக்கும் என்று கோணலாக சிந்தித்து விமர்சிக்காதீர்கள், அது உங்களை கோமாளி பட்டியலில் சேர்த்துவிடும்.<br /><br /><strong>மொழி எழுத்துக்களின் உருமாற்றம்</strong><br /><br />மொழி எழுத்துக்கள் எல்லாக் காலங்களிலும் ஓர் உருவ அமைப்பில் இருந்ததில்லை.<br /><br />ஆங்கில எழுத்தின் உருமாற்றங்கள் மற்றும் எழுத்துக்களின் பிற்சேர்க்கையும் அறிய, <a href="https://mail.google.com/mail/?ui=2&ik=3b4c55c7be&realattid=f_fkqid4qs0&attid=0.1&disp=inline&view=att&th=11c31950c3885478">இங்கு சொடுக்கவும்.</a><br /><br />தமிழ் எழுத்துக்களின் உருமாற்றங்கள் படத்தில்:<br /><br /><a href="http://3.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMFunbH2jMI/AAAAAAAAAEY/_GBu3OE7bic/s1600-h/letters.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5242593064810613954" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMFunbH2jMI/AAAAAAAAAEY/_GBu3OE7bic/s320/letters.jpg" border="0" /></a><br /><br />பண்டைய தமிழ் எழுத்துக்கள் பண்டைய கால மக்களுக்க பழக்கமாகியிருந்தது. இன்று நமக்கு அது குழந்தையின் கிறுக்கலாகத் தோன்றுகிறது. நம் காலத்தில், ''இப்படிக்கு'' என்று எழுதும் போது ''க்கு'' என்பதை முன்பு சேர்த்து எழுதுவோம். ''யானை'' என்று எழுத இந்த ''னை'' யை எழுத மாட்டோம் யானை தும்பிக்கையைத் தூக்கிப் பிளிரும் ஸ்டைலில் யானையின் தும்பிக்கை வடிவோடு ''ன'' வை சேர்த்து எழுதுவோம். இந்த முறை தமிழ் உருமாற்ற எழுத்துக்கள் மறைந்து, எழுத்தில் புதிய உருமாற்றங்கள் தோன்றுகின்றன.<br /><br />இது எல்லா மொழி எழுத்துக்களுக்கும் உள்ள பொதுவான விதி. எழுத்துரு மாறும் போது சமூகம் அதை எதிர்ப்பதில்லை. பழையன கழிதல் புதியன புகுதல் என எழுத்துருவில் மட்டும் மாற்றங்கள் ஏற்படுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். இன்று நாம் எழுதும் தமிழ் எழுத்துக்கள் நாளை மாறலாம். எனவே எழுத்துக்களில் மாற்றம் ஏற்படுவது தவறைத் திருத்துவதல்ல, எழுத்துருவில் தோற்றுவிக்கும் முன்னேற்றம் என்று சொல்லலாம்.<br /><br />பிற மத நண்பர்கள் சுட்டியுள்ள படத்தைப் பார்க்கலாம்,<br /><br /><a href="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMFy5TK4_-I/AAAAAAAAAFQ/7lG0jXbSMek/s1600-h/nunji001.GIF"><img style="float:center; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMFy5TK4_-I/AAAAAAAAAFQ/7lG0jXbSMek/s320/nunji001.GIF" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5242597769960030178" /></a><br /><br /><blockquote>மேலே படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 11ல் உள்ள குர்ஆன் வசனம் 21:88 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 141, section 3 (a).</blockquote><br /><br />பிற மத நண்பர்கள் குறிப்பிட்டுள்ள, படத்தில் இடதுபுறம் 11 வது வரிசையில் நாம் கட்டம் வரைந்துள்ள வாசகத்தின் உச்சரிப்பு ''நுன்ஜி'' இரண்டு கட்டத்திலும் உள்ள வார்த்தை ''நுன்ஜி'' என்பது சிறிது அரபி அறிந்திருந்தாலும் புரிந்து கொள்ளலாம். இதற்கு பெரிய அரபுப்புலமை பெற்றிருக்க வேண்டும் என்று அவசியமில்லை.<br /><br /><strong><span style="font-size:130%;color:#3366ff;">ن+ن+ج+ي=ننجي</span></strong><br /><br />ந, ன, ண ஆகிய உச்சரிப்புக்கு அரபியில் <strong><span style="font-size:130%;color:#3366ff;">ن</span></strong> நூன் என்ற உச்சரிப்பில் இந்த ஓர் எழுத்து மட்டுமே உள்ளது. ந, நா, நி, நீ, ன, னா, ணா, னி, னீ, ணி, ணீ தமிழ் எழுத்துக்களில் நெடில் குறில்கள் இடும்போது எவ்வாறு உச்சரிப்புகள் மாறுகிறதோ அதுபோல், நூன் என்ற மேற்கண்ட அரபி எழுத்தில் தேவையான நெடில் குறில்களை இட்டால் ந, ந் நா, நி, நீ, நு. நூ என்ற உச்சிப்பைப் பெறலாம்.<br /><br />அரபு எழுத்துகளில் இரண்டு நூன், ஒரு ஜீம், ஒரு ய இந்த நான்கு எழுத்துக்களை நெடில் குறிகளுடன் எழுதினால் <strong><span style="font-size:130%;color:#3366ff;">نُنْجِي</span></strong> - <span style="color:#3366ff;"><strong>''நுன்ஜி''</strong></span> என்ற வாசிக்கலாம். நுன்ஜி என்ற பதங்கள் இடம்பெற்ற திருக்குர்ஆன் வசனங்கள் படத்தில்:<br /><br />திருக்குர்ஆன், 010:103வது வசனம்<br /><br /><a href="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMFv5sIj9pI/AAAAAAAAAEg/eD7zeq9o8AM/s1600-h/nunji1.jpg"><img style="float:center; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMFv5sIj9pI/AAAAAAAAAEg/eD7zeq9o8AM/s320/nunji1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5242594478126266002" /></a><br /><br />திருக்குர்ஆன் 019:072வது வசனம்<br /><br /><a href="http://2.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMFwFISWncI/AAAAAAAAAEo/W5HDJ4311FY/s1600-h/nunji2.jpg"><img style="float:center; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMFwFISWncI/AAAAAAAAAEo/W5HDJ4311FY/s320/nunji2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5242594674662088130" /></a><br /><br />திருக்குர்ஆன் 021:088வது வசனம்<br /><br /><a href="http://2.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMFwP_qvSmI/AAAAAAAAAEw/vIhvjq_2TvY/s1600-h/nunji3.jpg"><img style="float:center; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMFwP_qvSmI/AAAAAAAAAEw/vIhvjq_2TvY/s320/nunji3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5242594861327010402" /></a><br /><br />*****<br /><br /><a href="http://www.geocities.com/thiruquran/010.htm ">திருக்குர்ஆன் 010:103</a><br /><br /><a href="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMFxbV08O8I/AAAAAAAAAE4/i7PnbMjQfVQ/s1600-h/10_103.gif"><img style="float:center; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMFxbV08O8I/AAAAAAAAAE4/i7PnbMjQfVQ/s320/10_103.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5242596155765570498" /></a><br /><br /><a href="http://www.geocities.com/thiruquran/019.htm">திருக்குர்ஆன் 019:72</a><br /><br /><a href="http://3.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMFxkDNbsvI/AAAAAAAAAFA/E7me0-cFJ6s/s1600-h/19_72.gif"><img style="float:center; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMFxkDNbsvI/AAAAAAAAAFA/E7me0-cFJ6s/s320/19_72.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5242596305386844914" /></a><br /><br /><a href="http://www.geocities.com/thiruquran/021.htm">திருக்குர்ஆன் 021:088</a><br /><br /><a href="http://4.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMFxrPqALoI/AAAAAAAAAFI/C-zHVTk90as/s1600-h/21_88.gif"><img style="float:center; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_n-kMkF2IRsM/SMFxrPqALoI/AAAAAAAAAFI/C-zHVTk90as/s320/21_88.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5242596428986986114" /></a><br /><br />பிறமத நண்பர்கள் எடுத்துக் காட்டியுள்ள படத்தில் 11வது வரிசையில் நாம் வட்டமிட்ட இரண்டிலும் நுன்ஜி என்று சரியான அரபி எழுத்துக்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றுக்கொன்று எழுத்துருவின் மாடல் - ஸ்டைல் பழசே தவிர, புதிய மாடலில் - புதிய ஸ்டைலில் நுன்ஜி என்று குர்ஆன் வசனப் படங்களில் சிவப்பு, கருப்பு வண்ணத்தில் நாம் வட்டமிட்டுள்ள எழுத்துகளுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.<br /><br />இதை அறிவுக் குருடுத்தனமாக - //உண்மையில் அவ்வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்றும் மற்றும் அரபியில் அதனை எப்படி சரிபடுத்தினார்கள்// - என்று விமர்சிக்கும் சத்தியவான் என்ற பெயரில் கயமைத்தனம் செய்யும் அசத்தியவான்கள் உணர வேண்டும். இறை வேதத்தில் கைவரிசையைக் காட்டும் கயமைத்தனத்தை தங்கள் வேதத்தோடு நிறுத்திக் கொள்ளட்டும்.<br /><br /><strong>எங்கே பார்க்கலாம்,</strong><br /><br /><blockquote>மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 11ல் உள்ள குர்ஆன் வசனம் 21:88 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 141, section 3 (a).</blockquote><br /><br />உங்கள் படத்தில் 11ம் வரிசையில் உள்ள 021:088வது குர்ஆன் வசனத்தை அரபியில் ஏற்கெனவே இருந்ததை பிற்காலத்தில் என்ன சரிபடுத்தினார்கள்? என்பதை மக்களுக்கு விளக்கி, உங்களை யோக்கியர்கள் என்பதை நிறுவுங்கள் பார்க்கலாம். இல்லையேல் உங்களை இஸ்லாத்திற்கு எதிரான ''வைரஸ்'' பட்டியலில் எழுதிவிடுவார்கள்.<br /><br />மீண்டும்,<br /><br />உங்கள் அயோக்கிய அசத்தியவான்கள் குறித்து அடுத்த பகுதியில்...<br /><br />அன்புடன்,<br />அபூ முஹைஅபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9457100.post-36045795848625812672008-09-01T13:22:00.000-07:002008-09-21T03:59:22.112-07:00தினமலரெனும் சாக்கடை<blockquote>உலக முஸ்லிம்களின் புனித மாதங்களில் ரமதான் மாதமும் ஒன்று. வைகறைப் பொழுதிலிருந்து பகல் முழுவதும் மாலை சூரியன் மறையும் வரை சுமார் 14 மணி நேரம் உண்ணாமல், பருகாமல் தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் இன்னும் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து உண்ணா நோன்பிருந்து முஸ்லிம்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்.<br /><br />இவ்வாண்டு ரமதான் மாத துவக்கத்தில், இஸ்லாத்திற்கு எதிரான விரோதப் போக்கில் முழு வீச்சாக ஈடுபடும் பார்ப்பனீய சண்டாள தினமலர் எனும் கழிசடை நாளேடு முஸ்லிம்களை பயங்கரவாதியாக சித்திரம் வரைந்து தமது பாஸிச கொள்கையை வெளிப்படுத்தியுள்ளது.<br /> <br />இந்தக் கழிசடை நாளேட்டின் செயல்பாடுகள் நமக்கு பன்றிகளை நினைவுபடுத்துகிறது. எவ்வளவு நல்ல நீர் இருந்தாலும் துர் நாற்றம் நிறைந்த சாக்கடையில் புரண்டு சுகம் அனுபவிப்பதே பன்றியின் குணமாகும். இன்று திருந்திவிடும், நாளை திருந்தும் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் சாக்கடையில் புரளும் பன்றியின் இயல்பு மாற்றத்திற்குரியதல்ல என்பது போல் தினமலரெனும் கழிசடை நாளேட்டின் இயல்பும் மாற்றத்திற்குரியதல்ல.<br /><br />எவரும் தீவிரவாதிகளாகப் பிறப்பதில்லை, தினமலர் போன்ற கழிசடை பார்ப்பனீயர்களால் தீவிரவாதிகள் உருவாக்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் குறித்த செய்திகளை தவறாது திரித்து எழுதும் இந்தக் கழிசடை நாளேடுக் கும்பலுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்கிறேன்.<br /><br />- அபூ முஹை </blockquote><br /><br /><strong>மீள் பதிவு,</strong><br /><br />உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் புனிதமிகு ரமலான் மாதம் தொடங்கியிருக்கும் இன்று, மத வேறுபாடு பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களும் முஸ்லீம்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டிருக்கும் இந்த நல்ல வேலையில், பார்ப்பன வெறி பிடித்த தினமலர் நாளிதழ் மட்டும் தனது முஸ்லீம் விரோத போக்கை சற்றும் சளைக்காமல் மேற்கொண்டுள்ளது. பல இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் கூட பெயரளவுக்காவது இந்த ரமளான் மாதம் தொடங்கியதன் நிமித்தம் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்திருக்கும் சமயத்தில் தினமலர் மட்டும் தனது விஷமத்தனத்தை சில உள்நோக்கங்களுடன் மேற்கொண்டுள்ளது என்பது தான் மிகவும் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. <br /><br />குறிப்பாக பொது மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை ஊட்ட வேண்டும் என்ற ஒரு பாசிச எண்ணத்துடன் இந்த நேரத்தில் இந்த விஷமக் கார்ட்டூனை வெளியிட்டு தனது அரிப்பைத் தீர்த்துக்கொண்டுள்ளது. <br /><br />இன்று வேலூரிலிருந்து வெளிவந்த தினமலர் நாளிதழின் இலவச பதிப்பான கம்ப்யூட்டர் மலரின் 12ம் பக்கத்தில், வேண்டும் என்றே கட்டுரைக்கும் தலைப்பிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல், உள்நோக்கத்துடன் 'சினிமா பார்க்க ஒரு வெப்சைட்' என்று தலைப்பிட்டு பல சர்ச்சைகளை ஏற்படுத்திய ஒரு கார்ட்டூனையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஒரு முஸ்லீமின் தலைப்பாகையின் மேல் வெடிகுண்டின் திரி பற்ற ஆரம்பிப்து போல் உள்ள அந்த சர்ச்சைக்குரிய கார்ட்டூனை போட்டு தனது முஸ்லீம் விரோத சிந்தனையை இணம் காட்டியுள்ளது. <br /><br />இப்பொழுது ஒரிசாவில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வ வெறியர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் கொலை வெறித்தாக்குதல்களை மறைத்து, அதை விட்டும் பொது மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் நோக்கத்துடன் இந்த கார்ட்டூன் வெளியிடப்பட்டிருப்பதாக பல சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். <br /><br />ஊடகங்கள் தங்கள் கைவசம் இருக்கின்றது என்ற காரணத்திற்காக எதை வேண்டுமானாலும் எழுதி வெளியிடலாம் என்ற துரோக எண்ணத்துடன் களம் இறங்கி இருக்கும் தினமலர் நாழிதளுக்கு எதிராக நாம் ஒவ்வொருவரும் எழுதுகோல் ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றோம் என்பதை உணர வேண்டும். இனிமேலும் உண்டோம் உறங்கினோம் என்றில்லாமல் நம்மால் இயன்ற அளவு இந்த மீடியாக்களின் பக்கம் கவனம் செலுத்தவேண்டும். நாம் ஒவ்வொருவரும் நமது முழுபலத்தையும் பிரயோகித்து இந்த மீடியாக்களின் பக்கம் கவனம் செலுத்தினால் வெற்றி வெகுதூரத்தில் இல்லை... என்பதை புரிந்து செயல்படுவோம்.<br /><br />நன்றி: <a href="http://adiraixpress.blogspot.com/2008/09/blog-post.html">அதிரை எக்ஸ்பிரஸ்</a>அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-9457100.post-15872058605729937712008-08-19T09:38:00.000-07:002008-08-19T10:05:35.039-07:00தகாதவர்கள் கையில் ஊடகங்கள்!<strong>ஊடகங்களில் தொடரும் தனிமனிதத் தாக்குதல்கள்</strong><br /><br />செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008<br /><br />ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றத் தக்கவை ஊடகங்கள் என்றால் மிகையில்லை. ஆனால், அவையே தகாதவர்களின் கரங்களில் சிக்கும்போது விளைவு படுமோசமடைவதையும் மறுப்பதற்கில்லை.<br /><br />ஒரு சமுதாயம் முன்னேற்றம் பெறுவதற்கும் தலைநிமிர்ந்து நடப்பதற்கும் அச்சமுதாயத்தின் இளவல்கள்தாம் பெரும் பங்காற்றக் கூடியவர்கள். அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்தினால் சாதித்துக் காட்டுவார்கள். அவர்களை நெறிப் படுத்தத் தவறினால் தங்களுக்கும் தம் தலைவர்களுக்கும் தம் சமுதாயத்திற்கும் அவர்களால் விளையும் தீங்குகள், அவமானங்கள் எல்லை மீறிவிடும்.<br /><br />காட்டுப்பாடற்ற இணைய வசதியான மின்னஞ்சல் என்ற ஊடகம் இயக்க வெறிபிடித்த இளைஞர்களிடம் சிக்கியபோது தம்மை மறந்தனர்; தரம் தாழ்ந்தனர். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் சில முஸ்லிம் இயக்கங்களின் இளவல்களின் கரங்களில் மின்னஞ்சல் வசதி சிக்கிப் படாத பாடுபட்டது. மாற்றி மாற்றித் தூற்றிக் கொள்வற்கும் அவற்றைப் பெறுபவரது அனுமதியின்றிப் பலருக்கும் அனுப்பி வைப்பதுமாக ஃபித்னாக்களைப் பரப்புவதில் இயக்க இளவல்கள் படு உற்சாகத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.<br /><br />அப்போது நமக்குக் "குரங்கு கையில் பூமாலை" பழமொழிதான் நினைவுக்கு வந்தது.<br /><br />நிலைமை மாறுதலடைந்தது; அதாவது மிக மோசமடைந்தது! இலவச வலைப்பூக்கள் இணையத்தில் கிடைக்கத் தொடங்கியதிலிருந்து இளவல்கள் ஆளுக்கொன்றாய் எடுத்துக் கொண்டு, ஷைத்தானின் குணங்களை ஆவணப் படுத்தத் தொடங்கினர்.<br /><br />இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கும் கொள்கை விளக்கங்களுக்கும் அருமையாகப் பயன் படத்தக்க வகையில் அல்லாஹ் வழங்கியுள்ள அற்புதமான ஊடகங்களான மின்னஞ்சலையும் வலைப்பூக்களையும் "முகத்திரையைக் கிழிப்போம்", "தோலுரித்துக் காட்டுவோம்", "வேஷத்தைக் கலைப்போம்" போன்ற கொள்கை(?) முழக்கங்களோடு கட்டற்ற இணைய வசதியை எதிர்க் கருத்துக் கொண்டவர்களை நோக்கி இளவல்கள் திருப்பினர். தாக்குதல்-எதிர்த் தாக்குதல் ஆகிய பாவங்களில் சிந்தனையைச் செலவு செய்து, தங்களது பொன்னான நேரத்தை வீணடிப்பதில் வீறு கொண்டு எழுந்தனர்.<br /><br />"இளவல்களின் ஆர்வக் கோளாறுக்குத் தலைவர்கள் என்ன செய்வார்கள்?" என்று நாம் நல்லெண்ணம் கொண்டிருந்ததைக் கடந்த 17ஆம் தேதி (17.08.2008) இரவு விண் தொலைக்காட்சி நிகழ்ச்சி உடைத்துப் போட்டது.<br /><br />ரமளான் பிறை, ஈதுப் பெருநாள் ஆகியவற்றுள் மாற்றுக் கருத்துகள் கொண்டிருக்கும் ஓர் அமைப்பின் நிர்வாகிகளை, "இறையச்சம் அற்றவர்கள்", "கருத்தில் தெளிவில்லாதவர்கள்", "தனித்துக் காட்டுவதற்காகத் தவறுகளைச் செய்யச் கூடியவர்கள்" என்றெல்லாம் அவைப் பண்பாடுகளை மறந்து நிகழ்ச்சி நடத்தியவர்கள் திட்டித் தீர்த்தது மட்டுமின்றி, எதிர்க் கருத்துக் கொண்டவர்களின் உள்ளங்களுக்குள் ஊடுருவிப் பார்த்ததுபோல் "உள்நேக்கம் தெரிகிறது" என்றார்கள்.<br /><br />உதிரத்தை வியர்வையாக்கிக் காசு சம்பாதித்து அனுப்புபவனிடம் ஓயாமல் நிதி வேண்டிக் கோரிக்கை வைப்பவர்கள், அந்தக் காசு எதற்காகச் செலவிடப் படவேண்டும் என்பதைச் சற்றே சிந்தித்துப் பார்த்து, தங்களது கருத்துகளைச் சான்றுகளின் அடிப்படையில் வலியுறுத்துவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்துகளில் வலுவில்லை என்றால், அதையும் - அதாவது கருத்தை மட்டும் - விமர்சனம் செய்ய வேண்டும்.<br /><br />அதை விடுத்துத் தனிநபர் தாக்குதலைத் தொலக்காட்சியில் நடத்தித் தங்கள் இளவல்களுக்குப் போலி உற்சாகம் அளிக்க வேண்டாம் என்பது சம்பந்தப் பட்ட இயக்கத் தலைவர்களுக்கு நாம் முன்வைக்கும் வேண்டுகோளாகும்.<br /><br />அமைப்புகளுக்கு நிதியுதவி செய்பவர்கள் தஃவாவுக்கென்று தருகிறார்கள்; ஒருவரை ஒருவர் தரம் தாழ்ந்து தாக்கிக் கொள்வதற்கல்ல என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும் என்பதை இங்கு அழுத்தமாகப் பதிவு செய்கிறோம். தலைவர்கள் பண்பாட்டைச் சிறிது கைவிட்டால், இளவல்கள் முழுவதுமாகக் கைவிடுவர் என்பதையும் நினைவுறுத்துகிறோம்.<br /><br />நல்லதை எடுத்துச் சொல்வது மட்டுமே நமது கடமை; எடுப்பதும் விடுப்பதும் அவரவர் உரிமை.<br /><br />அனைத்து நிகழ்வுகளையும் தீர்ப்புக்காகக் கணக்கெடுத்து வைப்பது அல்லாஹ்வின் தனியுரிமை. இதை உணர்ந்து செயல் பட்டால் அனைவர்க்கும் பெருமை!<br /><br /><strong><span style="color:#3366ff;">"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதியை நிலைநாட்டுவதற்கு நீங்கள் சாட்சியாளர்களாக இருங்கள். ஒரு கூட்டத்தார் மீது உங்களுக்கிருக்கும் வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்டக் கூடாது. நீதி செய்வீர்; அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள்! நீங்கள் செய்பவை அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிந்தவனாவான்"</span></strong> (அல்-குர் ஆன் 005:008).<br /><br />நன்றி: <a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1000&Itemid=278">சத்தியமார்க்கம்.காம்</a>அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9457100.post-12236179842351420252008-08-11T13:12:00.000-07:002008-08-11T13:36:42.546-07:00இஸ்லாத்தை மறைத்தல்இஸ்லாம் மறைக்கப்படாத, மறைக்கக்கூடாத, மறைக்க முடியாத மார்க்கம். இறுதி வேதம் திருக்குர்ஆன் மற்றும் குர்ஆனுக்கு விளக்கவுரையாக இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மறைக்கப்படாத வாழ்க்கை குறித்த அறிவிப்புகளும் எவரும் எளிதில் நெருங்கும் அளவுக்குத் திறந்த நூல்களாகவுள்ளது. இணைய வசதி உள்ளவர் விரல் நுனியின் சொடுக்கில் தேவைப்படும் திருக்குர்ஆன் வசனங்களையும், நபிவழி அறிவிப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.<br /><br />இறை மார்க்கம் இஸ்லாத்தை முஸ்லிம்கள் மறைத்தார்கள் என்று கூறுவது ஒன்றும் அறியா அப்பாவித்தனமாகும். இவ்வளவு வெளிப்படையான மார்க்கத்தை மறைத்திடவும் முடியாது. ஒன்றை மறைத்தல் என்று சொன்னால் அது யாருக்கும் கிடைக்கவேக்கூடாது. மறைத்து விட்டார்கள் என்று சொல்பவர்கள் மறைத்தது கிடைக்கப் பெற்றதால் தான் மறைத்து விட்டார்கள் என்று சொல்ல முடியும். எனவே மக்களின் பகிரங்கப் பார்வையில் உள்ளதை யாரும் மறைக்க முயலமாட்டார்கள்.<br /><br />எவரும் எளிதில் அணுகும் வகையில் வெளிப்படையாக இருக்கும் இஸ்லாத்தை, முஸ்லிம்கள் மறைத்து விட்டனர் என்ற பிற மத நண்பர்களின் குற்றச்சாட்டு தவறானது!<br /><br /><br /><blockquote>(அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)<br /><br />முன்னுரை: இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று முஸ்லீம்கள் ஏகமாக சொல்கிறார்கள். ஆனால், முகமது மற்ற நாட்டு மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களே போதும், நமக்கு இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதை அறிந்துக்கொள்வதற்கு. மற்ற நாட்டு மன்னர்களுக்கு முகமது கடிதங்கள் மூலம் அழைப்பு விடுத்தார், அபுமுஹை அவர்கள் அக்கடிதங்களின் தமிழ் மொழியாக்கத்தை பதித்துள்ளார். இக்கடிதங்களை ரஹீக் என்ற புத்தகத்திலிருந்து பதித்ததாக, அபுமுஹை அவர்கள் குறிப்பு எழுதியுள்ளார்கள்.<br /><br />இக்கட்டுரையில் நாம் கீழ் கண்ட இரண்டு விவரங்களைக் காணப்போகிறோம்.<br /><br />1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்.<br /><br />2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா? </blockquote><br /><br />(இஸ்லாம் வளால் பரவிய மார்க்கமா? என்பதுப் பற்றி அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.)<br /><br /><strong>மார்க்கத்தை மறைத்தல்</strong><br /><br />இஸ்லாத்தை மறைப்பது குறித்து இஸ்லாம் வன்மையாகக் கண்டித்துள்ளது. முஸ்லிம்கள் சத்தியத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை.<br /><br /><span style="color:#3366ff;">''அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.''</span> (திருக்குர்ஆன், 002:042)<br /> <br /><span style="color:#3366ff;">''நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் உண்மையுடன் உம்மை நாம் அனுப்பியுள்ளோம். நரகவாசிகளைப் பற்றி உம்மிடம் கேட்கப்படாது''</span> (திருக்குர்ஆன், 002:119)<br /><br />இறைவன் உண்மையுடன் அனுப்பிய இஸ்லாமியத் தூதுத்துவத்தை முஸ்லிம்கள் மற்றவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.<br /><br />என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை. எவன் என் மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும். (புகாரி)<br /><br />உண்மையை மறைக்கக்கூடாது!<br /> <br />உண்மையுடன் பொய்களையும் சேர்க்கக்கூடாது!<br /> <br />உண்மையை எடுத்துக்கூறி மக்களை எச்சரிக்க வேண்டும்!<br /> <br />இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களைக் குறித்து அறிந்த ஒரேயொரு செய்தியையும் மற்றவருக்கு எடுத்துச் சொல்லிட வேண்டும்!<br /><br />முக்கிய கவனத்திற்கு: நபியவர்கள் கூறாததை கூறியதாகவும், கூறியதை கூறவில்லை என்றும் நபி (ஸல்) அவர்களின் மீது வேண்டுமென்றே பொய்யுரைப்பவன் நரகத்தில் தன் இருப்பிடத்தைச் சித்தப்படுத்திக்கொள்கிறான்! என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை முன் வைத்துள்ளது இஸ்லாம்.<br /><br />எதை வேண்டுமென்றே மறைக்கக்கூடாது என்று இஸ்லாம் எச்சரிக்கின்றதோ, அதைக் குறித்து ''இஸ்லாமிய அறிஞர்கள் வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்தார்கள்'' என்ற பிற மத நண்பர்களின் விமர்சனம் மிகவும் பரிதாபத்திற்குரியதாகவுள்ளது.<br /><br />ஓமன் நாட்டு அரசனுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-8<br /><br />அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, அல் ஜுலந்தாவின் மகன்களான ஜைஃபர் மற்றும் அப்துக்கு எழுதுவது. நேர்வழியை பின்பற்றுபவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! நான் உங்களிருவருக்கும் இஸ்லாமிய அழைப்பு விடுக்கின்றேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள். நான் மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். உயிருடன் இருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்கும், அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு நிச்சயம் வேதனை உண்டு என்பதை அறிவிப்பதற்கும் அல்லாஹ் என்னைத் தூதராக அனுப்பியிருக்கின்றான். நீங்கள் இருவரும் <strong>இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை.</strong> எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.''<br /><br />ஓமன் நாட்டு மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதத்தின் மேற்கண்ட தமிழ் மொழிபெயர்ப்பு மூலமொழியிலிருந்து நேரடியாக தமிழுக்கு மொழிபெயர்த்தது. தமிழில் மொழிபெயர்க்கும் போது இஸ்லாமிய அறிஞர்கள் வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்தார்கள் என்று பிற மத நண்பர்கள் விமர்சிக்கும் நபியவர்களின் கடிதம் இதுதான்.<br /><br />இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்தார்கள் என்று பிற மத நண்பர்கள் குற்றப்படுத்துவது மூலமொழி அரபியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து, பின்னர் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குத் தழுவியதாகும். ஆங்கிலமும், தமிழும் வருமாறு<br /><br />//ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம்<br /><br />"Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom."<br /><br />ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம் - தமிழாக்கம்<br /><br />நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்! இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன்(தீர்க்கதரிசி) ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை(POWER) உனக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உன் வலிமை(POWER) அழிக்கப்படும். என் குதிரைகள் உன் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உன் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்.//<br /><br />பிற மத நண்பர்கள் ஆங்கிலத்தை தமிழில் மொழிபெயர்த்தது சரியா? என்பது வாதமல்ல. ஏனெனில் நபியவர்கள் ஆங்கிலத்தில் கடிதம் எழுதி அனுப்பவில்லை! ஆங்கிலம் ஒரு மொழிபெயர்ப்புதானே தவிர, ஆங்கிலம் மூலமொழி அல்ல. அரபியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திருந்து தமிழ், இவ்வாறு மொழிபெயர்ப்பிலிருந்து மொழிபெயர்க்கும்போது மூலமொழியில் சொல்லப்பட்ட கருத்தில் சிதைவு ஏற்படும்.<br /><br />அதற்காக மொழிபெயர்ப்பு கூடாது என்று நாம் சொல்லவில்லை. விவாதம் என்று வந்தால் மொழிபெயர்ப்பில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளில் ''எது சரி?'' என்பதை மூலமொழியோடு ஒப்பிடுவதே முறையாகும். அண்டை நாட்டு அரசர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதிய அரபிமொழி கடிதத்தை இஸ்லாமிய அறிஞர்கள் தமிழுக்குத் தழுவிய <a href="http://abumuhai.blogspot.com/2008/07/8.html ">கடிதமும்,</a> இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்கள் மூன்றாம் மொழி தமிழுக்குத் தழுவிய <a href="http://abumuhai.blogspot.com/2008/07/blog-post_22.html">கடிதமும்</a> மேலே இடம் பெற்றுள்ளன.<br /><br />இங்கு,<br /><br />''இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்க்கும் போது வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து விட்டார்கள்'' என்று கூறும் பிற மத நண்பர்கள், தங்கள் விமர்சனத்தை உண்மைப்படுத்த, இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்த வார்த்தைகள் எது? என்பதை மூலமொழியிருந்து எடுத்துக்காட்ட கடமைப்பட்டுள்ளனர்.<br /><br />பிற மத நண்பர்களின் இன்னொரு கேள்வி?<br /><br /><blockquote>முடிவுரை: இஸ்லாமிய நண்பர் அபூமுஹை அவர்களுக்கு, நீங்கள் எழுதிய கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்து எழுதினீர்கள் என்று சொல்லியுள்ளீர்கள். நான் கேட்க விரும்பும் கேள்வி: அப்புத்தகத்திலே இப்படி உண்மையை மறைத்து இஸ்லாம் ஒரு அமைதி மதம் போல காட்டித் தான் எழுதியிருந்ததா? அல்லது நீங்கள் அதனை மறைத்து எழுதினீர்களா?</blockquote><br /><br />பிற மத நண்பர்களே!<br /><br />கேள்வி எழுப்பியதோடு ''மறைத்த உண்மை எது?'' என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருக்கலாமே!<br /><br />நன்றி!<br /><br />அன்புடன்,<br />அபூ முஹைஅபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9457100.post-5604141047527352272008-07-31T03:23:00.000-07:002008-07-31T09:02:13.545-07:00யஹ்யாவும், யோவானும் ஒரே பெயரா?இஸ்லாம் மார்க்கத்தின் இறைவேதம் திருக்குர்ஆனில் முரண்பாடுகளை ஆய்வுக்குட்படுத்தும் சில பிற மத நண்பர்கள். திருக்குஆனில் சரித்திரத் தவறைக் கண்டு பிடித்து விட்டதாகக் கூறி சில ஆவணங்களைப் பதிவு செய்துள்ளனர். திருக்குர்ஆனை அருளிய அகிலத்தின் இறைவனை பொய்பித்து விட வேண்டும் என்ற தணியாத தாகத்தில் ஆய்வறிவையும் இழக்கத் தயாராகி விட்டனரோ என்று எண்ணுமளவுக்கு திருக்குர்ஆனில் பிழை தேடும் இவர்களின் ஆய்வு மிகப் பலவீனமாக உள்ளது.<br /><br />திருக்குர்ஆனில் பிற மத நண்பர்கள் கண்டுபிடித்த சரித்திர தவறு !?<br /><br /><blockquote>குர்ஆனின் சரித்திர தவறு: யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)<br /><br />முன்னுரை: இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட குர்ஆனின் வசனங்கள் பற்றி நாம் சிந்தித்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறோம். குர்ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 1ஐ தொடர்ந்து, இப்போது இரண்டாம் பாகமாக, அல்லா செய்த ஒரு சரித்திர தவறை காணப்போகிறோம்.<br /><br />குர்ஆன் 19:7ல் அல்லா சொல்கிறார்:<br /><br />குர்ஆன் 19:7<br /><br />'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்).<br /><br />யஹ்யா ( யோவான் or John ) என்ற பெயர் கொண்ட நபர்களை அல்லா, யோவான் ஸ்நானனுக்கு முன்பு ஒருவரையும் உருவாக்கவில்லையாம். அதாவது, யோவான் என்ற பெயர் கொண்ட ஒருவரும் யோவானுக்கு முன்பு வாழவில்லையாம். இப்படி அல்லா சொல்வதினால், அவருக்கு சரித்திரம் பற்றிய விவரம் தெரியவில்லை என்று<br />புலனாகிறது. சரித்திரத்தை நாம் புரட்டிப்பார்த்தாலும், மற்றும் பைபிளின் பழையை ஏற்பாட்டை புரட்டிப்பார்த்தாலும், யோவான் (John) என்ற பெயர் கொண்டவர்கள் அனேகர் இருப்பதாக நாம் கண்டுக்கொள்ளமுடியும். குர்ஆனில் உள்ள பல பிழைகளில் இதுவும் ஒன்று.</blockquote><br /><br />(இங்கு பிற மத நண்பர்கள் விமர்சிக்கும் கரு இதுதான். இத்துடன் பிற மத நண்பர்கள் இணைத்துள்ள கி.மு சான்றுகள் சில கீழே இடம்பெறும்)<br /><br />முக்கியமான ஓர் அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இயேசு தான் ஈஸா என்று முஸ்லிம்களும், முஸ்லிம் அறிஞர்களும் கூறி வந்தாலும், இயேசு என்ற பெயர் தான் ஈஸா என்பதை திருக்குர்ஆன் ஒப்புக் கொள்ளவில்லை.<br /><br />''மர்யமின் மகன் ஈஸா'' என்றே திருக்குர்ஆனும் நபிமொழிகளும் குறிப்பிடுகின்றன. மர்யம், ஈஸா இது இடுகுறிப் பெயர்கள். இன்னார் மகன் இன்னார் என ஒருவரை அடையாளப்படுத்துவதற்காக அவர் குழந்தையாக இருக்கும் பொழுது சூட்டப்படும் பெயராகும். இந்த இடுகுறிப் பெயரை எந்த மொழியில் எழுதினாலும் மர்யம், ஈஸா என்றே<br />எழுத வேண்டும். இல்லையேல் ஆவணங்கள் குழப்பமாகிவிடும்.<br /><br /><span style="color:#3366ff;"><strong>''நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்''</strong></span> (திருக்குர்ஆன், 003:036)<br /><br />குழந்தை பிறந்ததும் குழந்தையின் தாயாரால் மர்யம் என்று பெயரிடப்படுகிறது.<br /><br /><span style="color:#3366ff;"><strong>''அவரது பெயர் மர்யமின் மகன் ஈஸா என்பதாகும்''</strong></span> (திருக்குர்ஆன், 003: 045)<br /><br />தாயின் கருவறையில் ஜனிக்கும் முன்னரே இறைவனால் ஈஸா எனப் பெயரிடப்பட்டவர்.<br /><br />(சற்று வித்தியாசத்துடன், 'அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக' என்று பைபிள் கூறுகிறது)<br /><br />எல்லாக் குழந்தைகளுக்கும் பெயரிடப்படுவது போல் குழந்தையை அடையாளப்படுத்துவதற்காக மர்யம், ஈஸா என பேரிடப்பட்டார்கள். பெயரின் உச்சரிப்பு மர்யம், ஈஸா என்பதில் திருக்குர்ஆன் பார்வையில் எந்த சந்தேகமும் இல்லை. முந்தைய வேதங்களும் இறைவன் அருளியது என்ற அடிப்படையில் முந்தைய வேதத்தில் மரியம், மரியமின் மகன் ஈஸா என்று பெயரிட்டபடியே திருக்குர்ஆனும் மர்யம், மரியமின் மகன் ஈஸா என்று அழைக்கிறது.<br /><br />இறைவன் இட்ட ஈஸா என்ற பெயர் பின்னர் இயேசு Jesus என மருவியது. இது ஈஸா என்ற பெயருக்கு மட்டும் ஏற்பட்டதில்லை. (இப்ராஹீம் ஆப்ராஹாம். சுலைமான் சாலமோன் என) பல தீர்க்கத்தரிசிகளின் பெயர்களும் வேறு பெயராக மருவியுள்ளது. (இல்லை என்று மறுப்பவர்கள் தங்கள் வேதத்தின் மூலமொழியிருந்து நிரூபிக்கட்டும்)<br /><br />ஓர் அசல் பெயர் வேறு பெயராக மருவுவதற்கான உதாரணத்தை பிற மத நண்பர்களின் எழுத்திலிருந்தே எடுத்துச் சொல்ல முடியும்: அல்லாஹ் என்பதை இவர்கள் அல்லா என்றும் முஹம்மது என்பதை முகமது என்றும் குறிப்பிட்டு எழுதுகின்றனர். 'ஹ' வடமொழி எழுத்து என்பதால் அதைத் தவிர்க்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. வடமொழி எழுத்தாக இருந்தும் கிறிஸ்து, ஸ்தானம் என்று குறிப்பிட 'ஸ' எழுத்தை இவர்கள் எழுதுகின்றனர். அல்லாஹ், முஹம்மது இந்தப் பெயர்களை எப்படிச் சிதைத்தாலும் ஒப்பிட்டுப் பார்க்க மூலமொழி இருப்பதால் எதிர்காலத்தில் இவர்கள் எழுதுவது போல் அப்படியே மருவி விடாது. ''யஹ்யா'' என்ற பெயரும் இப்படித்தான்<br />மருவியுள்ளது வேறு வகையில்.<br /><br /><span style="color:#3366ff;"><strong>'ஸகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை"</strong></span> (என்று இறைவன் கூறினான்). (திருக்குர்ஆன், 019:007)<br /><br />கருவறையில் ஜனிப்பதற்கு முன்னரே மர்யமின் மகன் ஈஸாவுக்கு பெயரிடப்பட்டது போல் ஸக்கரிய்யாவின் மகனும் கருவறையில் ஜனிப்பதற்கு முன்னரே இறைவனால் ''யஹ்யா'' என்று பெயரிடப்படுகிறார். இதற்கு முன்னர் யஹ்யா என்ற பெயரிட்டவரை நாம் ஏற்படுத்தவில்லை என்றும் மேலதிகத் தகவலை இறைவன் இங்கு குறிப்பிடுகிறான்.<br />யஹ்யா என்ற பெயருடையவரை இதற்கு முன் நாம் ஏற்படுத்தவில்லை என இறைவன் கூறுவது, முழு மனித குலத்திலும் இதற்கு முன்னர் யஹ்யா என்ற பெயருடையவர் இருந்ததில்லை என்பதைக் குறிக்கின்றதா? அல்லது இதற்கு முன்னர் யஹ்யா என்ற பெயரில் தீர்க்கத்தரிசி யாரையும் நாம் ஏற்படுத்தவில்லை என்று குறிப்பிடுகின்றதா? இதற்கு ஆலு இம்ரான் - 003வது அத்தியாயத்தில் விளக்கம் கிடைக்கிறது.<br /><br /><span style="color:#3366ff;"><strong>அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து ''நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகன்) பற்றி நற்செய்தி கூறுகிறான். அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்'' எனக் கூறினர்.</strong></span> (திருக்குர்ஆன், 003:039)<br /><br />ஸகரிய்யாவின் மைந்தர் கருவறையின் ஜனனத்திற்கு முன்பே யஹ்யா என்று பெயரிடப்பட்டு, நபியாகவும் நியமிக்கப்படுகிறார். என இறைவாக்கு நற்செய்தி கூறுவதிலிருந்து, இதற்கு முந்தைய நபிமார்களில் யஹ்யா என்ற பெயரில் தீர்க்கத்தரியை நாம் ஏற்படுத்தவில்லை என்பதே இறைமொழியின் கருத்தாகும். எனவே ''இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" என்ற திருக்குர்ஆன் வசனம் தவறு என்று எதிர் கொள்பவர்கள், ஸகரிய்யாவுக்கு முந்தைய சரித்திரத்தில் யஹ்யா என்ற பெயரில் நபி இருந்ததை நிரூபித்தாக வேண்டும்.<br /><br />முற்காலத்தில் ''யஹ்யா'' என்ற பெயரில் உள்ளவர்கள் என்று சரித்திரச் சான்றுகள் சிலவற்றை பிற மத நண்பர்கள் வைத்துள்ளனர்.<br /><br /><br /><blockquote>சரித்திரத்தில் யோவான்(JOHN) பெயர்களைக் கொண்ட நபர்கள்<br /><br />1) ஜான் ஹிர்கானஸ் John Hyrcanus (Yohanan Girhan):<br /><br />இவர் கி.மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த "ஹாஸ்மொனியன்" நாட்டு அரசனாவார். ஆட்சிகாலம் கி.மு. 134 - 104, மரித்த ஆண்டு : கி.மு. 104. மேலும் விவரங்களுக்கு : பார்க்க John Hyrcanus - Wikipedia John Hyrcanus- Brittanica John Hyrcanus - Jewish Encyclopedia<br /><br />2) "ஜான்" எஸ்ஸன் - John Essenes:<br /><br />ஒரு கலகம் செய்த குழுவிற்கு தலைவராக இருந்த "ஜான்" எஸ்ஸன் என்வரைப்பற்றி ஜொஸெபாஸ் சொல்கிறார். "ஜான்" எஸ்ஸன் கி.மு. வில் வாழ்ந்தவர். பார்க்க: "ஜான்" எஸ்ஸன் - John Essenes<br /><br />3) 1 மக்காபீஸ் 2:1<br /><br />மக்காபீஸ் என்ற நூல் ( கி.மு 100) சொல்கிறது. மத்ததியாஸ் "ஜானின்" மகன், ஜான் சிமியோனின் மகன். மற்றும் அதிகாரம் 2 வசனம் 2 சொல்கிறது, மத்ததியாஸுக்கு "ஜான்" என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான் என்று. பார்க்க: 1 மக்காபீஸ் 2:1 :மற்றும் 1 மக்காபீஸ் 16:19 ல் கூட ஒரு முறை "ஜான்" என்ற ஒருவரைப்பற்றி சொல்கிறது. பார்க்க : 1மக்காபீஸ் 16:19<br /><br />மேல் சொல்லப்பட்ட எல்லா "ஜான்" களும், பைபிளின் யோவான் ஸ்நானகனுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br />யோவானுக்கு முன்பு யோவான் என்ற பெயர் கொண்ட பழைய ஏற்பாட்டு நபர்கள்:<br />இந்தப்பெயர் "யோகனான்"(எபிரேய மொழியில்-"யோகனான்") என்று பல முறை (27 க்கு அதிகமாக) பழைய ஏற்பாட்டில் வருகிறது. ( பார்க்க 2 இராஜா 25:23, 1 நாளா 3:15,24, 6:9,10, 12:4, 12:12, 26:3, 2 நாளா 17:15, 23:1, 28:12, எஸ்றா 8:12, 10:6, 10:28, நெகே 6:18, 12:13, 12:22,23,42, எரே 40:8 இன்னும் பல இடங்களில்.)</blockquote><br /><br />பிற மத நண்பர்களின் இந்த விமர்சனம், திருக்குர்ஆனில் ''யஹ்யா'' குறித்து இடம் பெற்றுள்ள சிறு வசனத்தையும் இவர்கள் முறையாக விளங்கிக் கொள்ளவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. வசனத்தை விளங்காமலேயே தீர்க்கத்தரிசி அல்லாத மற்றவர்கள் பெயரையும் இங்கு குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத<br />நண்பர்களின் இந்த அநேக சான்றுகளில் எங்கும் ''யாஹ்யா'' என்ற உச்சரிப்பில் உள்ள இடுகுறிப் பெயர் உள்ளதா? என்பது வாசகர்களின் கவனத்திற்கு.<br /><br /><strong>யஹ்யா, யோவான்</strong><br /><br />பைபிள் புதிய ஏற்பாடு: <strong>தூதன் அவரை நோக்கி சக்கரியாவே பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது. உன் மனைவியாகிய எலிசபெத்து உமக்கு ஒரு குமாரரைப் பெறுவாள். அவருக்கு யோவான் என்று பேரிடுவாயாக.</strong> (லூக்கா, 1:13)<br /><br />யாஹ்யாவை யோவான் என்று பைபிள் குறிப்பிடுவதால் யோவானுக்கு முந்தைய காலத்தில் யோவான் என்ற பெயரில் பலர் இருந்துள்ளனர் என்பதைப் பட்டியலிடுவது திருக்குர்ஆனை எதிர் கொண்டதாகுமா? சிந்தியுங்கள்.<br /><br />தமிழில் இயேசு, ஆங்கிலத்தில் ஜீஸஸ் என்று சொல்லிக்கொண்டால் அது திருக்குர்ஆன் கூறும் ஈஸா என்ற பெயராகிவிடும் என்று வாதிப்பது எப்படித் தவறான வாதமோ அது போன்றே யோவான், ஜான் என்ற பெயர்களை திருக்குர்ஆன் கூறும் யஹ்யா என்ற பெயரோடு ஒப்பிடுவதும் தவறான வாதமாகும்.<br /><br /><strong>நபி (ஸல்) அவர்களின் விண்ணகப் பயணம்,</strong><br /><br /><em>...நான் அங்கு சென்று சேர்ந்தபொழுது அங்கு யஹ்யா (அலை) மற்றும் ஈஸா (அலை) ஆகியோர் இருந்தனர். அவர்கள் இருவரும் ஒன்று விட்ட சகோதரர்கள். (ஒருவருக்கொருவர் சின்னம்மா பெரியம்மா மகன்கள்) ஜிப்ரீல்(அலை) அவர்கள், 'இது யஹ்யாவும் ஈஸாவும் ஆவர். இருவருக்கும் ஸலாம் சொல்லுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நான் சலாம் சொன்னேன். அவர்கள் இருவரும் ஸலாமுக்கு பதிலுரைத்தார்கள். பிறகு 'நல்ல சகோதரரே!<br />நல்ல நபியே! வருக!" என்று கூறி (வாழ்த்தி) னார்கள்.</em> (புகாரி, 3207, 3430, 3887)<br /><br />யஹ்யா என்ற பெயர் எக்காலத்திலும் யோவான், ஜான் என்று மருவிடவில்லை - மறுமை நாள்வரை யஹ்யா என்ற பெயரே நிலைத்திருக்கும் என்பதை மேற்கண்ட அறிவிப்புகள் உறுதிப்படுத்துகின்றது. யஹ்யா என்ற பெயருக்கு பதிலாக வேறு பெயர்களை ஆவணமாக வைக்கும் உங்கள் விமர்சனத்தில் நேர்மையுள்ளதா?<br /><br />பிற மத நண்பர்களே! இதை நன்கு சிந்தனையில் பதிவு செய்து, இஸ்லாத்தை விளங்கி விமர்சனம் செய்யுங்கள்!<br /><br /><strong>மொழி பெயர்ப்பு,</strong><br /><br />பிற மத நண்பர்கள் தமது கருத்துக்கு வலு சேர்க்க திருக்குர்ஆன் 019:007 வசனத்தின் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புகளை வைத்துள்ளனர். மூலமொழி உயிருடன் வழக்கில் இருக்க விமர்சனத்தை மூலமொழியுடன் உரசிப் பார்க்காமல் மொழி பெயர்ப்புகளுடன் ஒப்பிடுவது புத்திசாலித்தனம் இல்லை. யஹ்யா என்ற பெயரை எந்த மொழியில் சொன்னாலும், எழுதினாலும் யஹ்யா என்று தான் சொல்ல வேண்டும், எழுத வேண்டும். யஹ்யாவை ஆங்கிலத்தில் ஜான் என்று மொழி பெயர்ப்பாளர்கள் குறிப்பிட்டால் அதற்கு திருக்குர்ஆன் பொறுப்பேற்க வேண்டும் என்ற அவசியமில்லை.<br /><br /><strong>முக்கியக் கவனத்திற்கு,</strong><br /><br />திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று தவறானப் பிராச்சாரம் செய்பவர்கள், பைபிளிலிருந்து திருக்குர்ஆன் எவ்வாறு தனித்தன்மையில் வேறுபடுகிறது என்பதை விளங்கிக்கொள்வீர்களா? யஹ்யா என்ற தீர்க்கத்தரிசியின் பெயர் மாறி மருவிப் போனதால் அவருடைய உண்மைப் பெயரைத் திருக்குர்ஆன் தூசித் தட்டி வெளிப்படுத்துகிறது. திருக்குர்ஆன் பைபிளின் நகலாக இருந்திருந்தால் ஸகரிய்யாவின் குமாரரை யோவான் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்!<br /><br />நன்றி!<br /><br />அன்புடன்,<br />அபூ முஹைஅபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-9457100.post-26849868128272378562008-07-23T05:51:00.000-07:002008-07-23T07:32:17.252-07:00முஹம்மது நபி பொய்யரா?இஸ்லாம் எனும் இறை மார்க்கத்தை மக்களுக்குப் போதிக்க வந்த நபிமார்கள் அனைவரும் ''பொய்யர்'' என்றே முத்திரைக் குத்தப்பட்டார்கள். இதற்கு இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விதிவிலக்கல்ல.<br /><br />பொய்யர்<br />குறிகாரர்<br />சூனியக்காரர்<br />பைத்தியக்காரர்<br />இட்டு கட்டுபவர்<br /><br />இவையெல்லாம் வழக்கம் போல் நபி (ஸல்) அவர்களுக்கும் சமகால மக்கள் வழங்கிய பட்டங்கள். முஹம்மது நபி இட்டுக்கட்டுபவராக இருந்திருந்தால் தம்மைப் பற்றிய அறியாமை மக்களின் இந்த அடைமொழிகளை மறைத்திருக்கலாம் என்பது சிற்றறிவுடையோருக்கும் விளங்கும். ஆனால் இறை வேதத்தில் இவை கால காலத்திற்கும் இடம்பெற்றிருப்பது திருக்குர்ஆன் மாற்ற முடியாத, மாற்றத்திற்குள்ளாகாத இறைவேதம் என்பதற்கு சான்றாக<br />அமைந்துள்ளது.<br /><br />இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்களின் முனை மழுங்கிய சிந்தனையைப் பார்ப்போம்.<br /><br /><blockquote>இஸ்லாமிய நபியாகிய முகமது பற்றி, அவர் காலத்து மக்களின்(முஸ்லீமல்லாதவர்களின்) கருத்து என்ன? என்று குர்ஆன் சொல்லும் சாட்சியைப் பற்றிய ஓர் அலசல்.<br /><br />இக்கட்டுரை "Muhammad as Al-Amin (the Trustworthy) How His Enemies Really Viewed Him" என்ற கட்டுரைக்கு மேலதிக விவரங்களுக்காக இணைக்கப்படுகிறது.<br /><br />முகமது அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, தன் ஊர் மக்களிடம் ஒரு நேர்மையான மனிதராகவும், குற்றமில்லாத மனிதராகவும் பெயர் பெற்று இருந்தார் என்று இஸ்லாமிய தாவா செய்யும் அறிஞர்கள் கூறுவது வழக்கம். இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், முகமது ஒரு நேர்மையானவர் என்றும், குற்றம் குறை இல்லாதவர் என்றும் தன் சமகாலத்து மக்கள் அறிந்து இருந்தார்கள் என்று கூறுவதை நாம் கண்டுயிருப்போம். இன்னும் சொல்லப்போனால், முகமது காலத்தவர்கள் முகமதுவிற்கு "அல்-அமீன் (Al-Amin)" அல்லது "நேர்மையானவர்-(Trustworthy)" என்றும் பெயர் சூட்டி இருந்தனர் என்றும் கூறுவார்கள், இப்படி பலவிதமாக கூறுவார்கள்.<br /><br />முஸ்லீம்கள் இப்படியெல்லாம் சொல்வதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவர்களின் இந்த கூற்று, கண்களால் கண்டு சாட்சி சொன்னவர்களின் கூற்றின் மீது ஆதாரப்பட்டு இருக்கவில்லை, அதற்கு மாறாக முகமதுவின் மரணத்திற்கு பின்பு ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டவைகளாகும். இன்னும் சொல்லப்போனால், இவைகள் அனைத்தும் முஸ்லீம்களின் கை மற்றவர்களின் மீது ஓங்கி இருக்கும் போது(இஸ்லாமிய அரசர்கள்/கலிபாக்கள் ஆட்சி செய்தபோது) எழுதப்பட்டவைகளாகும், மற்றும் அவர்கள் சரித்திரத்தை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திரும்ப எழுதினார்கள். அந்த கால்த்தில் முஸ்லீம்கள் தாங்கள் எந்த கண்ணோட்டத்தில் முகமதுவின் வாழ்க்கையை படிக்கவிரும்பினார்களோ அந்த நம்பிக்கையின் படி எழுத ஆரம்பித்தார்கள்(The Muslims were pretty much free to read back into the life of Muhammad their specific theological<br />views and beliefs concerning their prophet.)<br /><br />முக்கியமாகச் சொல்லவேண்டுமானால், முஸ்லீம்கள் முகமதுவிற்கு கொடுக்கும் இந்த புகழாரங்களுக்கு எதிராக அவர்களின் வேதமே எதிர் சாட்சியாக அமைந்துள்ளது. நாம் குர்ஆனை ஆராய்ந்துப் பார்த்தால், முகமது ஒரு உண்மையின் களங்கரை விளக்காகவோ அல்லது ஒரு முழுமையான நேர்மையான மனிதராகவோ இருந்தார் என்று அவரைச் சுற்றியிருந்த மக்கள் கருதவில்லை அல்லது நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை நாம் அறியலாம். அம்மக்களின் சாட்சி முகஸ்துதி செய்வதாக கூட இருக்கவில்லை, குறைந்தபட்சம் சொல்லவேண்டுமானால், முகமதுவிற்கு பிறகு சேகரிக்கப்பட்ட விவரங்களாகிய , முகமதுவை அவரது எதிரிகள் புகழ்வதாக உள்ள விவரங்கள் அனைத்தும் வெறும் கட்டுக்கதைகளாகவும், மாயையாகவும் இருக்கிறது. </blockquote><br /><br />நபித்துவ வாழ்வுக்கு முன், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பண்புகள் பற்றி,<br /><br />மனிதாபிமானம் உடையவர்<br />அமானிதம் பேணுபவர்<br />வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவர்<br />எளியோருக்கும், சிரமத்தில் தவிப்போருக்கும் உதவுபவர்<br />விருந்தினரை உபசரிப்பவர்<br />உயர் பண்பு, சிறந்த ஒழுக்கமுடைய நற்பண்பாளர்<br />''நம்பிக்கையாளர்''<br /><br />இப்படி உயர் பண்புகளைக் கொண்டவராக நபியவர்கள் திகழ்ந்தார்கள். இது நபியவர்களை அறிந்த மக்காவில் வாழ்ந்த மக்களின் கருத்தாகும். சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் நம்பி ஒப்படைத்தப் பொருட்களைத் திரும்பப் பெற முடியாத அக்காலத்தில் நபியவர்களிடம் கொடுத்துப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படி மக்கள் தமது பொருட்களை நம்பி ஒப்படைத்துத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.<br /><br /><strong>ஒரு சம்பவம்:</strong><br /><br />நபி (ஸல்) அவர்கள் ஒரு மலைக்குன்றின் மீதேறி, மக்காவின் மக்களையும், மற்றும் மக்கள் தலைவர்களையும் மலையடிவாரத்துக்கு அழைத்தார்கள். அழைத்து, அவர்களிடம் ''இந்த மலைக்கப்பால் உங்களைத் தாக்குவதற்கு ஒரு படை வருகிறது என்று நான் கூறினால் அதை நீங்கள் நம்புவீர்களா?'' என்று கேட்டார்கள். ''ஆம் நம்புவோம்'' என்று அந்த மக்களும் தலைவர்களும் பதிலளித்தனர். (கருத்து) இச்சம்பவத்திலிருந்து மக்களும் தலைவர்களும் - நபித்துவ வாழ்வுக்கு முன் - நபியவர்களை ''உண்மையாளர்'' என்று ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பது தெளிவு.<br /><br />பொதுவாக, எந்த மனிதரையும் அவரின் இயல்பான நடைமுறை வாழ்க்கையைக் கவனித்து வந்தால் அதைக் கொண்டு அவரின் பண்புகளைக் கணித்து விடலாம். ஒருவரை உண்மையாளர் அல்லது பொய்யர் என்று சொல்வதற்கு அவரின் செயல்பாடுகள் கண் முன்னே நிகழ்கிறது என்பதால் கணிப்பது எளிது.<br /><br />நபி (ஸல்) அவர்களை ''உண்மையாளர்'' என்று கூறிய அதே மக்கள் பின்னர் ''பொய்யர்'' என்று உரைத்தது நபியவர்களின் ஆன்மீகக் கொள்கையை நோக்கியே தவிர, நடை முறை வாழ்க்கையில் நபியவர்கள் யாரையும் ஏமாற்றிப் பொய்யுரைத்தாகக் கொள்வது தவறு. நபியவர்களை பொய்யர், குறிகாரர், சூனியக்காரர், பைத்தியக்காரர், இட்டுக்கட்டுபவர் என்றெல்லாம் விமர்சனம் எழுந்தது அந்த மக்களின் அறியாமை என்று அடித்து கூறி<br />விடலாம். ஏனெனில்,<br /><br />ஓரிறைக் கொள்கை, மறுமை, சுவனம், நரகம், இறந்த பின் உயிர்ப்பித்து எழுவது இது போன்ற தங்களுக்கு அறிவில்லாதவற்றையே அம்மக்கள் பொய் என்று கூறினர். நபியவர்களை பொய்யரென்று கூறிய அதே வேளையில் பொய்யர் என்பதை நிரூபிக்க எவ்வித சான்றுகளையும் சமர்ப்பிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு கொள்கையை நம்பாதது வேறு, அந்தக் கொள்கையை பொய்யென்று உரைப்பது வேறு.<br />முந்தையதில் அது பற்றிய அறிவு இல்லாததால் அதை நம்பவில்லை. பிந்தையதில் அது பற்றிய எந்த அறிவுமின்றி அதைப் பொய்யென்று பொய்யுரைப்பது. இந்த அறியாமை அன்றைய விமர்சகர்களிலிருந்து இன்று வரை நீடிக்கிறது நாளையும் இது தொடரும்.<br /><br />(ஓரிறைக் கொள்கை, மறுமை, சுவனம், நரகம், இறந்த பின் உயிர்ப்பித்து எழுவது இவற்றை முஸ்லிம்கள் நன்கு அறிந்து கொண்டு தான் இஸ்லாத்தை நம்பிக்கை கொள்கிறார்களா? என்று இங்கு கேள்வி எழலாம். இவற்றைக் கண் கூடாகக் காண்பதற்கான அவகாசம் இருக்கிறது என்பது தான் இஸ்லாத்தின் பதில்)<br /><br /><strong>தகவல்</strong><br /><br />நபியவர்கள் கொண்டு வந்த கொள்கையை அறியாமையினால் பொய் என்றும், குறிகாரச் சொல் என்றும், சூனியம் என்றும், பைத்திக்காரத்தனம் என்றும், கட்டுக்கதை என்றும் விமர்சித்த அதே மக்கள் பின்னாளில் நபியவர்களின் முன்னிலையிலேயே அதேக் கொள்கையை உளமாற ஏற்றுக் கொண்டனர் என்பது யாரும் அறியாமல் மறைக்கப்பட்ட வரலாறல்ல.<br /><br />நபிமார்களைப் பொய்யர் என்று உரைத்தது முஹம்மது நபிக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல. எல்லாக் காலத்திலும், எல்லா மக்களும், எல்லா நபிமார்களையும் நோக்கி ''இவர் பொய்யர்'' என்று கூறினர் என பிறமத நண்பர்கள் வைத்துள்ள திருக்குர்ஆன் வசனமே கூறுகிறது.<br /><br /><span style="color:#000099;">இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்.</span> (குர்ஆன் 35:4)<br /><br />முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முந்தைய நபியாகிய ஈஸா நபி (அலை) அவர்களையும், அவர்கள் காலத்து மக்கள் ''பொய்யர் சூனியக்காரர்'' என்றே கூறினார்கள்.<br /><br /><span style="color:#000099;">அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், 'இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை' என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.</span> (திருக்குர்ஆன், 005:110)<br /><br /><span style="color:#000099;">மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: 'இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும் எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்' என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் 'இது தெளிவான சூனியமாகும்' என்று கூறினார்கள்.</span> (திருக்குர்ஆன், 061:006)<br /><br />இறை வேதமும், இறை வேதத்தை மக்களிடம் அறிமுகப்படுத்தும் இறைத்தூதர்களையும் சுலபத்தில் மக்கள் ஏற்றுக்கொண்டதில்லை. பெண் சுகத்தில் திளைத்தவனிடம் விபச்சாரம் செய்யாதே என்று இறைவனின் கட்டளையைக் கூறினால் அதை அவன் எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டான். தனது இன்பங்கள் பறிக்கப்படுகின்றன என்பதால். மக்கள் மனம் விரும்பாத செய்திகளை இறைத்தூதர்கள் கொண்டு வந்ததால் இறைத்தூதர்கள் இம்சிக்கப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள். முந்தைய நபிகள் கொல்லப்பட்டார்கள் என்ற தகவலோடு ஒப்படும் போது பொய்யர்.. இத்யாதி விமர்சனம் மிகச் சாதாரணம்.<br /><br /><span style="color:#000099;">ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்: 'இது இட்டுக் கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை' என்று கூறினார்கள்.</span> (திருக்குர்ஆன்,028:036)<br /><br />இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள் மக்களால் எவ்வாறு விமர்சிக்கப்பட்டார்களோ அதைப் போன்றே இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்)அவர்களும் மக்களால் விமர்சிக்கப்பட்டார்கள். இதில் முஹம்மது நபியை மக்கள் விமர்சித்ததை மட்டும் பிற மத நண்பர்கள் தூக்கிப் பிடிப்பது மழுங்கிய சிந்தனைக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது.<br /><br /><strong>விபரீத சிந்தனை</strong><br /><br /><blockquote>குர்ஆன் என்பது முகமதுவின் வாழ்நாட்களில் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்றும், அதில் சம காலத்து நிகழ்வுகளைப் பற்றிய விவரங்கள் உண்டென்றும் முஸ்லீம்கள் நம்புகின்றனர். மக்காவில் வாழ்ந்த மக்கள் முகமதுவை ஒரு நல்ல நேர்மையான, நம்பத்தகுந்த நபர் என்றுச் சொன்னார்கள் என்று இஸ்லாமிய ஹதீஸ்கள் சொல்லும் விவரங்களுக்கு எதிராக இந்த குர்ஆனின் சாட்சி உள்ளது. முஸ்லீம்களின் வேதமாகிய குர்ஆன், முஸ்லீம்கள் சொல்வதற்கு எதிராகச் சொல்கிறது, அதாவது முகமதுவின் சமகாலத்து மக்கள் முகமதுவை.<br /><br />ஒரு பொய்யராகக் கண்டனர்,<br /><br />அவர் ஒரு ஏமாற்றுக்காரராகக் கண்டனர்,<br /><br />கட்டுக்கதைகளை இட்டுக்கட்டுபவராகக் கண்டனர். </blockquote><br /><br />இங்கு குறிப்பிட்டிருப்பது பிற மத நண்பர்களின் விபரீத சிந்தனைக்கு மற்றும் ஓர் எடுத்துக்காட்டு. திருக்குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டது நபித்துவம் பெற்ற பின்னர். அதாவது நபியவர்களின் 40ம் வயதில் திருக்குர்ஆன் அருளத் துவங்கியது. முஹம்மது நேர்மையாளர், உண்மையாளர், நம்பிக்கையாளர் என மக்கள் சிலாகித்துக் கூறியது நபித்துவம் பெறுவதற்கு முன்னர். அதாவது நபியவர்களின் 40ம் வயது வரை. இதன் பிறகும் நபியவர்களின் நேர்மையில் எந்தக் குறைவும் ஏற்படவில்லை.<br /><br />நபித்துவம் பெற்று திருக்குர்ஆன் அருளத் துவங்கிய பின்னரே மக்கள் நபியவர்களைப் பொய்யர் என்று கூறினர் என்றால் இது நபியவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட பின்னர், அவர்கள் கொண்டு வந்த ஓரிறைக் கொள்கையை, நபியவர்களின் நபித்துவத்தைப் பொய் என்றுப் புறக்கணித்தனர் என்று பொருள் கொள்வதில் எதுவும் சிரமம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்,<br /><br />திருக்குர்ஆன் சொல்வதும் உண்மை.<br /><br />ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் சொல்வதும் உண்மை.<br /><br />அன்புடன்,<br />அபூ முஹைஅபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-9457100.post-26465354298360171482008-07-22T11:42:00.000-07:002008-07-22T22:19:13.389-07:00ரோமர்களை எதிர்த்த இஸ்லாமிய அரசுஇஸ்லாம் அழைப்புப் பணி<br /><br />ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கைக்குப் பின் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஹுதைபிய்யா ஒப்பந்தம் ஒரு புதிய சகாப்தமாக விளங்க காரணமாக அமைந்தது. இஸ்லாமிய அழைப்புப் பணியை பரப்புவதற்கும், மக்கள் முன் அதை வைப்பதற்கும் முஸ்லிம்களுக்கு பெருமளவு வாய்ப்பு ஏற்பட்டது. இக்கால கட்டத்தில் போருக்குக் காட்டிய முயற்சியை விட பல மடங்கு ஆர்வத்தை இஸ்லாமிய அழைப்புப் பணியில் முஸ்லிம்கள் காட்டினர். இந்த இடை விடா பெரும் முயற்சியின் பலன், அரபுலக மக்கள் இஸ்லாத்தை விளங்கி கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தைத் தழுவினர்.<br /><br />ஹிஜ்ரி 8ம் ஆண்டு மக்காவை நோக்கி நபியவர்கள் புறப்பட்ட போது அவர்களுடன் 10,000 நபித் தோழர்கள் இருந்தனர். ஹிஜ்ரி 9ம் ஆண்டு தபூக்கை நோக்கி படை புறப்பட்ட போது அதில் 30,000 பேர்கள் இருந்தனர். ஹிஜ்ரி 10ம் ஆண்டு நபியவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது அரபுலகத்தின் பல பாகங்களிலிருந்தும் வந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் நபியவர்களுடன் ஹஜ் செய்தனர். இவை, இஸ்லாமிய அழைப்புப் பணியால் கவபரட்டு மக்கள் திரளாக இஸ்லாத்தை ஏற்றனர் என்பதன் எளிய எடுத்துக்காட்டு.<br /><br />அழைப்புப் பணியில் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அரசர்களுக்கும், ஆளுனர்களுக்கும் இஸ்லாமிய அழைப்பு விடுத்து எழுதிய கடிதங்கள் சிலவற்றை முந்தைய பதிவுகளில் இடம்பெற்றுன. அதில் <a href="http://abumuhai.blogspot.com/2008/07/8.html ">ஓமன் நாட்டு அரசனுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம் </a>குறித்து பிற மத நண்பர்கள் வருமாறு விமர்சனம் செய்திருந்தனர்,<br /><br /><blockquote>ஓமன் நாட்டு அரசனுக்கு முகமது அனுப்பிய கடிதம்<br /><br />முகமது ஓமன் நாட்டு அரசன் "ஜாஃபர்" மற்றும் அவர் சகோதரன் "அப்து அல் ஜலாந்தி" என்பவருக்கும் ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தை முகமதுவின் தூதுவர் "Amr bin al-'As al-Sahmi and Abu Zaid al-Ansari" கொண்டுச் சென்றார்.<br /><br />இன்று இஸ்லாமியர்கள் மேடைகளில், வெப்தளங்களில், மற்றும் தொலைக்காட்சி மற்றும் இதர சாதனங்கள் மூலமாக இஸ்லாமை பரப்பிக்கொண்டு வருகின்றனர். அவர்கள் இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும், இன்னும் இதர மக்களையும் இஸ்லாம் பக்கம் ஈர்க்க முன்வைக்கும் வாதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.<br /><br />1. இஸ்லாம என்றால் அமைதி என்று பொருள்:<br /><br />2. இஸ்லாமில் கட்டாயமில்லை:<br /><br />3. இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்பட்டது என்று சொல்லும் செய்தி பொய்யானது.<br /><br />4. நபி (முகமது) அவர்கள் செய்த போர்கள் அனைத்தும், தற்காப்புக்காக செய்தவை. தாமாக அவர் என்றுமே சண்டையிட்டது இல்லை.<br /><br />5. ஜிஹாத் என்றால், தற்காப்புக்காக நமக்கு ஆபத்து வரும் போது செய்யும் சண்டையே தவிர, நாமாக சண்டையிடுவது இல்லை.<br /><br />6. முகமது அவர்கள் யாரிடமும் வீணாக சண்டையிட்டது இல்லை. அவரைப்போல நல்லவர் உலகில் வேறு யாருமில்லை.<br /><br />இப்படி பல செய்திகளை இஸ்லாமியர்கள், முன்வைப்பார்கள். ஆனால், ஓமன் நாட்டு அரசருக்கு முகமது என்ன எழுதினார் என்று பாருங்கள்.<br /><br />ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம்<br /><br />"Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom."<br /><br />ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம் - தமிழாக்கம்<br /><br />நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்! இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன்(தீர்க்கதரிசி) ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை(POWER) உனக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உன் வலிமை(POWER) அழிக்கப்படும். என் குதிரைகள் உன் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உன் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்.<br /><br />Photograph of the Arabic original and the English text as it is on display at Sohar Fort, Sultanate of Oman<br /><br />சமத்துவம், சகோதரத்துவம் பேசும் இஸ்லாமிய நண்பர்களே,கீழ்கண்ட கேள்விகள் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்:<br /><br />1. இக்கடிதம் யார், யாருக்கு எழுதியது?<br /><br />2. இக்கடிதம் எழுதுவதற்கு முன்பாக முகமதுவிற்கு "இந்த நாட்டு அரசனால் ஆபத்து <br />ஏதாவது இருந்ததா?"<br /><br />3. இக்கடிதத்தில் முகமது மிகவும் நிதானமாக பேசுவதைக்கண்டீர்களா?<br /><br />4. அதே நிதானத்தோடு அந்த நாடு அழிக்கப்படும் என்று சொல்வதை கவனித்தீர்களா?<br /><br />5. இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் என்ன பதில் சொல்வார்கள்?<br /><br />6. தன் நாட்டில் இருந்துக்கொண்டு, முகமதுவிற்கு எந்த பயமுறுத்தலோ அச்சுருத்தலோ செய்யாமல் இருக்கின்ற அரசனுக்கு, இஸ்லாம், அல்லா, முகமது விடுக்கும் "அழைப்பு" எப்படி இருக்கிறது என்றுப் பார்த்தீர்களா?<br /><br />7. முகமது இஸ்லாமின் நன்னடத்தையைக் காட்டி அந்த அரசனை இஸ்லாமிற்கு அழைக்கிறாரா? அல்லது அழித்துவிடுவேன் என்று பயமுறுத்தி அழைகிறாரா?<br /><br />9. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிக படைபலம் உள்ள அரசனாக இருந்தால், முகமதுவோடு சண்டையிட்டுயிருப்பான், குறைந்த படைபலம் உள்ளவனாக இருந்தால், "இஸ்லாமை ஏற்றுக்கொண்டு" முகமதுவின் "ஜகாத்" கொடுத்துக்கொண்டு இருந்திருப்பான்.<br /><br />10. கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்தி கொண்டுவரும் "பக்தி", "நமாஜ்" அல்லது "தொழுகை" உண்மையானதாக இருக்குமா? இதைத் தான் உண்மை தெய்வம் எதிர்பார்க்குமா?<br /><br />11. இஸ்லாமில் கட்டாயமில்லை, இஸ்லாம் அமைதியான மதம், இஸ்லாம் கத்திமுனையில் பரப்பப்பட்டது இல்லை என்று சொல்லிக்கொள்கிறீர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் ?<br /><br />12. இது தான் இஸ்லாம் காட்டும், முகமது காட்டும் வழியா?<br />நிதானப் பார்வையை இழந்து, எதையும் பகைமையுடன் அணுகினால் நியாயமும் அநியாயமாகவே தோன்றும் என்பதற்கு பிற மத நண்பர்களின் மேற்கண்ட விமர்சனம் அமைந்துள்ளது.</blockquote><br /><br />இஸ்லாம் என்றால் அமைதி, சாந்தி மார்க்கம் என்று பொருள்படும். அநீதியும், அக்கிரமும் தலை விரித்தாடும் போது அதைக் கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என்பது தான் அமைதியின் அகராதி என்றால் அந்த அமைதி என்ற அர்த்தத்தில் இஸ்லாம் இல்லை.<br /><br /><strong>சுருக்கமாக:</strong><br /><br /><a href="http://abumuhai.blogspot.com/2008/07/blog-post.html ">கி.பி அறுநூறுகளின் </a>ஆரம்பத்தில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் கருத்து வேறுபாடு கொண்டு, தங்களிடையிலான பகைமையும் குரோதமும் உச்சகட்டத்தை அடைந்து, ஒருவருக்கொருவரை அழித்துக்கொண்டிருந்தனர். <a href="http://abumuhai.blogspot.com/2008/07/blog-post_09.html">கி.பி. ஆறாம் நூற்றாண்டும் </a>ஏழாம் நூற்றாண்டும் வரலாற்றில் மிக மோசமான இருண்ட காலமாக இருந்தது. இந்தச் சூழலில் இஸ்லாம் மார்க்கத்தின் மறுப் பிரச்சாரம் துவக்கப்பட்டு மக்களுக்கும், மக்களின் தலைவர்களுக்கும் இஸ்லாமிய அழைப்பு விடுக்கப்பட்டது.<br /><br />பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்கம் இவற்றில் தானும் சிறப்புடன் வாழ்ந்து மக்களையும் அதன் பக்கம் அழைக்க வேண்டும். இதுவே ஒரு நல்லவனின் அளவுகோலாகும். இறை மார்க்கத்தின் பால் மக்களை அழைக்கும் இறைத்தூதர்களின் அழைப்பு பல மடங்கு அதிகமானது. ஆண்டி முதல் அரசன் வரை இறை மார்க்கத்தை அவர்கள் எடுத்துச் சொல்லி அழைப்பு விடுக்க வேண்டும். அப்போதுதான் தீர்க்கத்தரிசிகளின் தூதுத்துவம் முழுமையடையும். மக்கா வெற்றிக்குப் பின் அரபுலகத்தில் இஸ்லாம் பரவலாக அறியப்பட்டு இஸ்லாத்தை ஏற்றவர்களில் ரோமானிய ஆட்சியின் கீழ் வாழ்ந்த மக்களும் அடங்குவர்.<br /><br />அன்று வல்லரசாகத் திகழ்ந்த ரோமானியர்கள் இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்களைக் கொலை செய்தார்கள்.<br /><br />ஃபர்வா இப்னு அம்ர் என்பவர் ரோம் நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த அரபியர்களுக்கு ஆளுனனராக இருந்தார். இவர் இஸ்லாத்தின் பால் கவரப்பட்டு முஸ்லிமானார். இவர் இஸ்லாத்தை ஏற்ற செய்தியைக் கேட்ட ரோமர்கள் அவரைச் சிறையிலடைத்து துன்புறுத்தி ‘’மார்க்கமா? அல்லது மரணமா? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள் என்றனர்’’ அவரோ மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தார். ஃபாலஸ்தீனில் ‘அஃபரா’ என்ற கிணற்றருகே ரோமர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து தலையைக் கொய்தனர்.<br /><br />நபி (ஸல்) அவர்கள் புஸ்ரா மன்னருக்கு அனுப்பிய கடிதத்தை எடுத்துக் சென்றிருந்த ‘ஹாரிஸ் இப்னு உமைர்’ என்ற தூதரைப் புஸ்ராவின் கவர்னராக இருந்த ‘ஷுரஹ்பீல் இப்னு அம்ர் கஸ்ஸானி’ என்பவர் வழிமறித்துக் கொன்று விட்டான்.<br /><br />இதையெல்லாம் கண்டும் காணாமல் ஒட்டிக் கொண்ட தூசியைத் தட்டி விட்டுச் செல்ல வேண்டும் என்ற பிற மத போதனையை அந்த மதத்தவர் ஏற்றுக் கொள்ளட்டும் ஆட்சேபனை இல்லை. ஆனால் அநீதியைத் தட்டிக் கேட்பதைக் குறை காணுபவர் காழ்ப்பு எனும் பித்தம் தலைக்கேறியவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.<br /><br />கிறிஸ்தவ ஆலயங்களின் ஆதிக்கத்தை யாராலும் எதிர்க்க முடியாது என்ற அகம்பாவமும், தற்பெருமையும் ரோமானியர்களை இறுமாப்புக் கொள்ள வைத்தது. இறுமாப்பில் ரோமானியப் பேரரசு, பேரரசின் கீழ் ஆட்சி செய்த குறுநில மன்னர்கள், ஆளுனர்களின் அடக்குமுறைகளையும், அத்து மீறல்களையும் எதிர்த்து இஸ்லாமியப் பேரரசு அன்று குரல் கொடுத்தது. ரோமானியர்களின் ஆதிக்கத்தை யாராலும் எதிர்க்க முடியாது என்ற நம்பிக்கையைத் தகர்ப்பதற்காகவும், இஸ்லாத்தை ஏற்றால் அது ஆபத்தையும், மரணத்தையும் சந்திக்க நேரும் என்று எவரும் எண்ணி விடக் கூடாது என்பதற்காகவும் ரோமானியர்களை எதிர்த்துப் போர் எச்சரிக்கையும், போர் பிரகடனமும் விடுக்கப்பட்டது. முஃதா போர், தபூக் போர் சம்பவங்கள் ஏற்படக் காரணிகள் இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்களைக் கொலை செய்ததற்காக ரோமானியர்கள் மீது போர் அவசியமாயிற்று என்பதை வரலாற்றைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.<br /><br /><span style="color:#3366ff;">‘’எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உங்களிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவீனமானவர்கள், பெணகள், மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?</span> (திருக்குர்ஆன், 004:075)<br /><br />அநீதி இழைக்கப்பட்டோருக்காக இஸ்லாமிய அரசு போர் செய்ய வேண்டும் என்ற இறை வாக்கு இஸ்லாமியப் பேரரசால் நிறைவேற்றப்பட்டது.<br /><br />இஸ்லாத்தின் மீதான நீண்ட குற்றப் பட்டியலில் பிற மத நண்பர்கள் இதையும் - ‘’அநீதி, அக்கிரமம் செய்யப்பட்டோருக்காக இஸ்லாம் போரிடச் சொல்கிறது’’ என்று முஸ்லிம்கள், முஸ்லிம் அறிஞர்கள் மேடைகளில், வெப்தளங்களில், தொலைக்காட்சியிலும் பேசி வருகின்றனர் என்று - சேர்த்துக் கொள்ளட்டும்,<br /><br />அன்புடன்,<br />அபூ முஹைஅபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9457100.post-73398725072132831992008-07-16T10:49:00.000-07:002008-07-16T20:20:20.751-07:00நல்லவர் தீமையைத் தடுக்கட்டும்.இஸ்லாம் அழைப்புப் பணி.<br /><br />இங்கு பைபிள் வசனங்களை விமர்சிக்கும் நோக்கமல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்வோம்.<br /><br /><blockquote>கீழ் கண்ட வசங்களை சொன்னது யார் என்றுத் தெரியுமா உங்களுக்கு?<br /><br />மத்தேயு 10:14 எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.<br /><br />லூக்கா 9:5 உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார். <br /><br />அப்போஸ்தல நடபடிகள் 13:51 இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள்.</blockquote><br /><br />இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்கள் மேற்கோள் காட்டியுள்ள பைபிள் வசனங்கள் மேற்கண்டவை.<br /><br /><span style="color:#3366ff;">''நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக''</span> திருக்குர்ஆன், 031:017)<br /><br /><span style="color:#3366ff;">''நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்'' </span>(திருக்குர்ஆன், 013:022)<br /><br />நன்மைகளைச் செய்வதோடு தீமைகளையும் களைந்து, களைய முன் வர வேண்டும். தான் மட்டும் நல்லவனாக வாழ்ந்தால் போதும் மற்றவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? என்றிருப்பவர் தீமையைத் தடுத்தவராகமாட்டார்.<br /><br /><span style="color:#3366ff;">''அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள்'' உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)'' என்று கூறினர்.</span> (திருக்குர்ஆன், 007:164)<br /><br /><span style="color:#3366ff;">''அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, <strong>அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்.</strong> வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்''</span> (திருக்குர்ஆன், 007:165)<br /><br />இவ்வசனத்தில் தீமையைத் தடுத்தவர்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டார்கள் என்றும், தீமையைச் செய்தவர்களும், அதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தவர்களும் தண்டிக்கப்பட்டார்கள். என்றும் கூறப்படுகிறது. நல்லவன் என்பது தாமும் நல்லவனாக வாழ்ந்து, வலிமைக்கேற்றவாறு தீமையைத் தடுக்கவும் வேண்டும்.<br /><br />''எனது உயிர் எவனது கையில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நீங்கள் நன்மையை ஏவுங்கள், தீமையைத்தடுங்கள் (தவறினால்) அல்லாஹ் தண்டனையை உங்களுக்கு அனுப்புவான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)<br /><br />''யாரேனும் ஒரு தீமையைக் கண்டால் அதைக் கையால் தடுக்கட்டும், அதற்கு சக்தி பெறாதவர் தமது நாவால் தடுக்கட்டும், அதற்கும் இயலாதவர் தமது உள்ளத்தால் அதை வெறுக்கட்டும். இதுவே ஈமானின் கடைசி நிலையாகும்'' (முஸ்லிம், திர்மிதீ)<br /><br />தீமையைத் தடுக்காதவர் நல்லவனாக வாழ்ந்தும் புண்ணியமில்லை, அவர் தண்டனைக்குரியவர் என இன்னும் பல கருத்துக்களில் இஸ்லாம் உரைக்கின்றது.<br /><br /><strong>ஓர் அழகிய உதாரணம்: </strong><br /><br />அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை - ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்தில், இடம் கிடைத்தது.கீழ் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) 'நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம், நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்' என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, திர்மிதீ)<br /><br />கப்பலில் கீழ் தளத்தில் பயணிப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று விட்டால் கப்பலில் பயணிப்பவர் அனைவரும் கடலில் மூழ்கும் அபாயம் எற்படும். அவர்கள் தடுக்கப்பட வேண்டும். கீழ் தளத்திலுள்ளவர்களை நோக்கி ''நீங்கள் தண்ணீர் எடுக்க வருவது எங்களுக்கு எவ்வித சிரமத்தையும் ஏற்படுத்திடவில்லை'' என்று கூறுவதோடு, அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்க உதவுவதும் அவர்களைத் தீமை செய்வதிலிருந்து தடுக்கும். இதுவே, நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பது.<br /><br />சமுதாயத்தில் விளையும் தீமைகளை, ஒவ்வொரு தனி மனிதனும் தனது சக்திக்கு ஏற்றவாறு தடுத்திட வேண்டும். இது குறித்து நாளை அவன் விசாரிக்கப்படுவான்.<br /><br /><blockquote>மத்தேயு 10:14 எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.</blockquote><br /><br />மார்க்கத்தை நிறைவேற்ற முடியாத இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்ற கருத்தில் இஸ்லாமும் அறவுரை வழங்கியுள்ளது. நபியவர்களும் முஸ்லிம்களும் மக்காவை விட்டு வெளியேறிய சம்பவம் இதற்கு முன்னுதாரணமாக உள்ளது.<br /><br />''சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் படிந்த தூசியைத் தட்டிவிட்டு வெளியேறுங்கள்'' இந்த அறவுரை தனி மனிதனுக்கு வேண்டுமானால் பொருந்தாலாம். ஓர் அரசுக்குப் பொருந்தாது. அநீதி எங்கு நடந்தாலும் வலிமைப் பெற்ற அரசு அதைத் தட்டிக்கேட்க வேண்டும். அதுவும் தீர்க்கத்தரிசிகள் தலைமையில் அமைந்த அரசு அநீதியை எதிர்த்துப் போரிட தயக்கம் காட்டக்கூடாது.<br /><br />அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தை ஏற்றவர்களின் வாழ்க்கைக்கு ரோமானியர்கள் நெருக்கடி கொடுத்து வந்தனர். தங்களுக்கு கீழுள்ளவர்கள் யாராவது இஸ்லாத்தை ஏற்றால் அவரைக் கொன்றனர். ரோமர்களின் அடக்கு முறைகளையும், அத்து மீறல்களையும் கண்டித்து, அவர்களுடன் போர் தொடுக்குமுன் விடுக்கப்படும் இஸ்லாத்தின் அழைப்பும் எச்சரிக்கையும் முறையாக மன்னர்களுக்குக் கடிதம் வழியாக எழுதப்பட்டது. எழுதியவர்: ஆன்மீகத் தலைவர், ஆட்சியின் தலைவரான - இஸ்லாமியப் பேரரசின் மாமன்னர் நபி (ஸல்) அவர்கள்.<br /><br />எல்லா மன்னருக்கும் எழுதப்பட்ட அழைப்பும் எச்சரிக்கையும் ஓமன் நாட்டு அரசருக்கும் எழுதப்பட்டது. அது குறித்து பிற மத நண்பர்களின் விமர்சனம் அடுத்த பகுதியில், நன்றி!<br /><br />அன்புடன்,<br />அபூ முஹைஅபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9457100.post-34609075907716986542008-07-09T13:29:00.000-07:002008-07-09T13:44:36.552-07:00படைத்தவனை மறந்த...இஸ்லாமியர்களின் வீழ்ச்சியால் இந்தப் பாருலகு அடைந்த நஷ்டமென்ன?<br />என்கிற தமது சிறந்த நூலில் குறிப்பிடும் சில கருத்துக்களை இங்கே எடுத்தாள்வதே போதும் என நாம் எண்ணுகிறோம். ஏனெனில் அது நமது கருத்தை மிகச் சுருக்கமாகவும் அதே நேரத்தில் மிகத் தெளிவாகவும் புரிய வைத்து விடுகின்றது.<br /><br />அப்புத்தகத்தின் முதல் பாடத்தின் முதல் பிரிவில் காணப்படுகின்றது,<br /><br />''கி.பி. ஆறாம் நூற்றாண்டும் ஏழாம் நூற்றாண்டும் வரலாற்றில் மிக மோசமான இருண்ட காலமாக இருந்தது என்பதில் வராலாற்றுப் பேராசியர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இல்லை! பல நூற்றாண்டுகளாகவே மனித இனம் மிகக் கீழ்தரத்திற்கும் ஒழுக்க வீழ்ச்சிக்கும் ஆளாகிப் போயிருந்தது. வீழ்ந்து மடிந்துவிடத் தயாராக நின்ற அதன் கையைப் பற்றித் தடுத்து நிறுத்தும் எந்த சக்தியும் இந்த மண்ணகம் முழுவதும் இல்லாது போய் விட்டிருந்தது. அது ஒழுக்க வீழ்ச்சிகளிலும் கீழ்மைத்தனங்களிலும் சிக்குண்டு சீரழிந்து கொண்டிருந்த நிலையில் காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றோடிக் கொண்டிருந்தது.<br /><br />அந்த நூற்றாண்டுகளில் மனிதன் தன்னைப் படைத்தவனை மறந்து விட்டிருந்தான்! தன்னையும் தனது குறிக்கோளையும் மறந்து விட்டிருந்தான்! தனது நேர்மையையும், நன்மை தீமை, நல்லவை அல்லவையைப் பகுத்தறியும் திறனையும் இழந்து விட்டு அலைந்தான்! அதற்குச் சிறிது காலத்திற்கு முன்பிருந்தே இறைத்தூதர்களின் போதனைகள் மறைந்து விட்டிருந்தன. அவர்கள் ஏற்றிவிட்டுச் சென்றிருந்த தீபங்கள் அவர்களுக்குப் பின்னர் வீசிய அநாகரிக, ஒழுக்க வீழ்ச்சிப் புயல்களால் அணைந்து விட்டிருந்தன. அல்லது அவற்றின் ஒளி குன்றிப்போய் பலவீனமாக அணைப் போகும் நிலையில் சில உள்ளங்களில் மாத்திரம் மினிக்கிக் கொண்டிருந்தன. அந்த ஒளி, வீடுகளையும் நாடுகளையும் பிரகாசிக்கச் செய்யப் போதுமானதாக இருக்கவில்லை என்பதைச் சொல்லத் தேவையில்லை!<br /><br />மார்க்க மேதைகளும் பண்டிதர்களும், தமது மார்க்கத்திற்கும் தமக்கும் தீங்குகள் எதுவும் நேரிட்டு விடலாம், அப்போதைய சீரழிவுகளில் தாமும் சிக்கிக் கொண்டு விடலாம் என அஞ்சியவர்களாய் வாழ்க்கைக் களத்தை விட்டு விலகி ஓடி மடாயலங்களிலும், தனிமையான இடங்களிலும் தஞ்சம் புகுந்தனர். சிலர் அமைதி நிம்மதி ஆகியவற்றைத் தேடியும், சிலர் வாழ்க்கைப் போராட்டங்களுக்கு ஈடு கொடுக்க அஞ்சியும், சிலர் மதப் போராட்டங்களை எதிர்கொள்ளப் பயந்தும், சிலர் ஆன்மீகத்துக்கும் உலகாதாயத்துக்கும் நடந்த இழுபறிப் போரில் ஈடுபட விரும்பாமலும் இப்படி ஆளுக்கு ஆள் மனித நடமாட்டமில்லாத இடங்களை நோக்கி ஓடத் தலைப்பட்டனர். அந்த வெள்ளப் பிரளயத்தில் அடித்துச் செல்லபடாமல் எஞ்சி நின்ற சிலரும் ஆள வந்தவர்கள், அரசவைப் பிரமுகர்களின் அடிவருடிக்கொண்டு அவர்களின் அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் துணை நின்றார்கள். தவறான வழியில் மக்களின் செல்வங்களைச் சுரண்டி உண்டு கொழுத்தார்கள்.<br /><br />வாழையடி வாழையாக வந்திருந்த மிகச் சிறந்த அறநெறிகளும் பண்பாடுகளும் எத்தர்களுக்கும் சமூக விரோதிகளுக்கும் பலியாகி விட்டிருந்தன! அவை வஞ்சகர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் விளையாட்டுப் பொருட்களாகி விட்டிருந்தன! அவற்றின் உண்மையான வடிவங்களும் ஜீவனும் அவற்றை உருவாக்கி விட்டுப் போனவர்களே இப்போது திரும்பி வந்தாலும் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தன! அரசியல், சமூக, கலை கலாச்சாரத்தின் தொட்டில்களாய்த் திகழ்ந்தவை குழப்பம், சீரழிவு, சிக்கல், நிர்வாகச் சீர்கேடு ஆட்சியாளர்களின் ஆணவம், சுயநலம் ஆகியவற்றின் கூடாரங்களாய்த் திகழ்ந்தன!<br /><br />இந்த உலகத்தில் முன்னர் சமர்ப்பிப்பதற்கேற்ற சமூகப் பிரக்ஞையுடன் கூடிய சிறந்த திட்டங்களோ, மனித சமுதாயத்திற்கு அழைப்பு விடக் கூடிய அளவுக்கு உருப்படியான செய்திகளோ இல்லாத சுயநலம் பிடித்த ஒரு சமுதாய அமைப்பே அங்கே நிலவியது. தனது உயர் பண்பாடுகளையும் சிறப்புகளையும் இழந்து விட்டு, வாழ்க்கை ஊற்றே வற்றிப்போன வரண்ட சமூக அமைப்புத்தான் அங்கே காணப்பட்டது. மனிதச் சட்டங்களின் அடிப்படையில் அமைந்த நிலையான ஆட்சியும் அங்கே இருக்கவில்லை! வானுலக வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைந்த தூய்மையான வாழ்க்கை நெறியும் அங்கே காணப்படவில்லை!''<br /><br />சுருக்கமும் வேகமும் நிறைந்த இந்த விளக்கம் அண்ணல் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகைக்கு முந்தைய கால கட்டத்தில் மனிதனின் நிலையும் அவனது பண்பாடுகளும் எவ்வாறு நிலைகுலைந்து போயிருந்தன என்பதை மேலோட்டமாக நமக்குச் சித்தரித்துக் காட்டிவிடுகின்றது. இணை வைப்பாளர்களையும், வேதக்காரர்களையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த ஏகத்துவ மறுப்புக் காட்சிகள் சிலவற்றை திருக்குர்ஆனும் பல இடங்களில் படம்பிடித்துக் காட்டுகிறது.<br /><br />உதாரணமாக: அப்போதைய யூத, கிறிஸ்தவர்களைப் பற்றி,<br /><br /><span style="color:#3366ff;">009:030. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள். கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்.<br /><br />002:113. 'கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று யூதர்கள் கூறுகிறார்கள். 'யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்.<br /></span><br />திருக்குர்ஆனின் நிழலில் என்ற நூலிலிருந்து.<br /><br />*****<br />சமூக சீர்திருத்தம் மிக அவசியமான ஒரு கால கட்டத்தில், முந்தைய நபிமார்களின் தடத்தில் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய அழைப்புப் பிரச்சாரத்தைத் துவக்கினார்கள். பிரச்சாரப் பணிக்கு பேச்சாற்றல் அவசியமாக இருப்பது போல், எழுத்து வடிவிலும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்வது மாற்றங்களை ஏற்படுத்தும், ஏற்படுத்தின.<br />நபி (ஸல்) அவர்கள் அண்டை நாட்டு அரசர்களுக்கும் ஆளுனர்களுக்கும் எழுத்து மூலமாக விடுத்த இஸ்லாமிய அழைப்புக் கடிதங்கள் சிலவற்றை முந்தைய பதிவுகளில் கண்டோம். அதன் மீதான பிற மத நண்பர்களின் விமர்சனங்களையும் அடுத்துப் பார்போம்.<br /><br />தொடர்புடைய முந்தைய பதிவு,<br /><br /><a href="http://abumuhai.blogspot.com/2008/07/8.html">ஓமன் நாட்டு அரசனுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-8 </a>அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com0