Sunday, September 14, 2008

குர்ஆன் பிரதிகளில் பிழைகளும், திருத்தமும்!

குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளது. இது உலக முஸ்லிம்கள் ஒப்புக்கொண்ட ஒரு விஷயம். குர்ஆனில் எழுத்துப் பிழை இல்லை என்று ஒரு முஸ்லிம் வாதிப்பாரேயானால் அவருக்கு குர்ஆனோடு சிறுதும் பரிச்சயமில்லை என்று சொல்லி விடலாம்.

கருத்து வேறுபாடு இல்லாத அளவுக்கு, குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளது என்று ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் அதைக் குறிப்பிட்டு எழுதியும் இருக்கிறார்கள்.

(படத்தின் மீது சொடுக்கினால் தெளிவாகப் படிக்க முடியும்)



*****



*****



''குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்'' என்று விமர்சிக்கும் பிறமத நண்பர்கள், குர்ஆன் பிரதிகளில் உள்ள எழுத்துப் பிழைகளை குர்ஆனில் உள்ள பிழையாக்க முயலுகின்றனர். அதற்கான குறுக்கு வழிதான், ''குரான் பாதுகாக்கப்பட்டதா?'' என்று ஒரு தடத்தில் எழுதிக்கொண்டு, இன்னொரு சாட்கெட்டில் ''குர்ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்'' என்று எழுதிவிட்டால் ''குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை'' என்று அப்பாவிகளை நம்பவைத்து விடலாம் பாருங்கள்!

ஆனால், குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. வானவர் ஜிப்ரீல் குர்ஆனை எழுதிக்கொடுத்துச் சென்றிருந்தால் குர்ஆன் பிரதிகளில் உள்ள எழுத்துப் பிழைகளை இறைச் செய்தியில் (நவூதுபில்லாஹ்) உள்ள பிழையாகக் கொள்ளலாம். ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறைச் செய்தியைக் கொண்டு வந்து, நபி (ஸல்) அவர்களுக்கு ஓதிக் கற்றுக் கொடுத்தாரே தவிர எழுதிக் கற்றுக் கொடுக்கவில்லை. குர்ஆன் பிரதிகளில் உள்ள எழுத்துப் பிழைகள், குர்ஆனை எழுதிக்கொண்ட மனிதர்களால் எற்பட்ட எழுத்துப் பிழைகளாகும்.

வஹி ஓசையாக அருளப்பட்டதால் குர்ஆன் என்பது அதை ஓதும் ஓலியாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்..

எந்த மனிதருக்கும் எழுத்துப் பிழைகள் ஏற்படவே செய்யும். குர்ஆனை எழுதும் போதும் எழுத்துப் பிழைகள் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் சமுதாயம் அந்த எழுத்துப் பிழைகளையும் திருத்தாதாமல் தொடர்ந்து எழுத்துப் பிழைகளுடனேயே மறு பிரதிகளை அச்சடித்து வருகிறது.

குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பில்,

அச்சேற்றும் போது ஏற்படும் பிழைகளும் உள்ளன. மூன் பப்ளிகேஷன் வெளியீடு தமிழ்மொழி குர்ஆனில் மூலமொழியில் ஒரு வசனத்தை மேலும், கீழுமாக மாற்றி அச்சடித்து விட்டார்கள். இது சதாரணமாக மனிதருக்கு ஏற்படும் கவனக்குறைவு அவ்வளவுதான். இதற்காக பொருட்செலவு, உடல் உழைப்பு ஆகியவற்றை வீணாக்கி ஆயிரக்கணக்கான குர்ஆன் பிரதிகளை வெளியிடாமல் இருக்க வேண்டிய அவசியமில்லை.



வசனத்தைத் தனி ஸ்டிக்கரில் அச்சடித்து தவறராகப் பதியப்பட்ட வசனத்தின் மேல் ஒட்டிக்கொள்ளும்படி தனி ஏற்பாடு செய்தார்கள்.

ஏற்கெனவே வெளியிட்ட குர்ஆனில் அச்சுப் பிழைகள் ஏற்பட்டு, படிப்பவர்கள் அதைச் சுட்டிக்காட்டினால் அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்வார்கள். ஆனால் பிழையாக அச்சடிக்கப்பட்ட குர்ஆன் அப்படியேதான் இருக்கும். அதனால் குர்ஆனை மாற்றி எழுதி விட்டார்கள். அல்லது திருத்திவிட்டார்கள் என்று அர்த்தமல்ல.

குர்ஆன் பலவகையில் உள்ளது என்று பிறமத நண்பர்கள் எடுத்து வைக்கும் வாதங்களில் ஒன்று 019:019வது வசனமாகும். இந்த வசனத்தை குர்ஆன் பிரதிகளில் மாற்றி எழுதியுள்ளனர் என்பது அவர்களின் குற்றச்சாட்டு. இது குறித்து பிறமத நண்பர்களின் விமர்சனத்தை தனியாக எழுதுவோம். இங்கு நாம் சொல்ல வருவது,



0019:019வது வசனத்தில் ''லிஅஹப'' என்று இருக்க வேண்டும். மூன் பப்ளிகேஷன் வெளியிட்ட குர்ஆனில் ''லஅஹப'' என்று அச்சடித்துள்ளனர்.

இது குர்ஆனில் உள்ள பிழை இல்லை. அச்சேற்றும் போது கவனக்குறைவினால் ஏற்பட்ட தவறாகும். இதை அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்ள முடியும். இது போன்ற ஓரெழுத்து பிழைகளை மையமாக வைத்தே பிறமத நண்பர்களின் விமர்சனங்கள் அமைந்துள்ளது.

இப்படி உலகில் பல குர்ஆன் பிரதிகளில் அச்சுப் பிழைகள் ஏற்பட்டு அது திருத்தம் செய்யாமல் இருந்தால் அது மனிதர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட பிழைகளே தவிர, குர்ஆனில் உள்ள பிழைகள் இல்லை!

இறைவன் ஓசையாகவே குர்ஆனை அருளினான். என்பதால் குர்ஆன் பிரதிகளை, குர்ஆன் ஒலியோடு ஒப்பிட்டுப் பார்ப்பது மிக அவசியம்!

1 comment:

வஹ்ஹாபி said...

அன்புச் சகோதரர் அபூமுஹை,

உங்களுடைய விளக்கங்கள் ஆவணப் படுத்தப் படவேண்டியவைதாம்.

ஆனால், குர் ஆனைப் பற்றிய மேற்காணும் விமர்சனம் புதிய ஒன்றல்ல; ஆங்கிலத்திலும் அரபியிலும் நெடுங்காலத்திற்கு முன்னர் விளக்கம் கொடுத்து முடிக்கப் பட்ட விமர்சனத்தைத்தான் அரைகுறைகள் இப்போது தமிழில் வைத்திருக்கின்றனர் என்பதைத் தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.