Monday, October 09, 2006

இறைவனின் நியதிகள்!

இஸ்லாம் மார்க்கத்தை இறைவன் தேர்ந்தெடுத்து, இறைத்தூதர்களின் வழியாக ஆன்மீகப் போதனைகள் மக்களுக்குப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இறை வழிகாட்டியாக, இறைத்தூதர்கள் கொண்டு வந்த வேதங்களில் ''முந்தய வேதங்கள் ஏன் பாதுகாக்கப்படவில்லை?'' என்ற கேள்விக்கு ''திருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?'' என்ற தலைப்பில் விளக்கம் எழுதியிருந்தோம்.

சகோதரர் எழில் என்பவர் நாம் எழுதிய விளக்கத்தைப் படித்து விட்டு இறைவனுக்கு அறிவுரை வழங்கும் சில கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார். பொதுவாக கடவுளைப் படைப்பவர்களுக்கு கடவுளுக்கே அறிவுரை சொல்வது பெரிய விஷயமில்லை. அதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கும் மதம் ஆதரிக்கிறது. ஆதரிக்கட்டும் அதிலே நமக்கு ஆட்சேபனை எதுவுமில்லை! அவர் பதித்துள்ளக் கருத்துக்களைப் பார்ப்போம்.

திருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்படுகிறது? என்ற விளக்கத்திற்கு எதிர் கருத்துக்கள்...
****************************************************
//இந்த காரணத்தைப் பார்ப்போம்.

அல்லாவுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது என்று வைத்துக்கொள்வோம்.
அதனால் சீரழிக்கப்பட்டபின்னர் அதனை சரிக்கட்ட இன்னொரு இறைதூதரை அனுப்ப வேண்டிய நிலைக்கு வருகிறார்.
ஆனால், அல்லா எல்லாம் அறிந்தவர் என்றே கூறப்படுகிறது.

அல்லா எதிர்காலம் அறிந்தவர் என்று வைத்துக்கொள்வோம்.

எதிர்காலம் அறிந்த அல்லா, இது போல மனிதர்களின் சொந்தக்கருத்து திணிக்கப்பட்டு தான் அனுப்பிய வேதம் சீரழிக்கப்படும் என்று தெரிந்தவராகவே இருப்பார். ஆனால், அல்லா அதனை ஒன்றும் தடுக்கவில்லை. சீரழிக்கப்படக்கூடாது என்று உண்மையிலேயே அல்லா விரும்பியிருந்தால், எல்லாம் வல்ல அல்லாவால் அந்த பழைய வேதங்கள் சீரழிக்கப்படாமல் தடுக்க முடிந்திருக்கும். ஆனால் அவர் அதனை செய்யவில்லை. ஆகவே சீரழிக்கப்பட்டதற்கு அல்லாவே காரணம் என்று கூறலாம்.

ஆகவே இவ்வாறு வேதங்கள் மாற்றப்பட்டதற்கு அந்த வேதங்களை பின்பற்றுபவர்களை குறை சொல்வது முட்டாள்த்தனம்.//

****************************

//ஏன் ஒரு காலத்தில் விலக்கி வைக்கப்பட்டவை பின்னர் அனுமதிக்கப்பட வேண்டும்? அல்லது முன்னர் அனுமதிக்கப்பட்டவை ஏன் பின்னர் விலக்கி வைக்கப்பட வேண்டும்? இந்த பிரச்னையை விவாதம் இல்லாமல் முந்தைய வேதத்திலேயே தெளிவாக குறிப்பிட்டு விடலாமே? அதாவது, இந்த வருடத்திலிருந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்றுங்கள். இந்த வருடத்திலிந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்ற வேண்டாம். இந்த ஊரில் இருந்தால், இதனை பின்பற்றவேண்டாம் என்று முதலாவதாக கொடுத்த வேதத்திலேயே சுத்தமாக எழுதி வைத்துவிட்டு அந்த வேதத்தை மக்கள் சீரழிக்காமல் பார்த்துக்கொண்டிருக்கலாமே?//

*****************************

//மிகச்சரி. ஆனால், இது ஆட்சியாளராக வெவ்வேறு நபர்கள் வருவதால் நடக்கிறது. ஆனால், உலகத்து மக்களுக்கு வாழும்முறை எழுதித்தரும் அல்லா, ஒரே மாதிரியான மாற்றமில்லாத வேதத்தை கொடுத்து அதனை பாதுகாத்திருக்கலாமே?//
*******************************

//மாற்றமில்லாத ஒரே ஒரு வேதத்தை எந்த இறைதூதர் இடையூறும் இல்லாமல் ஒரு புத்தகத்தில் எழுதி, அதனை யாரும் எபோதும் படித்துக்கொள்ளலாம் என்று மனிதர்களின் மூளையில் மாற்றமுடியாதபடி செருகி விட்டால், இந்த இறைதூதர் பிரச்னையே இல்லையே? இறைதூதர் இப்படி நடந்துகொண்டார் அதனால் இந்த வேதம் சரியல்ல என்று மக்கள் கூற எந்த விதமான காரணமும் இல்லாமல், எல்லோரும் சரியாக தெரிந்துகொண்டிருப்பார்களே!// - எனக்குத் தேவையில்லாத வேலை.

********************************

//நிச்சயம். முழுமையடைந்த வேதமாக ஒரே ஒரு வேதத்தை கொடுத்து, அதிலேயே இந்த வருடத்திலிருந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்றுங்கள் என்று எழுதிக்கொடுத்திருந்தால், பிரச்னையே இல்லையே! இன்று ஒவ்வொரு இறைதூதரின் பின்னால் நிற்பவர்களுக்கும் பின்னால் வந்த இறைதூதரை இறைதூதர் என்று ஒப்புக்கொள்ளமாட்டேன் என்றும் அல்லது அதனைப் பற்றி விவாதம் செய்வதற்கும் இடமில்லாமல் போயிருக்குமே!//

**********************************

இறுதி வேதம் என்று குரான் மட்டுமே தன்னைத்தானே அழைத்துக்கொள்கிறது. அதனை நிரூபிக்க எந்த விதமான external references or proof இல்லை. இதனைப் போல எந்த புத்தகமும் தன்னைத்தானே குறிப்பிட்டுக்கொள்ளலாம். இந்த பிரச்னையைத் தீர்க்கும் வழி அல்லாவுக்கு புலப்படவில்லையா?//
//இதனை முன்னமே செய்திருக்கலாம்!//

***********************************

பொதுவாக, ''அனைத்தையும் அறிந்தவன் இறைவன்'' என்றால் எல்லாக் காலத்திற்கும் பொருந்துகிற மாதிரி சட்டங்களைக் கொண்ட - முழுமை பெற்ற ஒரே வேதமாக வழங்கிருக்கலாமே, அப்படி ஏன் செய்யவில்லை? இதைத்தான் மேலேயெழுப்பியுள்ள கருத்துக்களின் சராம்சம்.

இனி விஷயத்துக்கு வருவோம்.

இன்று கோடான கோடி முஸ்லிம் சமுதாயத்துக்கு வழங்கியிருக்கும் இதே சட்டம்தான், ஆண், பெண் என ஒரேயொரு ஜோடியாக இருந்தவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது முட்டாள்தனம்.

முதல் மனிதராகவும், முதல் நபியாகவுமிருந்த ஆதாமிற்கும், அவருடைய மனைவி ஏவாளுக்கும் வழங்கப்பட்ட சட்டம், இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என்பது அடி முட்டாள்தனம்.

முதல் நபி, இறுதி நபி, இந்த இரு நபிகளுக்குமிடையே - எவ்வளவு கால வித்தியாசங்கள். இதற்கிடையில் எத்தனை இறைத்தூதர்களின் வருகைகள் - காலத்திற்கேற்ப சட்டங்களை ரத்து செய்யப்பட்டும், புதிய சட்டங்கள் சேர்க்கப்பட்டும் வேதங்களை வழங்கி, சூழ்நிலைக்குத் தக்கவாறு இறைச் சட்டங்களை மக்களுக்கு அறிவிக்க, இறைத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தது ''இறைவன் அனைத்தையும் அறிந்தவன்'' என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

தனி மனிதர், ஒரு குடும்பம், ஒரு கூட்டம், ஒரு ஊர், ஒரு தேசம், பிறகு உலகம் இப்படித்தான் இறைச் சட்டங்கள் விரிவாக்கப்பட்டன. படிப்படியாகத்தான் விரிவாக்கப்பட வேண்டும். அதுதான் அனைத்தையும் அறிந்தவன் வகுத்த சட்டங்களாக இருக்க முடியும். மண்ணுலகில் ஒரு தனி மனிதர் ஒரு குடும்பம் மட்டும் இருக்கும் போது அங்கு ஆட்சியின் சட்டங்கள் அவசியமில்லை.

முதல் மனிதரும், முதல் நபியுமான ஆதாம் (அலை) அவர்களின் நேரடி முதல் சந்ததிகளுக்கு சகோதரியைத் திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தால் மனித இன மறு உற்பத்தி ஏற்படாமல் அழிந்து போய் விடும் என்பதால் சகோதரியைத் திருமணம் செய்வது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. மனித இனம் பெருகியபோது இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டு, திருமண உறவில் மாற்றங்கள் செய்யப்பட்டது.

மனிதனில் பலம், பலவீனம் இதை அடிப்படையாகக் கொண்டே முன்பு அனுமதிக்கப்பட்ட இறைச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, சட்டங்கள் இலகுவாக்கப்பட்டன. மூஸா (அலை) அவர்களின் சமூகத்திற்கு ஒரு நாளைக்கு 50 நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டிருந்தன. 50 நேரத் தொழுகையைக் குறைத்து, முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு ஒரு நாளைக்கு 5 நேரத் தொழுகையாகக் கடமையாக்கப்பட்டது.

காரணம் மனிதனின் பலவீனம். இன்றைய மனிதன் ஒரு நாளைக்கு 24மணி நேரம் போதவில்லை என்று சொல்லுமளவுக்கு அவசர உலகில் வாழ்ந்து வருகிறான். முந்தய சமுதாயத்துக்கு கடமையாக்கப்பட்ட 50 நேரத் தொழுகையே இவனுக்கும் கடமையாக்கப்பட்டால் நிறைவேற்ற இயலாது. முந்தய சமுதாயத்திலிருந்து பிந்தய சமுதாயங்கள் அனைத்து உலக விஷயங்களிலும் வேறுபாடுவார்கள் என்பதால் எல்லாக் காலங்களிலும், எல்லா சமுதாயத்துக்கும் ஒரே சட்டம் என்பது அனைத்தையும் அறிந்த இறைவனால் வகுத்த இறைச் சட்டமாக இருக்க முடியாது.

இஸ்லாம், எக்காலத்திலும் ஓரிறைக் கொள்கையில் எந்த மாற்றம் செய்திருக்கவில்லை. மனித வாழ்க்கை நெறியின் சட்டங்களில் சில சீர்திருத்தங்களைச் செய்தது, ஓரிறைக் கொள்கைக்கு எந்த விதத்திலும் பங்கம் எற்படுத்தியதாகாது!

//இறுதி வேதம் என்று குரான் மட்டுமே தன்னைத்தானே அழைத்துக்கொள்கிறது. அதனை நிரூபிக்க எந்த விதமான external references or proof இல்லை. இதனைப் போல எந்த புத்தகமும் தன்னைத்தானே குறிப்பிட்டுக்கொள்ளலாம். இந்த பிரச்னையைத் தீர்க்கும் வழி அல்லாவுக்கு புலப்படவில்லையா?// - மீண்டும் ஒரு அறியாமையின் வெளிப்பாடு!

அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வின் வார்த்தைகள் அடங்கிய வேதப் புத்தகம் திருக்குர்ஆன்! உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் திருக்குர்ஆன் தான் வேதவாக்கு! அதற்கு மேல் உயர்வான ஒரு வாக்கும் இல்லை, என்பதும் முஸ்லிம்களின் ஆழமான, அசைக்க முடியாத நம்பிக்கை!

திருக்குர்ஆனை நிராகரித்தோரை அது எச்சரிப்பதோடு நிறுத்திக் கொள்கிறது. நிர்ப்பந்தம் செய்து எவரையும் நம்பிக்கைக் கொள்ளச் சொல்லவில்லை. திருக்குர்ஆன் இறுதி வேதம் என்பதற்கு திருக்குர்ஆனை விட வேறு சான்றுகள் முஸ்லிம்களுக்குத் தேவையில்லை!

இறைவனின் நியதி!
அனைத்தையும் அறிந்த இறைவன், தனக்கென சில நியதிகளை வகுத்துக் கொண்டிருக்கிறான். இறைவன் தனக்குத் தானே விதித்துக் கொண்ட அந்த நியதிகளை எவருக்காகவும் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

அன்புடன்,
அபூ முஹை

10 comments:

Jafar ali said...

//இன்று கோடான கோடி முஸ்லிம் சமுதாயத்துக்கு வழங்கியிருக்கும் இதே சட்டம்தான், ஆண், பெண் என ஒரேயொரு ஜோடியாக இருந்தவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது முட்டாள்தனம்.//

//முதல் மனிதராகவும், முதல் நபியாகவுமிருந்த ஆதாமிற்கும், அவருடைய மனைவி ஏவாளுக்கும் வழங்கப்பட்ட சட்டம், இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என்பது அடி முட்டாள்தனம்.//

இதைவிட புரியும் வண்ணம் விளக்குவது கஷ்டமே. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!

வஹ்ஹாபி said...

//நிச்சயம். முழுமையடைந்த வேதமாக ஒரே ஒரு வேதத்தை கொடுத்து, அதிலேயே இந்த வருடத்திலிருந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்றுங்கள் என்று எழுதிக்கொடுத்திருந்தால், பிரச்னையே இல்லையே!//

இது ஒரு புதிய கேள்வியன்று. இதோ குர்ஆனின் பதில்கள்:

... உங்களில் ஒவ்வொரு வகுப்பார்க்கும் ஒவ்வொரு நெறியையும் வழியையும் நாமே ஏற்படுத்தினோம். அல்லாஹ் விரும்பியிருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே வகுப்பினராக ஆக்கியிருக்க முடியும் ... [005:048].

"இந்தக் குர்ஆன் முழுவதும் ஒரே தொகுப்பாக அருளப் பட்டிருக்க வேண்டாமோ?" என்று இறைமறுப்பாளர்கள் வினவுகின்றனர். (நபியே!) உம்முடைய உள்ளத்தை(ப்படிப்படியாக)ப் பக்குவப் படுத்துவதற்காகவே நாம் இவ்வேதத்தைச் சிறுகச் சிறுக அருளினோம் [025:032].

வாசகன் said...

ஏன் இறைவன் அப்படி செய்திருக்கக் கூடாது?
ஏன் இறைவன் இப்படி செய்தான்?
என்று கேட்பவர்கள் தன் சிற்றறிவை வழிபடுபவர்கள்.
மனிதனுக்கு அறிவை கொடுத்ததும் அதே இறைவன் தான்.
அறிவு இருப்பதால் தான் பிரச்சினைகள் வருகின்றன என்று சொல்லி அதையும் அரிந்துக் களைய ஆவல் கொள்கிறார்கள். உச்சாணிக்கொம்பில் இருப்பதாக எண்ணி வேரைக் களைய விரும்புகிறார்கள்.

இறையடியான் said...

தூங்குபவனை எழுப்பலாம் தூங்குவதை போல் நடிப்பவனை எடுப்பமுடியாது

இறைவன் தங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் அனைத்து வளங்களையும் கொடுப்பானாக

Sirajudeen said...

//நிச்சயம். முழுமையடைந்த வேதமாக ஒரே ஒரு வேதத்தை கொடுத்து, அதிலேயே இந்த வருடத்திலிருந்து இந்த வருடம் வரைக்கும் இதனை பின்பற்றுங்கள் என்று எழுதிக்கொடுத்திருந்தால், பிரச்னையே இல்லையே!//

சகோதரர் அபு முஹை அவர்களுக்குடைய முயற்சிக்கு எம் மனமார்ந்த பாராட்டுக்கள்.
சகோதரர் எழில் அவருடைய இந்த கேள்வியின் மூலம் ஒரே ஒரு வேதப் புத்தகம் அனைத்து சமூகத்திற்கும் கொடுக்கப்பட்டு அதை கொண்டு இந்த சமூகத்திற்கு இந்த பகுதியை பின்பற்றுங்கள். அடுத்த சமூகம் இதிலிருந்து இதுவரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஏன் அல்லாஹ் செய்யவில்லை என்று கேட்கிறார் என்று கருதுகிறேன்.
இப்படி கொடுக்கப்படாததற்கு காரணம், ஒரு சமூகம் தனக்கு கொடுக்கப்பட்டதையே அந்த இறைதூதர் சென்ற பிறகு மாற்றி அமைத்து விட்டது என்றால் அந்த சமூகத்திற்கு முழுமையான பின்வரும் சமூகத்திற்கும் தேவையான சட்டதிட்டங்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கினால் என்ன ஆகும? தனக்கு வழங்கப்பட்டதிலேயே மாற்றி அமைத்த சமூகம் தனக்கு பிறகு வரக்கூடிய சமூகத்திற்கு உள்ள சட்டத்தை விட்டுவைக்கும் என்று நினைக்கிறீர்களா? கண்டிப்பாக தனது திருவிளையாட்டை அந்த பகுதியிலும் காட்டியிருக்கும். இதனால் அனைத்தையும் அறிந்த வல்லோன் அல்லாஹ் அப்படி ஒரு ஏற்பாட்டை செய்யவில்லை. அந்தந்த சமூகத்திற்கு என்று தனிதனி வேதம் புத்தகத்தை அந்த காலகட்டத்தில் வந்த இறைதூதருக்கு அருளியுள்ளான். நாம் அனைவரும் எழுதியுள்ள விளக்கதிற்கு மேலும் சகோதர் எழில் அவர்களுக்கு சந்தேகம் இருந்தால் தராளமாக கேட்கட்டும். பதில் அளிக்க தயாராய் இருக்கிறோம். அவருக்கு இறைவன் நேர்வழி அருள பிரார்த்திக்கிறேன். இம்மார்க்கம் சத்தியமானது. இதிலே எல்முனை அளவுகூட சந்தேகம் இல்லை.

அபூ முஹை said...

ஜாபர் அலி, உங்கள் வருகைக்கு நன்றி!

************************

வஹ்ஹாபி அவர்களே! மிகப் பொருத்தமான இறைவனின் வார்ததைகளை மறுமொழியில் பதிவு செய்ததற்கு நன்றிகள்.

************************

கருத்து, உங்கள் வருகைக்கு நன்றி!
இஸ்லாத்தை விமர்சிக்கும் போது மட்டும், 'விதாண்டவாதிகள்' என்று எண்ணுமளவுக்கு நடந்து கொள்கின்றனர் சிலர்.

************************

இறையடியான், உங்கள் வருகைக்கு நன்றி! இறைவன் அனைவருக்கும் வளங்களை வழங்க வேண்டும்.

************************

சிராஜுத்தீன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

மறுமொழியில் அருமையானக் கருத்தைச் சொல்லியுள்ளீர்கள்!

*************************

அசலம், உங்கள் வருகைக்கு நன்றி!
நாலு வரிகள் என்றாலும் முத்தானத் தத்துவத்தைச் சொல்லியுள்ளீர்கள்!

*************************

பொதுவாக.
இறைவன் பற்றிய தர்க்கத்தில் ஒருவரை மேலும் குற்றவாளியாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை! எதிர் கருத்துக் கொண்டவரின் எழுத்தில் இறைவனைப் பற்றிய எள்ளல் இருந்ததால் இந்த பதிவுக்கு ''இறைவனின் நியதிகள்'' என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.

''நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எவ்வித அச்சமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்'' என்று கூறினோம். (திருக்குர்ஆன், 002:038)

நபி ஆதம் (அலை) அவர்களுக்குச் சொன்ன இந்த இறைக் கட்டளை, தொடர்ந்து நேர் வழி காட்டல் வேதங்கள் மூலம் அருளப்பட்டு, இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வழியாக நிறைவு செய்யப்பட்டது. இதுதான் ''இறைவனின் நியதி''

அன்புடன்,
அபூ முஹை

தருமி said...

- முந்தய வேதத்தை உண்மைப்படுத்த வந்த இயேசு எனும் ஈஸா (அலை) அவர்கள் முன்பு விலக்கப்பட்ட சிலவற்றை நீக்கி புதிய சட்டங்களை சேர்க்கும் (revision?) இறைத்தூதராக அனுப்பப்பட்டார்.

- வாழ்க்கை நெறிகளிலும் சில மாற்றங்களுடன் ஒவ்வொரு இறைத்தூதர்களும் வேதங்களைக் கொண்டு வந்தார்கள்.

- காலத்திற்கேற்ப சட்டங்களை ரத்து செய்யப்பட்டும், புதிய சட்டங்கள் சேர்க்கப்பட்டும்..

- தொழுகை நேரங்கள் ...50-லிருந்து 5; ஏன் முதலிலேயே 5தான் மனிதனால் எக்காலத்தும் முடியக்கூடியது என்பது தெரியாதா?
===========================

அபுமுஹை,

நான் கேட்க நினைத்தவற்றை எழில் கேட்டு, நீங்களும் பதில் கூறிவிட்டீர்கள். நன்றி.

ஏற்கெனவே சொல்லிய/கேட்ட விஷயங்கள்தான்; புதிதாக கேட்க ஒன்றுமில்லை.

மேலே குறிப்பிட்டது போல், மனிதர்கள் எழுதும் நூல்களில் revision செய்வதுபோல் மறை நூல்களிலுமா என்ற கேள்விதான் அடிப்படை. நாம் இருவரும் நம்பிக்கை, / விசுவாசம், / ஈமான் என்ற வேலிகளுக்கு இருபுறமும் நின்று ஒருவரை ஒருவரைப் பார்த்துக் கொண்டு நிற்கிறோம். அவ்வளவே. அதனால் வரக்கூடிய இடைவெளியே இது. நாம் நிற்கும் இடத்திலிருந்து பார்க்கும் பார்வைகளின் வித்தியாசங்களே இந்தக் கேள்விகளுக்குரிய காரணங்கள்.

மீண்டும்
அன்புடன் நன்றி.

எழில் said...

என் எழுத்துக்களில் இறைவனைப்பற்றிய எள்ளல் ஏதும் இல்லை என்றே கருதுகிறேன். அப்படியிருப்பின் அறியத்தாருங்கள் திருத்திக்கொள்கிறேன்.
இந்தக்கேள்விகள் குரான் கூறும் அல்லா பற்றியது மட்டுமே.
ஆனால் அபுமுஹை எழுதுவதில் எனக்கு ஏதும் சந்தேகங்கள் இருந்து ஏதேனும் கேட்டால், அவ்வாறு கேட்டதையே எள்ளல் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

//இன்று கோடான கோடி முஸ்லிம் சமுதாயத்துக்கு வழங்கியிருக்கும் இதே சட்டம்தான், ஆண், பெண் என ஒரேயொரு ஜோடியாக இருந்தவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது முட்டாள்தனம்.

முதல் மனிதராகவும், முதல் நபியாகவுமிருந்த ஆதாமிற்கும், அவருடைய மனைவி ஏவாளுக்கும் வழங்கப்பட்ட சட்டம், இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என்பது அடி முட்டாள்தனம்.
//

யாரை அபுமுஹை குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. நான் அப்படி கூறவில்லை.

//சகோதரர் எழில் அவருடைய இந்த கேள்வியின் மூலம் ஒரே ஒரு வேதப் புத்தகம் அனைத்து சமூகத்திற்கும் கொடுக்கப்பட்டு அதை கொண்டு இந்த சமூகத்திற்கு இந்த பகுதியை பின்பற்றுங்கள். அடுத்த சமூகம் இதிலிருந்து இதுவரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஏன் அல்லாஹ் செய்யவில்லை என்று கேட்கிறார் என்று கருதுகிறேன்.
இப்படி கொடுக்கப்படாததற்கு காரணம், ஒரு சமூகம் தனக்கு கொடுக்கப்பட்டதையே அந்த இறைதூதர் சென்ற பிறகு மாற்றி அமைத்து விட்டது என்றால் அந்த சமூகத்திற்கு முழுமையான பின்வரும் சமூகத்திற்கும் தேவையான சட்டதிட்டங்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கினால் என்ன ஆகும? //

சகோதரர் சிராஜுதீன் சரியாகவே என் கேள்விக்குபதிலளித்திருக்கிறார். ஆனால், அத்தோடு இன்னொன்றையும் குறிப்பிட்டிருந்தேன். அது அப்படி வழங்கிய முதல் புத்தகத்தை சீர்கெடாமல் அல்லா பாதுகாத்திருக்கலாமே என்பதுதான்.

அபூ முஹை said...

அன்புள்ள தருமி, உங்கள் மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

//மேலே குறிப்பிட்டது போல், மனிதர்கள் எழுதும் நூல்களில் revision செய்வதுபோல் மறை நூல்களிலுமா என்ற கேள்விதான் அடிப்படை.// - தருமி.

இந்தக் கேள்வி - இறைவனுக்கு பிந்தய காலத்தைப் பற்றிய அறிவில்லையா? இறைவன் அனைத்தையும் அறிந்தவன் என்றால் பிந்தய காலத்திற்குரிய சட்டங்களையும் முன்னரே கூறியிருக்க வேண்டும் எனப் - பலரால் முன் வைக்கப்படுகிறது.

பிறந்த குழந்தைக்கு மென்மையான உணவை கொடுக்கும் தாய்க்கு, அந்தக் குழந்தை வளர்ந்தால் கடின உணவை உண்ணும் என்பதை அறியதவளாக இருப்பாள் என்று எவரும் சொல்ல மாட்டார்கள். ஆறு மாதக் குழந்தைக்காக பிற்காலத்தில் அது உண்ணவிருக்கும் கடின உணவை வாங்கி சேமித்து வைக்கவும் மாட்டாள். அதனால் தன் குழந்தை வாலிபப் பருவத்தில் உண்ணும் உணவு பற்றிய அறிவு அந்தத் தாய்க்கு இல்லையென்று கூற முடியுமா.

இறைவன் அனைத்தையும் அறிந்தவன் என்றாலும் கால சூழ்நிலைக்கேற்ப சட்டங்களையே மனிதர்களுக்கு வழங்கினான். நடைமுறைக்கு சாத்தியமில்லாத சட்டங்களை வழங்கி வெறும் மதச் சடங்காக ஆக்கிக் கொள்ள வழிகாட்ட மாட்டான்.

அன்புடன்,
அபூ முஹை

அபூ முஹை said...

எழில் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! உங்கள் எழுத்தில் எள்ளலாக எனக்குப் பட்டதை இங்கு குறிப்பிடுகிறேன்.

//எனக்குத் தேவையில்லாத வேலை.// - இந்தத் தலைப்பே எள்ளலாகப் படுகிறதே! இல்லையா பின்னே..!

//இந்த காரணத்தைப் பார்ப்போம்.

அல்லாவுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது என்று வைத்துக்கொள்வோம்.
அதனால் சீரழிக்கப்பட்டபின்னர் அதனை சரிக்கட்ட இன்னொரு இறைதூதரை அனுப்ப வேண்டிய நிலைக்கு வருகிறார்.
ஆனால், அல்லா எல்லாம் அறிந்தவர் என்றே கூறப்படுகிறது.//

அல்லா எதிர்காலம் அறிந்தவர் என்று வைத்துக்கொள்வோம்.

எதிர்காலம் அறிந்த அல்லா, இது போல மனிதர்களின் சொந்தக்கருத்து திணிக்கப்பட்டு தான் அனுப்பிய வேதம் சீரழிக்கப்படும் என்று தெரிந்தவராகவே இருப்பார். ஆனால், அல்லா அதனை ஒன்றும் தடுக்கவில்லை. சீரழிக்கப்படக்கூடாது என்று உண்மையிலேயே அல்லா விரும்பியிருந்தால், எல்லாம் வல்ல அல்லாவால் அந்த பழைய வேதங்கள் சீரழிக்கப்படாமல் தடுக்க முடிந்திருக்கும். ஆனால் அவர் அதனை செய்யவில்லை. ஆகவே சீரழிக்கப்பட்டதற்கு அல்லாவே காரணம் என்று கூறலாம்.// - இதில் அடங்கியுள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் எள்ளல் இருக்கிறதா இல்லையா? என்பதை இதைப் படிப்பவர்கள்தான் சொல்ல வேண்டும்.

//ஆகவே இவ்வாறு வேதங்கள் மாற்றப்பட்டதற்கு அந்த வேதங்களை பின்பற்றுபவர்களை குறை சொல்வது முட்டாள்த்தனம்.// - இங்கு எதை, அல்லது யாரை முட்டாள்தனம் என்று குறிப்பிடப்படுகிறது என்பதை சகோதரர் எழில் தான் விளக்க வேண்டும்.

//சகோதரர் சிராஜுதீன் சரியாகவே என் கேள்விக்குபதிலளித்திருக்கிறார். ஆனால், அத்தோடு இன்னொன்றையும் குறிப்பிட்டிருந்தேன். அது அப்படி வழங்கிய முதல் புத்தகத்தை சீர்கெடாமல் அல்லா பாதுகாத்திருக்கலாமே என்பதுதான்.// - இதற்கான விளக்கத்தை நாம் ஏற்கெனவே இறைவனின் நியதியாகச் சொல்லியுள்ளோம் மேலும் சகோதரர் சிராஜுதீன் இதற்கு என்ன விளக்கம் தருகிறார் என்று பார்ப்போம்.

அன்புடன்,
அபூ முஹை