Sunday, October 01, 2006

ஆதாம், ஏவாள் எனும் ஜோடி.

இன்னுமா நம்புகிறார்கள்? என்ற தலைப்பில் எழில் என்பவர் ஒரு பதிவிட்டிருக்கிறார். ஆம் ''இன்னுமா நம்புகிறார்கள்...?'' இதே கேள்வியை வந்த வழிக்கே திருப்பினால் என்ன...?

பரிணாமப் பறிமாற்றங்களை அருகிலிருந்து பார்த்து குறிப்புகள் எடுத்துக் கொண்டாரா!? என்னத்தைச் சொல்ல..!

பரிணாமத்தின் உந்து விசையைக் கண்டுபிடிப்பதில் லாமார்க் போன்ற சிறந்த விஞ்ஞானிகளேத் தோற்றுப் போனார்களே! இவரென்ன விஞ்ஞானக் குஞ்சு! குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்பதை நிரூபித்து விட்டாரா..?

''கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்'' அடடா என்ன தத்தவமய்யா இது, சொன்னவர் யாராம்..? அட கலைவாணர்... எப்படி இருக்கிறது பாருங்கள், ''பாரிணாம உந்து விசைக்கு'' நகைச்சுவை நடிகரை ஆதாரம் காட்டுகிறார் பாருங்கள். (தயவு செய்து யாரும் நகைக்க வேணடாம்.)

எவ்வளவோ உயினங்களைக் கண்டு வருகிறோம். அவைகளெல்லாம் தம் இனத்தையே ஈன்றெடுக்கின்றன.

குதிரையிலிருந்து குதிரைக் குட்டியும்,

கழுதையிலிருந்து கழுதைக் குட்டியும்,

ஆட்டிலிருந்து ஆட்டுக் குட்டியும்,

குருவியிலிருந்து குருவிக் குஞ்சும்,

மாமரத்திலிருந்து மாங்கன்றும்,

இன்னும் குரங்கிலிருந்து குரங்குக் குட்டிதான் பிறந்து கொண்டிருக்கிறது,

மனிதனிலிருந்து மனிதக் குழந்தைதான் பிறக்கிறது.


அனைத்தையும் விட மேலாக, மனிதன் அறிவால் உயர்ந்து நிற்கிறான். எந்த உயிரினத்துக்கும் கிட்டாத - வழங்கப்படாத இந்தப் பேறறிவு எனும் மணி மகுடம் எந்த உந்து விசையால் பரிணாமம் பெற்றது என்பதை ''கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவர் விளக்குவாரா..?''

அன்புடன்,
அபூ முஹை

37 comments:

வஜ்ரா said...

குறங்குக்கு சிந்திக்கும் அறிவு (ஆறாவது அறிவு) இல்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?

யானை, பசு போன்ற உயிரினங்களுக்கும் சந்தோஷம், துக்கம், போன்றவை இருக்கிறது. இவை அனைத்தும் கனவு காணும் திரன் கூட படைத்தது. என்பது தெரியுமா...? சிந்திக்கும் திரன் கொண்ட மிருகத்திற்குத் தான் கனவு வரும். அந்த மிருகங்கள் சிந்திக்கும் அளவே சிந்திக்கும் பல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை...!!

இன்னும் ஆட்டிலிருந்து ஆட்டுகுட்டி தான் பிறக்கிறது, ஆகயால் ஆதாமிலிருந்து ஆதாம் குட்டி பிறந்தான் என்று சொல்லுவதைவிட சற்றே உயிரியல் தத்துவங்களையும் படியும் ஓய்.

சவூதி தமிழன் said...

ஆட்டிலிருந்து ஆட்டுக் குட்டி தான் பிறக்கும். மனிதனுக்கு மனிதக்குழந்தை தான் பிறக்கும். ஆனால் குரங்கிலிருந்து தான் தாம் பிறந்ததாக ஜெயராமன் என்பவரும் மேலே பின்னூட்டியுள்ள சங்கரநாராயணன் என்பவரும் சொல்லுகிறீர்களா இல்லை பிரம்மனின் தலையிலிருந்து பிறந்ததாகச் சொல்கிறீர்களா என்பதைத் தெளிவு படுத்திக் கொண்டு விவாதிக்க வரலாமே ஓய்!!!!

அபூ முஹை said...

வஜ்ரா உங்கள் வருகைக்கு நன்றி!

//குறங்குக்கு சிந்திக்கும் அறிவு (ஆறாவது அறிவு) இல்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?//

உங்களிடமிருந்து இன்னும் அதிகமாகவே எதிர்பார்த்தேன். ஆனால் உங்கள் சிந்தனை அடுத்த கட்டத்திற்கு செல்ல மறுக்கிறதே ஏன்..?

சிந்திக்கும் திறன் கொண்ட மிருகங்கள் இருப்பதை யார் மறுத்தது. எந்தக் குரங்கய்யா மனிதனை வைத்து வித்தை காட்டியது..? எல்லா மிருகங்களையும் மனிதன் கட்டுப்படுத்தி விடுகிறானே! எந்த மிருகமய்யா தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு மனிதனை தன் கட்டுப்பாட்டில் வைத்தது..?

உயிரியல் படித்தவரே உரக்கச் சொல்லும்! தமிழ் நாட்டு குரங்கொன்று, கேரளாவில் இருக்கும் தன் உறவினர் குரங்குக்கு கடிதாசி எழுதிப் போட்டு நலம் விசாரித்திக் கொண்டதென்று! இந்தியாவிலிருந்து ஒரு குரங்கு, அமெரிக்காவிலிருக்கும் தன் நண்பன் என்ற குரங்கோடு கணணியில் தமிழில் தட்டச்சி செய்திகளைப் பறிமாறிக் கொண்டதென்று!

அன்புடன்,
அபூ முஹை

╬அதி. அழகு╬ said...

"குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்" என்ற டார்வின் தியரி செத்து விழுந்து பல்லாண்டுகள் ஆகிவிட்டன என்பதுகூடத் தெரியாமல் பதிவு போடும் எழிலை என்னவென்பது?
டார்வின் தியரியின் சமாதிக்கு வேண்டுமானால் சுட்டி தரலாம்:
http://www.darwinism-watch.com/index.php

அது சரி, குரங்கிலிருந்து மனிதன் வந்தானெனில் எதிலிருந்து குரங்கு வந்தது?

குரங்கெல்லாம் மனிதர்களாகி விட்டார்களே! இன்னும் எப்படி குரங்கு என்று ஓர் இனம் குரங்காகவே குடும்பம் நடத்தி, குரங்காகவே குட்டி போட்டுக் கொண்டிருக்கிறது?

முன்னாள் குரங்குகள்தாம் ;-) விளக்க வேண்டும்.

எழில் said...

அன்புள்ள அபுமுஹை,
உங்கள் பதிவுக்கு நன்றி.

பல அறிவியல் விஷயங்கள் இப்படித்தான். பார்ப்பதும் பொய், கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்பதுதான் அறிவியல் என்று நினைக்கிறேன். உதாரணமாக தோற்றத்துக்கு தட்டை போல மனிதனுக்கு தோன்றும் பூமி உண்மையில் உருண்டையானது. அந்தக் காலத்தில் பூமி ஒரு உருண்டை என்று சொன்னபோது, அதெப்படி, அப்போது தண்ணீர் எல்லாம் வழிந்து போய் விடுமே என்று கேட்டார்கள்.
அதே போலத்தான் பரிணாம அறிவியலும். அதுவும் இந்த அறிவியல் நம்மைப் பற்றியது. உயிரினங்கள் பற்றியது. இந்த அறிவியலில் நடக்கும் பரிசோதனைகள் நடத்துவதற்கே வெகுகாலமாகும். ஏற்கெனவே பூமியில் இருந்து அழிந்த உயிரினங்கள் கொண்டும், பரிணாம அறிவியல் தோன்றிய பின்னர் நடந்த மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொண்டும், இதன் உண்மையை அறிகிறோம்.

எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளையும் குரான் கூறுகிறது என்றுதான் எழுதி வருகிறீர்கள் என்று படித்து வந்தேன்.

ஒரு சில அறிவியல் அறிவுகளை குரான் ஒப்புக்கொள்ளவில்லை என்று இப்போது கூறுகிறீர்கள்.

எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை குரான் ஒப்புக்கொள்ளவில்லை என்று பட்டியலிட்டால் அறிந்துகொள்ள உதவும்

உங்கள் பொறுமையான பதில்களுக்கு நன்றி
எழில்

சிறில் அலெக்ஸ் said...

நீங்க சொல்றமாதிரியான கடிதப் பரிமாற்றமும் இன்னும் பல வளர்ச்சிகளும் மனிதனுக்கு எல்லா கட்டத்திலும் இருக்கவில்லையே.
மனித அறிவும் வளர்கிறது, 100 வருடங்களுக்கு முன் இருந்ததைவிட இப்ப அதிகமான வளர்ச்சி. என்னைவிட என் மகன் ஸ்மார்ட்டாயிருக்கிறான்.
பரிணம வளர்ச்சி கண்கூடாயில்லை என்பது சரியாய் தெரியவில்லை.

கடவுளுக்கு பல யுகங்கள் ஒரு நொடி என்பது பரிணாம வளர்ச்சிக்கும் பொருந்தும். பல மில்லியன் வருடங்கள் கழிந்தபிந்தான் சில நிகழ்வுகள் நிகழ்கின்றன கடந்த 200 ஆண்டுகள் படித்தால் ஆராய்ந்தால் இதை கண்டுபிடித்துவிட முடியுமா, தெரியல.

இப்னு பஷீர் said...

எழில்,

பரிணாம கோட்பாடு 'அறிவியல்' என்ற தகுதியை இன்னும் அடையவில்லை. இனிமேலும் அத்தகுதியை அடையுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இன்றளவும் இது வெறும் யூகங்களும் கற்பனைகளும் நிரம்பிய ஒரு கோட்பாடு, அவ்வளவுதான்.

ஹாரூன் யஹ்யா என்ற அறிஞர் இது குறித்து நிறைய நூற்கள் எழுதியிருக்கிறார். அவை அனைத்தும் இந்த தளத்தில் இலவசமாகவே படிக்கக் கிடைக்கின்றன.
http://www.harunyahya.com/c_refutation_darwinism.php

இந்நூற்களில் அவர் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு இதுவரையில் யாராவது திருப்திகரமான பதிலளித்திருந்தார்களென்றால் தயவு செய்து அறியத் தாருங்கள்.

சாம்பிளுக்கு ஒரு கேள்வி:
பரிணாம கோட்பாட்டுக்காரர்களின் முன் வைக்கப்படும் முதல் கேள்வி 'உலகில் முதல் உயிரினம் எப்படி தோன்றியது?' என்பதுதான். அதற்கு கோட்பாட்டுக்காரர்களின் பதில்: உலகம் முழுவதிலும் உயிரற்ற பொருட்களான கற்பாறைகள், மண், வாயு ஆகியவையே நிரம்பி இருந்தபோது, காற்று, மழை மற்றும் மின்னல் ஆகியவற்றின் விளைவால் தற்செயலாக தானாகவே உலகின் முதல் உயிரினம் தோன்றியிருக்க வேண்டும். அதாவது, உயிரற்ற பல பொருட்களின் கூட்டு விளைவால் ஒரு உயிரினம் தோன்றியது. இந்த விளக்கம் 'ஒரு உயிரிலிருந்துதான் மற்றொரு உயிரினம் உருவாக முடியும்' என்ற அடிப்படை உயிரியல் கொள்கைக்கு மாற்றமாக இருக்கிறது. பரிணாம கோட்பாடு சொல்வது உண்மை என்று ஒப்புக்கொண்டால், இன்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உயிரியல் கொள்கை பொய்யாகி விடும். இதற்கு பரிணாம கோட்பாட்டுக்காரர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?

இறையடியான் said...

//நீங்க சொல்றமாதிரியான கடிதப் பரிமாற்றமும் இன்னும் பல வளர்ச்சிகளும் மனிதனுக்கு எல்லா கட்டத்திலும் இருக்கவில்லையே.
மனித அறிவும் வளர்கிறது, 100 வருடங்களுக்கு முன் இருந்ததைவிட இப்ப அதிகமான வளர்ச்சி. என்னைவிட என் மகன் ஸ்மார்ட்டாயிருக்கிறான்//

மனிதன் நாகரிகம் பிறப்பதற்க்கு முன்னே தன் சிந்தனை ஒட்டங்களை ஓவியமாக வரைந்து வைதானே அதற்க்கு அஜந்தா குகை ஓவியங்களெ சாட்சி இது போலாவது குரங்கள் வரைந்துவைத்திருக்க வேண்டுமே ஏனெனில் மனிதன் பிறப்பதற்க்கு முன்னமே மிருகங்கள் உள்ளன.

உங்கள் கூற்றுப்படி பார்த்தாலும் இதுவரை எந்த குரங்கும் மனிதக் குழந்தையை ஈன்றெடுக்கவில்லையே
அதைக்கூட விட்டு விடுவோம் உங்கள் பரினாமவள்ர்ச்சி ஏன் மனிதனுடன் நின்றுவிட்டது மனிதன் தோன்றி பல்லாயிரக்கண்க்கான வருடங்கள் ஆகிவிடனவே இன்னும் மனிதனிடமிருந்து எந்த உயிரினமும் தோன்றவில்லையே பதில் சொல்வார்களா இவர்கள்

Unknown said...

டார்வினின் பரிணாம வளர்ச்சி தியரியின் அடிப்படையையே தகர்க்கும் கேள்விகள் விடையளிக்க முடியாததாகவே இன்னும் இருக்கிறது.

உதாரணமாக ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு வரும்போது பழையதைவிட சிறந்த அமைப்பைப் பெற வேண்டும். அதை எந்த அடிப்படையில் அளவிடுவது?
மனிதனின் இதயத்தை ஒத்த அமைப்பை மனிதனுக்கு முந்தைய இனமான மனிதக்குரங்கு பெற்றிருக்க வேண்டும். ஆனால் உண்மையில் விலங்குகளில் பன்றிக்குத்தான் இதய அமைப்பு கொஞ்சமாக மனிதனுடன் ஒத்துப்போகிறது என அறிவியல் உரைக்கிறது.
இதுபோல் இன்னும் ஏராளம் கேள்விகள்

அது வெறும் தியரிதான் நிரூபிக்கப்பட்ட உண்மையில்லை. தியரிக்கும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கும் வித்தியாசம் தெரியாமல்..... சிலபேர்.

வஜ்ரா said...

குகையில் படம் வரையுறதுன்னாலே அஜந்தா தானா? அது புத்தர் தோன்றி மறைந்த பின் இருந்த கால கட்டத்தில் வரையப் பட்டது சாரே...

கொஞ்சம் வுட்டா...போதுமே...கேப்பையில நெய் வடியுதும்பீங்க போலிருக்கே...

குகை ஓவியங்கள் (உண்மையான..) மனிதன் அதாவது ஹோமோ சேபியன்ஸ் மட்டுமே வரையவில்லை. நியாண்டர்தால் என்னும் மனிதனின் சக Species கூட வரையும் தகுதியுடையது...

மூளை வளர்ச்சி என்பது அவர்களுக்கு மனிதனைவிட குறைவு...ஒத்த வயதுடைய நியாண்டர்தாலுக்கும் மனிதனுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் அதுவே...

மனிதன் அதிக மூளைவளர்ச்சி பெற்றவன்...அதே வயதுடைய நியாண்டர்தால் 6 அல்லது 10 வயதுக் குழந்தை பெறும் மூளை வளர்ச்சியே பெற்றிருப்பான்...

இன்றும் சிம்பன்சீக்கள் 3-5 வயது மனிதக் குழந்தைக்கு உள்ள மூளைவளர்ச்சி, சிந்திக்கும் திரன் மட்டுமே கொண்டவை...அதற்கு மேல் அதனால் சிந்திக்க முடியாது.

மனிதன் நாளுக்கு நாள் பெறுகிக் கொண்டிருக்கிறான்...

20.000 ஆண்டுகளின் நடக்கும் விஷயத்தையெல்லாம் யோசிக்கும் அளவிற்கு எங்கள் மூளை பக்குவப்பட்டுவிட்டது...

இன்னும் 1400 வருஷத்துக்கு முன்னே சொன்ன புத்தகத்தைத் தவிற மற்றதெல்லாம் பொய் என்று நம்பும் உங்கள் மூளை இருக்கே...அதைவிட எங்கள் மூளை பரிணாம வளர்ச்சி அடைந்ததே...!!

அபூ முஹை said...

அன்பின் எழில் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

//எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளையும் குரான் கூறுகிறது என்றுதான் எழுதி வருகிறீர்கள் என்று படித்து வந்தேன்.//

எழில்,
அநேகமாக இது மிகையாகச் சொல்லப்பட்ட வார்த்தையாகும்.

திருக்குர்ஆன் ஒரு விஞ்ஞான நூல் அல்ல! திருக்குர்ஆன் விஞ்ஞானத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறது என்பதும் தவறானக் கருத்தாகும். இறைவனால் மனித குலத்துக்கு வழிகாட்டியாக அருளப்பட்டது தான் திருக்குர்ஆன்.

திருக்குர்ஆன் சில வசனங்களில் விஞ்ஞானத்தைப் பற்றியும் பேசுகிறது அவ்வளவுதான். அது பேசும் விஞ்ஞானம் பற்றி பரிசீலிக்க முன் வருபவர்கள், திருக்குர்ஆனை ஒரு மதம் சார்ந்த நூலாகக் கருதி அணுகினால் அதில் நடுநிலையைக் காண முடியாது. மதம் என்ற வெறுப்பு, சொல்ல வரும் விஷயத்தை விளங்கச் செய்யாமல் ஆக்கிவிடும். உள்ளத்தில் வெறுப்பு நிறைந்திருக்கும் போது அறிவு விடை பெற்று விடும்.

எனவே எந்தவொரு விஷயத்தையும் காய்தல், உவத்தலின்றி விருப்பு, வெறுப்பின்றி அணுக வேண்டும் அதுவே நேர்மையாகவும் இருக்கும்.

''மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான்'' என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதைப் பொய்யாக்க வேண்டுமென்றால் அதாவது, மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தான் என்றால் அது நிரூபிக்கப்பட வேண்டும். அதுவரை மனிதன் களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பது சரியில்லை என்று சொல்வது வெறும் மேம்போக்கானவர்களின் வார்த்தையாகவே கணக்கிலெடுக்க வேண்டுமேயல்லாது அதுதான் உண்மை என்று ஆகிவிடாது.

உலகில் இன்று இருக்கும் மொத்த மனித குலமும் ஒரு தாய், தந்தையிலிருந்தே பல்கிப் பெருகியவர்கள் என்று திருக்குர்ஆன் ஆணித்தரமாகக் கூறுகிறது. எல்லாக் காலகட்டத்திலும் மனிதனுக்கு மனிதன் தான் முன்னோர்களாக இருந்திருக்கிறார்கள். எந்தக் காலத்திலும் மனிதனின் முன்னோர் குரங்கு என்பதை திருக்குர்ஆன் ஒப்புக் கொள்ளவில்லை மாறாக மறுக்கிறது.

அன்புடன்,
அபூ முஹை

சிறில் அலெக்ஸ் said...

ஆதாம் ஏவாளுடன் கடவுள் எந்த மொழியில் பேசினார்? அப்படி பேசினாரென்றால் அதை எழுத்தில் வைக்காமல் போனதெப்படி? ஆதாம் ஏவாளைப் பற்றியகதைகள் யூத மூலங்களில் மட்டுமல்லாது அவற்றின் சமகால கலாச்சாரங்களிலும் காணப் படுவதெப்படி?

மனிதனை கடவுள் உருவாக்கும்போதே மொழி இருந்ததென்றால் அவனை கலாச்சாரமில்லாமல் படம் வரைந்து வைத்தவன் எனக் கூறுவது எப்படி முறையாகும்?

பரிணாம வளர்ச்சி அறிவியல் இல்லையென்றால் மனிதனுக்கும் குரங்குக்கும் இடைப்பட்ட இனங்களின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு ஆராயப்படுவதெல்லாம் எப்படி
குரானை கடவுள் முதலிலேயே வழங்காமல் பின்னால் வழங்கியது ஏன்? குரானுக்கு முன்னால் வந்த நபிகளை (இது எல்லா மதங்களிலும் உண்டு எனும்போது) அல்லாதான் அனுப்பினார் என்றால் குரானுக்கும் (இஸ்லாமுக்கும்) மற்ற மதக் கோபாடுகளுக்கும் பல வித்தியாசங்கள் இருப்பதேன்?

எனக்குத் தோன்றிய சில கேள்விகள்.

இயற்கை நேசி|Oruni said...

I feel, placing some facts over here is useless and baseless.

//'ஒரு உயிரிலிருந்துதான் மற்றொரு உயிரினம் உருவாக முடியும்' என்ற அடிப்படை உயிரியல் கொள்கைக்கு மாற்றமாக இருக்கிறது. பரிணாம கோட்பாடு சொல்வது உண்மை என்று ஒப்புக்கொண்டால், இன்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உயிரியல் கொள்கை பொய்யாகி விடும். இதற்கு பரிணாம கோட்பாட்டுக்காரர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?//

ஏனுங்க, ஒரு சினை முட்டையும், ஒரு விந்தணுவும் இணைந்து இம்புட்டு பெரிய ஜடங்களான நம்மை, இரண்டு, நான்கு, எட்டுன்னு பல்கிப் பெருகிதானேங்க எங்கன மூஞ்சி இருக்கிறது, எங்கன கையிருக்கிறது, இப்படி எல்லா செய்திகளையும் மரபணு மூலம செய்தி கோர்வைகள் எடுத்திட்டு போறது, யாரு சொல்லி?

அதே மாதிரி தானப்ப இந்த Primordial Source or Juiceன்னு சொல்ற உயிர் கனிமங்களை கொண்ட க்காமட் ஒன்று பூமியின் மீது மோதி போது இங்கு உயிர் தோன்றுவதற்கு காரணியாக அமைந்திருக்கலாம். அல்லது இங்கு இருக்கும் வேதிய பொருட்களை கொண்டே முதல் செல் ஒன்று தோன்றி இருக்க அனேக வாய்ப்புகள் அதிகமே, என்று சிந்திச்சு அது தொடர்ப நிறைய காலங்களையும் ஆராய்ச்சில் செலவு செஞ்சு சிந்திக்கும் யாவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய கூற்றுக்களுடன் வழங்கப்பட்டுள்ளது.

என்கிட்ட காட்டு இது எல்லாத்துக்கும் ப்ரூப்பேன்னு அடம் பிடிச்ச எப்படிப்பா. சின்னப் பிள்ளைங்க விளையாட்டு மாதிரி இருக்குது. மில்லியன் வருஷமுன்ன என்னமோ ஒரு நூற்றாண்டு மாதிரி நினைச்சுக்கிட்டும் பேசிகிட்டும் இருக்கிறோம்.

சரி 68 மில்லியன் வருஷங்களுக்கு முன்னால் இந்த சூப்பர், டூப்பர் மூளையைக் கொண்ட கடவுளின் புதல்வன் எங்கே இருந்தான்? உடனே நீங்கள் அப்ப மனுஷன் இருந்தானா இல்லையான்னு எப்படி உங்களுக்கு தெரியும், பக்கத்தில இருந்து நோட் எடுத்தியான்னு கேட்கப் புடாது... யோசிக்கணும், அந்த புத்தகத்தை கொஞ்சம் தள்ளி வைச்சுப்புட்டு மத்த புத்தகங்களையும் படிக்கணும்...

இப் பூமியில் நம்மின் தற்காலிக இருப்பும் ஒரு சான்ஸ் மட்டுமே... இதில் இன்னும் கொஞ்ச காலங்களுக்கு இருந்து போயிச் சேறுவதா, இல்லை அடித்துகொண்டு சீக்கிரமா போயிச் சேறுவதா என்பது நமது கையிலும் இருக்கிறது.

டைனோசார்களுக்கு அதி பயங்கர பசின்னா, நமக்கு அதி பயங்கர "மதம்"பிடிச்ச மதம் பிடிச்சிருக்கு இது இரண்டுமே எடுத்திட்டு போய்ச் சேர்ந்த இடம் ஒண்ணாத்தான் இருக்கப் போகுதோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு...

வஜ்ரா said...

விவாதத்திற்கு மட்டுமே..

ஒரு உதாரணமாக நான் டார்வின் மதத்தைச் சார்ந்தவன்... நீங்கள் முஸ்லீம்..

நான் சொல்கிறேன்...மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று...

மனிதன் களிமண்ணிலிருந்து பிறந்தான் என்பது நிறூபிக்கப் படும்வரை குரங்கிலிருந்து பிறந்தான் என்பது தான் உண்மை...

மன்னிக்கவேண்டும்...அறிவு இயலில் உண்மைக்கு வேறு definition உள்ளது..

ஜயராமன் said...

அபூ அவர்களே,

தங்களின் டார்வின் கொள்கை எதிர்ப்பு நியாயமானதே. இறைவன் மனிதனை தன் பிம்பமாகவே படைத்தான் என்று ஆப்ரஹாமிய மதங்கள் சொல்லும் கோட்பாடு இந்து மதங்களுக்கு புரிந்த கோட்பாடுதான். குரங்கிலிருந்து மனிதன் வந்ததாக எந்த மதமும் சொல்லவில்லை.

அதே சமயம், குரானின் இந்த ஆதாம், ஏவாள் கொள்கைகள் பல கேள்விக்கு ஆளாகின்றன. இந்த கதைகளை குரானில் படிக்கும் என்னைப்போன்ற காபிர்களுக்கு புரியாத, மனதுக்கு சமாதானம் ஆகாத பல விஷயங்கள் இருக்கின்றன.

உதாரணத்துக்கு, பங்களாதேஷ் இஸ்லாம் அறிஞர் அஸ்கர் எழுதிய ஒரு கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே கொடுக்கிறேன். முழுகட்டுரை http://www.faithfreedom.org/Articles/MuhammadAsghar30823.htm இங்கே கிடைக்கும்.

இங்கு குரானின் வசனங்களை ஆராய்ந்து பார்த்தால் அங்கு இறைவன் நடவடிக்கைகள் பல கேள்விகளை கிளப்புகின்றன. அவற்றுக்கு நீங்கள் தயை செய்து விடை கொடுத்து தெளிவிக்க வேண்டும்.

+++++++++++++
The Quran speaks of a dubious methodology that God allegedly used to control the mind of the first man and his succeeding generations. Let us explore his alleged modus operandi:

God lived in a vacuum from the time of his inception. After suffering from inactivity and loneliness for a long time, he came up with the idea of having the earth populated by humans, faunas and floras. To make sure what he planned to do was going to be good, he consulted the angels. To them, the creation of animals, plants, trees and mountains etc. appeared to be alright, but they did not like the idea of having the earth populated by humans who, they knew, were going to "make mischief and shed blood" (2:30).

The tone of the Quranic language makes it clear that the God that Muhammad referred to bore all the characters of a man. I recommend the discerning readers to read "God's Phallus" written by Rabbi Howard Eilberg-Schwartz. He proved with forceful arguments that the God of the Jews, Christians and the Muslims bears all characteristics of a man.

Also, a deep reading into Muhammad's statements that appear in the Quran makes it clear that he and God was one and the same person. Separating him from God is an impossible task.

The angels have no free will nor do they have the ability to say anything without God's permission. Therefore, the angels' forecast into futurity amounted to defying God's authority and power. He was upset. Calling them ignorant, God rejected their opposition and created, out of clay, the first human he called Adam.

In fashioning Adam, God used his legs, hands, eyes, ears and mouth (cf. 7:195). He used his hands for molding the clay into a human figure. When he saw it looked fine, he needed sun's rays to make it dry. When he located a suitable spot, he walked and placed the statue there for drying up. When it dried up, he raised the statue to his mouth's level and then passed his breath into its lungs. In no time, Adam began acting like a normal human being.

The Quran does not tell us how his wife (it has not given her a name) came into being. For her story, I need to refer to the Torah, which tells us that God had created her from one of Adam's ribs. Mindful of the pain that the surgery was going to cause, God caused a deep sleep to fall upon Adam and when he was fast asleep, he extracted one of his ribs. He made a woman out of the rib and then presented her to Adam. Adam lost no time in recognizing her; he also remembered it was he who had contributed his bone for her making (Gen. 2:21-23). Knowing that she was going to be the mother of all living, Adam called her Eve (Gen. 3:20).

In the long history of mankind, Adam and Eve were the only humans who did not have to suffer the pains of birth, unstable stages of infancy and childhood. They also did not have to struggle for anything in their life, for God made sure that they had everything to make their lives comfortable and pleasant.

After creating Adam and his mate, God drew a plan for tackling the insolent angels. The plan envisioned a learned Adam to prove that what they had told God about the humans' conduct on earth was based on falsehood. To implement his plan, God needed to prepare Adam in all respects.

He taught Adam the nature of all things. The angels were not at all involved in the teaching process. When Adam became fully prepared, God placed all things before the angels and demanded that they tell him the nature of those things, if they were truthful (2:31). Realizing how angry God was at them, the angels adopted a diplomatic posture that they believed was gong to sooth his injured ego. They told him: Glory to thee. Of knowledge we have none, save what Thou hast taught us: in truth it is Thou who art perfect in knowledge and wisdom (2:32).

Hearing the angels admit their ignorance, God asked Adam to narrate the nature of the things. Since God had prepared him for the occasion, Adam had no difficulty in describing what God wanted him to describe. Pleased by his disciple's performance, God thundered to the angels: Did I not tell you that I know the secrets of heavens and earth, and I know what ye reveal and what ye conceal? (2:33).

The fact that the angels conceal things from God infuriated him immensely. In a rage, he ordered the angels to bow down before Adam, his protégé (2:34). This order was to humiliate the angels. Sensing risk to their existence, all angels bowed down. A jinni who, it seems, was, at the time, in the angels' company did not bow down before Adam. Since God had ordered only the angels to bow down before Adam, the jinn rightfully believed that the order did not apply to him (read 18:50 to know who Iblis was) and as such, he was not required to do what the angels did before his eyes. God felt insulted by the jinni's sense of righteousness, honor and dignity.

It was God's plan to have mankind bow down before his authority. This ritual should have begun with the first humans he created in heaven. But instead of having them bow down before him, he made the angels bow down before the humans. If he did not want the humans to bow down before him until after Muhammad had arrived, the only conclusion one can draw from his action is this: he forced the angels to bow down before Adam not only to humiliate them, but also to press them into mankind's service.

The ways in which God is said to have been conducting himself appears to defy common sense. Strictly speaking from the viewpoint of a master, it is inconceivable that he would ever let his servant ride on his shoulders. God does not appear to have understood the difficult relationship that a servant is required to maintain with his master. Had he understood the difference between a servant and a master, he would not have posted two angels on each of their master's shoulders to record their acts and deeds. The issue of the servants watching over their masters becomes more demeaning for the latter; it emanates from the fact that their guards have the habit of distorting facts through lying and concealment.

Realizing that the jinni was right, God controlled himself and passed off the event by calling him haughty. He dared not punish the jinni for a crime he did not commit. God was also afraid of the jinni's retaliatory nature hence his retrained reaction toward his alleged disobedience of his command.

Regrettably, ordinary Muslims as well as their scholars have failed to accept the fact that God had not required the jinni to bow down before Adam. Their failure stems from the fact that accepting the truth will nullify the Quranic story on Adam and Eve's expulsion from heaven. To defend their position, Muslim scholars overlook the contents of the relevant verses of the Quran and insist that God's order equally applied to the lone jinni who, as I have said earlier, was in the company of the angels. God's alleged order was specific; he used the specific Arabic word "malaikati" in his order (2:34 et al), which means angels, and not the jinni.

Denying the truth, one reputed Muslim scholar took issue with Iblis's accusation against God (7:16, 15:39). Trying to explain the Arabic word "agwaitani" that appears in verse 15:39, he stated: â?¦ Satan as the Power of Evil cannot be straight or truthful even before God. By his own arrogance and rebellion he {Iblis} fell; he attributes this to God. â?¦ (Abdullah Yusuf Ali, The Holy Quran, Vol. 1, p. 644).

The learned scholar is malicious, to say the least, for there is no statement in the Quran that supports his allegations against the so-called devil.

His score with the angels thus settled, God turned to Adam and his wife. He told them to dwell in the Garden (i.e. heaven) and to eat of the bountiful things therein. He, however, prohibited them from eating the fruit of a particular tree, lest they get harmed and become transgressors (2:35, 7:22 et al).

At the time God directed their attention to the forbidden tree, both Adam and his wife were blind. Their inability to see afforded him the opportunity to entangle them in his net of treachery.

Impersonating Iblis, God led the blind couple to the forbidden tree and induced them to eat its fruit. While they were eating the fruit, God disappeared from their midst. Eating over, their eyes opened up and Adam and his wife found themselves naked. Seeing their discomfort, God called unto them and asked: Did I not forbid you that tree and tell you that Satan was an avowed enemy unto you? (7:22). (The Quran does not say that Adam and Eve had ever seen Iblis with their own eyes, nor does it say that they had seen him in their midst after their eyes opened up).

Having already experienced God's deceptive and fearsome nature, Adam was quick in admitting his mistake. God, being inclined to pardon him, taught him how to seek his forgiveness. Once Adam approached him appropriately, God forgave his sin (2:38).

It appears from the Quran that Adam's wife also had sought his forgiveness (7:23), but instead of forgiving her, God expelled her from heaven (7:24). Consequently, she lived her entire life with the guilt of sin; her female descendants still remain accursed in the sight of God.

After destroying Adam and his wife's self-confidence and moral, God ordered the trio (Adam, his wife and Iblis) to get out of heaven. Both the humans complied, but the jinni refused. He knew that he had committed no sin nor was he responsible for the act of Adam and his wife. He also knew that it was God who had used his name not only to malign him but also to expel him from heaven.

Being familiar with God's power and his ability to manipulate, Iblis protested mildly to him for having "put him in the wrong" (15:39). God did not rebut his allegation, rather he granted him the wish that was intended to compensate him for the injuries he suffered at God's hand (15:41, 42).

I have delved into the story of Adam and Eve to make a point and it is this: Not only men, even God used his power (provided what the Quran says is true) to subdue, control and rule over the meeker and the weaker humans. This has been going on from the time immemorial and it would continue to affect the humanity for so long as it would live on the planet earth.

Now, let us look at the role that Muslims have played in the affairs of the world; how they treated their subjects and what the non-Muslims of the present time think about them. In my endeavor to keep the narrative short, I will skip the non-essential elements of the Muslim behavior.

Muhammad, through Islam, united his people under a single banner. He also installed them at the helm of the Muslim religious rites. Hajj stands at the top of the list. In fact, by appointing his kindred the Custodian of the Ka'aba, he bestowed on them the perpetual leadership of the entire Muslim community, a privilege that the Saudis are still enjoying without ever facing forceful opposition from other Muslims of the world.

+++++++++

நன்றி

அபூ முஹை said...

சிறில் அலெக்ஸ் உங்கள் வருகைக்கு நன்றி!

//ஆதாம் ஏவாளுடன் கடவுள் எந்த மொழியில் பேசினார்? அப்படி பேசினாரென்றால் அதை எழுத்தில் வைக்காமல் போனதெப்படி? ஆதாம் ஏவாளைப் பற்றியகதைகள் யூத மூலங்களில் மட்டுமல்லாது அவற்றின் சமகால கலாச்சாரங்களிலும் காணப் படுவதெப்படி?//

ஆதாம், ஏவாளுடன் கடவுள் பேசியிருக்கிறார், அது எந்த மொழி என்று அறிவிக்கப்படவில்லை. எந்த மொழியாக இருந்தாலும் மொழி அறியப்பட்டால்தான் சம்பவங்கள் உண்மை என்று எந்த நியதியும் இல்லை.

மனித இனத்தின் முதல் மனிதனைப் படைத்தது பற்றி, இறைவன் இறுதி வேதமான திருக்குர்ஆனில் மட்டும் கூறவில்லை. திருக்குர்ஆனுக்கு முன்னுள்ள வேதங்களிலும் முதல் மனிதனைப் படைத்தச் செய்தியை இறைவன் சொல்லியிருக்கிறான். அப்படி சொல்லவில்லை என்ற பேச்சே இல்லாதபோது //ஆதாம் ஏவாளைப் பற்றியகதைகள் யூத மூலங்களில் மட்டுமல்லாது அவற்றின் சமகால கலாச்சாரங்களிலும் காணப் படுவதெப்படி?// - ஆதாம் ஏவாள் பற்றி திருக்குர்ஆன் மட்டும் சொல்லவில்லை முந்தய வேதங்களிலும் இவர்களின் வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது என்பதை நாம் மறுக்கவில்லை.

//மனிதனை கடவுள் உருவாக்கும்போதே மொழி இருந்ததென்றால் அவனை கலாச்சாரமில்லாமல் படம் வரைந்து வைத்தவன் எனக் கூறுவது எப்படி முறையாகும்?//

மனிதனைப் படைப்பதற்கு முன்பே மொழி இருந்திருக்கிறது. யார் பேசியது? இறைவனும் வானவர்களும் உரையாடியிருக்கிறார்கள்.

ஒவியம் வரைந்ததை எழுதி இறையடியான் சற்று சருக்கியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. பின்னூட்டத்தை அனுமதிக்கும் போது நான் சற்றுக் கவனித்திருக்க வேண்டும் தவறி
விட்டேன் பொறுத்துக் கொள்க! முடிந்தால் இறையடியான் விளக்கலாம் நானும் அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

//பரிணாம வளர்ச்சி அறிவியல் இல்லையென்றால் மனிதனுக்கும் குரங்குக்கும் இடைப்பட்ட இனங்களின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு ஆராயப்படுவதெல்லாம் எப்படி//

ஆராய்ச்சி செய்கிறார்கள் என்பது பரிணாம வளர்ச்சி அறிவியல், நிரூபிக்கப்பட்ட அறிவியல் ஆகிவிடாது.

//குரானை கடவுள் முதலிலேயே வழங்காமல் பின்னால் வழங்கியது ஏன்? குரானுக்கு முன்னால் வந்த நபிகளை (இது எல்லா மதங்களிலும் உண்டு எனும்போது) அல்லாதான் அனுப்பினார் என்றால் குரானுக்கும் (இஸ்லாமுக்கும்) மற்ற மதக் கோபாடுகளுக்கும் பல வித்தியாசங்கள் இருப்பதேன்?//

திருக்குர்ஆனும், திருக்குர்ஆனுக்கு முந்தய வேதங்களும், எல்லாம் இறை வேதம் என்ற தட்டில் வைத்து சமமாகவே மதிக்கிறோம். முந்தய வேதங்களை உள்ளடக்கிய வேதமாகத்
திருக்குர்ஆன் இருக்கிறது.
திருக்குர்ஆனை முதலிலேயே வழங்காமல் பின்னால் வழங்கியது ஏன்? இந்தக் கேள்வி ஒரு அடிப்படையில்லாதக் கேள்வியாகவேத் தெரிகிறது.

காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள, மூஸா (அலை) மோசே எனும் இறைத்தூதருக்கு தவ்ராத் வேதத்தை வழங்கியிருக்கும்போது அதன் பிறகு ஈஸா (அலை) ஏசு எனும் இறைத்தூதருக்கு இன்ஜீல் வேதத்தை அருள வேண்டிய அவசியமென்ன? அதேக் காரணம் தான் இறைத்தூதர் ஏசுவுக்குப்பின், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வருகையும், வேதமும் வழங்க வேண்டிய அவசியமாக இருந்தது.

//குரானுக்கு முன்னால் வந்த நபிகளை (இது எல்லா மதங்களிலும் உண்டு எனும்போது) அல்லாதான் அனுப்பினார் என்றால் குரானுக்கும் (இஸ்லாமுக்கும்) மற்ற மதக் கோபாடுகளுக்கும் பல வித்தியாசங்கள் இருப்பதேன்?//

வித்தியாசங்கள் என்னவென்று நீங்கள் சொல்லுங்கள். தொடர்ந்து நபிமார்கள் வர வேண்டிய அவசியத்தை நாம் விளக்குவோம்.

அன்புடன்,
அபூ முஹை

அபூ முஹை said...

//இங்கு குரானின் வசனங்களை ஆராய்ந்து பார்த்தால் அங்கு இறைவன் நடவடிக்கைகள் பல கேள்விகளை கிளப்புகின்றன. அவற்றுக்கு நீங்கள் தயை செய்து விடை கொடுத்து தெளிவிக்க வேண்டும்.//

ஜெயராமன் அவர்களே!

ஆங்கிலக் கருத்துக்களை தமிழில் தந்தால் இயன்றவரை விளக்க முயற்சிக்கின்றேன் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

அட்றா சக்கை said...

அபூமுஹை அவர்களுக்கு

வஜ்ரா என்பவரின் பின்னூட்டம் நாகரீக முறையில் விவாதிக்க அழைப்பது போல் இல்லை. ஜயராமன் என்பவர் அளித்திருக்கும் (அல்லது வாந்தி எடுத்திருக்கும்) கருத்துக்கள் இஸ்லாமிய எதிர்ப்புத் தளத்துலிருந்து தரப்பட்டவை.

இது குறித்த விவாதத்திற்குள் போகும் முன், இவர்கள் சார்ந்திருக்கும் நம்பிக்கை குறித்த திறந்த விவாதத்திற்குத் தயாரானால் மட்டுமே இவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தாங்கள் முனைய வேண்டும். முதலாமவர் இஸ்ரேலில் ஈஸ்லாமிய எதிர்ப்புக்காகச் சம்பளம் பெறுவது தெரிந்ததே, இரண்டாமவரின் காமாலக் கண் பல வலைப்பூக்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சுட்டி வேண்டுமானால் தருகிறேன்.

இப்படி நேர்மையற்ற விவாதங்களில் ஈடுபடுவோர் இந்த நிபந்தனைக்கு உட்பட்டால் மட்டுமே மேற்கொண்டு விவாதத்தை எடுத்துச் செல்லக் கோருகிறேன். நன்றி.

அதிரைக்காரன் said...

இனி வரும் காலங்களில் இயற்கைவாதி டார்வினின் கொள்கையான "ஒரு பிரிவு விலங்கினத்திலிருந்து மற்றது வந்தது" என்ற கொள்கயை பள்ளியில் பாடமாகச் சொல்லிக் கொடுக்க இயலாது. "உயிர் இனங்களின் தோற்றம்" (orgin of species) என்ற அவருடைய புத்தகம் இனி உயிரற்றதாகிவிடப் போகிறது. பல்வேறான உயிர்கள் எப்படித் தோன்றின என்பதை விளக்குவதாகக் கருதப்படும் இக்கொள்கை, பல விலங்கியல் நிபுணர்களுக்கு சமீப காலம்வரை வேதப் புத்தகமாகவே கருதப்பட்டு வந்தது. அவருடைய விளக்கங்கள் பல இடங்களில் சுவையான விடயங்களாகத் தோன்றினாலும் ஆங்காங்கே எழும் ஐயப்பாடுகளை நேரடியாக தீர்க்க இயலாது மெழுகப்பட்டிருப்பது பல அறிவியலாளரை உறுத்தாமல் இருந்ததில்லை. பறவை இனத்திலிருந்து ஊர்வன வந்தன என்பதை ஊர்சிதப்படுவதாகக் கருதப்படும் ஆர்கியாப்டிக்ஸ்(archeoptics) என்ற பறவை மற்றும் உடும்பு போன்ற அமைப்பைக் கொண்ட ஒரு புதை படிவம் (fossil) இத்தனை நாட்களாக ஒரு சப்பைக் கட்டாக இருந்து வந்திருக்கிறது என்பதும் சமீபத்தில் நிரூபணமாகியிருக்கிறது.

ID - இந்த இரண்டு எழுத்துக் கொண்ட ஆங்கில சுருக்கச் சொல்லை பல்வேறு இடங்களில் நாம் பயன்படுத்தி வந்திருக்கிறோம். இப்போது இயற்கைவாதிகள், விலங்கின அறிவியலாளர் ஆகியோரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதும் இந்த இரண்டு எழுத்துக்கள்தாம். இதன் முழு விளக்கம்: Inteligent Design. சரி இதற்கும் உயிரினங்களுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? ஆம், இவ்வுலகின் காணும் படைப்புக்கள் எல்லாம் தானாக ஒன்றிலிருந்து ஒன்று வந்தவை இல்லை, அறிவினால் மேம்பட்ட ஒரு சக்தியால் திட்டமிடப்பட்ட படைப்பினங்களாக, "டிசைன்" செய்யப் பட்டு படைக்கப் பட்டவையே என்பதாகும். இந்தச் சக்தியை 'இறைவன்" என்று இவ்வுண்மையைச் சொல்பவர்கள் நேரடியாகக் குறிப்பிட்டுச் சொல்லாவிட்டாலும் மானுடத்தை மிஞ்சிய அரிய சக்தி என்று குறிப்பிடுகிறார்கள். அப்படியானால் இறைவன்றி வேறு யாராக இருக்க முடியும்?

வெறும் வெளித் தோற்றத்தின் ஒற்றுமையை வைத்துக் கொண்டு ஒன்றிலிருந்து இன்னொன்று வந்தது என்கிற டார்வின் வாதம் ஒரு தத்துவமே(concept) அன்றி வேறில்லை. தத்துவங்கள் எல்லாம் நிரூபிக்கப் பட்ட உண்மைகள் அல்ல. பல விலங்கியலாளர்கள் டார்வினின் தத்துவத்தை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முற்பட்டபோது ஏகப்பட்ட தடங்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. பரிணாமம் என்பது ஒன்றுகொன்று தொடர்புடையதாக இருக்க வேண்டும். புறத் தோற்றத்தில் ஒற்றுமையாக இருக்கும் பல உயிரினங்களின் உள்ளுறுப்புக்களின் அமைப்போ தன்மையோ ஒத்திருப்பதில்லை. எடுத்துக் காட்டாக மனிதனின் இதய அமைப்பு குரங்கினுடையதை ஒத்திருப்பதில்லை. ஆனால் தொடர்பே இல்லாத பன்றியின் இதய அமைப்பு மனிதனின் இதய அமைப்போடு சற்று ஒத்துவருகிறது. இம்மாதிரி பல்லாயிரக்கணக்கான ஜீன்கள் தொடர்பான வேறுபாடுகள் ஓர் உயிரினத்திலிருந்து மற்றது வந்ததில்லை என்பதை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றன. ஆக, ஒவ்வோர் உயிரனமும் அவற்றின் அமைப்பிற்கும் அவை வாழும் சூழ்நிலைக்கும் ஒத்தமைய அவைகளுக்குத் தேவையான உள்ளுறுப்பாயினும் சரி தோற்றமாயினும் சரி திட்டமிடப்பட்டே அமைக்கப் பட்டிருக்கின்றன.


திருக் குர்-ஆனில் கூறப்பட்டிரும் பல விடயங்களுடன் இன்று விஞ்ஞான ஆய்வாளர்கள் கூறும் முடிபுகள் ஒத்துப் போகின்ற போக்கினைப் பார்க்கிறோம். அந்த வரிசையில் இதுவும் ஒன்றாக அமைந்தால் ஆச்சரியப் படுவதிற்கில்லை.

மேற்கண்ட தகவல் http://www.adirai.com/index.php?module=subjects&func=viewpage&pageid=171280 சுட்டியில் கிடைக்கிறது. பதித்தவர் நம் தமிழ்கணிமைக் கொடையாளர் மறைந்த உமர்தம்பி.

இப்னு பஷீர் said...

//அதே மாதிரி தானப்ப இந்த Primordial Source or Juiceன்னு சொல்ற உயிர் கனிமங்களை கொண்ட க்காமட் ஒன்று பூமியின் மீது மோதி போது இங்கு உயிர் தோன்றுவதற்கு காரணியாக அமைந்திருக்கலாம். அல்லது இங்கு இருக்கும் வேதிய பொருட்களை கொண்டே முதல் செல் ஒன்று தோன்றி இருக்க அனேக வாய்ப்புகள் அதிகமே//

எவ்வளவோ ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட பின்பும் இன்னும் 'இப்படி இருக்கலாம்' அல்லது 'அப்படி இருக்க சாத்தியம் இருக்கிறது' என்றுதான் பரிணாம கோட்பாட்டுக்காரர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர ஆதாரபூர்வமாக எதுவும் இன்னும் நிரூபிக்கப் படவில்லை.

ஆனால் பதிலளிக்கப்படாத கேள்விகள் இன்னும் நிறைய இருக்கின்றன.

1) உயிர் கனிமங்களை கொண்ட க்காமட் பூமியின் மீது மோதிய போது இங்கு ஒரே ஒரு உயிர்தான் தோன்றியதா? அல்லது பல உயிர்கள் தோன்றினவா?

2) உயிரினங்கள் தாம் வாழும் காலச்சூழலுக்கேற்ப பரிணாம வளர்ச்சி பெற்றன என்றால், உலகெங்கிலும் வசிக்கும் மனிதர்கள் ஒரே உடலமைப்பை கொண்டிருப்பது எப்படி? பனிப்பிரதேசங்களில் வாழும் மனிதர்களுக்கு கரடிகளைப்போல உடலெங்கும் முடியும், பாலைவனப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு ஒட்டகத்தைப் போன்ற திமிலும், கடற்புறங்களில் வசிப்பவர்களுக்கு மீனைபோல செதிளும் இல்லாமற் போனதேன்?

3) குரங்கிலிருந்து படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் தோன்றினான் என்கிறது பரிணாம கோட்பாடு. இன்று குரங்கு, மனிதன் என இரு உயிரினங்களும் இருப்பதை பார்க்கிறோம். இவற்றிற்கு இடைப்பட்ட semi-finished உயிரினங்கள் எங்கே? கடந்த 100, 200 ஆண்டுகளில் எந்தக் குரங்காவது finished நிலையை அடைந்து மனித இனத்துடன் சேர்ந்திருக்கிறதா? அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், ஏன்? பரிணாம factory-ஐ மூடி விட்டார்களா என்ன? அல்லது, மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் இரவு குரங்காக தூங்கியவர்கள் மறுநாள் காலை மனிதனாக விழித்தெழுந்தார்களா?

இறையடியான் said...

ஐயா வஜ்ரா நான் கேட்ட கேள்விக்கு இன்னும் விடையலிக்கவில்லையே

*//உங்கள் கூற்றுப்படி பார்த்தாலும் இதுவரை எந்த குரங்கும் மனிதக் குழந்தையை ஈன்றெடுக்கவில்லையே//*

*//உங்கள் பரினாமவள்ர்ச்சி ஏன் மனிதனுடன் நின்றுவிட்டது//*

இதற்க்கு பதிலளிக்க முடியுமா?'பரினாமவள்ர்ச்சி அடைந்த தங்களின் மூலையால்' முடியுமா ?

ஜயராமன் said...

ஆபூ அவர்களே,

தங்கள் என் பின்னூட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உறுதி சொன்னதற்கு மிக்க நன்றி. அட்ராசக்கை முதலியவர்களின் பின்னூட்டம் தரங்கெட்டு இருக்கிறது. "வாந்தி", "காமாலைகண்" போன்ற அநாகரீக வார்த்தைகளை தனிப்பட்டவர்கள் மீது அவர் உபயோகிக்கிறார். இதை நீங்கள் நீக்க வேண்டும். அவ்வாறு கருத்துக்களுக்கு நீங்கள் உடன்படுகிறீர்களா, இல்லை மறுக்கிறீர்களா என்று தெளிவுபடுத்த வேண்டும். ஒரு ஆரோக்கியமான விவாத சூழலை கெடுக்கும் இம்மாதிரி நபர்கள் உங்களால் கண்டிக்கப்படவேண்டியவர்கள். மாறாக, நீங்கள் மௌனம் சாதித்தால் நீங்கள் இதற்கு உடன்படுகிறீர்கள் என்றே பொருளாகும். நிற்க.

நான் எடுத்துக்காட்டிய கட்டுரையில் இஸ்லாத்தை இழித்துக்கூறும் எந்த ஒரு விஷயமும் இருப்பதாக எனக்கு புலப்படவில்லை. அந்த அறிஞர் ஆதாம் ஏவாள் கதையில் அல்லாஹ்வின் வசனங்களை புதிய முறையில் பொருள் கூறுகிறார்.

நீங்கள் இஸ்லாமியத்தின் விமர்சனங்களுக்கு பதில் என்றே தங்களின் பதிவு முகப்பில் போட்டிருப்பதால், இதை நீங்கள் சொல்ல கடமைப்பட்டவர். அவ்வாறு செய்யாமல், இந்துமத்த்தை பற்றி நான் விவாதம் செய்ய தயாரா என்று அட்ராசக்கை கேட்பது ஒரு திசைதிருப்பும் முயற்சி. தங்கள் பதிவுக்கு உட்பட்ட பொருளிலேயே பின்னூட்டங்கள் நடக்கட்டும்.

நீங்கள் நான் அளித்த ஆங்கில கட்டுரையை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு ஆங்கில கட்டுரையை நான் மொழிபெயர்க்கும் தேவை இல்லை என்றே நினைக்கிறேன். அப்படி இல்லை என்றால், தெளிவுபடுத்தி பின்னூட்டம் இடவும். நான் என் சந்தேகங்களை பட்டியல் இடுகிறேன்.

பொதுவாக பார்த்தோம் என்றால், ஆதாம் , ஏவாள் கதையில் பல தெளிவில்லாத கேள்விகள் இருக்கின்றன. இந்த குழப்பங்கள் குரானிலிருந்தே எழுகின்றன. என் போன்ற காபிர்களுக்கு இதற்கான விளக்கங்களை மார்க்க அறிஞர்கள்தான் வழங்கவேண்டும். அதைவிடுத்து சுணங்கி என்னை தனிப்பட்டு தாக்கினால், அதுவே என் சந்தேகத்தை உறுதிப்படுத்தும்.

தங்களின் விளக்கத்துக்கு காத்திருக்கிறேன்.

நன்றி

ரவி ஸ்ரீநிவாஸ் said...

பரிணாம தத்துவத்தினை அறிவியலாளர்கள் ஏற்றுள்ளனர்.இன்றைய அறிவியலில், குறிப்பாக உயிரியலில் அதன் இடம் சிறப்பானது.அறிவியல் என்பது டார்வின் சொன்னதுடன் நின்றுவிடவில்லை.பின்னர் வந்த பல அறிவியலாளர்கள் அவர் எழுதியவற்றையும், தாங்கள் ஆராய்ந்ததையும் கொண்டே பரிணாமம் குறித்து எழுதி, ஆராய்ந்துள்ளனர்.கிறித்துவ அடிப்படைவாதிகள் இதை ஏற்க மறுக்கலாம்.இஸ்லாத்தினை பின்பற்றுவோரும் பரிணாமத்தினை
ஏற்க மறுக்கலாம்.ஆனால் உலகெங்கும் பரிணாமத்திற்கு சான்றாக தடயங்கள் கிடைத்துள்ளன.
இதில் நான் அறிவியலின் பக்கம்.மத அடிப்படைவாதிகள் பரிணாமத்தினை ஒப்புக் கொண்டால்
தங்கள் நம்பிக்கைகள் சில பொய் என்று ஒப்புக்கொள்வதற்கு சமம் என்று கருதுவதால் பரிணாம
தத்துவம் குறித்து அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள்.அதை பகுத்தறிவற்றவர்கள் நம்பலாம்.
பகுத்தறிவுள்ளவர்கள் அவற்றை ஏற்க மாட்டார்கள்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Read this book to know about evolution and science

http://newton.nap.edu/catalog/5787.html

இப்னு பஷீர் said...

//அறிவியல் என்பது டார்வின் சொன்னதுடன் நின்றுவிடவில்லை.பின்னர் வந்த பல அறிவியலாளர்கள் அவர் எழுதியவற்றையும், தாங்கள் ஆராய்ந்ததையும் கொண்டே பரிணாமம் குறித்து எழுதி, ஆராய்ந்துள்ளனர்.//

ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. முடிவுதான் கிடைத்தபாடில்லை.

//உலகெங்கும் பரிணாமத்திற்கு சான்றாக தடயங்கள் கிடைத்துள்ளன.//

சான்றுகள் என சில தடயங்கள் காண்பிக்கப் பட்டாலும், பரிணாம கோட்பாடு குறித்து எழுப்பப்பட்டுள்ள எண்ணற்ற கேள்விகளுக்கு (உதாரணமாக, நான் எனது முந்திய பின்னூட்டங்களில் கேட்ட கேள்விகள்..) இன்னும் விடை அளிக்கப்படாமல்தான் இருக்கின்றன.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சில உயிரினங்களின் fossils கிடைத்திருப்பதை பரிணாம வளர்ச்சிக்கு சான்றாக இந்த ஆய்வாளர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும். அவை எதாவது extinct ஆன உயிரினங்களின் fossil ஆக கூட இருக்க வாய்ப்பிருக்கிறதே!

//இதில் நான் அறிவியலின் பக்கம்//

நானும் அறிவியலின் பக்கம்தான். ஆனால் அறிவியல் என்ற பெயரில் யார் எதைச் சொன்னாலும் கேள்வி கேட்காமல் அப்படியே நான் நம்பிவிடுவதில்லை.

அபூ முஹை said...

ஜெயராமன் அவர்களே!
அட்ற சக்கைக்கும் உங்களுக்கும் ஆயிரம் இருக்கலாம் அது இங்கே தேவையில்லை என்கிற உங்கள் நியாயமானக் கருத்து வரவேற்கத்தக்கது ஆனால்...

//குரான் அறிவியல் பூர்வமானது. பெஸ்ட் ஜோக்.// - இது சரி என்றால் அட்ற சக்கை சொன்னதும் சரிதான்.

//பொதுவாக பார்த்தோம் என்றால், ஆதாம் , ஏவாள் கதையில் பல தெளிவில்லாத கேள்விகள் இருக்கின்றன. இந்த குழப்பங்கள் குரானிலிருந்தே எழுகின்றன. என் போன்ற காபிர்களுக்கு இதற்கான விளக்கங்களை மார்க்க அறிஞர்கள்தான் வழங்கவேண்டும். அதைவிடுத்து சுணங்கி என்னை தனிப்பட்டு தாக்கினால், அதுவே என் சந்தேகத்தை உறுதிப்படுத்தும்.

தங்களின் விளக்கத்துக்கு காத்திருக்கிறேன்.//

உங்களுக்கு தோன்றியிருக்கும் அக்கறையை வரவேற்கிறேன். நமக்குள் பழைய கணக்கு ஒன்று இருக்கிறது.

//"எலும்பு முறியாதவரை பெண்களை அடிக்கலாம்"// - இந்தப் பதிவில் நீங்கள் சொல்லியதில் நான் கேட்ட விளக்கத்தை எழுதிவிட்டு வாருங்கள், ஆதாம் ஏவாள் பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்து அழகிய முறையில் விவாதிக்கலாம், நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

ரவி ஸ்ரீநிவாஸ் said...

இப்னு பஷீர்
I have given the link to a publication by National Academies
Press.Please read that to know
about science and evolution.

இயற்கை நேசி|Oruni said...

இந்த "இருக்கலாம்" என்ற அனுமான வார்த்தையை அறிவியல் கோப்புகளிலும், கட்டுரைகளிலும் பயன்படுத்துவதற்குக் காரணமய்யா, அந்தத் துறை இன்னும் வளர்வதற்கு ஏதுவாக இருக்க அனேக வாய்ப்புகள் இருப்பதகெனவே (to be plausible for new things, since our mind is dynamic so it tends to expand as we grow and know more new things... it is not so regid like our Religious conceptual theories).

இல்லையெனில் கடவுள் போன்ற "சர் ஐசக் நீயுடன்" சொல்லிவிட்டார் அதனால் அவர் கூறிய கோட்பாட்டில் எந்த புது மாற்றங்களையும் செய்ய முடியாது என, எப்படி நாமே எழுதி வைத்துக் கொண்ட இந்த மதக் கோட்பாடுகளை கட்டிக் கொண்டு மாரடிக்கின்றொமோ அது போல நிலமை ஆகி, அடித்துக் கொண்டு சாக வேண்டி வரும். அதனால் தான் அந்த அனுமான "இருக்கலாம்" என்ற வார்த்தை.

இரண்டாவது, நீங்கள் உங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டு இயற்கையின் சூட்சுமங்களை அறிந்து கொள்ள முயற்சிக்க வில்லையெனில், உங்களுக்கு அடிப்படை விசயங்களை இது போன்ற பின்னூட்டங்களை கொண்டு விளக்குவது நலம் பயக்க.

//இங்கு ஒரே ஒரு உயிர்தான் தோன்றியதா?//

மீண்டும், நான் கூறிய ஒரு சினை முட்டையும், விந்தணுவும் நடத்தும் விந்தையைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சித்தீர்களா? அமீபா, பாரமீசியம் போன்ற தன் இனப் பெருக்க உயிரினங்கள் எவ்வாறு பல்கிப் பெருகுகிறது என்பதனைப் பற்றிய பிரஞை தாங்களிடம் உள்ளதா?

சரி, எப்படி இயற்கையில் புது உயிரின உருவாக்கம் (Speciation) நடைபெறுகிறது என்ற அடிப்படை புரிவு தாங்களுக்கு உண்டா? அதற்கென உதாரணமாக நிறைய தென் அமெரிக்கா காடுகளில் உள்ள குரங்கினங்களில் நடைபெற்றிருக்கிறது, தேடி (தேடினால்தான் கிடைக்கும்) அறிந்து கொள்ள முயற்சித்துப் பாருங்கள்.

நான் எனது இளநிலை பட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தான் படித்தேன். அங்கு டாக்டர் முகமது இஸ்மெய்ல் பரிணாமம் சார்ந்த கோட்பாடுகளைப் பற்றிய வகுப்புகள் எடுத்தார். அப்படி அவர் எடுக்கும் பொழுது எனக்கு இந்த மதங்களுக்கும், இந்த பாடத்திற்கும் சிறிதளவேனும் தொடர்பு இருப்பதாக எண்ணவே தோன்றவில்லை. ஏன் என்பது இப்பொழுது கொஞ்சம் விளங்குகிறது. அந்த பேரசிரியருக்கு இத் தொடர்பான பிரஞ்கை இருந்திருக்குமா அன்று, என்று இன்று யோசிக்கிறேன்.

முடிந்தால் அடுத்த முறை அங்கு சென்று பேசலாம் இது நிமித்தமென எண்ணியுள்ளேன்.

//இன்று குரங்கு, மனிதன் என இரு உயிரினங்களும் இருப்பதை பார்க்கிறோம். இவற்றிற்கு இடைப்பட்ட semi-finished உயிரினங்கள் எங்கே? கடந்த 100, 200 ஆண்டுகளில் எந்தக் குரங்காவது finished நிலையை அடைந்து மனித இனத்துடன் சேர்ந்திருக்கிறதா? //

இது போன்ற கேள்விகளையெல்லாம் படிக்கும் பொழுது நீங்கள் இது தொடர்பாக போக வேண்டிய தொலைவு வெகு தூரம் என்று தெரிகிறது. ஏன், அவ்வளவு தூரம் செல்ல வேண்டும், நமது தாத்தாவிற்கு தாத்தாவிலிருந்து 200வது தாத்தாவுக்கு எந்த ஊர், அவர் எப்படி இருந்தார், அவரின் குணாதியசம்மென்ன, என்ற குறிப்பேடு தாங்கள் கையில் தாங்களின் தகப்பனார் ஏதாவது நோட்டுப் புத்தகம் போட்டு எழுதி ஒப்படைத்துவிட்டா செல்கிறார். நாமும் நாளை அதனை நமது சந்ததிகளிடத்தே ஒப்படைத்து விட்டு செல்ல.

எப்படி அந்த உணர்வு நம்முள் வருகிறது, அந்த பண்புகளும், குண நலன்களும்... அப்படியே அவர்கள் இன்று நம்மோட வாழ நேர்ந்து போனால் நமது நிலைதான் என்ன? அப்படி அவர்கள் நம்மோட இன்று வாழவில்லை என்பதால் அவர்கள் இந்த பூமியில் வாழ்ந்திருக்க சாத்தியமில்லை என்று பொருளா?

இங்குதான் தகுதி உள்ளது தப்பிப் பிழைக்குமென உள்ள கோட்பாடு அமுலுக்கு வருகிறது. அந்த ஹோமோ எரக்டஸூம் நம்முடன் சம காலத்தில் வாழ நேர்ந்திருந்தால், யாரிடம் அதிக தகுதி உணவை பறிக்க, சேமிக்க, குடும்பத்தை கட்டிக் காப்பாத்த, வளைந்து கொடுத்துப் போக இருக்கிறதோ அதுகள் தப்பிப் பிழைக்கும். போராட்டத்தில்.

நாம் நம் தாத்தாவிற்கு அந்த நிலையை உருவாக்கி கொடுப்போம் அப்படி வாழ்வா, சாவா நிலை வந்தால் என்பதே உண்மை.

எனவே, அந்தப் பண்புகள் ("அடப்போங்கப்ப எத்தனை முறை சொல்றதுன்னு வருது எனக்கு") ஒரு தலைமுறையில இருந்து இன்னொரு தலைமுறைக்கு மரபணு சமிக்கைகள் மூலமா கடத்தப் படுது. உ.தா க்கு நான் வெள்ளைக் காரிய திருமணம் பண்ணிக் கொண்டால், என் மகனுக்கு பிறக்கும் குழந்தையும் அதனை தொடர்ந்து வரும் சந்ததிகளும் என்னுடைய மரபணுவையும் (கொஞ்சமாவது) தூக்கி கொண்டு திரியும் என்பதில் ஏதாவது மறுப்பு இருக்கிறதா?

அதனால் அன்று, நான் அந்த படத்தில் இல்லையென்பதால் என்னுடைய பங்களிப்பு அங்கு இல்லை என்று பொருளா?

இப்படி சொல்லிக் கொண்ட்டே போகலாம். கைவலிக்கிறது. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இல்லையென்றால் தனிப்பதிவு போட வேண்டி வரும் :-)

முடிந்தால் இந்தப் பக்கமும் போயி வாருங்கள்.

http://kurangumudi.blogspot.com/2006/09/blog-post.html

ஜயராமன் said...

அபூ அவர்களே,

தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. மேலும் தங்களுடன் பேச இது சந்தர்ப்பமானது.

ஆனால், தங்கள் பின்னூட்டம் என் கேள்விகளுக்கு விடை தரவில்லை.

முதலில் அட்றாசக்கை அவர்களின் பின்னூட்டத்தை பற்றி நான் உங்களிடம் கேட்டிருந்தவற்றுக்கு நீங்கள் பதில் அளிக்காமல் விட்டு விட்டீர்கள். இங்கு விஷயம் எனக்கும் அவருக்கும் அல்ல.

நீங்கள் பதிலளிக்காத என் கேள்விகள்...

/// அவ்வாறு கருத்துக்களுக்கு நீங்கள் உடன்படுகிறீர்களா, இல்லை மறுக்கிறீர்களா என்று தெளிவுபடுத்த வேண்டும். ///

நீங்கள் கொடுத்த சுட்டியில் என் பின்னூட்டமோ அதற்கு தங்களின் விளக்கமோ எதுவுமில்லை. சரியான சுட்டி http://abumuhai.blogspot.com/2006/06/blog-post_19.html என்று இருக்க வேண்டும்.

அபூ முஹை said...

//முதலில் அட்றாசக்கை அவர்களின் பின்னூட்டத்தை பற்றி நான் உங்களிடம் கேட்டிருந்தவற்றுக்கு நீங்கள் பதில் அளிக்காமல் விட்டு விட்டீர்கள். இங்கு விஷயம் எனக்கும் அவருக்கும் அல்ல.//

ஜெயராமன் அவர்களே!

எதற்கெடுத்தாலும் நல்ல ஜோக் என்று சொல்வதை நீங்கள் வழக்கமாகக் கொண்டது போல, நான் அவ்வாறு சொல்வதை வழக்கமாக்கிக் கொள்ளவில்லை. ஆனாலும் - //இங்கு விஷயம் எனக்கும் அவருக்கும் அல்ல.// என்று நீங்கள் எழுதியிருப்பது - திருக்குர்ஆனைப் பழித்துவிட்டு அது பற்றி முஸ்லிம்கள் பேசக்கூடாது என்று சொல்வது மிகப் பெரிய நகைச் சுவையாகத்தான் இருக்கிறது.

எல்லாப் பதிவுகளிலும் என் பதிவுக்கு சம்பந்தமில்லாத எவ்வளவோ பின்னூட்டங்களை நான் தடை செய்திருக்கிறேன். இந்தப் பதிவிலும் தடுத்திருக்கிறேன்.

/// அவ்வாறு கருத்துக்களுக்கு நீங்கள் உடன்படுகிறீர்களா, இல்லை மறுக்கிறீர்களா என்று தெளிவுபடுத்த வேண்டும். ///

//இது குறித்த விவாதத்திற்குள் போகும் முன், இவர்கள் சார்ந்திருக்கும் நம்பிக்கை குறித்த திறந்த விவாதத்திற்குத் தயாரானால் மட்டுமே இவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தாங்கள் முனைய வேண்டும். முதலாமவர் இஸ்ரேலில் ஈஸ்லாமிய எதிர்ப்புக்காகச் சம்பளம் பெறுவது தெரிந்ததே, இரண்டாமவரின் காமாலக் கண் பல வலைப்பூக்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சுட்டி வேண்டுமானால் தருகிறேன்.// - அட்றாசக்கையின் இந்தக் கருத்தில் நான் உடன்படுகிறேன்! முழுதும் உடன்படவில்லை.

அடுத்து...
//நீங்கள் கொடுத்த சுட்டியில் என் பின்னூட்டமோ அதற்கு தங்களின் விளக்கமோ எதுவுமில்லை. சரியான சுட்டி http://abumuhai.blogspot.com/2006/06/blog-post_19.html என்று இருக்க வேண்டும்.//

நான் கொடுத்த சுட்டி சரியானதுதான். நீங்கள் கூறியிருந்த குற்றச்சாட்டின் மீது நான் இந்த http://abumuhai.blogspot.com/2006/06/blog-post_25.html சுட்டியில் கேள்விகள் எழுப்பியிருக்கிறேன்.

அது சம்பந்தமாக இங்கே நீங்கள் எழுதியவற்றை அங்கு மறுமொழியிடுங்கள் பதிலளிக்கிறேன்.

இதை அங்கு எழுதுவதுதான் சரியாக இருக்கும் என்று நான் கருதியதால் மேற்கண்ட சுட்டி சம்பந்தமாக இந்தப் பின்னூட்டத்தில் நீங்கள் எழுதியதை நீக்கியுள்ளேன்.

அன்புடன்,
அபூ முஹை

அபூ முஹை said...

ரவி சிரினிவாஸ் உங்கள் வருகைக்கு நன்றி!

//மத அடிப்படைவாதிகள் பரிணாமத்தினை ஒப்புக் கொண்டால்
தங்கள் நம்பிக்கைகள் சில பொய் என்று ஒப்புக்கொள்வதற்கு சமம் என்று கருதுவதால் பரிணாம
தத்துவம் குறித்து அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள்.அதை பகுத்தறிவற்றவர்கள் நம்பலாம்.
பகுத்தறிவுள்ளவர்கள் அவற்றை ஏற்க மாட்டார்கள்.//

இதேதான் எனக்கும் உங்களுக்கு சொல்ல வேண்டியிருக்கிறது. பரிணாமத் தத்துவத்தை உயர்த்தவில்லை என்றால் இஸ்லாம் கூறும் மனிதப் படைப்பு உண்மையாகி விடும் என்பதால் தொடர்ந்து அனுமான அறிவியலை அவதூறாகப் பரப்பி வருகிறீர்கள்.

அன்புடன்,
அபூ முஹை

இப்னு பஷீர் said...

//இந்த "இருக்கலாம்" என்ற அனுமான வார்த்தையை அறிவியல் கோப்புகளிலும், கட்டுரைகளிலும் பயன்படுத்துவதற்குக் காரணமய்யா, அந்தத் துறை இன்னும் வளர்வதற்கு ஏதுவாக இருக்க அனேக வாய்ப்புகள் இருப்பதகெனவே//

இயற்கை நேசி அவர்களே! உங்கள் நீண்ட விளக்கத்திற்கு நன்றி.

'இருக்கலாம்' 'சாத்தியம் இருக்கிறது' என்றெல்லாம் சொல்லப்படும்போது 'அப்படி இல்லாமலும் போகலாம்' என்ற சாத்தியக்கூறும் இருக்கிறது என்பதைத்தான் நான் சுட்டிக் காட்டினேன்.

பரிணாம கோட்பாடு என்பதே இன்றுவரை இதுபோன்ற 'இருக்கலாம்'களின் அடிப்படையில் கட்டப்பட்ட சீட்டுக்கட்டு மாளிகையாகத்தான் இருக்கிறது.

நீங்கள் தந்த சுட்டி ஒன்றில் லூசி என பெயரிடப்பட்ட fossil பற்றி சொல்லியிருக்கிறீர்கள். நேரம் கிடைத்தால் இந்த சுட்டியில் உள்ள மறுப்பு விளக்கத்தையும் படித்து பாருங்கள். http://www.harunyahya.com/nas09.php

..Contrary to the claims of the NAS, far from supporting evolutionary theories, recent discoveries regarding the origin of man actually undermine them. Fossil discoveries are tearing down the evolutionary trees that scientists have been attempting to construct for dozens of years, while biochemical comparisons show that the genetic differences between human beings and apes are much greater than had been supposed. Admissions of error in well-known scientific magazines and evolutionist publications are a of clear indication of this...

..fossil discoveries and other findings in recent years have shown that there is no scientific basis to the claim that human beings and apes are descended from a common ancestor..

ரவி சிரினிவாஸ், உங்கள் சுட்டிக்கு நன்றி. நான் மேலே கொடுத்திருக்கும் சுட்டியில் NAS Booklet-ல் உள்ள தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அவசியம் படித்துப் பாருங்கள்.

அட்றா சக்கை said...

அபூ முஹை அவர்களுக்கு,

என்னுடைய பின்னூட்டம் தரமிழந்து இருப்பதாகச் சொல்லும் ஜெயராமன் என்பவர் எவ்வளவு 'தரமான' பின்னூட்டங்களை அளித்துள்ளார், தன் பதிவில் எவ்வளவு 'தரமான' பின்னூட்டங்களை அனுமதித்துள்ளார், எவ்வளவு 'தரமான' இடுகைகளை எழுதியுள்லார் என என்னால் ஒரு நீண்ட பட்டியல் தர இயலும் என்றாலும், இந்த இடுகையில் விவாதம் திசை திருப்பப்படும் என்பதாலும் இந்த இடுகையில் அவர் நேர்மையான விவாதத்திற்கு ஆர்வம் காட்டுவது போல எழுதியுள்ளதாலும் அவற்றைத் தவிர்க்கிறேன்.

என்னுடைய கேள்வி அவருக்கு இதுதான்:

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினால் பிரம்மன் தலையிலிருந்து தோன்றியிருக்க வாய்ப்பில்லை; இரண்டையுமே உண்மை என நம்பினால், பிரம்மன் ஒரு குரங்கு என்று இழிவு படுத்த நான் விரும்பவில்லை. என் ஐயத்தைப் போக்குவாரா திரு. ஜெயராமன்?

ஜயராமன் said...

அட்றாசக்கை,

தங்கள் பெயரைப்போலவே தங்கள் வாதங்களும் சக்கையாகவே இருக்கிறது. என்னதான் திசைதிருப்ப முயற்சி செய்தாலும், கொஞ்சம் புத்திசாலித்தனமாக செய்யக்கூடாதா? குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்று நான் எங்கே சொன்னேன். அதை நான் ஒப்பவில்லை என்றுதானே சொன்னேன்.

அபூ முஹை said...

//அபூ அவர்களே,
தங்களின் டார்வின் கொள்கை எதிர்ப்பு நியாயமானதே. இறைவன் மனிதனை தன் பிம்பமாகவே படைத்தான் என்று ஆப்ரஹாமிய மதங்கள் சொல்லும் கோட்பாடு இந்து மதங்களுக்கு புரிந்த கோட்பாடுதான். குரங்கிலிருந்து மனிதன் வந்ததாக எந்த மதமும் சொல்லவில்லை.//- ஜயராமன்.

ஆம், அட்றா சக்கை பரிணாமக் கொள்கையை ஜயராமன் ஆதரிக்கவில்லை!

அன்புடன்,
அபூ முஹை

தருமி said...

//குரானை கடவுள் முதலிலேயே வழங்காமல் பின்னால் வழங்கியது ஏன்?//

சிறில் கேட்ட இந்த கேள்வியை இன்னும் சிறிது மாற்றி கேட்க எண்ணுகிறேன்:

பல நபிகள் மூலமாய் பல கட்டளைகள் இறைவனால் கொடுக்கப் பட்டும் அவைகள் பல மாற்றங்கள் பெற்றமையால் இறுதி வேதமாக முகம்மது மூலமாய் இப்போதைய குரான் இறக்கப் பட்டதல்லவா; இந்த வேதம் இதுவரை மாறாமல் காக்கப் பட்டது போல் மற்றைய முந்திய வேதங்களையும் இறைவன் காத்திருக்கக் கூடாதா; முடியாதா? பின் ஏன் அப்படி நடக்கவில்லை?

அபூ முஹை said...

முந்தய இறை வேதங்கள் ஏன் பாதுகாக்கப்படவில்லை?

தருமியின் கேள்விக்கு விளக்கம்!