இஸ்லாம் பற்றிய சந்தேகம் கேட்டு, 67.நான் ஏன் மதம் மாறினேன்..? என்ற தலைப்பின் தருமி என்பவர் ஒரு பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் 21கேள்விகள் வைக்கப்பட்டிருந்தது. கேள்விகள் மட்டுமில்லை, கேள்விகளுக்கு முன் ஒரு முன்னுரை மாதிரி, ''இதெல்லாம் எனக்குத் தெரியும்'' என்ற தோரணையில் இஸ்லாத்தை பற்றியும் சில விளக்கங்களை எழுதியிருந்தார்.
நமது பார்வையில் அது விமர்சனமாகப்பட்டது. ஏனென்றால் எழுத்தின் சாயலில் விமர்சனம் இருந்தது. மிகையாகச் சொல்லவில்லை இதோ அவர் எழுதியது...
//மூன்று திருமணங்கள் மட்டுமே (என்னைப் பாதித்தவை) குறிப்பிடத் தக்கவை.
1 ஆயிஷா - முகமது இப்பெண்ணை மணம் முடிக்கும்போது அவரது வயது 50-க்கு மேல்;
2. Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி;
3. ஜுவேரியா - இந்தப் பெண்ணின் கதை மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது.// >தருமி.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டு அதில் மூன்று திருமணங்களால் இவர் பாதிக்கப்பட்டதாகவும், (எப்படி பாதிக்கப்பட்டாரோ?) அதிலும் ஜுவைரியா (ரலி) அவர்களுக்கு நிகழ்ந்தது இவர் மனதை கஷ்டப்படுத்தியதாகவும் (எதனால் கஷ்டமடைந்தாரோ?) குறிப்பிட்டிருந்தார். இது விமர்சனம் என்பதில் சந்தேகமில்லை.
இந்த விமர்சனத்தை மனதில் கொண்டு, அன்னை ஆயிஷா, அன்னை ஸைனப், அன்னை ஜுவைரியா (ரலி-அன்ஹுமா) இந்த மூவர் முஹம்மது (ஸல்) அவர்களை மணந்து அதனால் எவ்வித பாதிப்புக்கும் ஆளாகவில்லை. மாறாக மகிழ்ச்சியாகவே வாழ்ந்தார்கள் என்பதை இரண்டு பதிவுகளில் விளக்கியிருந்தோம்.
அப்படிப் பாதிக்கப்பட்டிருந்தால், அது சமகால இஸ்லாத்தின் எதிரிகளால் விமர்சிக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற திருமணங்கள் அச்சமூகங்களிடையே தடை செய்யப்பட்டிருந்தால் அதுவும் எதிரிகளால் விமர்சிக்கப்பட்டிருக்கும். என்று எழுதி, இத்திருமணத்தால் எங்களின் வாழ்க்கை பாழாகி விட்டதாக யாரும் சொல்லவில்லை மாறாக மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் வரலாறு. என்று சொல்லி...
//நபியை மணந்த ஆயிஷா (ரலி)யின் வாழ்க்கையில் சிறு கீறல்கூட இல்லாமல் மிக்க மகிழ்ச்சியாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்லியே வரலாற்றிலிருந்து அறிய முடிகிறது. ஆனாலும் தருமி போன்றவர்கள் புகுந்து இது கொடுமையென்று தொடர்ந்து புலம்பிக் கொண்டிருப்பதுதான் மிகக் கொடுமை. 53வயதான நபி(ஸல்) அவர்களை மணந்ததால் என் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று ஆயிஷா (ரலி) எங்காவது சொல்லியிருக்கிறார்களா? இந்த பால்ய விவாகத்திற்கும் தருமி மதமாறியதற்கும் என்ன சம்பந்தம்?
59வயதான நபி(ஸல்) அவர்களை மணந்ததால் என் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று ஜுவைரியா (ரலி) எங்காவது சொல்லியிருக்கிறார்களா?// > இப்படிக் கேட்டிருந்தோம்.
அதாவது சம்பந்தப்பட்டவர்கள் மிக சந்தோஷமாக நபி (ஸல்) அவர்களோடு இல்லற வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள். இது ஏன் தருமியை பாதிக்க வேண்டும்? அப்போதிருந்தே, தருமிதான் எனக்கு விளக்கம் சொல்லும் இடத்தில் இருக்கிறார்.
ஆனால் பதில் சொல்லாமல், 175.நான் ஏன் மதம் மாறினேன்..? என்ற பதிவில், அவருடைய கேள்விகளில் சிலவற்றை அவரே தள்ளுபடி செய்கிறார். மேலும் தான் விமர்சித்த பகுதிக்கு விளக்கம் கொடுத்த போது, நான் அதைக் கேள்வியாக வைக்கவில்லை என்று நாணயத்தை மாற்றுகிறார், பூவா, தலையா போட சுண்டியதில் பூ விழுந்ததும், உடனடியாக நாணயத்தை தலைப் பக்கம் திருப்பிக் போட்டுக் கொள்வார்களே! அது போல.
//ஆக, என் 21 கேள்விகளில், முதல் கேள்வி, கேள்வியே தவறானது என்று ஒப்புக்கொள்கிறேன். இரண்டாவது, மூன்றாவது, ஆறாவது கேள்விகளுக்குப் பதில் தரப்பட்டுள்ளன. அந்தப் பதில்களை நான் ஏற்றுக் கொண்டுவிட்டேனா என்பது வேறு விஷயம்.// >தருமி.
இங்கே தருமிக்கு சில வார்த்தைகள்: எந்தவொரு விளக்கத்தையும் ஏற்றுக் கொள்வதும், புறக்கணிப்பதும் அவரவர் சுதந்திரமான கருத்திற்குட்பட்டது. ஏற்றுக் கொண்டேயாக வேண்டுமென்று இங்கு யாரும் வற்புறுத்தவில்லை. ஏற்காததால் பூமியின் சுழற்சி நின்று விடப்போவதில்லை ஆனால்...
ஒரு விமர்சகனின் எழுத்தில் நேர்மை இருக்க வேண்டும். தான் விமர்சித்ததை விளக்கும் போது 'இதை நான் கேள்வியாக வைக்கவில்லை' என்றால் கேள்விகளுக்கு முன்பு அந்த விமர்சனங்கள் ஏன் எழுதப்பட்டது? என்பதையாவது உண்மையுடன் உரைக்க வேண்டும். 21 கேள்விகளுக்கு மட்டுமல்ல அதற்கு அப்பாலுள்ள கேள்விகளுக்கும் மணி மணியான விளக்கங்கள் இஸ்லாத்தில் இருக்கிறது.
அது பற்றி பேசுவதற்கு முன்,
//மூன்று திருமணங்கள் மட்டுமே (என்னைப் பாதித்தவை) குறிப்பிடத் தக்கவை.
1 ஆயிஷா - முகமது இப்பெண்ணை மணம் முடிக்கும்போது அவரது வயது 50-க்கு மேல்;
2. Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி;
3. ஜுவேரியா - இந்தப் பெண்ணின் கதை மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது.// >தருமி.
இந்த மூவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள் என்று கூட வேண்டாம் - பாதிக்கப்பட்டார்கள் என்பதற்கான சம்பந்தப்பட்டவர்களின் வாக்கு மூலம், அல்லது சமகாலத்தில் யாராவது இவர்களின் பாதிப்பைப் பற்றி பேசியுள்ளதாக ஏதேனும் ஒரு ஆவணத்தை தருமி சமர்ப்பிக்க வேண்டும், அதன் பிறகு அவருடைய மற்ற கேள்விகளையும் அது சம்பந்தமான விவாதங்களையும் அழகிய முறையில் சந்திப்போம். நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
Monday, September 18, 2006
Sunday, September 17, 2006
2.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்.
இஸ்லாம், ''அவர்களைக் கொல்லுங்கள்'' என்று சொல்கிறதென்றால், இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் முஸ்லிமல்லாதவர்களிடம் ''ஜிஸ்யா'' ஏன் வசூலிக்க வேண்டும்..?
இஸ்லாம் பற்றி, இஸ்லாத்தின் எதிரிகள் பரப்பும் பொய்யானத் தகவல்களை களைவதுதான் இந்தப் பதிவின் நோக்கமேயல்லாது, அனைத்து இஸ்லாமியப் போர்கள் பற்றியும் விளக்கிடும் நோக்கமல்ல. ''முஸ்லிமல்லாதவர்களை கொல்லுங்கள்'' என்று திருக்குர்ஆன் கூறுவதாக வாய் கூசாமல் பொய் பிரச்சாரம் செய்பவர்கள் முன் வைக்கும் மற்றொரு, - 47:4வது - வசனத்தையும் பார்ப்போம்.
47:4. (முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள். கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள். அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான். ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான். ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.
மேற்காணும், வசனத்தில் ''காஃபிர்களை நீங்கள் சந்தித்தால் அவர்களின் கழுத்துகளை வெட்டுங்கள்'' என்ற வார்த்தைகளை எடுத்துக் கொண்டு ''திருக்குர்ஆன் முஸ்லிமல்லாதவர்களையெல்லாம் வெட்டச் சொல்கிறது பாருங்கள்'' என இஸ்லாத்தின் எதிரிகள் எழுதி வருகிறார்கள். மேலும், 47:4வது வசனம் போர் பற்றியே சொல்லவில்லை, எனவும் ''ஒவ்வொரு முஸ்லிமும் கையில் ஆயுதத்தோடு அலைந்து கொண்டிருக்க வேண்டும், காஃபிர்களை சந்திக்க நேர்ந்தால் அவர்களின் பிடரியில் வெட்ட வேண்டும்''. என்றும் இஸ்லாத்தை விமர்சிக்கும், சில பக்கத்துக் காஃபிர்கள் 47:4வது வசனத்திற்கு இப்படித்தான் விளக்கவுரை!? எழுதுகிறார்கள்.
இந்த விளக்கம் சரியா? என்று பார்ப்போம்.
1. ''அவர்களின் கழுத்துகளை வெட்டுங்கள்'' என்பது போர் முனையில் காஃபிர்களை சந்திப்பது பற்றி சொல்லவில்லை, பொதுவாக போரிலில்லாமல் சாதாரணமாக முஸ்லிம்கள் ''முஸ்லிமில்லாதவர்களை'' சந்தித்தாலும் அவர்களின் கழுத்தில் வெட்ட வேண்டுமென்பதுதான் பொருளென்றால், நபி (ஸல்) அவர்களின் ஆட்சித் தலைமையில் மதீனாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தபொழுது, காஃபிர்கள் சிறுபான்மையினராக இருந்தார்கள். முஸ்லிம்களும், காஃபிர்களும் அன்றாடம் சந்தித்து அளாவளாவி, நட்புடன் கொடுக்கல், வாங்கல்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.
முஸ்லிம்கள் காஃபிர்களை சந்தித்தவுடன் அவர்களின் கழுத்தை வெட்டியிருந்தால் மதீனாவில் ஒரு காஃபிர் கூட எஞ்சியிருக்க முடியாது. 47:4வது வசனத்திற்கு எதிரிகள் சொல்வதுதான் உண்மையான விளக்கம் என்றிருந்தால் அதை முஸ்லிம்கள் அன்றே விளங்கி செயல்பட்டிருப்பார்கள். மதீனாவில் காபிஃர்கள் சுத்தமாக துடைத்தெறியப்பட்டிருப்பார்கள். ஆனால் முஸ்லிம்கள் அப்படிச் செய்யவில்லை - காஃபிர்களின் கழுத்துகளை வெட்டுங்கள் என்ற வசனத்தை போரில் சந்திக்கும்போது ஏற்படும் நிகழ்வு என்பதை முஸ்லிம்கள் சரியாக விளங்கிக் கொண்டதால் மதீனாவில் முஸ்லிம்களும், காஃபிர்களும் சகஜமாக பழகி வாழ்ந்து வந்தார்கள்.
2. இஸ்லாத்தின் சட்டங்களை செயல்படுத்தும் - இஸ்லாமிய அரசு அதிகாரம் செலுத்தும் - நாட்டில் ''ஜிஸ்யா'' வரி என்று ஒன்று வசூலிக்கப்படும். இந்த வரி முஸ்லிமல்லாத குடி மக்களின் மீது விதிக்கப்படுகிறது. ''காஃபிர்களை சந்தித்தால் அவர்களின் கழுத்துக்களை வெட்டுங்கள்'' என்ற திருக்குர்ஆன் வசனம் போரில் சந்திக்கும் போது வெட்டுவதைப் பற்றி சொல்லவில்லையென்றால், இஸ்லாம் அதிகாரம் செலுத்தும் நாட்டில் முஸ்லிமல்லாதவர் ஒருவர் கூட வாழ முடியாது. பின் ஜிஸ்யா வரி எதற்கு?
இஸ்லாமிய அரசு இல்லாத நாட்டில் ஜிஸ்யா வரி இல்லை. இஸ்லாமிய சட்டங்களை அமுல் படுத்தும் அதிகாரம் பெற்ற நாட்டில் மட்டுமே முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜிஸ்யா வரி விதிக்க முடியும். அப்படியானால் இஸ்லாமிய அரசு ஆட்சியிலிருக்கும் ஒரு நாட்டில் முஸ்லிம்களும், முஸலிமல்லாதவர்களும் சேர்ந்து வாழ்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை என்பதை மேலோட்டமாக பார்த்தாலே புரிந்து கொள்ளலாம் - சிந்திக்கவும்.
இனி 47:4வது வசனத்தைப் பார்ப்போம்.
1.''நிராரிப்பவர்களை நீங்கள் சந்தித்தால் பிடரியை வெட்டுங்கள்.''
2. ''முடிவில் அவர்களை வென்றால் போர் தனது ஆயுதங்களைக் கீழே போடும்வரை கட்டுகளைப் பலப்படுத்துங்கள்.''
3. ''அதன் பிறகு ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம் அல்லது பெருந்தன்மையாக விட்டு விடலாம்''
''நிராரிப்பவர்களை நீங்கள் சந்தித்தால் பிடரியை வெட்டுங்கள்.'' என்று கூறி, அடுத்த வாக்கியத்தில், ''அவர்களை வென்றால்'' என்று சொல்லப்படுகிறது. ''அவர்கள்'' என்பது நாம் முதல் கட்டுரையில் விளக்கியது போல, இந்த வசனத்திலும் முதல் வாக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள ''காஃபிர்கள் - நிராகரிப்பவர்களையே குறிப்பிடுகிறது. பிறகு என்ன சொல்கிறது? ''போர் தனது ஆயுதங்களைக் கீழே போடும் வரை'' இங்கு மிகத் தெளிவாகவே, ''போர், சண்டை, யுத்தம்'' - (''war, fight, combat, battle'') - என்பதைக் குறிப்பட்டுச் சொல்லும் ''அல் ஹர்ப்'' என்ற வாசகமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (47:4வசனம் போர் பற்றி சொல்லவில்லை என்று மறுப்பவர்கள் தாராளமாக தங்கள் எதிர் கருத்துக்களை வைக்கலாம்)
''போர் தனது ஆயுதங்களைக் கீழே போடும் வரை'' என்று ஆயுதங்களோடு போருக்கு வருபவர்களை என்று விளங்குவதில் எந்த சிரமும் இல்லை, ஆனாலும் மிகவும் வெண்மையான இந்த வசனத்தைத் திரிக்க முயற்சிப்பவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு, கருமையைப் பூசிட முயல்கிறார்கள்.
''அதன் பிறகு ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம் அல்லது பெருந்தன்மையாக விட்டு விடலாம்'' இங்கேயும் இந்த வசனத்தை திரிப்பவர்ளுக்கு மிகத் தெளிவான விளக்கமிருக்கிறது. - ''அதன் பிறகு ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்'' - போரில் தோற்கடிக்கப்பட்டு, போரில் வென்றவர்களால் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களேயே போரில் தோற்ற எதிரணியினர் ஈட்டுத் தொகைக் கொடுத்து தங்கள் போர் வீரர்களை மீட்டுக் கொள்வார்கள்.
சுதந்திரமான எந்த மனிதனையும் பிடித்து வைத்துக்கொண்டு ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே போரில் தோற்கடிக்கப்பட்டு பிடிபட்டவர்களே, ஈடு பெற்றுக்கொண்டு விடுவிக்கப்பட்டார்கள்.
அன்றைய போர் என்பது, நூற்றுக் கணக்கான, பல்லாயிரக் கணக்கானவர்கள் மோதிக் கொள்வார்கள் என்பது மட்டுமல்ல, ஒண்டிக்கு ஒண்டியாக மோதுவதும் போராகவே கொள்ளப்பட்டது. போர் சூழலை மேற்கொண்டு போரிடத் தயாராகும் இரு அணியும் தங்களது ராணுவத் தளங்களை ஸ்திரப்படுத்தி அமைத்துக் கொள்வார்கள். பிறகு முதன் முதலில் அங்கிருந்து ஒருவர், இங்கிருந்து ஒருவர் என களமிறங்கி எதிரியைச் சந்தித்து ஒத்தைக்கு ஒத்தையாக சண்டையிடுவார்கள். இருவருமே மற்றவர் கழுத்தை வெட்டுவதற்கு குறி வைத்தபடியே சண்டை நடக்கும், இதுவும் போர்தான். பிறகு மூன்று பேராகக் களமிறங்குவார்கள், இப்படியே போர் உக்கிரமடைந்து இரு அணியினரும் மோதிக் கொள்வார்கள். இதில் இரண்டு அணியினருமே கொல்லப்படுவார்கள்.
போரில், முஸ்லிம் காஃபிரை பிடரியில் வெட்டவில்லையென்றால், காஃபிர் முஸ்லிமைப் பிடரியில் வெட்டி விடுவார். காஃபிர், முஸ்லிமை பிடரியில் வெட்டவில்லையென்றால், முஸ்லிம் காஃபிரை பிடரியில் வெட்டி விடுவார். இது போரில் நடக்கும் சம்பவம். இதையெல்லாம் திரித்து இஸ்லாத்தின் மீது அவதூறு சுமத்தப்படுகிறது. எனவே...
ஆயுதமேந்தி போருக்கு வருபவர்களையே ''சந்தித்தால் அவர்களின் பிடரியை'' வெட்டுங்கள் என்பதை புரிந்து கொள்வதற்காகவே - (முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) ''நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்.'' - திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு அடைப்புக் குறிக்குள் (போரில்) என்று விளக்கியிருக்கிறார்கள். 47:4வது வசனத்தின் பின் வரும் வாசகங்கள் போரில் நடப்பது பற்றியே பேசுவதால், போரில் சந்தித்தால் அவர்களின் பிடரியை வெட்டுங்கள்'' என்பது மிகையான மொழி பெயர்ப்பு அல்ல. வசனத்தின் மற்ற வாசகங்கள் இதையே உறுதிபடுத்துகிறது.
8:57. எனவே, போரில் நீர் அவர்கள் மீது வாய்ப்பைப் பெற்று விட்டால், அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களும் பயந்தோடும்படி சிதறடித்து விடுவீராக - இதனால் அவர்கள் நல்லறிவு பெறட்டும்.
போரில் சந்திக்கும் எந்தவொரு அணியும், எதிரணியை வென்று விட்டால் அவர்களை பின்னோக்கி ஓடும்படி விரட்டுவார்கள். இது மீண்டும் ''அவர்கள்'' போருக்கு வராமலிருக்க பாடமாக அமையும். இரு தரப்பினருக்கும் இது பொருந்தும். இந்த வசனத்திலுள்ள ''அவர்கள்'' யார் என்றால் போர் தொடுத்து வருபவர்களேயே ''அவர்களை'' எதிர்த்துப் போர் செய்யச் சொல்கிறது. சண்டைக்கு வராதவர்களுடன், வலியச் சென்று சண்டையிடச் சொல்லவில்லை இஸ்லாம்.
(விளக்கங்கள் தொடரும்)
குறிப்பு: முதலில் ''பூ'' விற்க வந்துவர் இப்போ ''புஷ்பம்'' என்று விற்க வருகிறார். உள்ளேயிருக்கும் வியாபாரப் பொருள் ஒன்றுதான் பெயரில் மட்டுமே மாற்றம் உள்ளது. இவர், ''முஸ்லிம்கள்'' என்ற பதம் ''நம்பிக்கையாளர்கள்'' என்ற கருத்திலேயே திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் அவருக்கு நினைவூட்டி இந்த வசனம்...
22:78. ''அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்''
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ''முஸ்லிம்கள்'' என இறைவனே பெயரிட்டிருக்கிறான். திருக்குர்ஆனில் மற்ற வசனங்களில் இடம்பெறும் ''முஸ்லிம்'' என்பதை நம்பிக்கையாளர் என்று மொழி பெயர்த்தாலும், ''ஹுவ ஸம்மாக்குமுல் முஸ்லிமீன்'' இங்கே ''ஸம்மாக்கும்'' என்று ''உங்களுக்கு பெயரிட்டான்'' என்று இறைவன் சூட்டிய பெயரை மொழி பெயர்க்கக் கூடாது.
கருப்பருக்கு, வெள்ளையன் என்று பெயர் வைத்தால் வெள்ளையன் என்றுதான் அழைக்க வேண்டும். நோயாளியாக இருந்தாலும் ஆரோக்கியம் என்று பெயர் வைத்தால் நோயாளியையும் ஆரோக்கியம் என்றுதான் கூப்பிட வேண்டும். பெயர் என்பது காரணத்துடன் வைக்கப்படுவதில்லை, பெயர் ஒரு குறியீடுதான். முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தை முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுவது, அப்படித்தான் அல்லாஹ் பெயர் சூட்டியிருக்கிறான் என்பதால், அப்படி எங்களை நாங்கள் குறியீடு செய்து கொள்கிறோம்.
பிறயாவும் பின்...
அன்புடன்,
அபூ முஹை
Thursday, September 07, 2006
மதமாற்றம் ஏன்? -4
இஸ்லாம் இயற்றியுள்ளக் குற்றவியல் சட்டங்கள் மனிதாபிமானமற்றவை, கொடுரமானவை என்றும் குற்றம் புரிந்தவருக்குக் கடுமையான தண்டனையை இஸ்லாம் வழங்குகிறது. என்றெல்லாம் விமர்சிப்பவர்கள், இஸ்லாம் மட்டும் குற்றங்களுக்குத் தண்டனை வழங்கவில்லை, உலகநாடுகள் அனைத்தும் குற்றங்களுக்கான தண்டனைகளை நிர்ணயித்து குற்றவாளிகளை தண்டித்து வருகின்றன என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் செய்கின்றனர்.
குற்றவாளித் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாரிடமும் மாற்றுக் கருத்தில்லை. தண்டனை கூடுதல் என்பதில் தான் இஸ்லாம் முரண்படுகிறது. தண்டனை கூடுதல் போல் தோன்றினாலும் பாதிக்கப்பட்டவனின் தரப்பில் நின்று இஸ்லாம் தண்டனையை நிர்ணயிக்கிறது.
பாதிக்கப்பட்டவனின் பாதிப்பின் அழுத்தம் வெளியிலுள்ளவர்களுக்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்திவிடாது. அதனால் ''இதற்கு போய் இவ்வளவு பெரிய தண்டனையா..?'' என்று வெறும் அனுதாப ''அச்சச்சோ''க்களை உதிர்த்து விட்டு, அதே கையோடு இஸ்லாத்தையும் விமர்சிக்கத் தயாராகி விடுகிறார்கள்.
சரி, இதையெல்லாம் இங்கு எழுத என்ன காரணம்? தருமி என்பவர் தமது பழைய பதிவைப் புதுப்பித்து புதிதாக ஒரு கேள்வியும் கேட்டிருக்கிறார் இதோ அவருடைய புதிய கேள்வி...
//இந்த நிலையில் புதிதாக ஒரு கேள்வியும் சேர்ந்து விட்டது. அதை பட்டியலில் சேர்த்து விடுகிறேன். திருப்திகரமான பதில் கிடைத்த முதல் கேள்வியை விட்டுவிட்டு இந்தக் கேள்வியை என் அந்தப் பழைய பதிவில் சேர்த்துள்ளேன். just an updating.
அந்தக் கேள்வி:
குர்ஆன் 25 : 68: 'அவர்கள் எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்.(காரணத்தோடு கொல்லலாம் என்று பொருள் படுகிறதே?' - கொலை செய்பவனுக்கு ஒரு காரணம் கண்டுபிடிப்பதா பெரிது?)
5:32: "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலுடைய மக்களின் மீது நாம் விதியாக்கினோம்.
5:33 அல்லாஹ்வுடனும், அவன் ரஸூலுடனும் போர் செய்து கொண்டு, பூமியில் குழப்பத்தை உண்டாக்கித் திரிபவர்களுக்குரிய தண்டனையானது அவர்கள் கொல்லப்படுதல், அல்லது அவர்கள் தூக்கிலிடப்படுதல்; அல்லது அவர்கள் மாறுகால் மாறுகை வாங்கப்படுதல் அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுதல்…
கிறித்துவத்தில் 'கொலை செய்யாதே' என்பது ஒரு கட்டளையாகக் கொடுக்கப்பட்டுள்ளது; சமணத்தில் நுண்ணுயிர்களைக் கூட கொல்லக் கூடாதென்ற தத்துவம்; பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்கிறது தமிழ்மறை; எல்லா உயிரும் ஒன்றே, உயிர்க்கொலை தவறு என்கிறது இந்து மதம். இந்த கோட்பாடுகளில் எந்த clasue, sub-clause-ம் கிடையாது, அதாவது இந்தந்த மாதிரி நேரங்களில் மட்டும் கொலை செய்யலாம் என்ற விலக்குகள் தரப்படவில்லை. கொலை என்பது ஒட்டுமொத்தமாக தவறு; பாவம் என்றுதான எல்லா மதங்களும் போதிக்கின்றன. இந்த இடத்தில், நாடுகளுக்கு நடுவில் நடக்கும் போர்களையும், மனிதர்களுக்கு நடுவில் நடக்கும் சண்டைகளையும் குழப்பிக் கொள்ளக் கூடாதென நினைக்கிறேன். நாடுகளுக்கு நடுவில் நடக்கும் போர் என்றால் அங்கு 'கீதையின் விதிகள்தான்' எங்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால் மனிதர்களுக்குள்ளும் அந்த விதிகள் பொருத்தமாகக் கூடாது.
இஸ்லாமியத்தில் மட்டும் கொலை செய்வதற்கு ஏன் சில விதிவிலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஏதாவது ஒரு சரியான காரணம் கொண்டு -
கொலைக்குப் பழியாக -
குழப்பத்தைத் தடுக்க -
அல்லாஹுடனும், அவன் ரஸுலுடன் போர் செய்பவர்களை -
குழப்பத்தை உண்டாக்குபவர்களை -
இந்த சமயங்களில் கொலை செய்வது சரியா?
கொடூரக் கொலைகாரர்கள்கூட தங்கள் கொலைக்குக் காரணம் சொல்ல முடியுமே. அப்படியானால் ஒவ்வொரு கொலையும் யாரோ ஒருவரால் - நிச்சயமாக கொலை செய்தவனால் - காரண காரியங்களோடு நியாயப்படுத்த முடியுமே! அதோடு பழி வாங்குவது, அதற்காகக் கொலை செய்வது அனுமதிக்கப்படுகிறதே! இவைகள் எப்படி சரியாகும்.
புரிதலுக்காகவே இந்தக் கேள்வி.//
இந்தக் கேள்விக்கான விளக்கத்தைப் பார்க்குமுன் வலைப்பூவில் இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் பற்றி எனக்கு சில கருத்துக்கள் சொல்ல வேண்டியுள்ளது.
இஸ்லாத்தின் மீதான விமர்சனங்கள் வலைப்பதிவில் தொடங்கிய நாளிலிருந்து, காஃபிர், ஜிஹாத், பால்ய விவாகம், பலதாரமணம், அடிமைகள் என இப்படி ஒரே விஷயங்கள் தான் விமர்சனமாக வலைப்பதிவில் வைக்கப்பட்டு வருகிறது. முஸ்லிம் வலைப்பதிவர்களால் இதற்கான விளக்கங்கள் எழுதப்பட்டால் கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் பழைய விமர்சனமே புதுப்பித்துப் பதியப்படுகிறது வெவ்வேறு பெயர்களில்.
கிராமங்களில் மாடு அல்லது ஆடு அடுத்தவரின் விளைச்சல் நிலத்தில் சென்று மேய்ந்துவிடும். இதனால் பிரச்சனைகள் ஏற்பட்டு, நிலத்துக்குச் சொந்தக்காரன் கிராமப் பஞ்சாயத்தில் முறையிட, மாட்டுக்குச் சொந்தக்காரன் பஞசாயத்துக்கு அழைக்கப்படுவான். பிறகு அபராதமாக ஒரு தொகையை, மாட்டுக்கு சொந்தக்காரன் செலுத்த வேண்டுமென்பதோடு சுமுகமாக அந்த வழக்கு முடிந்து விடும்.
இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், இவ்வளவு நடந்தது அந்த மாட்டுக்குத் தெரியாது. மறுநாள் அதே விளை நிலத்தின் பக்கம் போக நேர்ந்தால் மீண்டும் நிலத்திற்குள் புகுந்து மேய்ச்சலைத் தொடங்கிவிடும். மேயும்போது சப்தமிட்டு விரட்டினால் சத்தத்தைக் கேட்டு ஓடிவிடும். சப்தம் இல்லாதபோது மீண்டும் நிலத்தில் வந்து மேயும்.
சப்தமிட்டு விரட்டும் போது, விரட்டுகிறார்கள் என்பதை மாடு புரிந்து கொண்டு ஓடி விடுகிறது. ஆனால் எதற்காக விரட்டுகிறார்கள் என்பதை புரிய முடியாததால் மீண்டும் நிலத்தில் புகுந்து மேயத் தொடங்குகிறது. (யாரையும் குறிப்பிட்டு இவ்வுதாரணத்தை நான் சொல்லவில்லை என்பதை அறியவும்) இந்த உதாரணத்தையே இறைவன் திருக்குர்ஆன் 2:171வது வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான்.
2:171. அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால், ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள். அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
இனி தருமியின் கேள்விக்கு வருவோம்.
இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்கள் விமர்சிக்கப்படுவதை மேலே எழுதியுள்ளேன். கொலைக்குக் கொலை, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், மணமானவர் விபச்சாரம் செய்தால் - பெண்ணை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை. இது போன்ற குற்றவியல் சட்டங்களை இஸ்லாம் இயற்றியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இஸ்லாமிய அரசு இத்தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும்.
25:68வது வசனத்தைப் பார்ப்போம்..
25:68. அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள். இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.
''நியாயமின்றி - காரணமின்றி எந்த மனிதரையும் கொல்ல மாட்டார்கள்'' என்றால், ஒருவன் இன்னொரு மனிதனைக் கொலை செய்திருந்து, அல்லது மேலே குறிப்பிட்டுள்ள மரண தண்டனை பெறும் குற்றங்களை செய்திருந்தால் அவன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, அந்தக் குற்றமே கொலைக்குக் கொலை என கொலையாளிக்கும் மற்ற குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு அவன் கொல்லப்படுகிறான். அதாவது குற்றவாளி தான் செய்த குற்றத்திற்காகக் கொலை செய்யப்படுகிறான். இதுதான் ''காரணத்தோடு கொல்லலாம்'' என்பது.
இந்தக் காரணங்கள் இல்லையென்றால் ''அவர் தண்டனை அடைய நேரிடும்'' என்று வசனத்தின் இறுதி வாசகம் எச்சரிக்கிறதே, தருமி புரிந்து கொள்ளவும்.
5:32. இதன் காரணமாகவே, ''நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ...
(5:32 வது வசனத்திலும்,) ''கொலைக்குப் பதிலாகவேயன்றி'' யாரையும் கொலை செய்யக் கூடாது என்று காரணங்கள் சொல்லப்படுகிறது. இதையெல்லாம் முதுகுக்குப் பின்னால் தள்ளிவிட்டு காரணங்களைத் தேடுபவர்களை என்னவென்பது?
அடுத்து...
5:33. அல்லாஹ்வுடனும் அவன் துதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டணை இதுதான். (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல். இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.
குழப்பம் செய்வதை கொலையை விடக் கடுமையானக் குற்றமாக இஸ்லாம் பிரகடனப்படுத்துகிறது. ஏன்? எதற்காக? என்று கூடத் தெரியாமல் ஆங்காங்கே பயங்கரவாதங்களை செயல்படுத்தி, நாட்டின் இறையாண்மையை சீர் குலைத்து, மக்களின் நிம்மதியையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் எவரும் குழப்பவாதிகள் - தண்டனைக்குரியவர்கள். இவர்களின் பிணங்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சில வாரங்களுக்கு முன் வலைப்பதிவின் வாதமாக இருந்தது.
அன்றும் நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்கும் குழப்பவாதிகள் இருந்தார்கள். அரசுக்குக் கட்டுப்படுவதாக சொல்லிக்கொண்டு, எதிரிகளுக்கு நாட்டின் ரகசியங்களை அறிவித்துக் கொடுத்துப் போர் செய்ய வரும்படியும் தகவல்களை வழங்கி, சுத்த நயவஞ்சகத் தன்மையில் ஈடுபட்டு குழப்பம் விளைத்துக் கொண்டிருந்தவர்களுக்குத் தான் 5:33 வது வசனத்தில் தண்டனைகள் சொல்லப்படுகிறது. தேசத் துரோகிகளைக் கொல்வதும், நாடு கடத்துவதும் தவறு என்றால் அந்தத் தவறைச் செய்யும்படி இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது.
(தருமி புரியும்படியா கேள்வியை வைக்கவில்லை, புரிந்ததை விளக்கியுள்ளேன்)
அன்புடன்,
அபூ முஹை
குற்றவாளித் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாரிடமும் மாற்றுக் கருத்தில்லை. தண்டனை கூடுதல் என்பதில் தான் இஸ்லாம் முரண்படுகிறது. தண்டனை கூடுதல் போல் தோன்றினாலும் பாதிக்கப்பட்டவனின் தரப்பில் நின்று இஸ்லாம் தண்டனையை நிர்ணயிக்கிறது.
பாதிக்கப்பட்டவனின் பாதிப்பின் அழுத்தம் வெளியிலுள்ளவர்களுக்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்திவிடாது. அதனால் ''இதற்கு போய் இவ்வளவு பெரிய தண்டனையா..?'' என்று வெறும் அனுதாப ''அச்சச்சோ''க்களை உதிர்த்து விட்டு, அதே கையோடு இஸ்லாத்தையும் விமர்சிக்கத் தயாராகி விடுகிறார்கள்.
சரி, இதையெல்லாம் இங்கு எழுத என்ன காரணம்? தருமி என்பவர் தமது பழைய பதிவைப் புதுப்பித்து புதிதாக ஒரு கேள்வியும் கேட்டிருக்கிறார் இதோ அவருடைய புதிய கேள்வி...
//இந்த நிலையில் புதிதாக ஒரு கேள்வியும் சேர்ந்து விட்டது. அதை பட்டியலில் சேர்த்து விடுகிறேன். திருப்திகரமான பதில் கிடைத்த முதல் கேள்வியை விட்டுவிட்டு இந்தக் கேள்வியை என் அந்தப் பழைய பதிவில் சேர்த்துள்ளேன். just an updating.
அந்தக் கேள்வி:
குர்ஆன் 25 : 68: 'அவர்கள் எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்.(காரணத்தோடு கொல்லலாம் என்று பொருள் படுகிறதே?' - கொலை செய்பவனுக்கு ஒரு காரணம் கண்டுபிடிப்பதா பெரிது?)
5:32: "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலுடைய மக்களின் மீது நாம் விதியாக்கினோம்.
5:33 அல்லாஹ்வுடனும், அவன் ரஸூலுடனும் போர் செய்து கொண்டு, பூமியில் குழப்பத்தை உண்டாக்கித் திரிபவர்களுக்குரிய தண்டனையானது அவர்கள் கொல்லப்படுதல், அல்லது அவர்கள் தூக்கிலிடப்படுதல்; அல்லது அவர்கள் மாறுகால் மாறுகை வாங்கப்படுதல் அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுதல்…
கிறித்துவத்தில் 'கொலை செய்யாதே' என்பது ஒரு கட்டளையாகக் கொடுக்கப்பட்டுள்ளது; சமணத்தில் நுண்ணுயிர்களைக் கூட கொல்லக் கூடாதென்ற தத்துவம்; பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்கிறது தமிழ்மறை; எல்லா உயிரும் ஒன்றே, உயிர்க்கொலை தவறு என்கிறது இந்து மதம். இந்த கோட்பாடுகளில் எந்த clasue, sub-clause-ம் கிடையாது, அதாவது இந்தந்த மாதிரி நேரங்களில் மட்டும் கொலை செய்யலாம் என்ற விலக்குகள் தரப்படவில்லை. கொலை என்பது ஒட்டுமொத்தமாக தவறு; பாவம் என்றுதான எல்லா மதங்களும் போதிக்கின்றன. இந்த இடத்தில், நாடுகளுக்கு நடுவில் நடக்கும் போர்களையும், மனிதர்களுக்கு நடுவில் நடக்கும் சண்டைகளையும் குழப்பிக் கொள்ளக் கூடாதென நினைக்கிறேன். நாடுகளுக்கு நடுவில் நடக்கும் போர் என்றால் அங்கு 'கீதையின் விதிகள்தான்' எங்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால் மனிதர்களுக்குள்ளும் அந்த விதிகள் பொருத்தமாகக் கூடாது.
இஸ்லாமியத்தில் மட்டும் கொலை செய்வதற்கு ஏன் சில விதிவிலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஏதாவது ஒரு சரியான காரணம் கொண்டு -
கொலைக்குப் பழியாக -
குழப்பத்தைத் தடுக்க -
அல்லாஹுடனும், அவன் ரஸுலுடன் போர் செய்பவர்களை -
குழப்பத்தை உண்டாக்குபவர்களை -
இந்த சமயங்களில் கொலை செய்வது சரியா?
கொடூரக் கொலைகாரர்கள்கூட தங்கள் கொலைக்குக் காரணம் சொல்ல முடியுமே. அப்படியானால் ஒவ்வொரு கொலையும் யாரோ ஒருவரால் - நிச்சயமாக கொலை செய்தவனால் - காரண காரியங்களோடு நியாயப்படுத்த முடியுமே! அதோடு பழி வாங்குவது, அதற்காகக் கொலை செய்வது அனுமதிக்கப்படுகிறதே! இவைகள் எப்படி சரியாகும்.
புரிதலுக்காகவே இந்தக் கேள்வி.//
இந்தக் கேள்விக்கான விளக்கத்தைப் பார்க்குமுன் வலைப்பூவில் இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் பற்றி எனக்கு சில கருத்துக்கள் சொல்ல வேண்டியுள்ளது.
இஸ்லாத்தின் மீதான விமர்சனங்கள் வலைப்பதிவில் தொடங்கிய நாளிலிருந்து, காஃபிர், ஜிஹாத், பால்ய விவாகம், பலதாரமணம், அடிமைகள் என இப்படி ஒரே விஷயங்கள் தான் விமர்சனமாக வலைப்பதிவில் வைக்கப்பட்டு வருகிறது. முஸ்லிம் வலைப்பதிவர்களால் இதற்கான விளக்கங்கள் எழுதப்பட்டால் கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் பழைய விமர்சனமே புதுப்பித்துப் பதியப்படுகிறது வெவ்வேறு பெயர்களில்.
கிராமங்களில் மாடு அல்லது ஆடு அடுத்தவரின் விளைச்சல் நிலத்தில் சென்று மேய்ந்துவிடும். இதனால் பிரச்சனைகள் ஏற்பட்டு, நிலத்துக்குச் சொந்தக்காரன் கிராமப் பஞ்சாயத்தில் முறையிட, மாட்டுக்குச் சொந்தக்காரன் பஞசாயத்துக்கு அழைக்கப்படுவான். பிறகு அபராதமாக ஒரு தொகையை, மாட்டுக்கு சொந்தக்காரன் செலுத்த வேண்டுமென்பதோடு சுமுகமாக அந்த வழக்கு முடிந்து விடும்.
இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், இவ்வளவு நடந்தது அந்த மாட்டுக்குத் தெரியாது. மறுநாள் அதே விளை நிலத்தின் பக்கம் போக நேர்ந்தால் மீண்டும் நிலத்திற்குள் புகுந்து மேய்ச்சலைத் தொடங்கிவிடும். மேயும்போது சப்தமிட்டு விரட்டினால் சத்தத்தைக் கேட்டு ஓடிவிடும். சப்தம் இல்லாதபோது மீண்டும் நிலத்தில் வந்து மேயும்.
சப்தமிட்டு விரட்டும் போது, விரட்டுகிறார்கள் என்பதை மாடு புரிந்து கொண்டு ஓடி விடுகிறது. ஆனால் எதற்காக விரட்டுகிறார்கள் என்பதை புரிய முடியாததால் மீண்டும் நிலத்தில் புகுந்து மேயத் தொடங்குகிறது. (யாரையும் குறிப்பிட்டு இவ்வுதாரணத்தை நான் சொல்லவில்லை என்பதை அறியவும்) இந்த உதாரணத்தையே இறைவன் திருக்குர்ஆன் 2:171வது வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான்.
2:171. அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால், ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள். அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
இனி தருமியின் கேள்விக்கு வருவோம்.
இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்கள் விமர்சிக்கப்படுவதை மேலே எழுதியுள்ளேன். கொலைக்குக் கொலை, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், மணமானவர் விபச்சாரம் செய்தால் - பெண்ணை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை. இது போன்ற குற்றவியல் சட்டங்களை இஸ்லாம் இயற்றியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இஸ்லாமிய அரசு இத்தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும்.
25:68வது வசனத்தைப் பார்ப்போம்..
25:68. அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள். இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.
''நியாயமின்றி - காரணமின்றி எந்த மனிதரையும் கொல்ல மாட்டார்கள்'' என்றால், ஒருவன் இன்னொரு மனிதனைக் கொலை செய்திருந்து, அல்லது மேலே குறிப்பிட்டுள்ள மரண தண்டனை பெறும் குற்றங்களை செய்திருந்தால் அவன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, அந்தக் குற்றமே கொலைக்குக் கொலை என கொலையாளிக்கும் மற்ற குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு அவன் கொல்லப்படுகிறான். அதாவது குற்றவாளி தான் செய்த குற்றத்திற்காகக் கொலை செய்யப்படுகிறான். இதுதான் ''காரணத்தோடு கொல்லலாம்'' என்பது.
இந்தக் காரணங்கள் இல்லையென்றால் ''அவர் தண்டனை அடைய நேரிடும்'' என்று வசனத்தின் இறுதி வாசகம் எச்சரிக்கிறதே, தருமி புரிந்து கொள்ளவும்.
5:32. இதன் காரணமாகவே, ''நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ...
(5:32 வது வசனத்திலும்,) ''கொலைக்குப் பதிலாகவேயன்றி'' யாரையும் கொலை செய்யக் கூடாது என்று காரணங்கள் சொல்லப்படுகிறது. இதையெல்லாம் முதுகுக்குப் பின்னால் தள்ளிவிட்டு காரணங்களைத் தேடுபவர்களை என்னவென்பது?
அடுத்து...
5:33. அல்லாஹ்வுடனும் அவன் துதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டணை இதுதான். (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல். இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.
குழப்பம் செய்வதை கொலையை விடக் கடுமையானக் குற்றமாக இஸ்லாம் பிரகடனப்படுத்துகிறது. ஏன்? எதற்காக? என்று கூடத் தெரியாமல் ஆங்காங்கே பயங்கரவாதங்களை செயல்படுத்தி, நாட்டின் இறையாண்மையை சீர் குலைத்து, மக்களின் நிம்மதியையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் எவரும் குழப்பவாதிகள் - தண்டனைக்குரியவர்கள். இவர்களின் பிணங்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சில வாரங்களுக்கு முன் வலைப்பதிவின் வாதமாக இருந்தது.
அன்றும் நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்கும் குழப்பவாதிகள் இருந்தார்கள். அரசுக்குக் கட்டுப்படுவதாக சொல்லிக்கொண்டு, எதிரிகளுக்கு நாட்டின் ரகசியங்களை அறிவித்துக் கொடுத்துப் போர் செய்ய வரும்படியும் தகவல்களை வழங்கி, சுத்த நயவஞ்சகத் தன்மையில் ஈடுபட்டு குழப்பம் விளைத்துக் கொண்டிருந்தவர்களுக்குத் தான் 5:33 வது வசனத்தில் தண்டனைகள் சொல்லப்படுகிறது. தேசத் துரோகிகளைக் கொல்வதும், நாடு கடத்துவதும் தவறு என்றால் அந்தத் தவறைச் செய்யும்படி இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது.
(தருமி புரியும்படியா கேள்வியை வைக்கவில்லை, புரிந்ததை விளக்கியுள்ளேன்)
அன்புடன்,
அபூ முஹை
Tuesday, September 05, 2006
1.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்
மக்கத்துக் காஃபிர்களா..? பக்கத்துக் காஃபிர்களா..?
இஸ்லாத்தின் மீது களங்கம் கற்பிப்பவர்கள் திருக்குர்ஆன் 2:191 வசனத்தில் ''அவர்களைக் கொல்லுங்கள்'' என்ற வாசகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, ''முஸ்லிமல்லாதவர்கள் அனைவரையும்'' கொன்று விடும்படி திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகிறது என்று தவறானப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்த அவதூறுப் பிரச்சாரம் இந்தியாவிலும் உலக அளவிலும் அரங்கேற்றப்படுகின்கிறது. முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாத்தின் கொள்கைகளின் பால் கவரப்பட்டு விடக்கூடாது, இஸ்லாத்தை விஷமென வெறுக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு இத்தகையப் பிரச்சாரம் நடத்தப்படுகின்றது. இதை நாம் மிகையாகச் சொல்லவில்லை. உள்ளதை உள்ளபடி விளங்க வேண்டும் என்ற திறந்த, பரந்த மனப்பான்மை இவர்களிடம் இல்லை. சிந்திக்கும் திறனும் இவர்களிடத்தில் இல்லையென்பதை இவர்களின் போலியான வாதங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
இவர்கள் எந்த வசனத்தை ஆதாரமாகக் கொண்டு இத்தகைய வாதத்தை வைக்கிறார்களோ, அதற்கு முன்னர் கூறப்பட்டது என்ன? தொடர்ந்து வரும் வசனங்களில் சொல்லப்படுவது என்ன? என்பதையும் சற்று நிதானத்துடன் கவனித்தால் தமது வாதங்களிலுள்ள அபத்தங்களை உணர்ந்து கெண்டிருப்பார்பார்கள்.
''இவர்கள்'' என்று நாம் குறிப்பிட்டது, இஸ்லாத்தின் மீது களங்கத்தை சுமத்த அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொண்டவர்களை மட்டுமே அடையாளப்படுத்தும், முஸ்லிமல்லாத அனைவரையும் சுட்டிக் காட்டவில்லை என்பதை புரிபவர்கள் புரிந்து கொள்ளட்டும். அதுபோல், இவர்கள், அவர்கள். அவன், இவன். அது, இது. அவை, இவை. போன்ற சொற்களை பிரயோகிக்கும்போது தனியாகப் பயன்படுத்த முடியாது. ஏற்கெனவே எது பற்றியாவது, எவரைப் பற்றியாவது பேசியிருந்தால் மீண்டும் அதைக் குறிப்பிடுவதற்காகவே இது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படும்.
''இன்று காலை 9 மணிக்கு வருவதாக முஹம்மதும், முஹைதீனும் நேற்று சொல்லிச் சென்றார்கள், இன்னும் 'அவர்கள்' வரவில்லையே என்று சொன்னால் 'அவர்கள்' என்ற வாசகம் யாரைக் குறிக்கும் என்பதை விளங்க என்ன சிரமம் இருக்கிறது. அவர்கள் என்றால் யார்? எத்தனை பேர்கள்? என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரியும். ஆனாலும் இந்த இடத்தில் இது பற்றி எதையும் விளங்காதவர்கள் ''அவர்கள்'' என்றால் மொத்த ஊரிலுள்ளவர்களையும் குறிக்கும் என்பதுதான் அசட்டுத்தனம்.
திருக்குர்ஆன் 2:191வது வசனத்தை விமர்சிப்பவர்களிடம் நியாயமான பார்வையிருந்தால் ''அவர்களைக் கொல்லுங்கள்'' என்று சொல்வதில் இந்த ''அவர்கள்'' என்பவர்கள் யார்? என்பதை முன், பின் வசனங்களிலிருந்து விளங்கியிருப்பார்கள். நேர்மையில்லாதவர்களிடம் நியாயமான பார்வையை எதிர்பார்க்க முடியாது. எனினும் இவர்களின் நேர்மையற்ற விமர்சனம் இங்கு அடையாளம் காட்டப்படுகிறது.
இனி விஷயத்துக்கு வருவோம்.
2:190.உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள், ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள். ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
2:192. எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
2:193. ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள். ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.
2:194. (போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும். இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்பு மீறுங்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மேற்காணும் ஐந்து வசனங்களும் போர் பற்றியே பேசுகிறது. இவ்வசனங்கள், போர் தொடர்பாக மதீனாவில் அருளப்பட்ட முதல் வசனங்களாகும். போர் பற்றிய வரம்புகள் இங்கு விளக்கமாகச் சொல்லப்படுகின்றது. போர் செய்ய நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
முதலில் திருக்குர்ஆன் 2:190 இறை வசனம் என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.
2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
9:13. அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?
உங்களுடன் போருக்கு வருபவர்களுடன், நீங்களும் போர் செய்யுங்கள் என்று 2:190, 9:13 ஆகிய வசனங்கள் கூறுகிறது. வம்புச் சண்டைக்கு, அதாவது வலியப் போருக்குச் செல்லும்படி இஸ்லாம் சொல்லவில்லை. நியாயமான காரணங்கள் இருந்தால் மட்டுமே முஸ்லிம் அரசாங்கம் போர் செய்ய வேண்டும். (இது பற்றிய விளக்கம் வரும் பகுதிகளில்)
இஸ்லாத்தின் ஆரம்பகாலப் பிரச்சாரத்தை மக்காவில் துவக்கியபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்களும், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட குறைந்த அளவிலான முஸ்லிம்களும், மக்கா குரைஷிகளால் - மக்கத்துக் காஃபிர்களால் மிகவும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்களை கொடூரமாகக் கொலை செய்தும் வந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உயிருக்கு உலை வைக்கும் திட்டமும் குரைஷிகளால் தீட்டப்பட்டது. இந்தக் கொடுமைகளிலிருந்து மீள, இறைத்தூதரும் - முஸ்லிம்களும், தமது உடமைகளையெல்லாம் இழந்து சொந்த ஊரையும் துறந்து வெளியேறினார்கள். வெளியேற இயலாத - வழி தெரியாத பலவீனமான முஸ்லிம்கள் மக்காவிலேயே தங்கி விட்டார்கள். இவர்களின் மீதும் குரைஷிகளின் அடக்கு முறை மேலும் தொடர்ந்து கொண்டிருந்தது.
மக்காவைத் துறந்து சென்ற முஸ்லிம்களுக்கு மதீனா அடைக்கலம் தந்து ஆதரித்தது. இறைவன் காட்டிய வழியில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் மதீனாவில் ஒரு அரசு உருவாகியது. இந்த நேரத்தில் மக்காவில் ஏக இறைவனை மறுத்துக் கொண்டிருந்த ''மக்கத்துக் காஃபிர்கள்'' முஸ்லிம்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்தேத் தீருவோம் என்ற மூர்க்கத்தனத்தில் செயல்பட்டு, முஸ்லிம்களின் மீது வலிய போருக்கு வந்தார்கள். அதனால் மதீனாவில் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்ட முஸ்லிம்களுக்கு ''உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்'' என்று இறைவனின் போர் பற்றிய முதல் கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது. கட்டளையிடும் அதே நேரத்தில் போரில் வரம்புகளை மீறி விடக்கூடாது என்றும் எச்சரிக்கப்படுகிறது. (புரிந்து கொள்ள இந்த வரலாற்றுப் பின்னணி உதவியாக இருக்கும் என்பதால் சிறு விளக்கம்.)
2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள், ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள். ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
190லிருந்து 194வரையுள்ள, போர் பற்றி அறிவிக்கும் வசனங்களில், 191வது வசனத்தை மட்டும் உருவியெடுத்துக் கொண்டு விமர்சிப்பது இவர்களின் நோக்கம் என்னவென்பதை வெள்ளிடை மலையாக விளக்கி விடுகிறது. இந்த வசனத்தில் (போர்க் களத்தில்) சந்திக்கும் போது ''அவர்களைக் கொல்லுங்கள்'' என்றே சொல்லப்பட்டுள்ளது. போர்க் களமென்று இங்கு சொல்லவில்லையே? என்ற கேள்வியெழுந்தாலும், ''உங்களை எதிர்த்து போர் புரிபவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்'' என்ற 190வது வசனத்தின் தொடர்ச்சியாகவே 191வது வசனமும் அமைந்திருக்கிறது.
இஸ்லாத்தின் எதிரிகள் எடுத்து வைக்கும் (191வது) வசனத்திற்கு முந்தைய வசனத்தில் ''உங்களுடன் போரிட வருபவர்களை எதிர்த்து போரிடுங்கள்'' என்று கூறிவிட்டு, அடுத்த 191வது வசனத்தில் முஸ்லிம்களுடன் போருக்கு வருபவர்களேயே ''அவர்கள்'' என்று சுட்டுகிறது. 'அவர்கள்' என்றால் உங்களுடன் போர் செய்ய வருபவர்கள் என்பது எவருக்கும் விளங்கும். அதாவது முஸ்லிம்களை அழித்தொழிக்க படை திரட்டிக் கொண்டு வரும் எதிரிகளோடு போரிட்டு ''அவர்களைக் கொல்லுங்கள்'' என்றே இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
மேலும்,191வது வசனத்தின் தொடர் வாசகங்கள் இவர்களின் தவறான வாதத்தை தகர்த்தெறிகிறது. ''அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு, நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்'' என்று கூறுகிறது, மக்காவிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது ''மக்கத்துக் காஃபிர்களா?'' அல்லது ''பக்கத்துக் காஃபிர்களா?'' (சிந்திக்கவும்)
1.''அவர்களை''க் கொல்லுங்கள்'' 2.''அவர்கள்'' உங்களை ஊரை விட்டு வெளியேற்றியவாறு'' என 191வது வசனத்தில் இரண்டு முறை அவர்கள் என்று சொல்லப்படுகிறது. இரண்டும் மக்கத்துக் காஃபிர்களைத்தான் குறிப்பிடுகின்றது என்பதை விளங்கலாம்.
9:13. ''தமது, உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவங்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?''
ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டதற்காக முஸ்லிம்களை ஊரை விட்டு வெளியேற்றிய மக்கத்துக் காஃபிர்களே, முஸ்லிம்களுக்கெதிராக போரிடவும் வந்தார்கள். ''அவர்களுடன்'' போர் செய்ய வேண்டாமா? என, 9:13வது வசனத்தில் சொல்லப்படுகிறது. 2:190,191 ஆகிய இரு வசனங்களுக்கு, 9:13வது வசனம் விளக்கமாக அமைந்துள்ளது.
மேலும், முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுங்கள் என்று திருக்குர்ஆன் எந்த இடத்திலும் சொல்லவில்லை. அவர்களைக் கொல்லுங்கள் என்பதும் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரையும் கொல்லச் சொல்வதாக பொருள் கொள்வது தவறான புரிதல்.
(விளக்கங்கள் தொடரும்)
அன்புடன்,
அபூ முஹை
Tuesday, August 01, 2006
நற்பணிக்கு அழைப்பு.
விஞ்ஞானத்தின் பெரும் பங்களிப்பே மருத்துவத் துறையாகும். மனிதன் சுகாதாரத்தோடும் உடல் நோய்களில்லாமல் வாழ மருத்துவத்துறையே பெருமுயற்சி செய்து வெற்றிகண்டு வருகிறது. அதன் பரிணாம வளர்ச்சியே மாற்று உறுப்பு பொருத்தும் முறையாகும். கண், சிறுநீரகம், போன்ற உறுப்புகளை அடுத்தவர்களுக்கு பொருத்தி வெற்றி கண்டுள்ளது மருத்துவம்.
இத்தகைய மருத்துவத்தை இஸ்லாம் ஆதரிக்கிறதா...?
பொதுவாக தீமையான காரியங்கள் பயனற்ற செயல்கள் எதற்கும் உதவாத விஷங்கள் எல்லாவற்றையும் இஸ்லாம் பட்டியலிட்டு விளக்கிவிட்டது. இஸ்லாம் சுட்டிக்காட்டாத எந்தத் தீமையும் எந்தத் துறையிலும் இல்லை.
''விலக்கப்பட்டவை அனைத்தும் தெளிவாக்கப்பட்டு விட்டன'' என்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்)அவர்கள் கூறிவிட்டார்கள். (ஆதார நூல், புகாரி)
இந்த அடிப்படையில் தீமையென்று சுட்டிக் காட்டப்படாத எதுவும் அனுமதிக்கப்பட்டவைதான் என்பதில் உலக முஸ்லிம் அறிஞர்களிடம் மாற்றுக் கருத்து இல்லை. கண், சிறுநீரகம், இரத்ததானங்கள் கூடாதவை தீமை பயப்பவையென்றால் அதை இஸ்லாம் சுட்டிக்காட்டி இருக்கும் இஸ்லாமிய சட்ட ஆதாரங்கள் எந்த இடத்திலும் இது பற்றி சுட்டிக் காட்டப்படவில்லை. எனவே இவை அனுமதிக்கப்பட்டவைதான்.
இன்னும் தெளிவாகச் சொன்னால்...
ஒவ்வொரு உறுப்பையும் குறித்து இதுவெல்லாம் கூடும் என்று பட்டியலிடாமல் ரத்தினச் சுருக்கமாக இன்னும் ஆழமான விஷங்களை உள்ளடக்கி திருக்குர்ஆன் இப்படிப் பேசுகிறது.
''எவர் ஒரு உயிரை வாழ வைக்கிறாரோ அவர் எல்லா மக்களையும் வாழ வைத்தவர் போன்றவராவார்'' (பார்க்க அல்குர்ஆன்- 5:32)
உயிர் வாழத்தேவையான எதையும் செய்ய இந்த வசனம் பொது அனுமதியளிக்கிறது. சென்று போன உயிரை மீண்டும் கொண்டுவர தற்கால மனிதனால் முடியாது என்பதால் அலட்சியப் போக்கில் மனிதனை மரணிக்கச் செய்துவிடாதீர்கள். அவன் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். இவ்வாறு செய்வது உலகளாவிய நற்பணிக்கு ஒத்ததாகும் என்று அழைப்பு விடுக்கிறது அல்குர்ஆன்.
மனிதன் வாழ உணவு உடை இருப்பிடம் தேவைபோல் காற்றும் நீரும் அத்தியாவசியத்தேவை. அதே அத்தியாவசியம் அவனது ஒவ்வொரு உறுப்பிற்கும் இருக்கிறது. உடல் குறைப்பாட்டுடன் வாழ முடியுமென்றாலும் அது முழுமையான வாழ்க்கையல்ல என்பதை குறைப்பாடு உள்ளவர்களால்தான் உணரமுடியும். உடல் குறைப்பாடற்ற மனிதன் தானியங்கியாக இருக்கிறான். குறைப்பாடுள்ளவன் பிறரது உதவியை எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.
உடல் ஊனமுள்ளவர்களில் தன்னம்பிக்கையுள்ளவர்களால் மட்டும்தான் வாழ்க்கையை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வாழமுடிகிறது. பலவீனப்பட்டவர்கள் ஊனத்தின் காரணத்தால பிறருக்குத் தொந்தரவு தருகிறோமே என்ற எண்ணத்தில் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையானக் காற்று, நீர், உணவுப் பொருள்கள், மகசூலுக்கு இறைவன் பொறுப்பேற்பது போல், உணவு வினியோகம், உடை, இருப்பிடம், கல்வி, வேலை வாய்ப்பு, ஆகியவற்றிற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பது போல்,
இதர துறைகளுக்கு மனிதநேயம் மிக்கவர்கள் பொறுப்பேற்க அல்குர்ஆன் அழைக்கிறது...
''எவர் ஒரு உயிரை வாழ வைக்கிறாரோ அவர் எல்லா மக்களையும் வாழ வைத்தவர் போன்றவராவார்'' ஒன்றுக்குப் பலமுறை இந்த வசனத்தைப் படித்துப் பாருங்கள் மனிதனின் வாழ்வாதார விஷயத்தை எத்துணை அற்புதமாக இவ்வசனம் விளக்குகிறது. தானம் செய்வோரையும், செய்யத் தூண்டுவோரையும், தான உறுப்புகளை இணைப்போரையும், எல்லோரையும் ஊக்குவிக்கிறது இந்த வசனம்.
நன்றி: இதுதான் இஸ்லாம்.காம்
இத்தகைய மருத்துவத்தை இஸ்லாம் ஆதரிக்கிறதா...?
பொதுவாக தீமையான காரியங்கள் பயனற்ற செயல்கள் எதற்கும் உதவாத விஷங்கள் எல்லாவற்றையும் இஸ்லாம் பட்டியலிட்டு விளக்கிவிட்டது. இஸ்லாம் சுட்டிக்காட்டாத எந்தத் தீமையும் எந்தத் துறையிலும் இல்லை.
''விலக்கப்பட்டவை அனைத்தும் தெளிவாக்கப்பட்டு விட்டன'' என்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்)அவர்கள் கூறிவிட்டார்கள். (ஆதார நூல், புகாரி)
இந்த அடிப்படையில் தீமையென்று சுட்டிக் காட்டப்படாத எதுவும் அனுமதிக்கப்பட்டவைதான் என்பதில் உலக முஸ்லிம் அறிஞர்களிடம் மாற்றுக் கருத்து இல்லை. கண், சிறுநீரகம், இரத்ததானங்கள் கூடாதவை தீமை பயப்பவையென்றால் அதை இஸ்லாம் சுட்டிக்காட்டி இருக்கும் இஸ்லாமிய சட்ட ஆதாரங்கள் எந்த இடத்திலும் இது பற்றி சுட்டிக் காட்டப்படவில்லை. எனவே இவை அனுமதிக்கப்பட்டவைதான்.
இன்னும் தெளிவாகச் சொன்னால்...
ஒவ்வொரு உறுப்பையும் குறித்து இதுவெல்லாம் கூடும் என்று பட்டியலிடாமல் ரத்தினச் சுருக்கமாக இன்னும் ஆழமான விஷங்களை உள்ளடக்கி திருக்குர்ஆன் இப்படிப் பேசுகிறது.
''எவர் ஒரு உயிரை வாழ வைக்கிறாரோ அவர் எல்லா மக்களையும் வாழ வைத்தவர் போன்றவராவார்'' (பார்க்க அல்குர்ஆன்- 5:32)
உயிர் வாழத்தேவையான எதையும் செய்ய இந்த வசனம் பொது அனுமதியளிக்கிறது. சென்று போன உயிரை மீண்டும் கொண்டுவர தற்கால மனிதனால் முடியாது என்பதால் அலட்சியப் போக்கில் மனிதனை மரணிக்கச் செய்துவிடாதீர்கள். அவன் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். இவ்வாறு செய்வது உலகளாவிய நற்பணிக்கு ஒத்ததாகும் என்று அழைப்பு விடுக்கிறது அல்குர்ஆன்.
மனிதன் வாழ உணவு உடை இருப்பிடம் தேவைபோல் காற்றும் நீரும் அத்தியாவசியத்தேவை. அதே அத்தியாவசியம் அவனது ஒவ்வொரு உறுப்பிற்கும் இருக்கிறது. உடல் குறைப்பாட்டுடன் வாழ முடியுமென்றாலும் அது முழுமையான வாழ்க்கையல்ல என்பதை குறைப்பாடு உள்ளவர்களால்தான் உணரமுடியும். உடல் குறைப்பாடற்ற மனிதன் தானியங்கியாக இருக்கிறான். குறைப்பாடுள்ளவன் பிறரது உதவியை எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.
உடல் ஊனமுள்ளவர்களில் தன்னம்பிக்கையுள்ளவர்களால் மட்டும்தான் வாழ்க்கையை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வாழமுடிகிறது. பலவீனப்பட்டவர்கள் ஊனத்தின் காரணத்தால பிறருக்குத் தொந்தரவு தருகிறோமே என்ற எண்ணத்தில் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையானக் காற்று, நீர், உணவுப் பொருள்கள், மகசூலுக்கு இறைவன் பொறுப்பேற்பது போல், உணவு வினியோகம், உடை, இருப்பிடம், கல்வி, வேலை வாய்ப்பு, ஆகியவற்றிற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பது போல்,
இதர துறைகளுக்கு மனிதநேயம் மிக்கவர்கள் பொறுப்பேற்க அல்குர்ஆன் அழைக்கிறது...
''எவர் ஒரு உயிரை வாழ வைக்கிறாரோ அவர் எல்லா மக்களையும் வாழ வைத்தவர் போன்றவராவார்'' ஒன்றுக்குப் பலமுறை இந்த வசனத்தைப் படித்துப் பாருங்கள் மனிதனின் வாழ்வாதார விஷயத்தை எத்துணை அற்புதமாக இவ்வசனம் விளக்குகிறது. தானம் செய்வோரையும், செய்யத் தூண்டுவோரையும், தான உறுப்புகளை இணைப்போரையும், எல்லோரையும் ஊக்குவிக்கிறது இந்த வசனம்.
நன்றி: இதுதான் இஸ்லாம்.காம்
Subscribe to:
Posts (Atom)