Friday, March 17, 2006

வே(ா)ட்டு!

ஓட்டு போட்டோம்
விரலில் கரி பூசப்பட்டது
முகத்தில் பூசுவதற்கு
முன்னோட்டமாக!

ஆதரவு கேட்டு
மனிதரைத் தவிர
மற்ற எல்லோரும்
வந்தார்கள்

விலை மதிப்பற்ற வாக்குகளை
வலையில் விழவைக்க
பணப் பெட்டகம் தேவையில்லை
பிரியாணி பொட்டலமே போதும்!

வாகனத்தில் ஒலியெழுப்பும்
சிவப்பு விளக்கு சொன்னது...
அபாயம் வருகிறதென்று...
நம்பவில்லை...
மனுகொடுக்க
மந்திரியை...
தேடிய போதுதான் தெரிந்தது
அவர் -
சிவப்பு விளக்கில் இருப்பது.

இப்போதெல்லாம்
பிறர்
தலை எடுத்துப் பழகியவர்தான்
தலைவராக
தலையெடுக்க முடிகிறது...

மெழுகு வர்த்தியைப் போல்
இருப்போம் என உருகினார்கள்
தேவையில்லை
எங்கள் மேனியை எரிக்கும்
தீப்பந்தமாய்
மாறாதிருந்தாலே போதும்!


கவிதை: ஆளூர் ஷா நவாஸ்

2 comments:

Jafar ali said...

நிதர்சனம் சுடுகிறது!

அபூ முஹை said...

test