Tuesday, May 17, 2005

அவசரப் பதிவு.

//*இந்நிலையில் என்னை வசைபாடுவதை விடுத்து (குறிப்பாக அபூ முஹை அவரது ஒரு பதிவில் என்னையும் எனது பிறப்பையும் பற்றி வசைபாடியிருந்தார்),*//

மனித குலம் அனைத்தும் தொடக்கத்தில் ஒரே தாய், தந்தையிடமிருந்தே பல்கிப் பெருகியவர்கள் என்பதை ஆழமாக நம்புபவன் நான். நேசகுமாரின் கர்வத்தையே நான் சாடியிருக்கிறேன், அவரது பிறப்பைப் பற்றி எங்கும் வசைபாடியதில்லை. என் மீது சுமத்தும் இந்தக் குற்றச்சாட்டு தவறான புரிதல், அல்லது அவதூறாகவே இருக்க வேண்டும்.

எடுத்துக் காட்டினால் அது பற்றி விளக்கவும், பிறப்பைப் பற்றி வசை பாடியது உண்மையென்றால் அதை வாபஸ் பெறுவதில் நமக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நேசகுமார் தயவு செய்து என் மீது சுமத்தும் குற்றத்தை சுட்டிக் காட்டி நிரூபிக்கவும். (இது ஒரு அவசரப் பதிவு)

அபூ முஹை

1 comment:

contivity said...

அபு முஹை அவர்களுக்கு

இவ்வளவு நாட்கள் கழித்தும் திரு நேச குமார் உங்களின் கேள்விகளுக்கு பதில் கூறாததில் இருந்தே தெரிகிறது அவர் பொய்யர் என்று