tag:blogger.com,1999:blog-9457100.post112249040848977509..comments2023-10-07T02:18:26.492-07:00Comments on விமர்சனம் - விளக்கம்: வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் -1அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-9457100.post-1122644988854865252005-07-29T06:49:00.000-07:002005-07-29T06:49:00.000-07:00திருக்குர்ஆனின் நாயகன் மனிதனே! மனிதனுக்கான திட்டங்...திருக்குர்ஆனின் நாயகன் மனிதனே! மனிதனுக்கான திட்டங்களே முழுக்குர்ஆனிலும் நிறைந்திருக்கிறது. <BR/><BR/>(நபியே) உம்முடைய இறைவன் வானவர்களிடம் ''நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப் போகிறேன்'' என்று கூறியபோது.(திருக்குர்ஆன்.2:30) இப்படி மனிதனை மையமாக வைத்தே பேரண்டத்தின் திட்டங்கள் உருவாக்கப்பட்டன என்பதற்கு திருக்குர்ஆனிலிருந்து சான்றுகளைத் தரலாம்.<BR/><BR/>பூமியில் உயிரினங்கள் வாழவேண்டும் என்ற நோக்கத்தில் அக்கறை கொண்ட ஏதோ ஒரு சக்தி பேரண்டத்தை உருவாக்க செயல்பட்டிருக்கிறது என்பது தெளிவு. அந்த சக்தியை ''அல்லாஹ்'' என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். திருக்குர்ஆன் ஒரு விஞ்ஞான நூல் இல்லை என்று சொல்லும் அதே நேரத்தில் அறிவியல் பற்றியும் திருமறை வசனங்கள் பேசுகிறது என்பதற்கான சான்றுகளையே கட்டுரையாளர் விளக்குகிறார்.<BR/><BR/>இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பதில் பலவிதமான கட்டுக்கதைகளையே பரப்பி வந்திருக்கிறார்கள். திருக்குர்ஆன் மட்டுமே இன்றைய அறிவியல் உலகின் கூற்றுக்கொப்ப ''வானங்கள் பூமி எல்லாம் ஒரே பொருளாக இருந்தது அவற்றை நாம்தான் பிரித்தெடுத்தோம்'' என்று கூறுகிறது(21:30) இன்று பேரண்ட வெடிப்புக் கோட்பாடு அறிவியலின் வெறும் அனுமானமாக இருந்து நாளை மாறலாம் - நிராகரிக்கப்படலாம் என்பதை நாம் மறுக்கவில்லை. வானங்களும் பூமியும் இணைந்திருக்கவில்லை என்று அனுமானமாக அல்ல, நிரூபிக்கப்பட்ட அறிவியலை முன்வைக்கும்வரை 21:30ம் திருமறை வசனத்தைப் பொய்பிக்க முடியாது.<BR/><BR/>பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே ''வானங்களும் பூமியும் இணைந்திருந்தன அவற்றை நாமேப் பிரித்தெடுத்தோம்'' என்று சொல்லும் வசனம் இன்றும் ஒரே பொருளையே சொல்லிக் கொண்டிருக்கிறது நாளையும் இதில் மாற்றமிருக்கப் போவதில்லை. //*காலத்திற்கு தகுந்தாற் போல் அன்று நிலவும் அறிவியல் கோட்பாடுகளுக்கு ஏற்ப எத்தனை முறைதான் வியாக்கியனாபப்டுத்துவீர்கள்.*// இதில் காலத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றி, மாற்றி வியாக்கியானப்படுத்துவதற்கு என்ன இருக்கிறது. ''ஆரம்பத்தில் வானங்களும் பூமியும் சேர்ந்திருக்கவில்லை'' என்று அறிவியல் அனுமானப்படுத்துகிறது என்று வைத்துக்கொள்வோம் இதை 21:30வது வசனத்திற்குப் பொருத்தி எப்படி வியாக்கியானப்படுத்த முடியும்.அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1122491923226600072005-07-27T12:18:00.000-07:002005-07-27T12:18:00.000-07:00பேரண்ட வெடிப்புக் கோட்பாடு சொல்வதும், நீங்கள் மேற்...பேரண்ட வெடிப்புக் கோட்பாடு சொல்வதும், நீங்கள் மேற்கோள் காட்டியுள்ளதும் எந்த அளவு ஒத்துப்போகிறது என்பது ஒரு கேள்வி. நாளை அறிவியலாளர்கள் பேரண்ட வெடிப்புக் கோட்பாட்டை விட இன்னொரு கோட்பாடு சரியானதாக இருக்கிறது என்று அதை முன் வைத்தால் அப்போது என்ன செய்வீர்கள். எத்தகைய விளக்கம் தருவீர்கள். அறிவியலில் ஒரு கோட்பாட்டிற்குப் பின்னால் பல விளக்கங்கள், கருதுகோள்கள், போன்றவை இருக்கும். ஒரு கோட்பாடு காலப்போக்கில் அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் மாறுதல் அடையும். அது நிராகரிக்கப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.<BR/>ஆனால் புனித நூல்களில் உள்ளவை அன்று சொன்னதுதான். அதை நீங்கள் வியாக்கியனப்படுத்தலாம்.இப்படி காலத்திற்கு தகுந்தாற் போல் அன்று நிலவும் அறிவியல் கோட்பாடுகளுக்கு ஏற்ப எத்தனை முறைதான் வியாக்கியனாபப்டுத்துவீர்கள். பேரண்ட வெடிப்புக் கோட்பாடு எந்த சக்தியாவது இதையெல்லாம் திட்டமிட்டு செய்தது என்று கூறுகிறதா.ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.com