tag:blogger.com,1999:blog-9457100.post115998998195434973..comments2023-10-07T02:18:26.492-07:00Comments on விமர்சனம் - விளக்கம்: நபி இயேசுவின் சிறப்புக்கு காரணம் என்ன?அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9457100.post-1160025554304923882006-10-04T22:19:00.000-07:002006-10-04T22:19:00.000-07:00நல்லடியார் உங்கள் வருகைக்கு நன்றி!நல்லடியார் உங்கள் வருகைக்கு நன்றி!அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160023531347629372006-10-04T21:45:00.000-07:002006-10-04T21:45:00.000-07:00அன்பின் ஜோ உங்கள் விளக்கத்துககு மிக்க நன்றி! மரிய...அன்பின் ஜோ உங்கள் விளக்கத்துககு மிக்க நன்றி!<BR/> <BR/>மரியாள் இயேசு (அலை) அவர்களை பெற்றெடுத்த சம்பவத்தையும், பிரசவித்தக் குழந்தையுடன் ஊருக்குள் மரியாள் வந்தபோது அவரை ஊர் மக்கள் அணுகிய முறையையும் திருக்குர்ஆன் இப்படிக் கூறுகிறது...<BR/><BR/><STRONG>19:16. (நபியே!) இவ்வேதத்தில் மர்மமைப் பற்றியும் நினைவு கூர்வீராக அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,<BR/><BR/>19:17. அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார். அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம். (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.<BR/><BR/>19:18. (அப்படி அவரைக் கண்டதும்,) ''நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன். நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)'' என்றார்.<BR/><BR/>19:19. ''நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன். பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்'') என்று கூறினார்.<BR/><BR/>19:20.அதற்கு அவர் (மர்யம்), ''எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?'' என்று கூறினார்.<BR/><BR/>19:21. ''அவ்வாறேயாகும், 'இது எனக்கு மிகவும் சலபமானதே. மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம், இது விதிக்கப்பட்ட விஷயமாகும்' என்று உம் இறைவன் கூறுகிறான்'' எனக் கூறினார்.<BR/><BR/>19:22. அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார், பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.<BR/><BR/>19:23. பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது. ''இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா'' என்று கூறி(அரற்றி)னார்.<BR/><BR/>19:24. (அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து, ''(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்'' என்று அழைத்து கூறினான்.<BR/><BR/>19:25. ''இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும் (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.<BR/><BR/>19:26. ''ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், 'மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன். ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்'' என்று கூறும்.<BR/><BR/>19:27. பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினார்கள், ''மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!''<BR/><BR/>19:28. ''ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை'' (என்று பழித்துக் கூறினார்கள்).<BR/><BR/>19:29. (ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார். ''நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசவோம்?'' என்று கூறினார்கள்.<BR/><BR/>19:30. ''நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான். இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.<BR/><BR/>19:31. ''இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கியிருக்கின்றான். மேலும், நான் உயிருடன் இருந்து தொழுகையையும், ஜகாத்தையும் கொடுக்க எனக்கு கட்டளையிட்டான். <BR/><BR/>19:32. ''என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.<BR/><BR/>19:33. ''இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்'' என்று (அக்குழந்தை) கூறியது.</STRONG><BR/><BR/>மேற்காணும் திருக்குர்ஆன் வசனங்கள்: இயேசு (அலை) அவர்கள் பிறந்தவுடன் பேசி மரியாளின் கற்பு பற்றி அவதூறுப் பேசிய ஊர்மக்களின் வாயை அடைக்கிறது. இந்த முக்கியமான சம்பவம் பைபிளில் இல்லை! மாறாக இயேசு (அலை) 12வயதில் பேசியதாக பைபிளில் கூறுகிறது. <BR/><BR/>இயேசு (அலை) அவர்களின் வரலாற்றைக் கூறுவதில், பைபிளும், திருக்குர்ஆனும் எவ்வளவோ வேறுபட்டு நிற்கிறது. <BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160012881836951662006-10-04T18:48:00.000-07:002006-10-04T18:48:00.000-07:00சக்காரியா பற்றி கூறபட்டுள்ளது...------------------...சக்காரியா பற்றி கூறபட்டுள்ளது...<BR/>---------------------<BR/>அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலது பக்கத்திலே நின்று அவருக்குத் தரிசனமானான். <BR/><BR/>சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான். <BR/><BR/>தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. <BR/><BR/>உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். <BR/><BR/>அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். <BR/><BR/>அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். <BR/><BR/>பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான். <BR/><BR/>அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன்; என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான். <BR/><BR/>தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்; <BR/><BR/>இதோ, தகுந்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால், இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான். <BR/><BR/>(லூக்கா -அதிகாரம் 1 .வசனங்கள் 11-20)ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160012766141423902006-10-04T18:46:00.000-07:002006-10-04T18:46:00.000-07:00//இயேசு பிறந்தவுடன் தொட்டிலில் பேசியது தொடர்பாகவ...//இயேசு பிறந்தவுடன் தொட்டிலில் பேசியது தொடர்பாகவும் பைபிள் என்ன கூறுகிறது?//<BR/>இயேசு பிறந்தவுடன் தொட்டிலில் பேசியதாக பைபிளில் குறிப்பிடப்படவில்லை .ஆனால் தன் 12-வது வயதில் அவர் ஜெருசலேம் தேவாலயத்தில் அறிஞர்களோடு விவாதித்தார் என்று சொல்லுகிறது<BR/>------------------------------------<BR/>அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப்போய், <BR/><BR/>பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பி வருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது. <BR/><BR/>அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின்முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள். <BR/><BR/>காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். <BR/><BR/>மூன்று நாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள். <BR/><BR/>அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள். <BR/><BR/>தாய் தகப்பன்மாரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச்செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள். <BR/><BR/>அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார். <BR/>(லூக்கா -அதிகாரம் 2 .வசனங்கள் 42-49)ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160012573948630652006-10-04T18:42:00.000-07:002006-10-04T18:42:00.000-07:00சகோதரர் அபூமுகை, உங்கள் பதிவுக்கும் விளக்கத்திற்க...சகோதரர் அபூமுகை,<BR/> உங்கள் பதிவுக்கும் விளக்கத்திற்கும் நன்றி!<BR/><BR/>//திருக்குர்ஆன் மர்யம் என்று குறிப்பிடும் மரியாள் பற்றியும், இயேசுவின் பிறப்பு பற்றியும் பைபிள் என்ன கூறுகிறது?//<BR/><BR/>ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், <BR/><BR/>தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். <BR/><BR/>அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். <BR/><BR/>அவளோ அவனைக்கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். <BR/><BR/>தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். <BR/><BR/>இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. <BR/><BR/>அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். <BR/><BR/>அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான். <BR/><BR/>அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். <BR/><BR/>தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். <BR/><BR/>இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம். <BR/><BR/>தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான். <BR/><BR/>அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான். <BR/><BR/>அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய், <BR/><BR/>சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள். <BR/><BR/>எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, <BR/><BR/>உரத்தசத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. <BR/><BR/>என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது, <BR/><BR/>இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. <BR/><BR/>விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் அவளுக்கு நிறைவேறும் என்றாள். <BR/><BR/>அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது, <BR/><BR/>என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. <BR/><BR/>அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். <BR/><BR/>வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. <BR/><BR/>அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது. <BR/><BR/>தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். <BR/><BR/>பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். <BR/><BR/>பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார். <BR/><BR/>நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து, <BR/><BR/>தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள். <BR/><BR/>மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள்<BR/><BR/><BR/>(லூக்கா -அதிகாரம் 1 .வசனங்கள் 26-56)ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1159993946735886252006-10-04T13:32:00.000-07:002006-10-04T13:32:00.000-07:00//எந்தெந்த நபிக்கு என்னென்ன சிறப்பு வழங்கப்பட வேண்...//எந்தெந்த நபிக்கு என்னென்ன சிறப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை அந்தந்தக் கால மக்களின் நம்பிக்ககைக்கேற்ப இறைவன் தீர்மானிக்கிறான். அவன் தீர்மானித்தத் தகுதிகளை, அவன் தேர்ந்தெடுக்கும் மனிதரை இறைத்தூதராக நியமித்து, அவருக்கு சிறப்பு தகுதிகளையும் வழங்குகிறான். //<BR/><BR/>சகோ. அபூமுஹை,<BR/><BR/>மேற்சொன்ன உங்களின் கருத்தையே சகோ.ஜோ வின் பதிவிலும் பின்னூட்டியுள்ளேன்.நல்லடியார்https://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com